பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
திருக்குறளும் கீதையின் நால்வருணமும் - குறள் ஆய்வு-5(பகுதி1) பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "விதிவிலக்குகளைச் சான்றாகக் காட்டி, இதுதான் விதியாக இருந்தது என்று சொல்வது சரியா?" என்றார் நண்பர் கோபமாக. "அப்படிச் சொன்னால் அது தவறுதான்!" என்றேன் நான். தமிழ் மண்ணில்சாதி புகுத்தியது ஆரியரா? "சங்க இலக்கியத்தில், கபிலர் ஒருவர்தான் 'பிராமணர்களே நால்வகைச் சாதியைத் தமிழகத்தில் நாட்டியதாக'க் குற்றம் சாட்டுகின்றார். அதவிட்டா அடுத்த சாட்சி சூரியநாராயண சாஸ்திரி-ன்ற பரிதிமாற்கலைஞர்; இவ்விரு பிராமணர்களும் 'விதிவிலக்காக'க் கொள்ளப்படவேண்ட…
-
- 0 replies
- 3.1k views
-
-
பாகிஸ்தானில் கொற்கை, வஞ்சி, தொண்டி, மாத்ரை, உறை, கூடல்கட் மற்றும் கோளி, என்ற தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. அதுபோலவே, ஆப்கானிஸ்தானிலும் கொற்கை மற்றும் பூம்புகார் என்ற பெயரில் ஊர்கள் இருக்கின்றன என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் கூறுகிறார்.தமிழ் இலக்கியம் படித்துள்ள பாலகிருஷ்ணன், இந்தியத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றியவர். சிறந்த தமிழ் அறிஞர். இவரது 'சிந்துச் சமவெளி நாகரிகமும் சங்க இலக்கியமும்’ என்ற கட்டுரை, சிந்துச் சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி குறித்தும், சங்க காலப் பண்பாடுடன் சிந்து சமவெளிக்கு உள்ள தொடர்பு குறித்தும் முக்கிய விவாதத்தை முன்வைக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி என்பது, சிந்துவெளி மக்களின் ஒட்டுமொத்த முடிவு அல்ல. அதுபோலவே, சங்க இ…
-
- 0 replies
- 3.1k views
-
-
தமிழ்ப்பெயர்கள் தமிழில் டீக்கு "தேநீர்', காபிக்கு "குளம்பி' என்று பெரும்பாலோருக்குத் தெரியும். மற்ற சில முக்கியமான உணவு பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்! சப்பாத்தி - கோந்தடை புரோட்டா - புரியடை நூடுல்ஸ் - குழைமா கிச்சடி - காய்சோறு, காய்மா கேக் - கட்டிகை, கடினி சமோசா - கறிப்பொதி, முறுகி பாயசம் - பாற்கன்னல் சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி பொறை - வறக்கை கேசரி - செழும்பம், பழும்பம் குருமா - கூட்டாளம் ஐஸ்கிரீம் - பனிக்குழைவு சோடா - காலகம் ஜாங்கிரி - முறுக்கினி ரோஸ்மில்க் - முளரிப்பால் சட்னி - அரைப்பம், துவையல் கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில் போண்டா - உழுந்தை ஸர்பத…
-
- 8 replies
- 3.1k views
-
-
தமிழர் திருநாள்....! ஆல்பர்ட் பெர்னாண்டோ சுனாமி என்னும் பேரழிவுப் பேரலையால் உயிரிழப்பு, உடமைகள் இழப்பு ஏற்பட்டு,இன்னும் அந்த அதிர்ச்சிப் பிடியிலிருந்து விலகாத மக்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் பொங்கலைப் பற்றிச் சிந்திக்க இயலா நிலையில் இருக்கின்றனர். குறிப்பாக கடலோரக் கிராமங்கள் அன்றாடம் பொங்க வழியின்றி விழிகள் பொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கண்ணீர் துடைக்க நாம் ஏதேனும் ஒரு வகையில் நம் கரம் நீள வேண்டும் என்ற முன்வைப்போடு தமிழிய விழாவான பொங்கல் விழாக் கட்டுரையை இங்கே முன்னிடுகிறேன். இவர்கள் 'சேற்றில் ' கை வைத்தால்தான் நாம் 'சோற்றில் ' கை வைக்க முடியும். யார் இவர்கள் ? 'செங்கோலை நடத்துவது உழவனின் ஏரடிக்கும் சிறுகோலே 'என்றுரைத்த கம்பர், 'உலகம்…
-
- 2 replies
- 3k views
-
-
வணக்கம் வாசகர்களே , மற்றும் கள உறவுகளே , வேரிப் பூவைப் பதியன் இடுவதன் மூலம் இந்தத் தொடரை நிறைவுக்குக் கொண்டு வருகின்றேன் . இந்தப் பதிவின் பெருமைகள் எல்லாம் கடந்த நான்கு மாதங்களாக இந்த நந்தவனத்திலே உலாவிப் பூக்களின் வாசங்களையும் அவை சொல்லும் சிறிய தங்கள் வரலாறுகளையும் கேட்டு அனுபவித்த வாசகர்களுக்கும் , என்னை அன்புடன் ஊக்குவித்து , உரிமையுடன் சரி பிழைகளைப் பகிர்ந்த கள உறவுகளயுமே சாரும் . நான் இந்த நந்தவனத்தின் காவலாளி மட்டுமே . மீண்டும் ஓர் சுவாரசியமான தொடரில் சந்திக்கும் வரை......... நேசமுடன் கோமகன் . ***************************************************************************** வேரிப் பூ ( செங்கொடு வேரிப் பூ ) 95 . வேரி என்னும் சொல் …
-
- 3 replies
- 3k views
-
-
சீனா நெடுஞ்சுவரும் திராவிட இயக்கமும் இளவேனில் சீனாவுக்குச் சென்றேனும் அறிவைத் தேடு என்றொரு பழமொழி உண்டு. அதென்ன சீனாவுக்குச் சென்றேனும்? ஒரு காலத்திலே சீனம் இன்றிருப்பதுபோல் தோழர் மாசேதுங் தலைமையில் நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் உள்ள செம்படையினர் கட்டி எழுப்பிய நவ சீனம்போல் - அறிவுத் தேடலிலும் படைப்பின் முனைப்பிலும் உயர்ந்தோங்கி நிற்கவில்லை. அறிவின் ஒளியைத் தரிசிக்கவே அஞ்சி நடுங்கிய காலம் அது. வரலாற்றறிஞர்கள், சிந்தனையாளர்கள் எல்லோரும் தேடித் தேடி வேட்டையாடப்பட்டார்கள். அப்போது ஷின்ஷி குவாங்தி எனும் மன்னன் சீனாவை ஆண்டு கொண்டிருந்தான். அவன் மணிமுடி தரித்த நாளில் - இப்போது போலவே அப்போதும் - புலவர்கள் சிலர் அவனைப் புகழ்ந்தேற்றிப் பாடினார்கள். அந்த…
-
- 18 replies
- 3k views
-
-
வணக்கம், இது ஓர் கேள்விதான்: மகிந்தவின் சிங்கள சிறீ லங்கா இராச்சியத்திடம் தோற்றுப்போன பிரபாகரனின் தமிழீழ தமிழ் இராச்சியம்? கடந்த சில மாதங்களில் தாயகத்தில் நடைபெறும் சம்பவங்களை, நடைபெற்ற சம்பவங்களை உன்னிப்பாக பார்க்கும்போது / வேறு ஓர் கோணத்தில பார்க்கும்போது முன்பு அந்தக்காலத்தில் மன்னர்கள், இராச்சியங்களிடையே பகைமை வளர்ந்து போர் ஏற்படும்போது என்ன நடைபெறுமோ அதேவிசயங்களே அச்சொட்டாக நடைபெற்றது, நடைபெறுகின்றது போல தெரிகின்றது. வாள்களுக்கும், அம்பு, வில்லுக்கும் பதிலாக ஆயுததளபாடங்கள் மாறி இருக்கிது. ஆனால் அடிப்படை ஒன்றாகத்தான் இருப்பது போல் தெரிகின்றது. அதே காட்டிக்கொடுப்புக்கள் அதே துரோகத்தனங்கள், அதே ஒற்றுமையின்மை அதே மக்களின் அவலங்கள் அதே கொடுமைகள்…
-
- 10 replies
- 3k views
-
-
இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன் 2500 ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவுடன் வாணிபம் செய்த தமிழர்கள்! கட்டுரையை படித்துவிட்டு வரவும்! இதுவரையிலான கணிப்புகளின்படி ஆஸ்திரேலியாவில் 45,000 ஆண்டுகளுக்கு முன் முதல் மனித இனம் காலடி எடுத்து வைத்தது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்குள் 18ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பியர்கள் நுழைந்தனர். இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலியா தனித்திருந்தது.. எந்த இனக் கலப்பும் நடக்கவில்லை, அங்கே வேறு யாருமே நுழையவில்லை என்று நம்பப்பட்டு வந்தது. ஆனால், இது தவறு என்பதை ஆஸ்திரேலிய பழங்குடியினர் (aboriginal Australians) இடையே நடத்தப்பட்ட ஜீனோம் ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த இனத்தினரின் ஜீன்களில் 11 சதவீதம் இந்தியாவின் ஆதிவாசி இனத்தினரின் அடையாளங்கள…
-
- 0 replies
- 3k views
-
-
http://3.bp.blogspot.com/_2SMOVFpZr3M/SaAbqYhXDJI/AAAAAAAAAJc/-9UavYbCgj4/s1600/2009-01-29-1438-55.jpg மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை நாடாள்வார் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும். போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் இவற்றை எல்லாம் எண்ணி வருந்தி, போர் இன்றியமையாதவிடத்தும், அது அறத்தின் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்தனர்.பகை நாட்டின் மீது படையெடுக்கும் முன், அந்நாட்டு அறவோரையும் தன்னாட்டு அறவோரையும் அல்…
-
- 2 replies
- 3k views
-
-
On the 125th Birth Anniversary of Mahakavi Bharathiar - the Poet who laid the Foundation Stone for the Tamil Nation தமிழ்த்தேசியத்துக்கு அடிக்கல் நாட்டிய மகாகவி பாரதியார் "ஓராயிரம் ஆண்டுகள் ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்த ஓர் மாமணி" நக்கீரன் மகாகவி பாரதியாரின் 125வது பிறந்த நாள் நினைவுக் கட்டுரை (நன்றி: இருப்பின் வேர்கள்) (contributed by V.Thangavelu, Canada) --- "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர்போல் இளங்கோவைப் போல் யாங்கணமே பிறந்த தில்லை உண்மை வெறும் புகழ்ச்சியில்லை": என்று மகாகவி பாரதியார் தமிழ் நாட்டில் தோன்றிய மாபெரும் புலவர்களான கம்பர், வள்ளுவர், இளங்கோ மூவரையும் சிறப்பித்துப் பாடியிருக்கிறார். "…
-
- 2 replies
- 3k views
-
-
பிறமொழிச் சொற்களுக்கு இணையான, 35 தமிழ்ச்சொற்கள் உருவாக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் நடந்த, சொல் வங்கித் திட்டத்தில், புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன. ஆங்கிலம் மற்றும் பிற மொழிச் சொற்களுக்கு இணையான, தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும்; பழைய தமிழ்ச் சொற்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்; மக்களிடையே புழக்கத்தில் உள்ள சொற்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தற்கால அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பவும், புதிய பயன்பாட்டுத் தேவைக்கேற்பவும் சொற்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக தமிழ் வளர்ச்சித் துறையால், "சொல் வங்கித் திட்டம்' உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தின்படி, மொழி வல்லுனர்கள், பத்திரிகையாளர்கள், மாதம் ஒரு முறை கலந்துரையாடி, புதிய சொற்களை உருவாக்கி,…
-
- 1 reply
- 3k views
-
-
போதிதர்மரின் போர்க்கலை - சீன வர்மம் இன்றைய கட்டத்தில் போதிதர்மரைப்பற்றி அறிந்துகொள்ள தமிழ் உலகு பெரும் விருப்பம் கொண்டுள்ளது என்பது கருதி இந்த பதிவு பதியப்படுகிறது. இதில் தமிழ் நாட்டில் வர்மம் சாஸ்திரம் எனப்படும் மருத்துவ போர்க்கலையின் சீன வடிவம், அதாவது போதிதர்மர் சீன தேசத்தில் கற்பித்த வர்ம சாஸ்திரம் பற்றிப்பார்க்கப்போகிறோம். "DIM MAK - டிம் மாக்" என்பதுவே சீன மொழியில் வர்ம சாஸ்திரத்தின் பெயராகும், இதன் அர்த்தம் "மரண அடி" என்பதாகும். புருஸ் லீயின் மரணம் கூட இளக்காமல் விட்ட வர்மத்தினால் ஏற்பட்ட மரணம் என்று கூட ஒரு கருத்து உண்டு. வர்மத்தின் தத்துவம் என்ன அல்லது எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது? சீன தத்துவத்தின் படி வர்மத்தின் அடிப்படை சீ (chi or ki) எனப்படும் பிராண …
-
- 0 replies
- 2.9k views
-
-
அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – எருதுகட்டு மேளம்/ஜிம்பளங்கு கொட்டு – சரவண பிரபு ராமமூர்த்தி எருதுகட்டு மேளம்/ஜிம்பளங்கு கொட்டு – தோற்கருவி அமைப்பு உருளை வடிவத்தில் இருக்கும் சிறிய இசைக்கருவி ஜிம்பளங்கு கொட்டு. பலா மரம், வேம்பு, வேங்கை அல்லது பூவரசு மரத்தைக் குடைந்து உடல் பகுதி செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து மரம் வாங்கி வந்து ஆசாரிகளிடம் தந்து குடைந்து கொள்கிறார்கள். இக்கருவியை இசைப்பவர்களே இதை மேற்கொண்டு செய்துகொள்கிறார்கள். பெரும்பாலும் எருமைக் கன்றின் தோலும் மறுபுறம் ஆட்டின் தோலும், சிலர் மாட்டுத் தோலும் பயன்படுத்தி தட்டும் முகங்களை செய்துக்கொள்கிறார்கள். பிரம்பு அல்லது மூங்கில் வளையங்களில் தோலை ஒட்டி அந்த வட்டவடிவமான த…
-
- 0 replies
- 2.9k views
-
-
ஈழத்தமிழனின் ஆதங்கம் நான் இப்போது இந்தியாவில் கல்விகற்றுக் கொண்டு இருக்கிறேன் எமது நாட்டில் எவ்வளவு கஸ்டங்களை எல்லாம் அனுபவித்தது விட்டு நிமமதியைத்தேடி இங்கு வந்தால் இங்கும் நிம்மதி இல்லை இலங்கைத் தழிழன் என்றால் இருப்பதுக்கு வீடு கூட கொடுக்க மறுக்கும் தமிழர்கள் இங்கு அதைவிட பொலிஸ் சோனைகள் ஏராளம் இங்கு றேசன் காட் (கூப்பன் அட்டை) இரு;நதால் மட்டுமே காஸ் பெறமுடியும் 300 ருபா காஸ் என்றால் நாங்கள் 650ருபாய்க்கு அதுவும் திருட்டுத்தனமாகத்தான் வாங்கவேண்டியுள்ளது எங்கு போனாலும் எம் மக்கள் படும் கஸ்ரத்துக்கு அளவே இல்லை.பொலிசில் பதிவதற்கு பொலிஸ்காரனுக்கு 3000முதல் 7000 இந்தியக் காசுகள் கொடுக்கவேண்டியுள்ளது இந்தியா வரும் மக்களே மிகவும் அவதானமாக இருங்கள்…
-
- 13 replies
- 2.9k views
-
-
தமிழரின் மறைந்த இசைக்கருவி – ஆர். பிருந்தாவதி இசை இனிமை பயப்பது, கேட்பவரைத் தன் வயப்படுத்தும் இயல்புடையது. பண்டைத் தமிழகத்தில் வேட்டைச் சமூகத்திலேயே இசை தோன்றியிருந்தாலும் உற்பத்திச் சமூகமே இசையின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்தியுள்ளனர். இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச்கருவி. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ். இது யாளி என்ற ஒரு பூர்வகால மிருகத்தின் தலையைப் போல் செய்யப்பட்டிருந்ததால் யாழ் என்று பெயர் பெற்றது. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் பரிணாமமான வீணை இன்று முதன்மையிடம் வகிக்கிறது. இந்த நிலையில் யாழினை ம…
-
- 2 replies
- 2.9k views
-
-
-
- 17 replies
- 2.9k views
-
-
-
- 5 replies
- 2.9k views
-
-
பகுதி - 1 இந்து மதம் எங்கிருந்து வந்தது? நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகி றதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள். வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பய முறுத்தியது பூமி. இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழி றங்குகிறாள் சிந்து. அது அந்தக்கால ஆப் கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்க…
-
- 3 replies
- 2.9k views
-
-
தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் சிறப்பான இடத்தினைப் பெறும் கொம்புமுறி விளையாட்டு தமிழர் எமது கலை, கலாச்சாரங்கள் மறைந்துவரும் நிலையில். நான் நீண்ட நாட்களாக அறிய ஆவலாக இருந்த விடயம் ஒன்றுக்கு முற்று முழுதான விளக்கம் கிடைத்திருக்கின்றது. அது வேறு ஒன்றுமல்ல. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கொம்புமுறி விளையாட்டு பற்றிய பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. எனது கிராமம்கூட கொம்புமுறி விளையாட்டுக்கு பிரசித்தி பெற்ற ஒரு கிராமமாகும். இக் கிராமத்திலே கொம்புமுறி விளையாட்டு இடம் பெற்ற இடம் கொம்புச் சந்தி என்று இப்பொழுதும் அழைக்கப்படுகிறது ஆனால் இங்கு இருக்கும் அநேகமானவர்களுக்கு கொம்புமுறி விளையாட்டு என்றாலே என்ன என்று தெரியாது. கலாபூசனம் …
-
- 1 reply
- 2.9k views
-
-
உதவி உதவி உதவி யாரிடமாவது எங்கள் மரணவீடுகளில் அல்லது கோயில் திருவிழாக்களில் எழுப்பபடும் பறை இசை பதிவு இருந்தால் தந்து உதவவும் அல்லது பதிவு செய்து தர வசதியுடையவர்கள் பதிவு செய்து தரவும் அதற்கான் செலவுகள் தந்து உதவலாம் நன்றி
-
- 12 replies
- 2.9k views
-
-
இயல்புடைய மூவர் இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை (குறள் 41; இல்வாழ்க்கை ) இல்லறத்தில் வாழ்வான் தன் அறவாழ்க்கையில் கல்வி பயிலும் மாணவர், துறவிகள் மற்றும் மனைத் தவநிலையில் உள்ள மூவக்கும் நல்ல நெறிப்பட வாழ நிலைபெற்ற துணையாவான் நம் மரபில் இல்வாழ்க்கை என்பது சமூகத்தில் அறம் வளர உதவவே, அதைத் தெளிவாய் வள்ளுவர் இக்குறளிலேயே நல்லாற்றின் நின்ற துணை என்கிறார், இல் வாழ்க்கை என்பது குடும்பம் நடத்துபவன், நல்லாற்றின், நல்ல அறம், சமுதாயத்தில் இல் வாழ்வானினுடையது கூறுகிறார் தவிர - தன் குடும்பத்தை பராமரிப்பது அவன் கடமையும் எனவே இதில் நேரடியாய் குடும்ப உறுப்பினர்களைக் பிரித்துக் குறிக்கவில்லை என்பது தெ…
-
- 1 reply
- 2.9k views
-
-
#சமஸ்கிருதம் தனக்கென சொந்தமான எழுத்துகளை கொண்டதல்ல.. தென்னிந்தியாவில் கிரந்த+தமிழ் எழுத்துகளாலும்... வட இந்தியாவில் #தேவநகரிஎழுத்துகளாலும் எழுதப்படுகிறது... * #சிங்களம்,#மலையாளம் , #துளு போன்ற மொழிகள் பல்லவ #கிரந்தஎழுத்துகளின் வழிவந்த எழுத்துகளால் எழுதப்படுகின்றன மேற்குத்தொடர்ச்சிமலைக்கு அப்பால் வாழ்ந்த நம் சகோதர்கள் -சேரர்கள் - மணிப்பிரவாள மொழியையும்(தமிழ்+சமஸ்கிருதம்=மலையாளம்)... இந்த கிரந்த எழுத்துகளையும் ஊக்குவித்தனர்.. அதன் சிறிய தாக்கமே தமிழில் பயன்படுத்தப்படும் 5 கிரந்த எழுத்துவரிசைகள்.. ஹ்,ஜ்,ஸ்,ஷ்,க்ஷ் ஏனையவை தமிழில் பயன்படுத்தப்படவில்லை. தமிழில் இந்த கிரந்தக்கலப்பு கிபி 6ம் நூற்றாண்டிற்கு பின்னர் ஏற்பட்டதாக கருதப்படுகின்றது ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ ✍ #தம…
-
- 1 reply
- 2.9k views
-
-
கி.பி. 830ல் பிற்கால சோழ பேரரசிற்கு வித்திட்டு வளர்த்த மாமன்னன் விசயலாய சோழன் உருவாக்கிய தலைநகர் தான் இந்த "பழையாறை" மாநகரம். சோழ மாமன்னர்கள் சிறு வயதினில் தவழ்ந்து விளையாடி, இளவரசுப் பட்டங்களை சுமந்து, ஆயகலை 64 கினையும் கற்று, முடிசூடி பாராண்டு, இறுதிக்காலங்களில் ஓய்வெய்தி, வின்னுலகம் சென்ற அத்துனையும் கண்டது இம்மாநகரமே. கட்டிட கலைநுட்பம், சிற்பக்கலை நுணுக்கம், ஓவியக்கலை வண்ணமும், விஞ்சிய தெய்வத்தன்மையும் சிறப்புடன் அமையப்பெற்று இராசகம்பீர மிடுக்குடன் நிமிர்ந்து நின்ற மாநகரமும் பழையாறை என்பது சான்றோர் சாற்றிய வரலாறு. "தேரின் மேவிய செழுமணி வீதிகள் சிறந்து பாரில் நீடிய பெருமைசேர் பதி பழையாறை" -சேக்கிழார். இந்த இடத்தை நெருங்கும் போதே மனதிற்குள் ஒரு இனம் புரியாத மக…
-
- 2 replies
- 2.9k views
-
-
1. அம்மா என்ற சொல்லின் பெருமைகள் . உலகில் தமிழ் சொற்களுக்கு மட்டும் தனி தன்மைகளும் பெருமைககளும் உண்டு . அம்மா என்ற சொல்லின் தனி தன்மைகளை பார்போம் . ஈன்றவள் தான் உலகின் முதல் என்பதை உணர்த்த மொழியின் முதல் எழுத்தை வைத்தே (அகரத்தை) வைத்தே அழைக்கபடுகிறாள் அம்மா. உலகில் திராவிட மொழியை தவிர்த்து அம்மா அகரகதை கொண்டு தொடங்குவது இல்லை . எடுத்துகாட்டாக ஆங்கிலத்தில் "மம்மி" என்று பதிமூன்றாவது எழுத்தில் தொடங்குகிறது . அம்மா என்பது அழைக்கவும் , தாய் என்பது குறிக்கவும் பயன்படுகிறது. (இது முறையே ஆங்கிலத்தில் "மம்மி" மற்றும் "மதர்" என்று உள்ளது ). ஒவ்வொரு மொழியிலும் உயிர்,மெய் மற்றும் உயிர்மெய் எழுத்துகள் வகைபடுத்தபடுகிறது . தமிழில் அ முதல் ஔ வரையுள்ள 12 உயிரெழுத்துகளும், 'க்…
-
- 6 replies
- 2.9k views
-
-
திருவள்ளுவர் 'அந்தணர்' என்றது தொழில் வழி 'அந்தணர்'களை இல்லை - குறள் ஆய்வு-3 -பகுதி2 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் தொல்லியல் அறிஞர் முனைவர் நாகசாமி அவர்களின் "Thirukkural - An Abridgement of Sastras" என்னும் நூலுக்கு முறையான பதில் விளக்க நூலின் பகுதிகளையே யாழ் இணையத்தில் கட்டுரைகளாக வெளியிட்டு வருகின்றேன். உலகத் தமிழர்களின் பின்னூட்டத்தைப் பெற்று, முழுமையான நூலாக மேம்படுத்தும் என் முயற்சிக்கு உறுதுணையாக விரிவான பின்னூட்டம் அளித்த தேவப்பிரியா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. விரிவான தங்கள் கருத்துக்கு நான் எழுதிய பதில…
-
- 0 replies
- 2.8k views
-