Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. மன்னார் உப்பளம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட நெடுந்தீவைச் சேர்ந்த டொறிக்கா ஜூயின் (வயது 21) என்ற இளம் யுவதியின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான தாய் மாமன் நேற்றைய தினம் திங்கட்கிழமை(24) வவுனியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மன்னாரில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினர் குறித்த பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர். குறித்த யுவதி கடந்த 11 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில்,அன்றைய தினம் இரவு மன்னார் சௌத்பார் பகுதிக்கு நடந்து சென்றுள்ளர். கொலை செய்யப்பட்ட யுவதி, யுவதியின் சகோதரி , அவரது பெரிய தாயின் மகனின் ம…

  2. நாம் தூங்கும் போது நம் உடலில் என்ன நடக்கிறது?

  3. நித்தியின் கைலாசாவும், ரிசர்வ் வங்கியும்! மின்னம்பலம் விநாயகர் சதுர்த்தியான இன்று நித்யானந்தாவால் உருவாக்கப்பட்ட நாடாகக் கூறப்படும் கைலாசாவின் புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. 2010ல் பாலியல் சர்ச்சையில் சிக்கியவர் நித்யானந்தா. தற்போது இந்தியாவை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கிறார். அவர் எங்கிருக்கிறார் என்ற விவரம் இதுவரை யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் ஆயிரக்கணக்கான கி.மீ தொலைவில் இருக்கும் குட்டித் தீவான ஈகுவாடரில் இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவும் உறுதியான தகவல் அல்ல. தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில், 40க்கும் மேற்பட்ட விசாரணைகளில் ஆஜராகாமல் இருந்ததற்காகக் கர்நாடக உயர் நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு கடுமையான கண…

    • 5 replies
    • 918 views
  4. ரிஷாட் – மன்னார் ஆயர் நேற்று சந்திப்பு! மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் எம்பியுமான ரிஷாட் பதியூதீனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (23) மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் முஷர்ரப் முது நபீன் எம்பி, மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்டனி விக்டர் சோசை அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டனர். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/ஆயர்/

  5. நாய்க் கடிக்கு இலக்கான சிறுவனும் பெண்ணும் பலி! நாய் கடிக்கு இலக்கான சிறுவன் (15-வயது) ஒருவனும் தாய் (39-வயது) ஒருவரும் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் – சங்கரத்தை, வட்டுக்கோட்டையை சேர்ந்த தவச்செல்வன் தர்சன் என்ற சிறுவன் சில வாரங்களுக்கு முன்னர் நாய்க்கடிக்கு இலக்காகியுள்ளான். எனினும் அது தொடர்பில் சிறுவன் தமது வீட்டில் தெரிவிக்கவோ தடுப்பூசி போடவோ இல்லை. இந்நிலையில் நேற்று (22) இரவு சிறுவன் பதட்டமாகவும் பயமாகவும் உள்ளது என்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளான். இதேவேளை மன்னார் – தா…

  6. ”என் கணவர் சண்டையே போடாமல் ஓவர் லவ்சாக இருக்கிறார்” : 18 மாதங்களில் டைவர்ஸ் கேட்ட மனைவி.! தன் கணவரின் அளவுக்கதிகமான அன்பை தன்னால் பொறுத்துக்கொள்ளமுடியவில்லை. கடந்த 18 மாதங்களில் ஒருமுறை கூட சண்டைபோடவில்லை என்று ஒரு பெண் விவாகரத்துக் கோரியிருக்கிறார். உத்தரபிரதேசம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் திருமணமாகி 18 மாதங்களிலேயே விவாகரத்துக் கோரியுள்ளார். விவாகரத்துக்காக சம்பலில் உள்ள ஷரியா நீதிமன்றத்தை அணுகிய அவர் சொன்ன காரணம் நீதிமன்றத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியது. காரணம், அவர் கணவர் தன்னுடன் சண்டை போடுவதில்லை. அளவுக்கதிகமாக நேசிக்கிறார் என்பதுதான் அவருடைய பிரச்னை. இந்தி நாளிதழான டைனிக் ஜாக்ரானின் அறிக்கைப்படி, அந்த பெண்ணுக்கு கணவரின் அதீத அன்பை பொறுத்துக…

  7. விஷம் அருந்திய ரஷ்ய எதிர்க்கட்சி அரசியல் தலைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி! ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (Alexei Navalny) விஷம் அருந்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை 44 வயதான அலெக்ஸி நவல்னி, சைபீரியாவில் உள்ள டாம்ஸ்க் நகரிலிருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு சென்ற விமானத்தில் பயணித்தார். இதன்போது, திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் விமானம் ஓம்ஸ்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து நவல்னியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘விஷம் அருந்தியதால் மயக்கமடைந்த நவல்னி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித…

  8. கேரளாவில் அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையில் 100 வயதைக் கடந்த ஒருவர் கொரோனாவில் இருந்து மீண்டார் கேரளாவில் 100 வயது கடந்த ஒருவர், அரசு ஆஸ்பத்திரி சிகிச்சையில் கொரோனாவில் இருந்து வெற்றிகரமாக மீண்ட அதிசயம் அரங்கேறி இருக்கிறது. பதிவு: ஆகஸ்ட் 20, 2020 04:54 AM கொச்சி, சீனாவில் தோன்றி உலக நாடுகளையெல்லாம் ஆட்டிப்படைத்து வருகிற கொரோனா வைரஸ் தாக்கம், முதியவர்களைத்தான் அதிகமாக குறி வைத்து தாக்குகிறது. நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாக உள்ளதால் 60 வயது கடந்தவர்கள்தான் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கவும் நேரிடுகிறது. உலகமெங்கும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கேரள மாநிலத்தில், கொல்லத்தில் ஏற்கனவே ஆஸ்மா பீவி என்ற 105 வயது மூதாட்டி, கொரோனா பாதித்தபோத…

  9. பிரதீப்சிங்காக மாறிய லொக்கா; திடுக்கிடும் உண்மைகள் – மூவர் கைது! இந்தியாவில் இறந்து விட்டதாக கூறப்படும் இலங்கை பாதாளக் குழுத் தலைவரான அங்கொட லொக்காவுக்கு போலியான ஆவணங்கள் தயாரித்து உதவிபுரிந்த குற்றச்சாட்டில் இந்தியா – கோயம்புத்தூர் சிட்டி பொலிஸாரால் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. லொக்காவுடன் இருந்த கொழும்பைச் சேர்ந்த அமானி தஞ்சி (27-வயது), மதுரைச் சேர்ந்த சிவகாமி சுந்தரி (36-வயது), தற்போது திருப்பூரில் வசித்து வரும் ஈரோடைச் சேர்ந்த எஸ்.தனேஸ்வரன் (32-வயது) ஆகியோரை நேற்று (02) பீலமேடு பொலிஸார் கைது செய்தனர். லொக்கா தனது பெயரை பிரதீப் சிங் என மாற்றி இந்திய பிரஜையாக ஆதார் அ…

    • 2 replies
    • 686 views
  10. மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் தீ பரவல்! கொத்மலை – வேவன்டனில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் வீட்டின் கூரை முழுமையாக சேதமடைந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா தீயணைப்பு படைப்பிரிவுக்கு சொந்தமான தீயணைப்பு வாகனத்தின் மூலம் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து, மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வரான இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சியின் ஆதர…

  11. இலங்கை தம்பதி ஒன்று தங்களது 10 குழந்தைகளுடன் துபாயில் வசிப்பிடத்தை தேடி பெரும் போராட்டத்தை சந்தித்து வருகின்றனர். கோவிட்-19 தொற்று காரணமாக குடும்ப தலைவருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. குடும்ப தலைவரான 52 வயதான இமாமுதீன் மீரா லெபே(Imamudeen Meera Lebbe), தனது மனைவி சித்தி ஃபஸிலாவுடன்(Sithy Fazila), 6 முதல் 20 வயதுக்குட்பட்ட தனது 10 குழந்தைகளை அழைத்து கொண்டு கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமீரகத்திற்கு வந்துள்ளார். தனது நிலை குறித்து கலீஜ் டைம்ஸிடம் பகிர்ந்துள்ள இமாமுதீன், “எனது குடும்பம் என்னையும் சேர்த்து மொத்தம் 12 உறுப்பினர்களை கொண்டது. என் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்த்து யாரும் தங்குவதற்கு இடம் கொடுக்க மறுத்து திருப்பி அனுப்புகின்றனர். தற்…

  12. கொரோனா வைரஸ், முடக்கநிலை காரணமாக... தென்னாபிரிக்காவில் குற்ற வீதம் வீழ்ச்சி முடக்கநிலை அமுலில் இருப்பதன் காரணமாக முதல் மூன்று மாதங்களில் தென்னாபிரிக்காவில் குற்றங்கள் 40% வரை குறைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பாலியல் வன்முறை மற்றும் எரியூட்டல் உள்ளிட்ட பெரும்பாலான குற்றங்கள் குறைந்துவிட்டதாக பொலிஸ்துறை அமைச்சர் கூறியுள்ளார். இருப்பினும் கொரோனா வைரஸ் முடக்கநிலையின் போது மதுபானம் மீதான தடை விதிக்கப்பட்டதால் மதுபானக் கடைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று அவர் தெரிவித்தார். உலகின் மிக அதிகமான குற்ற விகிதங்களில் முன்னிலையில் உள்ள தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்றினால் 500,000 க்கும்…

  13. கொரோனாவை விரட்ட...களிமண் பூசி சங்கு ஊத வேண்டும்... பாஜக எம்.பி ரிப்ஸ்.!! ஜெய்ப்பூர்: கொரோனா வைரஸ் என்ற அரக்கனை விரட்டுவதற்கு உலகமே இன்று மருந்து கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது. உலக நாடுகளில் சில மருந்து கண்டுபிடிப்பில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில் பாஜக தலைவர்கள் ஆளுக்கொரு டிப்ஸ் கொடுத்து மக்களை குழப்பி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது சேர்ந்து இருப்பவர் பாஜக எம்.பி. சுக்பீர் சிங். இவர் கொடுக்கும் டிப்ஸ், உடல் முழுவதும் களிமண் பூசிக் கொள்ள வேண்டும், சங்கு ஊத வேண்டும் என்பதுதான். ராஜஸ்தான் மாநிலத்தில், டாங்க்-சவாய் மாதோபூரைச் சேர்ந்த இந்த எம்.பி. கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தி கிடக்க வேண்டுமானால், களிமண் சகதியில் அமர்ந்து கொ…

  14. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர் அரசாங்கத்தில் இணைவாரா?? August 14, 2020 தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரே குறித்த தகவலை அனுப்பியுள்ளார். இருப்பினும், அரசாங்கம் அதற்கு இன்னும் சாதகமான பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவு மற்றும் கட்சிக் குள்ளான உள் பிரிவு காரணமாக பாதி பேர் விரக்தி யடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார். http://thinakkural.lk/article/6…

  15. பிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் கரோனா தொற்று: சீனா பிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழியில் கரோனா தொற்று இருந்ததாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “சீனாவில் உள்ள ஷென்சென் நகருக்கு பிரேசிலிருந்து கோழி இறைச்சிகள் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த நிலையில் இறைச்சிகளை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தியதில் கரோனா தொற்று உறுதிப்படுத்தட்டப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை வாங்கும்போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஷென்சென் நகர அரசு தெரிவித்துள்ளது. கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் விள…

  16. நாங்கள் ஏன் தோற்றே போகின்றோம் நாம் தொடர்ந்தும் தோற்றுக்கொண்டே இருக்கிறோம். இனியும் தோற்பதற்குரிய செயல்களையே ஆற்றிக்கொண்டிருக்கிறோம். ஒரு குட்டிக்கதை கேளுங்கள் மனிதன் முதன்முதலாக ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்தபோது அதன் வலுவுக்கு (power) குதிரை வலு (Horse power) என்று பெயர் வைத்தான். அவனுடைய வீட்டிலிருந்த நாய் கடுப்பானது. மனிதன் தன்னைத்தான் எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறான். வீட்டை காவல் காக்க, வேட்டையாட, நன்றியுணர்வோடு இருக்க.இப்படி பல தேவைகளுக்கு பயன்படுத்துகின்றான். கண்டுபிடித்த இயந்திரத்தின் வலுவுக்கு நாய் வலு (Dog power)என்று பெயர் வைத்திருக்கலாம் தானே என்பது நாயின் ஆதங்கம். #தனது ஆதங்கத்தை நேரடியாக மனிதனிடம் சொல்லி கவலைப்பட்டது. மனிதன…

    • 1 reply
    • 1.1k views
  17. யாழ் பருத்தித்துறை பகுதியில் கடலட்டை வாடி தீக்கிரை யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வாடி அமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவோரது நான்கு வாடிகள் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த கடலட்டை வாடியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் அண்மையில் தமது சொந்த இடமான சிலாவத்தை பகுதிக்கு தமது ஊர் தேவாலயம் ஒன்றின் திருநாளுக்காக சென்றிருந்தனர்.இந்நிலையில், அவர்கள் செல்லமுன்னர், தமது தொழில் உபகரணங்களை பாதுகாப்பாக ஒருவரது வீட்டில் வைத்துவிடுட்டுச் சென்றுள்ள நிலையிலேயே இந்த தீக்கிரையாக்கும் சம்பவம் இடம்பெற்…

  18. லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகத் தனது அடையாளங்களில் ஒன்றான மூக்கு கண்ணாடியை ஆபாச பட முன்னாள் நடிகை மியா காலிஃபா ஏலம் விட்டுள்ளார். லெபனான் வெடிப்பு லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகம் அருகே கடந்த செவ்வாய்க்கிழமை மாலை நடந்த வெடிப்பில் நூற்றுக்கும் அதிகமான பேர் பலியாகி உள்ளனர், அதில் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த வெடிப்புச்சம்பவம், அந்நாட்டு பொருளதாரத்திலும், அரசியல் சூழலிலும் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் காணொளி வாயிலாக நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பேசுகையில், லெபானனில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு சர்வதேச…

  19. விமான நிலையத்தில் சிக்கிய பெருமளவு போதை மாத்திரைகள்; பெறுமதி பல மில்லியன்கள்! கடதாசி பெட்டியில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பொரும் தொகை போதை மாத்திரைகள் கட்டுநாயக்க விமான நிலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது 24.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4,960 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்றின் ஊடாக ஆடைகள் இறக்குமதி செய்வதாக தெரிவத்து இவ்வாறு போதை மாத்திரைகளை நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. https://newuthayan.com/விமான-நிலையத்தில்-சிக்கி/

  20. மனைவிக்காக சிலிகான் சிலை வடித்த கணவர்: நவீன கால ஷாஜகான் பட்டம் வழங்கி உருகும் நெட்டிசன்கள் ஸ்ரீநிவாச குப்தா, மாதவியின் சிலை, சிந்துஷா, அனுஷா. கர்நாடகா மனைவிக்காக சிலிக்கான் சிலை வடித்த கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்ரீநிவாச குப்தா இணையவாசிகளால் நவீன கால ஷாஜஹான் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார். ஷாஜஹான் அன்று காதலிக்காக நினைவுச்சின்னம் எழுப்பினார் ஸ்ரீநிவாச குப்தா இன்று மனைவிக்காக சிலிகான் சிலை வடித்துள்ளார். இரண்டும் காதல் சின்னமே. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கிரகப்பிரவேச புகைப்படம் இணையத்தின் வைரல் புகைப்படமாகியுள்ளது. அந்தப் புகைப்படம் இத்தனை கவனம் ஈர்க்கக் காரணம் அதிலிருந்த பெண்ணின் சிலிகான் சிலை. உற்று நோக்கினால் மட்டுமே …

    • 3 replies
    • 572 views
  21. டுபாயில் நடைபெறும் முப்பரிமாண ஓவியத் திருவிழா! August 11, 2020 டுபாயில் கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் பிராண்ட் டுபாய் (Brand Dubai) (அரச ஊடகத்துறையிலுள்ள பிரிவு) சார்பில் முப்பரிமாண ஓவியத் திருவிழாவொன்று நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக டுபாயிலுள்ள முக்கிய வீதிகளில், முப்பரிமாண ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. மேலும் குறித்த ஓவியங்கள் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஓவியக்கலைஞர்களால் வரையப்படுவதாகவும் தற்போது சிட்டி வாக் பகுதியில் ஓவியங்கள் வரைந்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவிழாவானது இம் மாத இறுதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://thinakkural.lk/article/…

  22. மன்னார் கடலில் கரையொதுங்கிய ‘கடற்பன்றி’ என்றழைக்கப்படும் அரியவகை மீன்! மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி ஆதாம் பாலத்திற்கு உற்பட்ட தேசிய வனப் பூங்கா கரையோரப்பகுதியில் ‘கடற்பன்றி’ என பெயருடைய பாரிய மீன் சடலமாக கரையொதுங்கியது. இதனை அவதானித்த கடற்கரையோர ரோந்துப் பணியில் ஈடுபட்ட கடற்படையினர், குறித்த பகுதி வன ஜீவராசிகள் தினைக்களத்தினருக்கு தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்து, வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த பகுதிக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் சென்று பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அதனடிப்படையில் குறித்த மீனின் ஒரு பகுதி உணவுக்காக வேட்டையாடப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த கடற்பன்றி இனமானது தற்போது அருகிவரும் பாலூட்டி மீன் இனத்தைச் சேர்…

  23. ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலிருந்து விலக ரணில் தீர்மானமா? August 9, 2020 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிர மசி ங்க கட்சியின் தலைமையிலிருந்து நீக்க முடிவு செய் துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் கட்சியின் வலுவான தோல்வி மற்றும் கட்சியின் மூத்தவர்களால் மேற்கொள்ளும் அழுத்தம் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அண்மையில் கட்சி மூத்தவர்களுடனான சந்திப்பின் போது, ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவர் பத வியை இராஜினாமா செய்யத் தயாராக இருப் பதாக்கத் தெரிவித்தார். எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை ரணில் தலைமைத்து வத்தில் இருக்க ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பி…

  24. தெரு நாய்க்கு பணி அடையாள அட்டையுடன் கார் விற்பனையாளர் பணி பிரேஸிலில் எஸ்பிரிட்டோ சேண்டா மாநிலத்தில் உள்ள சொர்ரா எனும் பகுதியில் ‘ஹையுண்டாய் கார் காட்சியறை’ ஒன்று அமைந்துள்ளது. அந்த காட்சியறைக்கு அருகில் சுற்றித் திரிந்த தெருநாயோடு காட்சியறை ஊழியர்களுக்கு நெருங்கிய அன்பு உருவாகியுள்ளது. அவர்களின் செல்லப்பிராணியாக அவர்கள் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் அந்த நாயை தங்கள் குடும்பத்தில் ஒன்றாக நினைத்து, அதை சேர்த்துக் கொண்டு கௌரவ ஊழியர் பணியையும் வழங்கியுள்ளனர். அது மட்டுமன்றி ‘டக்சன் பிரைம்’ எனப் பெயருள்ள அந்த நாய்க்கு பணி அடையாள அட்டையும் வழஙகியுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.