செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
ஈராக்கில் கனேடியப் படையினரின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருப்பதாக கனேடியப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் Tom Lawson கூறினார். ஈராக்கில் உள்ள கனேடிய சிறப்புப் படையினர் குர்திஸ், மற்றும் ஈராக்கிய படைகளுடன் போர்க்களங்களுக்குச் செல்ல மாட்டார்களெனவும், வான் தாக்குதல்களுக்கு வழிகாட்டும் பணியைச் செய்ய மாட்டார்களெனவும் ஒக்ரோபர் மாதம் அவர் கூறினார். ஆனால், நொவம்பர் மாதத்தின் பின்னர் கனேடிய சிறப்புப் படையினர் 13 வான் தாக்குதல்களுக்கு வழிகாட்டும் பணியைப் புரிந்தார்களென கனேடிய சிறப்புப் படைகளின் தளபதி திங்கட்கிழமை கூறினார். அத்துடன், கனேடிய சிறப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய IS தீவிரவாதிகள் மீது அவர்கள் பதில் தாக்குதல் நடத்தினார்களெனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அறிக்க…
-
- 0 replies
- 223 views
-
-
கனடா- மகனை இழந்த துக்கத்தில் இருந்த தாயாருக்கு மீண்டும் ஒரு முறை இதயத்தை நொருக்கும் சம்பவம் வன்கூவர் விமான நிலையத்தில் ஏற்பட்டது. தனது மகனின் சாம்பலை ஒரு பட்டு கேரியருக்குள் வைத்திருந்ததை வெளியே எடுக்குமாறு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தமையே காரணமாகும். மார்நி முட்ச் என்ற இவர் தனது மகன் றெஹெட்டின் அஸ்தியை ஒரு பெரிய அடைத்த கருப்புள்ளி வண்டிற்குள் வைத்திருந்ததுள்ளார். தனக்கு ஆறுதல் தேவைப்படும் போது அணைத்துக்கொள்ள அவ்வாறு வைத்திருக்கின்றார். கடந்த நவம்பர் மாதம் இவரது 20-வயது மகன் றெஹெட் வன்கூவர் பொலிசாரால் சுடப்பட்டு இறந்துள்ளார். இவரது மரணவிசாரனை நடந்து வருகின்றது. முட்ச் வன்கூவர் விமான நிலைய பாதுகாப்பு பகுதிக்கூடாக அந்த கருப்புள்ளி வண்டை கொண்டு வ…
-
- 0 replies
- 269 views
-
-
வளர்ந்து வரும் இணையதள தொழில் நுட்பம் ஆக்கம் மற்றும் அழிவு என்று இரண்டு திசைகளிலும் ஒரே வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது. முன்பு ஹேக்கர்கள் எனும் ´இணையத்திருடர்கள்´ தீவிரவாதிகளை போல் கருதப்பட்ட காலம் போய், தற்போது ஹேக் செய்வது எப்படி? என்று யூ-டியூபில் தேடினால் நம்மை ஹேக்கராக மாற்ற 14,000 பயிற்சி வீடியோக்கள் தயாராக உள்ளன. வை-பை நெட்வொர்க்குகள் எவ்வளவு எளிதில் ஹேக் செய்யக்கூடியதாக இருக்கிறது என்பதை உணர்த்த சுயாதீன இணைய பாதுகாப்பு நிபுணர் மார்கஸ் டெம்ப்சியின் மேற்பார்வையில் லண்டனில் ஹேக்கிங் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் பங்கேற்ற 7 வயது சிறுமி 10 நிமிடம் 54 நொடியில் ஒரு பொது வை-பை நெட்வொர்க்கையே ஹேக் செய்து காட்டினாள். சிறுமிக்கு பதிலாக இதையே ஒரு திரு…
-
- 3 replies
- 860 views
- 1 follower
-
-
இணையத்தில் ஆபாச வீடியோக்களை தேடும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளதாக இணைய ஜாம்பவான் கூகுல் தெரிவித்துள்ளது. அத்துடன் ஆபாச தேடல்களில் பட்டியலில் முதல் 10 நாடுகளுள் முஸ்லிம் நாடுகள் முதலிடங்களில் உள்ளதாகவும் கூகுல் குறிப்பிட்டுள்ளது. பன்றி, கழுதை, நாய், பூனை, மற்றும் பாம்பு போன்ற விலங்கினங்களின் ஆபாச வீடியோக்கள் அதிகமாக தேடப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் முஸ்லீம் நாடுகள் இடம் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் இரண்;டாவது இடத்தில் எகிப்து உள்ளதுடன் ஈரான், மொரோகோ, சவூதி அரேபியா, துருக்கி என்பன முறையே நான்கு, ஐந்து, ஏழு மற்றும் 8ஆம் இடங்களில் உள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/138264#sthash.pyXS94W5.dpuf
-
- 9 replies
- 1.3k views
-
-
கனடா- முதலாவது திருமண அனுபவத்தின் பின்னர் இரண்டாவது தடவையாக தங்கள் சொந்த திருமணத்திற்கு 20-வருடங்களின் பின்னர் மணமேடைக்கு செல்கின்றனர் கனடிய சோடிகள். கடந்த வாரம் இதேபோன்ற ஒரு சம்பவம் அமெரிக்காவில் மினசோட்டா என்ற இடத்தில் நடந்ததது. சஸ்கற்சுவானை சேர்ந்த மிஸ்ரி மொனியோ மற்றும் ஸ்பென்சர் பெனிங்ரன் ஆகிய இருவரும் தங்கள் திருமணத்தை நிறைவேற்றும் திட்டத்தை மேற்கொள்கின்றனர். இருவரும் 5-ம் வகுப்பில் இருக்கும் போது ஆரம்பித்த தங்கள் காதல் சூட்சுமத்தை கூறுகின்றனர். நத்தார் தின கதவு அலங்கரிக்கும் போட்டியில் பங்கு பற்றிக் கொண்டிருக்கையில் ஸ்பென்சர் தன்னிடம் வந்து ‘நான் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க விரும்புகின்றேன். நான் உண்மையில் உன்னை விரும்புகின்றேன்.’ என மொனியோவிடம் கூறியுள்ளான…
-
- 3 replies
- 513 views
-
-
கனடா- இந்த வார முற்பகுதியில் உலகில் மிக செலவை தாங்கிக்கொள்ள முடியாத நாடுகள் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டது வன்கூவர் நகரம். இந்நிலையில் அதிகமான மக்கள் தாங்கத்தகு விலைகளில் வீட்டு வசதிகளை நாடுவது ஆச்சரியப்பட வேண்டிய விடயமில்லை. சிலர் புறநகர்ப்பகுதிகளை நோக்கி இடம்பெயர வேறு சிலர் அறைகளை பகிர்ந்து கொள்பவர்களை தேடிச் செல்கின்றனர். வாடகை அதிகரிப்பால் சோர்வுற்ற 50-வயது பெண் இசபெல்லா மோரி என்பவர் பொறுப்புக்களை தன் கைகளில் எடுத்துக்கொண்டார். சிறிய வீடுகள் கட்டுவதில் நிபுணத்துவம் வாய்ந்த கட்டுநர் ஒருவரை கண்டுபிடித்தார். அவரின் உதவியுடன் 39,000-டொலர்களை செலவு செய்து 9-மாதங்களில் ஒரு 186 சதுர அடிகள் கொண்ட வீட்டின் பெருமைக்குரிய சொந்தக்காரரானார். பல செயல்பாட்டு இடைவெள…
-
- 0 replies
- 397 views
-
-
சாதனை களத்தில் அரங்கேறிய காதல் தென் ஆப்பிரிக்க, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய போட்டியின் போது ஒரு காதல் ஜோடியின் செயல்பாடு அனைவரிம் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க போட்டியை பார்க்க தனது தோழியுடன் வந்த ரசிகர் திடீரென்று தனது தோழியை பார்த்து என்னை திருமணம் செய்து கொள்வாயா என்று கேட்டார். இந்த சம்பவத்தை ஓட்டங்கள் குறிக்கும் பலகையில் அப்படியே ஒளிபரப்பப்பட்ட அனைவரும் திகைத்து ஒருகணம் அதிசயித்து நிற்க அவரின் தோழி அந்த காதலை ஏற்றுக் கொண்டு அவரை கட்டிபிடித்துக் கொண்டார். தென் ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை நொறுக்கி ஒரு புறம் சாதனைகளை குவித்துக் கொண்டிருக்க மறுபுறம் இந்த அழகான காதல் வ…
-
- 0 replies
- 476 views
-
-
தனது கணவருக்கு பிறிதொரு பெண்ணுடன் காதல் தொடர்பு இருப்பதை அறிந்து சினமடைந்த மனைவியொருவர், கணவரது பிறப்புறுப்பை இரு தடவைகள் வெட்டி துண்டித்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஷங்கியு நகரைச் சேர்ந்த வென் பெங் லங் (30 வயது) என்ற பெண்ணே தனது கணவரான பான் லங்கின் (32 வயது) பிறப்புறுப்பை இரண்டாவது தடவையாக வெட்டி துண்டித்துள்ளார். பான் லங் தனது மனைவியின் கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்தி தனது காதலியான ஸாங் ஹங்கிற்கு (21 வயது) காதல் ரசம் ததும்பும் இலத்திரனியல் அஞ்சல்களை அனுப்பிவைத்துள்ளார். அவர் கையடக்கத்தொலைபேசியில் தனது மின்னஞ்சல் தொடர்பை துண்டிக்க மறந்ததால் அந்த காதல் ரசம் ததும்பும் செய்தி…
-
- 17 replies
- 2k views
-
-
புலிகளுக்கு 2005ல் நிதி வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் யார்? - விசாரணைகள் ஆரம்பம் [ செவ்வாய்க்கிழமை, 20 சனவரி 2015, 08:00.28 AM GMT ] 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதியுதவி வழங்கி வடக்கு மாகாணத்தில் வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் தடுத்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. வடக்கு மாகாணத்தில் 2005ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது வாக்களிப்பு வீதம் மிக குறைவாக காணப்பட்டது. அதிலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களிப்பு…
-
- 0 replies
- 316 views
-
-
லெபனான், இஸ்ரேலிய அழகுராணிகளிடையே செல்பீ புகைப்படத்தால் மோதல் 2015-01-20 11:48:05 பிரபஞ்ச அழகுராணி போட்டிகளில் பங்குபற்றும் லெபனான் மற்றும் இஸ்ரேலிய அழகு ராணிகளுக்கிடையில் புகைப்படமொன்று தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 63 ஆவது பிரபஞ்ச அழகு ராணி போட்டிகள் தற்போது அமெரிக்காவில் நடைபெறு கின்றன. 88 நாடுகளின் அழகுராணிகள் இப் போட்டிகளில் பங்குபற்றுகின்றனர். இவர்களில் லெபனான் சார்பாக பங்குபற்றும் சாலி கிறேய்க் மற்றும் இஸ்ரேல் சார்பாக பங்குபற்றும் டொரோன் மெட்டலோன் ஆகியோருக்கு இடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது. செல்பீ புகைப்படமொன்றே இந்த மோதலுக்கு காரணம். லெபானான், இஸ்ரேல், ஜப்பான், ஸ்லோவேனியா நாடுகளின் …
-
- 6 replies
- 592 views
-
-
மைத்திரி அரசு பதவி ஏற்றதும்நாள் தோறும் புது புது சட்ட விடயங்களை அமுல் படுத்த பட்டு வருகிறது அதன் ஒரு அங்கமாக மகிந்த குடும்பம் மற்றும் பொன்சேகா உட்பட்ட பலருக்கு நெருக்கடியை தரும் வகையில் புதிய சட்டடத்தை கொண்டுவந்துள்ளது இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதே அந்த சட்டமாகும் . இதன் பயனாக மகிந்த குடும்பத்தில் உள்ள அதிகமானவர்கள் அமெரிக்கா குடியுரிமை கொண்டவர்கள் .சரத் பொன்சேக அவ்விதம் இவ்விதம் பலர் உள்ளனர் அதனால் பிற நாட்டு குடியுரிமையை இரத்து செய்த பின்னரே அவர்கள் இலங்கையில் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையை தோற்றுவித்துள்ளது இதுவே பலருக்கு இப்போது நெஞ்சிடியாக மாறியுள்ளது . இரண்டு நாட்டு உளவுஅமைப்பு போடு கொடுத்த மகா திட்டமே இது என்பது தான்…
-
- 0 replies
- 410 views
-
-
மஹிந்தவுக்கு எதிராக கூட்டுச்சதி – நாடுகடந்த தமிழீழ அரசுடன் அமெரிக்க அர சின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் பேச்சுக்களை நடத்தியுள்ளனர் January 17, 2015 இந்திய அரசு ஜெனிவாத் தீர்மானத்தின் போது ஏன் விலகிக்கொண்டது என்று பார்க்கின்றபொழுது, பல தரப்புக்களாலும் இந்தியா தமக்கு துரோகம் இழைத்துவிட்டது, இந்தியாவை நம்புவது மண்குதிரையில் ஏறுவதற்கு சமன் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டிருந்தது. உண்மையில் இவற்றுக்கான காரணம் என்ன? இந்தியா இலங்கையின் அண்மைய நாடு மட்டுமன்றி பண்டமாற்று வியாபார காலம் தொடக்கம் நல்லதொரு நிலைப்பாட்டினை கொண்டிருந்த நாடா கும். அமெரிக்க அரசின் திட்டத்தின் படியே இறுதிக்கட்டத்தில் இந்தியா மட்டுமல்ல பல நாடுகளும் இலங்கைக்கெதிராக வாக்களித்ததன் பின் புலமும், ஆதரவு த…
-
- 4 replies
- 529 views
-
-
அமெரிக்காவில் உள்ள ஒரு கல்லூரி மாணவி ஒருவர் 8வது மாடியில் இருந்த ஜன்னலை திறந்துவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததால் சாலையின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் அமைதியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண் மீது விழுந்து மரணம் அடைந்தார். நடைபாதையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவில் உள்ள Philadelphia பகுதியை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி Rebecca Kim. இவர் தனது நண்பர்களுடன் Rittenhouse Square என்ற இடத்தில் 8வது மாடியில் தங்கியிருந்தார். சம்பவத்தன்று ஜன்னலை திறந்துவிட்டு தனது மொபைல்போன் மூலம் கீழே உள்ள காட்சிகளை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பா…
-
- 0 replies
- 424 views
-
-
ரஷ்யாவில் பெட்டி ஒன்றில் கவனிப்பாரின்றி குளிரில் நடுங்கியபடி கிடந்த குழந்தை ஒன்றை மரணத்தில் இருந்து காப்பாற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது ஒரு பூனை. ரஷ்யாவின் ஓப்னின்ஸ்க் நகரில் மாஷா என்ற பெயர் கொண்ட அந்த பெண் பூனை உள்ளூர் மக்களால் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அது மிக அமைதியானது. நட்புடன் பழக கூடியது. அங்கு குடியிருந்து வரும் ஐரீனா லேவ்ரோவா என்ற பெண்மணி இது குறித்து கூறுகையில், மாஷா கத்தினால் அதில் ஏதாவது விசயம் இருக்கும். அன்று அது கத்தியபோது, அதற்கு காயம் ஏற்பட்டதாகவே கருதினேன். வழக்கமாக என்னை பார்த்து ஹலோ சொல்லும். ஆனால் அன்றைய தினம் அது குழந்தை ஒன்றின் அருகில் பெட்டியில் படுத்து கிடந்தது. அதனை பார்த்து எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை நீங்களே கற்பனை ச…
-
- 1 reply
- 388 views
-
-
) சாமான்யர்களுக்கு ஆதரவாக இணையம் எத்தனையோ முறை ஒன்று சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறது. ஆதரவு தெரிவித்திருக்கிறது. நிதி திரட்டி தந்திருக்கிறது. நியாயம் பெற்றுத்தந்திருக்கிறது. இப்போது அமெரிக்காவில் பிட்சா நிறுவன ஊழியர் ஒருவருக்காக இது எல்லாவற்றையும் செய்திருக்கிறது. பணியின் போது டிப் மறுக்கப்பட்டு அவமதிப்பிற்கும் இலக்கான பிட்சா நிறுவன ஊழியருக்காக தான் இப்படி அறிமுகம் இல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து 20 ஆயிரம் டாலருக்கு மேல் அள்ளி கொடுத்திருக்கின்றனர். இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ வைக்கும் இந்த கதையில் நடந்தது இது தான். ஜாரிட் டான்சே அமெரிக்காவின் மாசாசூட்ஸில் உள்ள வெஸ்ட்போர்டில் இருக்கும் பேலஸ் பிட்சாவில் பணியாற்றுபவர். சமீபத்…
-
- 0 replies
- 367 views
-
-
புனே: புனே நகரிலுல்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரண்டிற்கு குளிர்பானம் வாங்க வந்த ஏழை சிறுவனை ஊழியர் வெளியே இழுத்து வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது. புனே ஜேஎம் ரோடு பகுதியிலுள்ள மெக்டொனால்ட் ரெஸ்டாரண்ட்டிற்கு சில தினங்களுக்கு முன்பு தோழிகளுடன் சாப்பிட சென்றுள்ளார் இளம் பெண் ஒருவர். அப்போது ரெஸ்டாரண்ட் வெளியே நின்றிருந்த நடைபாதை குடியிருப்பில் வசிக்கும் ஏழை சிறுவன், எனக்கும் ஏதாவது குளிர்பானம் வாங்கித்தாருங்கள் என்று கேட்டுள்ளான். எனவே சிறுவனை அழைத்துக் கொண்டு உள்ளே சென்ற அந்த பெண், ஆர்டர் செய்வதற்காக கியூ வரிசையில் சிறுவனோடு காத்திருந்தார். இதைப் பார்த்த மெக் டொனால்டு ஊழியர் ஒருவர் ஓடிவந்து, அந்த சிறுவனை பிடித்து வெளியே இழுத்துச் சென்றுள்ளார். இதைப்பார்த்ததும் …
-
- 2 replies
- 567 views
-
-
உலகெங்கும் தனது பொருட்களை ஏற்றுமதி செய்து தமது வெளிநாட்டுச் செலவாணியை நான்கு ரில்லியன்களாக உயர்த்திய சீனா தனது தேவையைப் பூர்த்தி செய்ய முக்கியமான ஒன்றை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கின்றது. சீனாவில் ஏற்பட்டுள்ள பெண்களுக்கான தட்டுபாட்டைப் போக்க சீன இளைஞர்கள் தமக்கான மணமகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கின்றர். ஒரு சீன இளைஞன் உள் நாட்டில் ஒரு மணமகளைத் திருமணம் செய்ய அறுபத்து நான்காயிரம் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பணத்தைச் செலவிட வேண்டி இருக்கின்றது. இதே வேளை வியட்நாமில் இருந்து ஒரு மணமகளை இறக்குமதி செய்வதற்கு திருமணத் தரகருக்கு இருபதினாயிரம் அமெரிக்க டொலர்களிலும் குறைவான பணத்தைச் கொடுத்தால் போதும். அத்துடன் மணமகள் தனக்…
-
- 0 replies
- 455 views
-
-
பீகார் மாநிலம் பாட்னாவில் ஒரு பெண்ணுக்கு 6 வருடமாக ஒரு வாலிபர் 750 செல்போன் நம்பர்களை மாற்றி மாற்றி தன்னை காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த தொல்லை தாங்க முடியாமல இறுதியில் அந்த பெண் போலீஸ் உதவியை நாடி உள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி பிரேமிலா கூறியதாவது.. பெண்ணிடம் தொடர்ந்து 6 வருடங்களாக செல்போனில் பேசி தன்னை காதலிக்குமாறு கூறி உள்ளார். ஓவ்வொரு முறையும் அவரது நம்பரை பார்த்து அந்த பெண் மொபைல் போனை எடுக்காமல் இருக்கவும் அவர் தொடர்ந்து 750 நம்பர்களை மாற்றி உள்ளார். ஈற்தியில் அவரை கண்டு பிடித்து நாங்கள் கைது செய்து உள்ளோம். அவர் அந்த பெண்ணுடன் படைத்தவர்தான். அவரதற்போது அந்த பெண்ணை தொல்லை கொடுக்கமாட்டேன் என எழுதி கொடுத்து உள்ளார். http://seithy.com/breifN…
-
- 0 replies
- 440 views
-
-
கிழக்கு சைபீரியாவில் வடக்கின் வெளிச்சம் என்னும் அழகிய காட்சி கண்ணைக் கவரும் அழகிய புகைப்படங்கள்.நார்த்தர்ன் லைட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஒளி அமைப்பு, விண்வெளியிலிருந்து வெளிப்படும் சில உடைந்த வால் நட்சத்திரங்கள் மற்றும் விண் கற்களின் துகள்களால் ஏற்படும் வெளிச்சத்தால் உருவாகிறது. - See more at: http://www.canadamirror.com/canada/36829.html#sthash.bzTr27Nz.dpuf
-
- 1 reply
- 723 views
-
-
அமெரிக்கா- ஐந்து வருடங்களின் பின்னர் 5-வயது சிறுவன் பிட்சாவை விரும்பி சாப்பிட தனது மூத்தசகோதரர்களுடன் விளையாட கூடிய நிலைமைக்கு திரும்பியுள்ளான். கதைக்கும் போது அவனது சொற்கள் தடிப்பானதாகவும் இயந்திரமயமானதாகவும் தெரிகின்றது. ஒரு சிறிய துண்டு பிட்சா சாப்பிடுவதும் கூட ஒரு சவாலாக உள்ளது. அரிசோனாவைச் சேர்ந்து எமெற் றோச் என்ற இச்சிறுவன் 2010-ல் ஒரு பொத்தான் பட்டரியை—கனடிய 5சத நாணயம் அளவிலான டிவிடி ரிமோட் கொன்ட்ரோல்-விழுங்கியுள்ளான். இந்த சம்பவம் முதலில் கவனிக்கப்படவில்லை. இவனின் தாயாரும் அவதானிக்கவில்லை. சில நாட்களின் பின்னர் சிறுவன் இருமும் போது இரத்தவாந்தி எடுத்தான். வைத்தியசாலைக்கு கொண்டு சென்று எக்ஸ்-ரே எடுத்த போது பொத்தான் பட்டரி கண்டுபிடிக்கப்பட்டது. ஊடுகதிர்வீச்சிய…
-
- 0 replies
- 337 views
-
-
7 வருடங்களாக, 14,000 பேரின் வீட்டில் வளர்ந்த நாயொன்றின் கதை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. டார்லிங்டன் என்பது இங்கிலாந்தின் வடகிழக்கில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரில் தெரு நாய்களை வளர்ப்பதற்கான அறக்கட்டளையொன்று காணப்படுகின்றது. இந்த அறக்கட்டளையில், ஜெட்ஸ் என்று அழைக்கப்படும் நாயொன்றும் வளர்க்கப்பட்டது. இவ்வறக்கட்டளையானது நாய்களை விற்பனை செய்தும் வந்தது. இந்நிலையில் ஒருநாள் ஜெட்ஸூம்; விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜெட்ஸை வாங்கிய நபர், ஒரு சிலநாட்களில் அதனை மீண்டும் அறக்கட்டளைக்கே கொண்டுவந்து விட்டுவிட்டார். இவ்வாறு ஜெட்ஸை வாங்கிச் செல்பவர்கள், அவர்களது சூழ்நிலை மாற்றத்துக்கேற்ப, ஜெட்ஸை வளர்க்க முடியாது மீண்டும் அறக்கட்டளைக்கே கொண்டுவந்து விட்டுவிடுகின்றனர். இந்நிலை…
-
- 0 replies
- 369 views
-
-
13 January | வினோதம் | adatamil செம்மறி ஆட்டால் குழந்தை பெற மறுக்கும் மக்கள்! மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சீனாவில் குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்தது. இதனால் பெண்கள் தட்டுப்பாடு மற்றும் மனித ஆற்றல் குறைந்தது. அதை தொடர்ந்து தற்போது அத்திட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. 2–வது குழந்தை பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் இந்த ஆண்டு புதிதாக 20 லட்சம் குழந்தைகள் பிறக்கும் என சீன அரசு எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக உள்ளது. தற்போது 2–வது குழந்தை பெற 10 லட்சம் தம்பதிகள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதற்கு செம்மறி ஆடு ஆண்டே காரணமாக கூறப்படுகிறது. சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் மிருகங்களின் பெயரால் வருகி…
-
- 3 replies
- 724 views
-
-
அமெரிக்காவின் உடாஹ் அருகே ஓக்டன் பகுதியில் வசித்து வருபவர் எலிசபெத் பாரியோஸ். இவர் தனது 3 வயது குழந்தை எய்டனை காரில் பின் சீட்டில் உட்காரவைத்துவிட்டு மற்றொரு குழந்தையை ‘டே கேர்’ மையத்தில் விட்டு வர சென்றார். அப்படி செல்லும் போது கார் சாவியையும் அவர் எடுத்து செல்லவில்லை. அவர் டே கேர் மையத்துக்குள் நுழைந்து குழந்தையை விட்டுவிட்டு திரும்பி வெளியே வந்தபோது காரை யாரோ ஓட்டிச்செல்வதை பார்த்தார். அவர் ஓடி வருவதற்குள் கார் பறந்து சென்றது. குழந்தையும் காரில் உள்ளதே என்று பதைபதைத்த அவர் திரும்பவும் டே கேர் மையத்துக்குள் சென்று அவசர போலீஸ் எண் 911-ஐ தொடர்பு கொண்டார். தனது குழந்தையும், காரும் கடத்தப்பட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்தார். காருக்குள் தனது செல்போனும் இருப்பதாக அவர் ப…
-
- 4 replies
- 713 views
-
-
கோவை: திருமணத்திற்கு முன்பு காதலித்து வந்தவரை மறக்க முடியாமல் அவருடன் தொடர்ந்து பழகியும், உல்லாசமாகவும் இருந்து வந்த ஒரு பெண், தாலி கட்டிய கணவரை 2 வருடமாக நெருங்க விடாமல் தவிர்த்து வந்துள்ளார். அப்படியும் அந்த அப்பாவிக் கணவர் பொறுத்துப் போனபோதும், காதலனை அடைய முடியாத நிலையால் கோபமாகி, கணவரை ஆள் வைத்துக் கொல்லவும் துணிந்து தற்போது கைதாகியுள்ளார். கோவை பீளமேடு அண்ணாநகர் விகாஷ் லே-அவுட்டை சேர்ந்த என்ஜினீயர் தங்கராஜ் என்பவர் சில நாட்களுக்கு முன்பு சிலரால் கடுமையாக தாக்கப்பட்டார். சரமா்ரியாக வெட்டப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். இதுகுறித்து தனிப்படை அமைத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் கூலிப்படையை ஏவி தங்கராஜை தாக்கிய…
-
- 9 replies
- 1.1k views
-
-
நித்யானந்தா ஆண்மை கடந்த 2012-ம் ஆண்டு நித் யானந்தா மீது அவரது முன்னாள் சிஷ்யை ஆர்த்தி ராவ் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார். ஆனால் நித்யானந்தா தனக்கு ஆண்மை இல்லை எனக் கூறி குற்றச்சாட்டை மறுத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கர்நாடக சிஐடி போலீஸார், ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இவ்வழக்கில் கடந்த செப் டம்பர் 8-ம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவுக்கு ஆண்மை பரி சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நித்யானந்தா மீதான பாலியல் பலாத்கார வழக்கு கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நித்யானந்தாவும் சீடர்களும் நீதிமன்றத்துக்கு வந்தனர்…
-
- 2 replies
- 668 views
-