சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
995 topics in this forum
-
காய்ச்சல் உடம்பு கொஞ்சம் ஏலாத மாதிரி இருந்திச்சுது , lectures ஐ cut பண்ண ஏலாது எண்டு போட்டு கம்பஸுக்கு வந்தா உடம்பு சுடுற மாதிரி இருந்திச்சுது. காயுதா காயேல்லையா எண்டு தொட்டுப் பாக்க வடிவாத் தெரியேல்லை. ஓடிப்போய் முந்தி ஒரு டொக்டரிட்டை காட்டி தந்த prescription ஐக் காட்டி pharmacy யில மருந்தை எடுத்துப் போட்டு வீட்டை வந்தன். வீட்டை வந்து சாப்பாடுக்கு எந்தக் கடை menu விலயாவது முருங்கைக்காய் கறி , மீன் தீயல் , துவரம்பருப்பு ரசம் இருக்கா எண்டு தேடீக் களைச்சுப் போய் , Uber- eats இல soup ஐ ஓடர் பண்ணீட்டு இப்போதைக்கு பிளேன்ரீயும் பிஸ்கட்டாலேம் வயித்தை நிரப்பீட்டு இருந்தன். வாங்கின Antibiotics , vitamin எண்டு எல்லாத்தையும் போட்டிட்டு இருக்க நித்திரை தூக்கி அடிக்க போத்த…
-
- 3 replies
- 833 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி செய்தியாளர் 4 ஆகஸ்ட் 2023 மனிதர்களால் நீண்ட காலமாக பருகப்பட்டு வரும் மதுபான வகைகளில் பீருக்கு முக்கிய இடம் உண்டு. பிற மது வகைகளால் விஸ்கி, ரம், பிராந்தி, ஜின், வோட்கா, வைன் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது பீரில் குறைந்த சதவீதமே ஆல்கஹால் உள்ளதால் அதனால் உடலுக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை என்று பலரும் நம்புகின்றனர். சர்வதேச பீர் தினமான இன்று (04/07) பீர் குறித்த மக்களிடம் நிலவும் இதுபோன்ற பொதுவான புரிதல்களையும் அவற்றின் உண்மை நிலையையும் பார்க்கலாம். பீர் குடித்தால் உடலுக்கு குளிர்ச்சியா? வெயில் க…
-
- 0 replies
- 697 views
- 1 follower
-
-
சமீப காலமாக ஆபிரிக்க நாடுகளில் இருந்து பலர் புது வாழ்வு தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. பலமில்லாத அரசுகள், பண வீக்கத்தின் உயரங்கள், வரண்டு போன நிலங்கள், வாழ்வில்லாத அவலங்கள், உள்நாட்டுக் கலவரங்கள் என அவர்கள் நிலமை மிகவும் மோசமானது. பல அபாயகரமான கடல் பயணங்கள் மூலம்தான் அவர்களது ஐரோப்பிய வருகை இப்பொழுது தொடர்கிறது. நைஜீரியா நாட்டில் இருந்து ஐரோப்பிய நாட்டுக்கு பயணிக்க விரும்பிய நால்வரைப் பற்றிய கதைதான் இது. நைஜீரியா நாட்டுத் துறைமுகத்தில் இருந்து யூன் 27 இல் புறப்பட இருந்த ஒரு சரக்குக் கப்பலின் சுங்கான்( rudder ) இல் நான்கு இளைஞர்கள் களவாக ஏறி அமர்ந்து கொண்டார்கள். அவர்களிடம் கடவுச் சீட்டு இல்லை. பணம் இல்லை. பத்து நாட்களுக்குப் போதுமான உணவும், ஐ…
-
- 2 replies
- 716 views
-
-
பழங்கள்,சூரியகாந்தி விதைகளின் முளைகள், பழக்களிகள்,பழச்சாறுகள் போன்றவைதான் அவளது உணவாக இருந்தது. சைவ உணவு (vegan) உண்பவர் என்று சமூக வலைத்தளங்களில் பெரிதும் அறியப்பட்ட, ரஸ்யாவைச் சேர்ந்த Zhanna Samsonova இப்பொழுது உயிருடன் இல்லை. இறக்கும் போது அவளது வயது 39 மட்டுமே. ஐந்து வருடங்களாக கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த Zhanna Samsonova, அதை வலைத்தளங்களில் Zhanna D’Art என்ற பெயரில் பதிந்து வந்திருக்கிறார். அவர் எதனால் மரணமடைந்தார் என்பது அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை. ரஸ்யாவில் இருந்து வெளிவரும் Vechernyaya Kazan பத்திரிகைக்கு அவரது தாயார், கொலோரா போன்ற ஒரு நோயால் Zhanna இறந்திருக்கிறாள் எனக் கூறியிருக்கிறார். அவள் சோர்வாக இருந்தாள். அவளது எடை ச…
-
- 1 reply
- 506 views
-
-
ஆசிய நாட்டுக் குளவி(hornets) இனக் கூட்டம் யேர்மனிக்குப் படை எடுக்க ஆரம்பித்திருக்கின்றன. இப்பொழுது யேர்மனியில் Nordrhein-Westfalen, Saarland, Rheinland-Pfalz ஆகிய மாகாணங்களில் அவை பரவலாகக் காணப்படுகின்றன. எழுபதுகளின் பிற்பகுதியில்தான் நாங்கள் புலம் பெயர ஆரம்பித்தோம். அதிலும் 1983க்குப் பின்னர்தான் நாங்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமாக வந்தேறினோம். யேர்மனியில் அப்பொழுதே “புலம் பெயர்ந்து வருபவர்கள் தனியாக வந்து அரசியல் தஞ்சம் கேட்கவில்லை. தலைகளில் பேன் பண்ணைகளையும் கொண்டு வருகிறார்கள்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள். பாலர்வகுப்பு முதல் கல்லூரிவரை அன்று ‘பேன்’ பிரச்சினை ஒரு புதுப் பாடமாக இருந்தது. ஆசியக் கடைகள் யேர்மனியில் மலர்ந்து கொண்டிருந்த போது கரப்பான் பூச்…
-
- 1 reply
- 741 views
-
-
“பள்ளிச் சிநேகிதம் எல்லாம் படலைவரைதான்” என்று ஊரில் அப்போது சொல்வார்கள். அதையும் தாண்டி இது புதுமையானது. இந்தக் காதல் கதை இதுவரை அறியாததொன்று. தோமாஸ் மக்மெக்கினும்(78) நன்ஸி ஹாம்பெல்லும் (78) அமெரிக்கக் கல்லூரி ஒன்றில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரிக் காலம் முடிந்த பின்னர் இருவரும் அவரவர் பார்வையில் இருந்து காணாமல் போய் தங்கள் தங்களுக்கான குடும்பங்களை அமைத்துக் கொண்டு வெவ்வேறு பாதையில் போய் விட்டார்கள். என்னதான் இருவரும் விலகி வெகு தூரம் பயணித்தாலும், காலங்கள் நீண்டுதான் போனாலும் கல்லூரி நினைவுகள் மட்டும் அவர்களுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தன. “அவள் ஒரு உற்சாகமான பெண். நிறைந்த அழகி. அவளைக் காணும் போதெல்லாம் நான் நொறுங்கிப் போவேன். அவளுடன் இருப்பதற்கு எப்போதாவ…
-
- 1 reply
- 990 views
-
-
http://www.vaarakesari.lk/article/10039 குருந்தூரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் தமிழர்கள் மற்றும் இந்து பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களின் எதிர்ப்புகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கையில் உள்ள இந்துத்துவ சிவசேனை தலைவர்கள், குறிப்பாக மறவன்புலவு சச்சிதானந்தம், முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்பொருள் தளத்தில் நிறுவப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த விகாரையில் கல்கோமுவே சாந்தபோதி தேரருடன் இணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். குருந்தூர் பௌத்த விகாரைக்கு சென்று வழிபட்டதோடு மட்டுமால்லாது இவர் பிக்குகளின் இந்த கட்டுமானத்திற்கு ஆதரவும் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. இதன் ம…
-
- 14 replies
- 1.3k views
-
-
அன்பர்கள் அனைவருக்கும் நன்றியும் வணக்கமும். தனித்தனியாக உங்கள் ஒவ்வொருவருடனும் உரையாட ஆசைதான். ஒரேநாளில் இயலாதுதானே? இரண்டு மாதங்கள் தாயகத்தில் இருந்தேன். பேரின்பம். உற்றார் உறவினர் நண்பர்களெனக் கிட்டத்தட்ட 500 பேருக்கும் மேலானவர்களை நேரில் சென்று சந்தித்து உரையாடினேன். திருமணங்கள், உறவினர் மறைவு முதலானவற்றிலும் பங்கு கொண்டேன். அணுக்கமானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே இருக்கின்றது. முன்பெல்லாம் தாத்தா, பாட்டி எனும் வகையில் அங்கொன்றும் இங்கொன்றுமான இழப்புகளை உணர முடிந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக, அப்பா, சித்தப்பா, மாமனார் என்பதான இழப்புகள் என்றிருந்த நிலையில், தற்போது சம வயதுடையோரும் விடைபெறுவது இடம் பெற்று வருகின்றது. திரண்டிருந்த ஊரகத்திண்ணைகளும் சத்…
-
- 0 replies
- 888 views
- 1 follower
-
-
தொழில்ரீதியாக உங்கள் உடற் கட்டமைப்பை கட்டி எழுப்ப வேண்டுமானால், Anaboleஐ பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது” இப்படிக் குறிப்பிடுகிறார் ஒரு உடற் பயிற்சிக் கூடப் பயிற்சியாளர் ஒருவர். Anaboleஐ பயன்படுத்தினால், தங்களின் வாழ்க்கையை அது சிதைத்துவிடும் என்பதை கண்கூடாகக் கண்டும் சிலர் புகழுக்காகவும் பணத்துக்காகவும் தொடர்ந்து அந்தத் தவறை செய்கிறார்கள். உடற்பயிற்சியின் போது தசைக் கட்டமைப்பை (muscle building)வளர்த்துக்கொள்ள Anabole Steroide ஊக்கமருந்தைப் பயன்படுத்துவார்கள். Jo Lindnerம் அதற்கு விதிவிலக்கானவரல்ல. உடற்கட்டமைப்பில், யேர்மனியின் மிக பெரிய நட்சத்திரமாக இருந்தவர் Jo Lindner. அவர் தனது 30ஆவது வயதில் (30.06.2023) மரணிப்பார் என்று யாருமே எதிர்பார்க…
-
- 3 replies
- 867 views
- 1 follower
-
-
புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் காண வாரீர் வாரீர் பேழையில் வந்த தாய்த்தெய்வமே .. எங்கள் கண்ணகித்தாயவளே.. 25.06.2023 …. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0PRyaECs4iv4XPf3hWsCRUswU9FwBv9RQ56YobxSfevRQDq1NXYbaW3ouEoXQBbcCl&id=100063741202580
-
- 34 replies
- 2.2k views
-
-
118 பக்கங்கள் அடங்கிய குடும்ப வன்முறைகள் பற்றிய அறிக்கை இன்று யேர்மனில் வெளியாகி இருக்கிறது. கடந்த வருடத்தை விட இந்த ஆண்டு குடும்ப வன்முறைகள் அதிகரித்திருப்பதை யேர்மனியின் 16 மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் தெரிகிறது. யேர்மனி முழுவதிலும் மொத்தமாக 179179 குடும்ப வன்முறைகள் பொலீஸாரினால் பதியப் பட்டிருக்கின்றன. 2021ம் ஆண்டு கொரோனா தொற்று நோய் இருந்த காலகட்டத்துடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு குடும்ப வன்முறை 9.3 வீதத்தால் அதிகரித்திருக்கிறது. Nordrhein-Westfalen மாநிலத்தில் 37141 வன்முறைகளும், Baden-Württemberg மாநிலத்தில் 14969 வன்முறைகளும் இடம் பெற்றிருக்கின்றன. மேலும் வன்முறைகள் குறைந்த மாநிலமாக Bremen(2615) மாநிலம் காணப்படுகிறது. …
-
- 3 replies
- 982 views
-
-
அவளுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு இனிய நாளாக இருந்திருக்க வேண்டியநாள். ஆனால் மாறாக அந்தநாள் அவள் வாழ்வில் ஒரு பயங்கரமான நாளாகிப் போனது. திருமணம் நடந்து ஒரு மணித்தியாலத்தில் இதயத்தில் இரத்தம் உறைந்து போனதால் அவளது கணவன் மரணித்துப் போனான். அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. Johnnie Mae Davis, Toraze († 48) இருவரும் அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்கள் முகங்களில் புன்னகைகள் பூத்திருந்தன. இருவரதும் குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் பலர் அவர்களுக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவிப்பதற்காக தேவாலயத்தில் கூடி இருந்தார்கள். அருட்தந்தையிடம் திருமணத்துக்கு “சரி” என்று இருவரும் ஒப்புக் கொடுத்ததன் பின்னர் ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
பழைய திரைப்படங்கள் அதுவும் குறிப்பாக எம்ஜிஆரின் திரைப்படங்களைப் பார்த்தால், நாயகன் 100 வீதம் நல்லவனாக இருப்பான். வில்லன் செய்த சதியால் வீண்பழி சுமந்து அவன் சிறைக்குப் போவான். படத்தில், “ஓடி வந்து மீட்பதற்கு உண்மைக்கோ கால்கள் இல்லை ஓய்ந்திருந்து கேட்பதற்கு நீதிக்கோ நேரம் இல்லை பார்த்த நிலை சொல்வதற்கு பரமனுக்கோ உருவம் இல்லை பழி சுமந்து செல்வதன்றி இவனுக்கோ பாதை இல்லை..” போன்ற சீர்காழியார் பாடும் ‘கணீர்’ பாடல்களும் இருக்கும். பின்னர் நாயகன் சுற்றவாளி என நிரூபணமாகி, விடுதலையாகி, “தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் தருமம் மறுபடி வெல்லும்” என்று கதை முடியும். யேர்மனியில், கடந்த வெள்ளிக்கிழமை(07.07.2023) ஒரு வழக்கில் கிடைத்த தீர்ப்பு எனக்கு இப்படியான பழைய திரைப்படங்களை நினைவ…
-
- 3 replies
- 585 views
-
-
யேர்மனியில் சில காலமாக வெளிநாட்டவர்களது செயல்கள் முகம் சுழிக்க வைக்கின்றன . அதிலும் முஸ்லீம் மதத்தைச் சார்ந்தவர்களது நடவடிக்கை அதிகமாக இருக்கிறது. யேர்மனி சாக்சென் மாநிலத்தின் லவுற்றர் பேர்ன்ஸ்பாக் என்ற நகரின் ரெயில் நிலையத்தில் 15 வயதான ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞனால் ரெயில் சாரதி(50) ஒருவர் புதன் கிழமை 07.07.2023 அன்று தாக்கப் பட்டிருக்கிறார். ரெயில் சாரதி தாக்கப்படுவதை, Freie Sachsen என்ற முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்கள். அதைப் பார்க்கும் பொழுது யேர்மனியில் இப்படியும் நடக்கிறதா என ஆச்சரியப் படவைக்கிறது. புகையிரத நிலைய மேடையில், ஒரு யேர்மனியருடன் ஆப்கானிஸ்தான் இளைஞன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபடுவதை அவதானித்த சாரதி அவர்களைச் சமாதானப் …
-
- 1 reply
- 453 views
-
-
· ஜெயகாந்த் போரியல் • #கரும்புலிகளின் செயற்பாட்டை எவ்வாறு போரியல்ரீதியில் புரிந்துகொள்வது? …
-
- 0 replies
- 455 views
-
-
அது நடந்தது அமெரிக்காவில் புளோரிடாவில் ஒரு நீதிமன்றத்தின் மையத்தில். அதுவும் வழக்கு நடந்து கொண்டிருந்த போது. Joseph Zieler குனிந்து தனது சட்டத்தரணியின் காதில் ஏதோ சொல்வதற்கு எத்தனித்தார். யாருமே எதிர்பார்க்கவில்லை அதுவும் நீதிமன்றில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் என்று. கைகளில் விலங்கிடப்பட்டிருந்த நிலையிலும் Joseph Zieler தனது முழங்கையினால் சட்டத்தரணி Kevin Shirleyஇன் முகத்தின் நடுவில் தாக்கினார். சுற்றி நின்ற பாதுகாவலர்கள் Joseph Zielerஐ உடனடியாக மடக்கிப் பிடித்துக் கொண்டார்கள். சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பின்னர் மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் கொடூரமான குற்றம் பரிந்தார் என 61 வயதான Joseph Zielerக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். 199…
-
- 0 replies
- 870 views
-
-
Portuguese Kaffringha Dance with Baila Music - போர்த்துகீசியர்கள் இலங்கையை விட்டுச்சென்று 365 ஆண்டுகளாகிவிட்ட போதிலும், இங்கு வசித்து வரும் அவர்களின் சந்ததியினர், தங்களின் பாரம்பரிய கஃப்றிஞ்ஞா நடனத்தை இன்றுவரை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். இந்த சமூகத்தின் சிறுவர்கள் கூட கஃப்றிஞ்ஞா நடனத்தை தெரிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், அதற்கான இசைக்கலைஞர்கள் வெகு சிலரே இருக்கின்றனர்.
-
- 6 replies
- 1.2k views
- 1 follower
-
-
“ பாலுமகேந்திரா “ View finder ( வியூ ஃபைண்டர்) க்கால பாத்துக்கொண்டு சரியான அளவுக்கு ஃபிரேமை fix பண்ணீட்டு , கமராவின்டை முன்பக்கம் இருக்கிற பெரிய வட்டத்தை adjust பண்ணி புள்ளிகள் ஒண்டாகி முகம் கூர்மையாகி வந்திச்சுது. முன்னால இருக்கிற fine focus ஐ உருட்டி சப்பை மூக்கின்டை நுனி தெளிவாத் தெரிஞ்சுது. Konica film roll ISO 200 load பண்ணின Yashica கமராவின்டை அப்ஃபேச்சரை குறைச்சு focal depth ஐ மாத்த பின்னால மரம் மறைஞ்சு முகம் மட்டும் தெரிய எடுத்த portrait ஐ பிரேம் போட்டுக் கொண்டந்து முன் கண்ணாடியைத் துறந்து மாட்டி வைச்சான் தானும் ஒரு பாலுமகேந்திரா எண்ட நினைப்பில, இதைப்பாத்திட்டு படம் எடுக்க ஆக்கள் கூட வருவினம் எண்டு நம்பிக்கையில். எண்பதுகளில போட்டோக்கடைக்கு போட்டி இல்லா…
-
- 1 reply
- 795 views
-
-
O/L பரீட்சை முடிவின் பின்... 👆 வடக்கு கிழக்கு மாணவர்கள்... கதிரை. மேசைகளை உடைத்து பாடசாலைக்கு சேதம் விளைவிப்பது ஏன்? 👆O/L பரீட்சை முடிவின் பின் பாடசாலைக்கு நன்றி தெரிவித்து வணங்கியும், பரீட்சை நிலையத்தை மலசல கூடத்தை சுத்தம் செய்தும் விடைபெற்றுச் செல்லும் மலையக பாடசாலைகளின் மாணவர்கள்... ஆடைகளுக்கு மை அடித்து, கதிரை மேசைகளை அடித்துடைத்து, காதலன் காதலி பெயரை ஆடையில் எழுதி, அநாகரீகமாக வெளியேறிச் செல்லும் வடக்கு கிழக்கு மாணவர்கள்... முறையான கல்வியும் ஒழுக்கசார் விழுமியங்களும் எங்கு பின்பற்றப்படுகிறதோ அங்குதான் அடுத்த கட்ட வளர்சியும் இடம்பெறும்... பெறுபேறுகளில் வடக்கு கிழக்கு ஏன் தொடர்ந்தும் பின்னோக்கி செல்கிறது என்பதற்கு இதுவும்…
-
- 10 replies
- 685 views
- 1 follower
-
-
அன்பால் வீழ்ந்த, விலங்கினம்... நாய்! ஏன் “தெரு நாய்கள்” மட்டும் எங்கும் உள்ளது..? இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும். ஆடு மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள... புற்கள், இலை, தளைகளை வழங்கி விடுகிறது. ஆனால் இந்த நாய்கள் மட்டும் ஏன் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது.? உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும் போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது?? வீட்டிற்குள் இருந்து யாராவதும் வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறு பங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..? சா…
-
- 2 replies
- 968 views
-
-
52 வருடங்களுக்கு முன்னர், 1971ம் ஆண்டில் பேரு நாட்டு அடர்ந்த காட்டின் மத்தியில் நடந்த விமான விபத்தில் 17 வயதாக இருந்த ஜூலியானே டில்லர் (Juliane Diller) என்பவர் உயிர் தப்பினார். ஜூலியானே அப்பொழுது லீமாவில் தனது பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளது தந்தை அங்குள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் ஒரு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தனது கல்லூரிப் படிப்பை டிசம்பர் 23இல் முடித்த ஜூலியானே அந்த வருடத்து கிறிஸ்மஸ் தினத்தையும் பிறக்கும் புத்தாண்டையும் தந்தையுடன் கொண்டாடுவது என்று தீர்மானித்துக் கொண்டாள். அவளது தந்தை இருந்த இடம் புகால்பா நகரத்தை ஒட்டிய காட்டுப் பகுதியில் இருந்தது. பாடசாலை முடிந்த அடுத்த நாளே புகால்பா நகரத்தை நோக்கிப் …
-
- 1 reply
- 380 views
- 1 follower
-
-
இலக்கை நோக்கி பெலரூஸ் December 2022 மைக்கின்டை சுருட்டை பாதி வாங்கிப் பத்தின அன்ரனோவ் கண்ணை telescope இல இருந்து எடுக்காம சுத்திப் பாத்துக்கொண்டிருந்தான். அதை வாயில் வைக்க முதல் காட்டுப்பக்கம் வந்த சலசலப்பு என்ன எண்டு பாக்க பெரிய focus light ஐத் திருப்ப , “உது கரடி தான்” எண்டு மைக் சொல்ல , “இல்லை இந்த நேரம் கரடி திரியாது , அதோட இது மரத்தின்டையோ , கிளையின்டயோ சலசலப்பு இல்லை நிலத்தோட வாறது” எண்டு சொல்லித் திருப்பியிம் பாத்திட்டு ஒண்டையும் காணேல்லை எண்டு போட்டு கடைசியா ரெண்டு தரம் நல்லா உள்ள இழுத்து நெஞ்சு முட்ட நிறைச்சு வைச்சு மூச்சைக் கொஞ்சம் கொஞ்சமா வெளீல மூக்கால விட்டிட்டு, கடைசிக் காத்தோட காறி எச்சிலைத் துப்பீட்டு ஒரு chewing gum ஐ வாயில போட்டான். Al ja…
-
- 2 replies
- 727 views
- 1 follower
-
-
வன்னியில் வெளிச்சத்திற்கு வராத மிகப்பிரமாண்டமான சுற்றுலாத்தலம் - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் இலங்கையைப் பொறுத்தமட்டில், தமிழர்களின் தொன்மையான வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்களின் இருப்பியல் தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. அந்தவகையில் ‘இலங்கையின் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள்’ என்ற இத்தொடர் சமகாலத்தில் இலங்கையில் குறிப்பாக வடக்கு – கிழக்குப் பகுதிகளில் இடம்பெற்றுவரும் தொடர் அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், பெருங்கற்காலப் பண்பாட்டுக் காலத்தில் இலங்கைத் தமிழ் மக்களிடம் நி…
-
- 5 replies
- 609 views
-
-
தாயில்லாமல் நானில்லை 1969இல் வெளிவந்த திரைப்படம் அடிமைப்பெண். அந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் “தாயில்லாமல் நானில்லை தானா எவரும் பிறந்ததில்லை”. சமீபத்தில் நான் வாசித்த யேர்மனியச் செய்தி ஒன்று இந்தப் பாடலை எனக்கு நினைவூட்டியது. “..மேக வீதியில் நடப்பாள் உயிர் மூச்சினிலே கலந்திருப்பாள் மலைமுடி தொடுவாள், மலர்மணம் தருவாள் மங்கள வாழ்வுக்குத் துணையிருப்பாள் தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை எனக்கொருதாய் இருக்கின்றாள் என்றும் என்னைக் காக்கின்றாள்..” இத்தாலியில் வெரோனா நாட்டில் இறந்து போன தனது தாயின் உடலோடு ஆறு வருடங்களுக்கு மேலாக ஒரே வீட்டில் அவரது மகன் வசித்து வந்திருக்கிறார். அதுவும் தனது தாயின் உடல் இருந்த கட…
-
- 1 reply
- 518 views
-
-
Babugi Muthulingam யாழ்.மாநகர சபையில் பணியாற்றிய கடைசி சிங்களவர் சிறிமான்ன. யாழ் நூலக எரிப்பின் ஒரு சாட்சியமாக விளங்குகிறார். இதுவரை வெளியாகாத சில தகவல்களையும் அவர் நமக்கு ஒப்புவிக்கிறார். 1981 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தலின் போது யாழ்ப்பாணத்தில் ஒரு அரச ஊழியராக இருந்த டீ.டபிள்யு சிறிமான்ன தேர்தல் நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட ஊழியர் சிறிமான்ன. “1981 ஆம் ஆண்டு ஜூன்.நான்காம் திகதி நடந்த அந்த தேர்தலில் பணியாற்ற வேண்டியிருந்தது. குருநாகல் மாவட்ட ஆணையாளரின் பரிந்துரையின்படி தேர்தல் பணிகளில் நான் ஈடுபடுத்துவதற்க…
-
- 2 replies
- 786 views
-