Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. "உலகில் இது வரை இல்லாத தொழில் நுட்பம் கொராஷார் 4 இல்" 😂 அதீத ஆர்வத்தால் எலாஸ்ரிக்கை ஒரு 25% இழுக்கலாம், இப்படி 100% இழுத்து ஈரானின் உண்மையான தொழில்நுட்ப இயலுமையை அவமானப் படுத்தக் கூடாது! கொரஷார் 4 என்பது வட கொரியாவின் முசுடான்-Musudan (அல்லது Hwasong-10) என்ற நடுத்தர வீச்சு ஏவுகணையின் (IRBM) கொப்பி. பியோங்யாங்க் வீதிகளை இன்னும் விளக்கு மாறால் சுத்தம் செய்யும் நிலையில் இருக்கும் வட கொரியா முசுடாங்கை பரிசோதித்தது 2016 இல். இதற்குரிய தொழில் நுட்பம் ரஷ்யா, சீனா வழியாக வட கொரியாவுக்கு வந்தது என்பதும் இரகசியமல்ல! வட கொரியாவில் இருந்து ஈரானுக்கு நேரடி லைன் இருக்கிறது என்பதும் இரகசியமல்ல. அறை வெப்ப நிலையில் நீண்ட காலம் வைத்திருக்கக் கூடிய திரவ ஏவுகணை எரிபொருள் (Hypergolic fuel) ஏற்கனவே அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா, சீனா ஆகிய நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது, இந்த நாடுகள் இந்த உலகில் தான் இருக்கின்றன. Inertial Navigation System (INS) என்று அழைக்கப் படும், செய்மதிகளின் GPS தொடர்பில்லாமல் ஏவுகணைகளை வழி நடத்தும் நுட்பம் 1942 இல் ஜேர்மனியர்களால் உருவாக்கப் பட்டு, 1960 களில் ஏவுகணைகளில் பொதுவான பாவனைக்கு வந்து விட்ட ஒரு navigation நுட்பம். இந்த INS நுட்பத்தின் குறைந்த (civilian) வடிவம் தான் ரெஸ்லா போன்ற வாகனங்களில் தானியங்கியான (autopilot) ஓட்டத்திற்கு GPS ஓடு சேர்ந்து அல்லது தனியாக உதவுகின்றது. இது எதுவும் தெரியாமல் என்ன எஞ்சினியர் மார்?
  3. உக்ரேன் போர் ஒரு ஆக்கிரமிப்பாளனை எதிர்த்து, ஒரு இனவழி தேசிய நாடு மேற்கொண்ட தற்காப்பு யுத்தம். அதை யார் ஆதரித்தாலும் அதை வரவேற்கவே வேண்டும். ஈரானிய யுத்தம் இஸ்ரேலின் நலனுக்காக பைத்தியகார தம்பர் தலைமையில் அமெரிக்கா துவங்கிய தேவையில்லாத யுத்தம். இதை யார் செய்தாலும் எதிர்க்கத்தான் வேண்டும். தலைவர், சீமான், செத்தகிளி, கிம், தம்பர் என - தைரியமான ஆண்கள் என காட்டி கொள்வேர் மீது ஏற்படும் கதாநாயக-காதலால் ஆதரவு/எதிர்ப்பு நிலை எடுக்காமல், கொள்கை சார்ந்து நிலை எடுப்போர் இப்படித்தான் இருப்பார்கள்.
  4. உப்பில்லாட்டில் தெரியும் உப்பின் அருமை.. அப்பன் இல்லாட்டில் தெரியும் அப்பனின் அருமை…. #நேட்டோ
  5. கற்பனை எண்டாலும் கொஞ்ச நேர சந்தோசத்தை கொடுத்தது😂
  6. ஈஸ்ரர் பூசைக்காகக் கோவிலுக்குப் போக முன்னர் நானும் பார்த்து விட்டு "உண்மையாக இருந்து தொலைக்கட்டும்" என்று போய் விட்டு இரவு மீள வந்து பார்த்தேன்! உண்மையில்லை. நேற்று, ஜனாதிபதிகளுக்கு சிகிச்சை செய்யும் Walter Reed Army Hospital இனை அண்மித்த வீதிகளைப் பூட்டியிருக்கிறார்கள். அதே நேரம் காலை 11 மணிக்குப் பின்னர் ட்ரம்ப் பற்றிய செய்திகள் இல்லை (lid on press) என்று வெள்ளை மாளிகை சொல்லியிருக்கிறது. இந்த இரண்டு சம்பந்தமில்லாத சம்பவங்களை இணைத்து யாரோ கிரியேரிவாக யோசித்துக் கதை உருவாக்கி விட்டார்கள்.
  7. அங்கையும் பீற்றூட்டா? இரத்தத்திற்கு நல்லது தான், அடுத்த நாள் சிறு நீரைப் பார்த்துப் பயந்து விடாமல் இருக்க வேண்டும்! 😂
  8. Today
  9. காட்சி 1: நாய்கள் குரைக்கின்றன. வீட்டில் உள்ளவர்கள் வெளியே இந்திய இராணுவம் நிற்பதை அவதானிக்கின்றனர். உடனே அங்குள்ள பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட ஆடைகளை ஒன்றின் மேல் ஒன்றாக அணிகின்றனர். காட்சி 2: Toilet வெளியே தான் உள்ளது. இந்திய இராணுவமும் வெளியே நிற்கிறது நிறைமாத கர்ப்பிணிக்கு இயற்கை உபாதை. உடனே வீட்டில் உள்ள wire பின்னப்பட்ட கதிரையினை கிழித்து ஓட்டை போட்டு, கதிரையின் கீழ் பெரிய பாத்திரத்தை வைக்கின்றனர். அப் பெண் அதில் இருந்து தன் இயற்கை உபாதையை வெளியேற்ற. இவ் இரு காட்சிகள் போதும் இந்திய இராணுவம் பெண்களுடன் எவ்வாறு நடந்து கொண்டனர் / கொள்வார்கள் எனக் காட்ட
  10. சிறு கதை - 208 / நிழல் வலை (The Shadow Web) - ஒரு விழிப்புணர்வுக் கதை / அத்தியாயம் 02 எளிதாக பணம் சம்பாதிக்க, அதன் மூலம் வீட்டையும் பிள்ளைகளையும் தாராளமாக கவனிக்க, 'இணையம் வழி அரட்டை' யை அவளுக்கு பரிந்துரைத்தாலும் அவள்: முதல் முறை மறுத்தாள் — அறம் தடுத்தது. இரண்டாம் முறை யோசித்தாள் — குழந்தைகளின் முகம் தடுத்தது. மூன்றாம் முறை ஒப்புக் கொண்டாள் — பசி அவளது அறத்தைக் கொன்றது. வறுமையின் கோரப் பசிக்கு முன்னால் கௌரவம் என்பது ஒரு காய்ந்த சருகாகத் தெரிந்தது. தன் அடையாளத்தைத் தொலைத்து, முகமூடி அணிந்தவளாக அவள் இணைய உலகில் நுழைந்தாள். செல்வி செத்துப்போக, அரவிந்தன் போன்றவர்களின் ஏகாந்தத்தைத் திருடும் ‘அனிதா’ பிறந்தாள். அவளது கவித்துவமான கண்கள் இப்போது கவிதைகளுக்காக அல்ல, பணத்திற்காகத் துடிக்க ஆரம்பித்தன. அதன் பின் வந்த நாட்கள் அரவிந்தனின் வாழ்வில் ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சின. அரவிந்தனும் அனிதாவும் (செல்வி) தினமும் உரையாடினர். தமிழ் இலக்கியத்தின் நுட்பங்கள், அகதி வாழ்வின் தழும்புகள், தனிமையின் நிசப்தம் என அவர்களின் உரையாடல் நீண்டது. செல்வி தனது இளமை மாறாத குரலிலும், வசீகரமான சொற்களிலும் அரவிந்தனைக் கட்டிப்போட்டாள். ஆனால், இந்த வசந்தத்திற்குப் பின்னால் ஒரு நச்சு வலை இயங்கிக் கொண்டிருந்தது. செல்வி ஒரு தனி நபர் அல்ல; அவள் ஒரு 'கார்ப்பரேட்' (Corporate) பாணி மோசடி அமைப்பின் ஒரு கனிவான முகம் மட்டுமே. போலி கணக்குகளை நிர்வகிக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள், கச்சிதமான கோணங்களில் அவளைப் படமெடுக்கும் ஒளிப்பதிவாளர்கள், வசூலாகும் பணத்தைப் பிரித்துக் கொள்ளும் இடைநிலையாளர்கள் என அந்த ஒழுங்கமைக்கப்பட்ட நிழல் உலகம் அவளை இயக்கியது. அரவிந்தனுடனான உரையாடலில் அவள் முழுக்கப் பொய்யாகவும் இருக்கவில்லை, முழு உண்மையாக வாழவும் அவளுக்கு வழியில்லை. ஒருநாள் அவள் அனுப்பிய அந்த வரிகள் அரவிந்தனின் ஆன்மாவைத் தொட்டன: "அகதி நிலை என்பது தேசம் கடப்பது மட்டுமல்ல, ஒரு இதயத்திலிருந்து இன்னொரு இதயம் சேர முடியாமல் தவிப்பதும் கூட." இலக்கியப் பேராசிரியரான அரவிந்தன், அவளது சொற்களில் ஒரு கவித்துவத்தைக் கண்டான். அவன் மனதுக்குள் பின்வரும் வரிகள் ரீங்காரமிட்டன: திரையில் மின்னும் ஒளியின் பின்னே தெரியும் பிம்பம் யாரோ? - என் உயிரைத் தீண்டும் வார்த்தை சொல்லி உள்ளம் கவர்வது யாரோ? புரியாக் காதலில் புதைந்து போனால் தனிமை பறந்து விடுமே! - இது பதின்ம வயது மங்கை மடியில் இன்பம் கண்டு மகிழுமே! செல்விக்கு வழங்கப்பட்ட இலக்கு (Target) ஒரு கணிதச் சமன்பாடு போல மிகத் தெளிவானது. அரவிந்தனின் தனிமையைக் கண்டறிய வேண்டும், அவனது பலவீனமான உணர்வுப் புள்ளிகளைத் தாக்க வேண்டும், பின்னர் ஒரு 'அவசரத் தேவை' என்ற நாடகத்தை அரங்கேற்றிப் பணம் பறிக்க வேண்டும். தேவைப்பட்டால், உரையாடல்களின் ஊடாக அவனது அந்தரங்கங்களைச் சேகரித்து, அவனை மிரட்டி (Blackmail) முடக்கிவிட வேண்டும். இதுதான் அவளுக்கு இடப்பட்ட கட்டளை. ஆனால், இங்குதான் விதி தனது பகடைகளை உருட்டியது. செல்வி அரவிந்தனிடம் பேசப் பேச, ஒரு விரிவுரையாளராக அவனிடம் இருந்த அந்த நிதானமும், ஆழமான அறிவும், எதையும் எதிர்பார்க்காத தூய அன்பும் அவளது இறுகிப்போன இதயத்தை மெல்லத் திறந்தன. இதுவரையில் வறுமையையும், போதைக்கு அடிமையான கணவனின் வன்முறையையும் மட்டுமே சந்தித்த அவளுக்கு, அரவிந்தனின் சொற்கள் ஒரு குளிர்ந்த தென்றலாகத் தெரிந்தன. அவள் அவனிடம் பகிர்ந்துகொண்ட கதைகள் யாவும் அவளது நிஜ வாழ்வின் ரத்தமும் கண்ணீரும் கலந்த காயங்கள். பாதுகாப்பு கருதிப் பாத்திரங்களின் பெயர்களை மட்டுமே மாற்றினாள்; ஆனால் அந்தத் துயரத்தின் ஈரம் அவளுடையது. ஒவ்வொரு முறை அவன் அவளை "அனிதா" என்று அழைக்கும்போதும், அவள் மனசாட்சி உள்ளுக்குள் கதறியது. அரவிந்தன் அவளைத் தனது தனிமைப் பாலைவனத்தை நந்தவனமாக்க வந்த ஒரு தேவதையாகப் பார்த்தான். ஆனால் செல்வியோ, தான் ஒரு வேடன் விரித்த வலையில் இரையாக வைக்கப்பட்டிருக்கும் ஒரு பறவை என்பதை அவனிடம் சொல்ல முடியாமல் தவித்தாள். பணத்திற்காகத் தொடங்கிய இந்த நாடகம், இப்போது ஒரு ஆத்மார்த்தமான பந்தமாக மாறத் தொடங்கியது அவளுக்குப் பெரும் அச்சத்தைத் தந்தது. "ஒரு கவிஞனின் இதயத்தை உடைப்பதா? அல்லது தன் குழந்தைகளின் பசியைத் தீர்ப்பதா?" - கவிதைக்கும் கடனுக்கும் இடையிலான அந்த மெல்லிய கோட்டில் அவள் ஒரு ஊசலாடும் ஊசியானாள். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] அத்தியாயம்: 03 தொடரும் துளி/DROP: 2137 [சிறு கதை - 208 / நிழல் வலை (The Shadow Web) - ஒரு விழிப்புணர்வுக் கதை / அத்தியாயம் 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/34731564169825454/?
  11. சுமே அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறிக் கொள்வதோடு🎂..நேரம் எடுத்து எனக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.🙏
  12. ஆரம்பத்தில் ஈரான் புளுகுதோ என்று நினைத்தேன். நிலமையை பார்த்தால் பெருசுதான் நமக்கு மண்டையை கழுவி ஊத்துறது போல தோன்றுகின்றது. ஒரு ஆளை தேடிப்பிடித்து தூக்கி எடுக்கவே இந்தப்பாடு என்றால் தரைப்படையை இறக்கினால் சங்குதான் போலும்.
  13. காணொளியின் முக்கிய உள்ளடக்கம் மேற்கின் பூச்சாண்டி பிரசாரம், ஏவுகணை தொழில்நுட்பம் எவர் உருவாக்கினாலும், நோக்கம் என்ன என்பதை பொறுத்து ஒற்றுமைகள் இருப்பது தவிர்க்க முடியாது. ஏனெனில், ஏவுகணைகளின் பௌதிகம் ஒன்று. உ.ம். solid fuel ஏவுகணை தொழில்நுட்பத்தை இவை ஆய்வு, மாற்றம் சோதித்த காலம் வேறு வேறானது. us / மேட்ற்கு / இஸ்ரேல் விவிலிய பிரளய விஷக்கிருமிகளின் பொறாமை, இரான் அதுவாக தொழில்நுட்பத்தையும், அதன் இராணுவ உற்பத்தி தளத்தையும் விருத்தி செய்த்து கொண்டுள்ளது ஈரான் ஏவுகணையை வாங்க தேட தொடங்கிய காலம் us / மேட்ற்கு / இஸ்ரேல் விவிலிய பிரளய விஷக்கிருமிகள் சதாமுக்கு இரானை தாக்க இரசாயன ஆயுதம் கொடுத்து ஏவிய காலம். வாங்குவதை மேற்கு எல்லா கிருமிகளும் தடுக்கிறது என்பதை அறிந்த பின்பே, அதுவாக ஏவுகணை ஆய்வில் ஈடுபட தொடங்கியது. அதன் விளைவவே. ஈரானிடம் உள்ள சொந்த ஏவுகணை தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி வலு இருப்பது அனால், வஅட கொரியா, இரான் இடையே அறிவு, தொழிநுட்ப ஆலோசனை போன்ற பரிமாற்றங்கள் இருக்கலாம். கிருமிகள் தமக்கிடையே அல்லாஹ் தமக்கு கூசா தூக்குபவர்களுக்கு செய்வது. இங்கே சிலர் (எந்த தேடலும் , சிந்தனையும் இல்லாது) சும்மா வாய்க் வந்தபடி மேற்கு / us பிரச்சாரத்தை ஒப்புவிப்பது இரானிடம் ஒநிறம் இல்லை உ.ம். ஆக இரானிடம். ருசியா இடம் இலாஹ 4ம் தலைமுறை cnc உற்பத்தி தொழில்நுட்பம் உள்ளது. 6-7 நாடுகள் உற்பத்தி செய்யக்க்கூடிய gas turbine இல் இராநும் ஒன்று. மேற்கு கிருமிகளுக்கு இது எல்லாமே வெப்பியாரம் எரிந்து இரத்தத்தை கக்க வைக்கிறது. இவ்வளவு பொருளாதார கடைகள் இருந்தும், குறிப்பாக கடின தொழில்நுட்பத்தை / விஞ்ஞானத்தை இரான் அதிக அடைந்துவிட்டது முக்கியகாரணம் விவிலிய பிரளய விஷக்கிருமிக இரானை அழிக்க முயல்வதில்.
  14. பிந்திய செய்தியொன்று கூறுகிறது, இரான் இஸ்லாமாபாத்தில் பேச்சுக்களை நடத்த சமிக்ஞை தெரிவித்திருப்பதாக. பொறுத்திருந்து பாப்போம் எது உண்மை என்பதை.
  15. எதிரிகளிடம் பிடிப்படாமல் இருப்பதற்கு இரண்டு C-130 இராணுவ போக்குவரத்து விமானங்களை தாமே அழித்ததாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதை தான் அமெரிக்காவின் கதை இருக்கின்றது. அமெரிக்காவின் தரைவெளி தாக்குதல் என்பது, கானல் கதையாய் தான் இருக்கின்றது
  16. காணாமற் போன விமானியை தாம் மீட்டு சர்வதேச விதிகளின்படி அவரை கவனித்து வருவதாகவும் கவலையுற்று இருக்கும் அந்த விமானியின் தாயாருக்கு செய்தி அனுப்பப்பட்டதாகவும் இரான் செய்திகள் தெரிவிப்பதாக ஒரு செய்தி தெரிவிக்கிறது. ஆனால் ட்ரம்ப் சொல்வதாவது, அந்த விமானி ஒரு சிறந்த வீரர், அவரை நாங்கள் தனியே விடவில்லை, போர் வீரர்களும் விமானமும் சேர்ந்து தேடுதல் செய்து அவரை இரான் எல்லைக்குள் இருந்து பத்திரமாக மீட்டதாகவும் அவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். இது சாத்தியமா? ஈரானில் எல்லாரையும் எல்லாவற்றையும் அழித்துவிட்டோம் என்று பேட்டியளித்துக்கொண்டு, ஈரானோடு பேசிவருகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இரண்டுநாள் போர் தடுப்பு அவகாசம் கேட்டுக்கொண்டு, போர் நடத்தும், அழிக்கப்பட்ட குழுவிடம் போர் விமானத்தையும் விமானியையும் பறிகொடுத்த ட்ரம்பின் பேச்சை நம்பலாமா?
  17. உயிர்த்த ஞாயிறில் எழும்பி வந்து நானே மீட்பர் என்று சொல்லாதவரை ஓக்கே😂 நீங்க என்னடா எனக்கு நோபல் பரிசு தராம விடுறது… நான் ஆஸ்காரே எடுப்பேண்டா… -தம்பர்-
  18. விஜைக்கு இந்த முறை சீட் கிடைக்காவிட்டாலும் அவருக்கு போக்கிடமில்லை….அரசியல்தான் இந்த போக்கிரியினதும் கடைசி புகலிடமாக இருக்கும். இனி அவர் சினிமா திரும்ப போவதில்லை என்றே நான் நினைக்கிறேன். ஆனால்… சீமான் போல் அரசியல் இல்லாவிட்டால் சோறு இல்லை என்ற நிலையில் விஜை இல்லை. பிரபாகரன் என்ற அட்சய பாத்திரம் மட்டும் இல்லை என்றால்…. சீமான் ஒரு முன்னாள் தோல்வி பட இயக்குனராக…. ஸ்டோரி டிஸ்கசனில் கலந்து கொண்டு அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடி கொண்டிருப்பார். உழைப்பை கொச்சை படுத்தவில்லை… ஆனால்….புலவர் போன்ற தம்பிகள்… ஏதோ விஜை கொள்ளை அடிக்க போய்விடுவார் என்பதை போல்…மீள நடிக்க போய் விடுவார் என்கிறனர். ஆனால் அவர்களின் அண்ணன்…ஓப்பனாக மேடையில்… எனக்கு ஓட்டு போடு இல்லேன்னா படம் எடுக்க போய்டுவேன் எண்டு சொல்வதை கண்டு கொள்ள மாட்டார்கள்.
  19. இன்றைய தாக்குதலில் மொத்தமாக, இரண்டு சி-130 இராணுவ விமானங்கள் மற்றும் இரண்டு அமெரிக்க பிளாக் ஹாக் உலங்குவானூர்திகளை அழித்ததாகக் இரான் அறிவித்துள்ளது.
  20. அறவே இல்லை…கரூர் சம்பவத்தின் பின்னான விஜையின் பதுங்குதலை கூட மன அளுத்தமாக இருக்கலாம் என benefit of the doubt கொடுக்க யோசித்த நான்… விஜையை அறவே கை கழுவியது…இந்த வர்த்தே இல்லை…. மொமெண்ட்டின் பிந்தான். அதுவும் அந்த உடல்மொழி…அநாகரீகத்தின் உச்சம். இங்கே மனைவியை மட்டும் அல்ல, தன் 27 வருட குடும்பவாழ்வை, பிள்ளைகளையும் சேர்த்தே அவர் அவமதித்துள்ளார். நான் முன்பே சொல்லிவிட்டேன் அண்ணா, பலவாறு சிந்தித்ததில் எனக்கு வாக்கு இருப்பின் இந்த முறை என் வாக்கு திமுகவுக்க்கு போகவே வாய்ப்பு அதிகம். ஆனால்….(இன்னும்) திமுக, அதிமுக அளவுக்கு விஜை திருடன் இல்லை. 11%
  21. · Suivre sSrpenootd2:14609gvf802l l04415t04h7g23af3 e i69r 8Lg7l5àll0 · கடுமையாக மழை பெய்துக்கொண்டு இருந்தது.. வீட்டில் அத்தனை காரியங்களையும் கவனித்து கொண்டிருந்த மஞ்சன் என்கிற காரியஸ்தர் மழையில் வங்கியில் இருந்து வீட்டு செலவுக்கு பணம் எடுக்க போனவர் திரும்பவில்லை. வீட்டில் இருந்த எஸ் ஏ பி அவர்களுக்கு நிலைக்கொள்ளவில்லை. இந்த கொட்டும் மழையில் அவரை வங்கிக்கு அனுப்பியது தவறோ? என்று எண்ணினார். மஞ்சன் காரியஸ்தான். ஆனால் அண்ணன் என்று தான் அவரை எஸ் ஏ பி அழைத்து வந்தார். அவரது அன்னை தன் பிள்ளை படும் பாட்டைக்கண்டு மஞ்சன் பத்திரமாக திரும்பி விடுவார். கவலை வேண்டாம் என்று ஆறுதல் கூறினார்.. அம்மாவின் கூற்றுப்படியே சற்று நேரத்தில் மஞ்சன் வங்கியில் எடுத்த 500 ரூபாய் பணத்தோடு திரும்பி விட்டார்.. ஆனால் மஞ்சனின் முகத்தில் ஏதோ ஒரு வருத்தம் தெரிந்தது. மவுனமாகவே இருந்தார்.. சற்று நேரம் சென்ற பின் எஸ் ஏ பி அமைதியாக இருந்து விட்டு மஞ்சண்ணா! என்ன விஷயம்? என்று கேட்க, கொட்டி தீர்த்து விட்டார் காரியஸ்தர். எந்த நாளும் இல்லாத திருநாளாக அன்று வங்கி அதிகாரி ஒரு கேள்வி கேட்டு விட்டார். அவர் கேட்க கூடாது தான். ஆனால் கேட்டு விட்டார். எப்போதும் உங்கள் செட்டியார் கணக்கில் இருந்து பணம் எடுக்கிறார். கணக்கில் ஒரு முறை கூட பணம் போடுவதில்லை. ஏன் அவர் சம்பாதிப்பது இல்லையா? என்று கேட்டிருக்கிறார். அந்த கேள்வி ஒரு வகையான குத்தல்.. ஒரு தனிப்பட்ட எஸ் ஏ பியை கேலி செய்யும் பேச்சு அல்ல. நகரத்தார் இனத்தை சேர்ந்த ஒருவர் இப்படியும் உட்கார்ந்து சாப்பிடுவாரோ என்று தொனிக்கும் படியான குத்தல். அது காரியஸ்தர் மஞ்சனை வெகுவாக பாதித்து இருக்கிறது. அந்த வங்கி அதிகாரியின் கேலி எஸ் ஏ பியை உறுத்தவில்லை. ஆனால் காரியஸ்தர் மஞ்சண்ணனை அந்த வங்கி அதிகாரியின் குத்தல் உறுத்தியிருக்கிறது என்பது எஸ் ஏ பிக்கு வருத்தத்தை தந்தது. வெகு நேரம் யோசித்தார். வக்கீலுக்கு படித்திருக்கிறார்.ஆனால் அந்த தொழிலில் நாட்டமில்லை. வேறு என்ன செய்ய? எழுத்தில், இலக்கியத்தில் மிகுந்த நாட்டம் இருக்கிறது. தன்னுடன் கல்லூரியில் படித்த பார்த்த சாரதியை பங்குதாரராக சேர்த்துக்கொண்டு ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்து நடத்த முடிவு செய்கிறார். அன்னை, மனைவி.. இருவர் சம்மதத்தையும் பெறுகிறார். முனைப்புடன் காரியத்தில் இறங்குகிறார். அந்த வங்கி அதிகாரி குத்தலாக உங்கள் செட்டியாருக்கு சம்பாதிக்க தெரியாதா? என்று கேட்டது 1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம். அதே ஆண்டில் நவம்பர் 15 ஆம் நாள் குமுதம் முதல் இதழ் வெளி வந்தது. நினைத்ததை முடிப்பவன் என்று எஸ் ஏ பி அவர்களையும் அழைக்கலாம். குமுதத்தின் முதல் இதழின் அட்டை படத்தை இங்கே பதிவிட்டு இருக்கிறேன். இந்த தகவல் 1994 ஆம் ஆண்டு குமுதம் இதழ் ஒன்றில் வெளியாகி இருந்தது. இந்த செய்தி வெளியான இதழை எனக்கு கொடுத்து உதவியவர் முகநூல் நண்பர் திரு.சந்தானம் அவர்கள்.. அப்புறம் இந்த முதல் இதழ் குமுதத்தை யாரேனும் பத்திரமாக வைத்திருந்தால் குமுதம் அலுவலகத்திற்கு அனுப்பி 100 ரூபாய் பெற்றுக்கொள்ளலாம் என்று 1967-68ஆம் ஆண்டு வாக்கில் குமுதத்தில் ஒரு அறிவிப்பு வந்தது. இரண்டு பேர் அட்டை படம் இல்லாத குமுதத்தை அனுப்பினார்கள். ஒருவர் mint condition இல் அந்த முதல் இதழை அனுப்பினார். அவருக்கே 100 ரூபாய் பரிசு கிடைத்தது. அப்போது ராஜமுத்திரை வெளி வந்துக்கொண்டு இருந்தது.. அதற்கு ஒரு அத்தியாயத்திற்கு 100 ரூபாய் சன்மாணம் திரு. சாண்டில்யன் அவர்களுக்கு அனுப்பி கொண்டிருந்தார்களாம் குமுதத்தில் இருந்து. Voir la traduction......!
  22. அல்லாவை செல்லாக் காகாசாக்குவதில் பாகிஸ்தானும் முன்னணியில்.
  23. காணாமல் போன இரண்டாவது விமானப்படை விமானியும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது. காணாமல் போன அமெரிக்க விமானப்படை வீரரை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க விமானத்தை ( C-130 ) சுட்டு வீழ்த்தி உள்ளதாக ஈரான் அறிவித்து புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
  24. இதில் வரும் திருநாவுக்கரசு என்பவர் புங்குடுதீவை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். இலங்கை வடபகுதி சர்வோதய சங்கத்தின் தோற்றுவிப்பாளரான இவர் தனது கடைசி காலத்தில் அவரது சுவாமிகள் அருளிய வழியில் சுவாமிகளின் அதே மரநிழலில் இளைப்பாறியதாக அறிய முடிந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.