Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. அன்னையர் தினம்..! ************* பூமாதேவியென பூமியும் பெண்ணே கங்கை யமுனை சிந்து காவேரி ஓடும் ஆறுகளும் பெண்ணே.. உயிரினம் அனைத்தும் உன் மடிதாங்கியே உலகில் உதித்தன. கருவறை தன்னுள் உருவினை தாங்கி உதிரம் கலந்து உடலினைத் தந்து உணர்வையூட்டி உலகினைக்காட்டிய அம்மாதானே அனைத்துக்கும் தெய்வம். அன்னையர் தினத்துக்கு ஒருநாள் போதுமா-எம் ஆயுள் வரையும் அன்னையை மறக்கத்தான் முடியுமா? அன்னையர் தின வாழ்த்துக்களுடன். அன்புடன் -பசுவூர்க்கோபி- 09.05.2021

    • 2 replies
    • 802 views
  2. இன்று அன்னை பூபதி பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த நினைவு நாள் மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே. (குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது). திலீபனின் உண்ணா விரதம் தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் கெ…

    • 2 replies
    • 2.1k views
  3. 2021 ஆண்டு சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - பிலவ வருடம் ----------------------------------------- வருக வருக புத்தாண்டே வருக ...... தருக தருக இன்பவாழ்க்கை தருக...... பொழிக பொழிக வளம் பொழிக ..... வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!! போ போ பழைய ஆண்டே போ ..... ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு ..... போதும் போதும் துன்பங்கள் போதும் .... மேலும் மேலும் தாங்க முடியவில்லை....! அணு அணுவாய் பெற்றோம் இன்பம் ..... வண்ண வண்ண கனவுகள் கண்டோம் .... விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் .... ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!! இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே .... அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே... உழைக்க உழைக்க உடல் உறுதியை த…

  4. வெளி நாட்டு சரக்கு தம்பி எங்க விருப்பமான தண்ணி தம்பி மில்லி கொஞ்சம் உள்ள போனால் விட்டமீனு தானே தம்பி வீரம் எல்லாம் ஏறும் தம்பி வீட்டிலையும் பேச்சு தம்பி வொட்கா விஸ்கி விறண்டி என்று இந்த வில்லங்கத்தை போட்டு போனா பாட்டு எல்லாம் தானா வரும் பல கூத்து எல்லாம் கூட வரும் அடிச்சுப் போட்டு இருந்தா தம்பி ஆயிரம் தத்துவத்தோட அடுக்கு மொழியில் கவிதை வரும் அரசியலும் பேச வரும் நேற்று வரை நல்ல பிள்ளை இன்று போத்தலோட போச்சுதெல்லாம் பேச்சும் மாறிப் போச்சு தம்பி பார்ட்டி ஓட வாழ்க்கை தம்பி பிறக்கும் போது இருந்த குணம் இப்போ இல்லையே புதுசா எல்லாம் தலையில் இப்போ மாறிப் போச்சுது வெளி நாட்டு வாழ்கை எல்லோ நாம வெள்ளைக்க…

    • 3 replies
    • 1.2k views
  5. யாத்து யாக்கை தந்தவள் யார் என அடையாளம் தந்தவள் யான் எனும் இருப்பை யனன வலி தான் சுமந்து யாத்த அன்னை.. யாதுமாய் விளங்கி யாவரும் காத்தவள்.. யாரும் அறியா உருவில் காற்றில் கலந்திட்டாள் யாக்கை அழியலாம்..எரியலாம் யாதும் நிறைவாய் அம்மா யாரும் அழிக்கா நினைவாய் நிலைப்பாய்...!! அன்னையின் ஈடினையற்ற நினைவுகள் என்றும் வாழும்.. யாதுமாய் விளங்கிய எங்கள் அம்மாவிற்காக.

  6. என்... கருத்துக்கள்.....!!! சிறுபிள்ளைத்தனமாகவோ ..... குழந்தைத்தனமாகவோ ..... !!! செத்ததாகவோ...... இத்ததாகவோ........ இருக்கலாம்..... !!! என்றாலும் ஒருமுறை பாருங்கள்......! அதிலிருந்து உங்களுக்கு.... புதிய கருத்துக்கள்.. தோன்றலாம்..... !!! @ கவிப்புயல் இனியவன்

  7. என்னை.... காதலித்துப்பார்.... கவிதையால்... திணறவைக்கிறேன்.... ! என்னை..... ஏங்கவைக்க காதல் செய்....... ஏக்கத்தின் சுகத்தை... அனுபவிக்க துடிக்கிறேன்... ! காதல் செய்தபின்.... தினமும் என்னை.... சந்திக்காதே....... கவிதைகள் என்னை... கோபித்துவிடும்.... !!! @ கவிப்புயல் இனியவன் கவிதையை காதலிக்கிறேன் (01)

  8. காதல்.......ஆனந்த கண்ணீரில்...ஆரம்பித்து.......ஆறுதல் கண்ணீரில்.....முடிகிறது..........!!!முகில்களுக்கிடையே....காதல் விரிசல்.......வானத்தின் கண்ணீர்......மழை..........................!!!நான்வெங்காயம் இல்லை....என்றாலும் உன்னை.....பார்த்தவுடன் கண்ணீர்....வருகிறது................!!!&கவிப்புயல் இனியவன்இறந்தும் துடிக்கும் இதயம்காதல் கஸல் (பதிவு 01)

  9. சிறுபான்மை..! *********** எஜமான்.. சொல்லுகிறார் இன்று 73வது சுதந்திர தினமாம் எல்லோரையும் செட்டையை அடித்து வானில் பறக்கட்டாம். ............... ஆனால் கூட்டில் இருந்த படியே. -பசுவூர்க்கோபி- 04.02.2021

  10. இது எனது அறிவுரை இல்லை அன்புரை. அன்றைய பொதுநலமும் இன்றை சுயநலமும்..! ************************************ நானே பலனெடுக்க வேண்டுமென்றே நானிலத்தில் சுயநலமே ஓங்கிறது வீணே விளைநிலங்கள் தூங்கிறது-பல வீடனைத்தும் பட்டணியே ஆழ்கிறது. பலன் கிடைக்க நீண்டகாலமென்று-பனை பயிரிடவே பயப்படுவோர் இன்று பயன் படுத்தும் பனையுணவு எல்லாம்-உன் பாட்டனவன் போட்டதுவே நம்பு. பனை தென்னை நட்டு வைத்தார் முன்னோர் பரம்பரைக்கே விட்டுச்சென்றார் அன்னோர் பங்கு போட்டு சண்டையிட்டார் இன்னோர் பலனை மட்டும் தேடுகின்றார் நம்மோர். அம்மாவை போல அந்தத் தென்னை அரும் பசியை தீர்க்குமென்பதுண்மை கண்போல இரு தென்னை நா…

  11. இறந்த.... காலநினைவுகளுடன்.. வாழ்வதை காட்டிலும்.... இறப்பது மேல்...... !!!

  12. காலச் சூழலினும் கயமை வாழ்விலினும் ஈடுபாடில்லாமல் எச்செயலும் செய்துழன்று ஈடில்லாத் துன்பமாய் பீடுற்று வாழாமல் பாடுபட்டுச் செய்வதிலும் பக்குவமாய் திட்டமிட்டு ஈடுபட்டுச் செய்வோர் புலமைச் செவ்வியர் சால்புடைப் பெரியோர் ஞாலத்தின் மீதினில் வாழத் தகுந்தோர்! அற்றைப் பெருநிலை அறவே மறந்து பொய்யாம் வினைகளை மெய்யாம் என்று செய்யாப் பணியை சீர்சிறப்பென்று நல்லுரை சொல்வோர் நாயிலும் கீழோர் பொய்யுரை புகல்வோர் தூற்றுதற்குரியோர் தீமைகள் புரிவோர் தீண்டத் தகாதோர் மேதினி மீதினில் வாழத் தகாதோர்! நல்லவராய் நயத்திருந்தால் நன்னலத்துடன் நன்றேயிருப்பர் அல்லவராய் அயர்ந்திருந்தால் அவலத்துடன் அவதியுற்றிருப்பர் வல்லவராய் வாய்மையுடன் வாழ்ந்து உளங் கனிவித்து மெய்மை கொளுத்தி மேலுக்குய்து நன்மையும் …

  13. Started by தமிழ்நிலா,

    ஆண்கள் பொறுப்பு எனும் சிற்பத்தின் வரிவடிவங்கள்..... வீரம் எனும் சொல்லின் சிறப்பு வடிவங்கள்.... அன்பிற்கும் ஆசைக்கும் கடிவாளமிட்டு நாளும் இயந்திரமாக உழைக்கும் உறுதியின் உறைவிடங்கள்.... என்றும் தன் குடும்பத்துக்காக சுமையைச் சுமைதாங்கியாய் தாங்கும் தனி வடிவங்கள்... தன் குடும்பத்துக்காக தன்னை மெழுகுதிரியாக உருக்கி வாழ்க்கை எனும் விளக்கிற்கு ஒளியைக் கொடுக்கும் உன்னத மகான்கள்.... வாழ்க்கை எனும் அழகிய மலரை என்றும் வாடி விடாமல் காக்கும் பூந்தோட்ட காவல்காரர்கள்.... மொத்தத்தில் ஆண்கள் எல்லோரும் பரிசுத்த தேவதைகள் என்றும் போற்றி மதிக்கப்பட வேண்டியவர்கள்!!!! -தமிழ்நிலா.

  14. மல்லிகை பூவுக்கு எங்கள் கண்ணீர்பூக்கள்..! ********************************** இன்று(28.01.2021) பல்கலைக் கழகமொன்று படுத்துறங்கிய செய்தி கேட்டு பாரெல்லாம் கண்ணீரால் நனைகிறதே! ஜீவா ஐயா ஈழத்தின் இலக்கியத் தோட்டத்தில் மல்லிகையாய் பூத்துக் குலுங்கி மனங்களை வென்ற இந்த.. மாபெரும் இலக்கியச் சிகரத்துக்கு மரணமே இல்லை என்றும் எம்மோடு வாழ்ந்துகொண்டே இருப்பீர்கள். உள்ளத்தின் உயரத்தில் மல்லிகை பந்தலாய். பசுவூர்க்கோபி-

  15. இன்றும் அன்றும்..! ************** இன்டர் நெட்டை திறந்தாலே ஏதோ ஒரு விளம்பரம் இடை குறைப்பா எழில் அழகா.. தொந்தியா, வயிற்றில் தொல்லையா தூக்கமா-அது இல்லையா சுகரா,கொழுப்பா, சூம்பலா,வீங்கலா இதுபோன்று எத்தனை எத்தனை.. அத்தனைக்கும் மருந்து அவரவர் சொல்லி அதைசெய்,இதைசெய் அப்படிச் செய் இப்படிச்செய்-என ஆயிரம் அறிவுரை இந்தபழத்தை இதுக்கு சாப்பிடு என்றொருவர் இதைசாப்பிடதே இந்த நோய்க்கு என்றொருவர்.. படுக்கும் முறை நடக்கும் முறை பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டும் முறை சொல்லிச் சொல்லியே சுகநலம் உள்ளவரும் ச…

  16. நீண்ட கவிதை கொஞ்சம் பொறுமையாய் படியுங்கள் இன்றைய உலகின் யதார்த்தம் இது தான். அடி விழுந்த கொரோனா அடங்குவதாய் தெரியவில்லை-பா.உதயன் —————————————————————————————- அடி விழுந்த கொரோனா அடங்குவதாய் தெரியவில்லை இரண்டாம் கட்ட தாக்குதலுக்கு இறக்குகிறது இறுதி மூச்சோடு ஏதோ புசுதாய் இன்னுமொரு ரிசேவ் படையுடன் முயூடேசன் என்ற பெயரோடு அப்பன் போலவே தப்பாமல் ஒரு பிள்ளை பிறந்திருக்கான் அவனைப் போலவே ஆட்டத்தை தொடங்கப் போறானோ ஆருக்குத் தெரியும் மூன்று தளங்களை முழுமையாய் வீழ்த்தி முதல் அடி இருட்டு அடி போல் இங்கிலாந்தை விழுத்திப் போட்டுது இன்று தொடக்கம் இன்னும் ஒருக்கா இழுத்து மூ…

  17. உறைந்த உலகம் உருள வேண்டும்..! ***************************** நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020 நீழ் துயர் எமை விட்டு அகலவேண்டும் உலகத்து நாடனைத்தும் உயர வேண்டும் உயர்வான எண்ணங்கள் தோன்ற வேண்டும். அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம் அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும் உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும் ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும். விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம் விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும் அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும் அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும். விண் மேகம் கடலோடு உரச வேண்டும்-பூமி விளைநிலத்தில் தென்றலது பாடவேண்டும் இருள் வெளுக்க சூரியனும் ஒளிர …

  18. இனிய பொங்கல் வாழ்த்துகள் ....... இனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள் இனிய மகர ஜோதி வாழ்த்துக்கள் இனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........!!! இனிக்க இனிக்க பொங்கல் பொங்கி..... இன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து... இல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க...... இல்லாதருக்கும் அள்ளிக்கொடுத்து...... இல்லறம் நல்லறமாக செழித்திட....... இனியவனின் இனிய வாழ்த்துக்கள்.....!!! இல்லங்களில் பொங்கலை பங்கிட்டு...... இல்லத்தாரோடும் உறவுகலோடும்..... இன்முகத்தோடு பொங்கலை உண்டு..... இன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்...... இனிய உறவுகளுக்கு இனியவனின்...... இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்…

  19. சரகலை என்பது மூச்சுக்கலை "சரம் " என்பது "மூச்சு"ஆகும். இந்த மூச்சு சூரியகலை, சந்திரகலை, சுழுமுனை, என்று நடைபெறும். இந்த ஓட்டத்தை எம் விருப்பம் போல் மற்றும் பயிற்சியே சரகலை ஆகும். இதை ஒரு குரு மூலம் கற்பதே சிறந்தது. அடியேன் தமிழ்நாடு சித்த வைத்திய வித்தர் S. காந்தி என்பவரிடம் கற்றேன். இதில் என்ன பயன்? என்று நீங்கள் கேட்டால். இன்றைய கொரோனா வுக்கு தற்பாதுகாப்பே இது தான்.. .... பேச்சை குறை மூச்சை பிடி.. எல்லாம் வெற்றி..... .... என்னால் முடிந்த அளவு சுருக்கமா இதை கவிதை வடிவில் முயற்சி செய்கிறேன். தொடர்ந்து பாருங்கள்..... கவிப்புயல் இனியவன்

  20. மண்டும் இருள் கலைந்து செங்கொண்டைச் சேவல் சிலிர்த்தெழுந்து கொக்கரக்கோவென்று தொண்டை கிழியத் துயிலெழுப்பும்! தோட்டத்தே கறவை மாடும் மடி நிரம்பி அம்மா என்றழைக்கும்! காக்கை கரையும் கருவானம் வெளுக்கும் பறவையினங்கள் சிறகடிக்கும் வண்டினங்கள் ரீங்காரமடிக்கும் குயிலினங்கள் பாட்டிசைக்கும்! மேற்கில் மதி மறையும்... கீழ்க் கதிரும் மேலெழும்பும் விளக்குமாற்றோசை தெருவெல்லாம் இரையும் கேணிக் கரையில் வளைக் குடங்கள் கிண்கிணிக்கும் அதிகாலைத் துயிலெழுந்து தையலும் கெண்டைக்கால் தெரிய கண்டாங்கி சேலை கட்டி துளசிமாடம் வலம் வரும்! விண்ணும் மண்ணும் உறவென வாழ்ந்து மண்ணின் சுவாசமே உயிர் சுவாசமாய் நேசித்து கதிரெழு முன் இருளுடையில் நீர் குடைந்திட முத்து மணிகளைப் போல் நெல்மணிகளை விதைத்திட பல …

  21. "2020"மரணித்த உடல்காவி செல்கிறது..! ******************************** உன்னுக்குள் எமைவைத்து ஒருவருடம் ஆண்டுவிட்டு பின்னுக்கு போகுமாண்டே இதுவரையும் உனைப்போல உயிர் எடுக்கும் ஆண்டெதுவும் எம் வாழ்வில் கண்டதில்லை. சங்ககால இலக்கியத்துள் சரித்திரத்தில் இறப்புக் கண்டோம் உலக மகா யுத்தத்தில்-கிட்லர் உயிர் பறித்த கொடுமை கண்டோம் இனத்துவேஷம் காட்டிக் காட்டி ஈழத்தில் அழிவு கண்டோம் மதங்கள் சண்டைபோட்டு-பல மரணங்கள் நேரில் கண்டோம் வல்லரசு நாடுகளால் வதைத்து உயிர்கள் பறிக்கக் கண்டோம் தோல் நிறச் சண்டையாலே தொடர் மரணம் நாமும் கண்டோம் இத்தனையும் மனிதநேயம் இல்லாத ஈ…

  22. Started by தமிழ்நிலா,

    அழகெனப்படுவது யாது...? அழகெனப்படுவது நல் அகத்தினின் முகிழ்ப்பு! அழகெனப்படுவது நல் எண்ணத்தினின் முனைப்பு! அழகெனப்படுவது நற்கல்வியின் செழிப்பு! அழகெனப்படுவது உள்ளுயிரின் இயக்கம்! அழகெனப்படுவது குணநலத்தின் முயக்கம்! அகத்தினில் அழகெழுந்தால் நல் அறம் பெருகும்... அகத் திறம் பெருகும்... அதன் உரம் பெருகும்... தீமைக் கெதிர் நிற்கும்... மறம் பெருகும்... மருள் விலகிப் போகும்! புறம் பெயரும் பொய்மையெலாம்! புதுமை பெறும் வாழ்வு! பாடிக் களைத்தோம் புற அழகின் பொய்மையினை! தேடிக் களைத்தோம் உண்மை அழகின் மெய்யுணர்வை! நாடிக் களைத்தோம் உரவோரின் மெய்யழகை! பாடியும் தேடியும் நாடியும் சலித்தோம் இத் தரணியிலே... தூய்மை அழகுடையோர் எவரும் காண்கிலமே! …

  23. Started by பராபரன்,

    ( "96" திரைப்படம் பார்த்த ஓர் தூக்கமற்ற பின்னிரவு நேரத்தின் ஆழ்மனது அசைவுகள்....) "96" ------ தூறல் நேர மண் மணத்துடன் சாரல் காற்று மெய் நனைக்கையில்... புலுனிக் குஞ்சுகளின் சலசலப்புடன் முன்பனி கால சிலுசிலுப்புடன்... இயற்கை ஈன்றாள் "96"... ஓயாத ஒரு சுழல் காற்றுடன் பாதி நண்பர் கரை கடக்க... நாமிருந்தோம் திறந்த வெளி சிறையினிலே... மின்மினிகளுடன் போட்டியிடும் மண்நெய் விளக்குகள்... அடர்ந்த இரவு நாட்களில் தூரத்து நாயொலி உசுப்பியது "அட்றினலை"... நிலவு எரிந்த நாட்களில் சுட்டது நிலவொளி... அதுவொரு சாவும் சாவு சார்ந்த நிலமும்... ஆறாம்ம்ம் திணை... ஆயிரம் இருந்தது அகநானூறும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.