தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10296 topics in this forum
-
முருகன் - நளினி... சிறைப் பறவைகளின் காதல் கதை!டி.அருள் எழிலன், ஓவியங்கள்: ஸ்யாம் முருகன்-நளினி காதலுக்கு வயது 23 வருடங்கள். இதில் சிறையில் பிரிக்கப்பட்டு இருவரும் தனித்திருந்த காலம்... கிட்டத்தட்ட அதே 23 வருடங்கள்! ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முருகன்-நளினி ஜோடி, தங்கள் காதலுக்குக் கொடுத்த விலை மிக மிக அதிகம்! 1991 பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையிலான முதல் சந்திப்பு. மே மாதம் ராஜீவ் காந்தி கொலை. ஜூன் மாதம் இருவரும் கைதாகிறார்கள். அன்று முதல் இன்று வரை சிறைச் சுவர்களுக்கு இடையில் கிளைத்துக் கிடக்கிறது இவர்களின் காதல்! ''முதல் சந்திப்பு முதல் உங்கள் காதல் கதையை விரிவாகச் சொல்லுங்கள்!'' என்று வழக்கறிஞர் மூலம் வேலூர்…
-
- 2 replies
- 704 views
-
-
தூய தமிழில் பேசுவோருக்கு பரிசு: தமிழக அரசின் புதிய திட்டம்! அன்றாட வாழ்க்கையில் தூய தமிழில் பேசுவோருக்கு பரிசுத் தொகை வழங்கும் திட்டமொன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில், இதரமொழிச் சொற்களின் பயன்பாடு அல்லாமல் தூய தமிழில் பேசும் மூவருக்கு 5 ஆயிரம் ரூபாய் (இந்திய மதிப்பில்) பெறுமதியான பரிசுத் தொகை வழங்கப்படுமென செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி திட்டத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இதன்படி, தகுதியுடையோர் sorkuvai.com என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விண்ணப்பத்துடன், நாடறிந்த தமிழ்ப் பற்றாளர்கள் இருவரிடம் தமது தமிழ்ப் பற்றை உறுதிசெய்து சான்றிதழ் பெற வேண்டும…
-
- 2 replies
- 771 views
-
-
பன்னீருக்கு 35 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு? சென்னை: முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு, ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ., சண்முகநாதன், கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ.,க்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் பல எம்.எல்.ஏ.,க்கள் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் கூவத்தூர் அருகே தனியார் ரிசார்ட்டில் எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ரிசார்ட்டில் உள்ள எம்.எல்.ஏ.,க்களில் 30 பேர் முதல்வர் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், மேலும் 15 பேர் தி.மு.க.,வை தொடர்பு கொண்டுள்ளதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் 35 ஆக அதிகரித்துள்ளது. இ…
-
- 2 replies
- 649 views
-
-
சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்குவோம் : சசிகலா அணியில் இருந்த அமைச்சர்கள் அதிரடி! முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், நேற்று முதல் ஆலோசனையில் ஈடுபட்டுவந்தனர். குறிப்பாக, இன்றும் தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம், "தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. தினகரன் குடும்பத்துக்கு இனி கட்சியில் இடம் கிடையாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத் தயார்.…
-
- 2 replies
- 613 views
-
-
தலித் சாதி ஒன்றைச் சேர்ந்த பெண்ணின் சடலத்தை தங்கள் குடியிருப்பு வழியாகக் கொண்டு செல்வதற்கு சாதி இந்துக்கள் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. சடலத்தைக் கொண்டு செல்ல வழி இல்லாததால், உறவினர்களின் போராட்டங்களுக்கு நடுவே, அப்பெண்ணின் சடலம் இரவு நேரத்தில் சாலையிலேயே வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சாதி இந்துக்கள் 21 பேர் மீது தாழ்த்தபட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது . அவர்கள் கொடுத்த எதிர் புகாரின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 31 பேர் மீது வழக்குப…
-
- 2 replies
- 990 views
-
-
சென்னை: தற்போது நடைபெறும் ஆட்சி தான் மாற்றப்பட வேண்டிய விஷயம் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் தலைநகராம் சென்னையின் 375வது பிறந்தநாள் சென்னை தினமாக இன்று கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சென்னை தினத்தையொட்டி நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் திமுக தலைவர் கருணாநிதியிடம் கேட்டனர். அதற்கு அவர், சென்னைக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். இதையடுத்து தற்போது நிலவும் சூழலில் என்ன மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு கருணாநிதி, மாற்றப்பட வேண்டியது தற்போது நடைபெறும் ஆட்சியைத் தான் என்றார். http://tamil.oneindia.in/news/2013/08/22/tamilnadu-karunanidhi-wants-see-change-rule-181827…
-
- 2 replies
- 415 views
-
-
சென்னை: மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் நரேந்திர மோடிக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டிய நேரம் வந்து விட்டது. அப்போதுதான் மத வெறி ஆபத்தை எதிர்கொண்டு முறியடிக்க முடியும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை... பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டிருக்கிறார். குஜராத்தில் இசுலாமியர்களுக்கு எதிரான கலவரத்துக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கும் காரணமானவர் அவர் என்ற குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பாக பல்வேறு வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. அதன் காரணமாகவே அமெரிக்க அரசு அவருக்கு விசா வழங்க மறுத்து வருகிறது. இந்நிலையில் அவரை அத்வானி போன்ற தலைவர்கள…
-
- 2 replies
- 1.5k views
-
-
ஏரியில் மிதந்து வந்த 7 உடல்களால் பரபரப்பு !!! இந்தியா - திருப்பதி அருகே ஏரியில் 7 உடல்கள் நேற்று மிதந்து வந்ததைத் தொடர்ந்து உடல்களை மீட்ட பொலிஸார் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர். இந்தியா - ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டா என்ற இடம் திருப்பதி மலைப்பகுதியையொட்டி உள்ளது. இங்குள்ள மலை அடிவாரத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. நேற்று இந்த ஏரி வழியாக சென்றவர்கள் ஏரிக்குள் 7 உடல்கள் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த ஒண்டிமிட்டா பொலிஸாரும், தீயணைப்புத்துறையினரும் அந்த ஏரிக்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்து வந்த சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலுள்ள வைத்திய சாலை…
-
- 2 replies
- 1.2k views
-
-
மூன்று விடுதலைப் புலி ஆதரவாளர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் – என்.ஐ.ஏ தமிழ்நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாகக் கூறப்படும் மூன்று விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் மீது இந்திய தேசிய புலனாய்வு திணைக்களம் நேற்று வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான நவீன் என்கிற எம். சக்கரவர்த்தி, ஜே சஞ்சய் பிரகாஷ் மற்றும் கபிலர் என்ற கபிலன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது மே 19 அன்று, சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையப் பகுதியில் வாகனச் சோதனையின் போது, இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் துப்பாக்கிப் பொடிகள் மீட்கப்பட்டது தொடர்பாக…
-
- 2 replies
- 722 views
-
-
தீபாவளி நாளில் 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு தமிழகத்தில் இந்த வருடமும் தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரங்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலையில் 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், பட்டாசுகளின் அருகில் தீப்பற்றும் பொருட்களை வைக்கக்கூடாது, குழந்தைகளை அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றம், புனித தலங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்…
-
- 2 replies
- 667 views
-
-
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை: தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் மரணம் குறித்த சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக…
-
- 2 replies
- 457 views
-
-
தணிகாசலம் கைது - கோவிட் - 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தெரிவித்தவரை கைது செய்தது போலீஸ் கோவிட் - 19க்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாகக் கூறிவந்த போலி மருத்துவர் க. தணிகாசலம் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு ஜெய் நகர் பகுதியில் உள்ள ரத்னா சித்த மருத்துவமனையில் மருத்துவம் செய்துவருபவர் தணிகாசலம். இவர் தன்னை சித்த வைத்தியர், இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டு மருத்துவம் செய்துவந்தார். இந்தியாவில் கொரோனா நோய் பரவ ஆரம்பித்ததும் அந்த நோய்க்கு தன்னிடம் மருந்து இருப்பதாகக் கூற ஆரம்பித்தார். தன்னிடம் நோயாளிகளைக் கொடுத்தால், தான் அவர்களைக் குணப்படுத்தி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். …
-
- 2 replies
- 716 views
-
-
இரவோடு இரவாக மெரினாவிலிருந்து அகற்றப்பட்ட சிவாஜி சிலை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் அமைந்திருந்த நடிகர் சிவாஜி கணேசனின் சிலை புதன்கிழமையன்று இரவு திடீரென அகற்றப்பட்டது. இதற்கு சிவாஜி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நடிகர் சிவாஜி கணேசனின் சிலை, சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையும் ராதாகி…
-
- 2 replies
- 935 views
-
-
கலைஞரின் மறுபக்கம் – கண்ணதாசன் பார்வையில் ஒரு நாளுக்கு முன்னாடிதான் கவிஞர் கண்ணதாசனின் சுயவரலாறான “வனவாசம்” புத்தகத்தைப் படித்து முடித்தேன். அதில் கண்ணதாசன் கருணாநிதியின் குள்ளநரித்தனத்தை அப்போதே தோலுறித்து காட்டியுள்ளார். அதை விட இது நாள் வரை பண்பாளர், பக்குவமான அரசியல்வாதி என்று நான் படித்து வந்த அண்ணாத்துரையின் நிஜ முகத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். ஆனால் இந்த உண்மைகளை பற்றியெல்லாம் தற்கால பத்திரிகைகள் எதுவும் எழுதுவதில்லை. அதனால், நான் உட்பட இன்றைய தலைமுறையினருக்கு திராவிட தலைவர்களின் உண்மையான உருவங்கள் தெரியவில்லை. கருணாநிதியும் அண்ணாவும் எப்படி குள்ளநரி தந்திரம் செய்து நேர்மையான திராவிட தலைவர்களையும் பிரமுகர்களையும் கீழே தள்ளிவிட்டு தாங்கள் …
-
- 2 replies
- 3.6k views
-
-
கிருபானந்த வாரியாரின் பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்: வேலூரில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வேலூர் திருமுருக கிருபானந்த வாரியாரின் பிறந்த நாளான ஆகஸ்ட் 25-ம் தேதி இனி அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று வேலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இன்று (பிப்.9) இரவு நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ‘‘தமிழகத்தில் அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி அதிமுகதான். 30 ஆண்டுகள் ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிமுக ஆட்சியில் எப்போது…
-
- 2 replies
- 612 views
-
-
அமைச்சர்கள் அதிரடிக்கு காரணம் என்ன? சென்னை: சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்த லில், அ.தி.மு.க., - சசி அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக, தேர்தல் பணியாற்ற, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்றனர். அப்போது, சசிகலா குடும்பத்தினருக்கு, கட்சி தொண்டர்களிடமும், பொது மக்களிடமும், கடும் எதிர்ப்பு இருப்பதை கண்கூடாக பார்த்தனர். மேலும், தினகரன் வெற்றி கேள்விக் குறியானதை தொடர்ந்து, பணத்தை வாரி இறைத்ததால், தேர்தல் கமிஷன், தேர்தலை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, அவரது தீவிர ஆதரவாளரான, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், வருமான வரி சோதனையில் சிக்கினார். இதெல்லாமே, சக அமைச்சர்களை யோசிக்க வைத்தது. இனிம…
-
- 2 replies
- 857 views
-
-
டெல்லி: பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கை ரத்து செய்தது சரிதான் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தூக்கை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் ஜனவரி 18ல் தீர்ப்பு அளித்திருந்தது. கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு செய்ய பல ஆண்டுகள் ஆனதால் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. தண்டனை குறைப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது. மத்திய அரசின் மனுவை தள்ளுபடி செய்து சதாசிவம் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=85794
-
- 2 replies
- 694 views
-
-
ஜெ. பிறந்த நாளன்று அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு!- ஜெ.தீபா எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த தினமான இன்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவரின் நினைவு இல்லம் மற்றும் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, 'எனக்கு ஆதரவளிக்கும் மக்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி. இளைஞர்கள் மற்றும் மக்களின் கருத்தை அறிந்து அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன். ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அரசியலில் ஈடுபடுவது குறித்து தெரிவிப்பேன்' என்று பேசியுள்ளார். http://www.vikatan.com/news/tamilnadu/77951-i-will-decide-about-entering-politics-on-jayas-birthday-says-deepa.art
-
- 2 replies
- 810 views
-
-
குற்றவாளி ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்க முடியாது.. படங்களை அரசு அலுவலகங்களில் வைக்க முடியாது!! on: பெப்ரவரி 15, 2017 சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்ட நிலையில், அரசு நிதியில் அவருக்கு நினைவிடம் அமைக்க முடியாது என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் குற்றவாளிதான் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதேநேரம், ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டதால், அவருக்கான சிறை தண்டனை மட்டும் விலக்கிக்கொள்ளப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதம் வசூலிக்கப்பட வேண்டும். இதற்காக அவரது சொத்துக்களை விற்று அபராதத் தொகையை அரசு வசூலிக்க வேண்டும் என்று நீதி…
-
- 2 replies
- 433 views
-
-
நாம் தமிழர் நிர்வாகிக்கு சிங்கப்பூர் அரசு வாழ்நாள் தடை.. திருப்பி அனுப்பப்பட்ட 400 பேர்- என்ன காரணம்? சென்னை: சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. இந்தியாவை சேர்ந்த பலர் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி வருகிறார்கள். அதிலும் சிங்கப்பூர், மலேசியாவில் தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள். தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த தமிழர்களின் முதல் தேர்வாக இருக்கும் வெளிநாடு சிங்கப்பூர் அல்லது மலேசியாதான். தமிழர்கள் பலர் சிங்கப்பூரில் அமைச்சர்களாக உள்ளனர். கலாச்சார ரீதியாகவும் மொழி ரீதியாகவும் சிங்கப்பூர் - தமிழ்நாடு நெருங்கிய தொடர்புடையது. கட…
-
- 2 replies
- 652 views
-
-
இந்தப் படத்தில் உள்ளதே இரண்டே இரண்டு சொற்கள்தான்..இரண்டு சொற்களுமே கொலை செய்யப்பட்டுள்ளன..இந்தாள் செந்தமிழ் மாநாடு நடத்துவது தமிழை வளர்ப்பதற்கா அல்லது அதைச் சாட்டித் தான் கொள்ளையடிப்பதற்கா??..இவரெல்லாம் செந்தமிழ் மாநாடு நடத்தவில்லை என்று யார் அழுதது??..'' சூரியணே'' என்பதைப் பார்த்து சூரியனுக்குக் கோபம் வந்தால் இவர் கதி என்ன?? எழுதியவருக்கே இவரை ''ஓய்வறியா சூரியனே'' என்று எழுத மனம் இடம் கொடுக்காமல் '' ஓய்வரியா சூரியணே '' என எழுதிவிட்டார் போல.. https://www.facebook.com/pongowrie
-
- 2 replies
- 741 views
-
-
2018-ஆம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி: புதுக்கோட்டையில் கோலாகல தொடக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSUNDAR புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டின் (2018) முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (செவ்வாய்க்கிழமை)கோலாகலமாக தொடங்கியுள்ளது. கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சியில் நடைபெறும் போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடக்கி…
-
- 2 replies
- 699 views
-
-
-
- 2 replies
- 723 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,சுசீலா சிங் பதவி,பிபிசி செய்தியாளர் 1 ஜூலை 2023 கணவன் தன் சம்பாத்தியத்தில் வாங்கும் சொத்துகளில் அவரது மனைவிக்கும் சம உரிமை உண்டு என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கருத்து தெரிவித்துள்ளது. துபாயில் பணிபுரிந்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ந்துள்ள வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது. துபாயில் இருந்து தான் சம்பாதித்து அனுப்பிய பணத்தில் தன் மனைவி ஐந்து விதமான சொத்துகளை வாங்கி உள்ளதாகவும், அந்த சொத்துகளுக்கு முழு உரிமை கொண்டாடுவது தொடர்பாக அந்த நபர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு…
-
- 2 replies
- 620 views
- 1 follower
-
-
in அ.தி.மு.க, இதர கட்சிகள், இந்திய தரகு முதலாளிகள், ஈழம், ஊழல் - முறைகேடுகள் by வினவு, October 25, 2013 மன்னார்குடி மாபியாவின் காசில் தமிழர் வரலாற்றில் ஒரு திருப்புமுனையையே உருவாக்க முடியும் என்றால், மணல் மாபியாவின் பணத்தில் சீமானால் இனவுணர்வைக் கூட ஊட்ட முடியாதா என்ன? “வீழ்ந்துவிடாத வீரம்; மண்டியிடாத மானம்” என்று எதுகை மோனையுடன் பஞ்ச் டயலாக் பேசி முஷ்டியை முறுக்குகிறார் சீமான். கருணாநிதிக்கு எதிராக காது ஜவ்வு கிழிய கத்தும் சீமான், ஜெயலலிதா பெயரைச் சொன்னதும், மிஸ்ஸுக்குப் பயப்படும் பள்ளிக்கூட சிறுவன் மாதிரி பம்முகிறார். ஜெயலலிதா மட்டுமல்ல… இந்தப் பட்டியலில் பலர் உண்டு. சமீபத்திய உதாரணம், தன் திருமணத்தின்போது மனைவி சகிதமாக சசிகலாவின் கணவர் நடராஜன் காலில் விழுந்தா…
-
- 2 replies
- 5.7k views
-