பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
தஞ்சை கோட்டைக் கொத்தளச் சுவரில் 1000 ஆண்டு கால கற் சிலைகண்டுபிடிப்பு தஞ்சாவூர்: தஞ்சையில் உள்ள பெரிய கோவில் [^] என அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவிலின் கோட்டை கொத்தளச் சுவரில் மணிமகுடத்துடன் கூடிய ஒரு கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ராஜ ராஜசோழ மன்னனின் சிலையாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சிலையின் வயது 1000 ஆண்டுகளாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய மாபெரும் கோவில்தான் பிரகதீஸ்வரர் கோவில். இக்கோவில் கட்டி 1000 ஆண்டுகளாகிறது. இதையொட்டி தமிழக அரசு [^] தஞ்சையில் செப்டம்பர் 22ம் தேதி முதல் 5 நாட்களுக்கு பிரமாண்ட விழா எடுத்து கொண்டாடவுள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்காக பெரிய …
-
- 0 replies
- 716 views
-
-
தண்ணீர் தண்ணீர் ஆனாரூனா இந்தியா பல தேசங்களாக, சமஸ்தானங்களாக, பாளையங்களாகப் பிரிந்து, முரண்பட்டு, மோதிக் கொண்டிருந்த சூழ்நிலைதான் பிரிட்டிஷ் ஆட்சி ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தது. இந்தியாவை ஒற்றுமைப் படுத்தியதுதான் (!) பிரிட்டிஷ் ஆட்சி மறைவதற்கு அடிப்படையாய் அமைந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகும், சுதந்திர(?) இந்தியாவிலும் மாநில, வட்டார உணர்வுகள், - தேசிய அல்லது பிரிவினை உணர்வுகள் இருப்பதால்தான் இந்திய தேசியத்தின் பெயரால் `தேசிய ஒருமைப்பாட்டின்’ பெயரால் `வலிமையான’ அகில இந்தியக் கட்சியாக காங்கிரஸ் இருக்க முடிந்தது. அதே காரணம்தான் பாரதீய ஜனதாவுக்கும் ஆசையை வளர்த்தது. பல தேசிய இனங்களுக் கிடையேயான முரண்பாடுகளும், மோதல்களும் இருக்கும் வரைதான் இந்த இரு கட்சி…
-
- 0 replies
- 919 views
-
-
எழுதுவேமா??? ஐயர் இல்லாமல் பாதிரியார் இல்லாமல் சிவன் யேசு அல்லா இல்லாமல் அதைவிட முக்கியமாக எங்களுக்குள் கெளரவம் பார்க்காமல்.
-
- 0 replies
- 985 views
-
-
தனித் தமிழா, கலப்புத் தமிழா? தமிழில் வடமொழி சொற்களைக் கலந்து எழுதுவது முறையா? உங்கள் கருத்து என்ன?
-
- 20 replies
- 4.4k views
-
-
தனித் தமிழ் வெறித்தனம் - பிற மொழி மோகம் - சிதையும் தமிழ் மொழி எழுதியது இக்பால் செல்வன் *** Monday, April 01, 2013 தமிழ் என்ற மொழி உலகின் பழமையான மொழிகளில் ஒன்று. மிகப் பழங்காலந்தொட்டே செவ்வியல் தன்மை கொண்ட ஒரு செம்மைப்படுத்தப்பட்ட மொழியும் கூட. அது மட்டுமில்லாமல் பழமையான இலக்கணங்களையும், இலக்கியங்களையும் கொண்ட ஒரு அற்புதமான மொழி என்பதில் நாம் என்றுமே பெருமை கொள்ள வேண்டும். அதே சமயம் தமிழ் மீதான போலிக் கட்டமைப்புக்கள் பலவும் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழே உலகின் முதல் மொழி எனவும், உலக மொழிகளின் தாய் மொழி என்றும் கூறப்படும் கூற்றை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன். அத்தகைய சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைத்ததில்லை. தமிழ் அனைத்து திராவிட மொழிகளுக…
-
- 0 replies
- 2.3k views
-
-
‘Establishing Tamil University is a shot against National Integration’ என்று சீறினார் இந்திரா காந்தி. ‘No Madam, I am telling you as a congressman it is not’ என்று மறுத்துப் பேச நேர்ந்தது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் திரு. வ.அய்.சுப்பிரமணியம் அவர்கள், தமிழ் பல்கலைக்கழகத்தின் அடிமனை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளைத் திட்டமிடும்போது பெருந்தச்சன் திருவாளர் கணபதியார் அவர்களிடம் கூறிய செய்தி இது. திருவாளர் கணபதியார் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியின் முதல்வராகவும், அன்றைய தொழில் நுட்பக் கல்வித்துறையில் மிகவும் செல்வாக்குப்பெற்ற மரபு வழிப்பட்ட கட்டடக்கலை வல்லுநர் ஆகவும் இருந்த படியால், திட்டமிடுவோர் மனங்கொள்ள வேண்ட…
-
- 0 replies
- 1.3k views
-
-
Raghav N1 year ago தமிழ் என்பது "உணர்வு" இந்த ஒரு வார்த்தைக்கு கோடி வணக்கங்கள்
-
- 0 replies
- 481 views
-
-
ஈழத் தமிழர் குறித்த தமிழகத் தமிழரின் இன்றைய நிலை என்ன?: தினமணி நாளேட்டில் வெளியான கடிதங்களின் தொகுப்பு [சனிக்கிழமை, 10 யூன் 2006, 09:20 ஈழம்] [புதினம் நிருபர்] தமிழீழத் தமிழர் பிரச்சனை, ஐரோப்பிய ஒன்றியத் தடை, அகதிகள் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டு தமிழர்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் தினமணி நாளேட்டில் பொதுமக்களின் கடிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு: இந்திராவின் அணுகுமுறை "புலம் பெயர்ந்த தமிழர்கள்" தலையங்கம் (31.05.06) படித்தேன். இலங்கைத் தமிழர்கள்பால் சிங்களப் பேரினவாத அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டபோது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி எடுத்த நிலைப்பாடு தொடர்ந்திருக்குமேயானால் இலங்கைத் தமிழர் …
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழகத் தமிழரும் அயலகத் தமிழரும் (பழ. நெடுமாறன்) தமிழ்நாட்டில் ஆறு கோடிக்குச் சற்று மேற்பட்ட தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அயல்நாடுகளிலும் ஏறத்தாழ மூன்று கோடிக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். சங்ககாலத்தில் இலங்கை ஈழம் என்றே அழைக்கப்பட்டது. பட்டினப் பாலையில் காவிரிப்பூம்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கிய பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் "ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கநூலான இதில் இலங்கை என்ற பெயர் சுட்டப்படவில்லை. அப்போதிருந்து அங்கு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் பிற்காலச் சோழரின் ஆட்சி அங்கு நிலைநாட்டப்பட்ட போது மேலும் தமிழர்கள் அங்கு குடியேறி…
-
- 3 replies
- 1.9k views
-
-
தமிழகத்தின் ஈழஅகதிகள் தொ. பத்திநாதன் இரண்டாம் உலகப்போரை ஒட்டி ஏராளமான அகதிகள் வெளியேறியதைத் தொடர்ந்து அகதிகள் ஒரு சட்டபூர்வ குழுவாக வரையறுக்கப்பட்டனர். ஜூன் 20ஆம் திகதி அகதிகள் தினமாக நினைவுகூரப்படுகிறது. ஆரம்பத்தில் ஜூன் 20 ஆப்பிரிக்க அகதிகள் தினமாகத்தான் நினைவுகூரப்பட்டது. பின்னர் 2000ஆம் ஆண்டில் ஜக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானம் ஒன்றின்படி ‘உலக அகதிகள் தின’மாக அறிவிக்கப்பட்டது. தம் நாட்டில் பல்வேறு மோதல்களில் சிக்கி வாழமுடியாத சூழ்நிலையில் இடம் பெயர்ந்த, பல்வேறு இன்னல்களுடன் வாழும் அகதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அகதிகள் தினத்தின் முக்கிய நோக்கமாகும். அகதி என்பது இனம், சமயம், தேசிய இனம் ஆகிய குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்ம…
-
- 0 replies
- 1.9k views
-
-
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய. கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! …
-
- 8 replies
- 3.4k views
-
-
தமிழகத்தில் கல்வி கற்கும் உரிமை உலகத் தமிழ் மாணவருக்கு உண்டு - மறவன்புலவு க. சச்சிதானந்தன் சிதம்பரத்தில் மேல இரத வீதியில் இன்றும் நடைபெற்று வரும் பள்ளியை, முன்னாள் அமைச்சராக இருந்த வி.வி. சுவாமிநாதன் உள்ளிட்ட, சிறந்த மாணவர் பலரை உருவாக்கிய பள்ளியை, 165 ஆண்டுகளுக்கு முன், யாழ்ப்பாணத்தில் திரட்டிய நிதியைக் கொணர்ந்து தொடங்கியவர் தவத்திரு ஆறுமுக நாவலர். கலைஞர் மு. கருணாநிதிக்குத் திருவாரூரில் தமிழ் கற்பித்த தண்டபாணி தேசிகரின் ஆசிரியரான யாழ்ப்பாணத்து மட்டுவில் க. வேற்பிள்ளை, சிதம்பரத்தில் அப்பள்ளியில் நெடுங்காலம் தமிழாசிரியராகப் பணிபுரிந்தவர். பாண்டித்துரைத் தேவர் மதுரையில் தமிழ்ச் சங்கத்தை நிறுவிய பின்னர், தமிழ் மொழியில் பண்டித, வித்துவான் வகுப்புகளைத் தொடங்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தமிழ்நாட்டில் 13ம் நூற்றாண்டில் நிலவிய சாதிய சண்டைகள் சச்சரவு குறித்தும், சண்டைகளைத் தவிர்க்க அம்மக்கள் ஏற்ற உறுதி மொழி குறித்தும் விவரிக்கிறது கல்வெட்டு ஒன்று. நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை தாலுகா திருமணஞ்சேரி அருகே உள்ள திருமங்கலத்தில் உள்ள விக்ரம சோழன் காலத்தில் (கிபி 1118 - 1136) கட்டப்பட்ட கோயிலொன்று உள்ளது. பாழடைந்த அந்த சிவன் கோயில் ஒன்றை புனரமைக்கும்போது கல்வெட்டு ஒன்று கிடைத்திருக்கிறது. அந்த கல்வெட்டினை, முன்னாள் வங்கி அதிகாரியான வேலூரைச் சார்ந்த கல்யாணராமன் என்பவரும், ஊர்மக்களும் எடுத்து திருப்பணி செய்யப்பெற்ற அக்கோயிலின் மகாமண்டபத்தின் வடபுறம் தரையில் நட்டு காப்பாற்றி வந்துள்ளனர். அக்கல்வெட்டை அண்மையில் கல்வெட்டு ஆய்வாளரான முதுமுனைவர் குடவா…
-
- 0 replies
- 343 views
-
-
சேர சோழ பாண்டிய தமிழ்ப் பேரரசுகள் ஒவ்வொன்றாக பதிமூன்றாம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்தன. மூவேந்தர்கள் மட்டுமன்றி பல்லவ மன்னர்களுக்கும் தமிழ் வரலாற்றில் முக்கியமான இடமுண்டு. இந்த மூவருக்கும் முன்னரே அவர்களின் ஆட்சியும் தமிழகத்தில் முடிவுக்கு வந்திருந்தாலும் அவர்களின் வழித் தோன்றல்கள் என்று சொல்லப்பட்ட சம்புவராயர்கள் மீண்டும் அரியணை ஏறினார்கள். பதிமூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கிய அவர்களுடைய ஆட்சி பதினான்காம் நூற்றாண்டின் இறுதி வரை நிலைபெற்றிருந்தது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள். பட மூலாதாரம், தமிழ்மகன் படக்குறிப்பு, தமிழ்மகன் …
-
- 0 replies
- 1k views
-
-
தமிழச்சியின் கத்தி -- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (Thanks http://library.senthamil.org/134.htm) 1. சுதரிசன் சிங்க் துடுக்கு அகவல் தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்; ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது. நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு பாளைய மாகப் பகுக்கப் பட்டது; பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்; பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த் தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள். தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்; தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்; தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது. சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன் இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர். சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத் தேசிங் கிடத்தில் செல…
-
- 0 replies
- 815 views
-
-
இந்தக் கல்லை தட்டினால்... "சரி கம பத னி" என்ற சங்கீத ஏழுசுவரம் ஒலிகேட்கும். 2000 ஆண்டு பழமையானது இன்று வரை... ஒரு கீறல் கூட இல்லை. சோழமன்னன் கட்டிய, மிக பிரமாண்ட அணை.
-
-
- 114 replies
- 29.8k views
-
-
என்றும் அழியாத, தமிழர்களின் கட்டிடக்கலை..!
-
- 2 replies
- 3.9k views
-
-
தமிழனின் கலச்சாரம் கொடுமணல் அகழாய்வு - 2013 உலகத்தில் தமிழனுக்கு என்று ஒரு வரலாறு உண்டு. ஆனால், ஏனோ அந்த வரலாற்றை மறந்ததால் நமது அறிவையும், பண்பாட்டையும் இழந்து வருகிறோம். இதோ பாண்டிச்சேரியில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை கடந்த இரு மாதங்களாக கொடுமணல் என்ற சிற்றூரில் தனது அகழாய்வுப் பணியை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை, பலகலைக்கழக நான்கு குழு மற்றும் செம்மொழி உயராய்வு நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் பேராசிரியர் கா.ராஜன் தலைமையில் மேற்கொண்ட ஆய்வில் தமிழனின் பண்பாடு கலச்சாரம் விவரிக்கின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் நொய்யல் நதியின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூர் சங்ககாலத்தில் சிறப்புற்றிருந்த…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழனின் மறைக்கப்பட்ட உலக அதிசயம்! கம்போடியா - அங்கோர் வாட்
-
- 71 replies
- 9k views
-
-
தென்னன் மெய்ம்மன். மகாபலிபுரம் சிற்பக்கல்லூரியில் பயின்று தங்கப்பதக்கம் பெற்றுத் தேர்ச்சி பெற்றவர்.. ஸ்தபதி என்ற சொல்லுக்கு பெருந்தச்சன் என்பதே சரியான தமிழ்ச் சொல் என்று எடுத்துரைப்பவர். ஆண்டுக்கு நாட்கள் 360. மாதந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அமாவாசையும், வெள்ளிக்கிழமைகளில் பெளர்ணமியும் வரும் திராவிட ஆண்டுப்பிறப்பு, ஆரியர் ஆண்டுப்பிறப்பு, திருவள்ளுவர் ஆண்டுப்பிறப்பு என்றிருப்பதுபோல் தமிழனின் மெய்யான புத்தாண்டு தினம் ஆண்டுதோறும் தைமாதம் 1 தேதிதான் வரும். அஃது ஜனவரி 4 அல்லது 5 தேதியாகவே இருக்கக்கூடும். நீங்கள் தமிழரென்றால் இந்த நாட்காட்டியைப் பின்பற்றுங்கள்; இல்லையென்றால் புறக்கணியுங்கள் என முழக்கமிட்டு வருபவர், தென்னன் மெய்ம்மன். சென்ற ஆண்டு தமிழர்தம் நாட்காட்டி ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழனின் வரலாறு. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் புதைக்கப்பட்டுள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கத…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழனின் வீரத்திற்கு சான்றாக ஒரு தமிழ் மன்னன் எல்லாளன்..... எல்லாளன்:- எல்லாளன் என்ற தமிழ் மன்னன் இலங்கையை 44 ஆண்டுகள் ஆண்டதாக ஆதாரபூர்வமான வரலாறு கூறுகிறது. சிங்களர்கள்தான் இலங்கையின் பூர்வக்குடிகள் என்று நிரூபிப்பதற்காக எழுதப்பட்ட நூல் "மகாவம்சம்.'' சிங்கள வம்சத்தை தோற்றுவித்தவன் விஜயன்தான் என்று அந்நூல் கூறுகிறது. ஆனால், அவன் இலங்கையில் காலடி வைக்கும்போதே, அங்கே குவேனி என்ற தமிழ் அரசி இருந்திருக்கிறாள் என்று அதே மகாவம்சம் குறிப்பிடுகிறது. அப்படியானால், விஜயனுக்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை மகாவம்சமே ஒப்புக்கொள்கிறது. அனுராதபுரம்:- இலங்கையின் மற்ற பகுதிகள் காடுகளாக இருந்தபோது, அனுராதபுரத்தை பெரிய நகரமாக தமிழர்கள் உருவாக்கி, அங்கி…
-
- 0 replies
- 2k views
-
-
தமிழ்.வெப்துனியா.காம்: நீண்டி நெடிய வரலாற்றையும், பண்பாட்டையும் தந்த தமிழனத்திற்கென்று திருமண முறை என்பது எப்படிப்பட்டதாக இருந்தது. அதேபோல தமிழருக்கென்று இறந்தவர்களுக்கு செய்யக் கூடிய காரிய முறை ஏதாவது இருக்கிறதா? ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: நமக்கென்று சில முறைகள் இருக்கிறது. தமிழர் பண்பாடு, வேளாளர் முறை என்றெல்லாம் சங்ககால நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. இதில் பெரியவர்கள்தான் மிக மிக முக்கியம். மங்கள நாண் என்று சொல்கிறோமே தாலி, அந்த மங்கள நாணை பெரியவர்கள் கையால் எடுத்துக் கொடுப்பார்கள். பெற்றோர், அதாவது மணமகன், மணமகள் பெற்றோர், அதே நேரத்தில் அந்த பெற்றோருக்குப் பெற்றோர். தாத்தா, பாட்டி, பூட்டன் அவர்கள் கரங்களால் எடுத்துக் கொடுத்து, பிறகு மேள தாள வாத்தியங்கள் …
-
- 7 replies
- 1.7k views
-
-
கனடா இளையோரின் உண்ணாநோன்பு பற்றித் தேடியபோது இப்படி அதிர்ச்சியான படங்கள் தட்டுப்பட்டன. தமிழனும் ஒரு காலத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பசிக் கொடுமையில் சோமாலியாவை விடக் கேவலமாக இருந்தான். 1876-1878 வரை காலப்பகுதியில் எடுக்கப்பட்ட படங்கள் இவை.. ஒட்டிய வயிறும், எலும்புகள் பிரதானமான மேனியுமாக... குழந்தைகளைப் பார்த்தால் தாங்க முடியவில்லை. http://images.rgs.org/search_.aspx?eventID=55
-
- 18 replies
- 4.9k views
-
-
தமிழனும் வானவியலும் - ஒரு பார்வை நம் முன்னோர்கள் வெறும் கண்களால் அண்ட பாழ்வளியை ஆராய்ந்து அவை எவ்வாறு மனித வாழ்க்கையுடன் தொடர்புடையன என்பதை தெளிவுபடுத்தி உள்ளனர். அவற்றில் சில தகவல்களை இங்கு காண்போம். சூரியன் நம் முனோர்கள் உயிர் தோன்ற முக்கிய காரணியாக இருக்கும் சூரியனை எதிலும் முதன்மை படுத்தினர். தீக்குழம்பு என்றும் வாயுவால் ஆனதையும் விளக்கியுள்ளனர். இந்த சூரியனை, ஞாயிறு என்றும் அதனை பூமி சுற்றி வருகிறது என்றும் அறிந்துள்ளனர். சந்திரன் புவியின் துனைக்கோளான சந்திரன் பூமியை சுற்றி வருகிறது என்றும் இதன் அடிப்படியில் மாதத்தை உருவாக்கினர். விண்மீன் விட்டு விட்டு மின்னுபவை விண்மின்கள் என்றும் அவற்றை உற்று நோக்கி 27 கூட்டங்களாக பிரித்து…
-
- 1 reply
- 1.1k views
-