Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஈழத்தமிழருக்கு ஆதரவாக தமிழகம் முழுவதிலும் சட்டக் கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், ஈழத்தமிழர் படுகொலையில் இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென வலியுறுத்தி திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் 10 பேர் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இதற்கிடையே திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே இன்று மதியம் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்த சட்டக்கல்லூரி மாணவர்கள் 8 பேரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் கே.கே.நகர் சபரி மில்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக…

  2. அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்! சல்லடைப்போட்டு தேடும் நிபுணர்கள் சென்னை கிரீம்ஸ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் ஒவ்வாரு அறையாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையால் ஊழியர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. உடல் நலக்குறைவால் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ஆயிரம் விளக்கு கிரீஸ்சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நாளில் இருந்தே ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்திகள் அவ்வப்போது எழுந்தது. இதனால், மருத்துவமனை வளாகத்தில் குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் ஆவேசமும், பதற்றம் நிறைந்து காணப்பட்டது. இதனிடையே…

  3. ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை: துவங்கியது புதிய சர்ச்சை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த தகவல்களை தர, மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. கவர்னர் அலுவலகமோ, அரசின் பொதுத்துறை பதில் அளிக்க அறிவுறுத்திஉள்ளது. ஜெயலலிதாவின் மறைவில், மர்மம் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் வரை பிரச்னை சென்றுள்ளது. இந்நிலையில், ஜெ.,க்கு அளித்த சிகிச்சை தொடர்பாக, நீலகிரி மாவட்டம், தும்மனட்டி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ராஜ்குமார் என்பவர், அப்பல்லோ மருத்துவ மனையிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒன்பது கேள்விகள் கேட்டிருந்தார்.இந்தக் கேள்விகளுக்கு, அப்பல்லோ …

  4. சதமடித்த விவசாயிகளின் மரணம்- என்ன செய்யப் போகிறது அரசு #StandWithFarmers சென்னை: தமிழகத்தில் பருவ மழை பொய்துப்போனது. காவிரியில் தண்ணீர் வராத காரணத்தால் பயிர்கள் கருகிவிட்டன. வாடிய பயிர்களைக் கண்டு மனம் நொத்த விவசாயிகள் பலர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர். சமூக வலைத்தளங்களில் எதெதுக்கோ ஹேஸ்டேக் போட்டு டிரெண்ட் செய்யும் இளைய தலைமுறையினர், நெட்டிசன்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரி #StandWithFarmers என்ற ஹேஸ்டேக் உடன் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விவசாயிகளை பாதுகாக்கக் கோரி டுவிட்டரில் பதிவிடப்பட்டு வரும் #StandWithFarmers என்ற ஹேஸ்டேக்கானது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் விவசாயிக்கு ஆதரவான …

  5. சசிகலாவுக்கு நான் பயப்பட மாட்டேன்: தீபா ''சசிகலாவை பார்த்து, நான் பயப்படவில்லை,'' என, தீபா தெரிவித்தார். சென்னையில், நேற்று தீபா அளித்த பேட்டி: * ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா? மருத்துவமனையில், ஜெயலலிதா சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தபோது, என் சகோதரர் தீபக், 25 நாட்கள் உடன் இருந்துள்ளார். எனவே, சந்தேகமெல்லாம் இல்லை. * புதுக் கட்சி துவங்க உள்ளீர்களா? ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று, என் அரசியல் பயணத்தை வெளியிட ஆசைப்படுகிறேன். * போலீஸ் பாதுகாப்பு கேட்டீர்களா? கேட்கவில்லை; அதற்கான அவசியம் ஏற்படவில்லை. எனக்கு மக்கள் பாதுகாப்பாக உள்ளனர்; தொண்டர்கள் அரணாக உள்ளனர். * ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை, சசிகலா காலி செய்ய வேண்…

  6. தமிழ்நாட்டு விவசாயத்திற்கு எதிராக நடக்கும் மிகப்பெரிய சதி மற்றும் ஆபத்து..

    • 0 replies
    • 215 views
  7. ஓ.பன்னீர் செல்வம் உத்தமரா? ‘மிஸ்டர்’ பவ்யத்தின் மறுபக்கம்! - அத்தியாயம் 1 ஜெயலலிதாவிடம் ‘மிஸ்டர்’ விசுவாசம்.... சசிகலாவிடம் ‘மிஸ்டர்’ நம்பிக்கை... அமைச்சரவை சகாக்களிடம் ‘மிஸ்டர்’ பவ்யம்... அதிகாரிகள் மட்டத்தில் ‘மிஸ்டர்’ ஓ.பி.எஸ்... தமிழக மக்களிடம் ‘மிஸ்டர்’ பொம்மை... ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது ‘மிஸ்டர்’ மிக்சர்... பன்னீர் செல்வத்தின் கடந்த காலம் பெற்றுத்தந்த அடுக்கடுக்கான பட்டங்கள் இவை. ஏறத்தாழ 17 ஆண்டுகளாக, இந்தப் பட்டங்களை விரும்பியும் விரும்பாமலும் சுமந்து திரிந்தார் பன்னீர் செல்வம். ஆனால், 40 நிமிட தியானம்... வெறும் நாற்பதே நிமிட தியானம்; 20 நிமிடப் பேட்டி... வெறும் இருபதே நிமிடப் பேட்டியில் 17 ஆண்டு காலமாக தான் மீது வலுக்கட்டாயமாக சுமத்தப்ப…

  8. அதிமுக பொதுச் செயலாளர் விவகாரம்: மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தகவல் ஓ. பன்னீர்செலவ்வம்(இடது), வி.கே.சசிகலா( வலது). | கோப்புப் படம். அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனு அளித்தனர். இந்தப் புகாருக்கு பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதில் அனுப்பினார். …

  9. ‘மாவட்டச் செயலாளர்களுக்கு டி.டி.வி.தினகரன் திடீர் உத்தரவு!’ - ‘ஸ்டாம்ப்’ பேப்பர்களுடன் அலையும் சசிகலா அணி #VikatanExclusive சசிகலா அணியில் உள்ள மாவட்டச் செயலாளர்களுக்கு, டி.டி.வி.தினகரன் தரப்பிலிருந்து திடீரென ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க, அனைத்து நிர்வாகிகளிடமும் உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்து பெற்று கட்சித்தலைமையிடம் ஏப்ரல் 17க்குள் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அதிகார மோதலால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக அ.தி.மு.க. பிரிந்து செயல்பட்டுவருகின்றது.. சசிகலா தரப்பு அணியினர் ஆட்சியைப் பிடித்தாலும், அடுத்தட…

  10. தமிழ் மக்களுக்காக... தி.மு.கவுடன் இணைந்து பணியாற்றுவோம் – ராகுல் காந்தி தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.கவுடன் இணைந்த பணியாற்றுவோம் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி. தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க தி.மு.கவுடன் இணைந்து பணியாற்றுவோம்’ எனப் பதிவிட்டுள்ளார். இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக டெல்லி சென்றுள்ள மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடி, மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை …

  11. வேலூர்: ராஜிவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு அவர் கோரும் மருத்துவ ஆவணங்களை 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளுக்கு மாநில தலைமை தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். ராஜிவ் வழக்கில் தூக்கு கொட்டடியில் இருப்பவர் பேரறிவாளன். இவரது தூக்கை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும் தங்களது கருணை மனுவை காலதாமதமாக ஜனாதிபதி நிராகரித்ததால் தூக்கை ரத்து செய்யக் கோரி பேரறிவாளவன் உள்ளிட்ட மூவரும் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த நிலையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில தகவல்களை கோரி மாநில தகவல் ஆணையத்துக்கு பேரறிவாளன் கடிதம் அனுப்பியிருந்தார். வீடியோ கா…

  12. ராஜீவ் கொலை வழக்கு: 25 வருட சோகம்! மனம் நொந்த தாயின் கண்ணீர்! vikatan tv

  13. ‘சிறையில் டி.டி.வி.தினகரனைச் சந்தித்த எம்.நடராஜன்’ - முக்கிய வாக்குறுதியால் கலக்கத்தில் முதல்வர் #VikatanExclusive திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரனை சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, இருவரும் முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வட்டாரம் தீவிர ஆலோசனையில் இருப்பதாகத் தகவல் படபடக்கிறது. சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஓரம்கட்ட வேண்டும் என்ற முடிவோடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புதிய அணியை உருவாக்கியுள்ளார். அந்த அணியின் குறிக்கோளுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு அணிகளும் ஒன்றிணைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட முடிவு செய்…

  14. லைகா நிறுவனம் குறித்து பொது இடங்களில் பேச வேல்முருகனுக்குத் தடை! இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனம் சார்பில் புதிய வீடுகளை வழங்கும் நிகழ்ச்சி, ஏப்ரல் மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க இருந்தார். அப்போது, 'இலங்கை அதிபர் மைத்திரி பாலா சிறிசேனாவைச் சந்தித்து, தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு சுமூகமான தீர்வுகாண வேண்டுமென்று வேண்டுகோள் வைக்க எண்ணியிருந்தேன்' என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதனிடையே, 'ரஜினிகாந்த் இலங்கை செல்லக்கூடாது' என்று சீமான், வேல்முருகன் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, ரஜினிகாந்த் தனது இலங்கைப் பயணத்தை ரத்…

  15. லண்டன் வருகின்ற கோத்தபாய இராஜபக்சேவைக் கைது செய்ய வேண்டும்: வைகோ அறிக்கை! AdminOctober 29, 2021 இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த கொடியவர்கள் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் இலங்கைப் படைத்தலைவர்கள் கமால் குணரட்ன, ஜகத் ஜெயசூரியா, சிசிர மெண்டிஸ் மற்றும் பல அதிகாரிகளைக் கைது செய்து, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள, ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 36 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றபோது, அந்தக் கருத்தை வலியுறுத்தினேன்; இந்திய நாடாளுமன்றத்திலும் பேசி இருக்கின்றேன். 2009 ஆம்…

  16. “இனி கேப்டன்...”- கண்ணீர் விட்ட பிரேமலதா: தேமுதிகவுக்கு புது தலைமை! மின்னம்பலம்2021-12-12 தேமுதிக நிறுவனரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்தின் உடல் நலம் எப்படியிருக்கிறது என்பதை மாவட்டச் செயலாளர்களிடம் உள்ளது உள்ளபடி அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கண்ணீரோடு தெரிவிக்க, மாவட்டச் செயலாளர்கள் அதைக் கேட்டு கண்ணீர் வடித்திருக்கிறார்கள். தேமுதிக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கோயம்பேட்டிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. விஜயகாந்துக்கு சமீப ஆண்டுகளாகவே உடல் நிலை சரியில்லை. அவரால் சரிவர பேச முடியவில்லை. நடக்க முடியவில்லை. அரசியல் ரீதியாக சுறுசுறுப்பாக செய…

  17. முதலில் ராஜ்நாத் சிங் அடுத்து ஜனாதிபதி... வித்யாசாகர் ராவின் டெல்லி மூவ்! டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்துள்ளார். இதைத்தொடர்ந்து ஜனாதிபதியை அவர் சந்திக்க உள்ளார். தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகள் இணைந்தபோதும், அதிகாரத்துக்கான சண்டைகள் ஓயவில்லை. கடந்த மாதம் ஆளுநரைச் சந்தித்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கடிதம் அளித்தனர். மேலும், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று, அவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனிட…

  18. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்! - களமிறங்கும் உள்ளூர்க்காரர் மருது கணேஷ் சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் இந்த இடைத்தேர்தல் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னர் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டதாக வந்த புகாரைத் தொடர்ந்து, இடைத்தேர்தலை ரத்துசெய்வதாகக் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏழு மாதங்கள் முடிந்த நிலையில், டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலைய…

  19. துக்ளக் ஆசிரியர் சோ திடீர் சுகவீனம்... ஏன்..? சென்னை: துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமீப காலமாக திடீர் திடீரென முக்கியஸ்தர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. 2ஜி வழக்கில் மே 26ம் தேதி அதாவது நாளை கோர்ட்டில் ஆஜராகவேண்டிய நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கும், அவரது மகள் கனிமொழிக்கும் அடுத்தடுத்து சுகவீனம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நாளை மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்பார் என்று கருதப்பட்ட துக்ளக் ஆசிரியரும், பிரபல அரசியல் விமர்சகரும், மோடி மற்றும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவருமான சோ ராமசாமி திடீர…

  20. பெங்களூரு சிறையில் சசிகலா மவுன விரதம்: டிடிவி தினகரன் தகவல்! பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா மவுன விரதத்தில் இருப்பதாக டிடிவி தினகரன் தகவல் தெரிவித்துள்ளார். சமீபத்தில் முடிந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற பின்னர் டிடிவி தினகரன், வியாழன் அன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவினை சந்திக்கச் சென்றார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: சிறையில் உள்ள சசிகலா மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தில் இருந்து மவுன விரதத்தில் இருக்கிறார். அடுத்து செ…

  21. கலைச்செல்வி: 'லித்தியம் பேட்டரிகளுடன் 25 ஆண்டுகள்' - சி.எஸ்.ஐ.ஆர். தலைவரான விஞ்ஞானியின் உத்வேகப் பயணம் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் சிஎஸ்ஐஆர் என்றழைக்கப்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் தலைமை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா முழுவதும் 4500 விஞ்ஞானிகள் பணியாற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்கு இவர் தலைமை வகிப்பார் என்பதும் இந்த மையத்திற்கு தலைமை தாங்கும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமை இயக்குநராக பொறுப்பேற்றுள்ள கலைச்செல்வியுடன் பிபிசி தமிழ் பேசியது. கேள்வி: நீங்கள் செய்த முதல் ப்ராஜெக்ட் என்ன …

  22. 2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருது தமிழிசை சவுந்தரராஜனுக்கு 2017-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் அரசியல் தலைவர் விருதை பாரதிய ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் இன்று வழங்கியுள்ளது. இன்றைதினம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்தின் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு சிறப்பாக அரசியல் மற்றும் பொதுநலச் சேவைகள் பணியாற்றிதாக தெரிவித்தே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2018/64307/ தமிழிசை செளந்தரராஜனுக்கு பொதுநல சேவைக்கான விருது 2017…

  23. மாற்றுத்திறனாளியை நடுவழியில் இறக்கி விட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம் - என்ன நடந்தது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை பேருந்து நடத்துநரும் ஓட்டுநரும் நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற விவகாரத்தில் அந்த இரு பேருந்து ஊழியர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேகட்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் ,வாணி ஸ்ரீ தம்பதி. ஆட்டோ ஓட்டுநரான கோபாலகிருஷ்ணனுக்கு மூளை வளர்ச்சி குறைபாடுடைய ஹரி பிரசாத் என்ற மகன் நடக்க முடியாத நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் மூவரும் கிருஷ்ணகிரி …

  24. தயாளு அம்மாள், கனிமொழி, ஆ.ராசா | கோப்புப் படம் 2ஜி விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை மீதான விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையால் குற்றம் சாட்டப்பட்ட 19 பேர் மீதும், சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக பணபரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120-பி-ன் படி குற்றம்சாட்டப்பட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.