சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
1006 topics in this forum
-
வாங்க இண்டைக்கு கடந்த காணொளியில் தொடர்ச்சியா கோப்பாயில இருக்க எங்கட தோட்டத்தை சுத்தி பாப்பம் பகுதி 2 இந்த காணொளியில் நாங்க காட்டுற கொஞ்ச மரங்கள் அம்பிரலங்காய் பப்பாளி கருணைக்கிழங்கு பட்டர் ஃபுரூட் / அவகோடா சின்ன நெல்லி - Small Gooseberry முசூட்டை கறுவா பலா ஊர் அன்னமுன்னா திப்பிலி தூதுவளை வேப்பமரம் ஆடாதோடை இரசவள்ளி Purple Jam பயிற்றை முடக்கொத்தான் கொடித்தோடை Passion fruit) லாவுடு ஸ்டார் பழம் விலும்பிலி மாதுளை வெற்றிலை betel சப்போட்டா பூசணி கறிவேப்பிலை முருங்கை drumstick பெருங்குறிஞ்சா கரிசலாங்கண்ணி …
-
- 0 replies
- 564 views
-
-
ஃபேஸ்புக் குழந்தைகளை பாதிக்கிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது - முன்னாள் ஊழியர் 34 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஃப்ரான்செஸ் ஹாகென், முன்னாள் ஃபேஸ்புக் ஊழியர் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வலைதளம் மற்றும் செயலிகள், குழந்தைகளை பாதிக்கிறது, பிரிவினையை உண்டாக்குகிறது, ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் ஒருவர் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். 37 வயதான ஃப்ரான்செஸ் ஹாகென், முன்பு ஃபேஸ்புக் நிறுவனத்தில் ப்ராடெக்ட் மேனேஜராக பணியாற்றியவர். கேப்பிட்டல் ஹில் கட்டடத்தில் நாடாளுமன்ற குழு விச…
-
- 0 replies
- 315 views
- 1 follower
-
-
திருமலையின் புதிய ஆயர் நியூசிலாந்து வருகை! "இன்று கண்ணியா போய்விட்டது. விரைவில் திருக்கோணேஸ்வரமும் போய்விடும். அதுவரை ஏதோ வருகிறது; வந்துவிட்டது என்று மக்களிடம் சொல்லிக் கொண்டிராதீர்கள்." என, பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கலந்து கொண்ட புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசியவர் திருமலையின் புதிய ஆயர் நொயல் இம்மானுவேல் அடிகள். புத்தக வெளியீட்டில், ஆயராக வந்தவர், வெறும் ஆசியுரை தான் வழங்குவார் என எதிர்பார்த்தவர்கள், கத்தோலிக்க ஆயர் தேவாரம் பாடப்பெற்ற இந்து ஆலயம் பற்றி ஆதங்கத்துடன் அங்கு பேசுவார் என்றும் எதிர்பார்க்கவில்லை. இது சர்ச்சைக்குரிய உரையாக அமைந்ததாக எனது ஊடக நண்பரும் பி பி சி மட்டுநகர் நிருபருமான உதயகுமார் எனக்…
-
- 0 replies
- 458 views
-
-
'Love you all!' ஓர் வார இறுதி விடுமுறைக்கு பின் திங்கட்கிழமை காலை வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை மதி. அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது. அது ... வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப் பார்த்து 'Love you all!' என்று சொல்வது.தான் சொல்வது பொய்யென்று அவருக்கே தெரியும். ஆம்! அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்க முடியவில்லை. ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக் காட்டுவதற்கு எந்தவொரு சிறப்புத் தன்மையும் இல்லாத 'டெடி' என்கிற தியோடர்!அவனிடம் மட்டும் ஆசிரியர் மதி நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமானது! எந்தவொரு தவறான விடயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.எந்த நல்ல விடயத்…
-
- 0 replies
- 905 views
-
-
மா(ன்)மியம் யாழ்ப்பாணத்திற்கும் மாம்பபழத்திற்கும் அப்படி ஒரு உறவு. மாம்பழத்துக்கு ரெண்டு season. ஒண்டு சித்திரையில் பூத்து கச்சான்காத்தில் கருத்தரித்து ஆடியில் பழம் வரும். இது நல்ல இனிப்பான பழங்கள். மற்றது மாரிப் பழம் புரட்டாதீல பூத்து மார்கழீல பழம் வரும் . இது பாக்க பாசி பிடிச்ச சுவர் மாரி இருக்கும், பச்சைத் தோலில கறுப்பு நிறப் படைஒண்டு ,அப்ப பாவிச்ச பிசின் போத்தலில வெளீல வழிஞ்சு காஞ்சு போன பிசின் ஒட்டின மாதிரி இருக்கும் . பெரிய இனிப்பாயும் இருக்காது. வைகாசியில மரமெல்லாம் பூவா இருக்கும் .கொட்டிண்ட பூ போக, காய் வந்ததும் ஆடிக்காத்தில் தப்பின காய் மட்டும் பழுக்கும். இந்த season பழம் தான் யாழ்பாண ஸ்பெஷல். ஆடிக்காத்தைப்பற்றி எல்லாருக்கும் தெரியும், நம்மடை பெட்ட…
-
- 1 reply
- 850 views
-
-
புலி எதிர்ப்பு, புலி ஆதரவு அரசியலை மட்டும் கையில் எடுப்பதனால் மக்களை விடுதலை செய்ய முடியாது! கடந்த வருடம் இதே நாளில் வெளியான இந்தப் பதிவை சில திருத்த்களுடன் மீளப் பதிவேற்றுகிறேன்! #ஞாபகங்கள் - இன்று செப்டம்பர் 21ஆம் திகதி வைத்திய கலாநிதி ராஜினி திரணகம சுட்டுக் கொல்லப்பட்ட நாள். 1989, September 21 ஆம் திகதி ராஜினி அவர்கள் கொல்லப்பட்டார். அவரது மரணம் 32 வருடங்களைக் கடந்து செல்கிறது. இந்திய அமைதிப்படையின் பிரசன்னம், இந்திய அமைதிப்படையுடன் சேர்ந்தியங்கிய அயுதக் குழுக்களின் அடாவடித்தனங்கள், கொலைகள், ஆயுதம் தாங்கிய புலிகளின் மறைமுக தாக்குதல்கள், கொலைகள் என பயங்கரமானதொரு சூழல் ந…
-
- 0 replies
- 588 views
-
-
தீவான் தொடர்பில் கல்வி அமைச்சின் செயற்திட்ட பணிப்பாளர் கந்தையா பத்மானந்தன் https://m.facebook.com/story.php?story_fbid=108910681546888&id=108075654963724&sfnsn=scwspwa
-
- 2 replies
- 711 views
-
-
பழம் ஓலையொன்று உதிர்கையில் கொரோனா நம்மிடமிருந்து முதியவர்களைப் பறித்துக்கொண்டிருக்கிறது. தமிழ் சமூகம், உலக சமூகங்கள் போலல்லாதது. முதியவர்களைப் பாவித்துவிட்டுத்தூக்கியெறி என்று நடத்தாமல், இயலுமானவரைக்கும் நம் குடும்பங்களை வழிநடத்துபவர்களாக, ஆலோசனைத் தருபவர்களாக, தம் அனுபவங்களை சந்ததிகளுக்குக் கற்பிப்பவர்களாக, கதைசொல்லிகளாகப் பயன்படுத்தி வந்திருக்கிறது. எனவே முதுமையைப் போற்றுதல் தமிழ் சமூகத்தின் மிக உன்னதமான அறமாகும். சிற்சில விதிவிலக்குகளும் உண்டு. அத்தகைய உளவியலை குடும்ப நடத்ததைசார் ஒழுக்கம் தீர்மானிக்கிறது. ஆக, தமிழ் சமூகம் தன்னிடமிருக்கும் முதியவர்களை இழத்தலானது, வாழ்வைத் தாங்கிப் பிடித்திருக்கும் பல வேர்களை அறுத்துவிடும். ஏற்கனவே சீர…
-
- 1 reply
- 691 views
-
-
“மணியண்ணை ரைட்“ திரும்பி பளிச் எண்டு சாயத்தோட சப்பின வெத்திலையை பூவரசு மரத்தடீல துப்பிப்போட்டு ,காலாலை மண்ணை தள்ளி மூடீட்டு , மூடி வெட்டின ரின் பால் பேணியால தண்ணியை அள்ளி வாயை கொப்பிளிச்சிட்டு, அந்த பழைய யானை மார்க் சோடாப் போத்தலில இருக்கிற பிளேன் ரீயை சூடோட விழுங்கிப்போட்டு, மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம் போல, பாதி உடைஞ்ச அரி கல்லுக்கு மேல ஆச்சி திருப்பி வந்து இருந்தா. முன்னால கவிட்டு வைச்ச பக்கீஸ் பெட்டிக்கு மேல விரிச்சு வைச்ச வீரகேசரி , சில வேளை அதுக்கும் மேல பழைய பொலித்தீன் இருக்கும். வரேக்க மறக்காம புடுங்கிக் கொண்டு வந்த பூவரசம் கொப்பால இலையானை கலைச்சு கொண்டு தண்ணியை தெளிச்சிட்டு கும்பலா இருந்த ஒட்டியை பக்க வாட்டில அடுக்கி , வாங்கின கணக்கு , அள்ளு…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
“ தடை தாண்டிய பயணங்கள் “ ஆடி அமாவாசை விரதம் எண்டா அப்பா எப்படியும் வீட்ட வந்திடுவார் . எங்களுக்கு தெரிஞ்சு அப்போதிக்கரி அப்பா வெளி மாவட்டங்களில மட்டும் தான் வேலை செஞ்சவர் . கலியாணம் கட்டினாப்பிறகு தான் எனக்கும் ஏன் அப்பாக்கள் வெளி மாவட்டங்களில வேலை செய்ய விருப்பப்பட்டவை எண்டு விளங்கினது . ஆனால் அப்பா நான் நெச்ச மாதிரி இல்லை , கஸ்டபிரதேசத்தில வேலை செய்தா allowance வரும் எண்டதால தான் அப்பிடி வேலை செயதிருக்கிறார். லீவில வாற அப்பா யாழ்ப்பாணம் வந்து சேரேக்க அநேமா இருட்டத் தொடங்கீடும். கடிதத்தில முதலே date தெரியும் எண்ட படியா கிட்டத்ததட்ட நேரம் பார்த்து சிவலிங்கப்புளியடி bus stand ல நிண்டு ஒவ்வொரு பஸ்ஸா பாத்து பாத்து ( காத்திருக்கும் சுகம் காதலிகளுக்காக மட்டும் அல்ல) …
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
Last line Visu Viswa 2009-ம் ஆண்டு #ரோமில்_போப்பாண்டவர்... "#கட…
-
- 1 reply
- 849 views
-
-
1985: இலங்கையில் இந்தியா Sep 11….அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இலங்கை கிரிக்கெட்டைப் பொறுத்தவரையிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். Sep 11, 1985ல் தான் இலங்கை கிரிக்கெட் அணி தனது முதலாவது டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. அந்த நேரத்தில் தமிழ் போராளிகளிற்கு ஆதரவும் அடைக்கலமும் பயிற்சியும் சுடுகலன்களும் கொடுத்து வந்த இந்தியாவிற்கு எதிராக ஈட்டப்பட்ட வெற்றி, கொழும்பு சரவணமுத்து விளையாட்டரங்கின் எல்லைக் கோட்டைத் தாண்டியும் எதிரொலித்தது. 2009 போர் வெற்றிக் கொண்டாட்டங்களிற்கு எல்லாம் முத்தாய்ப்பு வைத்த கொண்டாட்டமாக தென்னிலங்கையில் இந்தியாவிற்கு எதிரான இந்த கன்னி டெஸ்ட் வெற்றி கொண்டாடப்பட்டது. டெஸ்ட் ஆட்டம் முடிந்த அடுத்த நாளான வியாழக்கிழமையான Se…
-
- 1 reply
- 765 views
-
-
பின்னேரம் புகைக்கூட்டடியில ஆணியில தொங்கிக்கொண்டிருந்த சுளகை எடுத்து அதில ஒட்டியிருந்த காய்ஞ்சு போன பழைய மாவை தட்டி சுரண்டிப்போட்டு , சாடையா நுனி கருகின நீத்துப் பெட்டியை கழுவி அம்மம்மா எடுத்து வைக்கேக்க அண்டைக்கு புட்டுத்தான் எண்டு தெரியும் . மூடி போட்ட பிளாஸ்டிக் பக்கட்டில இருந்து மூண்டு சுண்டு மா. பிளாஸ்டிக்கிற்கு முன்னைய காலம் சருவச்சட்டிலையும் அதுக்கு முந்தி மண் பானையிலும் தான் அரிசி மாவை போட்டு வைக்கிறது . ஒரு சுண்டு எண்டுறது பழைய ரின்பால் பேணி , சிலர் அளக்கிற பேணி எண்டும் சொல்லுறவை. சோறு எண்டால் அப்ப ஒரு சுண்டு மூண்டு பேருக்கு தான் காணும், புட்டுக்கு எண்டா இரண்டு பேருக்கு தான் சரி. ஆனால் இப்ப dieting எண்டு வந்தா பிறகு doctors advise பண்ணினம் c…
-
- 15 replies
- 1.8k views
-
-
கேட்க நல்லா தான் இருக்கு.. பிடிச்சா கமண்ட் பண்ணுங்க ரொம்ப பிடிச்சா அதிகம் பகிருங்கள்... #newlalithaa #kilinochchi
-
- 0 replies
- 466 views
-
-
மலேசியாவில் தமிழர் அல்லாத ஒரு கல்வியாளர் தமிழில் சொல்லும் அறிவுரையை கேட்டுப்பாருங்கள்! https://www.facebook.com/bupal5/videos/3298675620176207
-
- 2 replies
- 713 views
-
-
நான் இத எழுத்தல, facebookல முந்தி பாத்தன், நல்லா இருந்த அது தான் இங்க உங்க எல்லாரோடையும் பகிர்ந்து கொள்ளுறன் அப்பத்தட்டி என்பது ஓடக்கரை வீதியில் ஒவ்வொரு வீட்டு மதிலிலும் நிலமட்டத்துடன் ஒரு சிறிய ஓட்டை செய்திருப்பார்கள். இரண்டு பக்கத்தில் இருப்பவர்களுக்கும் முகம் தெரியாது. வாங்குவதும் விற்பதும் ஓட்டை வழியால் தான். காலையிலும் மாலையிலும் வியாபாரம் சூடுபறக்கும். சில வீடுகளில் பேப்பரும் காலையில் விற்பார்கள். பல வீடுகளில் இப்பொழுது அப்பத்தட்டிகளை காணவில்லை. ஆனால் அவை இருந்ததிற்கான அடையாளங்கள் இருக்கின்றன. பருத்தித்தறையின் கலாச்சாரத்தில் இந்த “அப்பத்தட்டி” ஊறிப்போன விடயம். அப்பம் தோசை சுட்டு விற்பதை இவர்கள் இழிவாக நினைப்பதில்லை. மாறாக, தங்களது பாரம…
-
- 0 replies
- 634 views
-
-
மனிதர்கள் செய்த மிகப்பெரிய தவறுகள் மனிதர்கள் செய்த மிகப்பெரிய சொதப்பல்கள் https://www.facebook.com/FreeFireTamilGT/videos/264361572200999
-
- 0 replies
- 602 views
-
-
இது ஒரு சுளகு மான்மியம் வரலாற்று காலத்தில் நெற் களத்தில் நெல்லை தூற்றிக்கொண்டிருந்த தமிழ் பெண் ஒருத்தியை தாக்க புலிவந்த போது, அதை தனது கையில் வைத்திருந்த முறத்தால் அடித்து விரட்டியவள் வீரத் தமிழ்பெண் என வரலாற்று கதையில் கேள்விப்பட்டு இருக்கிறோம். ..நல்லூர் திரு விழா shopping list இல வருசா வருசம் தவறாம வாங்கிற சாமாங்களில அமமாக்குழலோட ,பனம் பொருள் கூட்டுத்தாபனம் வைக்கிற exhibition and sale ல சுளகும் கட்டாயம் இருக்கும் . சுளகில பிடைக்கறதும் ஒரு கலைதான் . உயரத்தில கதிரையில இருந்து கொண்டு பிடைக்க ஏலாது . சப்பாணி கட்டிக்கொண்டு இருந்தால் சுளகின்டை நுனியை reach பண்ண கஷ்டம் . ஒரு காலை மடக்கி மற்ற காலை நீட்டி இருந்தா தான் பிடைக்கறது easy. நீட்டின காலுக்கு பக்கத்தில பிடைக்…
-
- 18 replies
- 2k views
-
-
பனம்பழஞ் சூப்பி யாழ்ப்பாணத்திலிருந்து தம்பி செந்தூரன் தபாலில் அனுப்பிய பொதி நேற்று பத்திரமாக மெல்பேர்ண் வந்தடைந்தது. மறந்தும் மறவாத மண்ணின் வாசனையை தாங்கிவந்த அந்தப் பொதிக்குள், பருத்தித்துறை வடை, வல்வெட்டித்துறை வடகம், பருத்தித்துறை பப்படம், வல்வெட்டித்துறை எள்ளுப்பா, கன்னாதிட்டி மோர் மிளகாய், பனங் குட்டான் இவற்றோடு கற்பகம் நிறுவனம் தயாரிக்கும் பனம் சொக்கலேட்டும் (Palm Chocolate) இருந்தது. அடுத்த முறை பினாட்டும் புளுக்கொடியலும் அனுப்பச் சொல்லோணும். கிட்டத்தட்ட அந்தக் கால புளூட்டோ டொபியை ஞாபகப்படுத்திய பனம் சொக்கலேட்டை வாயில் போட்டு கடிக்கும் போது, ஏனோ சிறுவயதில் சூப்பிய சுட்ட பனம்பழத்தின் ஞாபகம் வந்து தொலைத்தது. …
-
- 66 replies
- 5.6k views
- 2 followers
-
-
"அறிவும்" அறியாமையும் ! ==================== வரலாற்றுக் காலம் முதல் உளவியல் போரில் பல்வேறு உரிமைகளை இழந்து போனவர்களாக வாழ்ந்ததும் வாழப் பழகியதுமாக இருந்தவர்கள் தமிழர்கள். இதன் தொடர்ச்சியாக ஒரு தொன்மைச் சமூகம் இன்று இழிநிலையின் விளிம்பில் நின்று அல்லாடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பல இரட்டை மலைச் சீனிவாசன்கள் , பெரியார்கள் வந்தாலும் எதைச் சாதிக்க முடியும் என்பது இற்றைவரையான யதார்த்தமான கேள்வி. பெரியார் போன்ற பல சக்திகள் பயணப்பட்ட பாதை என்பது இன்னும் கண்ணுக்கு எட்டிய தூரத்தை கூட கடக்கவில்லை என்றளவிற்கு சமூக ஏற்றத் தாழ்வுகள் , அடிமைத்தனங்கள், தீண்டாமைகள் என்பன தமிழர் தேசத்தில் இன்றும் பரவி அழுத்தமாக காணப்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் சமூக அரசியல்…
-
- 0 replies
- 949 views
-
-
சமூக ஆர்வலர் பரதன் நவரத்தினம் (கனடா) கதைப்பமா.... நம்ம யாழ் கள அர்ஜுன் அண்ணா அவர் கடந்து வந்த தனது போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்த நேர்காணல் எண்பதுகளின் இயக்க வரலாற்றில் ஒரு துளி. யாழ் கள தோழர்கள் பார்க்கவேண்டும்😑
-
- 52 replies
- 5.1k views
-
-
வாங்க இண்டைக்கு, நாம பழங்களின் அரசன், இல்ல மிக மோசமான வாசம் உள்ள பழம் எண்டு பல்வேறு விதமா சொல்லுற தூரியன் பழம் வாங்கி சாப்பிட்டு பாக்க போறம், வாங்க எப்பிடி இருந்த எண்டு பாப்பம், நீங்க முதல் இந்த பழம் சாப்பிட்டு இருந்தா உங்க அனுபவம் எப்பிடி இருந்த எண்டும் சொல்லுங்க.
-
- 3 replies
- 878 views
-
-
தலிபான்கள் தொடர்புடைய... வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கம் தலிபான்கள் தொடர்புடைய வட்ஸ் அப் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. தலிபான்கள் நிர்வாக தொடர்புக்காக வட்ஸ் அப்பை பயன்படுத்தியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே நடந்து வந்த போர் முடிவுக்கு வந்து தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து, தலிபான்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கணக்குகளை முடக்குவதாக நேற்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது. அமெரிக்க சட்டப்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தலிபா…
-
- 0 replies
- 376 views
-
-
இன்று பிலவ வருடத்தில் வந்த ஆடிமாதத்தின் முடிவுநாள் 32. இந்த ஆடியில் வரும் அமாவாசை விரத நாளில் மிக முக்கியத்துவம் பெறுவது காற்று ஊட்டியன் காய், இந்தக் காயை காத்தோட்டிக்காய் என்றும் பேச்சுவழக்கில் கூறுவார்கள். தாவரங்களுக்கும் உயிருண்டு. ஆகவே அந்தத் தாவரங்களைக் கொன்று தின்பதால் ஏற்படும் பாவங்களைப் போக்குவதற்காக, மிகவும் கசப்பான இந்தக் காயை வருடத்தில் ஒரு நாள், அதாவது ஆடிமாதத்தில் வரும் அமாவாசை அன்று பொரித்துச் சாப்பிட்டுத் தங்களை வருத்திக்கொள்வார்கள் சைவர்கள் என்ற ஐதீகமும் உண்டு. பஞ்ச பூதங்களால் உருவான எங்கள் உடம்பு அவற்றின் தாக்கங்களாலும் அல்லல் படுவதுண்டு, ஆகவே அந்தத் தாங்களிலிருந்து விடுபடுவதற்கு, எம் முன்னோர்கள் கண்டுபிடித்து, எமது ஆரோக்கிய வாழ்விற்கு காட்ட…
-
- 3 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணத்தில பிறந்து வளந்தாலும் 25 வருஷம் ஆகியும் வெப்பல் பழம் எண்டு ஒண்டு இருந்ததே எனக்கு தெரியாது, வாங்க இந்த காணொளியில அந்த பழத்தை தேடி முல்லைத்தீவின் அடர்ந்த காட்டுக்குள்ள பயணிப்பம் ( இதுக்கு தான் சின்ன வயசில கூட Man vs Wild பாக்க கூடாது எண்டுறது ). அப்பிடி எல்லாம் இல்லை, ஆனா இந்த பழம் தேடி என்க எல்லாம் போனம். கடைசில இது எப்பிடி இருந்துச்சு எல்லாம் பாப்பம் வாங்க சேர்ந்து பயணிப்பம்.
-
- 6 replies
- 1.6k views
-