செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
யாழில் நடமாடிய... போலி, பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு... விளக்கமறியல்! பொலிஸார் எனத் தெரிவித்து பயணத் தடை உத்தரவை மீறி வீதிகளில் நடமாடிய இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார். அவர்களில் ஒருவர் பொலிஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்று மன்றில் அறிக்கையிடப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரில் பயணத் தடையை மீறி நடமாடிய ஒருவரை பொலிஸார் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அவர் தான் பொலிஸ் உத்தியோகத்தர் எனத் தெரிவித்ததுடன் பொலிஸ் அடையாள அட்டையின் நிழல் பிரதியையும் பொலிஸாருக்கு காண்பித்துள்ளார். வீதித் தடை கடமையிலிருந்த பொலிஸார் சந்தேகம் கொண்டு அவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்த போ…
-
- 0 replies
- 256 views
-
-
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் 7 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட 12, 14, வயதுடைய இரு சிறுவர்களை நேற்று திங்கட்கிழமை (14.06.2021) இரவு கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிராமம் ஒன்றில் சம்பவதினமான நேற்று மாலை, குறித்த வீட்டின் தாயார் அருகிலுள்ள வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில் குறித்த சிறுமி வீட்டில் தனிமையில் இருந்தபோது அந்த பகுதியைச் சேர்ந்த 12, 14 வயதுடைய இரு சிறுவர்கள் வீட்டினுள் புகுந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து, சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரிவித்ததையடுத்து, அவர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.…
-
- 0 replies
- 390 views
-
-
யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்! அனுமதிக்கு மேலதிகமாக பலரும் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம்(திங்கட்கிழமை) தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் குருநகர் பகுதியில் யாழ்.பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த யாழ்ப்பாணம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் 15 பேருக்கும் அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை உறுதிப்படுத்தி அவர்களை தனிமைப்படுத்தினர். நாடு முழுவதும் பயணத் தடை விதிக்கப்பட்ட…
-
- 0 replies
- 211 views
-
-
எம்.எம்.சில்வெஸ்டர் மழை வெள்ளத்தில் நடக்க முடியாத 7 மாத கர்ப்பிணியான தனது மனைவி சாந்தனியை 22 கிலோ மீற்றர் தூரம் தூக்கிக்கொண்டு சென்ற 28 வயதான தமிழ் இளைஞன் குறித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் சகோதர மொழி தேசிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தை கண்ட ஷெஹான் மாலக்க கமகே என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். காலி மாவட்டத்தின் ஹினிதும பகுதியிலுள்ள கொடிகந்த எனும் கிராமத்தில் வாடகை வீட்டில் வசிப்பர்களே இந்த இளம் தம்பதிகளான குமார் மற்றும் சாந்தனியாவார். சாந்தனியின் தாய் தந்தையரும் ஏழ்மையின் பிடியில் வாழ்ந்து வரும் சிங்கள குடும்பமாகும். அவர்கள் தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிப்பவர்கள் ஆவர். அவர்களைப் போலவே சாந்தன…
-
- 7 replies
- 478 views
-
-
``பத்து ஆண்டுகள் நான் ஓர் அறைக்குள் மட்டுமே வாழ்ந்த அனுபவத்தை மற்றவர்களுக்குச் சொல்லிப் புரிய வைக்க முடியாது. என் கணவர், அவரது உணவில் பாதியை எனக்குத் தந்தார்'' என்கிறார் வீட்டில் யாருக்கும் தெரியாமல் 10 ஆண்டுகள் ஓர் அறையில் வசித்த ஸஜிதா. `கில்லி' திரைப்படத்தில் பெற்றோருக்குத் தெரியாமல் கதாநாயகி திரிஷாவை விஜய் தனது வீட்டில் தங்க வைப்பது போன்ற காட்சி வரும். அதுபோல, காதலித்த பெண்ணை 10 ஆண்டுகள் தனது வீட்டின் ஓர் அறையில் யாருக்கும் தெரியாமல் தங்க வைத்துள்ளார் கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த இளைஞர். வீட்டில் தாய் தந்தை உட்பட ஐந்து பேர் வசித்தும், 10 ஆண்டுகளாக அதே வீட்டின் ஓர் அறையில் தன் மகனுடன் ஒரு பெண் வாழ்ந்தது குறித்து அவர்கள் அறியாமல் இருந்தது ஆச்ச…
-
- 5 replies
- 1.1k views
-
-
பாலியல் இலஞ்சம் கோரிய பிரதேச செயலாளர்- புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை! செங்கலடி பிரதேச செயலாளர் பாலியல் இலஞ்சம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கொழும்பில் இருந்து வருகைதந்த உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் பிரதேச செயலகத்திற்கு சேவை பெறச் சென்ற பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் பெற்றமை மற்றும் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவரை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியமை தொடர்பாக அரசாங்க அதிபர் மற்றும் கொழும்பு பொலிஸ்மா அதிபர் திணைக்களத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்ணால் முறைப்பாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று கொழும்பில் இருந்து சென்…
-
- 0 replies
- 220 views
-
-
-
- 11 replies
- 1.2k views
-
-
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கடற்கரையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (11) காலை உயிரிழந்த நிலையில் கடலாமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. அண்மையில் இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றிய கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆபத்தான பொருட்கள் என சந்தேகிக்கப்படும் சில பொருட்கள் நேற்று வியாழக்கிழமை மன்னார் வங்காலை கடற்கரை மற்றும் சிலாபத்துறை கடங்கரையில் கரையொதுங்கியது. இந்த நிலையில் அதிகாரிகள் குறித்த பகுதிக்குச் சென்று பார்வiயிட்டுள்ளனர். சிறிய உருண்டைகள் கடற்கரையேரங்கள் முழுவதிலும் சிதரிய நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(11) காலை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சிலாபத்துறை கட…
-
- 0 replies
- 307 views
-
-
ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றிய 10 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை- 16பேர் காயம்! பிரித்தானிய தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய பத்து பேர் ஆப்கானிஸ்தானில், சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ஹலோ டிரஸ்ட் தொண்டு நிறுவனம் மற்றும் ஆப்கானிஸ்தான் உட்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணமான பாக்லானில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 16பேர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் டோலோ நியூஸ் தளம் பகிர்ந்த காணொளியில், காயமடைந்தவர்களை மாகாண தலைநகர் புல்-இ-கும்ரி மருத்துவமனைக்கு அழைத்து வருவது காட்டப்படுகின்றது. அருகிலுள்ள வயலில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றிய அடுத்த நாளில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இஸ்லாமிய அரச குழுவான (ஐ.எஸ் அம…
-
- 0 replies
- 173 views
-
-
அறிவியல் அதிசயம்: 24,000 ஆண்டுகள் பிறகு உயிர்த்தெழுந்த உயிரினம் 11 Views சைபீரியாவில் 24 ஆயிரம்ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த ஒரு நுண்ணிய பல செல் உயிரினம் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ளது என புதிய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது. ரஷ்யாவின் ஆர்டிக் பகுதியில் உள்ள அலீஸா ஆற்றில் இருந்து டெலாய்டு ரோட்டிஃபர் (Bdelloid Rotifer) என்கிற உயிரினத்தை விஞ்ஞானிகள் கண்டெடுத்தனர். கிரிட்டோபயோசிஸ் என்கிற உறைந்த நிலையில் பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த பின், இப்போது உருகிய பிறகு, எந்த வித பாலியல் ரீதியிலான உறவுகளுமின்றி, அந்த உயிரினத்தால் இனப்பெருக்கம் செய்து கொள்ள முடிந்தது. இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் அந்த உயிரினம் 10 ஆண்டுகள் வரை…
-
- 4 replies
- 650 views
-
-
வாள் ஒன்றினை, வாயில் வைத்து... காணொளி வெளியிட்ட இளைஞன் கோப்பாய் பொலிஸாரினால் கைது! வாள் ஒன்றினை வாயில் வைத்து ரிக் ரொக் (TikTok) காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். https://athavannews.com/2021/1221583
-
- 0 replies
- 324 views
-
-
********** மோசடி பல வழி. மக்களே அவதானமாக இருங்கள். எனக்கு அண்மையில் ஒரு பெண் அமேசான் prime இல் இருந்து கால் பண்ணுவதாகவும் யாரோ ஐபோன் என் அக்கௌன்ட் இருந்து ஆர்டர் பண்ணி இருப்பதாகவும் உறுதி படுத்த கால் பண்ணுவதாக சொன்னார். நான் ஆர்டர் பண்ணவில்லை என்றதும் யாரோ என் கம்ப்யூட்டரை ஹக் பண்ணி விட்டார்கள் தான் ரிமோட் connect பண்ணி security setting செக் பண்ணவேண்டும் என்று என்றாள். மோசடி என்று தெரிந்து துண்டித்து பண்ணிவிட்டன்.இவர்களிடம் பொதுவாக வயோதிபர்கள்தான் பலியாகிறார்கள். கீழே இருக்கும் வெப்சைட் scammers பற்றிய விபரங்களை பார்க்கலாம். https://scammer.info/c/scams/5 பல youtubers இவர்களின் மோசடிகளை புட்டு புட்டு வைக்கிறார்கள். இவர்களும் திருந்றது மாதிரி இல்லை. …
-
- 3 replies
- 732 views
-
-
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை தென்னாப்பிரிக்கா எகுர்ஹுலேனியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனைபடைத்து உள்ளார். பதிவு: ஜூன் 09, 2021 10:23 AM மாற்றம்: ஜூன் 09, 2021 16:01 PM தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் கோசியம் தாமாரா சித்தோல் (வயது 37) இவரது கணவர் டெபோஹோ சோட்டெட்சி. கர்ப்பமாக இருந்த சித்தோல் பிரிட்டோரியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இவர் குழந்தைகளை பெற்ரார். இவருக்கு 10 குழந்தைகள் உள்ளது. ஏழு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்து உள்ளது. இதுகுறித்து சோட்டெட்சி கூறும் போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என்னால் அதிகம் பேச …
-
- 0 replies
- 252 views
-
-
சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில், தங்க நகைகளைத் தேடி... அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது. யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறை, ஊரிக்காடு மயானத்தில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட பகுதியில் தங்க நகைகளைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணியளவில் அடக்கம் செய்யப்பட்ட சடலம் ஒன்றில், தங்க நகை இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட வேளையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகபர்களை, தடுப்பு காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். மேலும் குறித்த சம்பவத்தை தொட…
-
- 5 replies
- 426 views
-
-
இலங்கையின் கடல் நிலவரம் இது தான் என்பது யாவரும் அறிந்ததே. இருப்பினும்... கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். Thiruvarudselvan Ampalavanar
-
- 23 replies
- 1.7k views
-
-
மாவனெல்ல சோகத்தில் துப்புக்கொடுத்த நாய் ! By கிருசாயிதன் (படம் பிரதீப் குமார தர்மரத்ன) நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வானிலையை அடுத்து பெய்த அடைமழை, வௌ்ளம், மண்சரிவுகளில் சிக்குண்டு, இதுவரையிலும் 16 பேர் மரணமடைந்துள்ளனர். மூவர் காணாமற் போயுள்ளனர். இயற்கை அனர்த்தங்களால், இரண்டு இலட்சத்து 70 ஆயிரத்து 12 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.மாவனெல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரும், சடலங்கள் நேற்று (05) மீட்கப்பட்டனர்.வீடொன்றின் மீது மண்மேடு, சரிந்து விழுந்ததிலேயே ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை (வயது 57), தாய் (53 வயது), மகன் (வய…
-
- 0 replies
- 269 views
-
-
பிரதமராக பதவியேற்க போகும் நாமல் ராஜபக்ச? எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு இலங்கையின் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என உறுதிப்படுத்தப்படாத அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனடிப்படையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது பதவியில் இருந்து விலகுவார் எனவும் பிரதமராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. மகிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெறுவார் அல்லது அவருக்காக புதிய பதவி உருவாக்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது. எவ்வாறாயினும் நாமல் ராஜபக்ச தற்போது வேகமான அரசியல் பயணத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அரசாங்கத்திற்குள் மிகவும் செயற்பாட்டு ரீதியான பொறுப்புகளை கொண்டு உள்ள முக்கியமான அமைச்சராக இருந்து வருகிறார். அதேபோல் நாட்டில் முக்கி…
-
- 2 replies
- 470 views
-
-
அதிபரின் ட்விட்டர் பதிவு நீக்கம்: ட்விட்டரையே தடை செய்தது நைஜீரியா 31 Views அதிபர் முகமது புஹாரியின் ட்விட்டர் பதிவொன்றை ட்விட்டர் நிறுவனம் நீக்கியதைத் தொடர்ந்து தங்கள் நாட்டில் ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ளது நைஜீரியா அரசு. கடந்த 1967 முதல் 1970 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். இன்றளவும் பல்வேறு குழுக்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இந்நிலையில், நைஜீரியா அதிபர் முகமது புஹாரி தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில், “அரசுக்கு எதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் தெரிந்திருக்க வாய்ப்…
-
- 0 replies
- 209 views
-
-
'எப்படி டார்லிங்' ("Kohomada Sudu") text - பலர் வைத்தியசாலையில். கொழும்பு பொரளை பகுதியில் 35 வயது சிங்கள பெண் பக்கத்து வீட்டு 24 இளைஞருக்கு அனுப்பிய 'எப்படி டார்லிங்' text இணை பார்த்தார் கணவர். யார் என்று கேட்க, அது உங்களுக்கு தான் அத்தான், மாறி எங்கேயோ போய் விட்டது என்று மனைவி கதை விட்டார். இறுதியில் தனது டார்லிங்கை நம்பாத கணவர், அடுத்த வீட்டுக்கு வேலி பாய்ந்து போய், 'எப்படி டார்லிங்' என்று கேள்வி கேட்கப்பட்ட இளைஞரிடம், அவருக்கும், தனது மனைவிக்கும் ஏதாவது 'தொடுப்பு' இருக்குதோ எண்டு விசாரிக்க போய், கத்திவெட்டு காயங்களுடன், இரண்டு குடும்ப உறுப்பினர்கள் பலர் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் கணவரும், கள்ள காதலரும் கொஞ்சம் சீரியஸ் நிலைமையில் உள…
-
- 26 replies
- 2k views
-
-
சீனா மறைக்க முயன்ற கொரோனா பரவல் ரகசியத்தை அம்பலப்படுத்திய இணையக் குழு... அதிர்ச்சி உண்மைகள்! ஜெனிஃபர்.ம.ஆ China கோவிட்-19 குறித்து சிறு தகவலையும் விடாமல் சேகரித்து, வரிசைப்படுத்தி, பொதுவெளியில் கிடைக்கும் ஆதாரங்களை தொகுத்து, வூஹான் பரிசோதனை கூடத்திற்கு எதிரான சூழ்நிலை ஆதாரங்களாக (Circumstantial Evidence) ஒன்றிணைத்து ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள். உலகம் தட்டை என்றுதான் நீண்ட நாள்களாக நம்பிக் கொண்டிருந்தது உலகம். வௌவால்களுக்கு கண் தெரியாது, ஒரே இடத்தில இருமுறை மின்னல் தாக்காது என சமகாலத்தின் அறிவியல் அறிஞர்கள் உண்மை என நம்பிக் கொண்டிருந்த பல விஷயங்கள் எதிர்கால கண்டுபிடிப்புகளால் தவிடு பொடியாகி இருக்கின்றன. அப்படித்தான்…
-
- 0 replies
- 581 views
-
-
RAW இதை செய்திருக்குமா? ------------------------------------------------------------------------------------------------------------------------------ நேபாள அரசியல் நெருக்கடியில் இந்திய அரசாங்கம் நுழைகிறது By W.A. Sunil கடந்த வாரம் இந்திய வெளியுறவுச் செயலர் ஷ்யாம் சரணால் காத்மாண்டுவிற்கு மேற்கொள்ளப்பட்ட விஜயமானது நேபாளத்திலுள்ள அரசியல் உறுதியற்ற தன்மை மற்றும் இந்திய நலன்களில் அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு பற்றிய புது டெல்லியின் பெருகிய அக்கறையை விளக்கமாக தெரியும்படி செய்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீட்பதற்கும், மாவோயிச கெரில்லாக்களுடன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகளை தொடக்குவதற்கும் அரசர் ஞானேந்திரா …
-
- 0 replies
- 494 views
-
-
எனக்கென்னவோ இதைப்பார்க்க என் தலைவன் தான் ஞாபகம் வந்தார் https://www.facebook.com/ankavai/videos/10158406607179506
-
- 1 reply
- 397 views
-
-
விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பற்களை உடைத்த பெண் பயணி - வீடியோ வாஷிங்டன் போஸ்ட்டின் தகவல்படி தாக்குதலில் இரண்டு பற்களை இழந்த விமான பணிப்பெண் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது. பதிவு: ஜூன் 04, 2021 12:57 PM வாஷிங்டன் தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாக்ரமென்டோவில் இருந்து சான் டியாகோ சர்வதேச விமான நிலையம் சென்றது விமானம் தரையிறங்க தயாரானது. விமான பெண் உதவியாளர் பயணிகளிடம் விமானம் தரையிறங்குவதற்கு தயாராகி வருவதால் பயணிகள் தங்கள் சீட் பெல்டை அணிந்து கொள்ளுமாறு கூறினார். அப்போது 28 வயதான விவியன்னா குயினோனெஸ் என்ற பெண் விமானப் பணிப்பேண்ணின் முகத்தில் குத்தி உள்ளார்.மற்றொரு பயணி விமானப் பணிப்பெண்ணைத் தாக்குவதைத் தடுக்க முயன்றார், ஆனால் அ…
-
- 0 replies
- 418 views
-
-
இலவச சூம் வகுப்புக்களை குழப்பும் விஷமிகள் – ஆசிரியர்கள் கவலை June 3, 2021 மாணவர்களுக்கு இலவச கற்றல் செயற்பாடுகளை சூம் செயலி ஊடாக முன்னெடுக்கும் போது , போலி இணைப்புக்களில் ஊடுருவும் விஷமிகள் கற்றல் செயற்பாடுகளை குழப்புவதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ளது. இதனால் மாண்வர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் சூம் செயலி ஊடாக கற்றல் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சில ஆசிரியர்கள் சூம் ஊடான கற்றல் செயற்பாடுகளுக்கு கட்டணம் அறவிட்டு , கட்டணம் செலுத்தியவர்களுக்கு இணைப்பு வழங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வறிய மாணவர்கள…
-
- 0 replies
- 205 views
-
-
கைலாசா மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதி- நித்யானந்தா குற்றச்சாட்டு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் நித்யானந்தா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா சாமியார் பெங்களூரில் ஆசிரமம் நடத்தி புகழ் பெற்றார். இந்த நிலையில் நித்யானந்தாவுடன் நடிகை ரஞ்சிதா ஒன்றாக இருப்பது போன்ற வீடியோ சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இதன் தொடர்ச்சியாக நித்யானந்தா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் கூறப்பட்டன. இது தொடர்பாக வழக்குகளும் போடப்பட்ட நிலையில், அதனை நித்யானந்தா எதிர்கொண்டு வந்தார்.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.இந்த…
-
- 1 reply
- 488 views
-