Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியமும் இசையும்

இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை

பதிவாளர் கவனத்திற்கு!

இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன் [கோ சாரங்கபாணி] [ஈரோட்டில் 10,11-8-2019ல் நிகழ்ந்த சிறுகதை அரங்கில் பேசப்பட்ட கதைகள் பற்றிய கட்டுரை] தமிழக வரலாற்றில் புலம்பெயர்வு தொல்நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. வணிகத்தின் பொருட்டு தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கு பயணித்ததாக இருக்கலாம். அல்லது தேசாந்திரியாக நிலமெங்கும் அலைந்து திரிந்ததாகவும் இருக்கலாம் அல்லது போருக்காக மண் நீங்கியதாகவும் இருக்கலாம். செல்லும் இடங்களில் தங்கள் பூர்வீக வாழ்வின் எச்சங்களை எப்போதும் விட்டு வந்தார்கள். பண்டிகைகளாக, சிற்பங்களாக, ஏதோ ஒரு சடங்காக பண்பாட்டு நினைவு பேணப்பட்டு வந்தது. மிகப்பெரிய அளவிலான புலம் பெயர்வு என்பது காலனிய காலகட்டத்தில் நிகழ…

  2. எதிர்முகம் நேர்காணல் Posted on August 7, 2019 by ம. நவீன் கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம், இணைய தொலைக்காட்சியான தமிழ் மலேசியா தொலைக்காட்சியில் ‘எதிர்முகம்’ எனும் அங்கத்திற்காக என்னை நேர்காணல் செய்தார்கள். சமூக வலைத்தளங்களிலும் இலக்கிய வட்டங்களிலும் வல்லினம் மற்றும் என்னைக்குறித்த சர்ச்சைகள் தொடர்பான கேள்விகளுடன் K.P ஜோன் இந்த நேர்காணலை சிறப்பாகவே முன்னெடுத்தார். அதன் எழுத்து வடிவம் இது. எடிட்டிங்கில் நீக்கப்பட்ட சில பகுதிகளையும் இணைத்துள்ளேன். சிலவற்றை நீக்கியும் உள்ளேன். சில பதில்களை எழுத்து வடிவத்திற்கு ஏற்ப விரிவாக்கியுள்ளேன். இது கடந்த ஆண்டு எடுக்கப்பட்டதால் அண்மையச் சூழல்கள் குறித்து பேசியிருக்க மாட்டேன். தமிழ் மலேசியா தொலைக்காட்சிக்கு நன்றி …

  3. ``காதலாலும் சாதியாலும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறேன் ..." கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் வாழ்வு சார்ந்த தோல்விகள், மனஅழுத்தங்களை எதிர் கொள்ளும்போதெல்லாம் எழுத்து, கவிதை, இயற்கை, ஆர்வம், காதல் என தப்பிக்க வேறு ஏதாவது ஒரு கதவு திறந்தது. ஒரு துறை சார்ந்து மட்டும் வாழ்பவர்களுக்கு இந்த வாய்ப்புகள் குறைவு என்றே நினைக்கிறேன். வ.ஐ.ச.ஜெயபாலன் ( கிராபியென் ப்ளாக் ) வ.ஐ.ச.ஜெயபாலன்... ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் மற்றும் கவிஞர். அவர் எழுதிய ‘சூரியனோடு பேசுதல்’, `நமக்கென்றொரு புல்வெளி’, `ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்’, `ஒரு அகதியின் பாடல்’, `வ.ஐ.ச. ஜெயபாலன் கவிதைகள்’ உள்ளிட்ட படைப்புகள் மிக முக்கியமானவை. …

    • 1 reply
    • 998 views
  4. குணா கவியழகனை வாசித்தலும், புரிந்துகொள்ளுதலும் வாசன் குணா கவியழகன் இப்போது அதிகம் எழுதுகிறார். அவரது படைப்புக்கள் குறித்த ஆரவாரங்களும் இப்போது கொஞ்சம் அதிகமாகிவிட்டன. இப்போது அவரது 5 வது நாவலினையும் அவர் எழுதி முடித்துவிட்ட நிலையில் அவர் குறித்த சர்ச்சைகளும் அவர் மீதான விமர்சனங்களும் கூட இன்னும் கொஞ்சம் அதிகமாகிவிட்டன. ஒரு படைப்பாளிக்கு செய்யப்படும் அநீதிகளிலேயே மிகப்பெரியது அவனை ஒற்றை வரியில் ஒரு படிமத்திற்குள் அடக்கி அவன் மீதான ஒரு ஆழமான முத்திரையை பதித்து விடுவதுதான். அவன் எத்தனை ஆயிரம் படைப்புகளை வெவ்வேறு தளங்களில் படைத்திருந்தாலும் இத்தகைய ஒற்றை வரிப் படிமத்தில் அவனைக் கூண்டில் அடைக்கும் செயலானது உலகளாவிய ரீதியில் காலாகாலமாக நடக்கின்ற ஒரு செயற்பாடு.…

  5. ஷோபாசக்தியின் சமகாலச் சிறுகதைகளை முன்வைத்து – அனோஜன் பாலகிருஷ்ணன் July 12, 2019 நான் எப்போதுமே நேரடியாக அரசியல் பேசுபவன். சிறுவயதிலிருந்தே அரசியல் இயக்கங்களோடு என்னைப் பிணைத்து வைத்திருந்தவன். இப்போது இயக்கங்கள் சார்ந்து இயங்காத போதும் தோழர்கள் குழாமோடு தொடர்ந்து அரசியலில் தீவிர அக்கறை செலுத்துகிறவன். அது குறித்து சதா சிந்திக்கிறவன், விவாதிக்கிறவன். அதிலிருந்து தான் கலை, இலக்கியம் மீதான எனது பார்வையை நான் உருவாக்கிக் கொள்கிறேன். “என்னுடைய கதைகள் சற்றே பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள்” – ஷோபாசக்தி ஈழ இலக்கியம் என்று ஆரம்பித்தாலே இரண்டு பெயர்களைத் தவிர்க்கவே இயலாது. முதன்மைப் படைப்பாளிகள் வரிசையில் அவர்களுக்கான இடம் எப்போதும் உண்டு. ஒருவர்…

  6. “போரில் தோற்றாலும் நாங்கள் எழுச்சிமிக்கவர்கள்!” வே.கிருஷ்ணவேணி முக்கியமான ஈழத்தமிழ்க்கவிஞர். ஆனால் பெரும்பாலான தமிழகத் தமிழர்களுக்கு அவரை ‘ஆடுகளம்’ பேட்டைக் காரனாகத்தான் தெரியும். வ.ஐ.ச.ஜெயபாலன் மலையாளம், ஆங்கிலம் என்று மொழி எல்லைகளைத் தாண்டி நடித்துக்கொண்டிருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலனிடம் பேசினேன். “தமிழில் ‘ரீங்காரம்’ என்றொரு படமும் மலையாளத்தில் ஒரு படமும் ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன. ஆங்கிலத்தில் ஒரு நோர்வேஜியன் படமும் கைவசம் இருக்கிறது. நான் முழுநேர நடிகன் கிடையாது. பொதுவாகவே நான் படங்களைத் தேடிப் போவதில்லை. நல்ல வாய்ப்புகள் வரும்போது அதை ஏற்க மறுப்பதும் இல்லை. எந்த அரிசியில் என் பெயர் எழுதியிருக்கிறதோ, அந்த அரிசி எனக…

    • 15 replies
    • 1.4k views
  7. கவிஞர், எழுத்தாளர், கலை - இலக்கிய சமூக அரசியல் செயற்பாட்டாளர் செங்கதிரோன் த.கோபாலகிருஷ்ணன் அவர்களுடனான ஓர் இலக்கிய நேர்காணல். ====================== 01) கேள்வி :- இலங்கை மற்றும் இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகம் இணைந்து ஆக்க இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கும் விருது இம்முறை அதாவது "இரா.உதயணன் இலக்கிய விருது - 2018" தங்களது 'விளைச்சல்' எனும் குறுங்காவிய நூலுக்கு வழங்கப்பட்டுள்ளதே. இந்த "விளைச்சல்" குறுங்காவியம் பற்றிச் சுருக்கமாகக் கூற முடியுமா ? பதில் :- "விளைச்சல்" குறுங்காவியம் கவிஞர் நீலாவணன் எழுதிய 'வேளாண்மை'க் காவியத்தின் தொடர்ச்சியாகும். கவிஞர் நீலாவணன் மட்டக்களப்பு மண்ணின் வாழ்க்கையை இலக்கியமாக்க எத்தனித்தார். அதன் விளைவே அன்னா…

    • 0 replies
    • 759 views
  8. தமிழக கவிஞர் சபரிநாதனுக்கு இந்திய சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருது : June 14, 2019 சாகித்ய அகாடமி வழங்கும் யுவபுரஸ்கார் மற்றும் பால யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதை வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான யுவபுரஸ்கார் விருது வால் கவிதைத் தொகுப்புக்காக கவிஞர் சபரிநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனது `வால்’ கவிதைத் தொகுப்பின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் சபரிநாதன். கோவில்பட்டியைச் சேர்ந்தவர். தமிழ் நவீனக் கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். இதேவேளை பால யுவ புரஸ்கார் விருது மறைந்த எழுத்தாளர் அழ.வள்ளியப்பாவின் மகளும், எழுத்தாளருமான தேவி நாச்ச…

  9. ஆயிரத்தொரு சொற்கள் June 14, 2019 ஷோபாசக்தி நான் ஒன்றரை வயதிலேயே நன்றாகப் பேசத் தொடங்கிவிட்டதை, எனது அம்மா சரியாக ஞாபகம் வைத்திருக்கிறார். ஆனால் நான் எத்தனை வயதில் எழுதத் தொடங்கினேன் என்பது அவருக்கோ எனக்கோ சரியாக ஞாபகமில்லை. பள்ளிப் பருவத்திலிருந்தே எழுதிக்கொண்டிருக்கிறேன். பாடசாலையில் நாங்களே நடிக்கும் ஓரங்க நாடகங்களைத்தான் முதலில் எழுதினேன். 1981 இனவன்முறையில், எங்கள் கிராமத்திலிருந்து நான்கு கிலோ மீற்றர்கள் தூரத்திலிருந்த யாழ்ப்பாணப் பொது நூலகம் இலங்கை அமைச்சர்களின் உத்தரவின்பேரில் போலிஸாரால் முற்றாக எரியூட்டப்பட்டபோது எனக்குப் பதின்மூன்று வயது. 90 000 நூல்களும் பழந்தமிழ் ஓலைச் சுவடிகளும் வானம் நோக்கி எரியும் சுவாலையை, அந்த இரவில் எங்கள் கிராமத்தின் கட…

  10. வாசிப்பின் வலிமை: -வேர்ஜீனியா மாநில நீதிமன்றத்தில் ஒரு வித்தியாசமான தீர்ப்பு June 12, 2019 என். செல்வராஜா – நூலகவியலாளர், இலண்டன் அமெரிக்காவின் வடக்கு வெர்ஜீனியா (Northern Verginia) மாநிலத்தில் ஒரு அமைதியான கிராமம் ஆஷ்பேர்ண். இங்குள்ள கறுப்பினத்தவர்களுக்கான சிறிய பள்ளியொன்றின் சுவர்களில் செப்டெம்பர் 2016இல், சில விஷமிகளால் இனவாத சுலோகங்கள் இரவோடிரவாக எழுதப்பட்டிருந்தன. இச்செயலானது அங்கு தலைதூக்கியிருந்த கறுப்பினத்தவருக்கு எதிரான KKK இனவாத இயக்கத்தின் கைவரிசையெனவே ஆரம்பத்தில் அம்மக்கள் நம்பினர். ஆனால் அந்தக் கிறுக்கல்களுக்கிடையே டைனோசர்களினதும் வேறு சில்லறைத்தனமான அடையாளங்களையும் கூர்ந்து அவதானித்த பாதுகாப்புத்துறையினர், இலகுவில் உண்மைக் குற்றவாளி…

  11. கனடா இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுகள் அறிவிப்பு! June 10, 2019 கனடா இலக்கியத் தோட்டத்தின் 2018 இயல் விருது பெற்றவர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த புனைகதைக்கான இயல் விருது நடுகல் நாவலுக்காக ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வனுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2018 இயல் விருது வழங்கும் நிகழ்வு நேற்று கனடாவில் இடம்பெற்றது. இந்த ஆண்டுக்கான இயல் விருது தமிழக எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. அத்துடன் நேற்றைய இயல் விருது விழாவில் 2018 ஆம் ஆண்டு விருது பெரும் படைப்பாளிகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் சிறந்த புனைகதைக்க…

  12. சிங்கப்பூர் - மலேசியா பயணம் தமிழ் முரசு நாளிதழ் மற்றும் சிங்கப்பூர் கலை மன்றம் இணைந்து நடத்தும் ஒருநாள் அறிவியல் புனைவு - வரலாற்று புனைவு பயிலரங்கிற்காக என்னை அழைத்திருந்தார்கள். சிங்கப்பூரோ தஞ்சாவூரோ எங்கு சென்றாலும் உரிய தயாரிப்புடன் செல்ல வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அறிவியல் புனைவு, வரலாற்று புனைவு தொடர்பாக இரண்டு மாதங்கள் தொடர்ந்து வாசித்து என்னை தயார் செய்து கொண்டேன். வழக்கமாக செல்லும் ஊட்டி கூட்டத்திற்கு கூட இந்தமுறை செல்லவில்லை. வெளிநாட்டிற்கு தனியாக பயணிப்பது இதுவே முதல்முறை எனும் பதட்டம் வேறு லேசாக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டது. மே எட்டாம் தேதி நள்ளிரவு திருச்சியில் இருந்து புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை சிங்கப்பூர் செ…

    • 0 replies
    • 1.6k views
  13. நிகரற்ற படைப்பாளிகளில் ஒருவர் – ம.நவீன் மலேசிய எழுத்தாளரும் வல்லினம் இதழ் நிறுவனருமான ம.நவீனுக்குக் கனடா, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2018க்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தில் கடந்த 14 ஆண்டுகளாக காத்திரமான செயல்பாடுகளால் தொடர்ந்து பங்காற்றி வரும் நவீனுக்கு ஜூன் 9 இல் கனடா டொரோன்டோவில் அமைந்துள்ள Grand Cinnamon Convention Centre -இல் இந்தச் சிறப்பு விருது (1000 கனடியன் டாலர்) அளிக்கப்படவுள்ளதாக இலக்கியத் தோட்டத்தின் அறிவிப்பு தெரிவித்தது. தமிழ் உலகின் மதிப்புமிக்க இயல் விருதை வழங்கி வரும் கனடா தமிழ் இலக்கியத்தோட்டத்தின் இந்தச் சிறப்பு விருது இலக்கியத் துறையில் குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.…

  14. ஒரு சின்ன கேள்வி.. நீங்கள் பொன்னியின் செல்வன் வாசித்துவிட்டீர்களா? இது பழுவேட்டரையர் எனும் பெயரில் உள்ள ஐடியினால் Twitter ல பல நாட்களிற்கு முன் கேட்கப்பட்ட கேள்வி கேள்வியை இப்பிடி கேட்கனும் "பொன்னியின் செல்வன் எத்தனை முறை வாசித்திருக்கிறீர்கள்"? என comment உடன் Re Tweet பண்ணி இருந்தேன் பிந்தைய நாட்களில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக்க இருப்பதாகவும் ஐஸ்வர்யா தனுஷ் பொன்னியின் செல்வன வெப்சீரிஸ் ஆக எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. பொன்னியின் செல்வன் எடுப்பதில் உள்ள சிக்கலே பொன்னியின் செல்வனின் வாசகர்களின் கற்பனையில் இருக்கும் கதாபாத்திரங்களிற்கு வடிவம் கொடுப்பதற்கான நடிகர்கள் எவரும் இங்கு இல்லை என்பதே.. ஆழ்வார்க்கடியான் பாத்திரத்த…

  15. லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம் அன்புள்ள ஜெ, இங்கிலாந்தில் வசிக்கும் , தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் உள்ள நண்பர்கள் இணைந்து ‘லண்டன் தமிழ் இலக்கிய குழுமம் ‘ என்ற அமைப்பை ஜுன் ஒன்றாம் தேதி தொடங்குகிறோம். இந்த அமைப்பின் நோக்கம் வாசிப்பில் ஆர்வமிருக்கும் நண்பர்கள் ஆர்வம் உள்ள மற்ற நண்பர்களுடன் கலந்துரையாட வாய்ப்புகளை ஏற்படுத்துவதும், சில புத்தகங்களை தேர்ந்தெடுத்து அவற்றை பற்றிய உரையாடல்கள் மற்றும் விமர்சன கூட்டங்களை ஒருங்கிணைப்பதுமாகும். தொடக்க விழாவன்று விமர்சனம் மற்றும் கலந்துரையாடலுக்கு லண்டனில் வசிக்கும் மூன்று எழுத்தாளர்களின் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவை: சிறுகதை தொகுப்பு அனோஜன் பாலகிருஷ்ணன் – பச்சை நரம்பு சிவா…

  16. நிகழாத விவாதமும், நிகழும் சர்ச்சையும் - ராஜன் குறை நவீனத்துவ இலக்கியவாதிகளும் திராவிட இயக்கமும் – ஒரு விவாதம் முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் திராவிட இயக்கத் தலைவர் அண்ணா குறித்து தான் உட்பட பல எழுத்தாளர்கள் பேசாமல் போனது குறித்து சில கருத்துகளை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் கூறியதை ஒட்டி ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. சிறுபத்திரிகை தளம் எனப்படும் நவீனத்துவ இலக்கிய தளத்தில் பிராமணீய சார்பு அல்லது அழுத்தம் இருந்தது அப்படி அண்ணாவைக் குறித்துப் பேசாமல் போனதற்கான ஒரு பின்புலமாக அவர் ஏற்றுக்கொள்வதே சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது. நான் அறிந்து கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக இப்படிப்பட்ட சர்ச்சைகள் அவ்வப்பொழுது பொதுவெளியில் எழுந்தா…

  17. நான் அவனல்ல . பாடியவர்: மாற்பித்தியார் புறநானூறு 252 SANGAM POEM PURANANURU 252 WITH ENGLISH TRANSLATION by M.L. Thangappa . (பொறுப்பு விலகல்: இது என்னைப்பற்றிய கவிதை அல்ல, DISCLAIMER: THIS IS NOT A POEM ABOUT ME.) . கறங்குவெள் அருவி ஏற்றலின், நிறம் பெயர்ந்து, தில்லை அன்ன புல்லென் சடையோடு, அள்இலைத் தாளி கொய்யு மோனே இல்வழங்கு மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே. 5 . ஒலித்துக்கொண்டு வீழும் வெள்ளைநிற அருவிநீர் தலையில் தங்கி ஈரம் புலராமல் இருப்பதால் நிறம் மாறித் தில்லைக்காய் போன்ற திரி சடையுடன் காணப்படும் இவன் இன்று அப்பாவிபோல செறிந்த இலையினை உடைய தாளி இலையைப் பறித்து கொண்டிருக்கிறான். இவன் முன்னொரு நாளில் இல்லங்களில் நடமா…

    • 1 reply
    • 880 views
  18. ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன் ஈழ இலக்கியம் பற்றிய கூச்சல்கள் தனிப்பட்ட வாழ்கையில் அலைக்கழிப்பும் துயரம் நிறைந்த அனுபவமும் இருந்தால் நல்ல இலக்கியம் பிறக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. டால்ஸ்டாய், ஜெயமோகன்,ஷோபாசக்தி, மிலன் குந்தேரா, ஹனீப் குரேஷி வரை அதற்கான முன்னோடிகள் இருக்கிறார்கள்தான். ஆனால் வெறுமே துயரும் அலைக்கழிப்பும் மட்டுமே நல்ல இலக்கியத்தைப்படைப்பதற்குப் போதுமானதாக இருப்பதில்லை. நல்ல உதாரணம் ஈழத்து எழுத்தாளர்களின் ஆக்கங்கள். ஈழம் என்றாலே போர், கண்ணீர், இனப்படுகொலை என்ற எண்ணமே மனதில் வரும். அதெல்லாம் சரிதான், ஆனால் அவற்றை முன்னிறுத்தி எழுதப்படும் படைப்பில் இலக்கியத்தரம் இருக்கிறதா என்பதே இலக்கியத்திற்கான அடிப்படை. இலக்க…

  19. “ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை.“ எனச்சொல்பவர்கள் யார் ..?நேர்காணல் -லெ முருகபூபதி உலகமகாயுத்த காலங்களில் வெடிக்காத, மண்ணில் ஆழப்புதையுண்ட குண்டுகளை வெடிக்கச்செய்வதும் அல்லது வலுவிழக்கசெய்வதும் அவ்வப்பொழுது நாம் பத்திரிகைகளில் படிக்கின்ற விடயங்கள். அது போலவே ஒரு நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லிய கருத்தொன்று சரியாக மாதம் ஆறைக் கடந்த நிலையில், ஈழத்துக்கவிஞர் கோ நாதன் அந்த உரையினை சமூக வலைத்தளங்களில் பகிர, ஜெயமோகனது கருத்துக்கு எதிராக சமுமுகவலைத்தளங்கள் அனல்கக்கின. ஆனால் அவரது உரையினைக் கூட்டிக்கழித்து விட்டு உரையின் மையச்சரடைப் பார்த்தல் அவர் சொல்ல வந்த கருத்தில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. முப்பதாண்டுகளுக்கு மேலாக…

  20. ஜெயமோகனின் பிதற்றல்கள் 1. ஒருமுறை ரஞ்சகுமார் ஜெயமோகனின் புத்தகம் எழுதும் வேகத்தை கண்டு “இதன்ன நாங்கள் காலையில் எழுந்து மலங்கழிப்பதுபோல் இந்தாள் புத்தகங்கள் எழுதிக்கொண்டிருக்கு!” என்று சொன்னதாக எனக்கொரு நண்பர் கூறினார். ரஞ்சகுமார் என்ன கருத்தில் அதைச் சொன்னாரோ தெரியாது, ஆனால் ஜெயமோகன் ஆரம்பத்தில் எழுதிய ‘விஷ்ணுபுரம்’, ‘காடு’, ‘கொற்றவை’ என்பவை போன்ற சிலதைத்தவிர ஏனையவை எல்லாம் மலங்களாய் வெளித்தள்ளப்படும் கழிவுப்பொருட்களே! (உதாரணம்: பாரதம் இரண்டு பாகம்) விந்து கதித்தவன் விலைமாதரிடம் செல்லும் தொழிலே அவர் எழுத்தாகிவிட்டது. 2. இத்தகைய இவருடைய புத்தகங்களை வாசித்து எவரும் விமர்சனம் செய்யாததாலும் அதன் மூலம் இவருக்கு publicity கிடைக்காததாலும், தன்னை ஏதோ விதத்தில் ஒரு…

    • 2 replies
    • 1.5k views
  21. ஈழத்துத்தமிழ்க் கவிதையும் , ஜெயமோகனின் கூற்றும்! இவ்வுரையினை முறையாக உள் வாங்கி , அதனை ஏற்கவில்லையென்றால் ஏன் ஏற்கவில்லையென்று தர்க்கரீதியாக எதிர்வினையாற்றுவதற்குப்பதில் '200ற்கும் அதிகமான சிறந்த கவிஞர்கள் இருப்பின் அதற்கான தேவை அங்கில்லை. அவர்களைப் பூச்சி மருந்து கொடுத்து அழிக்கத்தான் வேண்டும்' என்று கூறியதைத் தூக்கிப்பிடித்துத் துள்ளிக் குதிக்கின்றார்கள். உண்மையில் இக்கூற்றினை அப்படியே விளங்கிக்கொள்ளக் கூடாது. பொதுவாக நாம் பேச்சு வழக்கில் 'இதற்குப் பதில் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்துப்போகலாம்' என்போம். அதற்காக அதனை அப்படியே உண்மையில் நாக்கைப்பிடுங்கிக்கொண்டு செத்துப்போக வேண்டுமென்று கூறுவதாக நாம் அர்த்தப்படுத்தக் கூடாது. ஆனால் ஜெயமோகன் கூறியதைப்போல் 'பூச்சி மருந…

  22. Started by nunavilan,

    சுஜாதா பத்திரிக்கைப் பேராளுமை எஸ்.சங்கரநாராயணன் ஆணாதிக்க சமுதாய அதித சுதந்திரத்துடனும் அங்கீகாரத்துடனும் தானே அமைத்துக்கொண்ட ராஜபாட்டையில் உல்லாச வலம் வந்தார் சுஜாதா. உற்சாகத்துக்கு மறுபெயர்சுஜாதா. அவர் எழுத்தில் அலுப்பைப் பார்க்க முடியாது. சுவாரஸ்யமே எழுத்தின் தாரகமந்திரம் அவருக்கு. சுவாரஸ்யமாக்கும் கவனத்தில் தன்னடையாளம் கூட அவருக்குரெண்டாம்பட்சம் என்று தோன்றுகிறது. கணையாழியில் ஒருவர் அவரை 'எழுத்துலகின்சிலுக்கு,' என்று குறிப்பிட்டார். புனைகதைகளில் அவர் எழுதிக்காட்டிய ஆபாச வசனங்களுக்கு அவரைசொந்தமாக்க முடியாத அளவு நல்ல மனிதராக நட்புபேணுகிறவராகஎளிமையானவராக அவர் இருந்தார். விளம்பரங்களில் சினிமாவில் கொஞ்சூண்டுஆபாசம்…

    • 0 replies
    • 1.1k views
  23. அண்மையில் சிட்னியிலிருந்து தாயகம் சென்று கர்நாடக இசை நிகழ்ச்சி(பாட்டுக்கு ஒரு புலவன்) ஒன்றை துர்க்கா மணிம்ண்டபத்தில் எமது குழந்தைகள் நடத்தினார்கள்.இதில் பங்கு பற்றிய அனைவரும் அவுஸ்ரெலியாவில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பது குறிப்படத்தக்க விடயமாகும் ...யாழ்நகரில் சிவபூமி முதியோர் இல்லம்,நாவற்குழி திருவாகச அரண்மனை,துர்க்கா மணிமண்டபம் ஆகிய் இடங்க‌ளிலும்,கொழும்பில் சைவ மங்கையர்கழகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. எனது புதல்விகள் இருவர் இதில் பங்கு பற்றினார்கள் ..... பாடல்களுக்கு தமிழில் விளக்கம் கொடுக்கும் இருவரும் எனது மகள்மார்..... நன்றி சிவன் தொலைகாட்சி நிறுவனத்தினருக்கு

    • 21 replies
    • 3.1k views
  24. காலங்களில் அவன் வசந்தம் ... சில மாதங்களுக்கு முன், அது ஒரு சனிக்கிழமை! நித்திரை அதிகாலையில் ஆறு மணிக்கு முறிந்து விட்டது. இணைய தமிழ் வானொலிகளை ஒன்றன்பின் ஒன்றாக திருக "அவுஸ்ரேலியன் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில்" "என் பாடல்" ஜெயம் மேனன், வசுந்துரா எனும் இரு ஒலிபரப்பாளர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி. கேட்த தொடங்கியதிலிருந்து இன்று வரை தவற விடுவதில்லை. லண்டன் நேரம் சனி அதிகாலை 6 மணி தொடக்கம் 9 மணி வரை. சனி வேலைக்கு போக வேண்டிய தேவை ஏற்படினும், காதில் கொழுவ தவறுவதில்லை. கேதும் நேரத்தில் யாராவது ஏதாவது கேட்டால் சின்னக்கோபம் வரும். தொகுப்பாளர்கள் இருவரும் தமிழ் சினிமா இசையில் மிக தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கிறார்கள். இந்நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க பல அபிமானிகள்…

  25. சிம்பொனியின் தோற்றமும் வளர்ச்சியும் இளையராஜா லண்டன் சென்று சிம்பொனி இசை அமைத்தது பற்றி மட்டும் நமக்குத் தெரியும். ஆனால் சிம்பொனி இசையின் தோற்றம், பின்னணி அதன் மதச்சார்பற்ற தன்மை ஆகியவை நமக்குத் தரப்படவில்லை. இவ்விசையைப்பற்றி சில செய்திகளை முன்பு எமது இதழில் வெளியிட்டிருந்தோம். தற்போது இதைப் பற்றி பேராசிரியர் செ.அ. வீரபாண்டியன் அவர்களின் விரிவான ஆய்வுக் கட்டுரையிலிருந்து சுருக்கித் தருகிறோம். மனிதன், சமூகம், இயற்கை ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றியதே இசையாகும். மனிதர் தம்மைவெளிப்படுத்திக் கொள்வது (Expression) தொடர்பான சில தேவைகளின் அடிப்படையில் இசை தோன்றியது என்ற கருத்தை மேற்கத்திய இசை அறிஞர் டேவிட்டி பாய்டன் முன்வைக்கிறார். எனவே மனித சமூக வரலாற்றுடன் பின்னிப்பி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.