Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நான் நாசா விண்கலம் லேண்டிங் ஓடுபாதை அருகில் இந்த படத்தை பார்த்தேன் . டிசைன் ஒரு patern தெரிகிறது. எந்த ஒரு இந்த புகைப்படத்தை எந்த விளக்கமும் உள்ளதா? உங்களுக்கு Google Earth சென்று தட்டச்சு செய்தால் இது இந்த இடத்தில் நீங்கள் பார்க்க முடியும் ஒருங்கிணைக்க கூறுகள் உள்ளன 37 25 ' 19.1 "E 122 05 ' 06 " டபிள்யு

    • 0 replies
    • 367 views
  2. வேலையிலிருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஊழியர் மண் அகழ்வு இயந்திரத்தின் மூலம் விமானத்தை சேதப்படுத்தினார் (வீடியோ இணைப்பு) 2016-04-27 13:13:23 வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர், விமானமொன்றை மண் அகழ்வு இயந்திரம் மூலம் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியொவொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 3 என்ஜின்கள் கொண்ட Yak - 40 - ரக விமானமொன்றை டிக்கர் இயந்திரத்தின் மூலம் மேற்படி நபர் பல தடவை தாக்கிய காட்சி இவ் வீடியோவில் பதிவாகியுள்ளது. இத் தாக்குதலினால் விமானத்தில் துளைகள் ஏற்பட்டுள்ளன. இவ் விமானம் ரஷ்யாவின் யூ.ரி. எயார் நிறுவனத்துக்குச…

  3. பத்து வயதில் 400 மொழிகளை கற்று உலக சாதனை படைத்த தமிழகத்தின் சாதனை மாணவன்!

    • 3 replies
    • 367 views
  4. வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு ரோபோ இருந்தால், பெண்களுக்கு அதைவிட சுதந்திரம் வேறு எதுவும் இல்லை. அப்படி ஒரு ரோபோவை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். துணிகளைக் கையால் அடித்துத் துவைத்து, காய வைத்து மடித்து வந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது, துணிகளை வாஷிங்மெஷினில் போட்டு எடுத்து உலர்த்துவது மட்டுமே வேலை. அதையும் செய்வதற்குப் போதிய நேரமின்றி இருக்கிறோம். இந்நிலையில், தற்போது புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 'வில்லோ கேரேஜ் பி.ஆர்.2' என்ற ரோபோ, வீட்டில் உள்ள அழுக்குத் துணிகளை, தானே தேடிக் கண்டுபிடித்துத் துவைப்பதோடு மட்டுமின்றி, அதை உலர வைத்து இஸ்திரி போட்டு மடித்து நமக்குத் தேவையான இடத்தில் வைத்து விடுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு, முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட…

  5. மோடியை கடவுளாக வணங்கும் பீகார் கிராம மக்கள் பாட்னா: ஆதரவோ எதிர்ப்போ... அது எதுவாக இருந்தாலும் சரி... அரசியல் அசுர வளர்ச்சியில் மோடியை ஒதுக்கி விட முடியாது. டீ கடையில் வேலை பார்த்த சாதாரண சிறுவன் இன்று பிரதமர் ஆகிவிட்டதை கண்டு நாடே வியந்தது. நம்மை ஆண்ட பல பிரதமர்களுக்கு நாம் பல பட்டப் பெயர்களை சொல்லி அன்பாக அழைத்திருக்கிறோம். ஆனால் மோடி இதிலும் சற்று வித்தியாசப்பட்டே நிற்கிறார். அதாவது எந்த அளவுக்கு என்றால், மனிதரில் இருந்து கடவுள் ஸ்தானத்துக்கே உயர்ந்துவிட்டார். ஆம்... மோடியை கடவுளாக வணங்குகிறார்களாம் ஒரு கிராம மக்கள் காந்திக்கு கோயில் லட்சக்கணக்கான சிலைகள் மகாத்மா காந்திக்கு இருந்தாலும், ஒரே ஒரு கோயில்கூட இதுவரை நாட்டில் இல்லை. அதனால் மகாத்மா கா…

  6. அமெரிக்காவின் மிசௌரியை சேர்ந்த பெண்மணி, மருத்துவர்கள் இறந்துவிட்டதாக கூறிய தனது மகளுடன் 49 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சேர்ந்தார். கடந்த 49 வருடங்களுக்கு முன் மிசௌரியில் உள்ள செயிண்ட் லூயிஸ் மருத்துவமனையில் செல்லா ஜாக்சன் பிரைஸ் என்ற பெண்மணி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு பிரைசுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் என்ன காரணத்தாலோ குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். வேறொரு குடும்பம் பிரைசின் பெண் குழந்தையை தத்தெடுத்து சென்று வளர்த்து வந்தது. சில வருடங்களுக்கு பின், தான் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட குழந்தை என்று தெரிந்து கொண்ட பிரைசின் பெண் மெலானி டயானே கில்மோரே, தனது தாயை தேடியவாறு இருந்தார். மெலானிக்கு திருமணமும் ஆகி 2 குழந்தைகளுக்கு தாயா…

    • 0 replies
    • 367 views
  7. வ‌ட‌க்கு கிழ‌க்கு த‌மிழ் ம‌க்க‌ளுக்கெதிராக‌ முன்னாள் அமைச்ச‌ர் மேர்வின் சில்வா இன‌வாத‌மாக‌ பேசும் நிலையை ஏற்ப‌டுத்திய‌வ‌ர்க‌ள் த‌மிழ் கூட்ட‌மைப்பின‌ரே என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி தலைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து, வ‌ட‌மாகாண‌த்தில் பௌத்த‌ ம‌த‌ஸ்த‌ல‌ங்க‌ளுக்கு சேத‌ம் ஏற்ப‌டுத்தினால் அங்குள்ளோரின் த‌லைக‌ளை க‌ள‌னிக்கு கொண்டு வ‌ருவேன் என‌ மேர்வின் கூறிய‌து மிக‌ க‌டுமையான‌ த‌விர்க்க‌ வேண்டிய‌ வார்த்தையாக‌ இருப்பினும் அவ‌ர‌து ச‌மூக‌ அக்க‌றை என்று பார்க்கும் போது இந்நிலைக்கு அவ‌ரை ஆக்கிய‌ த‌மிழ் அர‌சிய‌ல்வாதிக‌ளே பொறுப்பேற்க‌ வேண்டும். கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ நாச‌மாக்கிய‌ நாட்டை ஜ‌னாதி…

  8. பெங்களூருவில் பிரியாணி வாங்குவதற்காக 1.5 கி.மீ தொலைவுக்குக் காத்திருந்த மக்கள்: அதிகாலை 4.30 மணி முதல் கூட்டம் பிரியாணி வாங்க கடையின் முன் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி | படம்: ஏஎன்ஐ பெங்களூரு பெங்களூருவின் புறநகரான ஹோஸ்கோட் நகரில் பிரியாணி வாங்குவதற்காக மக்கள் அதிகாலை 4.30 மணி முதல் சாலையில் காத்திருந்தனர். இதனால் சாலையில் 1.5 கி.மீ தொலைவுக்கு மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பெங்களூருவிலிருந்து 25 கி.மீ. தொலைவில் இருப்பது ஹோஸ்கேட் நகரம். இங்குள்ள ஆனந்த் தம் கடையில் தயாரிக்கப்படும் பிரியாணி அப்பகுதி வட்டாரத்தில் மிகவும் சுவையானது என்பதால் பெரும் கூட்டம் கூடும். 22 ஆண்டுகள் பழமையான மிகவும்…

  9. டொரொண்ட்டோ மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக் கூட்டத்தில் பெண் நோயாளிகளிடம் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்ட மருத்துவர் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மருத்துவர் ஜார்ஜ் டூட்னாட்(வயது 64) மீது 21 குற்றவழக்குகள் பதிவாகியுள்ளன. இவர் கடந்த 2006 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் 25 வயது முதல் 75 வயது வரையிலான பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக வழக்குப் பதிவாகியுள்ளது. இவர் தான் மயக்கமருந்து கொடுக்க வேண்டிய பெண் நோயாளிகளுக்கு மருந்து கொடுத்த பின்பு அவர்கள் அரைகுறையாக மயங்கியிருந்த வேளையில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது அவர்களிடம் தவறாக நடந்திருக்கிறார். 2010ம் ஆண்டில், ஒரு பெண் நோயாளிக்கு கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை நடந்தபோது அவர் இந்த மருத்துவர் தனக்கு முத்…

  10. திட்டமிட்டே பூனையை இந்தியாவுக்கு அனுப்பியது அம்பலம்..!! மீண்டும் சீனாவுக்கே பூனையை திருப்பி அனுப்ப திட்டம்.! சீனாவிலிருந்து வந்த கப்பலில் திட்டமிட்டே பூனையை கூண்டுக்குள் அடைத்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது . இந்நிலையில் பூனையை மீண்டும் சீனாவுக்கு அனுப்பும் முயற்சியில் துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது . இதில் கடந்த மாதம் சீனாவில் இருந்து வந்த கப்பலில் பூனை ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டு வந்திருந்தது தெரியவந்தது . சென்னை துறைமுகத்தில் கப்பலில் உள்ள சரக்குகளை இறக்கும்போது பூனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . இதனால் அதிர்ச்சி அடைந்த துறைமுக அதிகாரிகள் உட…

  11. சுமார் 3.8 மில்லியன் வருடங்களுக்கு முந்திய குரங்கின மனிதர் ஒருவரது மண்டை ஓட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எத்தியோப்பியாவில் இந்த மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆய்வுக்கு உட்படுத்தி, மனித இனப்பரம்பல் குறித்த புதிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குரங்குகளில் இருந்து மனிதர்கள் கூர்ப்பு அடைந்ததாக நம்பப்படுகிறது. இந்த கோட்பாட்டில் இதுவரையில் நம்பப்பட்டுவந்த விடயங்களில் மாற்றி அமைக்கக்கூடிய தகவல்கள், இந்த மண்டை ஓட்டின் ஆய்வின் மூலம் வெளிப்படலாம் என்றும் நம்பப்படுகிறது. http://www.hirunews.lk/tamil/223198/குரங்கின-மனிதர்-ஒருவரது-மண்டை-ஓடு-கண்டுப்பிடிப்பு

    • 0 replies
    • 366 views
  12. அம்பாறை பொத்துவில்லில் இருந்து பதின்ம வயது சிறுமியை அழைத்து வந்து முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் குடும்பம் நடத்தி வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞன் ஒருவன் தன் காதலியான 14வயது சிறுமியை அழைத்துக்கொண்டு முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிகிராம பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளார். குறித்த சிறுமியினை காணவில்லை என பெற்றோர் அம்பாறை பொத்துவில் பகுதி பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞனையும் சிறுமியையும் கைது செய்துள்ளனர். முல்லைத்தீவில் 14வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியவர் கைது! | Virakesari.lk

  13. சூனியம் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி பணமோசடி! யாழ் செல்வந்தர்களே உஷார்! யாழில். செல்வந்தர்களை இலக்கு வைத்து நபரொருவர் பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, நபரொருவர் யாழில் உள்ள செல்வந்தர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ”உங்களுக்கு செய்வினை வைக்கப்பட்டுள்ளது. உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள் உங்களுக்கு செய்வினை செய்து சூனியம் வைத்துள்ளார்கள். அந்த செய்வினையை உடனே அகற்ற வேண்டும். இதனை எனது ஞான திருஷ்டியால் அறிந்து கொண்டேன். நான் ஒரு மாந்திரீகவாதி என்னால் மட்டுமே அதனை அகற்ற முடியும்” எனக் கூறி அவர்களுக்கு நம்பிக்கை வரவைத்து பணமோசடியில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. …

    • 4 replies
    • 366 views
  14. முக கவசத்தால் இப்படி ஒரு தொல்லையா? காது கேளாதோர் அனுபவிக்கும் வேதனை லண்டன், இங்கிலாந்தில் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், வங்கிகள், வீட்டுவசதி சங்கங்கள், தபால் அலுவலகங்கள் போன்றவற்றில் எல்லாம் முக கவசம் அணிந்து செல்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மீறினால் 50 பவுண்ட் முதல் 100 பவுண்ட் வரை (சுமார் ரூ.4,900 முதல் 9,800 வரை) அபராதம் விதிக்கப்படும். ஆனால் காது கேளாதவர்களுக்கு முக கவசம் தொல்லையாக மாறி இருக்கிறது. ஏனென்றால் இவர்களது முகபாவனைகளும், உதடு அசைவும் முக கவசத்தால் மறைக்கப்பட்டு விடுகின்றன. இதனால் அந்த நாட்டில் காது கேளாத 1 கோடியே 20 லட்சம் பேர் வெளியே தொடர்பு கொள்வது சிரமமாகி விட்டதால், வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கி…

  15. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரேசிலில் உள்ள கொபகபானா கடற்கரைக்கு பிரிட்டனைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவாக சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் நண்பர்களுடன் மணலில் குழி தோண்டிய பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணி ஜென்சன் ஸ்டர்ஜென் தான் தோண்டிய குழியிலே சிக்கிக் கொண்டார். சுமார் மூன்று மணி நேரம் சிக்கியிருந்தவருக்கு வழிப்போக்கர்கள் மற்றும் மீட்பு வீரர்கள் இணைந்து அவருக்கு பியர் கொடுத்தனர். சம்பவ இடத்தில் இருந்தவர்கள், அவர் குழிக்குள் குதித்தபோது மணல் சரிந்ததாகத் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக அலைகள் வரும் முன்பே அவர் மீட்கப்பட்டார். https://www.bbc.com/tamil/articles/c6288z85el4o

  16. சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தல் இராணுவ வசமாகிறது சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அரச தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலின்போது, இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் வருடம் முதல் இந்த நடவடிக்கை இராணுவத்தினரிடம் ஒப்படைப்படவுள்ளது. வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனத்திடம் வழங்கியுள்ளதால் பெரும் தொகையை செலுத்தப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …

  17. காலி சிறையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்! காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் (12) காலி மாவட்ட செயலகத்தில் தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது. கையடக்கத் தொலைபேசிகள் கடத்தலுக்கு சிறைச்சாலை அமைந்திருந்த இடம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக காலி சிறைச்சாலையின் பிரதி பிரதான சிறைச்சாலை அதிகாரி தனுஷ்க புஸ்பகுமார தெரிவித்துள்ளார். மேலும் கூட்டத்தில் பேசிய காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சேரம், சிறைச்சாலை மதில்…

  18. லண்டனில் வசித்து வரும் மகன்கள் இலங்கையில் தாய்க்கு ஐம்பொன்சிலை அமைக்க ஏற்பாடு செய்துள்ளனர். இலங்கை யாழ்ப்பாணத்தில் உரும்புராய் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி, ராசதிரவியம் தமபதியருக்கு 4 மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். கடந்த 1968ல் இலங்கையில் கலவரம் வெடித்த போது ராசதிரவியம், தன் குழந்தைகளை இங்கிலாந்து அல்லது கனடாவுக்கு சென்றுவிடுங்கள் எனக்கூறி தன் கணவரோடு அனுப்பி வைத்துள்ளார். அவர்கள் இங்கிலாந்து சென்று படித்து, வேலைக்கு சேர்ந்து வாழ்க்கை சீரான பின் தங்கள் தாயை அழைத்த போதும், அவர் தான் பிறந்த மண்ணை விட்டு வர மாட்டேன் என கூறி மறுத்து விட்டார். பின்னர் 1986ல் விடுதலைப்புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் போர் மூண்ட சமயத்தில் ராசதிரவியத்தை மகன்கள் வற்…

  19. யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த இருவர் கைது! யாழில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரிய வருவதாவது” பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை நடவடிக்கைக்காக நேற்றைய தினம் இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ளனர். அதன்போது உற்பத்தி நிலையம் உரிய அனுமதிகள் பெறாது இயங்கி வந்ததமையும், டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழலை கொண்டிருந்தமையும் சுகாதார பரிசோதகர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய போது சுகாதார பரிசோதகர்களுக்கும் அங்கு பணியாற்றிவரும் ஊழியர்களுக்கும் இடையே வாய…

  20. அமெரிக்காவில் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சாக்ரமெண்டோவுக்கு செல்ல தயாராக நின்ற ஒரு விமானத்தில் ஜன்னல் வழியாக ‘பைலட்’ ஏறிக்குதித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தை எடுத்த மேக்ஸ் ரெக்ஸ்ரோட் என்ற பயணி, இது ஜோக் இல்லை, பயணி ஒருவர் எதிர்பாராதவிதமாக விமானத்தின் கதவை அடைத்த போது அது உள்பக்கமாக லொக் ஆகிவிட்டது. எனவே வேறு வழியின்றி ‘பைலட்’ ஜன்னல் வழியாக விமானி அறைக்குள் ஏறிக் குதித்தார் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வேகமாக பரவி வரும் நிலையில், பைலட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. https://thinakkural.lk/article/258424

  21. களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி திடீர் மரணம் November 1, 2020 காரைதீவு நிருபர் சகா களுவாஞ்சிக்குடி மற்றும் வெல்லாவெளி பிரதேச சுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் சீனித்தம்பி கிருஸ்ணகுமார் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். கல்முனை பாண்டிருப்பு மண்ணின் சொத்துக்களில் ஒன்றாக இருந்த இவர் 3 பிள்ளைகளின் தந்தையாவார். மகனொருவர் மருத்துவபீட மாணவராவார். கல்முனைப் பிராந்திய தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்த டாக்டர் கிருஸ்ணகுமார் தனது 60வது வயதில் காலமானார். நேற்றிரவு கூட களுவாஞ்சிக்குடிப் பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவரைக் கண்காணித்துவிட்டே வந்திருக்கிறார். பட்டிப்பளை வெல்லாவெளி சுகதார வைத்திய அதிகாரியாகவிருந…

    • 2 replies
    • 365 views
  22. ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்ட கழுகுகளை பேஸ்புக் மூலம் விற்பனை செய்த நபரைப் போலீசார் கைது செய்துள்ளனர். இந்தோனேஷியாவில் கழுகுகள் பாதுகாக்கப்பட்ட இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை வேட்டையாடுவதோ அல்லது விற்பனை செய்வதோ சட்டப்படி குற்றம் ஆகும். இந்நிலையில் அந்நாட்டின் சுரபயா நகரில், சட்டவிரோதமாக ஒருவர் பேஸ்புக் மூலம் கழுகுகளை விற்று வருவதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர் போல் நடித்து அந்நபரின் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது அங்கு கழுகுகள் விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நபரைப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து வெள்ளை நிற கடல் கழுகு உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சார்ந்த …

    • 2 replies
    • 365 views
  23. க்ளைமாக்சில் வில்லன் துப்பாக்கியால் சுடும்போது கழுத்தில் போட்டிருக்கும் டாலரோ, பாக்கெட்டில் வைத்திருக்கும் பொருளோ ஹீரோவின் உயிரைக் காப்பாற்றுவதை பல தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம். ஆனா இப்போ ஹீரோக்கள் எல்லாம் காஸ்ட்லியான ஐபோன் தானே பாக்கெட்ல வச்சிருக்காங்க, அதனால் எத்தனை ஐபோன் பாக்கெட்டில் இருந்தால் துப்பாக்கி தோட்டவிலிருந்து தப்பிக்கலாம் என்பதைக் கண்டுபிடிப்பதற்காகத்தான் இந்த வீடியோ…. https://www.youtube.com/watch?v=DbVHe5A6rJs . - See more at: http://www.canadamirror.com/canada/45568.html#sthash.wA0fuakK.dpuf

    • 0 replies
    • 364 views
  24. கனேடிய மருத்துவர்கள், 20 பில்லியன் டொலரிலும் அதிகமான பணத்தை ஆண்டு தோறும் வருமானமாக பெறுவதாக ஆய்வொன்று காட்டுகிறது. ஆனால், சம்பளங்களின் அதிகரிப்பு வேகம் குறைந்துள்ளது. 2010 – 2011 ஆம் நிதியாண்டில் மருத்துவர்களின் மொத்த சம்பளம் ஆறு சதவீதத்தால் அதிகரித்தது. அதற்கு முந்திய ஆண்டில் அதிகரிப்பு எட்டு சதவீதமாகவும், அதற்கும் முந்திய ஆண்டில் அதிகரிப்பு பத்துச் சதவீதமாகவும் இருந்தது. 2010-11 ஆம் ஆண்டில் மருத்துவர் ஒருவர் சராசரியாக மூன்று லட்சத்து ஏழாயிரம் டொலரை பெற்றார். ஒன்றாரியோவில் அது 340,000 டொலராக இருந்தது. பிறின்ஸ் எட்வேர்ட் ஐலண்டில் சராசரி சம்பளம் 236,000 டொலராக இருந்தது. http://www.canadamirror.com/canada/5328.html

  25. [ ஈழத்தமிழ் மக்கள் இறையாண்மையுடன் சுதந்திரமாக அவர்களுடைய பூர்வீக பூமியாகிய வடக்குகிழக்கில் வாழ்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு ஜனநாயக அமைப்பாகவும், பிரித்தானிய அரசின் சட்ட வரையறைக்கு உட்பட்டு செயற்படும் அமைப்பாகவும், பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த 2006 இல் இருந்து செயற்பட்டு வருகின்றது. இதில் குறிப்பாக 2008, 2009 காலப்பகுதியில் மக்களை அணிதிரட்டி மேற்கொண்ட எழுச்சிமிக்க ஊர்வலத்தில், இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதும், தொடர்ச்சியாக மக்கள் போராட்டங்களை பிரித்தானிய தமிழர் பேரவை. மேற்கொண்டுவருவதும் யாவரும் அறிந்ததே. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதியில் முள்வேலி முகாமிற்க்குள் அடைத்துவைத்த மக்களை விடுத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.