செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
ஜெர்மனியிலிருந்து தாய்லாந்துக்குச் சென்ற தம்பதி இடையே நடுவானில் சண்டை ஏற்பட்டதால், விமானம் அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கணவன், மனைவி இடையே எப்போது சண்டை வரும், எப்போது ஒன்று சேருவார்கள் என்று கணிக்கவே முடியாது. திடீரெனச் சண்டைபோடுவார்கள், அடுத்த நிமிடமே சேர்ந்துகொள்வார்கள். அந்த வகையில், ஜெர்மனியின் ம்யூனிச் நகரிலிருந்து தாய்லாந்தின் பாங்காக்குக்குச் சென்ற லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த தம்பதிக்கு இடையே, நடுவானில் தகராறு ஏற்பட்டது. அவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவர் தன்னை மிரட்டுவதாகக் கூறி, பைலட்டிடம் மனைவி புகார் செய்தார். விமானப் பணியாளர்கள் அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்களின் சண்டையை…
-
- 19 replies
- 1.6k views
- 1 follower
-
-
நெல்லை: செல்போனில் மலர்ந்த காதலியை தேடி பரிசு பொருட்களுடன் ஆலங்குளம் வந்த சென்னை வாலிபருக்கு இளம் பெண் டிமிக்கி கொடுத்தார். இதனால் அந்த வாலிபர் பரிதாபத்துக்கு உள்ளானார். திருச்சி புதூர் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் விஜய். இவர் சென்னையில் உள்ள ஐடி பார்க் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரது செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த எண்ணில் விஜய் தொடர்பு கொண்டு பேசிய போது எதிர்முனையில் பேசியவர் இளம்பெண் என்பது தெரிய வந்தது. அவரது வசீகர குரலில் மயங்கிய விஜய் அந்த பெண்ணுடன் பேசி காதலை வளர்த்தார். அவரை நேரில் பார்க்க துடித்த விஜய் தனது ஆசையை இளம் பெண்ணிடம் தெரிவித்தார். அதற்கு அந்த பெண் தான் ஆலங்குளத்தில் வசிப்பதாகவும், நீங்கள் அங…
-
- 22 replies
- 1.6k views
-
-
சமீபத்தில் தனது 25வது மனைவியுடன் 7 ஆண்டுகள் திருமண வாழ்வை வெற்றிகரமாக நிறைவு செயது.. திருமண நினைவு நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய போது... கிழக்கு நேபாளத்தைச் சேர்ந்த 49 வயதாகும் கூலித் தொழிலாளி ஒருவர் கடந்த 23 ஆண்டுகளில் மொத்தம் 25 திருமணங்கள் செய்துள்ளார். அதில் 24 தோல்வியடைந்த திருமணங்கள். இறுதியாக 25 வதாக கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்த தற்போது 23 வயதாகும் பெண் மட்டுமே அவருடன் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். ஏனையவர்கள் அவரை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். தற்போது தான் தன் வாழ்க்கையில் மகிழ்ச்சி காணப்படுவதாகவும் எனித் தான் திருமணம் செய்யப் போவதில்லை என்றும் கூறும் அவர் தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக உழைக்கப்போவதாகவும் கூறுகிறார். மனைவியில்லாத வீடு …
-
- 10 replies
- 1.6k views
-
-
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! சிறீலங்கா | ADMIN | NOVEMBER 9, 2012 AT 22:19 மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகக் கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வெளியில் பலமான குரல்களைக்கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர், தனது இரசிகர்கள்தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார்.…
-
- 3 replies
- 1.6k views
-
-
மாயன் காலண்டர் கடந்த 21-ந்தேதியுடன் முடிந்தது. எனவே அன்றுடன் உலகம் அழியும் என்ற பீதி சர்வதேச நாடுகளை ஆட்டிப் படைத்தது. இக்கருத்தை விஞ்ஞானிகள் மறுத்தாலும், விண்ணில் நிகழும் மாற்றங்களை கண்காணித்து கொண்டுதான் இருந்தனர். மாயன் காலண்டர் முடிந்த சில நிமிடங்களில் அதாவது 22-ந்தேதி அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தின் சூரிய சக்தி கண்காணிப்பு மைய விஞ்ஞானிகள் சூரியனை போட்டோ எடுத்தனர். அப்போது சூரியன் விட்டுவிட்டு கண் சிமிட்டியபடி ஒளிர்ந்தது. இதற்கு, மாயன் காலண்டரில் குறிப்பிட்டபடி உலகம் அழிவதற்கான அறிகுறி இல்லை. சூரியனில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகரிப்பே இதற்கு காரணம் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாயன் காலண்டரின் கூற்றுப்படி பூமியை வேற்று கிரகம் தாக்குக…
-
- 4 replies
- 1.6k views
-
-
காதலித்து நெருங்கி பழகிய சீமான் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார்: நடிகை புகாருக்கு சீமான் மறுப்பு Thursday, June 2, 2011, 9:28 சிறீலங்கா பிரண்ட்ஸ் படத்தில் நடித்த விஜயலட்சுமி, போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். இந்த புகார் மனு பற்றி தென்சென்னை இணை கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன் கூறுகையில், சீமான் 3 ஆண்டுகளாக தன்னை காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக சொல்லி, நெருங்கி பழகியதாகவும், தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும், இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளதாகவும், இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தத்தை விசாரணை நடத்தும்படி உத்தரவி…
-
- 12 replies
- 1.6k views
- 1 follower
-
-
ஐஸ்வர்யாராய் செவன்ஹில்ஸ் மருத்துவமனையில் அட்மிட் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரசவத்துக்காக இன்று காலை மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு 17ம் தேதி பிற்பகல் குழந்தை பிறக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர் ஐஸ்வர்யாவுக்கு 11&11&11ல் குழந்தை பிறக்கும், ஆணா, பெண்ணா என்று கூறி ‘பெட்’ கட்டி ரூ.150 கோடிக்கு சூதாட்டம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. ஆனால், 11ம் தேதி குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில், ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை லேசான பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்குள்ள 5வது மாடியில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதே மருத்துவமனையில் 4 விவிஐபி அறை…
-
- 5 replies
- 1.6k views
-
-
இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் மனித மனங்களை நெகிழ வைக்கின்றன. அந்தவகையில் கனடா மற்றும் அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத கடும் குளிர், மற்றும் உறைய வைக்கும் பனிக் காலநிலையால் நயகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி, அப்படியே உறைந்துவிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் 1902,1936 மற்றும் 1848 ஆம் ஆண்டுகளில் நயகரா நீர் வீழ்சி இவ்வாறு உறைந்து காணப்பட்டதாம். கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் கனடாவில் நிலவும் கடும் குளிரினால் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதுடன், 11,000 விமானசேவைகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில் நயகரா நீர்வீழ்ச்சி பகுதியளவி; உறைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெரி…
-
- 3 replies
- 1.6k views
-
-
உலகத்தில் சிறந்தது தாய்மை’ என்பார்கள். அதெல்லாம் பொய்யோ என்று நினைக்கக் கூடிய அளவிற்கு தஞ்சை மாவட்டத்தில் ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கிறது. தான் பெற்ற இரு மகன்களையும் கொன்று ஆற்றில் வீசிய ஒரு புண்ணியவதியை போலீஸ் சுற்றி வளைத்துள்ளது. காரணம்…..? வேறென்ன….கள்ளக் காதல்தான்! தஞ்சை மருத்துவக் கல்லூரிச் சாலையில் இருக்கும் திருப்பதி நகரில் வசிப்பவர் முருகேசன். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பிழைப்புத் தேடி பத்து வருடங்களுக்கு முன்பு தஞ்சை வந்து, ஸ்வீட் ஸ்டால் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்திருக்கிறார். அப்போது, அவருக்கு துளகாபுரம் காலனியைச் சேர்ந்த காண்ட்ராக்டர் சரவணனின் நெருங்கிய நட்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில், தஞ்சை இந்திரா நகரைச் சேர்ந்த ரேவதி என்ற பெண்ண…
-
- 8 replies
- 1.6k views
-
-
‘மகளிர் தின விழா வெறும் கொண்டாட் டத்துடன் நிற்காமல், பெண்களுக்கு பயன்படும் வகையில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளாக இருந்தால் நன்றாக இருக்கும்’ என கல்லுõரியில் படித்துக் கொண்டே சுயதொழில் செய்து சாதிக்கத் துடிக்கும் மாணவிகள் தெரிவித்தனர். வருங்கால இந்தியா, இளைஞர்கள் கையில் என்பதை விட, இளைஞிகள் கையில் என்றால் அது மிகை ஆகாது! அடுப்பூதும் பெண்களுக்கு என்ற காலம் போய், தற்போது நிறைய குடும்பங்களின் பொருளாதாரத்தை தாங்கி நிற்பதே பெண்களாகத் தான் உள்ளனர். சென்னையில் உள்ள ஒரு மகளிர் கல்லுரரியில் படிக்கும் பல பெண்கள், படிக்கும் போதே சுயதொழில் செய்து அசத்தி வருகின்றனர். தங்களுடைய சம்பாத்தியத்தை படிப்புக்கு மட்டுமின்றி குடும்ப செலவுக்கும் கொடுத்து உதவி வருகின்றனர். கல்லுரரியில் இ…
-
- 7 replies
- 1.6k views
-
-
வியர்வை தாங்க முடியாமல் விமானத்தின் அவசர கால கதவை திறந்த பயணி.. சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து விமானம் ஒன்று புறப்படும் சமயத்தில் விமானத்தில் இருந்த நபர் ஒருவர் அவசர கால கதவுகளை திறந்து இருக்கிறார். இதனால் விமானத்திற்குள் மிகவும் அதிக அளவில் காற்று வீசி இருக்கிறது. விமானம் இன்னும் கொஞ்சம் அதிக வேகத்தில் சென்று இருந்தால், உள்ளே இருந்த பயணிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும். அவர் ஏன் இப்படி அவசர கால கதவுகளை திடீர் என்று திறந்தார் என்று விளக்கம் அளித்துள்ளார். தற்போது போலீஸ் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.விமானம் சரியாக புறப்படும் சமயத்தில் சென் என்ற நபர் விமானத்தின் அவசர கதவுகளை திறந்து இருக்கிறார். அவசர வாயில் வழியாக வெளியே செல்ல முயற்சி செய…
-
- 3 replies
- 1.6k views
-
-
இலண்டன் வெஸ்ற் ஹென்டன் (West Hendon) பகுதியில் உள்ள ஆஞ்சேனயர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் புகுந்த மலையாளச் சாமியார் ஒருவர் தன்னைத் தானே ஆஞ்சனேய சாமி என்று பிரகடனம் செய்து பக்தர்களையும், பூசகரையும் மிரட்டி அடாவடித்தனம் புரிந்தமை பக்தர்களால் காணொளி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரசேகரன் என்ற இயற்பெயரையுடைய இவர் கேரள வம்சாவழியைச் சேர்ந்தவராவர். ஆனாலும் ஆஞ்சனேயரின் அவதாரமாக தன்னைத் தானே சித்தரித்துக் கொள்ளும் இவர், ஹனுமந் சேவா துரந்தரர் சிறீமத் சந்திரசேகர ஆஞ்சனேய சுவாமிஜி என்று தனக்குத் தானே ஆன்மீகப் பெயர் சூட்டி கொழும்பு தெஹிவளையில் ஆஞ்சனேயர் கோயில் ஒன்றை நடத்தி வருகின்றார். கடந்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்ற காலப் ப…
-
- 15 replies
- 1.6k views
- 1 follower
-
-
கட்டுமஸ்தான உடல் அழகை காட்ட ஆண்களுக்கும் மார்புக்கச்சைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆண்களுக்கேயான பிரத்தியேக மார்புக்கச்சையை பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. 'புஷ் அப்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இம்மார்புக்கச்சையானது ஆண்கள் அணியும் டீசெர்ட் மற்றும் ஏனைய மேல் அங்கிகளில் இணைக்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு வரவுள்ளது. இதனை டி சர்ட் மார்புக்கச்சை என்றும் அழைக்கிறார்கள். அதாவது பெண்கள் அணியும் வழக்கமான மார்புக்கச்சையை போன்று அல்லாது டி சர்ட்டுடன் கூடிய பிராவாக இது காணப்படுவதால் இவ்வாறு டி சர்ட் பிரா என்றும் அழைக்கின்றனர். பெஷன் வடிவமைப்பாளர்கள் இத்தகைய செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பதானது ஆண்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள அதேவேளை சிலருக்க…
-
- 8 replies
- 1.6k views
-
-
அசாம் மாநிலம் கட்டாக்கில் மத்திய நெல் பரிசோதனை ஆராய்ச்சி கூடத்தில் உள்ள விஞ்ஞானிகள் நல்வோரா என்ற புதிய நெல் ரகத்தை கண்டு பிடித்துள்ளனர். இந்த நல்வோரா என்ற ரக நெல்லில் கிடைக்கும் அரிசியினை வேக வைக்க தேவையில்லை. இது குறித்து நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி ஏ.வி. சர்மா கூறுகையில், நல்ல நீரில் சமார் 45 நிமிடம் ஊற வைத்தாலே சாதமாக மாறிவிடும். இதற்கு கொதிக்க வைத்த நீரே தேவையில்லை என்றும், இந்த ரக நெற்பயிர் நல்ல மகசூலையும் தருகிறது என்றும் கூறினார். http://www.seithy.com/breifNews.php?newsID=77250&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 1.6k views
-
-
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நகை வாங்க வந்த பெண்ணை மயக்கி ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த நகைக் கடை அதிபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் சேது ரோட்டில் நகை கடை வைத்திருப்வர் கோட்டைசாமி. சில மாதங்களுக்கு முன் இவரது நகை கடைக்கு கோபாலபட்டினத்தை சேர்ந்த செல்வி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) நகை வாங்க வந்துள்ளார். அவரிடம் கோட்டைசாமி விதவிதமான நகைகளை காட்டிபடியே பேசி செல்வி பற்றிய அனைத்து தகவல்கள் மற்றும் அவரது குடும்பம் பற்றி தெரிந்து கொண்டார். செல்வியின் கணவர் வெளிநாட்டில் இருப்பதால் அவரை அடைய திட்டமிட்டார். கூடுதல் டிசைன்கள் காட்டுவதாகக் கூறி அவரை மறுதினம் வரச் சொல்லியிருக்கிறார். செல்வி மறுமாள் வந்தபோது அவருக்…
-
- 0 replies
- 1.6k views
-
-
தெருவோர வியாபாரிகள், சில ஓட்டல் ஊழியர்கள் சீனாவின் டாங்யாங் நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பக்கட்களுடன் அலைகின்றனர். எல்லாம்.. சின்ன பசங்களின் சிறுநீரை பிடித்து செல்வதற்குதான். அந்த சிறுநீரில் முட்டைகளை வேகவைத்து தெருவோரங்களில் விற்கின்றனர். உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்று கூறுவதால், விற்பனை அமோகமாக நடக்கிறது. சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது டாங்யாங் நகரம். மிகவும் பிரபலமான நகரம். இங்குள்ள தொடக்க பள்ளிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் படிக்கின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர் கும்பலாக காத்திருக்கின்றனர். அவர்களுடன் தெருவோர வியாபாரிகளும் காத்திருக்கின்றனர். பள்ளி டாய்லெட்டில் வைத்துள்ள பக்கெட்…
-
- 8 replies
- 1.6k views
-
-
ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக புகார் கணவரை ஜெயிலில் தள்ள துடிக்கும் பெண் வக்கீல் சென்னை, ஜூன்.20& ஆண்மை இல்லாததை மறைத்து மோசடி திருமணம் செய்ததாக, தனது கணவர் மீது புகார் கூறி, அவரை மோசடி சட்டத்தில் கைது செய்து ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று பெண் வக்கீல் ஒருவர் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவர் தொடுத்துள்ள வழக்கு விசாரணையில் உள்ளது. வக்கீல் அனு சென்னையில் வக்கீலாக இருப்பவர் அனு (வயது 26). இவருக்கும், மதுரையை சேர்ந்த விஜய்ஆனந்த் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. பட்டதாரியான விஜய்ஆனந்த் இந¢து அறநிலையத்துறையில் கணக்கியல் அதிகாரியாக பணிபுரிகிறார். திருமணமாகி அவர்கள் இருவரும் சென்னை வடபழனியில் தனிக் குடித்தனம் நடத்தினார்…
-
- 0 replies
- 1.6k views
-
-
Shot in the early thirties, a man with a rifle tests an early version of bullet proof glass by having his wife hold the glass to her face ...
-
- 20 replies
- 1.6k views
-
-
ஈரோடு:ஈரோட்டில், சண்டைக்காக வளர்க்கப்படும் கட்டுச்சேவல் ஒன்று, நேற்று முட்டையிட்ட அதிசயம் நிகழ்ந்தது.ஈரோடு, காவிரிக்கரையை சேர்ந்தவர் மணி. பத்தாண்டுகளாக, கட்டுச் சேவல்களை வளர்த்து, விற்பனை செய்து வருகிறார். நேற்று காலை, சேவல் ஒன்று இட்ட முட்டை, பழுப்பு நிறத்தில், பட்டன் காளான் போல இருந்தது.இதை கண்ட அவர், சேவல்களுக்குள் நடந்த சண்டையில், உடல் உறுப்பு ஏதும் அறுந்து விட்டதோ என, நண்பர்களை அழைத்து காண்பித்தார். முட்டையை அறுத்து பார்த்த போது, உள்ளே ஐந்து அடுக்குகளில் வெள்ளை கருவும், ஒரு மஞ்சள் கருவும் இருந்தது. தகவலறிந்து, சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள், முட்டையிட்ட சேவலையும், முட்டையையும், அதிசயமாக பார்த்து சென்றனர்.ஈரோடு கால்நடை மருத்துவ ஆராய்ச்சிக்கழக டாக்டர் பாலசுப்பிரம…
-
- 9 replies
- 1.6k views
-
-
வட இந்தியாவில் இருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன் என்ற இளவரசன்தான், முதல் சிங்களஅரசை நிறுவியவன் என்று சிங்களரின் வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகிறது. பாலி மொழியில் எழுதப்பட்ட “மகாவம்சம்” என்ற நூலை தங்களின் வேத புத்தகம் போல சிங்களர்கள் மதிக்கிறார்கள். இதை தங்கள் “வரலாறு” என்று சிங்களர்கள் கூறினாலும், நம்ப முடியாத கதைகளும் இதில் உண்டு. இலங்கையில் சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் – இலங்கையின் முதல் சிங்கள மன்னன் விஜயன் என்று மகாவம்சம் கூறுகிறது. விஜயன் பற்றி மகாவம்சத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:- “வட இந்தியாவில் உள்ள வங்காளம், ஒரிசா ஆகிய பகுதிகள் ஒரு காலத்தில் லாலாதேசம் என்று அழைக்கப்பட்டது. இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னன் பெயர் சிங்கபாகு. இவர் சிங்கத்துக்க…
-
- 0 replies
- 1.6k views
-
-
“2009 மே 16, 17″இல் புலிகளின் தலைவர் ..? June 18, 20158:50 am நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் சரணடைவு குறித்து தன்னோடு பேசப்படவில்லை என்று இந்தியாவில் கூறப்படுகிறது. இலங்கை அரசானது தற்போதுவெளிநாட்டில் உள்ள சில தமிழர்களோடு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி வருகிறது. மே 18 வரை விடுதலைப் புலிகள் ஒரு தீர்க்கமான முடிவில் தான் இருந்தார்கள். இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடைபெற்றதுபலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. அனைவராலும் அறியப்படும் கேணல் சங்கர் அவர்களின் மனைவி குகா, 2009 ஏப்பிரல் மாதம் இறுதி வாரத்தில் லண்டனில் உள்ள தனது நண்பி ஒருவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தார். சட்டலைட் தொலைபேசியூடாக பேசிய அவர் , தான் (பிரபாகரன்) அவர்களோடு தங்கியிருப்பதாகவும். அவர…
-
- 22 replies
- 1.6k views
-
-
ரூ.53 லட்சம் செலவில் 800 பேருக்கு விமல் விருந்து!! ரூ.53 லட்சம் செலவில் 800 பேருக்கு விமல் விருந்து!! கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலான ஷங்கிரிலாவில், நாடாளுமன்ற உறுப்பினர் பல இலட்சம் ரூபா செலவில் ஆடம்பர விருந்தொன்றை வைத்துள்ளார். விமல் வீரவன்சவின் மகளான விமாசா விஷ்வாதாரி 2017 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ. சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் ப…
-
- 11 replies
- 1.6k views
-
-
30 மனிதர்களைக் கொலை செய்து உடற்பாகங்களை உட்கொண்ட ரஷ்ய தம்பதி ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர், 30 மனிதர்களைக் கொன்று அவர்களின் உடற்பாகங்களை உட்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர். திமித்ரி பக் ஷீவ், அவரின் மனைவி நட்டாலியா பக் ஷீவ் ஆகியோரே இத்தம்பதியினர் ஆவர். ரஷ்யாவின் தென்பிராந்தியத்திலுள்ள இத்தம்பதியின் வீட்டில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மனித உடற்பாகங்கள் பலவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 35 வயதான திமித்ரி பக் ஷீவும் அவரின் மனைவி நட்டாலியும் (42) ரஷ்யாவின் கிரஸ்னோடர் இராணுவ பயிற்சியகமொன்றில் பணியாற்றியவர்கள். அங்கு பெண்ணொருவரின் சடலம் காணப்பட்டதையடுத்து, மேற்பட…
-
- 0 replies
- 1.6k views
-
-
வாலிபரின் . Tuesday, 29 April, 2008 02:45 PM . பாரிஸ், ஏப். 29: இளங்கன்று பயமறியாது என்று சொல்வார்கள். இப்படித்தான் பிரான்ஸ் நாட்டில் வாலிபர் ஒருவர் 200 கிலோ மீட்டர் வேகத்தில் காரோட்டி பிடிபட்டிருக்கிறாராம். நெடுஞ்சாலை ஒன்றில் அவர் அதிவேகமாக காரோட்டி சென்ற குற்றத்திற்காக கைது செய்யப் பட்டிருக்கிறாராம்.. . அது மட்டுமல்ல அவர் காரோட்டும் போது தனது செல்போனில் வீடியோ படத்தை பார்த்துக் கொண்டிருந்தாராம். அவரது காரை மடக்கி பிடித்த காவலர், அவர் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டி ருப்பதை பார்த்து திடுக்கிட்டு போய் விட்டாராம். தாறுமாறான வேகத்தில் காரோட்டுவதே தவறு. அப்படி யிருக்க, வீடியோ பார்த்துக் கொண்டு அதிவேகமாக காரோட்டினால் அது மாபெரும் தவறுதானே. அதனால…
-
- 0 replies
- 1.6k views
-
-
நிறம் மாறும் சிவலிங்கத்தின் அதிசயம் Ca.Thamil Cathamil September 20, 2014 Canada பொதுவாக சிவன் கோவில்கள் அனைத்துமே ஏதாவது ஒரு சிறப்பை பெற்று திகழ்வதாகவே இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் குறுப்புடி என்னும் ஊரில் சோமேஸ்வரர் என்னும் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சோமேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட சிவலிங்கத்தை, சந்திரன் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக தல புராணம் எடுத்துரைக்கிறது. இந்த சிவலிங்கம் நிறம் மாறும் தன்மை கொண்டது என்பதே இதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதாவது அமாவாசை நாளில் கோதுமை நிறத்தில் காணப்படும் இந்த சிவலிங்கம், பின்னர் சிறிது, சிறிதாக நிறம் மாறி பவுர்ணமி தினத்தில் வெண்மை நிறமாக காட்சியளிக்கிறது. - See more at: http://www.canadamirror.com/canada…
-
- 11 replies
- 1.6k views
-