Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ரிதிகம பிரதேச செயலகப் பகுதியிலுள்ள குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட அரிசியை பனகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் எடுத்துச் சென்று கோழிகளுக்கு உணவளித்துள்ளார். மேற்படி அரிசியை சாப்பிட்ட 7 கோழிகள் உயிரிழந்ததாக உரிமையாளர் சுகாதார பரிசோதகரிடம் முறைப்பாடு செய்துள்ளார். கோழிகளின் இறப்பு தொடர்பில் சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இறப்புக்கான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை, எனவே உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கவும், பரிசோதனை அறிக்கையை பெறவும் உத்தரவு பெறப்பட்டதாக பொது சுகாதார மருத்துவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/301509

  2. மகிந்த பிரதர்ஸ் பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில்... செய்த வேலை, கையிருப்பில் இருந்த தங்கத்தின் 90% த்தை மிகக்குறைந்த விலைக்கு விற்றுத்தள்ளியதுதான். இருப்பில் இருந்த, 19 ஆயிரம் கிலோ தங்கத்தில்... 18 ஆயிரம் கிலோவினை... அவுன்ஸ்க்கு, 1600 அமெரிக்க டொலர் என்ற மிகக்குறைந்த விலையில் விற்றுத் தள்ளியிருக்கிறது. அரசாங்கத்தால்... விற்கப்பட்ட அதே தங்கம் இன்று செட்டியார் தெருவில்... இரு மடங்கு விலைக்கு விற்கப்படுகிறது. செட்டியார் தெருவில் இருக்கும், பிரதான மொத்த வியாபார கடைகள் யாருடையது என விசாரித்தால் இன்னும் ஆச்சர்யம் காத்திருக்கும்... இந்த அரசாங்கம் எல்லாப் பக்கத்திலும் குழிதோண்டி வைத்துவிட்டது இனி யாரும் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது. …

  3. இப்பொழுதும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவளித்துக் கொண்டு, இராணுவத்துடன் ஒட்டுக்குழுக்களாக இயங்கிக் கொண்டிருக்கும் புளொட் இயக்கத்தை நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேர்த்து கொள்ள மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசுகிறார், தமது கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து விட்டதாக கூறிவருகிறார். ஆனால் மட்டக்களப்பில் புளொட் இயக்கத்தினர் அரசுக்கு ஆதரவளித்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தின் துணைக்குழுவாக இயங்கி வருகின்றனர். மட்டக்களப்பு மாநகரசபையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக கொண்டுவரப்ப…

    • 0 replies
    • 551 views
  4. வெளிநாடுகளுக்கு மருத்துவத் தொழில்களாக அனுப்புவதற்கும் தேவையான மருத்துவர்களை உருவாக்க அரசாங்கம் திட்டம் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவது தொடர்பில், அனுர அரசும் முந்தைய அரசுகளையும் போலவே பின்வாங்கி வருகின்றது என்று குற்றச்சாட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் வெளியிட்ட சமீபத்திய பதிவு தொடர்பாக பரவலான விவாதம் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும் நிலை உருவானால், மீட்டெடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்த்தன கருத்து

  5. அரண்மனை வடிவில் விமானம்… சவுதி அரேபியா இளவரசர் விலைக்கு வாங்கினார். ரியாத்: சவுதி அரேபியா இளவரசர் அதிநவீன ஏ380 சூப்பர் ஜம்போ விமானத்தை விலைக்கு வாங்கியுள்ளார். இந்த விமானம் அரண்மனை போன்று சகல வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டு வருகிறது. சவுதி அரேபியா நாட்டின் கோடிஸ்வரரும் இளவரசருமான அல்வாலீத் பின் தலால் கடந்த 2009-ம் ஆண்டு புதிய விமானம் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை 2770 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட அரண்மனை வடிவில் மாற்றியமைத்து வருகின்றனர். பறக்கும் அரண்மனை வடிவிலான இந்த விமானத்தில் 4 படுக்கைகள், மிகப் பெரிய அளவிலான படுக்கைகள் கொண்ட 5 அதி நவீன அறைகள், பிரார்த்தனை அறை, கம்ப்யூட்டர் வசதிகளுடன் கூடிய மீட்டிங் ஹால், ரோல்ஸ் ராய்ல் கார் நிறுத்தும் சொகுசு அறை உள்ளிட்டவை உள்…

  6. அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் மயிரிழையில் உயிர் தப்பிய ஷாருக்கான்: வீடியோ இணைப்பு அரபு பாலைவனத்தில் புதைக்குழியில் ஷாருக்கான மயிரிழையில் உயிர் தப்பிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. ஷாருக்கான் தனது தோழி மற்றும் பாதுகாவல்கள் இருவருடன் அரபு நாட்டில் உள்ள பாலைவனம் ஒன்றில் பயணம் மேற்கொண்ட போது, ஷாருக்கானின் கார் அங்கிருந்த புதைக்குழி ஒன்றில் சிக்குகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாருக்கான் மற்றும் அந்த காரில் இருந்த அனைவரும் உடனடியாக காரின் மேற்புறமாக வெளியேறி தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறாக முயற்சி செய்யும் பாதுகாவலர்கள் இருவர…

  7. உலகமொழிகளில், தமிழ் இலக்கிய படைப்புகளை கொண்டு வரும் வகையில், தமிழ் படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டு வருகின்றன. அதன் முதற்கட்டமாக, சீன, அரேபிய மொழிகளில் திருக்குறள், மொழி பெயர்க்கப்பட்டு, வெளியிடும் வகையில் தயார் நிலையில் உள்ளது. தமிழ் மொழி, தமிழ் இலக்கிய சிறப்பை, உலக நாடுகளுக்கு உணர்த்த, தமிழின் மிகச்சிறந்த நூல்களை, பல்வேறு மொழிகளில், மொழிபெயர்க்கும் பணிகளில், தமிழ் வளர்ச்சித்துறை ஈடுபட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக, திருக்குறள், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகள், மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. திருக்குறளின் ஒட்டுமொத்த குறள்களும், பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் தேர்ந்தெடுத்தப் படைப்புகளும், மொழிபெயர்க்கப்படுகின்றன. பாரதியார், பாரதிதாசன் ஆகியோரின் …

  8. Started by ampanai,

    முதன் முதலாக கிழக்கு ஆசியப் பகுதிகளில்தான் காகங்கள் தோன்றியதாக வரலாறு சொல்கிறது. அங்கிருந்து ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்கு காகங்கள் குடியேறின. சுமார் 40 வகையான காகங்கள் இருக்கின்றன. பொதுவாக அவை மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். 17 நாட்களில் குஞ்சு பொரிக்கும். இதன் ஆயுட்காலம் சராசரியாக 20 வருடங்கள். அமெரிக்கக் காடுகளில் வாழும் ஒரு சில இனங்கள் 30 வருடங்கள் வரை வாழ்கின்றன. அத்துடன் அவை 50 சென்டி மீட்டர் வரை வளர்கின்றன. அவற்றில் சிறியது, ‘ஃபிஷ் க்ரோ’ என்ற இனம். அண்டங்காக்கையைப் போல முழுக் கறுப்பாக இருக்கும். தண்ணீரில் உள்ள முட்டைகள், சிறிய பூச்சிகள், புழுக்கள்தான் அதற்குப் பிடித்த உணவு. பொதுவாக காகம் என்றாலே கறுப்பாகத்தான்…

  9. அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் ஒருவர் கைது SayanolipavanFebruary 13, 2022 புத்தளம் பாலாவி 2ம் கட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட அரிய வகை வெள்ளை நிற கழுகுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைக்கெபெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போதே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த அரிய வகை வெள்ளை நிற கழுகு (WHITE BELLIED SEA EAGLE ) HALIEETUS LEUCOGWTER இனத்தைச் சார்ந்தது என பொலிஸார் தெரிவித்தனர் குறித்த அரிய வகைக் வெள்ளை நிற கழுகு விற்பனை செய்வதற்காக வளர்க்கப்பட்டு வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கழுகும் புத்தளம் …

  10. அரியவகை இரட்டைத்தலை பாம்பு மக்களின் பார்வைக்கு! அமெரிக்காவின் கென்டக்கியில் அரியவகை இரட்டைத்தலைப் பாம்பு மக்களின் பார்வைக்கு வைக்கப்படுள்ளது. இந்த அரியவகை பாம்பு வீட்டு தோட்டப் பகுதியில இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பாம்பு வித்தியாசமாக இருப்பதை அறிந்த அப்பகுதி மக்கள் இந்த பாம்பு இனம் அரிய வகையைச் சேர்ந்த இரட்டைத் தலைப் பாம்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் இரு தலைகளும் தனித் தனியாக அசையக் கூடியதாக இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். ஒற்றை உடல் இரட்டைத் தலைகளுடன் பிறக்கும் பாம்புகள் நீண்ட நாள் வாழ்வது கடினம. இந்த நிலையில் கென்டக்கி வன உயிர் காப்பகத்தில் இந்த அரியவகை பாம்பு இனம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் கென்டக்கியில் வாழும் விஷத்தன்ம…

  11. அரியவகை மான் கண்டுபிடிப்பு! புத்தளம் – நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட தப்போவ பகுதியில் அரியவகை சந்தனம் நிறம் கொண்ட சருகுமான் ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளது. புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். குறித்த அரியவகை சந்தனம் நிறம் கொண்ட குறித்த சருகுமானை பிடித்த பிரதேசவாசிகள் அது தொடர்பில் புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விஜயம் செய்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சருகுமானை மீட்டு வனஜீவராசிகள் பிராந்திய அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு கைப்பற்றப்பட்ட குறித்த சருகுமானை நிகவெரட்டிய மிருக வைத்தியசாலை…

  12. அரியானாவில் உள்ள சோனிபட் நகரின் அருகே உள்ள குக்கிராமத்தை சேர்ந்த 16 வயது வாலிபன் தீபக் ஜங்ரா. மூன்று வருடங்களுக்கு முன் தனது தாய் ஹீட்டர் வேலை செய்யவில்லை என்று சொன்னதால் அதை சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது அவன் கையில் இருந்த ஸ்குருடிரைவர் தெரியாமல் மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் ஒயரின் மீது பட்டது. இதனால், அவனுக்கு ஷாக் அடித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக அந்த கிராமத்திற்கே மின்சாரம் தடைபட்டு இருளானது. இந்த சம்பவத்தால் ஆச்சர்யமடைந்த ஜங்ரா இரண்டு வாரங்கள் கழித்து டிவிடி பிளேயரில் சிக்கிக்கொண்ட திரைப்பட சிடியை எடுப்பதற்காக திறந்த போது வெறும் கையால் அதன் ஒயர்களை தொட்டுள்ளான். ஏதும் ஆகாததால் திரும்பத்திரும்ப தொட்டுப்பார்த்த அவன் மின்…

  13. புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,962 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 234-பேருக்கு கொரொனா தொற்று உள்ளது. கணிசமான நபர்கள் குணமடைந்தும் வருகிறார்கள்.இந்நிலையில், தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொரோனாவிடமிருந்து தற்காத்து கொள்ளும் வசதிகளை மத்திய அரசு, மக்களுக்கு வழங்கி வருகிறது. முன்னதாக எனது அரசு (MyGov) என்ற ஆப் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு தகவல்களை வழங்கி வந்தது. தற்போது கொரோனா வைரஸை டிராக் செய்யும் வகையிலான பிரத்யேக செயலியை உருவாக்கியுள்ளது. ஆரோக்கிய சேது என்ற அந்த செயலியை ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மொபைலில் உள்ள இருப்பிடம் காட்டும் வசதி மற்றும் ப்ளூடூத்தை இயக்கிவிட்டு, இச்செயலிய…

  14. அருகிவரும் உயிரினங்களை... பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – பிரதமர் மஹிந்த சட்டவிரோதமான முறையில் மிருகங்கள் வேட்டையாடப்படுவது தொடர்பாக உடனடியாக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அருகிவரும் உயிரினங்களை பாதுகாப்பது அரசாங்கதின் பொறுப்பு என்றும் ஆகவே அதற்கான நடவடிக்கைகளையும் செயற்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். நல்லத்தண்ணி பிரதேசத்தில் நேற்று முன்தினம் அரிய வகையிலான 7 வயது நிரம்பத்தக்க புலி மிருக பொறிக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளது. இவ்விடம் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுத்தை, புலி கொல்லப்படும் சம்பவம் தொடர்ச்சியாக இடம்ப…

  15. அருவியில் குளிக்கச் சென்ற தொழில் அதிபர்களின் நகைகளை குரங்கு ஒன்று, காவிரி ஆற்றில் வீசி போக்கு காடியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர்கள் நடராஜன் (80), அவரது நண்பர் ஆனந்தன் (44). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் காரில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தனர். காரை பேருந்து நிலையம் பகுதியில் நிறுத்தி விட்டு, அருவில் குளிப்பதற்காக இருவரும் சென்றனர். பிரதான அருவி பகுதிக்கு சென்ற அவர்கள், தாங்கள் அணிந்திருந்த விலை உயர்ந்த வைர மற்றும் தங்க நகைகளை கழற்றி ஒரு பையில் போட்டுள்ளனர். அதன் பின்னர், அவர்கள் அணிந்திருந்த ஆடைகள் மற்றும் நகைப்பையையும் அருகில் ஒரு மறைவிடத்தில் வைத்துவிட்டு இருவரும் அருவியில் உற்சாகமாக குளித்து உள்ளன…

    • 1 reply
    • 385 views
  16. அரேபியர்களும் யூதர்களும் இணைந்து உணவு உட்கொண்டால் பாதி கட்டணம் மாத்திரம் அறவிடும் இஸ்ரேலிய உணவகம் இஸ்­ரே­லி­லுள்ள உண­வ­க­மொன்று யூதர்­களும் அரே­பி­யர்­களும் இணைந்து உணவு உட்­கொண்டால் பாதி விலைக்கு உணவு வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது. இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கும் அரே­பி­யர்­க­ளுக்கும் இடை­யி­லான பதற்­றத்தை தணிப்­ப­தற்­காக இந்தத் தீர்­மா­னத்தை தான் மேற்­கொண்­ட­தாக இஸ்­ரே­லிய உண­வ­கத்தின் உரி­மை­யாளர் கோபி ஸப்ரிர் தெரி­வித்­துள்ளார். உண­வ­கத்தின் உரி­மை­யாளர் கோபி ஸப்ரிர் .................................................................................. “அரே­பி­ய­ர்களைக் கண்டு பயப்­ப­டு­கி­றீர்­களா? யூதர்­களைக் கண்டு அஞ்­சு­கி­றீர்­களா? எம்மைப…

    • 6 replies
    • 471 views
  17. அரேபியாவில் மாடு, கழுதை என்று திட்டிய கணவன் மீது வழக்கு! [Tuesday, 2014-05-06 22:46:59] சவுதி அரேபியாவில் மாடு, கழுதை என்று பொது இடத்தில் திட்டிய கணவனை கோர்ட்டுக்கு இழுத்துள்ளார் மனைவி.இதுகுறித்து சவுதி கெசட்டில் கூறியிருப்பதாவது: சவுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் (பெயர் வெளியிடப்படவில்லை), கிரிமினல் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தனது கணவர் அடிக்கடி தன்னை மாடு, கழுதை என்று திட்டி அவமானப்படுத்துகிறார். அத்துடன் தகாத வார்த்தைகளில் அசிங்கமாக பேசுகிறார். பொது இடங்கள் என்று கூட பார்க்காமல், மாடு, கழுதை என்று திட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்� என்று புகார் கூறியுள்ளார். இதையடுத்து பெண்ணின் கணவரை ஆஜர்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு கோர…

    • 2 replies
    • 548 views
  18. அநுராதபுரம் புளியங்குளம் பகுதியை சேர்ந்த பந்துல என்ற விவசாயி அரை ஏக்கரில் ஒரு கோடி ரூபாய்களை வருமானமாகப் பெற்று மிளகாய் பயிர்ச்செய்கையில் சாதனைப் படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விவசாய அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் அவருக்கு இந்த வருமானம் கிடைத்துள்ளது. பந்துல 10 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாகவும், தற்போதைய சந்தை மிளகாயின் விலைக்கு ஏற்ப குறைந்தபட்சம் 13 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்ட முடியும் எனவும் தெரிவித்துள்ளார் இதற்கு முன்னர், மிளகாய் பயிர்ச்செய்கையில் அதிக வருமானம் பெற்ற இரு விவசாயிகளும் திரப்பனை மற்றும் யாழ்ப்பாணத்தில் இருந்து பதிவாகியிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் 50 இலட்சமும் …

  19. அரை கிலோ எடையில் 5வது மாதத்திலேயே பிறந்த குழந்தை உயிர் பிழைத்தது எப்படி? பட மூலாதாரம்,RACHEL STONEHOUSE 24 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எங்கள் குழந்தை உயிர் பிழைப்பதற்கு 10சதவீதத்திற்கும் குறைவான வாய்ப்புகள்தான் இருக்கிறது என மருத்துவர்கள் கூறினர். ஆனால் எங்களது மகள் அவர்களின் கணிப்பை பொய்யாக்கிவிட்டள் என்று கூறுகின்றனர் ரேச்சல், கோரே தம்பதியினர். கடந்தாண்டு செப்டெம்பர் 6ஆம் தேதி, வேல்ஸ் நாட்டின் பிரிட்ஜெண்ட் (Bridgend) பகுதியில், ஒரு மாலை பொழுதில் சுவான்சீஸ் சிங்கிள்டன்(Swansea's Singleton) மருத்துவமனையில் வெறும் 515 கிராம் எடையில் இமோகின் என்னும் பெண் குழ…

  20. அரை நிர்வாணப் பெண்களின் ஆர்ப்பாட்டம்: அசராமல் வேடிக்கை பார்த்த புடின் ஜெர்மனி நாட்டின் ஹெனோவர் நகரில் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியொன்றுக்கு வருகை தந்த ரஷ்ய ஜனாதிபதி விலாடிமிர் புடினை எதிர்த்து அரை நிர்வாண கோலத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தப் போராட்டம் நடந்தபோது அந்த இடத்தில் ஜெர்மனியின் சான்செலர் ஏஞ்சலொ மேர்க்கலும் அருகிலிருந்தார். பெமன் என்ற பெண்கள் உரிமைகள் குழுவைச் சேர்ந்த 3 பெண்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று பேரும் மேலாடை எதையும் அணியவில்லை. புடின் உள்ளிட்ட குழுவினர் கண்காட்சி அரங்கத்திற்கு வந்தபோது திடீரென மூன்று பேரும் அவர்களை நோக்கிப் பாய்ந்தனர். அவர்களைப் பிடிக்க பொலிஸார் கடும…

  21. பியூனோஸ்: தாயின் கள்ளக்காதலனால் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான 14 வயது சிறுமியின் கருவை கலைக்க அர்ஜென்டினா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அர்ஜெண்டினா தலைநகர் பியுனோஸ் ஐரெஸ்-சில் இருந்து சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சால்டோ என்ற நகரில் வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர வயது பெண், தனது கணவரை விவாக ரத்து செய்துவிட்டு கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்தர். முதல் கணவர் மூலம் பிறந்த தனது 14 வயது மகளையும் தன்னுடன் வைத்து அவர் வளர்த்து வந்தார். சம்பவத்தன்று, அந்த பெண் வெளியே சென்றிருந்தபோது குடிபோதையில் இருந்த அவரது கள்ளக்காதலன் வீட்டில் தனிமையில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்து விட்டார். தற்போது 9 வார கருவை வயிற்றில் சுமந்திருக்கும் தன் மகளுக்கு கருக்கலைப்பு செய்வதற்காக …

    • 31 replies
    • 1.8k views
  22. [size=3]ஒரு முறை நேரு தமிழகம் வந்திருந்த போது பள்ளிக்கூடம் ஒன்றிற்குச் சென்று உரையாற்றினார். நேரு ஆங்கிலத்தில் உரையாற்ற, மொழிபெயர்ப்பாளர் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஒரு கட்டத்தில் நேரு, ‘வேறு யாராவது மொழிபெயர்க்கிறீர்களா?’ எனக் கேட்டார். அப்போது அங்கிருந்த பள்ளி மாணவர்களில் ஒருவன் எழுந்து சென்று அவருடைய பேச்சை மொழிபெயர்த்தான். அம்மாணவன் தான் பின் நாளில் அறிஞர் அண்ணா! அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டின் ய...ேல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள மாணவர்களிடம் உரையாடினார். உரையாடலின் இடையே ஒரு மாணவர் எழுந்து 'தாங்கள் ஆங்கிலத்திலும் வல்லவர் என்று தெரியும். ஆங்கில எழுத்துகளான ‘A,B,C,D’ ஆகிய நான்கு எழுத்துகளும் வராத நூறு வார்த்தைகளைக் கூற முடியுமா?' எ…

  23. தமிழால் இணைவோம் • 11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா. • பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும். • சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை. • காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து. • கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும்பழக்கத்தைச் சீனர்கள்கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள். • ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ். • யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர். • கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல் நாடு ஜெர்மனி. • இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.ச…

  24. அறிவியல் அதிசயம்: 24,000 ஆண்டுகள் பிறகு உயிர்த்தெழுந்த உயிரினம் 11 Views சைபீரியாவில் 24 ஆயிரம்ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய பல செல் உயிரினம் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் உள்ள அலீஸா ஆற்றில் இருந்து டெலாய்டு ரோட்டிஃபர் (Bdelloid Rotifer) என்கிற உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டெடுத்தனர். கிரிட்டோபயோசிஸ் என்கிற உறைந்த நிலையில் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின், இப்போது உருகிய பிறகு, எந்த வித பாலியல் ரீதியிலான உறவுகளுமின்றி, அந்த உயிரினத்தால் இனப்பெருக்கம் செய்து கொள்ள முடிந்தது. இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் அந்த உயிரினம் 10 ஆண்டுகள் வரை…

    • 4 replies
    • 653 views
  25. வாழப்பாடி அருகே தற்கொலைக்கு முயன்ற எஜமானை பிஸி என்ற நாய் காப்பாற்றியுள்ளது.சேலம் வாழப்பாடி அருகே அக்ரஹாரம் வைத்தி படையாச்சித் தெரு, ஆடு அடிக்கும் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(50). கூலித் தொழிலாளியான இவர் தனது வீட்டில் செல்லமாக நாய் ஒன்று வளர்த்து வந்தார். இதற்கு பிஸி என்று பெயர் வைத்திருந்தார்.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் சண்டை போட்டு விட்டு வெளியே சென்று விட்டார். வெகு நேரமாகியும் ரவிச்சந்திரன் வீட்டிற்கு வராததால் பிஸி தேடிச் சென்றுள்ளது. அப்போது, அந்த பகுதியில் உள்ள தனியார் கயிறு திரிக்கும் கம்பெனி அருகே ரவிச்சந்திரன் அமர்ந்திருப்பதை பிஸி கண்டுபிடித்து அவர் அருகில் சென்றது. ஆனால் ரவிச்ச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.