Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தமிழகத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தமிழ் மொழியில் படித்தவர்கள் உள்ளிட்ட 3 பிரிவினருக்கு அரச வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்தவர்களுக்கும் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கும் தமிழ்நாடு அரச பாடசாலைகளில் தமிழ் மொழியில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் ஆளுநர் அறிக்கையிலும், தொடர்ந்து மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையிலும் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போரில் உடல் தகுதியை இழந்த…

  2. பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்ததாகக் கூறி கோவையில் போராட்டம்: ஆசிரியர் கைதுக்குப் பிறகும் தொடர்கிறது 55 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, போராட்டம் நடத்தும் மாணவியின் உறவினர்கள் மற்றும் மாணவர்கள். கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி, உடலை வாங்காமல் அவரது பெற்றோரும், மற்றவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 'ஆசிரியர் மீது புகார் அளித்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. பள்ளி முதல்வரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம்' என்கிறார்கள் போராட்டம் நடத்தும் உறவினர்கள். கோவை மாவட்டம், …

  3. மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தங்கையை மீட்ட அக்காவுக்கு குவியும் பாராட்டு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UGC தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை அதன் அக்காவே காப்பாற்றிய சம்பவம் பலருக்கும் நிம்மதியைக் கொடுத்துள்ளதோடு, அந்த அக்காவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து இறக்கும் சோகம் அவ்வப்போது நடக்கிறது. விழுந்த குழந்தைகளை மீட்பதற்கு அரசு நிர்வாகம் மேற்கொள்ளும் பல மணி நேர பெரு முயற்சிகள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டுவோர் அதனை உரிய முறையில் மூடாமல் செல்வதற்கு தண்டனை விதிக்கவே…

  4. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமா வலுப்பெற்று இன்று மாலை கரையைக் கடக்கவிருப்பதால், பலத்த காற்று வீசிவருகிறது. இதனால், சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் பலத்த காற்று வீசிவருவதால் சென்னை விமான நிலையத்துக்கு வர வேண்டிய விமானங்களின் வருகை இன்று மாலை 6 மணி வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 1.15 முதல் மாலை 6 மணி வரை விமானங்களின் வருகையை நிறுத்திவைத்துள்ளதாகவும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத…

  5. வைகை அணையின் நீர் மட்டம் உயர்வு : வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு! தேனி மாவட்டம் வைகை அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதை அடுத்து மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வைகை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அணைக்கு வரும் உபரிநீரான ஆயிரம் கன அடி நீர் வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணையில் உள்ள 7 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் அனைத்தும் ஆறு வழியாக செல்வதால் பொதுமக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். https://athavannews.com/2021/1249037

  6. கலைஞருக்கு நினைவில்லம்: அரசாணை! மின்னம்பலம்2021-11-09 சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நினைவு இல்லம் கட்டுவதற்கான அரசாணை நேற்று (நவம்பர் 😎 பிறப்பிக்கப்பட்டுள்ளது.2018 ஆகஸ்டு 7 ஆம் தேதி கலைஞர் காலமானார். அப்போது அவரது இறுதி விருப்பமான தனது உடல் அண்ணா உடலின் அருகே புதைக்கப்பட வேண்டும் என்பதை வலிய்றுத்தி அப்போதைய திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து உருக்கமாக கோரிக்கை வைத்தார். ஆனால் எடப்பாடி மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுக்க மறுத்தார். பின் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு அதில் வென்று கலைஞர் உடல் மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்தப் பின்னணியில் தமிழ் வ…

  7. சென்னை வெள்ளம்: நிரம்பி வழியும் ஏரிகள் - 12ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பு - என்ன காரணம்? ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 8 நவம்பர் 2021, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சென்னையில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்து வருவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்குள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. வரும் 12ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், `காலநிலை மாறுபாடு காரணமாக ஆறு ஆண்டுகளுக்குள் அதீத கனமழையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில…

  8. முக்கிய அதிகாரிகள் மாற்றம்: அமைச்சர்களுடன் ஸ்டாலின் ஆடிய ஆடுபுலி ஆட்டம்! மின்னம்பலம்2021-11-08 தமிழ்நாடு அரசின் முக்கியமான 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நவம்பர் 6ஆம் தேதி மாற்றப்பட்டிருக்கிறார்கள். கடந்த மே மாதம் திமுக ஆட்சி அமைத்து மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். வழக்கமாகவே ஆட்சி மாறியதும் முக்கியமான அதிகாரிகள் மாற்றப்படுவதும் தொடர்கதைதான். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில மாதங்கள் வரை கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் திமுக அரசு தீவிரமாக இருந்ததன் காரணமாக வழக்கமான மாற்றல் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில்தான் ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கழித்து தமிழ்நாடு அரசின் முக்கியமான அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். …

  9. மழையால் தத்தளிக்கும் தமிழ்நாடு: மூழ்கிய பயிர்கள் முதல் கரை புரண்டோடும் வைகை வரை 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வைகை கனமழையால் தலைநகரம் சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதுமே பரவலாக தத்தளித்து வருகிறது. மதுரை வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து தரைப் பாலங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வருஷநாடு மற்றும் மூலவைகை ஆற்றுப் பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக வைகை ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 66.83 அடியாக உள்ளது. வைகை அணையில் இருந்து 569 …

  10. சென்னையில் கனமழை; 2015ஆம் ஆண்டு திரும்புகிறதா? படக்குறிப்பு, மழை வெள்ளம் தேங்கியதைப் பார்வையிடும் அமைச்சர் சேகர்பாபு. வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கன மழை பெய்துள்ளது. சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மாநிலத்தின் பல இடங்களில் தீவிரமாக மழைபெய்துவருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவில் துவங்கிய மழை இரவு முழுவதும் தொடர்ந்து பெய்தது. இதனால் சென்னை நகரின் சாலைகளிலும் தாழ்வான பகுதிகளிலும் மழ…

  11. தீபாவளி தினத்தன்று சென்னையில் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரிப்பு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ARUN SANKAR/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடித்ததால் காற்று மாசுபாடு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிட்டால், மாசுபாடு பன்மடங்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று எவ்வளவு மாசு ஏற்படுகிறது என்பது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டுவருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்ட புள்ளிவ…

  12. ``தமிழக முதலமைச்சர் தீபாவளிக்கு வாழ்த்து தெரிவிக்காதது கண்டனத்துக்குரியது. இதை நவீன தீண்டாமையாக பார்க்கிறேன்" என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ராமேஸ்வரம் நிகழ்ச்சி இந்தியாவிலிள்ள 12 ஜோதிர்லிங்க ஆலயங்களில் பாஜக நிர்வாகிகளால் உலக மக்கள் ஒற்றுமைக்காக இன்று சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அதற்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடைபெறும் பூஜையிலும், கேதர்நாத் ஆலயத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் சிறப்பு பூஜையின் காணொளி ஒளிபரப்பும் நிகழ்ச்சியிலும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் …

  13. ஆ விஜயானந்த் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தீபாவளி தினத்தன்று மாமல்லபுரத்தில் உள்ள நரிக்குறவர்கள் மற்றும் இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். "முப்பாட்டன் காலத்தில் கிடைக்காத உதவி எல்லாம் இப்ப கிடைச்சிருக்கு" எனக் கண்கலங்குகிறார், நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பெண்மணி அஸ்வினி. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்துள்ள பூஞ்சேரியில் நரிக்குறவர்கள், இருளர் சமூக மக்கள் என சுமார் 81 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம் ஊசி, பாசிமணி விற்பதுதான் இவர்களின் முழுநேர வேலை. இந்நிலையில், கடந்த அக்டோபர் 24ஆம் தேதி அங்குள்ள ஸ்ரீத…

  14. தமிழ்நாட்டுக்கு மூவேந்தர் கொடி: 'தி.மு.க அரசுக்கு நெருக்கடி உண்டாக்கும் திட்டம்' - சீமான் மீது வழக்கு ஏன்? ஆ விஜயானந்த் பிபிசி தமிழ் 27 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NAAMTAMILARKATCHIOFFL FACEBOOK PAGE நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. `தி.மு.க ஆட்சியை மத்திய அரசு கேள்வி கேட்க வேண்டும் என்பதை நோக்கமாக வைத்துச் சிலர் செயல்படுகிறார்கள். அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதற்காகவே வழக்கு பதியப்பட்டது' என்கிறது தி.மு.க. என்ன நடந்தது? என்னென்ன பிரிவுகளில் வழக்கு? சேலம் மாவட்டம், அம்மாபேட்டையில் …

  15. வானிலை அறிவிப்பு: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரம்; பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமுள்ள நீர்நிலைகள் நிரம்பிவருகின்றன. கன்னியாகுமரி கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியை அடையக்கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தெற்கு ஆந்திரா வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விட்டு…

  16. ‘‘உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடத்தில்கூட வெற்றிபெறவில்லையே?’’ ‘‘வெற்றிபெறவில்லை என்பதைவிட வெற்றிபெறவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வென்றவர்களுக்கும் எங்களுக்குமான வாக்கு வித்தியாசம் அதிகமில்லை. சில இடங்களில் நாங்கள் வெற்றிபெற்றும், ஆளும் தரப்பு வென்றதாக அறிவித்துக்கொண்டார்கள். இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை அதிகமாகப் பிடித்திருக்கிறோம்.’’ ‘‘முடிவுகளை மாற்றி அறிவித்தார்கள் எனில், தேர்தல் ஆணையத்தில் புகார் செய்திருக்கலாமே?’’ ‘‘காவல்துறை எங்கள் புகாரை எடுத்துக்கொள்வதே இல்லை. மாவட்ட ஆட்சியரும் சரி, மாநில தேர்தல் ஆணையமும் சரி, எங்களைக் கண்டுகொள்வதே இல்லை.’’ ‘‘ஏற…

  17. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகள்-மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் November 2, 2021 தமிழகம்:வேலூரில், 3510 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டும் திட்டத்தை வேலூரில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ள 106 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் திட்ட தொடக்க விழா மற்றும் வேலூரை அடுத்த மேல்மொணவூரில் வசிக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் இன்று ந…

  18. ரஜினிகாந்தை முதலமைச்சர் நேரில் சென்று விசாரித்தார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்தார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் திகதி மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் திடீரென அனுமதிக்கப்பட்டார். வழக்கமான சோதனைகளுக்காகவே அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக குடும்பத்தினர் ஊடகங்களிடம் தெரவித்தனர். எனினும் ரத்த குழாய் திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் மருத்துவமனையில் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியானது. இந்த நிலையில், தம…

  19. ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் – முதலமைச்சர் ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலதரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான…

  20. லண்டன் வருகின்ற கோத்தபாய இராஜபக்சேவைக் கைது செய்ய வேண்டும்: வைகோ அறிக்கை! AdminOctober 29, 2021 இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை செய்த கொடியவர்கள் மகிந்த ராஜபக்சே, கோத்தபாய ராஜபக்சே மற்றும் இலங்கைப் படைத்தலைவர்கள் கமால் குணரட்ன, ஜகத் ஜெயசூரியா, சிசிர மெண்டிஸ் மற்றும் பல அதிகாரிகளைக் கைது செய்து, உலக நீதிமன்றத்தின் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை, மறுமலர்ச்சி தி.மு.கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள, ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 36 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்றபோது, அந்தக் கருத்தை வலியுறுத்தினேன்; இந்திய நாடாளுமன்றத்திலும் பேசி இருக்கின்றேன். 2009 ஆம்…

  21. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படும் பெருநகரங்களில் ஒன்றாக தொடர்ந்து பேரிடரைச் சந்திக்கும் நகரமாக சென்னை அடையாளம் காணப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நிலை என்னவாகும்? கடந்த 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட தண்ணீர்த் தட்டுப்பாட்டை தமிழ்நாட்டில் யாரும் அவ்வளவு சீக்கரம் மறந்திருக்க முடியாது. அந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதுமே தண்ணீர்ப் பற்றாக்குறை இருந்தது என்றாலும் மாநிலத்தின் தலைநகரான சென்னை மிக மிக மோசமான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொண்டது. சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீரைக் கொண்டுவந்து நிலைமையைச் சமாளிக்க வேண்டியிருந்தது. கழிவுநீரைச் சுத்திகரித்துப் பயன்படுத்துதல், க…

  22. நன்மாறன் மரணம்: "என்கிட்ட 20 ரூபாய் தான் இருக்கு, வரலாமா?" ஆட்டோ ஓட்டுநரிடம் கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ 2 டிசம்பர் 2020 புதுப்பிக்கப்பட்டது 17 நிமிடங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, ஒற்றை செருப்புடன் வந்த முன்னாள் எம்எல்ஏ நன்மாறனை (பின் இருக்கையில் இருப்பவர்) தனது ஆட்டோவில் பயணியாக அழைத்துச்செல்லும் ஓட்டுநர் பாண்டியன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன் இன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமானார். மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நன்மாறன் வாழ்வில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அவர் மறைந்த இன்று மீண்டும் பகிரப்பட…

  23. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் திட்டத்துக்கு தி.மு.க அடிபணிகிறதா ? சர்ச்சையில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் ஆ. விஜயானந்த் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த முதலியார்குப்பத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'இல்லம் தேடி கல்வி' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் "இல்லம் தேடி கல்வி" என்ற பெயரில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. "தேசியக் கல்விக் கொள்கை தெரிவிப்பதை அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது" என தி.மு.க அரசை, த…

  24. தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் தலையிடுகிறாரா ஆளுநர் ஆர்.என். ரவி? - சர்ச்சையின் பின்னணி முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MKSTALIN FACEBOOK PAGE தமிழ்நாட்டின் ஆளுநரான ஆர்.என். ரவி மாநிலத்தில் செயல்படுத்தும் திட்டங்களை ஆய்வுசெய்ய ஏதுவாக தகவல்களைத் தொகுத்துவைக்கும்படி தலைமைச் செயலர் கூறிய விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், முதலமைச்சரின் ஒப்புதலுடனேயே இது நடக்கிறது என்கிறது தி.மு.க. தமிழ்நாடு அரசின் துறைகள் பற்றியும் அவை செயல்படுத்திவரும் நலத் திட்டங்கள் பற்றியும் ஆளுநர் அறிய விரும்புகிறா…

  25. இஸ்லாமியர் என்பதாலேயே ஷாருக் கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானை போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்த வழக்கில் அதிகார அத்துமீறலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் நடந்தேறி வருவது நாடெங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஒரு இஸ்லாமியர் என்பதாலேயே, அவரை குறிவைத்து அரசதிகாரம் காய்களை நகர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குரியது. ஆர்யன் கானை விடுவிக்க ரூ.25 கோடி வரை பேரம் பேசப்பட்டது என்று வர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.