Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழும் நயமும்

இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இரா.கிருஷ்ணமூர்த்திக்கு ‘கணித்தமிழ் விருதை’ கான்பூர் ஐஐடி தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் வழங்கி னார். கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது. கணினியில் தமிழ் எழுத்துருக் களை அழகாகவும், வெவ்வேறு வடிவிலும் உருவாக்குவதற்கான தேவையை உணரும் வகையிலும், அதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கிலும் இக்கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கை ஒருங் கிணைத்த கணித்தமிழ்ச் சங்க தலைவர் சொ.ஆனந்தன் கூறும் போது, “கணினியில் ஆங்கில எழுத்துருக்கள் ஏராளமாக உள் ளன. தமிழில் அப்படியான அழகிய எழுத்துருக்களை உருவாக்கும் முயற்சிகளோ, அதற்கான தொழில்நுட்ப வளர்ச்சியோ இல்லை. ஆங்கிலத்துக்கு ஈடாக, தமிழிலும் எழுத் துருக்கள் வருவதற்கான விழிப்…

  2. 'மேதகு’ என்னும் சங்கச் சொல் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் மன்னன் உலகத்து இன்ப மாகிய இல்லறத்தோடு இருத்தலை மறந்து போர் ஒன்றையே இன்பப் பொருளாகக் கருதி வாழ்ந்தான் என்னும் பொருள்பட நக்கீரரால் நெடுநல்வாடை என்னும் நூல் இயற்றப்பட்டது. காதலும் வீரமும் சங்க காலத் தமிழர் வாழ்க்கையின் இரண்டு கூறு களாக இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் வழி அறிகிறோம். இந்த இரண்டுள் போர் ஒன்றையே தொழிலாகக் கருதிப் பெருவீரனாக விளங்கிய பாண்டிய மன்னனை நோக்கிக் காதல் இன்பத் தையும் கண்டு வாழுமாறு நெடுநல்வாடையில் நக்கீரர் அறிவுறுத்தியுள்ளார். காதல் இன்பத்தைக் காணுமாறு கூறும் இந்நூற்பொருளின் தொடர்ச்சி யாகவே மதுரைக்காஞ்சி நூல் பாடப்பட்டுள்ளது. கா…

  3. தடுக்கி விழுந்தால் மட்டும் அ... ஆ... சிரிக்கும் போது மட்டும் இ... ஈ... சூடு பட்டால் மட்டும் உ... ஊ... அதட்டும் போது மட்டும் எ... ஏ... ஐயத்தின் போது மட்டும் ஐ... ஆச்சரியத்தின் போது மட்டும் ஒ... ஓ... வக்கணையின் போது மட்டும் ஔ... விக்கலின் போது மட்டும் ஃ... என்று தமிழ் பேசி பேசி மற்ற நேரம் வேற்று மொழி பேசும் தமிழர்களிடம் மறக்காமல் சொல் உன் மொழி தமிழ் மொழியென்று!!! http://oojass.blogspot.fr/2011/10/blog-post_29.html

  4. முக்கடலும் முத்தமிடுகின்ற குமரி மாவட்டத்து நாஞ்சில் நாட்டுப் பகுதியில் ஒளவையார்க்கு திருத்தலங்கள் அமைந்துள்ளன. அத் திருத்தலங்களில் தாழக்குடியிலும் குறத்தியறையிலும் உள்ள திருத்தலங்கள் முதன்மையானவையாகும். தாழக்குடி ஒளவையார் திருக்கோவில் தாடகை மலையடிவாரத்தில், தோவாளைச் சாணல் கரையோரத்தில் நாவற்மரச் சோலையும் மாந்தோப்புகளும் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. நாவற்சோலையைப் பார்க்கும்போது "பாலமுருகன் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?'' என்ற கேள்வியினை எழுப்பி ஒளவையாரது அறிவினையும் ஞானத்தையும் சோதித்தது நமக்கு ஞாபகம் வருகிறது. நாஞ்சில் நாட்டு மக்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையும், தை மாத செவ்வாய்க்கிழமையும் "கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி' என வாயாற வாழ்த்துப் பாடிக் கொண்…

  5. தனித்தமிழ் இயக்கம் வெளியிட்ட நுட்பவியல் கலைச்சொற்கள் WhatsApp - புலனம் Facebook - முகநூல் Youtube - வலையொளி Instagram - படவரி WeChat - அளாவி Messanger - பற்றியம் Twitter - கீச்சகம் Telegram - தொலைவரி Skype - காயலை Bluetooth - ஊடலை WiFi - அருகலை Hotspot - பகிரலை Broadband - ஆலலை Online - இயங்கலை Offline - முடக்கலை Thumbdrive - விரலி Hard disk - வன்தட்டு Battery - மின்கலம் GPS - தடங்காட்டி CCTV - மறைகாணி OCR - எழுத்துணரி LED - ஒளிர்விமுனை 3D - முத்திரட்சி 2D - இருதிரட்சி Projector - ஒளிவீச்சி Printer - அச்சுப்பொறி Scanner - வருடி Smartphone - திறன்பேசி Sim Card - செறிவட்டை Charger - மின்னூக்கி Digital - எண்மின…

  6. நாட்டார் பாடல் வகைகளில் ஒன்றான தாலாட்டுப் பாடல்கள் வாய்மொழி இலக்கியங்களில் ஒன்றாகும். ‘தால்’ என்பது நாவைக் குறிக்கும். குழந்தையை உறங்க வைக்க நாவை ஆட்டி ‘ரா ரா ரா ரா, லு லு லு லு’ என்று ராகம் இசைப்பதால் தாலாட்டுதல் பின்னர் தாலாட்டு என மருவியது. தாலாட்டுப் பாடலின் தொடக்கத்தில் இடம்பெறும் ஒலிக்குறிப்புச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஆராட்டு, ரோராட்டு, ஓராட்டு, தாராட்டு, தொட்டிப் பாட்டு, தூரிப்பாட்டு என்று வகைப்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் தாலாட்டுப் பாடல்கள் அனைத்து சமயம், மதம், ஜாதி சார்ந்த மக்களிடம் வழக்கத்தில் உள்ளது என்பதே இப்பாடல் வடிவத்தின் சிறப்பாகும். தாலாட்டுப் பாடலை குழந்தையின் தாய் மட்டும் அல்லாமல் பாட்டி, அத்தை, மூத்த சகோதரி போன்ற உறவினர்களாலும் பாடப்…

    • 0 replies
    • 639 views
  7. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்! பாண்டிய மன்னனின் மகளைக் குலோத்துங்க சோழனுக்கு பெண்கேட்டு வந்த ஒட்டக்கூத்தருக்கும், பாண்டியமன்னன் மகளின் குருவான புகழேந்திப்புலவருக்கும் தந்தம் நாட்டுப்பற்றால் மோதல் ஏற்பட்டது. இருவரும் புலவர்கள் ஆதலால் கவிதைத் திறத்தால் மோதிக்கொண்டனர். புலவர்கள் இருவரும் தத்தம் அரசுகளைப் புகழ்ந்து பாடியதை பாண்டிய மன்னன் இரசித்துக் கேட்டான். எனினும் அந்நாளில் தமிழகத்தை ஆண்ட மன்னர்களுக்குள் தன் மகளுக்கு ஏற்ற கணவனாக வரும் தகுதி குலோத்துங்க சோழனுக்கு இருந்ததை பாண்டிய மன்னன் அறிந்திருந்ததாலும், அரசியல் காரணங்களுகக்காகவும் அத்திருமணத்திற்கு உடன்பட்டான். திருமணம் முடித்து குலோத்துங்கனுடன் செ…

  8. நேரம் எவ்வளவு முக்கியமானது?

  9. 1. மதுரை சிவப்பெருமானின் 64 திருவிளையாடல்களை பற்றி சொல்லும் திருவிளையாடற் புராணத்தை வௌ;வேறு கால கட்டத்தில் இருவர் பாடியுள்ளனர். முதலில் பாடியவர் பெரும் பற்றப் புலியூர் நம்பி என்பவர் ஆவார். அடுத்து பரஞ்சோதியார் என்பவரும் பாடியுள்ளார். 2. 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளுரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமன்னர். இவர் சிதம்பரத்தில் பொன் வண்ணத்தந்தாதி எனும் நூலை பாடி, அரங்கேற்றியுள்ளார். மேலும் திருவாரூர் மும்முணிக்கோவை, ஆதியுலா (திருக்கயிலாய ஞான உலா) ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார். 3. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி. 847 முதல் 872 வரை) சிறப்புகளை கூறும் நூல் நந்திக்கலம்பகம். எருகை முத்திரை சின்னமாக உடைய இந்த மன்னனிடம் …

  10. நாளும் இன்னிசையால் தமிழ் வளர்த்த தமிழிசை - இயல், இசை, நாடகம் என்ற முப்பெரும் பகுதிகளில் குறவஞ்சி - இசை, நாடகத் தமிழில் தனிச்சிறப்பு பெற்றது. பொதுவாக குறவஞ்சி நாடகங்கள் அனைத்தும் கதை அமைப்பில் ஒரே நிலையிலிருக்கும். பாட்டுடைத்தலைவன், தலைவி மட்டும் வேறுபட்டிருப்பர். - தலைவன் நாடெங்கும் பவனி வருதல் - தலைவி அவனைக் கண்டு காதல் கொள்ளுதல் - விரகமுற்ற தலைவி சந்திரனைப் பழித்தல், மன்மதனைப் பழித்தல் - குறத்தி வருதல் - தன் மலைவளம், நாட்டுவளம் கூறுதல் - தலைவி தலைவனோடு சேருதல். இவைகள் அனைத்தும் எல்லா குறவஞ்சி நாடகங்களின் அடிப்படைக் கூறுகள். குறவஞ்சி இசை நாடகங்கள் பல உள்ளன. 1. திருக்குற்றாலக் குறவஞ்சி 2. சரபேந்திர பூபாலக் குறவஞ்சி 3. அழகர் குறவஞ்சி 4. விராலிமலை குறவ…

  11. பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட பி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. "கல்ச்சர்' எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாக அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் பலர் அதைக் "கலாச்சாரம்' எனக் கொண்டார்கள். இந்தக் "கல்ச்சர்' என்னும் சொல் குறித்தும் இங்கிலாந்திலேயே 1870ஆம் ஆண்டுகளை ஒட்டிப் பெரிய சொற்போர் நடந்ததாகவும் பிள்ளை கூறுகிறார். "கல்ச்சரை' ஆங்கிலத்தில் பெருவழக்காகக் கொண்டு வந்தவர் மேத்யூ அர்னால்டு. தமிழில் பண்பாடு இல்லையா எனக் கேட்டுவிடக் கூடாது. இருந்தது. வேறு சொல்லாக இருந்தது. சால்பு, இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சான்றாண்மை முதலான சொற்கள் பண்பாட்டைச் சுட்டியி…

  12. "பண்டைய தமிழரின் செல்வம் பற்றிய சிந்தனை" இன்று நாம் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வதற்கும், வளமோடு வாழ்வதற்கும் வழிவகுப்பன, நம் முன்னோர்களின் வாழ்க்கை நெறிகள் ஆகும். இந்த நெறிமுறைகளைப் பத்திரப்படுத்தி அதன் மூலம் எம்மை இன்றும் பக்குவப் படுத்திக் கொண்டு இருப்பன பண்டைய சங்க இலக்கியங்கள் ஆகும். உதாரணமாக பெற்றோர் சேர்த்த செல்வத்தைச் செலவு செய்வோர் உயிருள்ளவராக மதிகக்கப்பட மாட்டார்கள் என்பதையும், பொருள் இல் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை என்பதையும், பகுத்துண்டு வாழ்தல் வேண்டும் என்பதையும், மற்றும் நாம் உழைத்து, அதில் கிடைக்கும் செல்வத்தையே நாம் பயன்படுத்தி, அடுத்தவருக்கும் உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சில சங்க பாடல்கள் மூலம் அறி…

  13. முன்பெல்லாம் எந்த சொல்லுக்காவது அர்த்தம் தெரியவில்லை என்றால் அகராதியைப் பார்த்துத் தெரிந்து கொள்வோம். இந்த இணைய உலகில் என்ன செய்வது என்று யோசிக்கத் தேவையில்லை. இருக்கவே இருக்கிறது விக்கிப்பீடியா. பெரும்பாலான சொற்களுக்கான அர்த்தத்தையும், வரலாற்றையும் தெரிந்துகொள்ள உதவுகிறது விக்கி. தமிழ்ச் சொற்கள், வாக்கியங்களுக்கான அர்த்தங்கள், தகவல்களை தெரிந்துகொள்ள தமிழ் விக்கிப்பீடியா உதவுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தன்னார்வலர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு தங்களால் ஆன பங்களிப்பைச் செய்து இணையத் தமிழை வளர்த்து வருகின்றனர். அவர்களின் மற்றொரு மைல்கல் விக்கி மாரத்தான். விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கி தன்னார்வலர்களும் ஒன்றுகூடி பல்வேறு …

    • 0 replies
    • 592 views
  14. இணையத்தில் தகவல்களைத் தேடும் எவரும் செய்யும் முதல் ‘க்ளிக்’ விக்கிப்பீடியாதான். அறிவுப் புரட்சியின் குறியீடாக அது மாறிவருகிறது. அது லாப நோக்கு இல்லாமல், பலரால் கூட்டாகத் தொகுக்கப்படும், பல மொழிகளில் உள்ள இணையக் கலைக்களஞ்சியம். வரும் காலங்களில் மாணவர்களையும், விக்கிப்பீடியாவையும் பிரிக்க முடியாது. அவர்களின் கல்விக்கும், அறிவுத் திறன்களின் தோழனாக அது மாறியுள்ளது. பள்ளிகளில் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகளில் ஆரம்பித்து கல்லூரிகளில் செய்யும் புராஜெக்ட்கள் வரை மாணவர்கள் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகிறார்கள். 2001 -முதல் செயல்படும் விக்கிப்பீடியா உலகம் முழுவதும் 280 மொழிகளில் இயங்குகிறது. இந்தியாவில் 22 மொழிகளில் விக்கிப்பீடியா இயங்குகிறது. 2003 முதல் செயல்படும் தமி…

  15. விடுபூக்கள் : கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள் போன்றவர்களின் ஆதரவுடன் 2001-ம் ஆண்டு டொராண்டோவில் கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் ஓர் அறக்கட்டளையாகத் தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) உள்ளிட்ட பல விருதுகளை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிவருகிறது. 2015-ம் ஆண்டுக்கான, 17-வது இயல் விருது, தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையதளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தைத் தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் இ.மயூரநாதனுக்கு வழங்கப்படுகிறது. சுந்தர ராமசாமி, அம்பை, நாஞ்சில் நாடன், தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட ப…

  16. விவேக சிந்தாமணி - நல்ல தமிழ் அறிவோம் அழியும் ஆறு "மூப்பில்லாக் குமரி வாழ்க்கை முனை இல்லா அரசன் வீரம் காப்பில்லா விளைந்த பூமி கரையிலாது இருந்த ஏரி கோப்பிலான் கொண்ட கோலம் குருஇலான் கொண்ட ஞானம் ஆப்பில்லா சகடு போலே அழியுமென்று உரைக்கலாமே " பருவமடையாத பெண்ணின் வாழ்க்கை, விவேகம் இல்லாத அரசனின் வீரம் காவல்காரன் இல்லாமல் விளைந்து நிற்கும் பூமி, கரை இல்லாத ஏரி வசதி இல்லாதவன் செய்யும் ஆடம்பரம்‌, குரு இல்லாமல் கற்கும் அறிவு அச்சாணி இல்லாத சக்கரம் போல், ஒரு சில நாட்கள் சுழலுமே தவிர நிலையாக நில்லாமல் அழிந்து போகும் ஆறு விஷயங்கள் ஆகும் +++++++++++++++ பயன் இல்லாத ஏழு "ஆபத்துக்கு உதவாத பிள்ளை அரும்பசிக்கு உதவாத அன்னம் தாகத்தைத் த…

  17. பிழை என்பது என்ன? குற்றம் என்பது என்ன ? தவறு என்று தெரியாமல் செய்வது பிழை தெரிந்தே செய்வது குற்றம் பிழை மன்னிக்கப்படலாம் தவறு தண்டிக்கப்படும் பிழை வேறு குற்றம் வேறு

  18. "பா' என்பது தமிழ்ச்சொல். தொல்காப்பியர், செய்யுளியலில், "பா' என்றே குறிப்பிடுவார். "கவி' என்ற சொல்லை எங்கும் எடுத்தாளவில்லை. தமிழில் செய்யுளின் வேறு பெயர்களாக யாப்பு, தூக்கு, தொடர்பு, பனுவல் போன்ற தமிழ்ச் சொற்களையே தனித்தமிழ்ப் புலவர்கள் கையாள்வர். நால்வகைப் பாக்களும் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா, என்றே வழங்கப்படும். இவற்றுடன் "கவி' என்ற சொல்லை இணைப்பதே இல்லை. தொல்காப்பியர் பாவின் வகைகளைக் கூறுமிடத்து, ""ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென நாலியற் றென்ப பாவகை விரியே!'' (தொல்.செய்யு-101) என்றே குறிப்பிட்டுள்ளார். நம் செந்தமிழ் மொழியுடன் வந்து கலந்து, பெருவாழ்வு பெற்றுவிட்ட வட சொற்களில் ஒன்றுதான் கவிதை என்ற சொல். தமிழ் இலக்கியத்தில் முதன் முதலாக நல்லந்துவனார் எ…

  19. தினம் ஒரு தமிழ்ப் பாடல் - சுப.சோமசுந்தரம் "தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!" --------------திருமந்திரம் பாடல் 3065. பாடற் குறிப்பு : புற வழிபாட்டை விட அக வழிபாட்டுச் சிறப்பைக் கூறும் திருமூலரின் மற்றொரு பாடல். எளிமையான வரிகள். இப்பாடலுக்கான எந்த உரையும் பாடலை விட எளிமையாக அமைய முடியாது. இருப்பினும்.... பாடற் பொருள் : தேனின் சுவை கறுப்பா சிவப்பா ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியற்றோரே ! (இங்கு வான் என்பது புறவுலகிற்கான குறியீடு). தேனுக்குள் அதன் சுவை காட்சிப்படுத்த முடியாமல் ஒன்றறக் (inherent) கலந்ததைப் போல், இந்த ஊனுடம்புக்குள்ளேயே ஈச…

  20. Started by Athi30,

    ஏவினை நேர்விழி மாதரை மேவிய ஏதனை மூடனை ...... நெறிபேணா ஈனனை வீணனை ஏடெழு தாமுழு ஏழையை மோழையை ...... அகலாநீள் மாவினை மூடிய நோய்பிணி யாளனை வாய்மையி லாதனை ...... யிகழாதே மாமணி நூபுர சீதள தாள்தனி வாழ்வுற ஈவது ...... மொருநாளே நாவலர் பாடிய நூலிசை யால்வரு நாரத னார்புகல் ...... குறமாதை நாடியெ கானிடை கூடிய சேவக நாயக மாமயி ...... லுடையோனே தேவிம நோமணி ஆயிப ராபரை தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே சேணுயர் சோலையி னீழலி லேதிகழ் சீரலை வாய்வரு ...... பெருமாளே.

    • 0 replies
    • 561 views
  21. உயர்விலும் உயர்வுநவிற்சி - சுப.சோமசுந்தரம் பொதுவாக உயர்வுநவிற்சி என்பது இலக்கிய இன்பத்திற்கான ஒரு மரபு; இலக்கியச் சுவை கூட்டும் முயற்சி. எடுத்துக்காட்டாக, பிரிவாற்றாமையில் வாடும் தலைவிக்குத் தோலில் ஏற்படும் ஒரு மாற்றம் அல்லது தாக்கம் பசலை எனப்படுவது. அச்சூழலில் உள்ளத்தின் பிரதிபலிப்பாய் உடல் இயங்கும் இயற்கை நிகழ்வாகப் பசலை இருக்கலாம். அவ்வாறெனில் அதனை உயர்வுநவிற்சி எனச் சொல்வதற்கில்லை. இயற்கை நிகழ்வெனில் இக்காலத்திலும் அது பிரிவாற்றாமையின் வெளிப்பாடாக அமைதல் வேண்டும். அவ்வாறான வெளிப்பாடு இன்றைய அறிவியல் உலகில் பதிவு செய்யப்படவில்லை. எனவே பசலையை ஒரு இலக்கிய மரபாகவே கொண்டு அதனை உயர்வுநவிற்சியாய் வகைப்படுத்துதல் நம் பகுத்தறிவுக்கு எட்டுகின்ற பொருளாய் இப்போதைக்குத் தோன்றுகிறத…

  22. தமிழுக்கு பெருமை சேர்த்த ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம்! Posted By: 0333on: August 12, 2017In: உலகம்No Comments Print Email உலக மொழிகளில் சொற்களஞ்சிய அகராதிகளை உருவாக்கிவரும் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் தமிழ் மொழியை பெருமைப்படுத்தும் விதமாக ஒக்ஸ்போட் தமிழ் இணைய அகராதியை வெளியிட்டுள்ளது. உலகத்திலுள்ள 100 மொழிகளில் அகராதிகளை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ள ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம், முதலில் கிந்தி மொழியில் அகராதியை வெளியிட்டது. தற்போது தமிழ், மற்றும் குஜராத்தி மொழிகளில் அகராதிகளை வெளியிட்டுள்ளது. அகராதியை பார்க்க விரும்புபவர்கள்https://ta.oxforddictionaries.com/ இந்த லிங்கில் சென்று பார்வையிடலாம். http://thuliyam.com/?p=76091

    • 0 replies
    • 551 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.