தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி. (மழை பெய்யாமல் பொய் படுமானால் கடல் சூழ அகன்ற உலகமாக இருந்தும் உள்ளே பசி நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.) திருவள்ளுவர் துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய து¡உம் மழை. (உண்பவர்க்கு தக்க உணவுப் பொருட்களை விளைத்துத் தருவதோடு பருகுவார்க்கு தானும் ஒர் உணவாக இருப்பது மழையாகும்.) திருவள்ளுவர் வான்சிறப்பு வான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. (மழை பெய்ய உலகம் வாழ்ந்து வருவதால் மழையானது உலகத்து வாழும் உயிரிகளுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.) திருவள்ளுவர் சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினு¡உங்கு ஆக்கம் எவனோ உயிர்…
-
- 15 replies
- 4.3k views
-
-
மலேசியாவில் கட்டுரை இலக்கியங்கள் பற்றி எழுதும் முல்லை இராமையா இப்படிக் கூறுகிறார்: "(கடந்த 130 ண்டுகளில்) மலேசியாவின் பல நகரங்களில் 200-க்கு மேற்பட்ட பத்திரிகைகள் (நாள், வார, மாத இதழ்கள் பதிப்புக்குக் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அந்தப் பத்திரிகைகளையெல்லாம் சிறிது காலமோ நீண்ட காலமோ வாழவைக்கக் கட்டுரைகள் பெரும்பங்குற்றியிருக்க வேண்டும்" . மலேசியாவில் தமிழர் வாழ்வின் ஆரம்பக் கட்டங்களில் அவர்களின் மொழி, கலை, இலக்கிய, சமுதாய வாழ்வின் பிரதிபலிப்பாக இருந்து அவற்றை வழி நடத்தவும் இந்தக் கட்டுரைகள் பெரும் பங்கு ற்றியிருக்கின்றன என்பது சரியான ஊகமே. இக்கட்டுரைகள் சில வேளைகளில் நூல் உருவம் பெறும்போதுதான் அவை வரலாற்றில் நிலைக்கின்றன. அவற்றைப் பற்றியே இக்கட்டுரையில் பார்க்கவிருக்கிற…
-
- 2 replies
- 11.7k views
-
-
தொடரும் தவிப்பு. (உண்மைக்கதையின் வதைசொல்லும் பார்வையிது) - சாந்தி ரமேஷ் வவுனியன் - 'தொடரும் தவிப்பு" தூக்குமர நிழலில் நிற்கும் ஒரு மகனை மீட்கப் போராடும் ஒரு தாயின் கதை. இல்லை முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு இன்றுவரை விடுதலையாகாமல் தூக்குத் தண்டனைக்கான நாள் குறிக்கப்படாமல் சிறையிருக்கும் பேரறிவாளனின் கதை இந்த தொடரும் தவிப்பு. உண்மையை உள்ளபடி ஆவணப்பதிவாக்கியவர் ப.ழ.நெடுமாறன் அவர்களின் மகள் பூங்குழலி. 2004யூன் மாதம் வெளிவந்த இந்நூல் பற்றி எழுத வேண்டும் என எண்ணிய கணங்கள் ஒவ்வொன்றும் எதை எழுத என்று குழம்பிவிட்ட தருணங்கள் பல... நூலைக் கையிலெடுத்து வாசித்து முடியும் வரையும் கண்களிலிருந்து கண்ணீர் வடிவதை தவிர்க்க முடியாதபடி…
-
- 12 replies
- 3.4k views
-
-
தமிழன் என்றால் இப்படிதான் வாழவேண்டும் என்று வழிகாட்டிய கவிஞர் . இன்று இருந்திருந்தால் தமிழீழ விடுதலைக்கே ஒரு வெண்பா பாடி இருப்பார் அவரைப்பற்றி மீள்நினைவுகளை தெரிந்தவர்கள் இங்கே பதியுங்களேன்
-
- 1 reply
- 1.7k views
-
-
"தேடிச் சோறு நிதந் தின்று - பல சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பல செயல்கள் செய்து - நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" என்ற பாரதியாரின் கவிதை வரிகள் தனி ஒரு கவிதையாக உள்ளதா அல்லது கவிதையொன்றின் பகுதியாக உள்ளதா? தெரிந்தவர்கள் அறியத் தாருங்கள்.. பி.கு. இக் கவிதை வரிகள் கமல் நடித்த "மகாநதி" படத்திலும் வந்ததாக ஞாபகம்.
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழரின் கலைவடிவங்களில் ஒன்றான வில்லிசையை இலங்கையிலும் மலேசியா, இந்ததியா போன்ற நாடுகளிலும் 80ம் ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக நிகழ்த்தியோரில் கலாவிநோதன் சின்னமணி கணபதிப்பிள்ளை அவர்களும் ஒருவர். அவர் தாயகத்திலிருந்து வந்து சுவிஸ் நாட்டில் 2004ல் நிகழ்த்திய 'வள்ளி திருமணம்' என்ற வில்லிசை நிகழ்வு யாழின் ஒளித்தடம் பகுதியில் உள்ளது.
-
- 26 replies
- 7k views
-
-
சிதம்பரம் நடராசன் கோயிலில் திருவாசகம் பாடலாம் என்று இந்து அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்து விட்டது. இந்து அறநிலையத் துறை ஆணையர் திரு. பிச்சாண்டி அவர்கள் விசாரணை செய்து, நடராசன் கோயிலில் தேவாரம், திருவாசகம் பாடுவதற்கு அனுமதியளித்துள்ளார். நீதிமன்றத்தின் பழைய தீர்ப்பினை எடுத்துக்காட்டியும், சம்பிரதாயங்களை மேற்கோள்காட்டியும் இந்து அற நிலையத்துறை ஆணையர் அத்தகைய ஆணை ஒன்றினைப் பிறப்பித்தார். ஆறுமுகசாமி என்ற சிவ பக்தர் (வயது 73) இந்தப் பிரச்சினைக்காகத் தொடர்ந்து போராடிக் கொண்டும் வருகிறார். அவரை தில்லை நடராசன் கோயில் தீட்சதர்கள் அடித்து கையையும் முறித்தனர். அதுபற்றி காவல்துறையில் அவர் புகார் கொடுத்தும், தீட்சதர்கள…
-
- 0 replies
- 956 views
-
-
40 வருடங்களில் நலிந்த தமிழ் [30 - May - 2007] * `ஊருக்கு உபதேசம் உனக்கல்லடி மகளே' என்ற மனப்பான்மையால் ஏற்பட்ட பின்னடைவு தமிழக முதல்வர் கருணாநிதி ஒரு விழாவில் பேசும்போது, தமிழ் வானொலி, தொலைக்காட்சிகளில் செய்தி படிப்பவர்கள் எப்படித் தமிழை உச்சரிக்கிறார்கள் என்பதைத் தனக்கே உரிய தனி முத்திரையோடு, `வல்லுவர், சொள்ளுவர்" என்பன போன்ற எடுத்துக்காட்டுகளைக் கூறி விளக்கினார். தமிழகத்தில், "நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், இளங்கோ, இளம்பரிதி, தொல்காப்பியன், தமிழரசி, வளர்மதி, மங்கையற்கரசி, அருள்மொழி, மான்விழி, தேன்மொழி, கனிமொழி போன்ற பெயர் கொண்டவர்களை இன்று நீங்கள் பார்த்தால், அவர்கள் அனைவரும் 99 விழுக்காடு, குறைந்தது 40 வயதைத் தாண்டியவர்களாகவே இருப்பார்கள். "…
-
- 17 replies
- 10.4k views
-
-
சிலம்பிலே திருமணக்காட்சி தமிழர் திருமண முறை பற்றி அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் ஒன்றும் கைகொடுக்கவில்லை. அவற்றில் ஒன்றிரண்டிலே உவமைப் பொருளாகத் திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது. திருமணத்தை முழுமையாகக் காட்சிப்படுத்தும் செய்யுள் ஒன்றுகூட இல்லை. தொல்காப்பியத்திலே திருமணம் பற்றிச் சொல்லப்படுகிறது என்றாலும் அதிலும் மேலெழுந்தவாரியாகச் சுட்டிச் சொல்லப்படுவதன்றி விரிவாகக் கூறப்படவில்லை. திருமணக் காட்சியை முழுமையாகக் காட்டும் முதல் இலக்கியம் சிலப்பதிகாரம்தான். அதிலே காப்பிய நாயகி, நாயகனான கண்ணகி - கோவலன் திருமணம் பற்றிக் கூறப்படுகிறது. அது வருமாறு: "யானை யெருத்தத்து அணியிழையார் மேலிரீஇ மாநகர்க் கீந்தார் மணம் அவ்வழி முரசியம்பின முருடதிர்ந்தன முறையெ…
-
- 2 replies
- 1.9k views
-
-
நிலம் 1. நிலம் (பொதுவாக சொல்வது) 2. கல்லாங்குத்து நிலம் - கற்கள் மிகுந்து காணப்படும் நிலம் 3. செம்பாட்டு நிலம் - செம்மண் நிலம் 4. மேய்ச்சல் நிலம் - கால்நடைகள் மேய்யும் நிலம் 5. வட்டகை நிலம் - சுற்றிலும் வேலியிடப்பட்ட நிலம் 6. அசும்பு -- வழுக்கு நிலம் 7. அடிசிற்புறம் - உணவிற்க்காக விடப்பட்ட மானிய நிலம் 8. அடுத்தூண் - பிழைப்புக்கு விடப்பட்ட நிலம் 9. அறப்புறம் - தருமச் செயல்களுக்கு வரிவிலக்குடன் விடப்பட்ட இடம் 10. ஆற்றுப்படுகை - நதி நீர் பாசனத்தில் உள்ள வண்டல் படுகை நிறைந்த நிலம் 11. இதை - புன்செய் சாகுபடிக்கான நிலம் 12. இறையிலி - வரி நீக்கப்பட்ட நிலம் 13. உவர்நீலம் - உப்புத்தன்மை கொண்ட நிலம் 14. உழவுகாடு - உழவுக்கேற்ற நிலம் 15. உ…
-
- 9 replies
- 45.6k views
-
-
தொல்காப்பியரும் சம்ஸ்கிருதமும் தொல்காப்பியம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தியதென்பது ஒரு முடிவு. அது எத்தனை யாயிர வருடங்களுக்கு முந்திய தாயினுமாகுக; அதற்கு முந்தியே தமிழகத்திற் சம்ஸ்கிருதமுண்டு. அது தமிழகத்திற்கு வந்த மொழியென அந்நூல் சொல்லவில்லை. அம்மொழிச் சொற்களைத் தமிழ் நூல்களில் வழங்குவதற்கு அதுவே விதியும் வகுத்தது. அச்சொற்களை திசைச்சொற் கூட்டத்திலும் அது சேர்த்திலது. அம்மொழி வேதமும் அந்நூலில் இடம் பெற்றது. அங்ஙனமாகப் பின்வந்த சங்க நூல்களும் அம்மொழியின் சம்பந்தத்தையும், சகாயத்தையும் பெற்றனவே யென்பதிற் சந்தேகமில்லை. தொல்காப்பியம் என்ற சொல்லுக்கு இலக்கணங் கூற வந்த ஆசிரியர் அதனைக் கூறியதோ டமையாது ஐந்திர முதலிய வடசொற் போல வந்த தென்றுங் கூறி விளக்கினார் சங்கப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
கடற்கரை புக்குளி **************** தமிழுக்கும் சைவத்திற்கும் பெரும் தொண்டாற்றிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஒருசமயம் நீதிமன்றத்திற்கு ஆட்சியாளர்களின் வழக்கு ஒன்றிற்கு சாட்சி கூறவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.ஆறுமுக நாவலர் தமிழ் மொழியில் மட்டுமல்ல ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்.[பைபிள் கிறீஸ்தவ மதநூலை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்தவரும் இவரே] வழக்கு வேறொன்றுமில்லை மரத்தாலான கப்பலொன்றை கடற்கரையில் யாரோ தீ இட்டு கொழுத்தியதை கண்ணால் கண்ட சாட்சியத்தை கூறவேண்டும் அதற்கான சந்தர்ப்பம் வந்தபோது மிகவும் தெளிவாக ஆங்கிலத்தில் கூறினார். அப்பொது இடை மறித்த வழக்கறிஞர் ஆறுமுகநாவலரை பார்த்து எங்களிடம் மொழி…
-
- 0 replies
- 900 views
-
-
ராஜ மார்த்தாண்ட சோழனுடைய காலம். சோழ சாம்ராஜ்யம், பழையவர்கள் சொல்லும் மாதிரி, ஏழ் கடலையும் தாண்டி வெற்றிப் புலிக்கொடியைப் புதிய தேசங்களில் நாட்டிப் பெருமிதமாக வளர்ந்தது. இந்து - சீனத்திலே தமிழனின் கலை, தமிழனின் வீரம், தமிழனின் கீர்த்தி எல்லாவற்றையும் நிலைநாட்டி... அதெல்லாம் பழைய கதை, மார்த்தாண்டன், தான் இருந்த தலைநகர் இப்பொழுது பெயர் தெரியாமல் இருக்கும் என்று கண்டானா? சோழனுடைய தலைநகர் உறையூர். யவன வீரர்கள் இந்து - சீனப் போரில் அவன் படையிலே தங்கள் இரத்தத்தைச் சிந்தினார்கள்; அவன் அரண்மனைத் தலைவாயிலைக் காத்திருந்தார்கள். அகழிக்கப்புறம் அண்ணாந்து பார்த்தால் தலையறுந்து விழுந்து விடும்படி பெரிய வாயில். உள்ளே சற்றுத் தள்ளி வெண்கலத்தினால் ஆன துவஜஸ்தம்பம். அதன் …
-
- 4 replies
- 1.6k views
-
-
தமிழே உங்கிட்ட , "அ" னா- வுக்கு "ஆ" வன்னா இருக்கு "இ" னா- வுக்கு "ஈ" யன்னா இருக்கு "உ" னா- வுக்கு "ஊ" வன்னா இருக்கு "எ" னா- வுக்கு "ஏ" யன்னா இருக்கு "ஒ" னா- வுக்கு "ஓ" வன்னா இருக்கு "ஐ"(அய்) க்கு உங்கிட்ட என்னா இருக்கு ? "ஔ"க்கு உன்கிட்ட என்னா இருக்கு ? "ஃ"க்கு உங்கிட்ட என்னா இருக்கு ?
-
- 3 replies
- 1.9k views
-
-
"கோடையிலே கொதி வெயிலில் காயும் போதும் கொப்பளிக்கும் தமிழ் வெள்ளம் தோயவேன்டும் வாடை தருமூதலிலே நடுங்கும் போதும் வயங்கு தமிழ் கதிரென்னை காயவேண்டும் பாடையிலெ படுத்தூரை சுற்றும் போதும் பைந்தமிழில் அழுமோசை கேட்க வேண்டும் ஓடையிலெ என் சாம்பல் கரையும் போதும் ஒண் தமிழெ சலசலத்து ஓடவேண்டும்" இது யாரால் இயற்றப்பட்டது என்பதையறிந்தால் தெரிவிக்கவும். ஈழத்தில் கல்வி கற்ற காலத்தில் இதை உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் என்று சிலர் சொன்னதாக நினைவு.வரதரின் அறிவுக் களஞ்சியம் இதழில் இது வேறு ஒருவரால் இயற்றப்பட்டதாவகவும் சொல்லப்பட்டது
-
- 11 replies
- 7.8k views
-
-
திருக்குறள் அலசுவோமா? கள உறுப்பினர்களின் அனுபவ வாயில்களின் ஊடான ஒரு எளிய உரை பொறாமையுடைமை 1. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை, இகழ்வார்ப் பொறுத்தல் தலை. இதன் உண்மையான பொருள் என்பது யாதெனில், தன்னைத்தோண்டுபவரினை தாங்கும் நிலம் போல, எம்மை இழிவாகப் பேசுபவரின் குற்றத்தை பொறுத்துக்கொள்வது மிகச் சிறந்த குணமாகும். உதாரணமா நேற்று புலிப்பாசறை மற்றவரின் மனதினை தாக்கும் விதத்தில் எழுதியிருந்தால் அதனை பொருத்துக்கொள்வதே உங்களின் மிகச் சிறந்த குணம்.
-
- 32 replies
- 8.4k views
-
-
பல பொருள் கொண்ட ஒரு சொல்லை இங்கே இணையுங்கள். அவற்றின் விளக்கத்தையும் தாருங்கள். உதாரணமாக 1. குடை - வெயில் மழையில் சாதாரணமாக பாவிப்பது. (சிறப்பான பாவனைக்கு சைவனை கேட்கவும்) 2. குடை - மனதில் ஏதேனும் தொடர்ந்து வந்துகொண்டிருத்தல்.( இது சரியான விளக்கம் இல்லை). 3. குடை - ஒரே அணியில் ஏனைய அணிகள் இணைந்து செயற்படல் 4. குடை - பேரூந்து குடை சாய்ந்தது. 5. குடை - துருவித்துருவி கேள்வி கேட்டல் 6. குடை - அவன் அதை வைத்து குடைந்து கொண்டிருந்தான். அவன்தான் அதனை பழுதாக்கியிருக்கவேண்டும். எங்கே உங்களாலும்முடியும். நினைவுக்கு வருவதை பகிர்ந்து கொள்ளுங்கள்.
-
- 6 replies
- 58.9k views
-
-
திருக்குறள் தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம் பொருள் இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். இவருடைய இயற்பெயர் என்ன என்பதும் மேற்கண்ட விபரங்களும் சரிவரத்தெரியவில்லை. இவரைப்பற்றிச் செவிவழிமரபாகச் சில செய்திகள் விளங்குகின்றன. ஆனால் அறுதியான வரலாறு கிடையாது. அந்தச் செய்திகளின் வாயிலாகப்பெறும் தகவல்களின்படி இவர் வள்ளுவ மரபைச்சேர்ந்தவர் என்றும் மயிலப்பூரில் வசித்தவர் என்றும் தெரிகிறது. இவருடைய மனைவியார் வாசுகி அம்மையார். கற்பியலுக்கு மிகச்சிறந்த இலக்கணமாக விளங்கியவர். வள்ளுவர் தாம் எழுதிய ம…
-
- 8 replies
- 4.4k views
-
-
உங்களுக்காக "இயேசு காவியம்" கவிஞர் கண்ணதாசனின் கைவண்ணத்தால் மிளிரும் இறாவக் காவியம். இதன் முதற்பதிப்பு 1982ஆம் ஆண்டு வெளியானது. இது வெளியான குறுகிய காலத்தில் அச்சடிக்கப்பட்ட 28,000 பிரதிகளும் புத்தகத்தின் விலை அதிகமாயிருந்தாலும் விற்று போயின. இயேசுவின் வாழ்வும் வாக்கும் கவிஞரின் இக்காவியத்தின் வழியாக எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இராண்டாம் பதிப்பு மலிவுப் பதிப்பாக 1985ஆம் ஆண்டு 50,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டன. அவையும் விரைவில் விற்றுவிட்டன. தமிழ் கூறும் நல்லுலகில் கவியரசர் கண்ணதாசனின் செல்வாக்கு எத்தகையது என்பதை இஃது எடுத்துக் கூறுகிறது. கவிஞரின் கவிநயத்தையும் இறை இயேசுவின் நற்செய்திக் கருத்துக்களையும் இயம் உள்ளங்கள் ரசித்து, சுவைக்க வ…
-
- 1 reply
- 4.9k views
-
-
புதுடில்லி:நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் நேற்று மகா சிவராத்திரி திருநாள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் மற்றும் கங்கை நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து, பயபக்தியுடன் சிவபெருமானை வழிபட்டனர் மகா சிவராத்திரியை ஒட்டி, சிவன் கோவில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.சிவபெருமானை போற்றி வழிபடும் தினங்களில் மகா சிவராத்திரி வழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால் பல நன்மைகள் உண்டாகும் என இந்துக்களிடையே நம்பிக்கை நிலவுகிறது. இதையொட்டி, மகா சிவராத்திரி திருநாளான நேற்று நாடு முழுவதும் உள்ள சிவன் கோவில்கள் விழாக் கோலம் பூண்டிருந்தன.பிரசித்தி பெற்ற காசி விசுவநாதர் கோவில் நேற்று அதிக…
-
- 5 replies
- 2.5k views
-
-
கும்பழாவளையான் பாமாலை (கவிக்குமரன்) மயில்வாகனனார் தலைக்கொள்ள மற்றும் தேவர் அருகிüருக்க கருக்கொள் தேவரளவையிலே கலந்துநிற்கும் விநாயகனை உருவாய் நிற்க வைத்தோரே உங்கள் பெயர்தானோயாதே வருவாயில்லா அடியேனும் வழங்கு தமிழால் சொல்லுகின்ற திருவாய்க் கண்ட பாமாலை திகைப்பே யூட்டும் யாவர்க்கும் மலையாய் கொள்வீர் சொல்வதனை மாட்சி மிக்க பெரியோரே சிலையாய் இருக்கும் பெருமானும் சிலிர்த்துக் கனைத்துச் சிரியாரோ குடமுழுக்காடிய கோமகனை குனிந்து வளைந்து நீட்டிய கை வடந்தொட்டிழுத்து வாழாதோ வழங்கும் வரத்தை ஏற்காதோ பவனஞ்சுடர் கங்கை பாவெளியை யாட்டிடும் பரமசிஞான மகனே புவனங்க ளீரேழுமடக்கியே காத்திடும் புவனேஸ்வரி யீன்ற புவனே கவளமா முக…
-
- 1 reply
- 1.3k views
-
-
உங்களுக்குத் தெரிந்த தமிழ் பழமொழிகளை சொல்லுங்கள் பார்க்கலாம்? இதன் நோக்கம் யாழ் கள நண்பர்களிடையே தமிழ் பழ மொழிகளின் பாவனையை அதிகரிக்கச் செய்வதாகும். சிரமமான பழமொழிகளிற்கு தயவு செய்து விளக்கத்தையும் கூறி விடுங்கள். உங்கள் வாழ்வனுபவத்தையும் பகிர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதோ நான் ஆரம்பித்து வைக்கின்றேன் - எனக்கு மிகப் பிடித்தமான வாழ்பனுபவத்தில் கற்றுணர்ந்த பழமொழி: மதியாதார் வாசல் மிதியாதே!
-
- 47 replies
- 13.7k views
-
-
அன்பான உறவுகளே!!!! இங்கு சமயம் பற்றி இயற்றபட்ட,அல்லது பாடப்பட்ட இலக்கியங்களை எழுதலாம் என்று எண்ணினேன்!!!! நம்மில் சிலர் இவ்வாறான இலக்கியங்கள் கிடைக்குமா என்று தேடிதிவார்கள்!!! நானும் பல வருடங்கள் தேடிதிரிந்தவள்தான்!!!! அவ்வாறான உறவுகளுக்கு இது உதவும் என்ற நம்பிக்கையில் எழுத தொடங்குகிறேன்!!!!! உதவியதா இல்லையா என்று சொல்லுங்களேன்?????? *********************************************************************** இங்கு சமய இலக்கியங்களில் சைவம், வைணவம்,கிறிஸ்த்தவம், மற்றும் இஸ்லாம் ஆகியவை பதிவாகும். ************************************************************************ சமய இலக்கியங்கள் சைவம் பன்னிரு திருமுறைகள் திருவிளையாடற் புர…
-
- 40 replies
- 15.9k views
-
-
இன்பமாக வாழ மனிதனுடைய மனதிலே ஒரு நிறைவு வேண்டும். அந்த நிறைவிலிருந்து எழக்கூடியதுதான் இன்பமான வாழ்வு என்பதாகும். மனிதனுக்கு உண்மையிலே வறுமை என்பது இல்லை. பிறந்த மனிதனுக்கு இயற்கையிலேயே, கடைசி வரையிலே எல்லா வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மனிதன் ஒருவரைப் பார்த்து அவரைப்போல் நாம் இல்லையே என்று நினைத்து தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு துன்புறுகிறான். அவன் தன்னிடம் உள்ள ஆற்றலை உணர்ந்து, வளர்த்துக் கொள்ளும் திறமை பெறாமையும், செயல்படுத்திக் கொள்ளக் கூடிய வாய்ப்பு கிட்டாமையுமே, சோர்வு, வறுமை உண்டாவதற்குரிய காரணங்களாம். மனத்தைக் களங்கப்படுத்திக் கொண்டும், தனக்குத் தானே ஒரு எல்லை கட்டிக் கொண்டும், அதிலேயே மனதை சிக்க வைத்துக் கொண்டும் இது வேண்டும், அது வேண்டும் என…
-
- 2 replies
- 1.9k views
-
-
எமது ஆருயிர் அன்னை இராமநாதர் இராசம்மா 2006 நவம்பர் 8ம் திகதி காலை 7.30 மணியளவில் இலங்கை வவுனியா நகர வைத்திய சாலையில் நுரையீரல் புற்று நோயினால் மரணமடைந்தார். எனது தம்பி பாரதிதாசன் மட்டுமே கடைச் காலத்தில் அம்மாவுடன் இருக்கிற பாக்கியத்தைப் பெற்றான். அவன் 2001ல் அம்மா அப்பாவை (வ.ஐ.சண்முகம்பிள்ளை) பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ளவென்று ஜெர்மனியில் இருந்து சென்றிருந்தான். அன்றிருந்து இறுதிவரை அவர்களுடனேயே இருந்தான். அது ஒன்றுதான் கடந்த ஐந்துவருடங்களாக எமக்கிருந்த ஒரே ஆறுதல். சொந்த மகளைப்போல எங்கள் அம்மாவை நெடுங்காலமாக பராமரித்த மச்சாள் மகள் சசியின் அரவணைப்பில் எனது அம்மாவின் கண் மலர்கள் இறுதியாகக் குவிந்தன. இலங்கை அரச பயங்கரவாதிகளுக்கு அஞ்சி பாதுகாப்புக் காரணங்களால் அம்மாவ…
-
- 12 replies
- 3.1k views
-