அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
முழு மரபணு சேர்க்கைத் தொகுப்பு (Whole-Genome Synthesis) பானுமதி.ந ஜூன் 12, 2021 கோவிட்-19-ன் ஆரம்பக் காலக் கட்டங்களில் சீன விஞ்ஞானிகள், அந்தக் கிருமியின் மரபணுத் தொடர்ச்சிகளை, மரபணுத் தரவுகளில் சேர்த்தார்கள். சுவிஸ் நாட்டில் இத்துறையைச் சேர்ந்தவர்கள், அத் தரவுகளைக் கொண்டு அந்தக் கிருமியின் முழு மரபணுவையும் செயற்கையாக அமைத்து அதை உற்பத்தி செய்தார்கள். இதில் கவனிக்க வேண்டிய ஒன்று என்ன வென்றால், அந்த மரபணுக்களை கொரியர் செய்யாமல், அதன் இயல்பு அணுக்களின் மரபினை நேரடியாக ஆய்வுக் கூடத்திற்கு அனுப்ப முடிந்த அந்த ‘டெலிபோர்டிங்’ மற்றும் அதன் வரைபடம் தான். மருத்துவத் துறையிலும், பல்வேறு செயல்களிலும் இந்த முழு மரபணு அச்சு வரைபடம் என்பது துரித…
-
- 0 replies
- 537 views
-
-
முழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சீனாவின் பிரம்மாண்ட தொலைநோக்கி! உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ரேடியோ தொலைநோக்கியானது அலுவல்ரீதியாக வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது என சீனாவின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்த பாஸ்ட் ரேடியோ தொலைநோக்கி 2016ல் வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும், அதன் பின்னர் பரிசோதனை மற்றும் கட்டமைப்பதற்கு உட்பட்டிருந்தது. பாஸ்ட் என்பது ஐநூறு மீட்டர் துளை கோள தொலைநோக்கி ( FAST - Five-hundred meter Aperture Spherical Telescope) என்பதை குறிக்கிறது. பாஸ்ட்-ன் புனைப்பெயரான தியான்யான் என்பது, "வானத்தின் கண்" அல்லது "சொர்க்கத்தின் கண்"என பொருள்படுகிறது. இது தென்மேற்கு சீனாவின் குய்ஷோவில் இயற்கையான பள்ளத்தாக்கில் கட்டப்பட்டுள…
-
- 0 replies
- 333 views
-
-
பட மூலாதாரம்,TWITTER/BLUE ORIGIN படக்குறிப்பு,நியூஷெப்பர்ட்-31 குழு கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 13 ஏப்ரல் 2025, 01:53 GMT பாப் பாடகி, பத்திரிகையாளர், விஞ்ஞானி, திரைப்படத் தயாரிப்பாளர் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் அடங்கிய ஒரு குழு ஏப்ரல் 14ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளப் போகிறார்கள். முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே உள்ளடக்கிய இந்த குழு விண்வெளிக்குச் செல்லப் போகிறது. ஆறு பெண்கள் உள்ள இந்தக் குழுவை, ஜெஃப் பெசோஸால் நிறுவப்பட்ட விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின், அதன் நியூ ஷெப்பர்ட் ராக்கெட்டில் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 1963ஆம் ஆண்டில் சோவியத் விண்வெளி வீராங்கனையான வாலன்டினா தெரெஷ்கோவ் தனியாக விண்வெளிக்குச் சென்…
-
- 2 replies
- 351 views
- 1 follower
-
-
மூங்கிலில் இருந்து தயாரிக்கப்படும் துவிச்சக்கர வண்டி (கானாவில்)
-
- 0 replies
- 235 views
-
-
சந்ததியின் சந்ததிக்கும் விளங்கக் கூடியதாக எழுத வேண்டும் !... I - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part I II - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part II III - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part III IV - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IV V - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part V VI - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VI VII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VII VIII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VIII IX - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IX X - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part X XI - NIRLAC-ARI-Workshop on Manusc…
-
- 4 replies
- 2.1k views
-
-
இயற்கை முறை கருத்தரிப்பிலும், செயற்கை முறை க்ருத்தரிப்பிலும், ஒரு ஆணின் விந்தும், ஒரு பெண்ணின் முட்டையும் சேர்ந்தே கருத்தரித்து குழந்தை உருவாகிறது. மனித கலங்களுக்கு உடலுக்கு சக்தியை வழஙகும் இழைமணி (mitochondria) தாயின் கருவில் இருந்து குழந்தைக்கு கிடைக்கிறது. இந்த இழைமணியில் இருக்கும் DNA யில் குறைபாடு இருந்தால் அதை கொண்டிருக்கும் குழந்தை களுக்கு muscular dystrophy (தமிழ்?), epilepsy (காக்காய் வலிப்பு) and heart problems (இதய நோய்கள்) என்பன வரும் சாத்தியம் அதிகமாகும். உலகில் 1/6500 குழந்தை இவ்வாறு பிறக்கிறது. இதை தவிர்க்க இழைமணி DNA யில் குறைபாடு இருக்கும் தாயின் கரு முட்டையில் இருந்து குறைபாடு உடைய இழைமணி யை நீக்கி விட்டு , குறைபாடு அற்ற பெண்ணின் முட்டையில் இருந்து…
-
- 3 replies
- 870 views
-
-
மூன்று பேரின் மரபணுக்களுடன் உருவான முதல் குழந்தையை அமெரிக்க மருத்துவர்கள் உருவாக்கினர் மூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை பிரசவிக்கப்பட்டிருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது. இந்த அறிவிப்பு 'நியூ சையண்டிஸ்ட்' சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. மூன்று பேரின் மரபணுக்களை உள்ளடக்கும் இந்த தொழில்நுட்பம், அபூர்வமான மரபணு சிதைமாற்றங்கள் கொண்ட பெற்றோர்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வழி வகுக்கிறது.…
-
- 2 replies
- 448 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லாகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மூன்று பேரின் மரபணு கூறுகளை பயன்படுத்தி பிரிட்டனில் எட்டு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இந்த முறை மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான உடல்நல பாதிப்புகளை தவிர்க்க உதவும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரிட்டன் விஞ்ஞானிகளால் முன்னோடியாகக் கொண்டுவரப்பட்ட இந்த முறையில், ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டை மற்றும் விந்தணுவுடன், மற்றொரு பெண்ணிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இரண்டாவது கருமுட்டையை இணைக்கின்றனர். இந்த நுட்பம் ஒரு தசாப்த காலமாக பிரிட்டனில் சட்டப்பூர்வமாக இருந்தபோதிலும், குணப்படுத்த முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய் பாதிப்பு இல்லாமல் …
-
- 0 replies
- 206 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜேம்ஸ் கல்லேகர் பதவி,உடல்நலம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 10 மே 2023 பிரிட்டனில் முதன் முறையாக 3 பேரின் டி.என்.ஏ.க்களுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. இதனை அந்நாட்டின் குழந்தைப் பேறு ஒழுங்குமுறை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. தீர்க்க முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய்களுடன் குழந்தைகள் பிறப்பதை தடுக்கும் முயற்சியாக இந்த முன்னோடி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவரையிலும், இந்த வகையில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், கூடுதல் விவரங்கள் ஏதும் இல்லை. மைட்டோகாண்ட்ரியல் நோய்கள் குணப்படுத்த முடியாதவை. குழந்தை பிறந்த சில நாட்களி…
-
- 0 replies
- 404 views
- 1 follower
-
-
உலக ‘ரோபோ’ மாநாட்டில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வைத்தியர் ரோபோ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சீனாவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக ‘ரோபோ’ மாநாடு நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலக ‘ரோபோ’ மாநாடு தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் ஆரம்பித்தது. “ஒரு புதிய திறந்த சகாப்தத்திற்கான நுண்ணறிவு சூழல் அமைப்பு” என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாடு இம்மாதம் 25ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உளவு, மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட 20 தொழிற்துறைகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 584 views
-
-
மூளை ஆராய்ச்சியில் முக்கியத் திருப்பங்கள்: நினைவுப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கலாம் நம்முடைய மூளையில் நினைவுகளை உருவாக்கும்போதும், அவற்றை சேகரிக்கும்போதும் உண்மையிலேயே என்ன நடக்கிறது? இது தொடர்பான புதிய ஆய்வில் விஞ்ஞானிகளே ஆச்சரியப்படும் வகையில் முடிவுகள் வெளியாகியுள்ளன. படத்தின் காப்புரிமைF WALSH நாம் கொண்டுள்ள நினைவுகள் அனைத்தையும் மனிதரின் மூளை ஒரே நேரத்தில் இருமுறை பதிவு செய்து கொள்வதாக அமெரிக்கா மற்றும் ஜப்பானிய விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. அவ்வாறு இரு முறை நினைவுகளை உருவாக்கி கொள்வதில் ஒன்றை அவ்வப்போது பயன்படுத்தி கொள்வதற்கும், இன்னொன்றை நீண்ட காலம் பயன்படுத்திக் கொள்வதற…
-
- 0 replies
- 298 views
-
-
மூளை எவ்வாறு சுவையை உணர்கிறது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த ஓரு விவாதத்திற்கு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர். ஒவ்வொரு சுவைக்கும் மூளையில் சிறப்பு நியூரான்கள் உள்ளனவாம்உப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு உரைப்பான உமாமி சுவை ஆகிய ஐந்து வகையான சுவைகளுக்கும் என தனித்தனியான விசேட நியூரான்கள் (உணர்வு உயிரணுக்கள்) மூளையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வெவ்வேறு சுவைகொண்ட உணவுகளை சுண்டெலிகளுக்கு கொடுக்கும்போது அவற்றின் மூளையில் ஒவ்வொரு நியூரானிலும் ஏற்படுகின்ற மாற்றத்தை அவதானித்து கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். உணவு நாளுக்கு நாள் சுவையில்லாமல் போவதாக உணரும் வய…
-
- 0 replies
- 406 views
-
-
மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளைக் கண்டறியும் வகையில், மெஷின் லேர்னிங் (Machine Learning) சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை IIT (Indian Institute of Technology) விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது. மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளை துல்லியமாகக் கண்டறிவதற்கான Machine Learning சார்ந்த அடிப்படையிலான கணினி தொழில்நுட்பத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். ‘GBM Driver’ (GlioBlastoma Multiforme Drivers) என அழைக்கப்படும் இந்தக் கருவி மூலம் மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகளில் ஏற்படக்கூடிய கட்டிகளை ஒன்லைனில் கண்டறிய முடியும். Glioblastoma (GBM) என்பது மூளை மற்றும் முதுகுத்தண்டு வடத்தி…
-
- 0 replies
- 651 views
- 1 follower
-
-
சிறிது கூட ஓய்வெடுக்க நேரமின்றி உழைப்பது ஒரு சிலருக்கு பணிச்சுமையினால் அமைகிறது. வேறு சிலர் அவ்வாறு உழைப்பதன் மூலம் அதிக திறனை வெளிப்படுத்த முடியும் என நினைத்து தாங்களாகவே உழைக்கின்றனர். பணிச்சுமைகள் இருந்தாலும், நாம் செய்யும் வேலைகளுக்கிடையில், 5 நிமிட இடைவேளை எடுப்பது அடுத்தடுத்து நாம் செய்ய வேண்டிய பணிகளில் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை 50 சதவிகிதத்திற்கு மேல் அதிகரிக்கும் என ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய இந்த பரிசோதனையில், 72 மாணவர்கள் சுயமாக பாடம் கற்பித்தல் மற்றும் இரண்டு கடினமான மனக்கணிதம் ஆகிய பிரிவுகளில் தேர்வு எழுதினர். ஆய்வின் ஒரு பகுதியாக, சில மாணவர்களுக்கு 5 நிமிட இடைவேளை அனுமதிக்கப்பட்டது. மீதமுள்ளவர்கள் எந்த இடை…
-
- 1 reply
- 362 views
- 1 follower
-
-
மூளைப்புலன்கள் - தூங்கும்போது கட்டிலில் இருந்து ஏன் விழுவதில்லை? பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் இரவில் கண்களை மூடுவதற்கும், காலையில் கண்களைத் திறப்பதற்கும் இடையில், ஆழ்ந்த ஓய்வின் மகிழ்ச்சியை மட்டுமே அறியும் அதிர்ஷ்டசாலிகளில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஆனால் நாம் தூங்கும்போது மனமும் உடலும் சுறுசுறுப்பாக இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். தூங்கும்போது நாம் கனவு காண்பது மட்டுமில்லை, குறட்டை விடுகிறோம், பேசுகிறோம், சிரிக்கிறோம், கத்துகிறோம், உதைக்கிறோம், குத்துகிறோம், உருள்கிறோம். ஆனால், மிக சிறிய கட்டிலில் தூங்கினாலும் சரி, அகலமான கட்டிலில் தூங்கி…
-
- 0 replies
- 288 views
- 1 follower
-
-
மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய செயற்கை கரத்தை பொருத்திக் கொண்ட முதலாவது பிரித்தானியர் என்ற பெயரை ஆப்கானிஸ்தானில் சேவையாற்றும் போது தாக்குதலுக்கு இலக்காகி கையொன்றை இழந்த அந்நாட்டு படைவீரர் பெறுகின்றார். தென் ரைனிசைட்டைச் சேர்ந்த அன்ட்றூகார்த்வெயிட் என்ற மேற்படி நபர் ஆப்கானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் பணியாற்றிய வேளை தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளாகி கையொன்றை இழந்தார். இந்நிலையில் அவருக்கு ஆஸ்திரியாவிலுள்ள வியன்னா மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மேற்படி மனதால் செயற்படுத்தக்கூடிய செயற்கை கரத்தை பொருத்தியுள்ளனர். மேற்படி அறுவைச்சிகிச்சைக்கு 7 மணித்தியால நேரம் செலவிடப்பட்டுள்ளது. அன்ட்றூ தனது செயற்கை கரத்தை எவ்வாறு அசைப்பது என நினைக்கும் போது அவரது மூளைய…
-
- 0 replies
- 423 views
-
-
மூளையிலும் ஆண் - பெண் வேற்றுமை நெல்லை சு. முத்து அவன் மூளை, அவள் மூளை என்று சொன்னால் அடிக்க வராதீர்கள். இன்று வரை அறிவியலில் சாதனையாளர்கள் என்று மேடம் கியுரி, சகுந்தலா தேவி, வலென்டியானா தெரஸ்கோவா, கல்பனா சாவ்லா என்று ஒரு நூறு பேரைப் பட்டியல் இட்டுக் காட்டலாம். உலக ஜனத்தொகையில் இது கடலில் கரைத்த பெருங்காயம். கல்வித் துறையில், கணிதத் துறையில் இயற்பியலில், பொறியியலில் பணி ஓய்வுபெறும் வரை ஆண்கள் அளவுக்கு எண்ணிக்கையில் பெண்கள் அதிகம் பிரபலம் அடையவில்லை. அது ஏன் என்கிற சூறாவளி அமெரிக்காவை இன்று மையம் கொண்டு உள்ளது. இளமையில் மதிப்பெண்களும் பரிசுகளும் கொட்டிக் குவிக்கும் பெண்கள் ஒரு குறிப்பிட்ட பராயத்திற்கு பிறகு கல்வித் துறையிலோ, ஆராய்ச்சித் துறையிலோ பரிமளிப…
-
- 7 replies
- 3.2k views
-
-
மூளையில் உள்ள கெட்ட நினைவுகளை மட்டும் நம்மால் அழிக்க முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் நம்முடைய மூளையில் பல்வேறு நினைவுகள் பதிவாகும் நிலையில், அதிலிருந்து கெட்ட நினைவுகளை மட்டும் தேர்ந்தெடுத்து நம்மால் நீக்க முடியுமா? பகலில் நடக்கும் பல விஷயங்களை நம் மூளை சேமித்து வைக்கிறது. ஆனால் அதில் பெரும்பாலானவை மறந்துவிடும். எனினும், கெட்ட நினைவுகளைச் சேமிக்க ஒரு குறிப்பிட்ட வசதி உள்ளது. நினைவுகளைச் சேமிப்பதற்கான அனைத்து முயற்சிகளும் நிச்சயம் நமக்கு உளவியல்ரீதியான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், சில மோசமான சூழலில் மன உளைச்சல் சீர்கேட்டையும் ஏற்படுத்தும். அதற்கான காரணம் என்ன? எ…
-
- 0 replies
- 205 views
- 1 follower
-
-
லண்டனில் தேவையற்ற கெட்ட நினைவுகளை நீக்கும் மின் அதிர்வு சிகிச்சையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்தில் உள்ள நிஜ்மெகன் ராட்பட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, மார்ஜின் குரோஸ் மற்றும் அவரது சகாக்கள் இணைந்து, மின் அதிர்வு சிகிச்சையின் மூலம், தேவையற்ற நினைவுகளை நீக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். நினைவுகள் நிரந்தரமானதல்ல என்பதன் அடிப்படையிலும், நினைவுகளை நிரந்தரமாக வைக்க மூளை சேமிப்பு பெட்டியல்ல என்பதன் அடிப்படையிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எலக்ரோகன்வல்சிவ் (இசிடி) என்னும் மின் அதிர்ச்சி சிகிச்சையில், நோயாளியின் தலையில் மின் பட்டைகளை பொருத்தி, மின்சாரம் மூளைக்கு செலுத்தப்படுகிறது. இதற்காக, 42 பேருக்கு மின் அதிர்வு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது; கார் விபத்…
-
- 2 replies
- 599 views
-
-
அனைவருமே பயன்படுத்தும் வகையில், நேரடியாக சிக்னல்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிற மொழிக்கு (ஆங்கிலம்) அந்தத் தகவல்களை மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்..? மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகளை நாம் புரிந்துகொள்ள முடிந்த மொழியாக மாற்றும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி-யைச் (IIT) சேர்ந்த துணைப் பேராசிரியர் விஷால் நந்திகானா மற்றும் அவருடைய மாணவர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர். சிக்னல்கள் என்றாலே அலை வடிவில் (Waveforms) தான் இருக்கும். அந்த அலை வடிவில் உள்ள சிக்னல்களை நாம் புரிந்துகொள்ளும் வகையில் மாற்ற ஃபோரியர் ட்ரான்ஸ்பார்ம் (Fourier Transform) அல்லது லேப்லாஸ் ட்ரான்ஸ்பார்ம் (Laplace Transform) போன்ற கணிதக் கோட்பாடுகளைப் பயன்படுத்துவோம். இதுபோன்ற கண…
-
- 1 reply
- 469 views
-
-
மூளையை பாதிக்கும் வாகனப்புகை: புதிய ஆய்வு எச்சரிக்கை ---------------------------------------------------------------------------------------------------------- நகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள் செல்வதாகவும் மூளையில் ஏற்படும் அல்சைமர்ஸ் நோய்க்கான காரணிகளில் ஒன்றாக அது இருக்கலாம் என்றும் புதிய ஆய்வின் முடிவுகள் குறிப்புணர்த்துகின்றன. ஐக்கிய ராஜ்ஜிய விஞ்ஞானிகள் மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் நகரவாழ்வின் சுகாதார ஆபத்துக்கள் குறித்த புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன. வாகனபுகையால் மூச்சுத்திணறல், இதயநோய், அகால மரணம் போன்றவை ஏற்படும் என்பது நன்கு தெரிந்த செய்தி. தற்போதைய இந்த புதிய ஆய்வு, வாகனப்புகை மூளைக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத…
-
- 0 replies
- 430 views
-
-
மூளையைக் காசாக்க ஒரு வழி! இது பகிடி... கனடா போய் உறவுகள் நண்பர்களைப் பார்த்து வந்தது முழுக் குடும்பத்துக்குமே பெரிய சந்தோஷம். சந்தோஷத்தோடு கனேடிய குடும்ப உறவுகளின் வாழ்க்கை முறைகள் வசதிகள் பற்றிய ஆச்சரியமும் என்னைத் தொற்றிக் கொண்டு விட்டது. பாரிய காற்றோட்டமான வீடுகள், அழகிய பூந்தோட்டங்கள் நிறைந்த வளவுகள், நாய்க்குட்டி, பூனைக் குட்டி, கரீபியன் தீவுகளுக்கு உல்லாசப் பயணம் என்று நல்ல "சோக்கான" வாழ்க்கை நான் சந்தித்த கனேடியத் தமிழருக்கு. நாங்கள் இங்க உழைக்கிற உழைப்பு எங்களுக்கு சாதாரணமாக வாழவே போதுமாயிருக்கு! என்ன தான் பிழையாகச் செய்கிறோம்? எண்டு யோசித்த போது, ஏதாவது சைட் பிசினஸ் செய்யலாம் எண்ட எண்ணம் வந்தது. எனக்கு பிசினஸ் எண்டாலே என்ன எண்டு தெரியாது, இதில எப்படி முதலீட…
-
- 3 replies
- 1.2k views
-
-
மூளையைத் தூங்க விடாதீர்கள்! ஜி.வி.ராவ்- பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை 3, புதிதாகச் சிந்தித்தல் இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி. ஒன்றிலிருந்து நுõறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாக…
-
- 2 replies
- 1.3k views
-
-
சட்ட அனுமதி கிடைக்குமானால் இன்னும் இரு வருட காலத்தில் 3 பேரை பயன்படுத்தி குழந்தைகளை விருத்தி செய்யும் செயற்கிரமத்தை முன்னெடுக்க விஞ்ஞானிகள் தயார் நிலையில் இருப்பார்கள் என பிரித்தானிய இனவிருத்தி ஒழுங்கமைப்பொன்றைச் சேர்ந்த குழுவினர் தெரிவிக்கின்றனர். இரு பெண்களிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டைகளையும் ஆணொருவரின் விந்தணுவையும் பயன்படுத்தி குழந்தையொன்றை விருத்தி செய்வதே இந்த தொழில்நுட்பம். Three Parent In Vitro Fertilzation (IVF) from Ricochet Science on Vimeo. தாயிடமிருந்து அபாயகரமான பிள்ளைகளுக்கு கடத்தப்படும் இழைமணி தொடர்பான நோய் பிறக்கும் குழந்தைக்கு ஏற்படுவதை தடுக்க உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் இந்த செயன்முறை பாதுகாப்பதற்காக அமையக்கூடும் என்பதற்கான சான…
-
- 0 replies
- 564 views
-
-
மெக்ஸிகோவில் ஆழ்கடலுக்குள் நடமாடும் மீனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் கடலடி விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆழ்கடலுக்குள் சுமார் 3 ஆயிரம் அடி ஆழத்தில் மணலிலும், பாறையிலும் நடந்து செல்லும் மீனைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். சேபர்ஸ் ஏஞ்சல் பிஷ் (Schaefer’s anglerfish) எனப்படும் அந்த மீன் மிகவும் அரியவகையைச் சேர்ந்தது. ஏறத்தாழ 50 கிலோ எடை கொண்ட அந்த மீன் 5 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. சுமார் ஒரு ஆண்டு கால தேடுதல் வேட்டைக்குப் பிறகு இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை மீனின் கால்கள் துடுப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. http://www.di…
-
- 0 replies
- 885 views
-