அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் முதல் தடவையாக தமது இலாபத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் அது 9.5 பில்லியன் டாலர்கள் இலாபம் பெற்றிருக்கிறது. இது கடந்த வருடத்தின் இதேகாலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2.1 பில்லியன் டாலர்கள் குறைவாகும். ஆனால், சீனாவில் நடக்கின்ற பலமான விற்பனை காரணமாக தனது வருமானத்தில் ஒட்டுமொத்தமாக அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அது கூறுகின்றது. முதலீட்டாளர்களிடம் இருந்து பில்லியன் டாலர்கள் கணக்கிலான பங்குகளை திரும்ப வாங்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. உலகின் மிகவும் பெறுமதியான நிறுவனம் என்ற பெயரை அது அண்மையில் இழந்தது. அதனால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி தொடராது என்ற அச்சமு…
-
- 1 reply
- 472 views
-
-
இதுவரை நமது அறிவுக்கு எட்டிய தகவல்களின் படி நாம் வாழும் இந்தப் பூமியில் மட்டுமே ஹோமோ சேஃபியன்கள் என்ற தற்போதைய மனிதன் உள்ளிட்ட பல மில்லியன் உயிரிகள்,தாவர வகைகள் வாழ்கின்றன. நம்மைச் சூழவுள்ள பேரண்டத்தில் வேறு எங்கும் உயிர்கள் உள்ளனவா என்பது இன்றும் நமக்கு உறுதியாகத் தெரியாது. இது தொடர்பான தேடல் ஒருபுறம் தொடர்கிறது என்றாலும்,இது பற்றி அவ்வப்போது சில பல தகவல்கள் வெளிவந்தாலும் பெரும்பாலும் அவை ஆதாரபூர்வமாக அல்லாமல் வெறும் ஊகங்களின் அடிப்படையில் தான் வெளிவந்திருக்கின்றன. பூமியில் வாழும் உயிரினங்களில் இயற்கை வென்று அதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள ஹோமோ சேஃபியன்கள் என்னும் நவீன மனித இனம் மற்ற உயிரிகளை விட மேன்மைவாய்ந்ததாக கருதப் படுகிறது. இன்றைய ஹோமோ சேஃபியன்கள்…
-
- 1 reply
- 1k views
-
-
மின்னணு பொருள் (இலக்ட்ரோனிக்ஸ்) தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் தென்கொரிய நிறுவனமான சாம்சங் பெரும் வருமானத்தை ஈட்டியுள்ளது. இந்த ஆண்டிள் முதல் மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் சாம்சங் நிறுவனத்தின் நிகர வருமானம் 6 பில்லியன் டாலர்களைத் தாண்டிவிட்டது. கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இது 40 வீத வருமான அதிகரிப்பு. வருமானத்தில் வளர்ச்சியைக் காட்டும் சாம்சங் நிறுவனத்தின் 6வது தொடர்ச்சியான காலாண்டு இது. ஸ்மாட்ஃபோன்ஸ் எனப்படும் நவீனரக கைத்தொலைபேசி விற்பனையில் ஏற்பட்டுள்ள அதீத அதிகரிப்பும் குறைந்த சந்தைப்படுத்தல் செலவுமே இதற்குக் காரணம் என்று அவதானிகள் கூறுகின்றனர். இந்த வாரத்தின் ஆரம்பத்தில், சாம்சங் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான ஆப்பிள் கடந்த …
-
- 2 replies
- 596 views
-
-
ரோமில் இருக்கும் போது ரோமனை போல் நட/இரு (when in Rome, do as the Romans do) இப்படி ஒரு சொல்லாடலை எல்லாரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள். எம்மில் பலர் எம்முடன் இருப்பவர்களின் நடை உடை பாவனைகளை, பழக்கங்களை, தெரிந்தோ தெரியாமலோ பின் பற்ற தொடங்குவோம். சில நேரம் அவை படு முட்டாள் தனமாக இருக்கும். அதே போல பாடசாலை காலத்தில் நண்பர்களின் அழுத்தத்துக்கு (peer pressure) பணிந்து, அல்லது ஊரோடு ஒத்தோட சில நேரம் எமது நடைமுறைகளை மற்ற, சில தகாத பழக்கங்களை கைகொள்ள தொடங்குவதும் உண்டு. இது மனிதன் போன்ற சமூக விலங்குக்கு மட்டும் பொதுவானதல்ல, ஏனைய சமூக விலங்குகளுக்கும் பொருந்தும் என அறியப்பட்டுள்ளது. அண்மையில் குரங்குகளிலும், திமிங்கிலங்களிலும் செய்யப்பட்ட ஆய்வில் இரண்டு விலங்கு கு…
-
- 0 replies
- 460 views
-
-
பாரிய தலையுடன் கூடிய 6 அங்குல எழும்புக்கூடு எச்சம் மனிதனுடையது சுமார் 10 வருடங்களுக்கு முன் சிலியின் அதாகாமா பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தலையுடன் கூடிய 6 அங்குல எலும்புக்கூடு எச்சமானது மனிதனுக்குரியது என்பதை மரபணு பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். 2003 ஆம் ஆண்டு இந்த விநோத தோற்றமுடைய சிறிய எழும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அது வேற்றுக்கிரக வாசிகளுக்குரியது அல்லது கருக்கலைப்புக்குள்ளான சிசுவுக்கோ, குரங்கிற்கோ உரியது என கருதப்பட்டது. அதாகமா ஹூமனொயிட் என பெயர் சூட்டப்பட்ட இந்த இந்த எழும்புக் கூட்டு எச்சம் அத என அழைக்கப்பட்டது. இந்நிலையில், மேற்படி எலும்புக்கூட்டின் என்பு மச்சையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளில் மேற்கொ…
-
- 0 replies
- 430 views
-
-
எல்.ஜி. ஸ்மார்ட் போன்களின் விற்பனை சந்தையில் நல்ல நிலையில் உள்ளது. அதுமட்டுமன்றி கடந்த வருடத்தை விட இவ்வருடம் விற்பனை அதிகரித்துள்ளதாக அதன் காலாண்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. " காற்றுள்ள போதே தூற்றிக் கொள்" என்ற பழமொழிக்கேற்ப விற்பனை வளர்ச்சியடைந்து வருகின்றமையை கருத்தில் கொண்டு புது உற்பத்திகளை அறிமுகப்படுத்தி சந்தையை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகின்றது எல்.ஜி. . இதன் ஒரு அங்கமாக மடிக்கக் கூடிய திரையைக் கொண்ட ஸ்மார்ட் போனை எல்.ஜி இவ்வருட இறுதியில் அறிமுகப்படுத்துமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதற்கென மடியக்கூடிய OLED (organic light-emitting diode) திரையை எல்.ஜி. தற்போது தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வளைந்துகொடுக்கக்கூடிய சிப் மற்றும் பெட்டரியை…
-
- 0 replies
- 346 views
-
-
இந்த வருடத்தின் முதலாவது பகுதியளவு சந்திர கிரகணம் இன்று தென்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியன், பூமி மற்றும் சந்திரன் என்பன மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாளவோ ஒரே வரிசையில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இன்று சந்திர கிரகண குறை நிழல் தெரிய உள்ளதோடு நாளை கருநிழல் தோன்றும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதிகமான ஆசிய நாடுகள், ஆபிரிக்கா, ஐரோப்பா நாடுகளிலும் பகுதியளவு சந்திர கிரகணம் தென்படும் என அறிவிக்கப்படுகிறது. http://www.virakesari.lk/article/local.php?vid=4187
-
- 17 replies
- 1.1k views
-
-
விண்வெளியில் என்ன இருக்கிறது என்று ஆராயும் நோக்கில் எண்ணெற்ற செயற்கைகோள்களை நாம் பூமியிலிருந்து ஏவி வருகிறோம். அவ்வாறு விண்வெளிக்கு பூமியை மற்றும் அண்ட வெளியை ஆராய நாம் அனுப்பிய விண்கலங்கள் ஏராளம் அங்கு சுற்றிக்கொண்டிருக்கின்றன. அதில் காலாவதியான விண்கலங்கள், அதை ஏற்றிச்சென்ற ராக்கெட்டுகள் மற்றும் வெடித்த சிதறியவை என மொத்தம் 19000-க்கும் மேற்பட்ட விண்வெளிக் குப்பைகளும் விண்வெளியில் சுற்றிவருவதாக சொல்லப்படுகிறது. அவ்வாறு சுற்றிவரும் குப்பைகளை நாம் உடனடியாக தடுக்கா விட்டால் அது விண்கலங்களின் (சேட்டிலைட்டுகள்) சுற்றிவட்டப்பாதையில் அடுத்த 200 ஆண்டுகளில் பேரழிவு மோதல்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. மேலும் பூமியை சுற்றிவரும் விண்கலங்கள் இதுபோன்று பேரழிவுகளை இன்னும் 5-9 …
-
- 0 replies
- 553 views
-
-
கார் கண்ணாடி காரில் செல்லும்போது எல்லாம் சில அசௌகரியங்கள் இருக்கும், அதுவும் இந்த குழந்தைகளை உங்களோடு கூட்டி கொண்டு செல்லும்போது அவர்கள் பொழுதுபோக்கு இல்லாமல் நம்மை படுத்தும்பாடு இருக்கிறதே.... கொஞ்ச நஞ்சம் இல்லை போங்கள் ! இதற்க்கு எல்லாம் தீர்வு விரைவில் வந்து கொண்டு இருக்கிறது என்பதை இந்த வீடியோ பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள் ! உங்களது கார் கண்ணாடியில் குழந்தைகள் விளையாட கேம் இருந்தாலோ, வெளியில் தெரியும் காட்சிகள் நன்றாக இல்லையென்றால் அந்த காட்சியை மாற்றுவதாகவும், அதிலேயே மெயில் செக் செய்வது என்றெல்லாம் இருந்தால் எப்படி இருக்கும் ? ஜெனரல் மோட்டோர்ஸ் நிறுவனம் இதை முயற்சி செய்து கொண்டிருக்கிறது, விரைவில் உங்களது கார் கண்ணாடியில் நீங்கள் விரும்பியவற்…
-
- 0 replies
- 648 views
-
-
பெருவெடிப்பும் பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சும் இளையராஜா பரமசிவம் இருபதாம் நூற்றாண்டில் பிரபஞ்சவியல் துறையில் இரு அதி முக்கியமான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன. ஒன்று நம் பிரபஞ்சம் விரிவடைகிறது என்ற கண்டுபிடிப்பு. இரண்டாவது பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சு (Cosmic Microwave Background Radiation). இவை இரண்டும் ஆதாரங்கள் வறண்ட, ஊகங்கள் அடிப்படையில் மட்டுமே நின்ற பிரபஞ்சவியலை தெளிவான அடி எடுத்து வைக்க உதவின. இவை பெருவெடிப்புக் கொள்கையின் நேரடியான உறுதியான ஆதாரங்கள். பிரபஞ்சத்தின் தொடக்கம், பரிணாமம், ஆக்கக்கூறுகள், கட்டமைப்பு போன்றவற்றை ஆராயும் துறை பிரபஞ்சவியல் ஆகும். பிரபஞ்ச வெளியெங்கும் சீராக பரவியுள்ள பிரகாசம் சூரியன் பூமிக்கு அருகில் இருக்கும் …
-
- 4 replies
- 964 views
-
-
பூமியைப் போன்று மனிதன் வாழ ஏற்ற சூழ்நிலை கொண்ட 2 புதிய கோள்களை நாசா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. இந்த இரண்டு கோள்களும் பார்ப்பதற்கு பூமியைப் போலவே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனுக்கு அருகில் உள்ள 5 கோள்களில் பூமியைப் போலவே இருக்கும் 2 கோள்களில் அதிக வெப்பமோ, அதிக குளிரோ இல்லாமல் இருப்பதாகவும், நீர் ஆதாரம் போதிய அளவு இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது பூமியை விட சுற்றளவில் பெரியதாகும். இருப்பினும் இந்த கோள்களில் நிலப்பரப்பு பாறை அமைப்பை கொண்டதா அல்லது நீர் அமைப்பை கொண்டதா என்பது குறித்து விஞ்ஞானிகள் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை. ஆனால் இந்த கோள்கள் மனிதன் வாழ ஏற்ற சூழலை கொண்டதாக இருக்கும் என மட்டும் அவர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 3 replies
- 2.2k views
-
-
தொடுதிரை தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை உற்பத்தி செய்யும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் மற்றும் சம்சுங் நிறுவனம் என்பன ஏற்கனவே ஈடுபட்டுள்ள நேரத்தில் சற்று தாமதமாக மைக்ரோசொப்ட் நிறுவனமும் களத்தில் குதித்துள்ளது. இதன் அடிப்படையில் விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்டதும் 1.5 அங்குல அளவுடைய தொடுதிரையினை உள்ளடக்கியதுமான ஸ்மார்ட் கடிகாரத்தை உருவாக்குவதில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மேலும் இக்கைக் கடிகாரமானது சிறிய கணினி ஒன்றினைப் போல செயற்படக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. http://www.seithy.com/breifNews.php?newsID=80874&category=CommonNews&language=tamil
-
- 0 replies
- 371 views
-
-
பரிசோதனைக் கூடத்தில் வளர்ந்த சிறுநீரகம் சிறுநீர் கழிக்கிறது! பரிசோதனைக் கூடத்திலேயே வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் விலங்குகளில் பொருத்தப்பட்ட சிறுநீரகம் சிறுநீர் கழிக்கத் தொடங்கியுள்ளது. இந்த மருத்துவத் தொழிநுட்பம் ஏனைய உடல் உறுப்புகளில் கையாளப்பட்டு நோயாளிகளிடத்திலும் ஏற்கனவே வெற்றியடைந்திருந்தாலும் மிகவும் நூதனமான உடலுறுப்பான சிறுநீரகத்தில் இப்போது தான் சாத்தியப்பட்டுள்ளது. இயற்கையான சிறுநீரகத்தை விட இந்த தொழிநுட்ப- சிறுநீரகத்தின் தொழிற்பாடு கொஞ்சம் மெதுவாகத் தான் இருக்கிறது. ஆனாலும், இப்போது எட்டப்பட்டுள்ள இந்த முன்னேற்றம், உடல் உறுப்பு- மீள்உருவாக்க மருத்துவத் துறையில் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளதாக நேச்சர் மெடிஸின் என்ற மருத்துவச் சஞ்சிகை கூறு…
-
- 1 reply
- 1.9k views
-
-
மூளைக்கு சிறு வேலை.. உங்கள் மூளையின் உணர்வு திறனுக்கும், உடனடியான செயல்படும் திறனுக்கும் சிறிய சவாலாக இந்த இணைப்பிலுள்ள புதிர்களை, வேகமாக 'க்ளிக்' செய்து முடிவில் வரும் உங்கள் பெறுபேறுகளை இங்கே பதியுங்கள்... முதல்முறை முயன்று பெற்ற மதிப்பெண்களைத் தான் பகிரணும்...ஓ.கே? http://www.bbc.co.uk/science/humanbody/body/interactives/senseschallenge/senses.swf? உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...!
-
- 18 replies
- 1.2k views
-
-
சாம்சங் கேலக்சி S3 கனகாலமாக ஒரு கைத்தொலைபேசியைப் பாவிக்காமல் மட்டுமல்ல தேவையும் இல்லாமல் இருந்தது.ஒப்பந்த அடிப்படையில் வாங்கிய அந்தக் கைத் தொலைபேசிக்கு வீணாகப் பணம் செல்கின்றது என நினைத்து அந்த ஒப்பந்தத்தை நிறுத்துவதற்காக ஒரு இடைத்தரகுக்கடை ஒன்றிற்குச் சென்றேன். வாசலில் விளம்பரப்பலகையில் சாம்சங் கலக்சி S 3 ஒப்பந்த அடிப்படையில் 1 யூரோவிற்கு விற்பனை என எழுதப்பட்டிருந்தது. ஆனால் அந்த சலுகை அடிப்படையிலான விற்பனை முதல் நாளுடன் முடிவடைந்துவிட்டது. ஒரு நாள் முந்தி வந்திருந்தால் அதை வாங்கியிருக்கலாம் என நினைத்துவிட்டுக் கடைக்காரரிடம் விசாரிக்கும்போது நீ இப்போது இந்த இடத்திலேயே புதிய ஒப்பந்த்ததிற்குத் தயார் என்றால் நான் உனக்கு அந்தக் கைத் தொலைபேசியை சலுகை அ…
-
- 9 replies
- 1.2k views
-
-
சனி கிரகத்தில் மழை பெய்வதற்கு, அதைச் சுற்றியுள்ள வளையம் போன்ற பகுதிதான் காரணம் என்று வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அவர்களின் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்து லண்டனில் உள்ள லெய்ஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது- சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையத்தில் இருக்கும் மின்னூட்டப்பட்ட தண்ணீர் மூலக்கூறு அணுக்கள், அக்கிரகத்தின் வளி மண்டலத்தில் மழையாக பெய்கிறது. இந்த மழைப் பொழிவு அக்கிரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படுகிறது. மழைப் பொழிவு காரணமாக சனிக் கிரகத்தின் மேல் பகுதி வெப்ப நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம், அந்தக் கிரகத்தின் வளையம் போன்ற பகுதிக்கும், அ…
-
- 4 replies
- 676 views
-
-
விஞ்ஞானிகள் விண்வெளி ஓடங்களை அனுப்பி ஆய்வு செய்வதுடன் சில சமயங்களில் தாமும் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றனர். இவ்வாறே செவ்வாய்க்கு தற்போது விண்வெளி ஓடங்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும் அவை செல்வதற்கு மாதக்கணக்கில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. எனவே இப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக தற்போது பூமியிலிருந்து வெறும் 30 நாட்கள் பயணத்தின் பின்னர் செவ்வாயை சென்றடையக் கூடிய அதிநவீன இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பானது செவ்வாயில் ஆராய்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் விரிவுபட்ட ஆய்வினை மேற்கொள்ளவும் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். thanks http://tamilmedia24.com/component/option,com_money/id,495/view,addmoney/
-
- 0 replies
- 633 views
-
-
பேரண்டத்தில் உள்ள எண்ணற்ற விண்மீன் திரட்சிகளின் ஒன்றான நமது பால்வீதி மண்டலத்தில் உள்ள எண்ணற்ற விண்மீன்களுள் ஒன்றுதான் நமது சூரியன். அதனைச் சுற்றும் மூன்றாவது கோள் நாம் வாழும் பூமி எனப் படித்து இருக்கிறோம். கோபர் நிகஸ்[19 February 1473 – 24 May 1543)] இத்னை முதலில் வரையறுக்கும் வரை டாலமியின்[CE 90 – CE 168)] புவி மையக் கொள்கையே அதிகம் ஏற்கப்பட்ட கொள்கையாக இருந்தது என்பது வரலாற்று உண்மை. நாம் உணரும் உலகம் முப்பரிமாணம், நேரத்தையும் சேர்த்தால் நான்கு எனலாம். டாலமியின் கருத்து ஏன் நீண்ட காலமாக எதிர்க்கப்படவில்லை?. அது முற்றும் முழுதான தவறான கொள்கை எனில்,இது மிகவும் வியப்பான விடயம் ஆகும். டாலமி பூமி மையத்தில் இருக்கிறது சூரியன்,சந்திரன் ,இதர கோள்கள் பூமியை [நீள்] வட்டத்தி…
-
- 1 reply
- 4.8k views
-
-
டி என் ஏ எனப்படும் மரபணு சோதனை கண்டறிய இது வரை 3 நாட்களில் இருந்து சுமார் 15 நாட்கள் வரை ஆகும். இப்போது பானஸோனிக் நிறுவனமும் பெல்ஜியத்தில் உள்ள ஐ எம் ஈ சியும் சேர்ந்து ஒரு அதி வேக சிப்பை கண்டுபிடித்திருக்கின்றனர். ஒரு துளி ரத்தம் மூலம் 9 நிமிடத்தில் ஹை ஸ்பீட் பீ சி ஆர் வேலை செய்து உலகத்தின் அதி வேக கண்டுபிடிப்பாய் இதை அறிவித்துள்ளனர். இதன் மூலம் சிலருக்கு சிகிச்சை அளிக்க அவர்களுக்கு மாற்று உறுப்பு, அரிய மருந்து வகைகள் ஒத்து கொள்ளுமா என உடனடியாக கன்டுப்பிடிக்க மட்டுமில்லாமல் கிரிமினல் இன்வெஸ்டிகேஷனுக்கும் இது பெரிய அளவில் உதவும். http://www.seithy.com/breifNews.php?newsID=80248&category=CommonNews&language=tamil
-
- 3 replies
- 792 views
-
-
"Copyright info" என்பது நாம் நம்முடைய புகைபடக்கருவியில் எடுக்கும் படங்களுக்கு நாம் தான் உரிமையாளர் என்பதனை நிரூபிக்க உதவும் ஒன்றாகும்.தற்பொழுது சந்தைக்கு வரும் பெரும்பாலான DSLR கேமராக்களில் நம்முடைய பெயரை பொதிந்துவைக்கும் படி வழிவகை இருக்கின்றது.ஆனால் இதனை நம்மில் பலரும் செய்வது கிடையாது. இதனால் நமக்கு என்ன நன்மை: நம்மில் பலரும் தாம் எடுத்த படங்களை இணையதில் பகிர்கின்றனர், சான்றாக புகைப்பட போட்டிக்கு நாம் அனுப்பும் படங்கள் அல்லது சில இணையதளங்களில் பகிரும் படங்கள் பலவும் எந்த நேரத்திலும் யாராலும் களவாடப்படலாம்.ஏன் ஒரு சில பெரிய நிறுவனங்களே இதனை செய்கின்றனர்.சமீபத்தில் நான் எடுத்திருந்த ஒரு Deodorant படத்தினை ருமேனியாவை சேர்ந்த பிரபல இணையவழி விற்பனையாளர் அவரது இணையதளத்…
-
- 1 reply
- 643 views
-
-
FILE வரலாற்றுப் புகழ்மிக்க கலையின் ஊற்றுக்கண் அமைந்துள்ள எல்லோரா குகைகள் உள்ளூரில் 'Verul Leni' என்று அறியப்படுகிறது. இது அவுரங்காபாதிற்கு 30 கிமீ வடக்கு வடமேற்கு திசையில் அவுரங்காபாதுஸாலிஸ்கான் சாலையில் அமைந்துள்ளது இந்த உலகப்புகழ்பெற்ற எல்லோரா குகைகள். உலகில் எங்கும் காணப்படாத குகைக் கோயில்கள் கொண்டது எல்லோரா. அதிலும் ஒரே கல்லை குடைந்து செதுக்கப்பட்ட கைலாசா குகை உலகப்புகழ் பெற்றது என்பதில் இருவேரு கருத்துகள் இல்லை. மழைக்காலங்களில் இந்த எல்லோரா குகைகளை பார்ப்பதே மனதிற்கும் ஆன்மாவிற்கு உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. காட்சியழகும், கருத்தழகும் மிகுந்தது எல்லோரா. மழைக்காலங்களில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும்போது எல்லோரா ஒரு பெரிய காவ…
-
- 0 replies
- 1k views
-
-
சுவிசின் நீண்ட குகை (உலகின் மிக நீண்ட குகையும் கூட) https://www.youtube.com/watch?v=pEthcurLaeU To most of the world, the majestic Alps present a scene of wonder. But to European merchants and truckers, they present a troublesome and costly roadblock. Enter the ambitious AlpTransit Tunnel. At just over 56 miles, this Swiss monster is the longest tunnel in the world. That is, it will be once workers complete this enormous project. Follow a team of miners as they risk death beneath billions of pounds of mountain, slowly but surely carving out massive support and maintenance tunnels. For the main channel, engineers use custom-designed TBMs (Tunnel Boring Machines) --…
-
- 1 reply
- 534 views
-
-
பேஸ்புக் நிறுவனம் "பேஸ்புக் ஹோம்" என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வெளியிட்டுள்ளது. ஆப்ஸ் போன்ற இந்த செயலி ஆண்ட்ராய்டு போன்களை பேஸ்புக் போனாக மாற்றக்கூடியது. தைவானின் ஹெச்டிசி நிறுவனம் இந்த போனைத் தயாரிக்க உள்ளது. இந்த போன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும். பேஸ்புக் போனின் 5 சுவாரஸ்யமான அம்சங்கள் 1. ஹோம் என்ற புதிய மென்பொருள், பயனாளர்களை ஆண்ட்ராய்டு போனை கூகுளால் உருவாக்கப்பட்ட புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாற்றக்கூடியது. இந்த புதிய மென்பொருள் தொடர்ச்சியாக பேஸ்புக் செய்திகளையும், மற்ற தகவல்களையும் இந்த போனின் ஹோமில் பார்க்க முடியும். இந்த வசதி மற்ற ஆப்ஸ்களில் கிடையாது. 2. முகப்புப் பகுதியில் எப்போதும் போல வால் பேப்பர்கள் அல்லது …
-
- 0 replies
- 604 views
-
-
உலகின் மிக லேசான பொருளை உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். கார்பன் ஏரோ ஜெல் என அழைக்கப்படும் இப்பொருள் காற்றின் எடையை விட 6ல் ஒரு பங்கே எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவின் ஜி ஜியாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலகின் மிக லேசான பொருளை உருவாக்கியுள்ளனர். காற்றின் எடையில் 6ல் ஒரு பங்கு எடையே கொண்ட இந்த ஏரோஜெல் எனப்படும் பொருள் 0.16 மி.கி/கன செ.மீ., எடை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக மிகவும் எடை கொண்ட பொருளாக கருதப்பட்ட கிராபைட் ஏரோஜெல் எடையை விட கார்பன் ஏரோ ஜெல் மிகவும் எடை குறைவானதாகும். முன்னதாக, கடந்த ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கிராபைட் ஏரோஜெல்லை உருவாக்கினர். இதன் எடை 0.18 மி.கி/கன செ.மீ., ஆகும். இத்தகைய…
-
- 0 replies
- 494 views
-
-
2017ம் ஆண்டு அமெரிக்கா சவுதி அரேபியாவை பின் தள்ளி உலகின் முன்னனி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், 2030 ல் அமெரிக்கா நிகர எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும் மாற போகிறது என்ற செய்தியை கேட்டால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா? களிப்பாறை எரிவாயு மற்றும் களிப்பாறை எண்ணையை எடுக்கும் ஆராய்ச்சியில் கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்ட அராய்ச்சியின் முன்னேற்றத்தால் அமெரிக்காவின் எண்ணெய் சுயசார்பு பெற வேண்டும்என்ற 1970களின் கனவு நினைவாக தொடங்கியிருக்கிறது. சமீபத்தைய பொருளாதார மந்த நிலையால் வலுவிழந்து இருக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை மீண்டும் புத்தணர்வு ஊட்டும் ஒரு காரணியாக இருக்க இது வாய்ப்புள்ளது.இது அமெரிக்க பொருளாதாரத்திலும் உலக பொருளாதாரத்திலும், நாடுகளுக்கிடையிளான உறவுகள…
-
- 0 replies
- 745 views
-