Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பெயர்ச் சிறப்பு மது தாய்மொழியின் பெயர் "தமிழ்' என்பது. தமிழை ""உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்' என்பதற்கு "அழகு' எனவும் பொருள் உண்டு. இவ்வுண்மையைத் ""தமிழ் தழுவிய சாயல்'' என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை' எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்'ழை உடையது "தமிழ்' எனப் பொருள் கூறுவதும் உண்டு. தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவ…

  2. ஆங்கிலம் மட்டுமே போதும் என்ற நிலைக்கு இன்று பெரும்பான்மையானவர்கள் கருதுகிற நிலையில் தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பு அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே போகிறது.தமிழை தாழ்வாக நினைக்கும் தமிழர்களுக்கு தமிழின் சிறப்புகளை இங்கே ஒவ்வொரு பகுதியாக சுட்டிக்காட்டுகிறோம். இன்றைக்கு நம் வீட்டில் நமது குழந்தைகளுடன் சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் பேசத் துவங்குகிறோம். தமிழ் குறித்த அறிவையும் ஞானத்தையும் போதிப்பதை விட்டுவிட்டு நம் சொந்த அடையாளங்களைத் தொலைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று ஆங்கில மொழி உலக மொழியாக உருவெடுத்துள்ளதால் சமுதாயத்தில் தன்னை தக்க வைத்துக்கொள்ள ஆங்கிலம் தேவை என்றாலும் அவசியம் ஒரு போதும் அடையாளம் ஆகிவிடாது என்பதை உணர வேண்டும். தமிழை முழுமையாக தெரிஉந்து கொண…

  3. யாழ் நூலக எரிப்பு Published On Thursday, பெப்ரவரி 07, 2013 By admin. Under: ஈழப் படுகொலைகள். சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு முப்பதிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது. 1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில் தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது. 97, 000க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். யார் பயங்கரவாதிகள் உலகமே? தமிழீழ…

    • 4 replies
    • 794 views
  4. மனிதா .... மனிதா ..... ! இவர்களும் தமிழர்களா . . . ? [ “ ……. பொய்யை நான் வெறுப்பதன் காரணம் என்னவென்றால் உன்னைப்போலவே நான் என் வாழ்கையையும் கவனமாக கொண்டு செலுத்த விரும்புகிறேன், அப்படி செய்ய என் உண்மையான நிலைமையை நான் கணக்கிடக் கூடியதாக இருக்க வேண்டும். நீ எனக்கு பொய் கூறும்போது, உனக்கு உன் நிலைமை தெரியும் ஆனால் நீ எனக்கு பொய்யான விபரத்தை தந்து என்னுடைய வாழ்கையை இருட்டடிப்பு செய்கிறாய். …… “ (… The reason that I hate lies is because, like you, I wish to navigate carefully through life, and to do so I must be able to calculate my true position. When you lie to me, you know your position but you have given me f…

    • 12 replies
    • 4.2k views
  5. குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம். முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம். தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பத…

  6. ” புலையன் ” என்ற சொல்லுக்கு தமிழ் லெக்க்ஷிக்கனில் ” கீழ்மகன் ” [ கீழ்சாதியான்] என்று பொருள் தரப்பட்டுள்ளது.அதே சொல்லுக்கு ” புரோகிதன் ” என்றி வேறொரு பொருளும் தரப்பட்டுள்ளது. புரோகிதன் என்றால் மதகுரு [ Preist ] சமயத் துறையின் தலைமகன்.சமயச் சடங்குகளை நிகழ்த்துவது இவரது சிறப்புரிமை. இந்தத் தலைமகன் எப்படிக் கீழ் மகனாகவும் கருதப்பட முடியும் ? இது ஆழ்ந்து ஆய்யு செய்வதற்குரியதாகிறது. சமயச் சடங்குகளில் கடவுள் வழிபாட்டுச் சடங்கு தான் முதலிடம் வகிப்பது.இதற்க்கடுத்துப் புராதன சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது ஈமச் சடங்காகும்.திருமஞ்ச சடங்கு முதலியனவெல்லாம் காலத்தால் மிகவும் பிற்ப்பட்டவை. எனவே கடவுள் வழிபாட்டைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் இறுதிச் சடங்கு தான் முதல் …

    • 1 reply
    • 6.4k views
  7. *தமிழ்க் குடியரசின் வரைபடம்* 1956ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் போது தமிழரின் எதிர்ப்பையும் போராட்டத்தையும் மீறி திராவிடத்தின் பேராதரவுடன் தமிழரிடமிருந்து அண்டை மாநிலங்களால் பிடுங்கப்பட்ப் பகுதி. 2009ல் சிங்களத்தால் இந்தியா மற்றும் 32நாடுகளின் படைவலிமையால் அபகரிக்கப்பட்ட பகுதி. பிடுங்கப்பட்ட பகுதிகளில் சிறுபகுதியை மீட்டு இன்று 'தமிழ்நாடு ' என்னும் பெயரால் நீண்டகாலம் தமிழரல்லாதோரால் ஆளப்பட்டுவரும் பகுதி. பூர்வீகத் தமிழரைவிட அதிக அளவில் வங்காளியரைக் குடியேற்றி இன்று அவர்கள் மூலம் தமிழர் ஒடுக்கப்பட்டுவரும் அந்தமான்-நிகோபர் தீவுப்பகுதிகள். இவையே இன்றைய தமிழர் பெரும்பான்மைப் பூர்வீக நிலப்பகுதி ஆகும். இது துல்லியமானதென்று கூறிவிடமுடியாது, ஆனால…

  8. (1) மனிதா . . . மனிதா ......!” நாமும் தமிழர்களா . . . ? ( இறக்கத்தான் பிறந்தோம் அதுவரை இரக்கத்தோடு இருப்போம் - அன்னை தெரேசா) “புலம்பெயர் தமிழர்களே !!!!! நீங்களும் கடவுள் ஆகுங்கள்” “நியூ யவ்னா” இணைய தளத்தில் சில சமயங்களில் காணப்படும் தலையங்கம் இது . அந்த தலையங்கத்தை முதல் முதல் பார்த்தபோது “ கடவுள் ஏன் கல்லானார் . . . கல்லாய் போன மனிதர்களாலே…” கவிஞர் கண்ணதாசனின் பாடல் ஒன்றில் வரும் தொடக்க வரிகள் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. கடவுள்தான் ஏற்கனவே கல்லாகிவிட்டாரே இந்த கேடு மனிதர்களாலே. மேலும் படித்து பாருங்கள் கீழே உள்ள ஒரு கவிதையின் …

  9. மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர்திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உர…

  10. திருப்பூரில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு. திருப்பூர்: திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையிலுள்ள கொடுமணல் கிராமம் 2,500 ஆண்டுகளுக்கு முன் வணிக பெருநகரமாக விளங்கியதற்கான ஆதாரங்கள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கிடைத்துள்ளன. திருப்பூர்-ஈரோடு மாவட்ட எல்லையில் நொய்யல் ஆற்றின் கரையில் உள்ளது கொடுமணல் கிராமம். சங்க காலத்தில் வணிக பெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான் அருங்கலம்' என்ற பாட்டில் மிகச் சிறந்த தொழிற்கூடங்கள் அமைந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இது, சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கிய கரூரையும், வணிக தொடர்புக்கு பயன்பட்ட மேலைக்கடற்கரை துறைமுகமான முசிறி பட்டணத்தையும் இணைக்கும் கொங்கப்பெருவழி'யில் அமைந்துள்ளது. கொடுமணல…

  11. பார்ப்பனரும் தமிழரே ! _ பேராசிரியர் குணா. "தமிழைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள பார்ப்பனர் யாவரும் தமிழரே ! தமிழை அல்லாது தெலுங்கு, மராட்டிய, கன்னடம் என பிற தேசிய இன மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவரே பிராமணராவார். பார்ப்பனர் என்பவர் தமிழரே" ! "பார்ப்பனர் எனும் சொல் பிராமணன் என்னும் வடசொல்லின் திரிபு என்றும், துறவு நிலை பிராமணனுக்கே உரியதென்றும் பிதற்றி பேதையரை ஏமாற்றுவர். குமரித் தமிழர் காலம் ஆரியர் என்னும் இனம் கருவிலேயே தோன்றாத காலம். பாட்டனைப் பெற்ற பூட்டன் மணமாகாத இளமைக் காலத்தில் கொட்பேரன் (கொள்ளுப்பேரன்) எங்கனம் தோன்றவில்லையோ அங்கனமே குமரி நாட்டுத் தமிழன் காலத்திலும் ஆரியன்தோன்றவில்லை. அதனால் அவன் திரிமொழியும் தோன்றவில்லை." " அந்தணர் என்போர் அறவோர்மற் றெல்லாவுயிர்க்க…

    • 5 replies
    • 2.7k views
  12. உலகம் வியந்து பார்க்கும் தமிழன் ஒருவன் படைத்த சாதனை கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிக…

    • 0 replies
    • 2k views
  13. தமிழனே வெளியே சொல்லாதே : பொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும். தமிழன் உருப்படாததற்குப் பத்து காரண‌ங்கள் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்! இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது. கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத…

    • 92 replies
    • 36.1k views
  14. தியாகராஜஸ்வாமி திருக்கோயில், திருவாரூர் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை தியாகராஜஸ்வாமி திருக்கோயில், தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோயில்களுள் ஒன்று. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில், 1-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக்கோயில், சுமார் 33 ஏக்கர் பரப்பளவில், பல்வேறு தெய்வங்களுக்காகக் கட்டப்பட்ட ஏராளமான சந்நிதிகளுடன் பிரம்மாண்டமாகக் காணப்படுகிறது. இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை “வால்மீகிநாதர்” என்ற பெயரில் வழங்கப்படும் சிவபெருமானுக்கும், மற்றொரு பகுதியை தியாகராஜருக்கும் அர்ப்பணித்துள்ளனர். வால்மீகிநாதருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியானது, தியாகராஜருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள பகுதியைக் காட்டிலும் பழமை வாய்ந்ததாகும். வால்மீகிநாதரின் சந்நிதி…

    • 3 replies
    • 1.5k views
  15. தமிழ் மாதங்களில் முத்திரை பதிக்கும் மாதம் சித்திரை என்பார்கள். இந்த சித்திரை பிறக்கும் தினத்தையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். ஆங்கிலத்தில் ஜனவரி, பிப்ரவரி என்று 12 மாதங்கள் உள்ளன. அதே போன்று சித்திரை, வைகாசி என்று 12 தமிழ் மாதங்கள் உள்ளன. சூரியனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டே தமிழ் மாதங்கள் கணிக்கப்படுகின்றன. அதனால் தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. ராசி சக்கரத்தை பொருத்த வரை சூரியன் மேஷ ராசிக்குள் நுழைந்து வெளியேறும் காலம் சித்திரை மாதமாகும். 31 நாட்களை கொண்ட சித்திரை மாதம் ஆங்கில மாதத்தில் ஏப்ரல் 14ம் தேதி துவங்கி மே மாதம் 14ம் தேதி வரை உள்ள நாட்களாகும். சித்திரை தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப் பிறப்பை தமிழர் புத்தாண்டு என்று…

    • 8 replies
    • 6.3k views
  16. தமிழ்நாடு சுற்றுலா, அதன் தன்னிகரில்லா கலாச்சரம், பழம்பெருமை, இயற்கைத்தன்மை மற்றும் அழகினால், தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. எவ்வித பயணியாக இருப்பினும், ஆசுவாசமான மனோபாவம் கொண்ட ஒரு சுற்றுலாப் பயணியோ, அல்லது பயணத்தின் அனைத்து அம்சங்களையும் எடை போடக் கூடிய கூரிய திறனாய்வு கொண்ட ஒரு ஆர்வலரோ, யாராக இருப்பினும், அப்பயணியின் கற்பனைகள் மற்றும் உவகைகளுக்கு ஈடு கொடுக்கக்கூடியதாய் உள்ளது. தமிழ்நாடு, தன் தனிச்சிறப்பு வாய்ந்த புராதனப் பெருமையினால், சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. தமிழ்நாட்டு மலை வாசஸ்தலங்கள் – அறைகூவல் விடுத்து சலனப்படுத்தும் பயணப் பிரதேசங்கள்! தமிழ்நாட்டின் மலை வாசஸ்தலங்களில், முக்கியமாக, ஊட்டி மற்றும் கொடைக்கானல் போ…

  17. Started by hari,

    வெள்ளைக்காரன் கட்டத் தெரியாம கட்டி சாய்ந்தால் அது உலக அதிசயம் தமிழன் அற்புதமாக கட்டினாலும் அது ஒண்ணுமில்லே - இதுதாண்டா உலக நீதி எது உலக அதிசயம் ********************* உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல், ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது, இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்ற…

  18. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்களின் நினைவு தினம் இன்று (28-04-1942), உ.வே.சா. இவர் ஒரு தமிழறிஞர், பலரும் ம(து)றந்து அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்களை பலவற்றைத் அரும்பாடுபட்டுத் தேடி அச்சிட்டு உயிர் கொடுத்தவர், இந்(தி)யாவின் மகாத்மா காந்திக்கு தமிழ் கற்றுக் கொடுத்தவர், இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் இவரும் குறிப்பிடத்தக்கவர், தமது அச்சுப்பதிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையின் செழுமையையும் அறியச் செய்தவர், இவர் 90க்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் சேகரித்திருந்தார், சங்க இலக்கியங்கள், காப்பியங்கள்,புராணங்கள்,சிற்றிலக்கியங்கள்,எனப…

  19. தேசிய விடுதலை அரசியலில் இனக்குழு ஆய்வுகளுக்கு இடமில்லை ச. இளங்கோவன் சிங்களவர்களும் வடஇந்தியர்களும் ஒன்றல்ல கட்டுரை ஆசிரியர் குறிப்பு: இலங்கை அரசு வழமையாக தொடுக்கும் இராசதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சிங்களவர்களை 'வட இந்தியர்'களின் உறவுகள் என்று வரலாற்றுக்குப் புறம்பான கருத்தைப் பரப்ப முயலும் செயலுக்கும் அதைத் தொடர்ந்து அக்கருத்து சரியே என்று தமிழகத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கும் மாற்றுக் கருத்தை முன்வைக்கும் நோக்கத்தில் சிங்கள, தமிழீழத், தமிழ்த் தேசிய இனங்கள் குறித்த வரலாற்று தரவுகளை கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது *** ஹோமோசப்பியன்ஸ் என்று சொல்லப்படுகின்ற நவீன மனிதர்கள் ஏறத்தாழ இற்றைக்கு 1,90,000 ஆண்டுகள் முதல் 1,60,000 ஆண்டுகளுக்கு முன் …

  20. a குடாநாட்டு பழங்குடி மக்களின் வாழ்வும் வளமும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் அதற்கு முன்னைய காலங்களிலும் வாழ்ந்த யாழ்ப்பாணத்துப் பழங்குடி மக்களது வாழ...்வியல்புகளில் பனை வர்தக பாடம் இன்றும் என்றும் நினைவு கூரத்தக்கதாகும். அவ்வாறு நினைவு கூருதல் இன்றைய காலத்தின் தேவையாகும். அன்றெல்லாம் மக்களது குடியிருப்புக்கள் அனைத்தும் பனந்தோப்புகளில் பனை ஓலைகளால் வேயப்பட்டவையாக இருந்துள்ளன. இந்தக் குடியிருப்புக்களை அமைக்க வேண்டிய மரங்கள் வளைகள் சலாகைகள் அனைத்தும் பனையிலிருந்து பெறப்பட்டவையாகும். கடுங்கோடை காலத்திலும் சரி மாரி காலத்திலும் சரி பனை ஓலைகளால் வேயப்பட்ட வீடுகளில் மக்களை மிக மிக இதமான சுவாத்தியத்தில் வாழ்ந்துள்ளனர். வெப்பமோ அன்றிக் குளிரோ அவர்களை அன்று பாதித்…

  21. உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில். இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!! இந்த கோயிலை ஒரு கலை பொக்க…

  22. சங்கிலிய மன்னன் அறிஞர் ஆ முத்துத்தம்பிப்பிள்ளையின் பார்வையில் யாழ்ப்பாண மன்னன் குணவீர சிங்கையாரியாரின் மகன் யாழ்ப்பாண மன்னன் கனகசூரிய சிங்கையாரியார் இவரின் மகன் பரராச சேகரன் இவரின் சகோதரன் சகராச சேகரன் - (இளவரசன்) பரராச சேகரன் இராச லக்ஸ்மி பிள்ளைகள் சிங்கபாகு ;பண்டாரம் பரராச சேகரன் வள்ளியம்மை பிள்ளைகள் பரநிருப சிங்கன் பரராச சேகரன் மங்கத்தம்மாள் பிள்ளைகள் சங்கிலியன் , பரவை (மகள் ) சங்கிலியன் நல்ல வீரனாக வளர்ந்து வரும் நிலையில் ஆட்சி அதிகாரம் மீது அவனுக்குஆசையுண்டானது . வயதில் மூத்தவர்கள் இருக்கும் வரையில் தனக்கு அதிகாரம் கையில் கிடையாது என எண்ணி சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க முனைந்தான்: மன்னனுடைய மூத்த மகனான சிங்கவாகுவை…

  23. Started by nunavilan,

    மல்லர் கம்பம் தமிழர்களின் பாரம்பரிய கலை மல்லர் கம்பம் . பயிற்சியின் போதும் பயிற்சிக்கு பின்னும் பல விளைவுகளை உருவாக்க கூடிய கிரேக்கர்கள் உருவாக்கிய ஜிம்னாஸ்டிக்ஸ் பார்த்து வியக்கும் நாம் அதைவிட உடலுக்கும் மனதிற்கும் மிக வலிமை சேர்க்கின்ற மல்லர் கம்பம் என்ற தமிழர் பாரம்பரிய விளையாட்டை மறந்து போனது மிக துயரமான விசயம் தான். சிலம்பம், களரி , மல்யுத்தம், பிடிவரிசை , வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலை போல் மனிதன் உடலையும் மனதையும் கட்டுபடுத்தி வைக்க உதவும் யோகாசனம் தியானம் போல் மல்லர் கம்பமும் மிக சிறந்த விளையாட்டாகும். இது நம் முன்னோர்களால் போற்றி வளர்க்க பட்டது. தமிழகத்தின் பாரம்பரியமான விளையாட்டு மல்லர் கம்பம் ஆகும். தரையில் ஊன்றிய கம்பத்தின் மீதும், க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.