Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அமெரிக்காவில் ஏ.டி.எம். மூலம் தங்க கட்டிகள் விற்பனை துவங்கியுள்ளது. தற்போது ஏ.டி.எம். மூலம் ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டு வருகிறது. அதே முறையில் தங்க கட்டிகளும் விற்பனை செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் அபுதாபியில் உள்ள எமிரேட் ஓட்டலில் தங்கம் விற்பனை செய்யும் ஏ.எடி.எம். மிசினை நிறுவியது. கடந்த மே மாதம் நிறுவப்பட்ட இந்த மிசின் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து ஜெர்மனி, ஸ்பெயின் மற்றும் இத்தாலியிலும் இது தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள போகா ராடன் நகரில் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நாடுகளிலும் பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஏ.டி.எம். இயந்…

  2. வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதிகளை வாடகை வீட்டின் உரிமையாளர் அச்சுறுத்துவதாக கூறி, தம்பதியினர் தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்வதற்காகச் சென்றுள்ளனர். வீட்டு உரிமையாளர் தங்களை துன்புறுத்துவதாகவும் தங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் படியாக நடந்துகொள்வதாகவும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்வதற்காக 26 மற்றும் 20 வயதான இளம் தம்பதியினர் தன்கொடுவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளனர். இந்த முறைபாட்டைப் பதிவு செய்துகொண்டிருக்கும் போது, குறித்த ஆணின் கையடக்கத் தொலைபேசிக்கு அடிக்கடி பல அழைப்புகள் வந்துள்ளன. இதனை அவதானித்த பொலிஸ் உத்தியோகத்தர், அந்த அழைப்புக்களுக்கு பதிலளிக்குமாற…

    • 1 reply
    • 600 views
  3. அதிர்ஷ்ட குலுக்கலில் பரிசு விழுந்ததை அடுத்து ஒரே நாளில் லட்சாதிபதியானார் துபையில் வசிக்கும் 5 வயது இந்தியச் சிறுவன் ஒருவன். இப்ராஹிம் ஃபகிமுதீன் ஷேக் என்ற அந்தச் சிறுவனுக்கு துபையின் தேசிய கடன் பத்திர கழகத்தின் சார்பில் பரிசுச் சீட்டுக்கான பிப்ரவரி மாத குலுக்கலில் இந்தப் பரிசு விழுந்துள்ளது. இவரது குடும்பம் இந்தியாவை பூர்வீகமாக கொண்டது. இவரது பெயரில் தந்தை ஷேக் கடன் பத்திரக் கழகத்தில் பத்திரங்களை வாங்கியுள்ளார். அவ்வாறு வாங்கியவர்களில் குலுக்கல் முறையில் மாதா மாதம் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பெரும் தொகை பரிசாக அளிக்கப்படும். பிப்ரவரி மாத குலுக்கலில் ஃபகிமுதீனுக்கு பரிசு விழுந்துள்ள தகவல் அவரது தந்தைக்கு அந்த நிறுவனத்தால் தொலைபேசியில் சொல்லப்பட்…

  4. காதலன் இறந்ததாக கிடைத்த தவறான தகவலால், திருமணத்தை வெறுத்து கன்னியாஸ்திரியாக மாற முடிவெடுத்த காதலி, 10 ஆண்டுகளுக்கு பின்னர் காதலனை கரம் பிடித்துள்ளார். உண்மை காதலுக்கு அழிவில்லை என்பதை நிரூபிக்கும் இந்த நெகிழ்ச்சி சம்பவம் தேனி மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியை சேர்ந்த மரியசூசை மகன் ஜான்சன் (34). ஐடிஐ படித்தவர். டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2004ல் சிவகங்கை மாவட்டம் சாலைகிராமத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். பக்கத்து வீட்டில் வசித்து வந்த லீமா ரோஸ் (26) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. லீமாரோஸ் குடும்பத்தினர் இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சாலைக…

  5. Published By: DIGITAL DESK 3 07 AUG, 2023 | 03:17 PM அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 20 நிமிடங்களில் 2 லீற்றர் நீர் அருந்தியதால் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் மக்களை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 45 டிகிரி செல்சியசுக்கும் அதிகமான வெப்பம் இருப்பதால் மக்களுக்கு குளிர்பானங்கள், வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள ஈரமானத் துண்டு ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை அதிகரிப்பால் வீடுகள் இல்லாத மக்களே பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர். வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து நிழல் உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலர் குளிர்ச்சியான குடிநீரை அடி…

  6. பாக். வீரரின் பிய்ந்த ஷூவை ஒட்டும் இந்திய வீரர்:... ஃபெவிகுவிக்கின் உலகக் கோப்பை ஸ்பெஷல் விளம்பரம்! டெல்லி: வாகா எல்லையில் பாகிஸ்தான் வீரரின் பிய்ந்த ஷூவை இந்திய வீரர் ஃபெவிகுவிக் போட்டு ஒட்டுவது போன்ற டிவி விளம்பரம் பிரபலமாகியுள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று நடந்து வருகிறது. இந்தியா வெற்றி பெற ரசிகர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில் இந்தப் போட்டியை மனதில் வைத்து ஃபெவிகுவிக் பிசின் விளம்பரம் ஒன்றை களம் இறக்கி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வாகா எல்லையில் மாலை நேரம் நடக்கும் கொடியிறக்க நிகழ்ச்சியில் இந்திய வீரரும், பாகிஸ்தான் வீரரும் நடந்து வந்து ஒருவர் முகம் அருகே மற்றொருவர் கால் வரும் அளவுக்கு …

  7. படத்தின் காப்புரிமை AFP கடற்கரை மணலுக்குள் புதைந்து கிடந்த முதல் உலகப்போரில் பயன்படுத்தபட்ட நீர்மூழ்கிக்கப்பல் ஒன்றின் சிதிலமடைந்த எச்சம் மீண்டும் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது. இக்கப்பல் ஜெர்மனிக்கு சொந்தமானது. பிரான்சில் உள்ள வீசா கடற்கரை பகுதி அருகே UC-61 என்று பெயரிடப்பட்ட இந்த நீர்மூழ்கிக்கப்பல், 1917ஆம் ஆண்டு ஜூலை மாதம், தரை தட்டியதால் ஈர மணலில் சிக்கிக்கொண்டது. அதை நகர்த்த முடியாமல் போனதால், அந்தக் கப்பலின் குழுவினர் அதை அங்கேயே விட்டுச்சென்றனர். …

  8. குறி சொன்னபோது கீழே விழுந்து பூசாரி பலி! கோவையில் உள்ள கோயிலொன்றில் பக்தர்களுக்குக் குறி சொல்லிக் கொண்டிருந்தபோது, 20 அடி உயர மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்த பூசாரி உயிரிழந்தார். கோவை பேரூரை அடுத்த சுண்டக்காமுத்தூர் பகுதியில் உள்ளது ஸ்ரீ அய்யாசாமி கோயில். மிகவும் பழமையான இந்த கோயிலில் அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு பூஜைகள் நடைபெறும். இந்த கோயிலில் அய்யாசாமி என்பவர் பூசாரியாகப் பணியாற்றி வந்தார். இவர் சிவராத்திரியன்று நள்ளிரவில் மைதானத்தில் அமைக்கப்பட்ட 20 அடி உயர மரத்தின் மீது அமர்ந்து கொண்டு குறி சொல்வார். கடந்த 4ஆம் தேதியன்று அது போன்று பூஜை செய்யப்பட்ட மரத்தின் மீது …

  9. ஒட்டாவா: கனடாவில் மின்னல் தாக்கியும் உயிருடன் தப்பியவருக்கு லாட்டரியில் கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் பரிசு விழுந்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கனடா நாட்டின் நோவா ஸ்காட்டியா மாகாணத்தைச் சேர்ந்த பீட்டர் மெக்கேத்தி அதிர்ஷ்டக்கார மனிதர் என அறியப்படுகிறார். பீட்டர் மெக்கேத்தி நோவா ஸ்காட்டியாவில் கடை ஒன்றினை பல காலமாக நடத்தி வருகிறார்.சமீபத்தில் பீட்டர் தன்னுடைய கடையில் பணிபுரிபவருடன் சேர்ந்து மூன்று டாலருக்கு வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் அவருக்கு சுமார் நான்கு கோடியே தொண்ணூறு லட்ச ரூபாய் பரிசு விழுந்துள்ளது.இது மட்டுமின்றி தன்னுடைய கடையிலேயே லாட்டரி டிக்கெட் வாங்கியதால் அதற்கு தனியாக பத்தாயிரம் டாலர்கள் பரிசு கிடைத்துள்ளது.மேற்படி பீட்டரை 14 வயதில் மின்னல் தாக்கி…

    • 0 replies
    • 286 views
  10. புற்று நோயால் பாதிக்கப்பட்ட நாக பாம்புக்கு அறுவைச் சிகிச்சை January 18, 2012 கோவை மாநகராட்சி உயிரியல் பூங்கா நேரு விளையாட்டு அரங்கம் அருகில் அமைத்துள்ளது, இங்கு மான், மயில், குரங்கு பாம்பு மற்றும் பல்வேறுவிதமான உயிரினங்கள் கூண்டுக்ளில் அடைக்கப்பட்டுள்ளது.இதில் நாகபாம்பு, கண்ணாடி விரியன், கொம்பேறி மூக்கன், மலைப்பாம்புகள் என பல்வேறு வகையான பாம்புகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில், ஐந்து வயது உடைய ஓரு நாக பாம்புக்கு கடந்த ஒரு வருடமாக வயிற்றில் ஒரு “கட்டி” ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த “கட்டி” வளர்ந்து கொண்டே வந்தது, இதனால் அந்த நாக பாம்புக்கு உணவு உண்பதிலும், சுவாசிப்பதிலும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதை கவனித்த உயிரியல் பூங்கா அதிகாரிகள் கால்நடை மருத்துவர்களிடம் க…

  11. ."எங்கிட்டே மோதாதே' கோல்கட்டா :கோல்கட்டாவில் உள்ள விலங்கியல் பூங்காவில் கற்களை வீசி தொல்லை கொடுத்த பார்வையாளர் களுக்கு, அவர்கள் பாணியிலேயே சிம்பன்சி குரங்கு பதிலடி கொடுத்தது. தொடர்ந்து அரைமணி நேரம் கற்களை வீசி வலுவை சிம்பன்சி காட்டியதும், பார்வையாளர்கள் தப்பி ஓடினர். கோல்கட்டாவில் அலிப்பூர் விலங்கியல் பூங்கா உள்ளது. இங்கு இரண்டு சிம்பன்சி குரங்குகள் வளர்க்கப்படுகின்றன. பல அடி உயர தடுப்பு சுவர் உள்ள பகுதிக்குள் சிம்பன்சிகள் செய்யும் சேஷ்டைகளை பார்வையாளர்கள் கண்டு களித்து வந்தனர். சமீபத்தில், பார்வையாளர் ஒருவர் சிம்பன்சி மீது கல்லை வீசினார்.கோபம் அடைந்த இரண்டு சிம்பன்சிகளும், தடுப்பு சுவரை தாண்டி வெளியே வந்தன. பித்து பிடித்தது போல இங்கும் அங்கும் ஓ…

    • 1 reply
    • 1.2k views
  12. (செய்தி தொகுப்பு – இளந்தி 26/02/2012) வடகிழக்கு மக்களின் நல்வாழ்வுக்காக மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வதாகக் கூறும் இலங்கை அரசு மக்களின் நிலத்தை வகை தொகையாய் அபகரிக்கிறது. இதற்கு முடிவே கிடையாதா என்று மக்கள் அங்கலாய்க்கின்றனர். கடற்படை கரையோர மக்களின் நிலங்களைப் பறிக்கும் போது தரைப்படை கிராமம், நகரம் என்ற வேறு பாடின்றி பாரிய நிலப்பரப்புக்களை தனக்காக எடுத்துக் கொள்கிறது. அரசு கூறும் இன நல்லிணக்கம் காற்றில் பறக்க விடப்படுகிறது. காங்கேசன்துறை, கீரிமலை, மாதகல், ஒட்டகப்புலம், துணுக்காய் ஆகிய பகுதிக் காணிகள் அரசுடமையாக அறிவிக்கப்பட்டுள்ளன. போர்க் காலத்தில் பல காணி நிலங்கள் உயர்பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயருடன் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டன. ஆனால் போர் முடிந்து இயல்பு ந…

  13. ஹட்டன் கல்வி வலய பாடசாலையொன்றின் அதிபர் தனது பாடசாலையில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை தனிமையில் சந்திப்பதற்கு வருமாறு கடிதம் எழுதிய விடயம் அம்பலமானதால் அப்பாடசாலை அதிபருக்கு எதிராக பெற்றோர்களும் பிரதேச மக்களும் நேற்று வெள்ளிக்கிழமை (25) பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவியை பாலியல் ரீதியாக அதிபர் சீண்டலுக்கு உட்படுத்தியிருக்கலாம் என்றும் இதன்போது சந்தேகம் எழுப்பியுள்ளனர். அந்த மாணவியும் இதற்கு முன்னர் அதிபர் தன்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் அதே அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதமும் தற்போது வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று அட்டன் வலயக…

  14. ஆறு வயதுச் சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல்! சந்தேக நபர் கனடாவில் கைது!! April 20th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. ஆறு வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்கிய குற்றசாட்டின் அடிப்படையில் சந்தேக நபரை கனடா ஸ்காப்ரோ நகரில் வைத்து கடந்த திங்கட்கிழமை பொலிசார் கைது செய்தனர். மேற்படி நபர் 29 வயதுடைய தயாரூபன் மயில்வாகனம் என்பவர் ஆவார். சிறுமி கெலமோர்கன் சிறுவர் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் தான் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல்களிற்கு உள்ளாக்கியிருப்பதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலமாக தெரியவந்துள்ளது. சிறுமியின் சகோதரி சந்தேக நபரை கண்டுபிடிப்பதற்கு தேவையான தகவல்களை அதாவது சந்தேக நபரின் புகைப்படத்தை வழங்கியுள்ளதாக கனடா ரொரன்…

  15. பயிர்செய்கைகளை நாசம் செய்யும் குரங்குகளை பிடித்து கொடுத்தால் ஒரு குரங்குக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை வழங்கப்படும் என்று அறிவியுங்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட எம்.பி சுஜித் சஞ்சய பெரேரா அரசுக்கு ஆலோசனை வழங்கினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) இடம்பெற்ற 2025 வரவு- செலவுத் திட்டத்தின் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலைஆலோசனை வழங்கிய அவர் மேலும் பேசுகையில், காட்டு விலங்குகளினால் பயிர்ச்செய்கைகளுக்கு ஏற்படும் பாதிப்பு நாளாந்தம் தீவிரமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். குரங்குகள் வருடாந்தம் 90 மில்லியன் அளவிலான தேங்காய்களை நாசம் செய்வதாக விவசாயத்துறை அமைச்சு குறிப…

  16. உக்ரேனுக்கு நன்கொடை அளித்த குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை அனுபவித்த பெண் விடுதலை. உக்ரேன் தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை அளித்தமைக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வந்த பெண் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க-ரஷ்ய கைதிகள் பரிமாற்றத்தில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பெண் கடந்த வருடம் கைது செய்யப்பட்டுள்ளார். யுக்ரேனுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு நன்கொடை வழங்கியமைக்காக இவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை அபுதாபியில் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது. இதன்போது குறித்த பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெ…

  17. ஆசிய நாடான ஜப்பானில், புத்தாண்டு தினத்தன்று நடந்த மீன் ஏலத்தில், 276 கிலோ எடையுள்ள, டுனா வகை மீனை, 13 கோடி ரூபாய்க்கு, ஓட்டல் நடத்தி வரும், 'டுனா கிங்' என்றழைக்கப்படும், கியோஷி கிமுரா ஏலம் எடுத்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டுனா மீன் ஏலத்தில், அதிக விலை கொடுத்து ஏலம் எடுத்து பிரபலமானவர் இவர். https://www.dinamalar.com/news_detail.asp?id=2451177

    • 0 replies
    • 376 views
  18. ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினம் வந்தாலும், ஆடி அமாவாசை என்பது மிகவும் முக்கியத்துவம் பெற்றதாகும். ஆடி அமாவாசையன்று ஆற்றங்கரைகளில் அமர்ந்து முன்னோர்கள், மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்ப கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம். இன்று ஆடி அமாவாசை என்பதால், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நதிக் கரைகளில் லட்சக்கணக்கானோர் அதிகாலை முதற்கொண்டே குழுமி, புனித நீராடியதுடன் தர்ப்பணமும் கொடுத்தனர். ஈரோடு மாவட்டத்தில் பவானி, காவிரி, அமிர்தநதி ஆகிய ஆறுகள் கூடும் முக்கூடல் சங்கமமாக உள்ள பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் கொடுத்தனர். கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலில் அவர்கள் சாமிதரிசனம் செய்தனர். இன்று மாலை சூரிய கிரகணம் ஏற்படுவதால் க…

  19. பெங்களூரு: திருமணத்திற்கு நாள் குறித்த நிலையில், விபத்தில் சிக்கி படுகாயம் நர்ஸிங் மாணவி ஒருவர், தனது விருப்பத்தின்படி திருமணம் குறிக்கப்பட்ட அதே நேரத்தில் தனது காதலனை ஆம்புலன்ஸில் படுத்தபடுக்கையாக திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் நர்ஸிங் டிப்ளமோ படித்து வந்தவர் நேத்ராவதி. இவர், குருசாமி என்ற இளைஞரை காதலித்து வந்தார். சித்ரதுர்காவில் உள்ள முருகராஜேந்திர ப்ரிஹான் என்ற மடத்தில் ஒரே நேரத்தில் பல ஜோடிகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்டு தாங்களும் திருமணம் செய்ய நேத்ராவதியும், குருசாமியும் தங்களது பெயரை பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில் காதல் ஜோடியான நேத்ராவதியும், …

  20. பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா? ஜப்பானிய பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி 2026இல் இடம்பெறுமென கணித்துள்ள விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகயில், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து உலகளாவிய சக்தியாக உயரும் ஒரு புதிய தலைவர் உருவாகுவார் என பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த கணிப்பின் படி, அந்த நபர், உலகையே ஆளும் சக்தி கொண்டவராகவும் “உலகின் இறைவன்” அல்லது உலக விவகாரங்களின் மாஸ்டர் என்று கூறக்கூடிய அளவு சக்தி வாய்ந்தவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பல நிபுணர்கள், அது ரஷ்யா விளாடிமிர் புடினாக இருக்க கூடும் என தெரிவித்து வருகின்றனர். அவரது கணிப்புகளின் சில விளக்கங்கள், 2…

  21. நடிகையை பார்க்க, இந்தியாவிற்கு அழைத்து செல்லவில்லை: யாழில் இளம் யுவதி தற்கொலை! தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற மன விரக்தியில் இளம் யுவதி ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்கு தானே தீ வைத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் கொட்டைக்காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய சூரியகுமார் தேனுஜா என்ற இளம் யுவதியே உயிரிழந்துள்ளார். மல்லாகம் பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார். எனினும் பெற்றோர்கள் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக இப்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்த்துள்ளனர். இந்நி…

  22. அருகிவரும் உயிரினங்களை... பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – பிரதமர் மஹிந்த சட்டவிரோதமான முறையில் மிருகங்கள் வேட்டையாடப்படுவது தொடர்பாக உடனடியாக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பது அரசாங்கதின் பொறுப்பு என்றும் ஆகவே அதற்கான நடவடிக்கைகளையும் செயற்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். நல்லத்தண்ணி பிரதேசத்தில் நேற்று முன்தினம் அரிய வகையிலான 7 வயது நிரம்பத்தக்க புலி மிருக பொறிக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளது. இவ்விடம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுத்தை, புலி கொல்லப்படும் சம்பவம் தொடர்ச்சியாக இடம்ப…

  23. 5000 பெண்களை வைத்து விபசாரம்.. கோடிக்கணக்கில் சொத்து குவித்த கணவன்-மனைவி கைது.டெல்லி: விபசார தொழிலில் கோடிக்கணக்கில் சொத்து குவித்த கணவன்-மனைவி ஆகிய இருவரையும் டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் ஜி.பி.சாலையில் சிவப்பு விளக்கு பகுதி உள்ளது. அங்கு நடைபெறும் விபசார தொழிலை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கண்காணித்து வந்தனர். அதில், 80 சதவீத தொழிலை அபாக் உசைன்-சாய்ரா பேகம் என்ற தம்பதி, ரவுடிகள் துணையுடன், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து நடத்தி வருவது தெரிய வந்தது.நேபாளம், மேற்கு வங்காளம், ஒரிசா, கர்நாடகா, மற்றும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்து இளம் பெண்களை கடத்தி வந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலை சேர்ந்த கணவன் - மனைவி அபாக் குசைன் மற்றும் சாய்ரா பேகம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.