செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7152 topics in this forum
-
அமெரிக்காவின் விர்ஜினியா மாநில தலைமை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த பொது மக்களிடம் இருந்து எராளமான அவசர உதவி தொலைபேசி அழைப்புகள் வந்தன. அந்த அழைப்பில் பேசியவர் நார்ஃபோல்க் பகுதி மிருகக்காட்சி சாலையில் இருந்து தப்பி வந்த சிங்கம் தெருக்களில் நடமாடுவதாக ஒரு புகார் அளித்தார். பிடரியுடன் ஒரு சிங்கக்குட்டி, தங்கள் வீட்டின் அருகே சுற்றித் திரிவதாக மற்றவர் கூறினார். இதைப் போன்று பல அழைப்புகள் வரவே, உஷாரான போலீசார், மிருகக்காட்சி சாலை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, சிங்கங்களின் எண்ணிக்கையை சரி பார்க்கும்படி அறிவுறுத்தி விட்டு,புகார் வந்த பகுதிக்கு துப்பாக்கிகளுடன் விரைந்தனர். வழியில் ஒருவர் சிங்கத்தை சங்கிலியில் பிடித்தவாறு நடந்து போய் கொண்டிருந்தார். அவரை வழி மறித்த போ…
-
- 0 replies
- 588 views
-
-
இந்தியா, தமிழ்நாட்டில் கிராம நன்மைக்காக கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் சிறுமிக்கும் தவளைக்கும் வினோத திருமணம் நடந்தது. பழங்காலத்தில், விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகில் உள்ள பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் காலரா நோய் பரவியபோது தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடத்தியதால் காலரா நோய் குணமடைந்தது என்கிற நம்பிக்கையின் படி, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் வினோத திருமணம் நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சி இந்த வருடமும் நேற்று முன்தினம் (16//01/09) மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடந்தது. பள்ளிப்புதுப்பட்டு கிராமத்தில் வசிக்கும் சகோதர உறவினர்கள் கொண்ட குடும்பத்தினர் பெண் வீட்டாராகவும், மாமன்…
-
- 5 replies
- 1.1k views
-
-
புகார் கொடுக்க வந்த பெண்ணின்... கணவரை, ஆட்டையைப் போட்ட ஏட்டம்மா சஸ்பெண்ட். அரியலூர்: புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவர் மீது மோகம் கொண்டு கள்ளக்காதலில் மூழ்கி அவருடன் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்ட பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த தெற்குபரணம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவரது மனைவி லதா (36). இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இந்தத் தம்பதியின் வாழ்க்கை இப்போது சின்னாபின்னமாகி விட்டது. காரணம், ஒரு கள்ளக்காதல். இத்தனைக்கும் செல்வக்குமாரும், லதாவும் காதலித்து மணம் புரிந்தவர்கள். உறவினர்களும் கூட. 2000மாவது ஆண்டு திருமணம் நடந்தது. எல்லாமே நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் அவர் என்றைக்கு சிங்கப்…
-
- 0 replies
- 427 views
-
-
இப்படியும் சில மனிதர்கள் நானும் என் நண்பனும் திருச்சியில் படித்துக்கொண்டிருந்த காலம் அது. ஞாயிறு விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்துவிட்டு திரும்ப திங்கள் கிழமை காலை ஆறு மணிக்கு பேருந்து பிடித்தால் 8.30 மணிக்கு கல்லூரியில் இருக்கலாம் என்று கணக்குப் போட்டு விடுமுறை நாட்களுக்கு ஊருக்கு வந்து போவது வழக்கம். அப்படி ஒரு திங்கள் கிழமை காலை கொட்டாம்பட்டியில் இருந்து திருச்சிக்கு பேருந்து ஏறினோம். பேருந்து இருக்கைகள் நிரம்பி விட்டதால் நானும் என் நண்பனும் நின்று கொண்டு பயனித்தோம். பேருந்து துவறங்குறிச்சி என்ற ஊர் தாண்டி ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர் பயணித்திருக்கும், ஐயோ எம்புள்ளையா காப்பாத்துங்களேன்னு ஒரு பெண்ணின் குறல் வண்டிக்குள் கேட்டது. ஓட்டுநர் உடனடியாக வண்டியை நிற…
-
- 2 replies
- 734 views
-
-
பணம் தேவையானவர்கள் என்னிடம் கேட்டுப் பெற்று கொள்ளுக - ரஞ்சன் எம்.பி. ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிங்களத் திரைப்பட நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க தன்னிடமுள்ள 40 இலட்சம் ரூபாய் பணத்தைப் பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகளுக்காகத் தனக்குக் கிடைத்த 40 இலட்சம் ரூபா பணத்தையே அவர் இவ்வாறாக மக்களுக்கு வழங்குகின்றார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது யூடியூப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள ரஞ்சன், மேசை ஒன்றின் மீது 5000 ரூபா பணத்தாள்களைப் பரப்பி வைத்து, பணம் தேவையானவர்களைத் தனது செயலாளரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த நான்கு வருடங…
-
- 1 reply
- 367 views
-
-
மரத்தின் வயது 4,768! இதுதாங்க உலகில் மிகவும் வயதான மரம். மெதுசேலா (மெதுசேலா என்ற கதாபாத்திரம் பைபிளில் வருகிறது. அவர் 969 வருடங்கள் வாழ்ந்ததாகவும் பைபிள் குறிப்பிடுகிறது. ஆகையால் அதிக வருடங்கள் வாழும் எதுவும், யாரும் மெதுசேலா பெயரில் அழைக்கப்படுவது வழக்கமாயிற்று) என்றழைக்கப்படும் இது பிரிஸ்ட்லீகோன் இனத்தைச் சேர்ந்த பைன் மரம். இதன் வயது 4,768 வருடங்கள் என கின்னஸ் சாதனை ஏடு கூறுகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள உலகின் மிகப் பழமையான காடாகக் கருதப்படும் தேசிய வனத்தில்தான் இவ்வகை பைன் மரங்கள் தனித்தனியாக வளர்ந்து நிற்கின்றன. வெள்ளை மலைத்தொடரில் அமைந்துள்ள இந்த பைன் மரக்காட்டில், கிட்டத்தட்ட 11 ஆயிரம் அடி உயரத்தில் மரங்கள் வளர்ந்துள்ளன. இவ…
-
- 8 replies
- 1.6k views
-
-
டோக்கியோ: ஜப்பானில் ரயிலில் இருந்து இறங்கும் போது ரயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே கால் மாட்டிக் கொண்ட பெண்ணை, சக பயணிகள் ரயிலையே சாய்த்து மீட்ட ஆச்சர்ய சம்பவம் நடந்துள்ளது. ஜப்பான் நாட்டில் உள்ள சாய்தாமா நகரில் உள்ள மினாமி உரவா ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் இருந்து பயணிகள் இறங்கும் போது, எதிர்பாராதவிதமாக 30 வயது பெண் ஒருவர் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது கால் ரயிலுக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் சிக்கிக் கொண்டது. பாதுகாப்புப் படையினர் வந்து காப்பாற்றட்டும் என அலட்சியமாக இராமல், உடனடியாக் அதிரடி ஆக்ஷனில் இறங்கியுள்ளனர் சக பயணிகள். யோசனை... மஞ்சி வாண்டு தான்... ரயிலை லேசாக சாய்த்தால், அப்பெண்ணை உடனடியாக மீட்டு விடலாம் என அங்கிருந்த சிலர் ஐடியா கொட…
-
- 8 replies
- 730 views
-
-
********** மோசடி பல வழி. மக்களே அவதானமாக இருங்கள். எனக்கு அண்மையில் ஒரு பெண் அமேசான் prime இல் இருந்து கால் பண்ணுவதாகவும் யாரோ ஐபோன் என் அக்கௌன்ட் இருந்து ஆர்டர் பண்ணி இருப்பதாகவும் உறுதி படுத்த கால் பண்ணுவதாக சொன்னார். நான் ஆர்டர் பண்ணவில்லை என்றதும் யாரோ என் கம்ப்யூட்டரை ஹக் பண்ணி விட்டார்கள் தான் ரிமோட் connect பண்ணி security setting செக் பண்ணவேண்டும் என்று என்றாள். மோசடி என்று தெரிந்து துண்டித்து பண்ணிவிட்டன்.இவர்களிடம் பொதுவாக வயோதிபர்கள்தான் பலியாகிறார்கள். கீழே இருக்கும் வெப்சைட் scammers பற்றிய விபரங்களை பார்க்கலாம். https://scammer.info/c/scams/5 பல youtubers இவர்களின் மோசடிகளை புட்டு புட்டு வைக்கிறார்கள். இவர்களும் திருந்றது மாதிரி இல்லை. …
-
- 3 replies
- 748 views
-
-
இலங்கையில் நடைபெறவிருந்த... திருமதி உலக அழகிப் போட்டி, அமெரிக்காவுக்கு மாற்றம்! இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த 2021 திருமதி உலக அழகிப் போட்டியை அமெரிக்காவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. 2021 திருமதி அழகிப் போட்டியை இலங்கையில் நடத்துவதென 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதமளவில் தீர்மானிக்கப்பட்டது. எனினும், தற்போது குறித்த போட்டியை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2021 திருமதி அழகிப் போட்டி எதிர்வரும் 2022 ஜனவரி 15ஆம் திகதி லாஸ் வேகாஸில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு அறிவித்துள்ளது. https://athavannews.com/2021/1232472
-
- 0 replies
- 155 views
-
-
“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு! வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர். வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். ‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன். ம்ஹ்ம்… இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில்…
-
- 0 replies
- 550 views
-
-
நேரடி ஒளிபரப்பில் வித்தியாசமான தற்கொலை; ‘பாம்பு’ கணவனின் பரிதாப முடிவு மனைவியின் பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத கணவர், சமூக வலைதளத்தில் தனது வித்தியாசமான தற்கொலையை நேரடியாக ஒளிபரப்பிய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. யூட்யூபில் தனது செல்லப் ‘பாம்புகளுடன்’ காட்சி நடத்திவந்தவர் பாம்பு நிபுணர் ஆர்ஸ்லான் வலீவ் (31). இவர் தனது மனைவி எக்டரீனா காட்யாவுடன் நடத்தும் பாம்புக் காட்சிகள் யூட்யூபில் பெருவரவேற்புப் பெற்றவை. இந்த நிலையில், தன் மனைவிக்கு வேறொரு ஆணுடன் தொடர்பிருப்பதாகக் கூறி கடந்த ஆகஸ்ட் மாதம் வலீவ், காட்யாவைக் கடுமையாகத் தாக்கினார். இதனால் காட்யா பிரிந்து சென்றார். எனினும், சில தினங்களுக்கு முன் தனது செயலுக்கு வருந்த…
-
- 0 replies
- 217 views
-
-
நித்யானந்தாவை விருந்துக்கு அழைத்த பிரித்தானிய எம்.பி.க்கள் : ஊடக அறிக்கையில் அதிர்ச்சி தகவல் By DIGITAL DESK 2 12 DEC, 2022 | 11:11 AM பாலியல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் நித்யானந்தாவை பிரித்தானியாவைச் சேர்ந்த எம்.பி.க்கள் தீபாவளி விருந்துக்கு அழைத்ததாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு - மைசூர் வீதியில் ராம்நகர் மாவட்டத்தில் உள்ள பிடதி பகுதியில் நித்யானந்தா சாமியாரின் தலைமை ஆசிரமம் உள்ளது. நித்யானந்தா தியான பீடம் என்றபெயரில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இவர் மீது பாலியல் புகார் உட்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. அதன்பின், பாலியல் வழக்கில் சி…
-
- 3 replies
- 324 views
- 1 follower
-
-
தன்னைப் போன்ற தோற்றம் கொண்ட யுவதியை கொன்ற யுவதி ஜேர்மனியில் கைது By SETHU 01 FEB, 2023 | 05:06 PM தான் இறந்துவிட்டதாக காட்டிக்கொள்வதற்காக, தன்னைப் போன்ற முகத்தோற்றம் கொண்ட யுவதியை கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் யுவதியொருவரை ஜேர்மனிய பொலிஸார் கைது செய்தள்ளனர். ஜேர்மன் - ஈராக்கியரான 23 வயது யுவதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 23 வயதான அல்ஜீரிய யுவதியை கொலை செய்தார் என ஜேரமனிய பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இக்கொலை தொடர்பில் 23 வயதான கொசோவோ இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி ஜேர்மன் - ஈராக்கிய யுவதியை கடந்த வருடம் ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் காணவில்லை என அவரின் பெற்றோர் முறை…
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
ha ha http://viduppu.com/celebs/06/155623
-
- 1 reply
- 640 views
-
-
ஜப்பான் ஆசியக் கண்டத்தில் 6,852 தீவுகளை கொண்ட வளர்ச்சியடைந்த நாடு. இது பசிபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. தற்போது நிலநடுக்கம், சுனாமி தாக்கிய ஒன்சூதீவு (Honshu ) ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய தீவு. உலக பரப்பளவின்படி ஏழாவது மிகப்பெரிய தீவு. இந்த தீவின் கடலில்தான் மார்ச் 11- ஆம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 3 மணிக்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டார் ஸ்கேல் அளவில் 8.9. ஆக பதிவானது. 1900 ஆண்டிலிருந்து ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே இது மிக பெரியது. இதனை அமெரிக்க ஜியாலிஜிகள் சர்வே ரிக்டார் ஸ்கேலில் 9 என அளவிட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கீழ் அமிழ்கிற எல்லை பகுதி (Subduction Zone) வகையை சேர்ந்ததாகும். கீழ் அமிழ்கிற எல்லை பகுதி என்பது இரண்…
-
- 0 replies
- 709 views
-
-
வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டாரா நித்தியானந்தா? சர்ச்சைக்குரிய நபரான நித்தியானந்தா வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பல்வேறு சர்ச்சைகளிலும், பாலியல் வழக்குகளிலும் சிக்கிய நித்தியானந்தா சட்டத்திலிருந்து தப்பிக்கும் நோக்கில் இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்குத் தப்பியோடிவிட்டதாக பெங்களூருவில் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் ஏற்கெனவே கெய்மன் தீவுகளில் அரசியல் தஞ்சம் அடைந்துவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். நீண்ட காலமாக பெங்களூருவிலுள்ள ஆசிரமத்தில் நித்தியானந்தா இல்லாத காரணத்தால் இதுபோன்ற செய்திகள் பரவியுள்ளன. இதுபற்றி அவரது சீடர்களில் ஒருவர் பேசுகையில், “அவர் எங்கே இருக்கிறார் என எங்களுக்குத் தெரியாது. அவர் வட இந்தியாவில…
-
- 10 replies
- 2.1k views
-
-
ஈரத் துணியில் சுருட்டி...வேலூரில் மாவட்டத்தில் பெண் சிசு கொலை கொடூரம்!! ஆகஸ்ட் 04, 2007 வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வறுமை காரணமாக பிறந்த பெண் சிசுக்களை பெற்றோர்களே கொன்று புதைத்து வரும் அவலம் அரங்கேறியுள்ளது. தமிழகத்தைத் தாண்டி யாருக்கும் தெரியாமல் இருந்த மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கிராமம் சில ஆண்டுகளுக்கு உலகப் புகழ் பெற்ற கிராமமாக மாறியது. ஏதோ நல்லது செய்தோ அல்லது சாதனை செய்தோ அந்த ஊருக்கு பெருமை கிடைத்து விடவில்லை. பிறந்த சிசுக்களைக் கொன்று குவிக்கும் கொலைகார குக்கிராமமாக உசிலம்பட்டிக்குப் பெயர் கிடைத்தது. பெண் குழந்தை பிறந்தால் உடனே கள்ளிப் பால் கொடுத்தும், நெற்கதிர்களை தொண்டைக்குழியில் போட்டும் கொன்று புதைக்கும் கொடூரம், காலம் …
-
- 1 reply
- 1.1k views
-
-
தாயின் தகாத உறவால் கர்ப்பமான 15 வயது மகள். யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் 47 வயதுடைய தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரால் 15 வயது பாடசாலை மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக நேற்று (31) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் வங்கி ஊழியர் என்பதுடன் திருமணத்திற்கு முன்பிருந்தே இந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் எனினும், குறித்த நபர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போது இந்த பெண்ணுடன் இருந்த தொடர்பினால் , அந்த பெண்ணின் கணவர் அந்த பெண்ணை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது. குறித்த நபர் , சிறுமியின் தாயாருடன் தகாத உறவை ஏற்படுத்திக்…
-
- 9 replies
- 1.9k views
- 1 follower
-
-
என்ன நான் கர்ப்பமா... பிரசவத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு ‘ஷாக்’ ஆன அமெரிக்கப் பெண்! நியூயார்க்: அமெரிக்காவில் 47 வயது பெண் ஒருவர் பிரசவத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தான் கர்ப்பம் என தெரிந்து கொண்ட வினோதச் சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் மஸாசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜூடி பிரவுன்(47). சம்பவத்தன்று தனக்கு அடிவயிற்றில் கடுமையான வலி என சிகிச்சைக்காக மருத்துவரைக் காணச் சென்றுள்ளார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர் அவர் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அப்படியே ஆனந்த அதிர்ச்சி அடைந்துள்ளார் ஜூடி. காரணம் ஜூடிக்கு இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஜேசன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் குழந்தைகள் பிறக்கவில்லை. குழந்தைக்…
-
- 2 replies
- 387 views
-
-
எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி பதவி, பிபிசி செய்தியாளர் “குழந்தைப் பருவத்திலேயே எங்களுக்கு நிச்சயம் செய்துவிடுவார்கள். அதன் பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கையில் எல்லா முடிவுகளையும் மாப்பிள்ளை வீட்டார் தான் எடுப்பார்கள். ஒருவேளை அந்த பெண்ணுக்கு இந்த உறவிலிருந்து வெளியில் வர வேண்டும் என்றால் அதற்கு பணம் கொடுக்க வேண்டும். என்னிடம் எனது கணவர் வீட்டார் ரூ. 18 லட்சம் கேட்டுள்ளனர்.” மத்திய பிரதேசத்திலுள்ள ராஜ்கர் மாவட்டத்தில் இருக்கும் கெளஷல்யா இவ்வாறு கூறுகிறார். இந்த நடைமுறை பல தலைமுறைகளாக அங்கு நடப்பதாகவும் இதை ‘ஜடா நாத்ரா’ என்று அழைப்பதாகவும் அவர் தெரிவித்தார். பகாரியா கிராமத்தை சேர்ந்த கெளஷல்யா, தனது இரண்டாம் வயதில் இந்த நாத்ரா வழக்கப்பட…
-
- 0 replies
- 244 views
- 1 follower
-
-
மெக்சிகோ நகரை சேர்ந்தவர் லிஸ்பெத் ஜெரோனிமா புயுண்டெஸ் முன்குயா (வயது 18 ) இவர் அகோல்மேன் பகுதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். வீட்டில் தனது 4 மாத பெண் குழந்தையை கட்டிலில் தூங்க வைத்து விட்டு பூட்டி விட்டு ஒடுமா நகராட்சியில் நடைபெற்ற ஒரு டான்ஸ் பார்ட்டியில் கலந்து கொள்ள சென்று இருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு உள்ளது. இது குறித்து பக்கத்து வீட்டு பெண்மணி லிஸ்பெத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளார். லிஸ்பெத் வேகமாக ஓடி வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார் தனது குழந்தையை சுற்றி எலிகள் மொய்த்து கொண்டு இருந்தது. உடனடியாக குழந்தையை தூக்கினார். குழந்தையின் முகம்,கால் விரல்கள் முழுவதும் ரத்தமாக இருந்தது. எலிகள் குழந்தையின…
-
- 0 replies
- 205 views
-
-
காணொளி இணைப்பில்.... லண்டனில் நிலக்கீழ் தொடரூந்துகளில் பயணித்து இடம்விட்டு இடம் போய் உணவு தேடும் புறாக்கள்..! Underground pigeons Some people have reported seeing pigeons using the London Underground to get around the city. http://www.bbc.co.uk...rammes/p00tv35h
-
- 18 replies
- 2.2k views
-
-
செல்லிடத் தொலைபேசி காரணமாக மனைவியை விவாகரத்துச் செய்த நபர் 2016-02-19 10:56:28 சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி தனக்குத் தெரியாமல் செல்லிடத் தொலைபேசியொன்றை வாங்கியதால் விவாகரத்துச் செய்துள்ளார். சவூதி அரேபியாவின் தென் பிராந்திய நகரான ஜஸானிலுள்ள ஹோட்டலொன்றுக்கு இத்தம்பதியினர் அண்மையில் சென்றபோதே அப்பெண் செல்லிடத் தொலைபேசி வைத்திருப்பதை அவரின் கணவர் அறிந்துகொண்டாராம். ஹோட்டல் வாயிலுக்கூடாக அப்பெண் சென்றபோது, மெட்டல் டிடெக்டர் கருவி ஒலி எழுப்பியது. அதனால், அப்பெண்ணிடம் தொலைபேசி மற்றும் உலோகப் பொருட்கள் இருந்தால் வெளியே எடுக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அறிவுறுத்…
-
- 0 replies
- 427 views
-
-
கவிப் பேரரசு வைரமுத்துவின் மகனாரின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படம். (26-06-2008) காவியும் காவியும் கவி பாடும் இடத்தில்... http://tamilgallery.oneindia.in/v/events/v...riage3.jpg.html
-
- 2 replies
- 1.5k views
-
-
மிகவும் நல்ல பிள்ளை போல உபதேசம் பண்ணாதீர்கள். தத்துவங்கள் பேசாதீர்கள். உங்களை நெருங்கவே பயப்படுவாள். புன்சிரிப்புடன் இருங்கள். எந்தப்பெண்ணும் உருகிவிடுவாள். பெண்ணை பார்த்துப் புன்னகை செய்யும் போது, நீங்கள் அவளை நேசிக்கிறீர்கள் என்று என்னி ஒரு பாதுகாப்பு உணர்வைப் பெறுகிறாள். சினிமாவிலும், நாடகங்களிலும் கேட்ட வசனங்களை, புத்தகங்களில் படித்ததை ஒப்பிக்காதீர்கள். உங்கள் அடி மனதிலிருந்து வரும் ஆழமான சொற்களையே பேசுங்கள். உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிரதே? என்று பேச்சை ஆரம்பித்தால், பெண்கள் வசப்படுவார்கள். அதை அவள் நம்புகிற மாதிரி சொல்ல வேண்டும். நீங்கள் யாழ் இந்துக்கல்லூரியலா படித்தீர்கள்? நீங்கள் யாழ்ப்பாணமா? இப்படிக் கேளுங்கள். …
-
- 42 replies
- 10.3k views
-