செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7158 topics in this forum
-
பண்ணையாளர் ஒருவர் தனது 5000 வாத்துக்களை நகர் பகுதிக்கூடாக அழைத்துச் செல்ல முயன்றபோது வீதிகளில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. மேற்படி நபர், சீனாவின் கிழக்கு மாகாணமான செய்ஜியாங்கின் டெய்ஸோ நகர வீதியில் தனது 5000 வாத்துக்களையும் அழைத்துக்கொண்டு தனது உதவியாளருடன் சென்றதை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளனர். மேற்படி வாத்துகளுக்கு உணவு தேடுவதற்காக சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள குளமொன்றுக்கு அவை அழைத்துச் செல்லப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான வாத்துகளின் வரவினால் பாதசாரிகள் மிகவும் சிரமப்பட்டு தமது பயணத்தை தொடர்ந்துள்ளனர். தான் அடிக்கடி தனது வாத்துக்களை அழைத்துக்கொண்டு நகருக்கூடாக ச…
-
- 11 replies
- 802 views
-
-
[size=4]லண்டனில் உள்ள புகழ்பெற்ற, "பிக் பென்' கடிகாரக் கோபுரத்திற்கு, இரண்டாவது எலிசபெத் அரசியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத், அரியணை ஏறி, 60 ஆண்டுகள் ஆவதையொட்டி, இந்த ஆண்டு முழுவதும், பிரிட்டனில் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.[/size] [size=4]இவரை போற்றும் விதத்தில், லண்டனில் பார்லிமென்டையொட்டி அமைந்துள்ள, வரலாற்று புகழ்மிக்க, "பிக் பென்' கடிகாரக் கோபுரத்துக்கு, "எலிசபெத் கோபுரம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த பெயர் மாற்ற நடவடிக்கையை, பிரிட்டன் பார்லிமென்ட் வரவேற்றுள்ளது.புகழ்பெற்ற இந்த கோபுரம், கடந்த 1859ம் ஆண்டு, கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோபுரத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள, மிகப்பெரிய மணியின் ஓசை, லண்டனின் ச…
-
- 3 replies
- 505 views
-
-
ஆந்திரப் பிரதேசத்தின் அனகாபள்ளி மாவட்டம், புடிமடகா கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சோடபள்ளி யெரய்யா என்ற மீனவர், 200 கிலோ எடையுள்ள கருப்பு மார்லின் மீனால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான சம்பவம், மீனவ சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 3, 2025 அன்று, அனகாபள்ளி மாவட்டத்தின் புடிமடகா கிராமத்திலிருந்து 20 கடல் மைல் தொலைவில் நடந்துள்ளது. நடந்தது என்ன? யெரய்யா, அவரது சகோதரர் கொரலய்யா மற்றும் மற்றொரு மீனவருடன், பாரம்பரிய மீன்பிடி படகில் அதிகாலை 2 மணியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். காலை 9 மணியளவில், அவர்களது வலையில் சுமார் 200 கிலோ எடை கொண்ட பிரமாண்டமான கருப்பு மார்லின் மீன் சிக்கியிருக்கிறது. இந்த மீன், அதன்வேகம், வலிமை ம…
-
- 0 replies
- 152 views
-
-
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களைப் பரிசோதிக்கச் செல்லும் மருத்துவர்களுக்கும் பரவுவதால் சீன அரசு மக்களைப் பாதுகாக்க முடியாமல் தவித்து வருகிறது. சீனா மட்டுமின்றி தாய்லாந்து, ஹாங்காங், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இதன் காரணமாகச் சீனாவில் இருந்து வரும் நபர்கள், திருப்பி சீனாவுக்கே அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த மாதம் சீனாவிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த கப்பலில் பூனை ஒன்று இருந்தது அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த கப்பலிலிருந்து இறக்கப்பட்ட விளையாட்டு பொம்…
-
- 1 reply
- 370 views
-
-
விலங்கியல் பூங்காவில் வேலியை தாண்டி, புலி இருக்கும் பகுதிக்குள் குதித்த பெண்: ஏன் தெரியுமா? டொரண்டோ: கனடாவில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் பெண் ஒருவர் வேலியில் ஏறி புலி இருக்கும் இடத்தில் குதித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் டொரண்டோ நகரில் இருக்கும் விலங்கியல் பூங்காவுக்கு பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அவரின் தொப்பி ஹரி எனப்படும் புலியை அடைத்து வைத்திருந்த பகுதியில் பறந்து விழுந்தது. இதை பார்த்த அந்த பெண் வேலியில் ஏறிக் குதித்து புலி இருக்கும் பகுதியில் கிடந்த தனது தொப்பியை எடுத்தார். இதை பார்த்த புலி பாய்ந்து வந்தது. ஆனால் புலிக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே இரண்டு வேலிகள் அமை…
-
- 0 replies
- 303 views
-
-
மதுரை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நித்யானந்தா விலக முடிவு? Updated: வியாழக்கிழமை, அக்டோபர் 18, 2012, 18:54 [iST] மதுரை: மதுரை ஆதீனத்தின் இளைய சந்நிதானம் பட்டத்தில் இருந்து விலக நித்யானந்தா முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், அவை உண்மையா என்பது தெரியவில்லை. ரஞ்சிதா விவகாரத்தில் சிக்கி பேமசான நித்யானந்தாவை இளைய சந்நிதானமாக நியமித்து தனது பெயரைக் கொடுத்து கொண்டார் மதுரை ஆதீனமான அருணகிரிநாதர். அன்று முதல் அவர் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் அருணகிரிநாதர், ஒரு நாள் நித்யானந்தாவுக்கு ஆதரவாகப் பேசுவதும், அடுத்த நாள் நித்யானந்தா குரூப்புக்கு எதிராக காய் நகர்த்துவதும், பின்னர் மீண்டும் பம்முவதுமாக உள்ளார். இதற்கிடையே தமிழக அரசும் நித்யானந்தாவுக்…
-
- 5 replies
- 519 views
-
-
2011ம் ஆண்டின் கனடிய புள்ளிவிபரத்தின் பிரகாரம் கனடாவில் தற்போது 200 மொழிகள் பேசப்பட்டு வருகின்றனதெனவும் தற்போதைய குடிவரவாளர்களின் அலை கனடாவை பல மொழிகள் பேசும் ஒரு நாடாக மாற்றும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2021ம் ஆண்டளவில் குடிவரவாளர்களே ரொறன்ரோ போன்ற பல்கலாச்சார நகரங்களில் வேற்றினத்தவர்களே வெள்ளையர்களிலும் பார்க்கப் பெரும்பாண்மையான சனத்தொகையாக வருவார்கள் என்ற கணிப்பு கடந்த வருடம் வெளியாகியிருந்தது. இப்படி பல மொழிகளின் தாயகமாக கனடா மாறினால் மொழிபெயர்ப்பாளர்களிற்கான தேவை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தில் உலகின் சனத்தொகையில் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தை வகிக்கும் சீனர்களும் இந்தியர்களுமே ஆளுமை செலுத்துவார்கள் என்றும் த…
-
- 3 replies
- 617 views
-
-
இரத்தினபுரியில் பௌத்த பிக்குவை "எப்படி மச்சான்" என அழைத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பேருந்து தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த பௌத்த பிக்குவின் தோளில் கையைப் போட்டு, எப்படி மச்சான் என அழைத்த பேருந்து சாரதி ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பிக்கு இதுகுறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ததையடுத்தே, பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தின் போது சாரதி மது போதையில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. http://seithy.com/breifNews.php?newsID=73272&category=TamilNews&language=tamil
-
- 11 replies
- 753 views
-
-
மதுரவாயலில் மகள், மகனைக் கொன்று தலைமறைவான வழக்கறிஞர்: 5 ஆண்டுகள் தேடலுக்குப் பின் பெரியமேட்டில் கைது சென்னை மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மதுரவாயலில் மகன், மகளுடன் தனித்து வசித்த வழக்கறிஞர், கடந்த 2015-ம் ஆண்டு தனது மகன், மகளைக் கொன்று தலைமறைவான நிலையில், 5 ஆண்டுகள் போலீஸாரின் கடும் தேடலுக்குப் பின் சென்னையில் சிக்கினார். சென்னை மதுரவாயல் காவல் எல்லைக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வந்தவர் ரவி (56). இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி மகேஷ்வரி. இவரும் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார். இவர்களுக்கு ஐஸ்வர்யா பிரியதர்ஷினி (13) என்ற மகளும், ஜெயகிருஷ்ணன் பிரபு (…
-
- 0 replies
- 346 views
-
-
15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 27 வயது பகுதிநேர ஆசிரியை வெலிகாமம் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் அவனின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுவன் ஒக்டோபர் 06 ஆம் தகதி ஆசிரியையின் வீட்டிற்கு பகுதிநேர வகுப்பிற்காக சென்றுள்ளார்.. வகுப்பைத் தொடர்ந்து சிறுவன் வீடு திரும்பாததால், சிறுவனின் தாய் ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று சிறுவன் குறித்து விசாரித்துள்ளார். எனினும் சிறுவனும் ஆசிரியையும் வீட்டில் இருக்கவில்லை. இதனையடுத்து பதட்டமடைந்த சிறுவனின் தாய் வெலிகாமா பெலிஸில் …
-
- 1 reply
- 673 views
-
-
ஆணுக்கு கிடைத்த குழந்தை வரம் தென் இலங்கையில் ஒரு பரியாரி அம்மா திடீரெனெ கடை விரித்தார். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கச் செய்யும் மூலிகை தன்னிடம் உள்ளதாக அறிவித்தார். படை எடுத்தனர், குழந்தைகள் இல்லா தாய் மார்கள். எல்லோருக்கும் பணத்தினை வாங்கிக் கொண்டு அள்ளிக் கொடுத்தார் மூலிகையினை... கூடவே ஒரு எச்சரிக்கையினையும் விடுத்தார். ஆஸ்பத்திரிக்கு போகாதீர்கள்.... கர்பத்தினையும் இழப்பீர்கள்... இந்த பரியாரி அம்மாவின் புகழைக் கேள்விப்படட ஒரு பெண்ணும், கணவருக்கு தெரியாமல் வந்து மூலிகையினை வாங்கி, சொன்னவாறே பக்குவமாக எடுத்துக் கொண்டார். கணவர் தீடீரெனக் கேட்டார்..... இது என்னப்பா மருந்து.... எதாவது வருத்தமா?... ஓ அதுவா, முழங்கால் வலிக…
-
- 4 replies
- 508 views
-
-
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா என 2 மாநிலமாக பிரிக்கப்பட்டது. தலைநகர் ஐதராபாத் தெலுங்கானாவுடன் சேர்க்கப்பட்டதால் ஆந்திராவுக்கு புதிய தலைநகர் உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. புதிய தலைநகரை மத்திய அரசு குழு ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் புதிய தலைநகர் சிங்கப்பூர் போன்று அமைக்கப்படும் என்று முதல் - மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார். இதற்காக 2 அமைச்சர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் விரைவில் சிங்கப்பூர் செல்ல உள்ளனர். புதிய தலைநகர் அமைக்க பொதுமக்கள், தொழில் அதிபர்கள், வியாபாரிகள் தாராளமாக நிதி வழங்கும்படி சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். இதற்காக தனியாக வங்கி கணக்கு ஒன்றும் தொடங்கி உள்ளார். இதுத…
-
- 3 replies
- 363 views
-
-
யாழில் காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலி அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றுள்ளது. குறித்த நபருக்கு பிறந்தநாள முன்னிட்டு தனது காதலி சப்ரைஸ செய்வோம் என்ற எண்ணத்தில் அனுப்பியுள்ளார். இதனை நெட்டிசன்கள் பனிஸ் வாங்கி கொடுக்க கூட ஒரு தோழி இல்லை என போஸ்ட் செய்து தனது துயர்வினை பகிர்ந்து வருகின்றனர். அக்காதலியின் பரிசின் விவரங்கள் பின்வருமாறு : Samsug Galaxy S 22 22k Gold Chain 22k Gold Ring Cash 50000 Jack Daniels 03 Chocolate basket 21 letter Cake Heart Frames No France 12×15 frame Couple Frame Mug Magic pillow Prot…
-
- 128 replies
- 9k views
-
-
தேவாலயத்திற்கு வரும் பெண்களை நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டியதாக பாதிரியார் மீது வழக்குப் பதிவு 17 மார்ச் 2023, 05:10 GMT புதுப்பிக்கப்பட்டது 14 நிமிடங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் பலரை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை வைத்து மிரட்டிய குற்றச்சாட்டில் களியக்காவிளை பாதிரியார் மீது குவியும் புகார்கள் அடிப்படையில் குமரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிரியாரை தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. இவர் அழகிய மண்டபம் அருகே பிலாங்காலை பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராகப் பணிபுரிந்து வந…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக 114 வயது பிரேசில் பெண் உலகில் தற்போது உயிர் வாழ்ந்து வரும் வயதான நபராக பிரேசிலை சேர்ந்த 114 வயதான மரியா கோமஸ் வெலன்ரிம் என கின்னஸ் சாதனைப் பதிவேட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மரியா கோமஸின் வயது 114 வருடங்கள் 313 நாட்கள் ஆகும். உலகில் உயிர் வாழும் மிகவும் வயதான நபராக ஏற்கனவே கருதப்பட்ட அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்தை சேர்ந்த பெஸி கூப்பரை விட மரியா கொம்ஸ் 48 நாட்கள் வயது கூடியவராவார். இவர் தினசரி காலை உணவாக பாணும் பழங்களும் உண்பதுடன் அவ்வப்போது வைன் பானம் அருந்துவதாகவும் அதுவே தனது நீண்ட ஆயுளின் இரகசியமெனவும் மரியா கோமஸ் தெரிவித்துள்ளார். பிரேசிலின் மினாஸ் கெராயிஸ் மாநிலத்திலுள்ள கரங்கொலா நகரில் 189…
-
- 0 replies
- 400 views
-
-
தூங்கினால் படித்தது நினைவில் நிற்கும் --ஆராய்ச்சி முடிவுவாழ்க்கையின் மிக இளம் பிராயத்தில் கல்வி கற்பதற்கு முக்கியமாக உதவுவது அவ்வப்போது குட்டித் தூக்கம் போடுவதே என்று ஐரோப்பிய விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். குழந்தைகள் புதிய தகவல்களை கிரகித்துக்கொண்டவுடன் தூங்கப்போனால் அவை அந்தத் தகவல்களை நல்ல முறையில் புரிந்துகொள்கின்றன என்று தேசிய அறிவியல் கழகத்தினால் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை ஒன்று கூறுகிறது. 12 மாதத்துக்குட்பட்ட 216 குழந்தைகளுக்கு புதிய வேலைகளை கை பொம்மைகள் மூலம் செய்ய விஞ்ஞானிகள் கற்றுக்கொடுத்தார்கள். இந்த விளையாட்டு நேரம் முடிந்தவுடன் நான்கு மணிநேரத்துக்குள் தூங்கிய குழந்தைகளால் அடுத்த நாள், அவர்கள் கற்றுக்கொண்டவற்றில் பாதியை நினைவில் வைத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் தூ…
-
- 0 replies
- 402 views
-
-
மேல் ஆடை இல்லாமல் வெறும் பிக்னி மட்டும் அணிந்து கொண்டு பொது நீச்சல் தடாகத்தில் நீந்துவதற்கு அவளுக்குப் போதுமான துணிவு இருந்தது. மேலாடை இல்லாமல் நீந்த முயற்சித்ததைப் பற்றி எதிரான கருத்துகள் வந்த போது அவள் அவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு கொலை அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கிய பொழுதுதான் அவள் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தாள். “சிலர் என்னை பலாத்காரம் செய்யக் கூடத் தயங்க மாட்டார்கள்” இப்படிச் சொன்னவர் 33 வயதான லொற்றே மீஸ். “இங்கே என்ன பிரச்சனை இருக்கிறது? எல்லோருக்கும் ஒரே மார்பகம்தானே. நாங்கள் இந்த வருட கடும் கோடையில் பிக்னி மட்டுமே அணிந்து கொண்டு நடைப் பயணம் செல்லலாம் என்று தீர்மானித்திருக்கிறோம்” என்று லொற்றே மீஸ் சொல்கிறார். கடந்த வருட…
-
- 11 replies
- 3.1k views
-
-
ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை: அதிர்ச்சியில் தீவிரவாதிகள் [ திங்கட்கிழமை, 23 பெப்ரவரி 2015, 11:08.16 மு.ப GMT ] ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக்கின் மொசூல்(Mosul) நகரில் ஐ.எஸ் அமைப்பை ஆளும் அபூ டஜனா(Abu Dajana) என்பவரை ஐ.எஸ் தீவிரவாதிகள் உட்பட இரண்டு மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர். இச்செய்தியை வெளியிட்ட குர்திஷ் இன ஊடகங்கள் தற்போது இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதேபோல் கடந்த ஜனவரி மாதம் ஐ.எஸ் அமைப்பின் மற்றொரு முக்கிய தலைவர் தலைத் துண்டித்து படுகொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தொடர்ந்து இவ்வாறு நடந்து வரும் சம்பவங்கள் தீவிரவாதிகளிடையே சற்று பதற்…
-
- 3 replies
- 758 views
-
-
பெரும்பாலும் பிரபல நட்சத்திரங்களின் சாயல் கொண்ட இளைஞர்கள் அவர்களைப் போலவே ஸ்டைலாக உடை அணிவது அவர்களைப் போலவே தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு சோசியல் மீடியாக்களில் புகைப்படங்கள் ரிலீஸ் வீடியோக்கள் என வெளியிட்டு தங்களை பிரபலப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். பெரும்பாலும் ரஜினி, கமல் போன்றவர்களுக்கு அவர்களது இளமைக்கால தோற்றத்தில் தான் பலரும் தங்களது உருவத்தை ஸ்டைலாக மாற்றிக் கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கம். ஆனால் 72 வயதில் ரஜினிகாந்த் தற்போது இருக்கும் தோற்றத்தில், கேரளாவில் கொச்சியை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் சுதாகர் பிரபு என்பவர் கிட்டத்தட்ட ரஜினியின் சாயலிலேயே பார்ப்பதற்கு ஆச்சரியம் தருகிறார். பலரும் அவருடன் ஆர்வமாக புகைப்படம் செல்பி எடு…
-
- 27 replies
- 2.6k views
- 1 follower
-
-
http://www.thehindu.com/news/national/tamil-nadu/two-starvation-deaths-shake-civil-societys-conscience/article7172690.ece Two starvation deaths reported in the district have shaken the conscience of the civil society. When Arumugam, a labourer from Anna Nagar in Alangulam, did not get regular employment, his wife, who was unable to run the family, left her husband and children Antony (27), a physically challenged youth, and Marial (25) a year ago to settle down in an undisclosed destination. Arumugam, with the little earnings he could make on being occasionally hired, continued to feed Antony and Marial at least once a day. Problem started for the family when Aru…
-
- 1 reply
- 404 views
-
-
தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடிக்கு தூக்குத் தண்டனை? தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். இதனால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியும் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக குறித்த காதலர்கள் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிட்கொயின் முதலீட்டாளரான சாட் எல்வர்டோஸ்கி என்பரும் அவரது தாய்லாந்து நாட்டுக் காதலியான சுப்ரானே தெப்பெட் ஆகிய இருவருமே இவ்வாறு தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர். கோடீஸ்…
-
- 1 reply
- 915 views
-
-
June 14, 2024 01:10 pm கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூன்று பேர் நேற்று (13) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத்தாள் மற்றும் அதனை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான ஆவணங்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று இரவு 8.00 மணியளவில் உந்துருளியில் பயணித்த இருவரை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வைத்து பொலிஸார் சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த அமெரிக்க நாணயத்தாளை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருந்த போதே இவர்கள் கைத…
-
- 0 replies
- 391 views
- 1 follower
-
-
2 குழந்தைகள் பெற்றுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்தத் தேவையில்லை! ஹங்கேரியில் 2 அல்லது 2 க்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தாய்மார்களுக்கு வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதற்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் என்பது வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் நாட்டில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில், அந்நாட்டு பிரதமர் விக்டர் ஆர்பன்(Viktor Orbán) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களு…
-
- 0 replies
- 200 views
-
-
சூரிய கிரகணத்தின்போது தரையில் ஒருபக்கமாக சாயாமல் கோழி முட்டை நின்றதாக மலேசியா, இந்தோனேசியா சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சூரிய கிரகணம் நேற்று தெரிந்த நிலையில், அந்த 2 நாடுகளைச் சேர்ந்த சிலர் சமூகவலைதளங்களில் விநோத வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் கிரகணத்தின்போது மட்டும் முட்டை இப்படி நிற்காது, அனைத்து நேரத்திலும் இவ்வாறுதான் நிற்கும் என மலேசிய அறிவியல் பல்கலைக்கழக வேதியியல் துறை முன்னாள் பேராசிரியர் தெரிவித்துள்ளார். https://www.polimernews.com/dnews/94514/சூரிய-கிரகணத்தின்போதுதரையில்-சாயாமல்-நின்ற-முட்டை..-சமூகவலைதளங்களில்வீடியோ-பகிர்வு
-
- 0 replies
- 239 views
-
-
எல்சல்வடோரின் கடும் பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலையில் 200 கைதிகளுக்கு முன்னால் பெண்களின் நிர்வாண நடனம் 2016-03-04 12:36:49 தென் அமெரிக்க நாடான எல் சல்வடோரிலுள்ள சிறைச்சாலையொன்றில் கைதிகளை மகிழ்விப்பதற்காக 3 நடன மங்கைகளின் நிர்வாண நடன விருந்து நடத்திய அதிகாரிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இஸால்கோ சிறைச்சாலையிலேயே இந்த நிர்வாண நடன விருந்து நடத்தப்பட்டுள்ளது. 2012 செப்டெம்பரில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவொன்று இணையத்தில் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 467 views
-