Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. முதன்முதலாக இராணுவ செயற்கைக்கோளை ஏவியது தென்கொரியா: உலக நாடுகளில் 10ஆவது இடம்! தென்கொரியாவின் முதலாவது இராணுவ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கனவெரல் (Cape Canaveral Air Force Station) வான்படை மையத்திலிருந்து குறித்த அனாசிஸ்-2 (ANASIS-II) செயற்கை்ககோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அணு ஆயுத அண்டை நாடான வட கொரியாவுக்கு எதிராக தனது பாதுகாப்புத் திறன்களை அதகரித்துக்கொள்ளும் விதமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இராணுவத்திற்கு மட்டுமே தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கும் உலகின் 10 ஆவது நாடாக தென்கொரியா பதிவாகியுள்ளது. இந்த செயற்கைக் கோள் நிரந்தர மற்றும் பாதுகாப்பான இராண…

  2. பருவநிலை மாற்றம்: கோடைக்காலங்கள் இன்னும் கடுமையானதாக மாறும் - புதிய எச்சரிக்கை 19 ஜூலை 2020 டேவிட் ஷுக்மன் பிபிசி அறிவியல் செய்தியாளர் NG TENG FONG GENERAL HOSPITAL பருவநிலை மாற்றம் காரணமாக வருங்காலத்தில் கோடைக்காலங்கள் மிகவும் கடுமையாக மாறினால் உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதனால் அவர்களது உடலுறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெப்ப அழுத்தத்தால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக் காரணமாகும் வேலைகளை பெரும்பாலும் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள் மேற்கொள்கிறார்கள். அதாவது, வெட்ட வெளியில் விவசாயம் செய்வது, கட்டடப் பணிகளில் ஈடுபடுவது …

  3. செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை புரிந்த ஐக்கிய அரபு அமீரகம் டோக்கியோ அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியநாடுகள் மட்டுமே விண்வெளிக்கு விண்கலங்களை ஆய்வுக்கு அனுப்பி சாத்னை புரிந்து உள்ளன. முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி சாதனை புரிந்து உள்ளது. கடந்த வாரமே இந்த விண்கலம் ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் மோசமான வானிலையால் விண்ணில் செலுத்தப்படவில்லை. ஜப்பானில் உள்ள தனேகஷிமா என்னும் இடத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் எச்-2 ஏ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் பருவநிலைகளை ஆராயும். அமெரிக்க நிபுணர்களிடம் பயிற்சி ப…

  4. அண்டம் முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய அணு வெடிப்பு 16 ஜூலை 2020 பால் ரின்கன் பிபிசி அறிவியல் பிரிவு UNIVERSITY OF WARWICK / MARK GARLICK பகுதியளவு சூப்பர்நோவா வெடிப்பைத் தொடர்ந்து அண்டத்தில் ஒரு நட்சத்திரம் அதிர்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று விண்வெளி நிபுணர்கள் கூறுகின்றனர். சில நட்சத்திரங்கள் ஆயுட்கால முடிவை எட்டும்போது நடைபெறும் சக்திமிக்க வெடிப்பு சூப்பர்நோவா எனப்படுகிறது; இந்த வெடிப்பு அதை அழிப்பதற்குப் போதுமான சக்தியைக் கொண்டதாக இருக்காது. மாறாக அது விண்வெளியில் மணிக்கு 9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் நட்சத்திரத்தை தாறுமாறாக இயங்கச் செய்யும். …

  5. இதுவரை இல்லாத வகையில் மிக நெருக்கமாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படம் வாஷிங்டன் சூரியனிலிருந்து 7 கோடியே 70 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் நாசா இணைந்து அனுப்பிய சோலார் ஆர்பிட்டர் இந்த புகைப்படங்களை எடுத்துள்ளது. பூமி சூரியனிலிருந்து 15 கோடியே 2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கிட்டத்தட்ட இதன் பாதியளவு தூரத்தில் ஆர்பிட்டர் இருக்கும்போது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. "இந்த அற்புதமான படங்கள் விஞ்ஞானிகள் சூரியனின் வளிமண்டல அடுக்குகளை ஒன்றிணைக்க உதவும், இது பூமிக்கு அருகில் மற்றும் சூரிய குடும்பம் முழுவதும் விண்வெளி வானிலை …

  6. பூமியை நெருங்கிய ராட்சச வால்நட்சத்திரம்.! டெல்லி: உலக விஞ்ஞானிகள் எல்லோரும் எதிர்பார்த்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் தற்போது பூமிக்கு மிக அருகில் வந்து இருக்கிறது. நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் கடந்த இரண்டு மாதமாக சூரியன் அருகே சுற்றி வந்துவிட்டு, சூரிய ஒளியில், வெப்பத்தில் இருந்து தப்பித்து அசாத்திய பயணம் மேற்கொண்டது. தனது பயணத்தை அங்கேயே முடித்துக் கொள்ளாமல், நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் அதன்பின் புதன் கிரகத்தை நோக்கி சென்றது. இடையில் வெள்ளி கிரகத்தின் சுற்று பாதையை கடந்த நியோவைஸ் (NEOWISE) வால் நட்சத்திரம் தற்போது பூமியை நோக்கி வந்துள்ளது. இதன் அசாத்திய பயணத்தை நாமே இனி கண்கூடாக பார்க்க முடியும் என்கிறார்கள். பூமியை நெருங்க…

  7. நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் கணிதம் - புதிய நம்பிக்கை Getty Images நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிப்பதை மேம்படுத்தும் வகையில் எடின்பரோவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய கணித சமன்பாட்டை உருவாக்கியுள்ளனர். பிரிட்டன் புவியியல் ஆய்வு அமைப்பு மற்றும் ஹெரியட்-வாட் பல்கலைக்கழகம் ஆகியன இணைந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஆய்வகங்களில் சோதனை செய்வதைக் காட்டிலும் அவர்கள் கணித்தத்தை பயன்படுத்தி நிலநடுக்கத்தை அறிய முற்பட்டுள்ளனர். நிலநடுக்கம் ஏற்படும் புவியோட்டின் மையப்பகுதியில் உள்ள முக்கிய பாறையின் வலுவை கணிப்பதே இந்த ஆய்வின் நோக்கம். இவை ஃபிலோசிலிகேட்ஸ் எனப்படும். இது மைக்கா, க்ளோரைட் போன்ற தாதுக்களின் கலவை. இவை தட்டுகள் அல்லது தாள்க…

  8. நாம் உண்ணும் உணவில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் - ஓர் எச்சரிக்கை செய்தி Getty Images நாகரிக கால சமையல் முறைகள் , நச்சு ரசாயனப் பொருட்களை உருவாக்குவதில் தொடங்கி, புற்றுநோய் ஆபத்து வரை ஏற்படுத்தும், ஆரோக்கியத்துக்கு கேடு விளைவிப்பவையாக உள்ளன என்று ஆதாரங்கள் காட்டுகின்றன. அவற்றைத் தவிர்க்க என்ன செய்யலாம்? "நமக்கான உணவை சமைக்கத் தொடங்கியதன் காரணமாகத் தான் நாம் மனிதர்களாக பரிணாம வளர்ச்சி பெற்றிருக்கிறோம்," என்று ஜென்னா மெக்கியோச்சி உறுதியாகக் கூறுகிறார். "நாம் சமைக்காத சிலவற்றை மட்டும் சாப்பிட்டு வந்த காலத்தில், தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. ஏனெனில் சமைக்காத உணவுப் பொருட்களிலிருந்து சத்துகளை எடுத்துக் கொள்ள நமது உடல் போராட வேண்டியிருந்தது'' என…

  9. சந்திர கிரகணம்: ஜூலை 5ஆம் தேதி எங்கு, எப்போது, எப்படி தெரியும்? ஆ. நந்த குமார் பிபிசி தமிழ் Getty Images கடந்த ஒரு மாதத்துக்குள் மூன்றாவது கிரகணத்தை இந்த உலகம் காண உள்ளது. கடந்த ஜூன் 5-ம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்த நிலையில், ஜூன் 21ஆம் தேதி சூரிய கிரகணம் நடந்தது. இந்தநிலையில், மேலும் ஒரு சந்திர கிரகணம் நாளை நிகழவுள்ளது. 2020-ம் ஆண்டில் நிகழ உள்ள மூன்றாவது சந்திர கிரகணம் இது. ஜனவரி 10-ம் தேதி முதல் சந்திர கிரகணமும், ஜூன் 5-ம் தேதி இரண்டாவது சந்திர கிரகணமும் நிகழ்ந்துள்ளன. ஞாயிறு அன்று நிகழப்போகும் கிரகணம், `புறநிழல் சந்திர கிரகணமாகும்` (Penumbral lunar eclipse). இந்த கிரகணத்தின்போது, சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை ஒரே கோட்டில் இருப்பதில்லை. …

  10. செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்தது செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய நிலவான போபோஸை மங்கள்யான் மிக நெருக்கத்தில் படம் பிடித்து உள்ளது. பதிவு: ஜூலை 04, 2020 10:18 AM பெங்களூரு: செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக மங்கள்யான் என்ற விண்கலம் (ஆர்பிட்டர் மிஷன்) பி.எஸ்.எல்.வி- சி25 ராக்கெட் மூலம் சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்தது. சுமார் 10 மாத காலத்துக்கு பின்னர் அது 2014-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 24…

  11. அல்பேர்ட் ஐன்ஸ்ரைன் என்ற பெயரை கேட்டாலே நினைவுக்கு வருவது அவர் கண்டுபிடித்த சார்பியல் கோட்பாடு தான். அந்த சார்பியல் கோட்பாட்டை நிரூபிக்க அவர் எவ்வளவு கஷ்ரப்பட்டார் என்பதை இந்த காணொலி விளக்குகிறது. அத்துடன் மனிதர்களால் உருவாக்கபட்ட இனம், மதம், தேசபக்தி போன்ற விடயங்கள் மனித குலத்திற்கு தேவையான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு எவ்வளவு தடையாக உள்ளது என்பதயும், இவ்வாறான இனவெறுப்பு, மதம், தேபக்தி போன்றன போர் வெறியை தூண்டி அறிவியல் கண்டுபிடிப்புகளை அழிவு சக்திகளாக உபயோகிக்க தூண்டுதல் செய்யும் வரலாற்றையும் இக்காணொளி விளக்குகிறது.

    • 4 replies
    • 952 views
  12. செவ்வாயை சுற்றி உருவான திடீர் பச்சை வளையம் மொத்தமும் ஒக்சிஜன்தான் - விஞ்ஞானிகள் விளக்கம்.! சென்னை: செவ்வாய் கிரகத்தை சுற்றி புதிதாக பச்சை நிறத்தில் வளையம் ஒன்று தோன்றி இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். உலகம் முழுக்க செவ்வாய் கிரகம் மீது தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. முக்கியமாக செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்ற உலகின் பல நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதிலும் நாசா, சீனா, ஸ்பேஸ் எக்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் இதில் மிக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அங்கு மனிதர்களை அனுப்ப இப்போதே அவர்கள் ராக்கெட்டுகளை உருவாக்கி வருகிறார்கள். பச்சை வளையம் இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தை சுற்றி புதிதாக பச்சை நிறத்தில் வளை…

  13. நமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் பூமியை தொடர்பு கொள்ள முயற்சிக்கின்றன நமது விண்மீன் மண்டலத்தில் 36 அறிவார்ந்த வேற்றுகிரக சமூகங்கள் நம் பூமியை தொடரபுகொள்ள முயற்சிக்கின்றன என ஆய்வு ஒன்றில் கூறப்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 17, 2020 11:55 AM வாஷிங்டன் வேற்றுகிரகவாசிகள் இருக்கிறார்களா? இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்? நம்மை போன்று இருப்பார்களா? அல்லது சினிமாவில் காட்டப்படும் உருவங்களில் இருப்பார்களா? இது போன்ற எண்ணற்ற கேள்விகள் நம் மனதில் எழுவது உணடு. வேற்று கிரகவாசிகள் உள்ளார்களா என்ற கேள்விக்கு நமது விஞ்ஞானிகள் கிட்டத்தட்ட ஆம் என்றே பதிலளித்து உள்ளனர். …

  14. ஜொனாதன் அமோஸ் பிபிசி அறிவியல் செய்தியாளர் 'யூரோப்பியன் சோலார் ஆர்பிட்டர்' (சுருக்கமாக 'சோலோ') என்ற சூரிய சுற்றுவட்டக் கலன் இன்று (ஜூன் 15) தனது தற்போதைய சுற்றுவட்டப் பாதையில் சூரியனுக்கு நெருக்கமான புள்ளியை அடைந்தது. சூரியனில் இருந்து 77மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்தப் புள்ளி. கடந்த பிப்ரவரி மாதம் ஏவப்பட்ட இந்த சூரிய ஆராய்ச்சிக் கலன் நமது நட்சத்திரமான சூரியனின் இயக்க ஆற்றல் பண்புக்கான காரணம் என்ன என்று ஆராயும். வெள்ளி, புதன் ஆகிய இரு கோள்களின் சுற்றுவட்டப் பாதைக்கு நடுவில் இருக்கிறது தற்போது சோலோ கலன் அடைந்திருக்கிற புள்ளி. இன்னும்…

  15. மனிதர்களின் விண்வெளி பயணத்தில் முதன்முறையாக பெண் ஒருவரை தலைமை அதிகாரியாக நாசா நியமித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு சந்திரனுக்கு மனிதனை அனுப்ப தயாராகி வரும் நிலையில், மனித விண்வெளி ஆய்வு மற்றும் செயல்பாட்டு மிஷன் இயக்குநரகத்தை வழிநடத்த கேத்தி லூடர்ஸ் என்ற பெண் அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் ட்விட்டரில் அறிவித்தார். 1992 ஆம் ஆண்டு நாசாவில் சேர்ந்த கேத்தி லூடர்ஸ், கடந்த மாதம் தனியார் குழுவின் விண்வெளி பயணத்தை திறன்பட நிர்வகித்ததால் பதவி உயர்வு பெற்றுள்ளார். ஸ்பேஸ்எக்ஸ், போயிங் மற்றும் நாசாவுடன் கூட்டு சேர்ந்துள்ள பிற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகளை சோதனை செய்து மனிதர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பும் பணியை பல ஆ…

  16. நெருப்பு வளைய சூரிய கிரகணம் ஜூன் 21 இல்……. எதிர்வரும் 21 ஆம் திகதி முழு அளவிலான சூரிய கிரகணம் ஏற்படும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளி பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தனா ஜெயரத்ன கூறுகிறார். 2020 ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் ஜூன் 21 ஞாயிற்றுக்கிழமை நிகழவுள்ளது. இந்த நேரத்தில் சூரியன் ஒரு பிரகாசமான வளையம் போல் காட்சியளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/நெருப்பு-வளைய-சூரிய-கிரக-2/

  17. விண்வெளிக்கும் ஆழ்கடலுக்கும் சென்ற முதல் பெண் விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையைப் படைத்தவர் கேத்ரின் சல்லிவன். தற்போது கடலின் மிக ஆழமான பகுதியான மரியானா ட்ரெஞ்சில் உள்ள சேலஞ்சர் முனைக்குச் சென்று திரும்பிய முதல் பெண் என்கிற சாதனையையும் அவர் படைத்திருக்கிறார்! 1978-ம் ஆண்டு நாசாவில் பெண்கள் இடம்பெற்ற முதல் விண்வெளித் திட்டத்தில் சேர்ந்தார் கேத்ரின். 25 ஆண்டுகாலம் நாசாவில் பணியாற்றிய போது, 3 முறை விண்வெளிக்குச் சென்றிருக்கிறார். 1984-ம் ஆண்டு சேலஞ்சர் விண்கலத்தைவிட்டு வெளியே வந்து 3.5 மணி நேரம் விண்வெளி நடை மேற்கொண்டார். தனது 3 பயணங்களின் மூலம் மொத்தம் 532 மணி நேரத்தை விண்வெளியில் கழித்திருக்கிறார். 1993-ம் ஆண்டு நாசாவிலிருந்த…

  18. செவ்வாய் நோக்கி பயணம் செய்ய உள்ள முதல் அரபு விண்கலம் .! செவ்வாய் கோளுக்கு முதல்முறையாக அரபு விண்கலம் ஒன்று பயணம் மேற்கொள்ளத் தயாராகி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்த விண்கலம் விண்ணில் ஏவப்படும். செவ்வாய் கிரகத்தை சென்றடைய 493 மில்லியன் கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டும். எனவே ஏழு மாதங்கள் பயணித்த பிறகே செவ்வாய் கோளைச் சுற்றிவருவதற்காக திட்டமிடப்பட்ட வட்டப் பாதையை இந்த விண்கலம் சென்றடையும். செவ்வாய் கோளுக்கு சென்றடைந்தவுடன் காலநிலை மாற்றம் மற்றும் செவ்வாயின் சுற்று சூழல் குறித்த தரவுகளை இந்த விண்கலம் அனுப்ப துவங்கிவிடும். பிறகு 687 நாட்களுக்கு செவ்வாய் குறித்த தரவுகளை இது புவிக்கு அனுப்பிக்கொண்டே இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட் இந்த விண்கலத்தை ஏவு…

  19. உலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம் கடந்த பிப்ரவரி மாதம் மகளின் பிறந்த நாளுக்கு வீட்டில் அலங்காரம் செய்து கொண்டிருந்த சமயம், 'எனக்கு ஹீலியம் பலூன் தான் வேண்டும்' என்று ஒற்றைக் காலில் நின்றாள் மகள். ஹீலியம் கிடைப்பதில் தற்சமயம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அவளுக்கு நான் விளக்கினாலும், அவள் ஏனோ ஏற்றுக் கொள்ள மறுத்தாள். எப்படியோ அவளை சமாதானம் செய்து கடைக்கு அழைத்துச் சென்றேன். 'ஹீலியம் பலூன் வேண்டுமென்று கடைக்காரரிடம் கேட்டால் 'தற்போது ஹீலியம் பலூன் விற்கப்படுவது இல்லை!' என்றார் கடைக்காரர். எனக்கு இதில் வியப்பு இல்லை. ஏனெனில் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த செய்தியை படித்ததுதான். ஹீலியம் பலூன் கிடைக்காமல் போனது மகளுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்…

  20. நவீன மின்னியல் உபகரணங்களில் உள்ள ஆபத்துக்கள் பற்றி அனைவரும் கட்டாயம் கேட்க வேண்டிய பேச்சு!

    • 0 replies
    • 483 views
  21. இடி தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம் - வழிகாட்டும் அசாம் அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் TOM ROBST கோப்புப்படம் வானத்தில் திடீர் திடீரென வெட்டி மின்னும் மின்னலும் இடியும் வானில் தோன்றும் அதிர வைக்கும் காட்சிகளாக இருந்தாலும், எப்போதாவது இவை பூமியைத் தொட்டுவிடுவதும் உண்டு. இந்த நிகழ்வுகளில், மனிதர்கள் சிக்கி மாண்டுபோவதும் அவ்வப்போது நிகழ்கிறது. ஒருவர் இருவர் என்று ஆங்காங்கே இடிமின்னல் தாக்கி இறந்தாலும், ஆண்டு முழுவதும் ஒரு மாநிலத்தில் இடி மின்னலால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகவே இருக்கிறது. இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழ…

  22. இன்று சந்திரக் கிரகணம் நிகழும் நேர விபரங்கள் 2020ஆம் ஆண்டுக்கான 2 ஆவது சந்திர கிரகணம் இன்று 05ஆம் திகதி நடைபெறுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ண தெரிவித்துள்ளார். இலங்கை நேரப்படி இன்று (05) இரவு 11.15மணியளவில் கிரகணம் ஆரம்பமாகிறது. அதிகாலை 2.34 மணிக்கு கிரகணம் நிறைவடைகிறது. சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்று நிகழவுள்ள சந்திரக் கிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திரக் கிரகணம் என அழைக்கவுள்ளனர். ஜூன் மாதத்தில் அமெரிக்காவில் ஸ்ட்ராபெரி அறுவடைக்காலமாகும். இந்த மாதத்தில் நிகழும் சந்திரகிரகணத்தை ஸ்ட்ராபெரி சந்திர கிரகணம் என்று அழைக்கின்றனர். இளஞ்சிவப்பு நிறந்தில் காணப்படும் முழு நிலவை யாரோ வாயை…

  23. இன்றும் நாளையும் பூமிக்கு அருகில் விண் கற்கள்.! இரு விண்கற்கள் இன்றும், நாளையும் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் பேசும்போது, 2020 கே என் 5 என்று பெயரிடப்பட்ட விண்கல் 24 முதல் 54 மீட்டர் விட்டமுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் இன்று பூமிக்கு மிக அருகில், அதாவது, சுமார் 62 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் பூமியைக் கடந்து செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து 12 முதல் 28 மீட்டர் நீளமுள்ள 2020 கே ஏ 6 என்ற மற்றொரு விண்கல்லும் பூமியை நெருங்கியபடி செல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த விண்கல் நாளையும், நாளை மறுநாளும் பூமிக்கு அருகில் வந்து செல்லும…

  24. UFO மற்றும் ஏலியன்ஸ் கதைகள் .! விண்வெளியில் நடைபெறும் அசாதாரண நிகழ்வுகள், ஒளிக் கீற்றுகள், விண்மீன்களின் சிதறல்கள் போன்றவைகள் கண நேரத்தில் நம் கண்ணில் தென்பட்டு மறைந்து போகும். நம்மால் யூகிக்க முடியாத பொருட்கள் விண்ணில் பறந்து மறைந்தால் அதுதான் யுஎஃப்ஒ. உலகில் பல்வேறு பகுதிகளில் இச் சம்பவங்கள் நடைபெற்று வந்தாலும், அமெரிக்க நிலப் பகுதிகளில் தான் இவைகள் அதிகம் தென்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைப் பற்றி இன்னும் எளிமையாக இப்படி தெரிந்து கொள்ளலாம் என்றால், உங்களுடைய சிறுவயதுகளில் கோடை கால சமயத்தில் வீட்டின் முற்றத்தில் பாட்டியோடு அல்லது தாத்தாவோடு கதைகள் கேட்டு நீங்கள் தூங்கி இருந்தால், இந்தக் கதையையும் நீங்கள் கேட்டிருக்கலாம். அதாவது, விண்வெளியிலிருந்து …

  25. வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தனர்! அமெரிக்காவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பால்கன்-9 ஏவூர்தி, 19 மணி நேரங்களுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த அமெரிக்க விண்வெளி வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோரை ஏற்கனவே அங்கு இருந்த ரஷ்ய மற்றும் அமெரிக்க குழுவினர் உற்சாகமாக வரவேற்றனர். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியின் மூலம், பெருமிதம் கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம், நாசா தனது விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.