செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7154 topics in this forum
-
துபாய் சாலைகளில் ஓர் ரவுண்டப் - சுவாரஸ்யமான தொகுப்பு கடந்த 30 ஆண்டுகளில் உலகின் மிக வேகமான வளர்ச்சியை பெற்று வரும் நகரமாக துபாய் விளங்குகிறது. உலக மக்களை கவரும் முக்கிய சுற்றுலா நகரமான துபாயின் செல்வ செழிப்பை பரைசாற்றுவதில் வானுயர்ந்த கட்டடங்கள் மட்டுமல்ல, அதன் அழகு ரசம் சொட்டும் சாலைகளும், அந்த சாலைகளில் பறக்கும் விலையுயர்ந்த கார்களும் சாட்சியாக நிற்கின்றன. விலையுயர்ந்த கார்கள் என்றால் அதில் ஒரு பிரத்யேக தன்மை இருக்க வேண்டும் என்பதிலும் அவர்கள் தீர்க்கமாக இருப்பதையும் காணலாம். அதுபோன்று துபாய் சாலைகளில் தினசரி காணக்கிடைக்கும் கார்கள் மற்றும் சாலைகளையும் பற்றிய சுவாரஸ்யமான தொகுப்பாக இது அமைகிறது. தரமான தங்கம் தங்க ஆபரணங்கள் வாங்குவதற்கு உலகிலேயே சிறந்த ந…
-
- 0 replies
- 868 views
-
-
பார்பீ எதிர்ப்பு 'லாமிலி' பொம்மைகள் அறிமுகம் பார்பீ பொம்மைகளுக்கு எதிரான பொம்மைகள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளன. 1959 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட் பார்பீ பொம்மைகள் உலகின் பல நாடுகளிலும் பிரசித்தமாகவுள்ளது. யுக்ரைனைச் சேர்ந்த வலேரியா லக்கினோவா எனும் யுவதி பார்பீ பொம்மையை போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளதால் உயிருள்ள் பார்பீ என அழைக்கப்படுகிறார். ஆனால், நீண்டகால்களும் மெல்லிய இடையும், பருத்த மார்பகங்களையும் கொண்ட பார்பீ பொம்மைகளுக்கு பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். பார்பி பொம்மைகளின் அளவு விகிதாசாரங்கள் சாதாரண யுவதிகளின் தோற்றத்துக்கு முரணானது என அவர்கள் விமர்சிக்கின்றனர். பார்பீ பொம்மைகளை பார்த்து அதேபோன்ற தோற்றத்தை பெறுவதற்கு சிறுமிகள் முற்பட…
-
- 1 reply
- 1.1k views
-
-
மனிதன் பள்ளிக்கு போக மறுக்கும் காலத்தில் ஒரு நாய் பள்ளிக்கு சென்று பாடம் கவனித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஷான்க்சி மாகாணம் யாங்ளினில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றித் திரிந்த காஸ்பர் என்ற நாய் மாணவர்களுடன் வகுப்பறைகளில் அமர்ந்து பாடத்தை கவனித்து வந்தது. இதனால் அந்த நாய் மாணவர்கள் மத்தியில் பிரபலம் ஆனது. மேலும் இணையதளத்திலும் இந்த செய்தி வேகமாக பரவி காஸ்பர் மிகவும் பிரபலம் ஆனது. இந்நிலையில் பல்கலைக்கழக அதிகாரிகள் காஸ்பருக்கு விஷம் வைத்துக் கொன்று குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர். காஸ்பர் வகுப்பறைக்கு வருவதால் பல்கலைக்கழகத்தின் பெயர் கெடுகிறது என்று கருதப்பட்டதால் நாயை கொன்றுவிட்டனர் என்று மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பல்…
-
- 1 reply
- 745 views
-
-
அமெரிக்காவில் உள்ள பூனை ஒன்று மனிதனின் மரணத்தை கணித்து சொல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ரோட் தீவில் வசிக்கும் டேவிட் என்ற மருத்துவர், கடந்த 7 ஆண்டுகளாக பூனை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் மரணத்தை முன்கூட்டியே அறிந்து சொல்லும் அபூர்வ சக்தியை கொண்டுள்ளதாக டாக்டர் டேவிட் கூறியுள்ளார். மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் நோயாளிகளின் அறைகளுக்கு அந்த பூனை சுற்றுச் சுற்றிவிட்டு, நோயாளியின் அருகில் போய் நிற்கிறது. அந்த பூனை என்ற சில மணி நேரத்தில் அந்த நோயாளி மரணத்தைச் சந்தித்து விடுகின்றனர். மேலும் அந்த பூனையைப் பற்றி டேவிட், புத்தகம் ஒன்றையும் எழுதி வெளியிட்டுள்ளது குறிப்பிட்டுள்ளார். http://seithy.com/breif…
-
- 3 replies
- 653 views
-
-
ஒரு நிமிடத்தில் மோட்டார் சைக்கிளை எப்படி திருடுவது? https://www.facebook.com/video/video.php?v=10151923244710466
-
- 1 reply
- 498 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு காபி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று இந்த வார இறுதியில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த காபி தயாரிக்கும் கருவியை விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு எடுத்துச் செல்லும் முதல் இத்தாலிய பெண் விண்வெளி வீராங்கனையான, சமாந்தா க்ரிஸ்டொஃபொரெட்டியால், இந்த இயந்திரத்திலிருந்து தயாரிக்கப்படும் எஸ்பிரஸ்ஸோ காபியை முதன் முதலாக விண்வெளியில் சுற்றுப்பாதையில் அனுபவிக்க முடியும். சமாந்தா கிரிஸ்டொஃபொரெட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய ராக்கெட் ஒன்றின் மூலம் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் மூன்று விண்வெளிவீரர்களில் ஒருவர். இந்த 20 கிலோகிராம் எடையுள்ள காபி தயாரிக்கும் இயந்திரத்தில் உள்ள எஃகுப் பாகங்கள் பெரும் அழுத்தங்களைச் சமாளிக்க வல்லவை. அதில…
-
- 0 replies
- 406 views
-
-
கணவனின் கள்ளக்காதலியை தனது குடும்பத்தாருடன் சேர்ந்து வந்து மனைவி நையப்புடைத்த சம்பவம் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்துள்ளது. இதுகுறித்து வெளியான காணொளி சமூக வலைத்தளங்களில் சக்கை போடு போடுகிறது. குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த நைனா என்ற பெண்ணின் கணவருக்கும், மது என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் 2 குழந்தைகள் இருந்தும் கூட நைனாவை விட்டு பிரிந்து வந்து மதுவோடு ஒரு வீட்டில் வாழ்ந்துள்ளார் நைனாவின் கணவன். பொறுத்து பொறுத்து பார்த்த நைனா தனது அண்ணன் உள்ளிட்ட உறவினர்களுடன் வந்து வீடு புகுந்து கணவனையும், கள்ளக்காதலியையும் நையப்புடைக்கிறார். பாத்ரூமுக்குள் ஒளிந்த கணவனை இழுத்து போட்டு ரத்தம் ஒழுகும் வரை அடிக்கின்றனர் உறவினர்கள். விவாகரத்து செய்யாமல் பிற …
-
- 6 replies
- 844 views
-
-
ரஷ்யாவில் சிறுவன் ஒருவனுக்கு மின்சாரம் தாக்கியதில் இரும்புகளை கவரும் காந்த சக்தி கிடைக்கப்பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிக்கோலை (Nikolai Age-12) என்ற சிறுவன் வீதியில் உள்ள விளக்கு கம்பத்தில் சாய்ந்தபோது அவனை மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து மயக்கமடைந்த குறித்த சிறுவன் சிறிது நேரத்தின் பின்னர் எழுந்தவுடன் படுக்கையில் உள்ள சில நாணயங்கள் அவன் மீது ஒட்டி கொண்டுள்ளது. மேலும் சாப்பிடும் போது ஸ்பூனை கீழே போட்ட போது அது அவனது நெஞ்சில் ஒட்டிக் கொண்டுள்ளது. இதனால் பள்ளிக்கூடத்தில் பிரபலமடைந்த நிக்கோலை தற்போது மாணவர்கள் மத்தியிலும் சாகசங்கள் செய்து அசத்தி வருகிறான். http://onlineuthayan.com/News_More.php?id=1212436…
-
- 0 replies
- 1k views
-
-
சந்திரனுக்கு தமது தலை முடியை அனுப்பி அதை அங்கு புதைப்பதற்கான வாய்ப்பை லூனர் மிஸன் வன் என்ற பல மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான திட்டத்தின் கீழ் வழங்கவுள்ளதாக பிரித்தானிய பொறியாளர் ஒருவர் அறிவிப்புச்செய்துள்ளார். இதன் பிரகாரம் சிறிய குறுவட்டுக்களை உள்ளடக்கிய உறையொன்றை 100 அமெரிக்க டாலருக்கும் குறைந்த விலைக்கு கொள்வனவு செய்து அவற்றில் தமது புகைப்படங்கள் வீடியோ படங்கள் மற்றும் முடிகளை உள்ளடக்கி சந்திரனுக்கு அனுப்ப முடியும். சந்திரனின் தென் துருவத்தில் 100 மீட்டர் ஆழமான துளையை துளைத்து அவற்றிலிருந்து ஆய்வுக்காக மாதிரிகள் பெறப்படவுள்ள நிலையில் அந்த துளையில் பூமியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் ஞாபகார்த்த பொருட்கள் புதைக்கப்படவுள்ளன. பொறியியலாளரும் நகர நிதி …
-
- 4 replies
- 432 views
-
-
நாவலப்பிட்டியவில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின் அதிபரை இழவுபடுத்தி, முகப்புத்தகத்தில் (பேஸ்புக்) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்த செய்தியைப் பார்த்த அவ்வதிபருக்கு உயர்குருதியமுக்க நோய் ஏற்பட்டு அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று இடம்பெற்றது. இதேவேளை, குறித்த பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்துள்ள சிலர், அங்கிருந்த ஆசிரியர் ஒருவரை கடுமையாகப் பேசி, அவர் மீது தாக்குதல் நடத்தியதில், அவ்வாசிரியையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விரு சம்பவங்கை அடுத்து, குறித்த பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அமைதியற்ற நிலைமை உருவாகியுள்ளது. இவ்விரு சம்பவங்களையும் கண்டித்து, அவர்கள் நேற்று நாவலப்பிட்டி நகரில் ஆர்ப்பாட்டமொன்றிலும் ஈடுபட்ட…
-
- 4 replies
- 451 views
-
-
இதில் கவனிக்க வேண்டிய விடையம் என்ன என்றால் நேற்று நடந்த ஒரு விவாததில் எச்ச.ராஜா ஒரு சவால் விட்டு இருந்தார் முடிந்தால் பிரபாகரனின் பிறந்த நாளை கொண்டாடி பாருங்கள் என்று , அவர் சொல்லி ஒரு நாளும் ஆக்க வில்லை அதுக்கு , கொஞ்சம் முதல் நடந்த தேசிய தலைவரின் பிறந்த நாள் வாழ்த்தரங்கம்.....முடிஞ்சவன் மோதிப் பார் முடியாதவன் வேடிக்கை பாரு.......................... படங்கள் முகப் புத்தகம்............
-
- 2 replies
- 478 views
-
-
புகழ்பெற்ற ஹோட்டல் வரவேற்பாளர் கொட்டாரப்பட்டு சாத்துகுட்டன் காலமானார் 2014-11-20 10:10:02 கொழும்பு கோல் ஃபேஸ் ஹோட்டலில் 70 வருடங்களுக்கு மேலாக பணியாற்றி புகழ்பெற்ற வரவேற்பாளரான, கொட்டாரப்பட்டு சாத்துகுட்டன் நேற்று முன்தினம் தனது 94 ஆவது வயதில் காலமானார். சுமார் 150 வருடகால வரலாற்றைக் கொண்ட கோல்ஃபேஸ் ஹோட்டலில் 1942 ஆம் ஆண்டு முதல் சாத்துகுட்டன் கடமையாற்றினார். இலங்கையின் மிக வயதான ஹோட்டல் ஊழியராக அவர் விளங்கினார். இந்தியாவில் கேரள மாநிலத்தின் கொட்டாரப்பட்டு என்ற ஊரில் பிறந்த சாத்துகுட்டன் இளமைக்காலத்தில் வேலை தேடி இலங்கைக்கு வந்தவர். 1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்த காலத்தில் அவர் கோல்ஃபேஸ் ஹோட்டல் வரவேற்பாளரா…
-
- 2 replies
- 707 views
-
-
வாரணாசி: .மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 60, 70 என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் வாரணாசியில் 179 வயதுள்ள உலகிலேயே மிக அதிகமான வயதுடைய ஒரு மனிதர் வாழ்கிறார் என்ற தகவல் ஆச்சரியப்பட வைக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்திருக்கும் வாரணாசியில் வாழ்ந்து வரும் மகாஸ்தா முராசி தம்முடைய பிறந்த ஆண்டு 1835 என்கிறார். பெங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் கி.பி. 1903 ஆம் ஆண்டு முதல் வாரணாசியில் வாழ்ந்து வருகிறாராம். 1957 ஆம் ஆண்டு வரை காலணி தைப்பவராக அதாவது 122 வயது வரையில் அந்தப் பணியை செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டார். மகாஸ்தா முராசியின் பிறப்ப்பு சான்றிதழ், அடையாள அட்டைகள் அனைத்துமே அவர் 1835ஆம் ஆண்டு பிறந்தவர்தான் என்கின்றன. ஆனால் இதுவரை இவர் 179 வயதுக்காரர் என்பதை உறுதி…
-
- 13 replies
- 1k views
-
-
உலகிலேயே இதுவரை உருவாக்கப்பட்ட விமானங்களிலேயே மிகப் பெரிய விமானம் இன்று (17-11-2014) கனடா ரொரன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கியது. அன்ரனோவ் – 225 வகையைச் சேர்ந்த இந்த விமானமே இதுவரை உருவாக்கப்பட்ட விமானங்களில் மிகவும் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. பாரிய எண்ணிக்கையிலானவர்களையும், பொருட்களையும் ஒரே நேரத்தில் எடுத்துச் செல்லும் வகையிலான இந்த விமானம் ரஸ்ய விண்வெளி ஆய்வகத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்தது. 275 அடி நீளமான இந்த விமானம் 640 மெற்றிக் தொன் எடையினை தூக்கியவாறு மேலெழும் வல்லமை உள்ளது எனவும், இது மிகவும் பெரிய விமானம் என்பது மட்டுமின்றி, இதுவரை அமைக்கப்பட்டவைகளில் மிகவும் பாரமான விமானம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் முன் பகுதியில் இருந…
-
- 6 replies
- 945 views
-
-
சாமியார் குர்மீத் ராம்சிங்கின் சீடர்கள் 160 பேருக்கு, கட்டாய ஆண்மை நீக்கமா? பரிசோதிக்க கோர்ட் உத்தரவு. சண்டிகர்: ஹரியானாவின் சர்ச்சை சாமியார்களுக்கு 'நேரம்' சரியில்லை போல.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கியிருக்கும் ராம்பாலைப் போல 'கட்டாய ஆண்மை நீக்க' பஞ்சாயத்தில் சிக்கி இருக்கிறார் தேரா சச்சா சவுதா என்ற சீக்கியர் பிரிவின் பாபா குர்மீத் ராம்சிங். குர்மீத்தின் 160க்கும் மேற்பட்ட சீடர்களுக்கு கட்டாயப்படுத்தி ஆண்மை நீக்கம் செய்யப்பட்டதா? என்பது குறித்து பரிசோதிக்க பஞ்சாப்- ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீக்கியர்களில் ஒரு பிரிவுதான் தேரா சச்சா சவுதா. சில ஆண்டுகளுக்கு இந்த அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் வியன்னாவில் மற்றொரு சீக்கியர் பிரிவினரால் படுகொலை செய…
-
- 4 replies
- 912 views
-
-
Giant sinkholes 2009 ம் வருடத்தில் இருந்து தீடீரென வீதிகளிலும், மக்கள் வாழும் குடியிருப்புகளிலும் உண்டாகும் பாரிய குழிகளால் பெரும் அதிர்வலைகள் உண்டாகி உள்ளன, இது எவ்வாறு உண்டாகின்றன என சூழலளியலாளரும், விஞ்ஞானிகளும், மண்டையை உடைந்துக் கொண்டு ஆராய்கினம். அனேகமா, கீழால, உந்த நிலக்கக்கரிக்கு, கனிமப் பொருட்கள் எடுக்க கிண்டினது, பொறியுது போல தான் எனக்கு படுகுது. உதைச் சொன்னால், சனம் குழம்பிடும் எண்டு கமுக்கமா இருக்கினம் போல தான் படுகுது. அமெரிக்காவில், புளோரிடாவில், கடந்த வாரம் மட்டும் இரண்டு குழிகள் உண்டாகி உள்ளன. இதில் ஒருவர் உயிர் இழந்து உள்ளார். இந்த இணைப்பினைப் பார்த்து விபரீதத்தினப் புரிந்து கொள்ளுங்கள். This week, a Florida neighborhood fell victim to it…
-
- 16 replies
- 2k views
-
-
கடவுள் பற்றியும், பேய் போன்ற அமானுஷ்ய சக்திகள் பற்றியும் என் அபிப்பிராயங்களும், அவற்றையொட்டிய என் கருத்துகளும் மாறுபட்டவை. நவீன இயற்பியலையும், குவாண்டம் இயற்பியலையும் முழுமையாக ஏற்றுக் கொண்டவன் நான். அதனால் கடவுள் மற்றும் அமானுஷ்ய சக்திகள் பற்றிய என் கருத்துகளுக்கு அறிவியல் சார்ந்த ஒரு விளக்கத்தை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவன். இன்று எனக்குக் கிடைக்கும் ஒரு விளக்கம், நாளை வேறு ஒன்றாகத் தன்னைப் புதுப்பித்துத் திருத்திக் கொள்ளலாம். அறிவியலுக்கும், மத நம்பிக்கைகளுக்குமிடையில் நூலிழை வித்தியாசம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. எத்தனை ஆயிரம் வருடங்களானாலும், தன்னைப் புதிப்பித்துக் கொள்ளாமல் மத நம்பிக்கைகள் மாறாமல் இருக்க, அறிவியல் தன்னை அந்தந்தக் கணத்திலேயே புதுப்பித்துக் கொள்…
-
- 0 replies
- 708 views
-
-
அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதில் கிறிஸ்டோப்பர் கொலம்பஸை முஸ்லிம் மாலுமிகள் மிஞ்சியுள்ளதாக துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்டோகன் சனிக்கிழமை சர்ச்சையை ஏற்படுத்தும் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இஸ்லாமிய மாலுமிகள் புதிய உலகை (அமெரிக்காவைக்) 1178ஆம் ஆண்டு கண்டுபிடித்து கியூபாவில் பள்ளிவாசலொன்றை நிர்மாணித்துள்ளனர். ஆனால் கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டு தான் அமெரிக்காவை கண்டு பிடித்துள்ளார் என எர்டோகன் இஸ்தான் புல்லில் இடம்பெற்ற உச்சி மாநாட்டில் லத்தீன் அமெரிக்க தலைவர்கள் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்தார். லத்தீன் அமெரிக்காவுக்கும் இஸ்லாமியத்திற்குமிடையிலான தொடர்பு 12 ஆவது நூற்றாண்டுக்கு முற்பட்டது. முதன் முதலாக அமெரிக்காவை கண்டுபிடித்தது கிறிஸ்டோப்பர் கொலம்பஸ் அ…
-
- 6 replies
- 748 views
-
-
அமெரிக்காவில் உள்ள க்ரீன் பேங்க் கிராமத்தில் செல்போனின் சத்தத்தைவிட மாட்டின் சத்தம் தான் அதிகமாக கேட்கும். ஏனெனில் இங்குதான் உலகின் மிகவும் உணர்திறன் கொண்ட ரேடியோ தொலைநோக்கி உள்ளது. இந்த தொலைநோக்கி நட்சத்திரங்களின் பிறப்பு இறப்பையும், விண்வெளியில் இருக்கும் மெல்லிய ஒலியுடைய சிக்னல்களையும் படம்பிடிக்கும். இதனால் இங்கு எலக்ட்ரானிக் பொருட்களான மொபைல் மற்றும் வைஃபை தடை செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லாத இந்த க்ரீன் பேங்க் கிராமத்தில் வயதான நோயாளிகள் வந்து தஞ்சம் அடைகின்றனர், அதனால் இந்த இடம் மெக்காவை(mecca) போல திகழ்கிறது. க்ரீன் பேங்க் கிராமத்தில் உள்ள மக்கள் தொகை 143 ஆகும், இங்கு செல்போன் போன்றவவை தடை செய்யப்பட்டுள்ளதால் நிம்மதியாக இருக…
-
- 1 reply
- 558 views
-
-
அமெரிக்க ராணுவ வீரரின் ஆவி சிறுவன் உடலில்! அதிசய தகவல் Ca.Thamil Cathamil November 14, 2014 Canada அமெரிக்க கடற்படையில் வீரராக இருந்தவர் லூயிஸ். இவர் 1983–ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த போரில் இறந்து போனார். அவருடன் 244 அமெரிக்க வீரர்களும் இறந்தார்கள். இப்போது அவருடைய ஆவி விர்ஜினியாவை சேர்ந்த ஆண்ட்ரு என்ற 4 வயது சிறுவன் உடலில் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆண்ட்ரு ராணுவ வீரர் லூயிசின் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அனைத்து தகவல்களையும் சரியாக கூறுகிறான். லூயிசுடன் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் படத்தை அவனிடம் காட்டினால் சரியாக அவர்களின் பெயர்களையும் கூறுகிறான். இவனை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்து செல்கின்றனர். - See more at: http://www.canadamirror.com/canada/34010.html#sth…
-
- 0 replies
- 603 views
-
-
குழந்தை இறக்கும் தருவாயில் அதற்கு தாலாட்டு பாடிய தந்தையின் காட்சிகளடங்கிய வீடியோவொன்று இணையத்தளங்களில் வெளியாகி பலரை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ் பிக்கோ. கர்ப்பமாக இருந்த அவரது மனைவி ஆஷ்லிக்கு கடந்த 8ஆம் திகதி குறைமாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது. லொஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழக மருத்துவமனையில் நடந்த பிரசவத்தின்போது ஆஷ்லி மரணம் அடைந்தார். தாயின் வயிற்றில் 24 வாரங்களே இருந்த குழந்தை இன்குபேட்டரில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்தது. ஆனால் குழந்தை கடந்த 11ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு போராடியபோது கிறிஸ் அதன் அருகில்…
-
- 2 replies
- 5.1k views
-
-
உலகின் உயர்ந்த மனிதரும், குட்டை மனிதரும் லண்டனில் சந்தித்துக் கொண்டனர் உலகின் மிக உயர்ந்த மனிதரும், மிகக் குட்டையான மனிதரும் முதற்தடவையாக சந்தித்துக் கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு லண்டனில் இடம்பெற்றுள்ளது. உலக கின்னஸ் சாதனை தினத்தை முன்னிட்டு லண்டனில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக உலகின் மிக உயர்ந்த மனிதரும், மிகக் குட்டையான மனிதரும் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளனர். இதற்கிடையிலேயே இருவரும் சந்தித்துள்ளனர். நேபாள நாட்டைச் சேர்ந்த 30 வயதுடைய சந்திரா பஹாடுர் டாங்கி (Chandra Bahadur Dangi) உலகிலேயே மிகவும் குட்டையான நபராக கின்னஸ் புத்தகத்தில் பதிவாகியுள்ளார். இவரது உயரம் 54.6 சென்றி மீற்றராகும். இவரது எடை 15 கிலோ கிரா…
-
- 4 replies
- 792 views
-
-
'என்னை உணவாக்க முடியாது' 14 சிங்கம் இணைந்து நடத்திய தாக்குதலில் உயிர்பிழைத்த யானை குட்டி தெற்கு ஆபிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் உள்ள தென் லுவாங்கா தேசிய பூங்காவில் 14 சிங்கம் இணைந்து நடத்திய தாக்குதலில் சிறிய யானைக் குட்டி உயிர்பிழைத்தது தொடர்பான வீடியோ சுற்றுலா சென்றவர்களால் எடுக்கப்பட்டுள்ளது. சஃபாரி சென்றவர்கள் எடுத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகியுள்ளது. லுவாங்கா ஆற்றின் படுகையில், சிங்கங்களின் தாக்குதலில் இருந்து உயிர்பிழைக்க யானை குட்டி நடத்திய போராட்டம் அதில் பதிவாகியுள்ளது. சிறிய யானை குட்டியின் செயல்பாடும் முயற்சி செய்தால் எதனையும் செய்ய முடியும் என்று உணர்த்தும் அளவுக்கு இருந்தது. பசியோடு இருக்கும் சிங்கங்கள் யானை குட்டியின் மீது பாய்கிறது. யானை குட்ட…
-
- 12 replies
- 995 views
-
-
பொலிவூட் நட்சத்திரங்களின் கிரிக்கெட் போட்டி பொலிவூட் கலைஞர்கள் பங்குபற்றும் பொக்ஸ் கிரிக்கெட் லீக் (பி.சி.எல்) சுற்றுப்போட்டி விரைவில் நடைபெறவுள்ளது. மும்பை வோரியர்ஸ், ரௌடி பெங்களூர், புனே அன்மோல், அஹமதாபாத் எக்ஸ்பிரஸ், கொல்கட்டா பாபு, ஜெய்பூர் ராஜ், சண்டிகார் கிளப்ஸ், டெல்ஹி ட்ரகன்ஸ் ஆகிய 8 அணிகள் இப்போட்டிகளில் மோதவுள்ளன. சுமார் 150 கலைஞர்கள் இவ்வணிகளில் இடம்பெறுகின்றனர். ஒவ்வொரு அணியிலும் ஆண்களும் பெண்களும் இடம்பெறுகின்றனர். ரௌடி பெங்களூர் அணியைச் சேர்ந்த நடிகைகள் சாரா கான், ராக்கி சாவந்த், நடிகர் அஜாஸ் கான் அணி உரிமையாளர் மயான்க் சிங் ஆகியோர் கடந்த திங்கன்று மும்பையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். - See more at: http://www.metronews.l…
-
- 0 replies
- 632 views
-
-
தனது தந்தையின் பண அட்டையை திருடி 15 ஆயிரம் ரூபாவுக்கு தனது காதலிக்கு பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்துள்ளான் 14 வயது யாழ்ப்பாணச் சிறுவன். யாழ் இணுவில் பகுதியைச் சோ்ந்த ஆசிரியா் ஒருவரின் மகனே இவ்வாறு காதலுக்காக அப்பாவின் காசைக் கொடுத்தவராவார். கடந்த வெள்ளிக்கிழமை குறித்த ஆசிரியா் தனியார் வகுப்பு ஒன்றில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்த போது தனது கைத்தொலைபேசிக்கு குறுந்தகவல் ஒன்று வந்தபோது அதைப் பார்த்த ஆசிரியா் அதிர்ச்சியுற்றுள்ளார். அவா் கணக்கு வைத்திருந்த வங்கியில் இருந்து 15 ஆயிரம் ரூபா பெறப்பட்டுள்ளது என தகவல் வந்திருந்தது. உடனடியாக தனது போ்ஸ்சைப் பார்த்த போது அதற்குள் இருந்த பண அட்டை காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்றுள்ளார். தனது மனைவியைத் தொடா்பு கொண்டு கேட்ட…
-
- 6 replies
- 750 views
-