Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நாயின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உரிமையாளர் பலி அமெரிக்காவில் நாயின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். வேட்டைக்குப் பிறகு, குறித்த நபர் தனது துப்பாக்கியை டிரக்கின் பின் இருக்கையில் பாதுகாப்பின்றி வைத்து விட்டு ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்துள்ளார் , இதன்போதுபின் இருக்கையில் இருந்த நாய் குதித்து துப்பாக்கியை மிதித்ததால் துப்பாக்கி வெடித்துள்ளது. உயிரிழந்தவர் 30 வயதுடையவர் எனவும், கடந்த 21ஆம் திகதி வேட்டையாடச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் கன்சாஸ் மாநில பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வேட்டையாடச் சென்ற போது ஏற்பட…

  2. நாயின்... காலைப் பிடித்து, தலைகீழாக சுற்றி தூக்கி வீசிய.... இளைஞர் கைது. டெல்லி: டெல்லியில் 21 வயது இளைஞர் ஒருவர் நாயை அடித்துத் துன்புறுத்துவதை வீடியோவாக எடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அந்த நபரின் பெயர் ராகுல் குமார். 21 வயதாகும் அவர் விவேக் விகார் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவைப் போட்டிருந்தார். அதில் ஒரு தெரு நாயைப் பார்த்து அதை முதலில் அருகே போய் அதைத் தட்டிக் கொடுத்து கட்டித் தழுவுகிறார். பின்னர் அந்த நாயை சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறார். அதை அடிப்பதோடு, ஒரு காலைப் பிடித்துத் தூக்கி சுற்றுகிறார். பின்னர் படு வேகமாக அந்த நாயை தூக்கி ஒரு கார் மீது வீசுகிறார். அந்த நாய் வீறிட்டுக் கத்து…

    • 4 replies
    • 333 views
  3. நாயுடன் நடந்து சென்ற தம்பதி ஒன்று சுமார் 13 கோடியே 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நாணயங்களுடன் வீடு திரும்பிய சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. கலிபோனியாவைச் சேர்ந்த ஜோன் மற்றும் மேரி என்ற தம்பதிகளே இவ்வாறு தங்கக் காசுகளுடன் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் இவர்கள் தங்களை வெளியில் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. வழக்கமாக நாயுடன் நடந்து செல்லும் வழியில் பழைய பேணி ஒன்று நிலத்தின் வெளியே தெரியுமாறு புதையுண்டுள்ளது. தொடர்ந்து அந்த பேணியை குச்சி ஒன்றினால் தோண்டி எடுத்துள்ளனர். அந்த ஒரு பேணியுடன் அங்கு புதையுண்டிருந்த மேலும் 7 பேணிகளை இத்தம்பதிகள் தோண்டி எடுத்துள்ளனர். இவற்றுள் 1400க்கும் அதிகமான தங்க நாணயங்கள் இருந்துள்ளன. இச்சம்பவம் கடந்த வருடம் இடம்பெற்றத…

  4. நாயுடன், மகனைக் கட்டிப் போட்ட பெற்றோர்! இடுக்கி: தங்களது 3வயது மகனை நாயுடன் சேர்த்து கட்டிப் போட்ட கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர். இடுக்கி மாவட்டம் மாவடி கிராமத்தைச் சேர்ந்த பென்னி, மஞ்சு ஆகியோர் கூலி வேலை பார்த்து வருகின்றனர். அவர்களுக்கு 3 வயதில் அரோமால் என்கிற மகன் உள்ளான். தினசரி வேலைக்குப் போகும்போது அவர்கள் தங்களது மகனை, வீட்டில் உள்ள நாயுடன் சேர்த்து சங்கிலியால் கட்டிப் போட்டு விட்டு வேலைக்குப் போவது வழக்கமாம். அந்த 3 வயது சிறுவன், தினசரி நாயுடன் சேர்த்து வீட்டுக்குள் வளைய வருவானாம். அந்தத் தம்பதியின் உறவினர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவர்களை கல்யாணம் ஒன்றுக்கு அழைப்பதற்காக வந்தவர்கள், வீட்டில் நாயுடன், சிறுவன் இருப்பதைப் பா…

    • 5 replies
    • 1.7k views
  5. சிட்னி, நவ. 12- ஆஸ்திரேலியாவை சேர்ந்த காலண்டிணாவை சேர்ந்தவர் பிலிப்பேன் (வயது 32). இவர் குட்டி நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இதை சங்கிலியால் கட்டி கடற்கரை வழியாக அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது கடற்கரையில் இருந்த பெரிய நாய் ஒன்று ஓடி வந்து இந்த நாயை கடிக்க வந்தது. உடனே பிலிப்பேன் தனது நாயை கையில் தூக்கி வைத்துக் கொண்டார். அப்போதும் அந்த நாய் விடவில்லை. துள்ளி குதித்து இவர் கையில் இருந்த நாயை கடித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பிலிப்பேன் அந்த நாயை பிடித்து காது, முகம் என கடித்து குதறிவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத நாய் உடனே குட்டி நாயை கடிப்பதை விட்டு விட்டு அங்கிருந்து ஓடிவிட்டது. இதுபற்றி பிலிப்பேன் கூறும்போது எனது நாயை காப்பாற்ற வேறு வழ…

  6. சென்னை : தான் ஆசையாக வளர்த்து வந்த நாயைக் காணவில்லை என்ற சோகத்தில் சென்னைப் பெண் ஒருவர் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை கொருக்குபேட்டை ரங்கநாதம் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மனைவி ஷர்மிளா (35). இவர்களது வீட்டில் உயர்ரக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். அந்த நாய் கடந்த சில நாட்களுக்கு முன்னால் காணாமல் போய் விட்டதாம். ஆசையாக வளர்த்த நாயைக் காணவில்லையே என மன வருத்தத்தில் இருந்துள்ளார் ஷர்மிளா. இந்நிலையில், நேற்று முந்தினம் வீட்டில் யாருமற்ற நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார் ஷர்மிளா. ஷர்மிளாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், உடனடியாக அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்…

  7. நாயை துரத்தி சென்ற சிறுத்தை நாயுடன் சேர்ந்து 7 மணி நேரமாக கழிவறைக்குள் சிக்கி கொண்டது கர்நாடகாவின் தட்சிண கன்னட மாவட்டத்தின் பிலினேல் கிராமத்தில் சிறுத்தை ஒன்று நாயை துரத்தி உள்ளது. நாய் ரெகப்பா என்பவரின் வீட்டின் கழிவறைக்குள் புகுந்தது தொடர்ந்து சிறுத்தையும் கழிறைக்குள் புகுந்து. சிறுத்தை கழிவறைக்குள் நுழைந்ததை பார்த்ததும் அந்த வீட்டு பெண்மணி உடனடியாக கழிவறையின் கதவைப் பூட்டி பக்கத்து வீட்டுகாரர்களை அழைத்து உள்ளார். உடனடியாக போலீஸ் அதிகாரிகளுக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. கழிவறையில் நாயும், சிறுத்தையும் சிக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து வனத்துறை சரகர் கரிகலன் கூறியதாவது:…

  8. நாயை... கடத்தி, கப்பம் – யாழில் சம்பவம். யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வளர்ப்பு நாயை கடத்தி சென்ற இருவர், 25 ஆயிரம் ரூபாய் கப்பம் பெற்ற பின்னர் நாயை உரிமையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி பகுதியில் வசித்து வரும் ஒரு வயோதிப தம்பதியினருக்கு குழந்தை பேறு கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர்கள் ‘பொமேரியன்’ இன நாய் ஒன்றினை மிக செல்லமாக வளர்த்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர்களின் வளர்ப்பு நாய், வீட்டில் நின்ற நிலையில் திடீரென காணாமல் போயுள்ளது. அதனை அவர்கள் அயலில் தேடி அலைந்து எங்கும் கிடைக்காததால் மனமுடைந்திருந்தனர். நாய் காணாமல் போன அன்றைய தினம் மாலை, அவர்கள் வீட…

  9. பட மூலாதாரம்,FACEBOOK/KANGALA WILDLIFE RESCUE படக்குறிப்பு,வலேரி, நாய் கட்டுரை தகவல் எழுதியவர், பிராண்டன் ட்ரெனன் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆஸ்திரேலியா நாட்டின் காட்டுப் பகுதிகளில், சுமார் 500 நாட்களைக் கழித்தபின் 'மினியேச்சர் டாஷண்ட்' என்ற வகையை சேர்ந்த ஒரு நாய் உயிரோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியக் கடற்கரைப் பகுதியில் உள்ள கங்காரு தீவில் 'வலேரி' என்ற பெயர் கொண்ட அந்த நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல நாட்கள் 'இரவும் பகலும்' செலவழித்ததாக கங்காலா வனவிலங்கு மீட்புக் குழு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், அவர்கள் செய்த ஒரு கேம்ப்பிங்க் (camping) பயணத்தின்போது வலேரி நாய் தங்களிடமிருந்து ொலைந்து போனதாக அதன் உரிமையாளர்கள் …

  10. நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்! நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் ரெஜிபோம் …

  11. நாய் உணவை சாப்பிட்டு நொந்து போன செரீனா! (வீடியோ) நாய்க்கு வழங்கப்படும் சாப்பாட்டை சாப்பிட்டு கடும் பிரச்னையை சந்தித்துள்ளார் உலக மகளிர் டென்னிஸ் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ். இத்தாலி ஓபன் டென்னிசில் பங்கேற்பதற்காக ரோம் நகரில் உள்ள ஹோட்டலில் செரீனா தங்கியுள்ளார். அந்த ஹோட்டல் உணவக மெனுவில் நாய்களுக்கான உணவு வகைகள் என்ற பெயரில் சாப்பாடு வகைகள் இருந்தன. தனது குட்டிநாய் 'சிப்'க்கு அதை வாங்கி கொடுத்த செரீனா, தானும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுள்ளார். ஆனால், அதன்பிறகு, வயிற்று கலக்கல் தாங்க முடியாமல் ஒரு மணி நேரமாக டாய்லெட்டுக்கும் ரூமுக்குமாக நடந்துள்ளார். இதுகுறித்து செரீனா கூறுகையில், இத்தோடு என்கதை முடிந்தது என்றுதான் நினைத்தேன்.…

    • 1 reply
    • 422 views
  12. மட்டக்களப்பு நகரில் பக்கத்து வீட்டுகாரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நட்டஈட்டை நாயின் உரிமையாளர் வழங்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து நாயின் உரிமையாளர் அந்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை செலுத்திய விசித்திரமான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, ஒய்வு நிலை கல்வி ஆசிரியர் ஆலோசகர் வீட்டில் மூன்று நாய்கள் வளர்த்து வருகின்ற நிலையில், பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஓய்வு பெற்ற முன்னாள் கல்வி அதிகாரியின் உறவினர்களை நாய் அடிக்கடி கடிக்க சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பக்கத்து வீட்டாருடன் முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவதினடான நேற்று சனிக்கிழமை (14) நாயின் உரி…

  13. நாய் கடிப்பது ஏன்? நாய்கள் மனிதர்களை கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பிபிசி இந்தி குழு ㅤ 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வழக்கமாக நடக்கும் பாதையை நாய்க் கடிக்கு பயந்து மாற்றிக்கொண்ட அனுபவம் உண்டா உங்களுக்கு? அப்படியெனில் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். நாய்க்கடிக்கான முதலுதவி குறித்தும் நாய்கள் ஏன் கடிக்கின்றன என்பது குறித்தும் எளிமையாகவும் விரிவாகவும் விளக்குகிறது இந்தக் கட்டுரை. சரி தொடங்கலாமா? கடந்த சில மாதங்களாக சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் நடப்பது மக்களின் கவலையை அதிகரித்துள்ளது. நாய்க்கடியால…

  14. நாய் கூண்டில் நாய்களுடன் 6 பிள்ளைகளை அடைத்து வைத்திருந்த பெற்றோர்! நாய்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் 6 பிள்ளைகளை அடைத்து வைத்து பெற்றோர் சித்திரவதை செய்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், தாம் பெற்ற பிள்ளைகளையே சித்திரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவரை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். 2 வயது முதல் 11 வயது வரையுள்ள 6 குழந்தைகளுக்கு பெற்றோரான குறித்த இருவரும் தமது பிள்ளைகளை நீண்ட நாட்களாகத் தாக்கி வந்துள்ளதோடு அவர்களுக்கு உணவளிக்காமல் நாய் கூண்டுகளில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வந்துள…

  15. நாய் கௌவிக் கொண்டுவந்த பணப்பையில் தங்கச் சங்கிலி, பணம் ; உரியவரிடம் ஒப்படைப்பு By T. SARANYA 19 OCT, 2022 | 02:01 PM வீட்டிலுள்ள வளர்ப்பு நாய் தங்க சங்கிலி, பணம் இருந்த பணப்பையை கௌவிக் கொண்டுவந்த நிலையில், அதனை உரிய நபரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று அண்மையில் கண்டி அலதெனிய பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, அலதெனிய பொலிஸ் பிரிவில் உள்ள குருந்துகஹமட என்னுமிடத்தில் நடந்த இச்சமபவத்தில் பணப் பை ஒன்றை நாய் ஒன்று கௌவிக் கொண்டு வந்துள்ளது. அது பாதை ஓரம் விழுந்திருந்த ஒன்று எனக் கருதப்படுகிறது. மேற்படி வளர்ப்பு நாய் அடிக்கடி சப்பாத்துபோன்ற பாதணிகளை இவ்வாறு கௌவிக்கொ…

  16. அமெரிக்காவின் விர்ஜினியா மாநில தலைமை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த பொது மக்களிடம் இருந்து எராளமான அவசர உதவி தொலைபேசி அழைப்புகள் வந்தன. அந்த அழைப்பில் பேசியவர் நார்ஃபோல்க் பகுதி மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பி வந்த சிங்கம் தெருக்களில் நடமாடுவதாக ஒரு புகார் அளித்தார். பிடரியுடன் ஒரு சிங்கக்குட்டி, தங்கள் வீட்டின் அருகே சுற்றித் திரிவதாக மற்றவர் கூறினார். இதைப் போன்று பல அழைப்புகள் வரவே, உஷாரான போலீசார், மிருகக்காட்சி சாலை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, சிங்கங்களின் எண்ணிக்கையை சரி பார்க்கும்படி அறிவுறுத்தி விட்டு,புகார் வந்த பகுதிக்கு துப்பாக்கிகளுடன் விரைந்தனர். வழியில் ஒருவர் சிங்கத்தை சங்கிலியில் பிடித்தவாறு நடந்து போய் கொண்டிருந்தார். அவரை வழி மறித்த போ…

  17. ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு சிறுவன் 6 வருடங்களாய் நாய் பால் குடித்து வருவதை பழக்கமாக வைத்திருக்கிறான் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம் தனபாத் எனும் ஊரில் வசிப்பர் சுபேந்தர் சிங். இவர் சாலையோரம் பழ ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கு தற்போது 10 வயதில் மொகித்குமார் என்ற மகன் இருக்கிறான். அந்த சிறுவன் தனது 4 வயது முதல் நாய் பால் குடிக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகிறான். மொகித் சிறு வயதில் விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு இருந்த நாயின் அருகில் சென்று அதனிடம் பால் குடித்துள்ளான். அந்த நாயும் அதற்கு ஒத்துழைத்து பால் கொடுத்துள்ளது. நாளடைவில் மொகித் குமாருக்கு அதுவே பழக்கமாகிவிட்டது. ஒ…

  18. பிரித்தானியாவின் லண்டன் நகரில் மர்மப் பெண்ணொருவர் நாய் போன்று பட்டி அணிவித்து, ஆணொருவருடன் உலா வந்த சம்பவமொன்று கடந்த வாரம் இணையத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. இது குறித்த இணையத்தளங்களில் மாறுபட்ட தகவல்கள் உலாவந்தது. ஆனால் தற்போது அதன் உண்மை நிலைவரம் வெளியாகியுள்ளது. மக்களின் வெளிப்பாடுகளை அறியும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடிப்புத் திட்டம் இதுவென குறித்த மர்மப் பெண் தெரிவித்துள்ளார். இந்த மர்மப் பெண்ணின் பெயர் ஈடன் அவிடல் அலெக்ஸாண்டர். இவர் 20 வருடங்களாக மேடை நாடக நடிகையாக உள்ளார். இது தொடர்பில் அலெக்ஸாண்டர் கூறுகையில், மக்கள் வெளிப்பாடுகளை படமாக்கி அவற்றில் சிறந்தவற்றை 3 நிமிடங்களாக வெட்டப்பட்டுள்ளது. ஒருவர் எனது நாயை கெமராவுக்கு சிரிக்க சொல்லுமாறு கேட்டா…

  19. நாய்... இறந்த சோகத்தில், உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா – யாழில் சம்பவம்! யாழ்ப்பாணத்தில் செல்லப் பிராணியான நாய் திடீரென உயிரிழந்த சோகத்தில் 5 நாட்கள் சாப்பிடாமல் இருந்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பின்னர் அவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை மூளாய் வீதியைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜெயமலர் (வயது-61) என்ற 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, குறித்த சடலம் சுகாதார முறைப்படி மின்தகனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1233399

    • 9 replies
    • 846 views
  20. நாய்... வாலை, வெட்டிய 4 பேர் மிருகவதைத் தடுப்புச் சட்டத்தில் கைது. சென்னை: வாலை வெட்டினால் நாய் வளரும் என்ற நம்பிக்கையில் நாயின் வாலை வெட்டிய 4 பேர் மிருக வதை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, அய்யப்பன்தாங்கல் அருகே கஜலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சோமு, ஹரி, அசோக் குமார் மற்றும் பேச்சிமுத்து என்ற 4 பேர் அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒரு நாய்க்குட்டியை வாங்கி வந்து வளர்த்து வந்துள்ளனர். ஆனால், அந்த நாய் சரியாக வளரவில்லையாம். இது குறித்து தங்களது கவலையை நண்பர்களிடம் கூறி வருத்தப் பட்டுள்ளனர் அவர்கள். அதனைத் தொடர்ந்து, நாய் வாலை வெட்டி விட்டால் நாய் நன்றாக வளரும் எ…

  21. 13 Nov, 2025 | 05:08 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்கள் பிரச்சினையால் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து கோரியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வந்துள்ளார். இது தொடர்பில் கணவர், 'திருமணம் முடிந்த கொஞ்சநாளில் மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார். தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அத…

  22. 04 Feb, 2026 | 04:47 PM பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டப் பகுதியொன்றில் நாய்கள் கூட்டமாக சிறுத்தைக் குட்டியொன்றைத் துரத்திய வேளையில், அந்த சிறுத்தைக் குட்டி பயத்தில் அருகில் இருந்த மரத்தில் ஏறிய காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (3) சிறுத்தையின் செயலை நேரில் பார்த்த தோட்டத் தொழிலாளி தெரிவிக்கையில், சிறுத்தையொன்றும் அதன் குட்டியும் அப்பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை பிடிப்பதற்காக, தேயிலைத் தோட்டத்துக்குள் நுழைந்தன. அப்போது அந்த சிறுத்தை, நாய் ஒன்றை வேட்டையாட முயன்றுள்ளது. அவ்வேளை அருகிலுள்ள பல நாய்கள் ஒன்றுகூடி சிறுத்தையையும் அதன் குட்டியையும் துரத்தியுள்ளன. துரத்தி வரும் நாய்களிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள் சிறுத்…

  23. நாய்களுடன் அரிசி மூடைகளை கொண்டு வந்த சாரதி கைது! பலாங்கொடை: இரண்டு நாய்களுடன் அரிசி மூடைகளை கொண்டு வந்த சாரதி, பொது பாதுகாப்பு பரிசோதகர்களின் உதவியுடன் கைது செய்யப்பட்டார். இந்த மூடைகள் பலாங்கொடை நகரின் கடைகளுக்கு விநியோகிக்க பணி மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்தது. சம்பவம், பலாங்கொடை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு கடையின் அருகே நடைபெற்றது. அங்கு, லொறியில் அரிசி மூட்டைகளை இறக்கும் பொழுதில், நாய்கள் மூட்டைகளுக்கு இடையில் இருந்ததை கண்டெடுத்த ஒரு நகரவாசி, அதை கைத்தொலைபேசியில் பதிவு செய்து பொது பாதுகாப்பு பரிசோதகர்களுக்கு அனுப்பினார். அதன்பேரில், அதிகாரிகள் லொறியை கைப்பற்றி மேலதிக விசாரணைகள் மேற்கொண்டனர். அந்த லொறியில் 21 இலட்சம் ரூபாவிற்கும் அதிக வில…

  24. நாய்களும் மனிதர்களும் முத்தமிட்டுக்கொள்ளும் காதலர் தினப் போட்டி அமெரிக்க ஒரேகன் மாநிலத்திலுள்ள போர்ட்லான்ட் நகரில் காதலர் தினத்தை முன்னிட்டு நாய்களும் அவற்றின் உரிமையாளர்களும் முத்தமிடும் போட்டி இடம்பெற்றது. அங்கு 9ஆவது வருடமாக இடம்பெற்ற இப்போட்டியில் பியயு என்ற 12 வயது நாய் வெற்றி பெற்றுள்ளது. இந்த நாய் தனது உரிமையாளரான லிண்டா வால்டனை 45.8 செக்கன்கள் தொடர்ந்து முத்தமிட்டுள்ளது. இதில் இரண்டாம் இடத்தைப் பெற்ற சன்னி என்ற நாயும் மூன்றாம் இடத்தைப் பெற்ற டஜன்கோ என்ற நாயும் முறையே 16.8, 11.7 செக்கன்கள் முத்தமிட்டுள்ளன. http://www.virakesari.lk/article/interesting.php?vid=80

  25. நாய்க் கடிக்கு இலக்கான சிறுவனும் பெண்ணும் பலி! நாய் கடிக்கு இலக்கான சிறுவன் (15-வயது) ஒருவனும் தாய் (39-வயது) ஒருவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – சங்கரத்தை, வட்டுக்கோட்டையை சேர்ந்த தவச்செல்வன் தர்சன் என்ற சிறுவன் சில வாரங்களுக்கு முன்னர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளான். எனினும் அது தொடர்பில் சிறுவன் தமது வீட்டில் தெரிவிக்கவோ தடுப்பூசி போடவோ இல்லை. இந்நிலையில் நேற்று (22) இரவு சிறுவன் பதட்டமாகவும் பயமாகவும் உள்ளது என்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளான். இதேவேளை மன்னார் – தா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.