Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலினே தகுதியானவர்: மவுனம் கலைத்த கருணாநிதி. சென்னை: நான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டாலும் கூட மு.க.ஸ்டாலின்தான் கட்சித்தலைவர் பதவிக்கு தகுதியானவர். இந்த வெளிப்படையான உண்மை மக்கள் ஒவ்வொருவருக்கும் தெரியும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து பிரபல ஆங்கில நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்த கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நடத்தி வரும் 'நமக்கு நாமே' ரோடு-ஷோ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. மக்கள் அவருக்கு ஏகோபித்த அன்பும், ஆதரவும் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நாளும் நமக்கு நாமே பயணம் முடிந்ததும் ஸ்டாலின் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசுவார். ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன நடந்தது என்பதை என்னிடம் முழு விபரமாக கூறுவார…

  2. இந்தியாவில் நடந்தது முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியிலும் வாக்கு வங்கியை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி பெருமளவு அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய 8.9 வீத வாக்குகளை பெற்று தமிழகத்தின் தேசிய கட்சிகளில் ஒன்றான நாம் தமிழர் கட்சி தன்னை நிலை நிறுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சி தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும் தமிழனை தமிழன் ஆழ வேண்டும் என கொள்கைகளை முன்வைத்து தனது தீவிர பிரச்சாரத்தை சீமான் மேற்கொண்டு வருகின்றார். சீமானின் ஆக்ரோஷமான பிரச்சாரங்கள், எழுச்சிமிகு உரைகள் இளைஞர்கள் மத்தியில் பெரும் புரட்சியை ஏற்படுத்த…

  3. மக்களவைத் தேர்தலில் மோடி அலையை கடந்தமுறை அதிமுக தடுத்து நிறுத்தியதுபோல் இம்முறை திமுக தடுத்து நிறுத்தியுள்ளது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அலை இந்தியா முழுவதும் வீசியது. மோடி அலையால் வெல்வோம் என மதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்டோர் மெகா கூட்டணி அமைத்தனர். மறுபுறம் திமுக கூட்டணி தனியாகவும், அதிமுக தனியாகவும் இயங்கியது. அந்தத் தேர்தலில் மோடி அலை இங்கு ஒன்றும் செய்யாது, மோடி அல்ல இந்த லேடி என ஜெயலலிதா கர்ஜித்தார். சொன்னதைச் செய்தும் காட்டினார். இந்தியாவெங்கும் வீசிய மோடி அலை தமிழகத்தில் எழும்பவே இல்லை. அதிமுக 37 தொகுதிகளை வென்றது. பாஜக கூட்டணிக்கு 2 தொகுதிகள் கிடைத்தன. இம்முறையும் அதேபோன்று மெகா கூட்டணி அதைவிட வலுவாக அமைந்தது. அதிமுக, பாமக, தேமுதிக என வலுவான…

    • 3 replies
    • 1.2k views
  4. ரஜினிகாந்த் பின்வாங்கியதற்கான உண்மையான காரணம் என்ன? எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியொன்றை ஆரம்பிக்கவிருந்த நடிகர் ரஜினிகாந்த் தன எண்ணத்தைத் திடீரென ஒத்திப்போட்டதற்கு அவரது உடல்நிலை மட்டும் காரணமில்லை எனத் தற்போது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ‘அண்ணாத்தே’ படப்படிப்பின்போது திடீரெனச் சுகவீனமுற்றார் எனக்கூறி ரஜினி மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது இரத்த அழுத்தம் நிலையற்றதாக இருந்தமையே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. அதில் உண்மையிருந்தாலும், சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்குட்பட்டவர்களுக்கு இவ்வறிகுறி ஆச்சரியப்படும் ஒரு விடயமல்லவெனவும், இப்படியான பிரச்சினைகளை அறிந்திருந்தும் ரஜினி தனது…

    • 4 replies
    • 1.2k views
  5. எங்களுக்கு எதிராக ஓர் ஆதாரத்தைக் கொடுக்க முடியுமா என அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் சவால் விடுத்திருக்கிறார்கள். P Chidambaram ( Twitter ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய அமைப்புகளின் விசாரணையை ப.சிதம்பரம் எதிர்கொண்டு வருகிறார். சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க தொடர்ச்சியாக 12 மாதங்களுக்கு மேலாக முன்ஜாமீன் பெற்றுவந்த சிதம்பரத்துக்குக் கடந்த 20-ம் தேதி முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து, டெல்லி ஜோர்பார்க் இல்லத்தின் சுவர் ஏறிக் குதித்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவருக்கான 5 நாள்கள் காவல் முடிவடைந்த நிலையில், மேலு…

  6. எடப்பாடி Vs பன்னீர்... தர்மயுத்தம் 2.0 ஆகஸ்ட் 21-ம் தேதி அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில், இணைந்த கைகளாக பழனிசாமியும் பன்னீரும் காட்சி கொடுத்தனர். அக்டோபர் 14-ம் தேதி புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் இருவரும் முகத்தைத் திருப்பிக்கொண்டு மேடையில் உட்கார்ந்திருந்தனர். ‘இணைந்து செயல்படுவோம் என்று சொன்னவர்களிடையே இடைவெளி அப்பட்டமாகத் தெரிகிறது’ என்று செய்திகள் கசிய... என்ன நடக்கிறது என்று அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். இணைப்புக்கு முன் எழுந்த நெருக்கடி! ‘அணிகள் இணையவேண்டும்’ என பன்னீருக்கு டெல்லி மேலிடத்திலிருந்து அழுத்தம் வந்தாலும், அதைத் தாண்டி அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடியும் ஒரு காரணம் என்கிறார்கள். தர்மயுத்தம் ஆரம்பித்தபி…

  7. மெரீனாவில் ஈழப்போர் நினைவேந்தல் நிகழ்வுக்கு போலீஸ் தடை ஈழப் போர் தொடர்பாக மே 17 இயக்கம் அறிவித்திருந்த நினைவேந்தல் நிகழ்வை சென்னை மெரீனா கடற்கரையில் நடத்துவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. மே 17 இயக்கம், ஞாயிற்றுக் கிழமையன்று மாலையில் மெரீனா கடற்கரையில் கண்ணகி சிலைக்கு அருகில் தமிழீழப் படுகொலைக்கான நினைவேந்தல் என்ற பெயரில் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த நிலையில் சனிக்கிழமையன்று காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 2003ஆம் ஆண்டு முதல் சென்னை மெரீனா கடற்கரையில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லை என்பதைக் காவல்துறை சுட்டிக்காட்டியுள…

  8. “மிஸ் தமிழ்நாடு” அழகி போட்டியில் மகுடம் சூடிய கூலித் தொழிலாளி மகள்! தமிழகத்தின் சென்னையை அடுத்த செங்கல்பட்டை சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மகள் 20 வயதான ரட்சயா மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். பொதுவாக மாடலிங் என்பதே பொருளாதரத்தில் முன்னேற்றம் அடைந்தவர்கள், நடிகைகளால் மட்டுமே செய்ய முடியும் என்ற ஒரு மாய பிம்பம் உள்ளது. இவற்றை எல்லாம் மாற்றி மாடலிங் என்பது ஒரு பொதுவான துறை அதில் யார் வேண்டுமானாலும் சாதித்து காட்டலாம் என நிரூபித்துள்ளார் 20 வயதான ரட்சயா. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை சேர்ந்த கட்டடத் தொழிலாளி மனோகர். இவரது மகள் 20 வயதான ரட்சயா.…

    • 11 replies
    • 1.2k views
  9. ‘தமிழகத்தில் இடைத்தேர்தல் அல்ல; பொதுத்தேர்தலே வரும்!’ - அமித் ஷா-வின் அடுத்த ஆபரேஷன் நுங்கம்பாக்கம் ஆயக்கர் பவனில், வருமான வரித்துறை அதிகாரிகளின் கேள்விகளை எதிர்கொண்டுவருகிறார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ‘கடந்த 100 நாட்களாக நடந்து வந்த வருமான வரித்துறை ஆய்வுகளின் அடிப்படையில் விஜயபாஸ்கர் வளைக்கப்பட்டிருக்கிறார். ஜூன் மாதம் வரையில் அமைச்சர்களுக்கு நிம்மதியான உறக்கம் வரப்போவதில்லை’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். தமிழகச் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டை அடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். ‘நான் நிரபராதி. என் மீது எந்தக் குற்றமும் இல்லை’ என அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர்கள்…

  10. பரப்பன அக்ரஹாரா சிறை முதல் அப்போலோ அறை வரை...! - ஜெயலலிதாவின் இரண்டு வருட டைம்லைன் #2YearsOfBangaloreVerdict தமிழகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்த வழக்கில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான் தீர்ப்பு வந்தது. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட அந்த வழக்கில், அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வந்து 731 நாட்கள் ஆகிவிட்டன. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையும் செய்யப்பட்டு, அதன்பின் ஒரு பொதுத் தேர்தலில் மீண்டும் வென்று முதல்வராகவும் பொறுப்பேற்றுவிட்டார். எல்லாம் அவருக்கு நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது…

  11. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம் ‘சிங்கம்’ இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் நடிகர் சூர்யா மிகவும் ஸ்ட்ரிக் ஆபீஸராகவும் ரவுடிகளைப் பிடிப்பதில் அதிரடியும் காட்டி வருவார். அவரின் சிங்கம் கேரக்டர் போலவே நிஜத்திலும் ஒரு போலீஸ் உள்ளார். அண்ணாமலை என்ற அவரை அவரின் ரசிகர்கள் ‘சிங்கம் அண்ணாமலை’ என்றே அழைத்து வருகின்றனர். தமிழகத்தின் கரூரை சொந்த ஊராகக் கொண்ட அண்ணாமலை 2011-ம் ஆண்டு ஐ.பி.எஸ் முடித்தார். தற்போது கர்நாடக மாநிலத்தின் துணை ஆணையராகப் பணியாற்றி வருகிறார். அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து ரவுடிகள், சமூக விரோதிகளும் இவரது பெயரைக் கேட்டாலே அலறுவார்களாம். இதனால் கர்நாடகாவில் அண்ணாமலைக்கு எனத் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், அவர் தற்போது தன் ஐ…

    • 0 replies
    • 1.2k views
  12. மிஸ்டர் கழுகு: சந்தோஷ ஓ.பி.எஸ்... சரண்டர் எடப்பாடி... சமாதான மோடி! உள்ளே வந்த கழுகார், ‘‘பிரதமர் மோடியின் விழாக்களுக்குப் போய்விட்டு வந்தேன்’’ என்றபடி பேச ஆரம்பித்தார். அமைதியாகக் கேட்டோம். ‘‘பெண்களுக்கு மானிய விலை டூவீலர் வழங்குவது மாநில அரசின் விழா. ‘இதில் பிரதமர் கலந்துகொண்டது சரியா?’ எனச் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். சென்னையில் மெட்ரோ ரயில் தொடக்க விழாவுக்குக்கூட பிரதமர் மோடி வரவில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தமிழக அரசின் விழாக்களுக்கு பிரதமர் மோடி வந்ததில்லை. ஜெயலலிதாவுக்குப் பிறகும் அதே நிலைதான் தொடர்ந்தது. தமிழக அரசு சார்பில் பலமுறை அழைத்தும், அவர் வரவில்லை. இந்த முறை பிரதமரே வருவதாகச் சொன்ன பிறகுதான், விழா ஏற்ப…

  13. சென்னை: இனப்படுகொலை நிகழ்த்திய இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்குமா? ஆதரிக்காதா? என்ற கேள்விகள் ஒருபக்கம்.. இலங்கை நட்பு நாடு என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரின் விளக்கம் இன்னொரு பக்கம்.. உச்ச கட்டமாக தமிழக மாணவர்கள் போராட்டம்.. இந்நிலையில் 22-ந் தேதி நல்ல செய்தி வரும் என்று நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் ப.சிதம்பரத்தின் 'சைலன்ட்' ரோல் 'லாபி' ரோல் எப்போதுமே உண்டு. இலங்கை இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் சுப. வீரபாண்டியன், கனிமொழி வழியே ப.சிதம்பரத்தின் மூலமாக மத்திய அரசுடன் பேச்சு நடத்தியதாகவும் சொல்லப்படுவது உண்டு. தற்போது மத்திய அரசுக்கு எதிராக தமிழகத்தின் குக்கி…

  14. சசிகலாவின் பரோல் ஓவர்! இன்று என்ன திட்டம்? சசிகலா பரோலில் வந்து நான்கு நாள்கள் ஆகின்றன! அவரின் அண்ணி இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் சசிகலா தற்காலிகமாகத் தங்கியிருக்கிறார். "இந்த நான்கு நாள்களில், உறவினர்களின் செல்போனில் எடப்பாடி கோஷ்டி அமைச்சர்கள் ஆறு பேருடன் தொடர்புகொண்டு சசிகலா பேசினார். அதே பாணியில் 25 எம்.எல்.ஏ-க்களுடனும் தகவல் பரிமாற்றம் நடந்தது" என்றெல்லாம் டி.டி.வி. தினகரன் கோஷ்டியினர், மீடியாக்களிடம் தகவல்களைச் சொல்லி வருகிறார்கள். இன்று ஒருநாள்தான் பாக்கி... சசிகலா பரோல் முடிந்து பெங்களூரு சிறைச்சாலைக்குப் போகப்போகிறார்...! அவர் கிளம்பும்போது, அவரைச் சந்திக்க, சில அமைச்சர்கள் ரெடியாகிறார்கள் என்று உளவுத்துறையினர்…

  15. இப்படி... நடக்கும், என்று எதிர்பார்க்கவில்லை 😢

    • 11 replies
    • 1.2k views
  16. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது புதல்வர் பாலசந்திரனை இலங்கை ராணுவத்தினர் சுட்டுக்கொண்றமை தொடர்பில் காணொளி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே, அந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் கூடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கூடலூர் பழைய நகரத்தில் அண்மையில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றிய அவர், வழக்கத்தில் தீவிரவாதிகள் எதிரியிடம் பிடிபடுவதை தவிர்ப்பதற்காக சயனைட் குப்பிகளை உட்கொள்வது அல்லது ஒருவரையொருவர் சுட்டுக்கொல்;வது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவர். எனினும், சிறுவனை கொல்வது என்பது சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும் அழகிரி குறிப்பிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையும் தமிழ்ம மக்களின் க…

  17. பிப்.13-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும் சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருக்கிறது. வி.கே.சசிகலா தலைமையில் ஓரணியாகவும், ஓபிஎஸ் தலைமையில் ஓரணியாகவும் அதிமுகவினர் பிரிந்து கிடக்கின்றனர். ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்த, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக உட்கட்சி குழப்பம் உக்கிரமடைந்து ஒரு வாரம் ஆன நிலையில், இன்றும் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்துவருகின்றன. அவற்றின் தொகுப்பு: (அவ்வப்போது இந்தப் பக்கத்தை ரெஃப்ரஷ் செய்க) 6.55 pm: மறைந்த தமிழக முன்னாள் முத‌ல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர…

  18. சென்னை கிழக்குகடற்கரை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் நடிகர் நாசரின் மகன் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளார். மகாபலிபுரம் மணவை கிராமம் அருகே சென்று கொண்டிருந்த நாசரின் மகன் உள்ளிட்ட சிலர் பயணித்த கார் எதிரே வந்த பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் நாசர் மகன் பைசில் நாசர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து காஞ்சிபுரம் பொலிஸார் கூறுகையில்: “விபத்து காலை 8 மணியளவில் நடந்துள்ளது. கார் திடீரென தாறுமாறாக ஓடி எதிரே வந்த பாரவூர்தியுடன் மோதியுள்ளது. அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. 3 பேர் சம்பவ…

  19. தமிழகத்தில் கன்னியாகுமரி தவிர மற்ற 38 தொகுதிகளில் டெபாசிட் தொகையை காங்கிரஸ் பறிகொடுத்துள்ளது. தமிழகத்தில் சுமார் 4.4 சதவீத வாக்குகள் மட்டுமே காங்கிரஸýக்கு கிடைத்துள்ளது. நடந்து முடிந்த 16-ஆவது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது. ஒரு வேட்பாளர், தான் செலுத்திய டெபாசிட் தொகையை திரும்பப் பெற வேண்டுமானால் மொத்தம் பதிவான வாக்குகளில் 6-இல் 1 பங்குக்கு அதிகமாக பெற வேண்டும். கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் எச். வசந்தகுமார் சுமார் 2.50 லட்சம் வாக்குகளைப் பெற்றார். இவரைத் தவிர காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட 38 பேரும் டெபாசிட் தொகையை இழந்தனர். எஸ்.எஸ். ராமசுப்பு (திருநெல்வேலி), சாருபாலா தொண்டைமான் (…

  20. வேலை நீக்கம் மற்றும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காக 02.01.15 வெள்ளிக்கிழமை காலை முதல் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள தென் கொரிய நிறுவனமான NVH India Auto Parts Pvt Ltd -ல் தொழிலாளர்கள் ULF சங்கம் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராடும் தொழிலாளர்களை தென் கொரிய அதிகாரிகள் தாக்கும் காட்சிகளையும், மிரட்டும் காட்சிகளையும் தொழிலாளர்கள் சிலர் தங்கள் செல்போனில் பதிவு செய்து பேஸ்புக்கில் பதிவு செய்தனர். வீடியோவில், தொழிலாளி பூபாலன் என்பவரின் காலை பிடித்து தென்கொரிய அதிகாரி ஒருவரால் இழுத்து வந்து மிரட்டப்படுகிறார். தாக்கப்பட்ட தொழிலாளி பூபாலன் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் …

  21. இருமல் மருந்து குடித்து 9 குழந்தைகள் உயிரிழப்பு.. தமிழகம் உள்பட 7 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு சென்னை: இருமல் மருந்து குடித்த 9 குழந்தைகள் ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து உயிரிழந்தன. இதன் காரணமாக ஆரம்ப கட்ட விசாரணைக்கு பிறகு, சர்ச்சைக்குரிய இருமல் மருந்தான coldbest- pc மருந்தை தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் திருப்பி அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தில் விஷத்தன்மை இருந்ததாகவும், இதுபற்றி ஆரம்பத்திலேயே கண்டறியப்படாதது ஏன் என்பதும் பெரும் கேள்விகளை எழுப்பி உள்ளது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் டிஜிட்டல் விஷன் நிறுவனம் Coldbest - PC Syrup என்கிற பெயரில் இருமல் மருந்தை தயாரித்து வருகிறது. இந்த மருந்து இமாச்சல பிரதேசத்தில் தயாரிக்கப்பட்ட போதிலும் சென…

    • 1 reply
    • 1.2k views
  22. “ஜெயலலிதாவுடன் சேர்ந்ததும் தவறு... விஜயகாந்தை முன்மொழிந்ததும் தவறு!” எஸ்.முத்துகிருஷ்ணன், அ.சையது அபுதாஹிர் - படங்கள்: பா.காளிமுத்து சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு வைகோவுடன் நடத்தும் முதல் சந்திப்பு இது. செம உற்சாகத்தில் இருக்கிறார் வைகோ. காரணம், எட்டு ஆண்டுகளாக நடந்த அரசு விரோத வழக்கில் இருந்து நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருக்கிறது. கறுப்பு சால்வையைச் சரிசெய்துகொண்டே கேள்விகளை எதிர்கொள்ளத் தயாரானார். ‘‘எட்டு ஆண்டுகளாக நடந்த வழக்கில் இருந்து விடுதலையாகி இருப்பதை எப்படி உணர்கிறீர்கள்?” ‘‘பாலகங்காதர திலகர், வ.உ.சி., சுப்பிரமணிய சிவா போன்ற புகழ்வாய்ந்த தலைவர்கள் மீது, ஆங்கிலேயர் ஆட்சியின்போது எந்தப் பிரிவுகளில் வழக்கு போட்டார்களோ, அதே ப…

  23. அடுத்த அதிரடி.. தூத்துக்குடியில் கனிமொழி வீட்டில் வருமான வரி சோதனை.. பரபரப்பு தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீடு, மற்றும் அவரது அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி லோக்சபா தொகுதியில், திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தராஜன் களமிறங்கியுள்ளார்.நாளை மறுநாள், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா தீவிரமாக நடைபெற்று வருவதாக புகார்கள் எழுந்தன. நேற்று இரவு முதலே ஓட்டுக்கு 300 ரூபாய் அளவில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் தூத்துக்குடி, குறிஞ்சி நக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.