Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்! கல்கி பகவானின் மகன் கிருஷ்ணன் அதிகாரிகளின் விசாரணை பிடியில் வசமாக சிக்கி உள்ளார். கல்கி ஆசிரமத்தில் ரூ. 33 கோடி பறிமுதல் நேற்று செய்யப்பட்ட நிலையில், 2 வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை ஆசிரம நிறுவனங்களில் தொடர்ந்து நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் நெகமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார்தான் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் ஆரம்பத்தில் எல்ஐஏசி ஏஜெண்டாக இருந்தவர். இதற்கு பிறகுதான் சாமியாராக மாறி, கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தார். தன் பெயரையும் கல்கி பகவான் என்றும் சூட்டிக் கொண்டார்.இந்த ஆசிரமத்தி…

  2. R சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) விதிகளின்படி, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருப்பவரை தன்னிச்சையாக யாராலும் நீக்க முடியாது; பாமகவின் பொதுக் குழுதான் 'தலைவர்' பதவியில் இருந்து ஒருவரை நீக்க முடியும்; நியமிக்க முடியும்; ஆகையால் அன்புமணி ராமதாஸை, பாமக தலைவர் பதவியில் இருந்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நீக்கியது செல்லாது என்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள். Also Read மேலும் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக தாமே பதவி வகிப்பேன்; 2026 சட்டசபை தேர்தலுக்காகவே இந்த முடிவு என்று கூறிய ராமதாஸ், அன்புமணியை நீக்கிவிட்டதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் வெளியில் பகிரங்கமாக கூறிவிடவும் முடியாது என்றார். Chennai-Bengaluru Expressway Extend ஆகப்போகுது! | Oneindi…

  3. தொகுதிப்பங்கீடு: கறார் காட்டும் கருணாநிதி... கையைப் பிசையும் காங்கிரஸ்! சட்டமன்றத் தேர்தலை கோஷ்டிப்பூசல் இல்லாமல் வழிநடத்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒருபக்கம் திணறிக்கொண்டிருக்க, சீட் ஒதுக்கீட்டில் தி.மு.க தலைமை காட்டும் 'திடீர்' கறார் அணுகுமுறையால் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது அக்கட்சி. தேர்தல் சீட் பங்கீடு தொடர்பாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று காலை கோபாலபுரத்திற்கு வருகை தந்தனர் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும், முகுல் வாஸ்னிக்கும். கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் அவரை வரவேற்றனர். ஆரம்பக்கட்ட விசாரிப்புகளுக்குப் பிறகு, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு எழுந்தது. கறார் …

  4. பாத்ரூம் ஓட்டை வழியாக.. மாணவிகளை வீடியோ எடுத்த உதவி பேராசிரியர்.. சென்னை ஐஐடியில் கருமம்! பாத்ரூம் பைப் ஓட்டை வழியாக மாணவிகளை படம் பிடித்துள்ளர் உதவி பேராசிரியர்.. இந்தியாவிலேயே சிறந்த பல்கலை. என பெயர் வாங்கும் சென்னை ஐஐடியில்தான் இந்த கொடுமை நடந்துள்ளது! கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவி அவர்.. பிஎச்டி படித்து வருகிறார்... விண்வெளி பொறியியல் துறை தொடர்பான பயிற்சிக்காக சென்னை ஐஐடி-யில் சேர்ந்துள்ளார். இதே துறையில் சுபம் பேனர்ஜீ என்பவர் திட்ட அலுவலராக வேலை பார்க்கிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மதியம் தனது டிபார்ட்மென்ட் அருகே உள்ள பாத்ரூமுக்கு சென்றார் மாணவி.பிறகு யதேச்சையாக அங்கிருந்த சுவற்றை பார்த்தார்.. அப்போதுதான் அதில் சின்ன ஓட்டை இருப்ப…

  5. 'அடுத்த பிரசாரம் எங்கய்யா?' - ஸ்டாலினை கலாய்த்த கருணாநிதி! போட்டியிட்ட 13 தேர்தல்களிலும் வென்றவர் என்ற பெருமைக்குரியவர் திமுக தலைவர் கருணாநிதி. அந்த வகையில் அத்தனை தேர்தல்களிலும் பம்பரமாய் சுழன்று, பிரசார களத்தை சூடாக்கியவர் அவர். வயது, உடல்நிலை காரணமாக கடந்த 2 தேர்தல்களில் தனது பிரசார பணியில் கொஞ்சம் சுணக்கம் காட்டினார் அவர். அந்த இரு தேர்தல்களிலும் இது தனது கடைசி தேர்தலாக இருக்கலாம் என்று 'அரசியல்' செய்தாலும், உடல்நிலையை பொறுத்தவரை அதுதான் உண்மையான நிலவரமாக இருந்தது. ஆனால் ஆச்சர்யம், அந்த தேர்தல்களையெல்லாம் கடந்து இப்போது 2016 தேர்தலில், முன்னெப்போதையும் விட உற்சாகமாக பிரசாரம் மேற்கொண்டுவருகிறார் கருணாநிதி. வயது, உடல் நிலையை மீறி இந்த முறை அவரை உற்சாகமாக…

  6. தி.மலை: வந்தவாசி அருகே மழையில் நனைந்து 2,500 நெல் மூட்டைகள் சேதமாகியுள்ளன. ஆயல்வாடி, மலையூர் கிராமங்களில் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த 2,500 நெல் மூட்டைகள் சேதமாகியுள்ளன. 144 தடையால் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் வெட்டவெளியில் வைக்கப்பட்டுள்ளன. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=577955

  7. காசி, ராமேஸ்வரம் புனித யாத்திரை என்பது பெரும்பாலான இந்துக்களுக்கு வாழ்நாள் கனவு. கங்கை நதியிலும், ராமேஸ்வரம் தீர்த்தத்திலும் புனித நீராடி பாவங்கள் நீங்கி புண்ணியம் சேர்க்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.கங்கை நீராடல் பலருக்கு கனவாகவே முடிந்து போவதால் எல்லோருக்கும் கங்கை நீர் கிடைக்க வேண்டும் என்பதற்காக கங்கை நீரை பாட்டில்களில் அடைத்து விற்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.தபால் அலுவலகங்களில் விற்பனைக்கு வந்துள்ள கங்கைநீர் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வீட்டருகிலேயே கங்கை நீர் கிடைப்பது ‘வரப்பிரசாதம்‘ என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் கங்கைநீர் அசுத்தமானது. அதை தபால் நிலையங்களில் விற்…

  8. ஓபிசி இட ஒதுக்கீட்டிற்கு தடை இல்லை... மத்திய அரசு சட்டம் இயற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவு தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. …

  9. சசிகலா புஷ்பாவை இன்று கைது செய்ய போலீஸ் தீவிரம் தனது ஆதரவாளர்களுடன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக வந்த சசிகலா புஷ்பா | கோப்புப் படம்: எஸ்.ஜேம்ஸ் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, அவரது கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா, தாயார் கவுரி ஆகியோர் மீது இவர்களது வீட்டில் பணி புரிந்த பானுமதி, அவரது சகோதரி ஜான்சிராணி ஆகியோர் பாலியல் தொந்தரவு புகார் தெரிவித்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற போலி வக்காலத்து நமுனா தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதாகவும், இதற்காக சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் (ஜூடிசியல்) கோ.புதூர் போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்றும் அதன்பேரில் போலீஸார…

  10. மக்கள் ஏன் ஓட்டுக்கு பணம் வாங்குகிறார்கள் .? அரே வெள்ளைய தேவா முக்கியமான கேள்வி இது ..? சமீபத்தில் தேர்தல் நடக்க இருக்கும் தஞ்சாவூர் அரவகுறிச்சியில் .இன்றே புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக பிடிக்கபட்டதாக செய்திகள் வருகின்றன .. ஆரம்பிக்கவே இல்லை அதற்குள்ள அலபறை !! அவனவன் பேங்கு முன்னால் லைனில் நிக்கறான் .. இவனுங்களுக்கு மட்டும் எப்படி ..? எப்படி இருந்தாலும் ஆட்டைய போட போகிறார்கள் நாம முன்கூட்டிய வாங்கி வச்சி கொள்ளுவம் என்ற் மனநிலை.. புண்ணியம் சேர வழி .. இந்த திருட்டு பயல்கள் இயற்றிய சட்டத்தின் படி இன்கம் ரேக்ஸ் குடுத்தால் அது உரியவர்களுக்கு சேர்ந்ததா ? என்பது மிகபெரிய கேள்விகுறி .. கேட்டால் எங்களின்ட காசில் ரோடு போடுறாஙக்ளாம் .. உண்மையிலே கிந்தியாவ…

  11. கோவையில் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த போதும் மாணவர் போராட்டம் இன்றும் தீவிரமாக நடைபெற்றது. ஆங்காங்கே சாலை மறியல் முற்றுகை என பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்ட பள்ளி,கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தனித்தமிழ் ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி கோவையில் இன்றும் மாணவர் போராட்டம் பல இடங்களில் நடைபெற்றது.கோவை சட்ட கல்லூரி மாணவர்கள் 6வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராஜபக்‌ஷே படத்தை எரித்த மாணவிகள் அவர்களுக்கு ஆதரவாக சட்ட கல்லூரி மாணவிகள் ராஜபக்சேவின் உருவ படத்தை செருப்பால் அடித்தும், விளக்குமாறால் அடித்தும் தீ வைத்து எரித்தனர்.அப்போது தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக கேர…

    • 1 reply
    • 1.1k views
  12. கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடி வரும், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பாஸ்போர்ட் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் உதயகுமார் மீது பல்வேறு வழக்குகள் பதிவானதை தொடர்ந்து, அவரது பாஸ்போர்ட், சில மாதங்களுக்கு முன், முடக்கி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர், ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். `சரியான காரணங்கள் இன்றி பாஸ்போர்ட்டை முடக்கி வைக்கக்கூடாது' என ஐகோர்ட் உத்தரவிட்டதால், பாஸ்போர்ட்டை அவரிடம் திரும்ப ஒப்படைத்தனர். அவர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக, கைது வாரண்ட் உள்ளதாக, பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு, நெல்லை எஸ்.பி., தெரிவித்துள்ளார். இதையடுத்து `உங்கள் பா…

    • 0 replies
    • 331 views
  13. தயாளு அம்மாளுக்கு அல்ஜீமர் மறதி நோய்..: சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல். டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு அல்ஜீமர் எனும் மறதி நோய் உள்ளது. அவருக்கு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாது. அவர் சாதாரண நிலையில் இல்லை. அவரால் சரியாக பேசவோ செயல்படவோ முடியாது.. திடீரென எதிரில் இருப்பவரை தாக்கிவிடும் நிலையில் உள்ளார். அவரது அன்றாட வாழ்க்கையே பிறரது உதவியால் நடைபெற்று வருகிறது என்று அவரது வழக்கறிஞர் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் கலைஞர் டிவியின் இயக்குநராக உள்ள தயாளு அம்மாளை சிபிஐ சாட்சிகள் பட்டியலில் சேர்த்திருந்தது. இதற்கான அவர் ஆஜராக வேண்டும் எனவும் சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆன…

  14. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய நிதியமைச்சகம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக உயர்த்தியது. இதனால் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்தது. நடப்பு கணக்கு பற்றாக்குறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதால் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற இந்திய வங்கிகள் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, தங்கம் இறக்குமதி சீரற்ற முறையில் உள்ளது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். தங்கத்தின் மீதான ஆர்வத்தை குறைப்பதற்கு வங்கிகள் முக்கிய பங்காற்ற வேண்டும். அனைத்து வங்…

  15. மீண்டும் கூவத்தூரா? மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பா? மீண்டும் ஒரு கூவத்தூரா? மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பா ? டிசம்பர் 5, 2016க்கு பிறகு தொடங்கிய அரசியல் நிலையற்ற சூழல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிமுகவுக்குள் அதிகாரப் போட்டியும், குழப்பும் வரும் போதெல்லாம் உடனே எழுப்பபடும் கேள்வி இந்த ஆட்சி நீடிக்குமா? ஆளுநர் ஆட்சியை கலைப்பாரா என்பது தான்? மிக சொற்பமான இடங்களிலேயே பெரும்பான்மையை பெற்றுள்ள அஇஅதிமுகவின் ஆட்சி நீடிப்பதற்கு 117 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. பன்னீர் செல்வம் பிரிந்து சென்ற பிறகு சட்டமன்றத்தில் நடைபெற்ற ந…

  16. கோடநாடு காவலாளி, கார் ஓட்டுநர் மரணத்தை தொடர்ந்து ஜெயலலிதாவின் சமையல்காரரை கொலை செய்ய முயற்சி: வெட்டி விட்டு தப்பிய 5 பேர் கும்பலுக்கு வலை ஜெயலலிதா | கோப்புப் படம். ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மரணம், கோடநாடு காவலாளி கொலையை தொடர்ந்து, ஜெய லலிதாவின் சமையல்காரரையும் கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா காவலாளி கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கொலை, கொள்ளை யில் ஈடுபட்டதாக கூறப்படும் ஜெய லலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஜெயலலிதாவின் சமையல் காரராக இருந்தவரை கொலை செய்யும் நோக்கில் தலையில் அரிவாளால் வெட்டியு…

  17. விருதுநகர்: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்பது யூகம் மட்டுமே என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 'மத்திய காங்., கூட்டணி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து பேசுகிறோம். அப்போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிறந்த மக்கள் நலத்திட்டங்களை பாராட்டியும் பேசுகிறேன். அதற்காக தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி சேரப்போவதாக கூறப்படுவது வெறும் யூகம் தான். கூட்டணி மற்றும் லோக்சபா தேர்தலில் நான் உட்பட கட்சி வேட்பாளர்கள், எந்தெந்த தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து தக்க நேரத்தில் உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்றார். http://tamil.oneindia.in/news/2013/…

  18. பாரதியாரின் நினைவு நாள் இனி ‘மகாகவி நாள்’: தமிழக முதல்வர் அறிவிப்பு September 11, 2021 மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 100-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகம் கொண்டு திகழ்ந்தவர் பாரதி. தம் எழுத்துகள் மூலமாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். பெண் விடுதலை, தீண்டாமை ஒழிப்பு என புரட்சிகரமான பாடல்களை எழுதினார். அவர் மறைந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று பாரதியாரின் 100-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதியின் பெருமையைப் போற்றும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக, முதல்வர…

  19. மதுரை:பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சசிகலாவை சந்தித்த நான்கு அமைச்சர்களை, தகுதி இழப்பு செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர்களுக்கு, 'நோட் டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அத்துடன், சசிகலாவை அமைச்சர்கள் சந்தித்ததை தடுக்காத, முதல்வர் பழனிசாமி பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்துார் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த வர் தாமரைக்கனி. அ.தி.மு.க.,வில் போட்டியிட, 'சீட்' ஒதுக்காததால், தி.மு.க.,வில் இணைந்தார்; கடைசி வரை, தி.மு.க.,வில் இருந்தார். இவரது மகன் ஆணழகன், பன்னீர்செல்வம் அணியில் உள்ளார். ஆட்சேபமில்லை உயர் நீதிமன்ற மதுரை கி…

  20. ரஜினி Vs கமல் -ஜெயிக்கப்போவது யார் ? | Socio Talk | சில நாட்களாக கமல் அரசியலுக்கு வரப்போகிறார், ரஜினி கமலுக்கு வரப்போகிறார் என பேச்சுக்கள் நாம் கேட்டுக்கொண்டு இருக்கிறோம் ஆனால் இருவரும் அரசியலில் குதித்தால் வெற்றி யாருக்கு? பி.ஜே.பியுடன் சேர மறுக்கும் கமல், அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கும் ரஜினி. இருவரில் யார் வந்தால் நன்றாக இருக்கும்? மக்கள் யாரை விரும்புகிறார்கள்? மேலும் பல கேள்விகளும். விடைகளும்.

  21. இதற்கு மேலும் பேசினால்..; கருணாநிதிக்கு வைகோ எச்சரிக்கை! கூட்டணி என்பதற்காக எல்லாவற்றுக்கும் உடன்பட்டு போக மாட்டோம். எங்கே உடன்பட வேண்டுமோ அங்கே மட்டும் உடன்படுவோம் என்றார் மதிமுக பொதுச்செயலர் வைகோ. பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் டி.ஆர். பச்சமுத்துவை ஆதரித்து வைகோ சனிக்கிழமை பெரம்பலூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: நடக்க விருக்கும் மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோடி தமிழக வெற்றியின் அவசியமின்றியே பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பார். ஆனால் 39 தொகுதிகளிலும் நாம் வென்றால்தான் நமக்கான நீதி கிடைக்கும். முல்லைப் பெரியாறு, காவிரி பிரச்சினை, இலங்கையுடனான மீனவர் பிரச்சினை என பல்வேறு …

  22. கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கண்ணகி முருகேசன். கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்ணகியின் தந்தை உள்ளிட்ட பத்து பேருக்கான ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் அருகே நடந்த இந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 24ஆம் தேதியன்று கடலூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் ஒருவருக்கு தூக்க…

  23. மத்திய அமைச்சர்கள் சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும், அமைச்சர்களுக்கான நடத்தை விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அதன்படி, அமைச்சர்கள் தங்களது சொத்து விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும், மேலும் அமைச்சர்கள் யாரும் தங்களது உறவினர்களை அரசு சார்ந்த பொறுப்புக்களுக்கு நியமிக்கக் கூடாது என்றும் அந்த நடத்தை விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்களது அசையும் சொத்து, அசையா சொத்து, தொழில் விபரம், பங்குகளின் விவரம், பணம் கையிருப்பு விவரம், நகைகள் கையிருப்பு விவரம் இவற்றைத் தெரிவிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவுப் பிறப்பித்துள்ளார். http://4tamilmedia.com/n…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.