Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. எப்போது போலவே நான் இருந்த ஊர் இது இப்போ இல்லை நான் நடந்து திரிந்த பாதை இல்லை இது இப்போ இப்போ மனிதரையும் காணவில்லை சாலையில் இருந்த போதும் நகர்கிறது நம்பிக்கை மட்டும் நதி ஒன்று ஊர்ந்தது போல் இன்னும் ஓர் இயற்கையின் சங்கீத மொழிக்காய் காத்திருக்கிறது மனிதம் உயிர்த்து எழும் காலம் ஒன்றிற்காய் உன் மொழியோடு பேச நினைக்கிறது என் ஆன்மா.

    • 3 replies
    • 747 views
  2. Started by nochchi,

    உருவப்படுமா? --------------------- எங்கும் ஒருவித மயான அமைதி காடைத்தனத்தின் உச்சத்தைக் கடந்த பொழுதில் நிலமெங்கும் மனிதமலைகளாய் உடலங்கள் குருதியும் சகதியுமாய்... எனக்கு உயிர் இருந்தது அதுவே எனக்குப் போதுமானது கடற்காற்று ஊவென்று வீசியது உடம்பெங்கும் சில்லிட்டுக் குளிர்ந்தது ஆடையற்று அம்மணமாகக் கிடக்கும் உணர்வு நானும் செத்திருக்கக் கூடாதா மனம் சொல்லிற்று குப்புறக் கிடந்த என்னால் அசையக்கூட முடியவில்லை பிணங்களில் இருந்துவரும் வாடை வாடைக்காற்று வீசிய கடலோரம் பிணவாடை உலுப்பியது சட்டென அம்மாவின் குரல் என் காதில் ஒலித்தது டேய் அரைநாண் கயிறைக் கட்டடா அவிழ்ந்தால் நீ அம்மணக்கட்டையடா ஒட்டுத் துணிகூட இல்லாதபோதிலும் அரைநாண் கயிறிருந்த…

  3. Started by uthayakumar,

    உறவுகள் உறவுகள் இருந்தனர் ஒரு காலம் ஒற்றுமை இருந்தது பலகாலம் கூடியே வாழ்ந்தனர் ஒரு கூட்டில் குலைந்து இப்போ போயினர் சில காலம் அன்புடன் இருந்தனர் ஒரு காலம் அப்பன் அம்மை சொல் படி நடந்தனர் ஆயிரம் சண்டைகள் பிடித்தனர் ஒரு காலம் அடுத்த நாள் மறந்தே சிரித்தனர் இரவின் நிலவில் கதை பேசி கதையில் கனவுகள் கண்டு வந்தோம் இருப்பதை பகிர்ந்து உண்டு வந்தோம் இல்லாது இருந்தும் சிரித்து இருந்தோம் கருப்பையில் விதைத்தது விஷம் இல்லை நாம் உண்டது ஒன்றும் நஞ்சு இல்லை இரத்தத்தில் இருப்பது ஒரு வேர் தான் இது தான் விதி என அறியாயோ வாழ்வுகள் இருப்பது சில காலம் வருவதும் போவதும் ஒரு காலம் உறவுகள் என்பது தொடர் காலம் இதை நீ உணர்வாய்…

    • 0 replies
    • 1.1k views
  4. உறைந்த உலகம் உருள வேண்டும்..! ***************************** நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020 நீழ் துயர் எமை விட்டு அகலவேண்டும் உலகத்து நாடனைத்தும் உயர வேண்டும் உயர்வான எண்ணங்கள் தோன்ற வேண்டும். அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம் அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும் உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும் ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும். விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம் விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும் அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும் அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும். விண் மேகம் கடலோடு உரச வேண்டும்-பூமி விளைநிலத்தில் தென்றலது பாடவேண்டும் இருள் வெளுக்க சூரியனும் ஒளிர …

  5. வாங்கியப் புத்தகங்கள் வசைப்பாடியது வாசல் வழி வந்து என்னை... நித்தம் தேடித் தேடி சேகரித்தது செல்லரித்துப் போகவா? என ஆவேசம் கொண்டு அறைய கை ஓங்கியது அம்மா என்று நான் அழுதிட என்னை அரவணைத்து வாசிப்பின் பூரணத்தை வாய்மொழியில் விளக்கியது என் ஆருயிர் புத்தகம்... ஒருநாளைக்கு ஒருமுறை என்னைப் புரட்டியாவதுபாருங்கள், என்னுள்ளே! ஆழ்ந்து சென்றதும் புதுமுகம் பிறக்கும், புதுஅகம் கிடைக்கும் படிக்காமல் எங்களை அடுக்கி வைப்பதுபெருங்கொடுமை படித்தால் மட்டுமே கிடைக்கும் அவனியில் பெருமை மெத்தப் படித்தோம் என்று பிதற்றும் தற்பெருமை கல்லாதவரிடம் தோற்கும் தினந்தோறும் ஓதும் எளியவன் சொல் எட்டுத்திக்கும் ஒலிக்கும் படிப்பது …

  6. உலகுக்கே சோறுதந்த ஊர்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன் . புயலால் விழுந்தவரை மழை எறி மிதிக்கிறதே அயலும் தொலையும் ஆறு குளம் சேறாக தரை வீழ்ந்த மீனாய் என் தமிழ்சுற்றம் துடிக்கிறதே. ஊர்கூடி கடா வெட்டி உறவாடும் பேரூர்கள் சிறாருக்கும் பாலின்றி துணியின்றித் தவிக்கிறதே மாழையும் குளிர் காற்றும் வாளாய் சுழல்கிறதே உலகுக்குகே சோறு தந்த ஊர் பசித்துக் கிடக்கிறதே வங்கக் கடல் நடு நடுங்க மரீனாவைக் கடந்த புயல் எங்கென்று வாடிவாசல்சீமை ஏங்கி ஏங்கி அழுகிறதே

    • 1 reply
    • 1.3k views
  7. உலகை ஆளும் மன்னன் கோவிட் 19 மர்மக் கொலையாளி கொரோனா மறுபடியும் வருவானாம் ஏதோ சொல்லி வெருட்டுகினம் எங்களுக்கும் பயம் தானே உலகத்தை ஆளும் ஒரே ராஜா 19ம் மன்னன் கோவிட் தான் தானம் தன்னை மடக்கவும் முடியாதாம் மறுபடி வந்து மனிதனை முடிப்பாராம் மனிதனால் மடக்க முடியல்லையே மருந்து இன்னும் கிடைக்கலையே என்ன இவன் இருப்பதே தெரியலையே கண்ணால் கூடக் காணலையே எத்தனையே வைரசு வந்தது எல்லாத்தையும் விரட்டி விட்டோம் கொரோனாவைத் காணலையே கொலைகாரன் இருக்கும் இடம் தெரியலையே இத்தனை காலம் யுத்தம் செய்கிறான் இவனும் அழிவதாய் தெரியவும் இல்லை இரண்டாம் கட்டப் போருக்கு ரெடியாம் இவன் வருவானோ என்று பயமும் வேற இவன் போகாத நாடும் இல்லை ப…

  8. எதிர்பார்த்துக் காத்திருக்கும் நீளமானதொரு தொலைவில் ஆழமானதொரு மௌனமும் கோரமானதொரு வெறுமையும் தவிப்பானதொரு தனிமையும் வஞ்சகமானதொரு புன்னகையை வீசிவிட்டு அருகே நின்று வா வா என்று வருந்தி அழைக்கும்! மௌனமும் வெறுமையும் தனிமையும் புதைந்து கொண்டிருக்கும் நம்பிக்கையை தட்டி எழுப்பி நலம் விசாரித்து விட்டு திசை தெரியாமல் போ போ எனத் துரத்தி விட்டு ஹா ஹா என்று கோரச் சிரிப்பு சிரிக்கும்! துடித்துக் கொண்டிருக்கும் மொழிகளுக்கிடையே மறைந்து போகும் மௌனம் மௌனத்துக்கு நடுவே ஒலித்து மறைந்து போகும் கதறல் இவற்றைக் கண்டு உள்ளூர நகைத்துக் கொள்ளும் வெறுமை! எதுவுமே இல்லாமையே வெறுமை எதுவுமே கிடைக்காமையே ஏக்கம் இல்லாமையும் கிடைக்காமையும் வாழ்வின் தாக்கமான தேக்கம்! மௌனங்களுக்கு தாளம் ச…

  9. ஊதாரி ஊடகங்கள் ************************ எங்கு பார்த்தாலும் வலையொளித்தளங்கள் எதையெடுத்தாலும் எம்நாட்டுச் செய்திகள். உழைப்புக்காக ஊடக தர்மத்தை-சிலர் விலைக்கு விற்கும் வேடதாரிகள். தலைப்பில் மட்டும் உழைப்பை தேடுவார்-உள்ளே தரமில்லா செய்தியால் மடையராக்குவார் ஒருவரை உயர்வாய் ஓங்கியே கத்துவார் ஒருசில நாட்களில் ஏறியும் மிதிப்பார். செய்திகள் பற்றி கவலையே இல்லை சேரும் பணம்தான் அவர்களின் எல்லை ஆளுக்கொரு கமறா கிடைத்தால் அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார். ஏழை மக்களின் படங்களைக் காட்டி எல்லோர் மனதிலும் நெருடலை மூட்டி புலம்பெயர் பணத்தை தன்வசப்படுத்தும்-சில போக்கிரியர்களும் இணையத்தில்…

  10. ஊருக்கு போய்வந்த தம்பர்..! *********************** ஊருக்கு போனபோது ஒருபோத்தல் பியர் அடிக்க பாருக்கு.. (Bar) போன்னான் பாருங்கோ.. அங்கவந்த சின்னம் சிறுசு பெருசுகள் எல்லாம் தாள் தாளா எறிஞ்சு-பின் தண்ணியில குளிச்சு தவளுதுகள். ஒரு கூட்டம் உட்காந்து காசுவந்த கதை சொல்லி கதைச்சு பெருமைபேசி கஞ்சா, புகையில என புகையாக் கக்குதுகள். பிச்சைக்காஸ் அனுப்பினான் இவனுக்கு பின்னால போனவன் கொட்டிக்குவிக்கிறானாம் என தான் கொடுத்தனுப்பினவன் போல வெட்டி முறிக்கிறான் ஒருத்தன் விட்டுத்தொலை மச்சான் நீ மற்றவனுக்கு போன் போடு வந்தா மலை …

  11. Poverty will kill them before the virus Developing countries face economic collapse in Coronavirus fight, therefore the international financial organizations and rich nations must Protect Developing Nations from Coronavirus Pandemic.india’s Coronavirus lockdown means there are billions of people living with hunger .SriLanka , Pakistan ,Bangladesh facing the same problems. சுமக்க முடியாத சுமைகளை சுமந்தபடியே பெரியவர் குழந்தைகள் என தாண்ட முடியாத ஒரு தூரத்தை தாண்ட முயற்சிக்கின்றனர் நிலவின் துணையோடு நீண்டதூரம் போகிறார்கள் அன்று ஒரு நாள் போர் தின்று முடித்த பூமியில் இருந்து போனவர் போலவே ஏதோ விதி என்றும் சிலர் தமக்குள் பேசிக்க…

    • 0 replies
    • 887 views
  12. ஊருக்கு போய் வந்த தம்பர்..! (பாகம்2) ***************************** பெரு மூச்சுவிட்ட தம்பர் பின் தொடர்ந்தார்.. வெளிநாடுகளில் ஒருத்தரும் இல்லாத குடும்பங்களும் வேலை,வீட்டுத்தோட்டம் படிப்பென்று பண்போடுதான் சிக்கனமாய் வாழுதுகள் பாருங்கோ இங்கிருந்து சிலர் ஊருலாப்பென்று ஊருக்கு போய் எதோ சந்திர மண்டலத்துக்கு போய் வந்த மாதிரி வெளிநாட்டைப்பற்றி விளாசித்தள்ளுவார்களாம். பாருங்கோ. வந்து நிற்கிற கொஞ்ச நாட்களுக்குள்ள கிடாய் அடிச்சு கோழி அடிச்சு மதுப்போத்தல்ல விழுந்தடிச்சு பக்கத்து வீடுகளுக்கு பகட்டுக் காட்டி காசையெடுத்து வீசி …

  13. ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்! ************************* உயிருக்கு பயந்து ஒழித்தோடிப்போனவர்கள் என்று கேலி செய்கிறார்கள் அம்மா… அன்று நீதானே சொன்னாய் ஓடித்தப்பு பின் ஊர்களைக் காப்பாற்றவேண்டுமென்று. அதனால்.. வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்து விட்டோம். எங்களை.. ஏற்றுக்கொள்ள எத்தனை கேள்விகள் எத்தனை விசாரணைகள் எத்தனை இழுத்தடிப்புகள் இப்படியே எத்தனை வருடங்கள் காத்துக்கிடந்தோம். அகதியென்ற பெயருடனும் கையில்.. அன்னத் தட்டுடனும் அவர்களின் முகாங்களில் அலைந்தபோது கூட எங்கள் துன்பங்களை உனக்கு சொல்ல நாம் விரும்பியதேயில்லைத் தாயே…

  14. பனியும் மழையும் இல்லா குளிர் கால இரவொன்றை கடும் காற்று நிரப்பிச் செல்கின்றது ... காற்றின் முனைகளில் பெரும் வாள்கள் முளைத்து தொங்குகின்றன எதிர்படும் எல்லாக் கனவுகளையும் வெட்டிச் சாய்கின்றன திசைகள் இல்லா பெரும் வெளி ஒன்றில் சூறைக் காற்று சன்னதம் கொண்டு ஆடுகின்றது புல்வெளிகளும் நீரோடைகளும் பற்றி எரிகின்றன தீ சூழும் உலகொன்றில் பெரும் காடுகள் உதிர்கின்றன காலக் கிழவன் அரட்டுகின்றான் ஆலகால பைரவன் வெறி கொண்டு ஆடுகின்றான் சுடலைமாடன் ஊழித் தாண்டவத்தின் இறுதி நடனத்தை ஆரம்பிக்கின்றான் அறம் பொய்த்த உலகில் அழிவுகள் ஒரு பெரும் யானையை போல் நடந…

  15. என் அம்மா சமைச்சு போட்டா எங்க ஊர் முழுக்க வாசம் வரும் கருவாட்டு குழம்புக்கு கத்தரிக்காய் போட்டு வைப்பாள் எட்டு திக்கும் ஓடி வந்து எனக்கு ஒரு கை தா என்பர். காலையிலே தோசை சுட்டால் காக்கைக்கும் மணம் தெரியும் முருங்கை இலை முசுட்டை இலை அகத்தி இலை சுண்டி வைப்பாள் அடுத்த வீட்டு ஆன்டி வந்து அகத்தி இலை சுண்டல் கேப்பாள். ஐயோ இவள் அரைச்சு வைச்ச குழம்பு தின்ன அருகில் பூனை போல அடுப்படியில் பார்த்திருபோம் அப்பா கூட மூச்சு காட்டார் அம்மாவோட சமையலோட அருகில் ஒரு திண்ணயில அப்புவும் ஆச்சியும் குடிருப்பு ஆளுக்கு ஒரு கிண்ணத்தில அம்மா போட்டு குடுத்திடுவா பொக்கு வாயும் சிரித்து கேக்கும் அப்பு போடும் சத்தத்தில அம்மா அ…

    • 5 replies
    • 803 views
  16. எங்களுக்காக எங்கள் மாவீரர்கள் நீங்கள் மட்டுமே. மொழியாகி எங்கள் உயிர்மூச்சான மாவீரர்களே! வழி ஏதும் தெரியாமல் இன்று தட்டுத்ததடுமாறுகிறோம் தளர்ந்து தள்ளாடுகின்றோம். தனித்து போய்விட்டோமென நாளும் நாளும் தவிக்கின்றோம். தன்முனைப்பு, போட்டி பொறாமை தன்னலம்,பொருளாசை என்று மக்களை மறந்து, தம்மினம் படும் துயரங்கள் புரியாமல் மனிதம் மறந்தவர்களாக தமக்குள் தாமே முட்டி மோதிக் கொண்டு எம்மவர்கள் மாறிப்போகும் இந்த கொடுமையான உலகில,; எமக்காக உள்ளவர்கள் எங்கள் மாவீரச் செல்வங்கள் நீங்கள் மட்டுமே. உங்களுக்காக நீங்கள் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. பெற்றவரையும் உற்றவரையும் துறந்து, உங்கள் விருப்பு வெறுப்புகளைக் களைந்து, மக்கள் வாழ்வுக்காக மனஉ…

  17. அழகிய நிலவு சிரிக்கிறது ஆயிரம் பறைவைகள் பறக்கிறது ஆயிரம் பறைவைகள் பறக்கையிலே அழகிய கீதங்கள் இசைக்கிறது காலைச் சூரியன் கண் விழிக்க காற்றினில் ஆடிய கார்த்திகை பூ காலையின் அழகை பூமியில் வரையுது கண்ணைத் திறந்து ஒரு மல்லிகை மொட்டு சோம்பலை முறித்து சிரிக்கிறது காற்றினில் ஆடிய திசைகளில் என் மனம் பாட்டுக்கு மொட்டு ஒலி இசைக்கிறது கண்ணுக்கு தெரியா தூரத்தில் இருந்து என் கனவினை ஒருத்தி பாடுகிறாள் கனவுகள் எழுதிய கவிதையின் நினைவினை காத்திடம் சொல்லி அனுப்புகிறாள் .

    • 0 replies
    • 988 views
  18. எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் என்னை நீ தொலைத்து எங்கே சென்றாய் என்னை நீ அழைத்து எங்கே சென்றாய் தினந்தோறும் பணந்தேடி எங்கே சென்றாய் திசைதோறும் புகழ்தேடி எங்கே சென்றாய் உடலுக்குள் உயிர் காணாமல் எங்கே சென்றாய் உடலை தினம் பேணாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ எங்கே சென்றாய் எதிலும் நான் தெரிகின்றேன் எங்கே சென்றாய் எல்லாம் நான் அறிகின்றேன் எங்கே சென்றாய் பேதமின்றி அள்ளித் தந்தேன் எங்கே சென்றாய் பேரிடரிலும் துணை வந்தேன் எங்கே சென்றாய் மும்மலம் நீ அறியாமல் எங்கே சென்றாய் முற்பிறவி நீ தெரியாமல் எங்கே சென்றாய் எங்கே சென்றாய் நீ …

  19. எச்சரிக்கை ----------- வீட்டில் குடியிருக்கும் எலிகளுக்கு நான் விடுக்கும் கடைசி எச்சரிக்கை இது எச்சரிக்கை நீங்கள் இங்கிருப்பது எனக்குத் தெரியும் அங்கங்கே இருக்கும் கறுப்பு எச்சங்கள் உங்களின் மிச்சங்களே இருட்டில் உருட்டுவதும் பகலில் ஒழிவதுமாக நீங்கள் ஓடித் திரிவதும் தெரியும் தக்காளிச்செடியில் நின்றதாகவும் அம்மணி அழுதார் எலிக்கு ஏனய்யா தக்காளி? ஏக பிரதிநிதியாக இங்கு எல்லாம் உங்களுக்காகவா? முட்டைக்கோதுகள் ரேடியேட்டருக்குள் கிடக்க 'என்ன பாம்பு வளர்க்கிறீர்கள்?' என்று தள்ளி நின்று கேட்டார் மெக்கானிக் பின்னர் மொத்தமாக…

  20. எச்சரிக்கை! *************** கடிக்க வந்த நாய்க்கு கல்லெறிந்தேன் அது ஓடித் தப்பியது. தேன் கூட்டுக்கு கல்லெறிந்தேன் ஒற்றுமையாக துரத்திவந்தது என்னை ஓடவைத்தது. இது போன்ற ஒற்ருமையே தமிழர்க்கும் தேவை ஒன்றுசேர் இல்லையேல் தனித் தனியாய் நின்று அழிந்தே! போவாய். அன்புடன் -பசுவூர்க்கோபி.

  21. எடுக்கவோ.....கோர்க்கவோ. அரவக்கொடியோனின் அரண்மனைதனில் பரவித் தொடுத்த முத்தாடை அணிந்து இரவியின் பெயருடை பானுமதியாள் புரவித் தேருடை மன்னனுடன் கரத்தில் தாயக் கட்டைகளோடு உருட்டி ஆடுகின்றாள் சதுரங்கம். அங்கதேசத்து மன்னனாம் கர்ணன் தங்கக் கவச குண்டலத்துடன் பிறந்தோன் இங்கு மாமன்னன் துரியனைக் காணவந்தவன் தங்கையனைய மங்கை வேண்ட --- சதுர் அங்கம் ஆட மஞ்சத்தில் எழுந்தருளி சிங்கம் போலவும் வீற்றிருந்தனன். ஆட்ட சுவாரசியத்தில் மலர்ந்திருந்தவள் இட்ட இலக்கங்கள் இல்லாமலாகி வாட்டமுடன் கட்டைகளை க…

  22. முடிவுறாத் துயரத்தின் சாட்சியாய் முடிவேயற்ற புதைகுழிக்குள் மரணங்கள் மலிந்து மண்ணில் உதிரங்கள் இறைத்த நன்னாள் ஓலங்கள் ஒருங்கே கேட்டும் உதவிட யாரும் எண்ணா ஈனர்களாக்கி நாங்கள் ஒடுக்கி அடக்கி மண்ணில் உயிருடன் புதைத்த நன்னாள் உன்மத்தம் கொண்ட மூடர் ஊளைகளோடு ஊனை உறிஞ்சியே உதிர்த்தன அன்று எரிந்தன எங்கள் ஊர்கள் சரிந்தன சடலங்கள் அங்கே ஆணின் பெண்ணின் ஆடை அவிழ்த்து அம்மணமாக்கியே அரக்கர் சிரிக்க கூனிக் குறுகி நாம் மண்ணில் கரைய கொடுமைகள் அங்கே குவியலாயின கேடுகெட்டு நாம் பார்த்திருந்தோம் கைகள் அறுந்தன அன்…

  23. எழுதியவை எல்லாம் கவிதையா? என எண்ணிய வேளையில் என்னிடம் பேசியது என் எழுதுகோல் உள்ளத்தில் உறையும் உணர்வை ஊற்றாய் உரைப்பது கவிதையா? நெஞ்சத்தில் நெருடும் நினைவுகளை நிரல்படக் கோர்ப்பது கவிதையா? வலிகளுக்கு அருமருந்தாய் மனதை வருடுவது கவிதையா? வரலாற்றின் பழம்பெரும் உண்மையை அழியாமல் வடிவமைப்பது கவிதையா? இயற்கையின் கொடையை இனிமையாய் இயம்புவது கவிதையா? காதலின் கவிரசத்தைக் காய்ச்சி பருகுவது கவிதையா? எது கவிதை? என்னுள் ஆயிரம் கேள்விகள் உதயம் கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம் கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம் விதையை விதைத்திடும் கவிதை விடைபெறா உலகின் நடைப்பாதை எது கவிதை? எழுதும…

  24. 13 டிசம்பர் இடம்பெற்ற என் பிறந்த தினத்தில் ”பல்லாண்டு ஜெயபாலன்” எனக் கூறி என்னை வாழ்த்தியபடி யாழ் நேயர்களுக்கு. ”உங்க வயசென்ன அங்கிள்” ”எத்தனை தடவைதான் சொலித் தொலைப்பது என்வயசை. கேழ்” . நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் * தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். * ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றா…

    • 0 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.