அயலகச் செய்திகள்
இந்தியச் செய்திகள் | தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள்
அயலகச் செய்திகள் பகுதியில் இந்தியச் செய்திகள், தெற்காசிய/தென்கிழக்காசியச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இந்திய (தமிழகம் தவிர்ந்த), தெற்காசிய, தென்கிழக்காசிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
3313 topics in this forum
-
இந்திய விமானப்படை போர் விமானம் ராஜஸ்தானில் விபத்து: 2 விமானிகள் பலி 29 ஜூலை 2022, 01:42 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் நேற்று இரவு 9.10 மணியளவில் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள பார்மெர் பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது விபத்திற்குள்ளானது. அந்த விபத்தில், இரண்டு போர் விமானிகளும் மோசமான நிலையில் காயமடைந்தததால் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. நேற்றிரவு 10.51 மணிக்கு இந்திய விமானப்படை, விபத்தில் காயமடைந்த இரண்டு போர் விமானிகளும் உயிரிழந்ததாகத் தெரிவித்தது. ரஷ்ய ஆயுதங்களை இந்தியா சார்ந்த…
-
- 1 reply
- 268 views
- 1 follower
-
-
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா, ராகுல் அஞ்சலி! KaviMay 21, 2023 08:35AM ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர், முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜீவ் காந்தியின் 32ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (மே 21) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்துக்கு வந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மரியாதை செலுத்துவார் என்று முதலில் காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் ராகுல் காந்தியால் தமிழகம் வர முடியவில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்தார். இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீ…
-
- 1 reply
- 395 views
-
-
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நீர்வழி தாக்குதல் நடத்த நடவடிக்கை! இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நீர்வழி தாக்குதல் நடத்துவதற்கு தயாராகி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா,ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் நீர்வழி தாக்குதல் நடத்தப்போவதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. அந்தவகையில் ‘சமுந்தரி ஜிஹாத்’ எனப்படும் இத்தாக்குதலில் கடல் வழியாக பயங்கரவாதிகள் ஊடுறுவி, இந்தியாவின் முக்கிய துறைமுகங்களை தாக்குவதற்கு குறித்த இயக்கங்கள…
-
- 1 reply
- 933 views
-
-
அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு அடுத்த மாதம் அடிக்கல் - ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம் அயோத்தி, அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த அப்பீல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 9-ந்தேதி தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உத்தரவிட்டது. அத்துடன் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, தான்னிப்பூர்…
-
- 1 reply
- 400 views
-
-
கும்பமேளாவில், கலந்து கொண்டவர்களுக்கு... போலியான கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டமை கண்டுப்பிடிப்பு! கும்பமேளாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு போலியான கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கும்பமேளாவில் கலந்துகொண்டவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் முறைக்கேடுகள் இடம்பெற்றதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில், இது குறித்து விசாரணை நடத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது. குறித்த குழு மேற்கொண்ட விசாரணைகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு போலி கொரோனா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் ஒருவருக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய கொரோனா பரிசோதனை கருவி, ஏறக்குறைய 700 பேருக்கு மேல் பயன்படுத்தப்பட்டிருப்பத…
-
- 1 reply
- 650 views
-
-
பருவநிலை மாற்றம் : சிறிய தீவுகளுக்கு உதவ இந்தியா நடவடிக்கை! பருவநிலை மாற்றம் குறித்த தரவுகளை சிறிய தீவு நாடுகளுக்கு வழங்குவதற்கு இந்திய விண்வெளி ஆய்வு மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பருவநிலை மாற்றத்தால் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சிறிய தீவு நாடுகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தை கிளாஸ்கோவில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த திட்டத்தால் சிறிய தீவு நாடுகளுக்கு நிதியும், தொழில்நுட்பங்களும் எளிதில் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். அந்த நாடுகளில் உள்ள மக்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் இந்த திட்டம் பாதுகாக்கும். இந்த திட்டம் வெற்றி பெறுவதற்…
-
- 1 reply
- 233 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தர்ஹாப் அஸ்கர் பதவி, பிபிசி உருது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரும், முஸ்லிம் லீக் கட்சி தலைவருமான நவாஸ் ஷெரீப் நாடு திரும்பியுள்ளார். 2019-ல் மருத்துவச் சிகிச்சைக்காக லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப், 4 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்குத் திரும்பவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில், பாகிஸ்தானின் அரசியல் சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலை உட்பட பல விஷயங்கள் மாறிவிட்டன. கடந்த நான்கு வருடங்களில் அரசியல் கட்சிகளின் கதைகள் மட்டும் மாறாமல் அரசாங்கங்களும் மாறிக்கொண்டே இருக்கின்றன. சில நிறுவனங்கள் வலுப்பெற்றபோது, நம் கையில் எதுவும் இல…
-
- 1 reply
- 162 views
- 1 follower
-
-
அயோத்தி ராமர் கோயில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம் உள்ளிட்ட சிலைகள் கண்டெடுப்பு- அயோத்தி அறக்கட்டளை ஒரு சிவலிங்கம், சில உடைந்த சிலைகள் மற்றும் பிற கலைப்பொருட்கள் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான இடத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அயோத்தி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ராமர் கோயிலுக்காக அயோத்தியில் மிகப்பெரிய எந்திரங்களுடன் நிலத்தைச் சமப்படுத்தும் கட்டுமானப்பணிகள் மே 11ம் தேதி தொடங்கியுள்ளன. அப்போது 5 அடி சிவலிங்கம், 7 கருப்புத்தூண்கள், 6 செம்மணற்கல் தூண்கள், மற்றும் தெய்வங்கள், பெண் தெய்வங்களின் உடைந்த சிலைகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டதாக ராமர் கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அறக்கட்டளை கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் படங்கள், வீடியோக்…
-
- 1 reply
- 760 views
-
-
தனிஷ்க் தீபாவளி விளம்பரத்தால் மீண்டும் சர்ச்சை: இந்து கலாசாரத்தை எதிர்ப்பதாக குற்றச்சாட்டு பட மூலாதாரம், TWITTER இந்தியாவின் முன்னணி நகை விற்பனை நிறுவனங்களில் ஒன்றான தனிஷ்க் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியிட்ட விளம்பரம் ஒன்று சர்சையாகி அதனை நீக்கியதை தொடர்ந்து தற்போது மீண்டும் அந்நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரம் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இந்து மத கலாசாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு எதிராக இந்த விளம்பரம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தையும் தனிஷ்க் நீக்கியுள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான ஒரு புதிய விளம்பரத்தில், பெண்கள் தாங்கள் எப்படி தீபாவளியை கொண்டாட நினைக்கிறார…
-
- 1 reply
- 507 views
-
-
நிலக்கரி பற்றாக்குறை சிக்கலில் மின் உற்பத்தி: மீள்வதற்கு என்ன செய்யப்போகிறது இந்தியா? முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 50 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய மின் தொகுப்பு எதிர்கொள்ளும் தீவிர சிக்கல். இந்தியாவில் உள்ள சுமார் 135 அனல் மின் நிலையங்கள் நிலக்கரிப் பற்றாக்குறையால் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இந்த சவாலை எப்படி எதிர்கொள்ளப் போகிறது இந்தியா? இந்தியாவின் மின்சாரத் தேவையில் பெரும்பகுதி அனல் மின் நிலையங்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் ந…
-
- 1 reply
- 291 views
- 1 follower
-
-
அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் - துரை தயாநிதி அழகிரி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினத்தந்தி: அப்பா, சித்தப்பா இருவருமே திறமைசாலிகள் - துரை தயாநிதி அழகிரி "தி.மு.க.வின் உண்மையான அடித்தட்டு தொண்டர்கள் கோரிக்கை விடுத்த காரணத்தினால்தான் இந்த பேரணியை நடத்துவதாகவும், இதில…
-
- 1 reply
- 698 views
-
-
எல்லையில் போர் பதற்றம்.. இந்திய வான்வெளி ரொம்ப பிஸி.. ஆனால் பாக்.க்கு இன்னும் கிலி போகலை போல! இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலிலும் விமான போக்குவரத்தை இந்தியா தொடர்ந்து வருகிறது. ஆனால் பாகிஸ்தானோ நேற்றைய தினம் நிறுத்தப்பட்ட விமான போக்குவரத்தை இன்னும் தொடங்கவில்லை. புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமான படையினர் நேற்று முன் தினம் வான் வழித் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட பாகிஸ்தான், இந்தியா மீது தாக்குதல் நடத்தும் எண்ணத்துடன் போர் விமானங்களை எல்லை தாண்டி பறக்கவிட்டது.இதையடுத்து அந்த விமானங்களை இந்திய விமான படை சாதுர்யமாக துரத்தி விட்டது. மேலும் வான்வெளியில் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது. இதனால் பாதுகாப்பு கருதி இந்…
-
- 1 reply
- 691 views
-
-
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர் உயிரிழப்பு குஜராத் மாநிலம் சூரத்தில் சாலையோரம் தூங்கிக் கெண்டிருந்தவர்கள் மீது சரக்கு லொறி ஏறியதில் 13 பேர் உயிரிழந்ததுடன் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 6பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ராஜஸ்தானில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கரும்புகளை ஏற்றி வந்த டிராக்டருக்கு வழி விடும்போது லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி அருகில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஏறியுள்ளதாக பொல…
-
- 1 reply
- 436 views
-
-
பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன: உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தகவல் Published : 06 Mar 2019 14:37 IST Updated : 06 Mar 2019 14:40 IST பிடிஐ புதுடெல்லி படம்.| ஏ.எஃப்.பி. ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து களவாடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தவறவிடாதீர் அதிகாலை 3.30 மணிக்கு எத்தனை கொசுக்களைக் கொன்றேன் என்று எண்ண வேண்டுமா?-பாஜக அமைச்சர் கேள்வி “விசாரணையில் இருக்கும் ரஃபேல் ஒப்பந…
-
- 1 reply
- 401 views
- 1 follower
-
-
மலையாளத்தின் உன்னத எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு: கமல்ஹாசன் உருக்கம்! Kumaresan MDec 26, 2024 11:21AM மாரடைப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் நேற்று (டிசம்பர் 25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 91. தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் கூடலூரில் பிறந்தவர் எம்.டி. வாசுதேவன் நாயர். மலையாள இலக்கிய உலகில் மிகவும் பிரபலமானவர். மாடத்து தெக்கேகாட்டு வாசுதேவன் நாயர் என்கிற இயற்பெயரை கொண்ட அவர், கடந்த 1933-ஆம் ஆண்டு பிறந்தார். சிறு வயதிலிருந்தே எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட அவர், வேதியியலில் பட்டம் பெற்றார். The Newyork Herald Tribune நடத்திய போட்டியில் மலையாளத்தில் சிறந்த சிறுகதை எழுத்த…
-
- 1 reply
- 386 views
-
-
நாம் வாழ்ந்துகொண்டிருப்பது காந்தியின் தேசத்தில்தானா? மனித குலத்தின் உயர்வுக்காக உழைத்தவர்களின், அதற்காக உயிர்த் தியாகம் செய்தவர்களின் பிறந்த நாள், நினைவு நாள்களில் அவர்களை நினைவுகூர்வது வெறும் சடங்கல்ல. அது அவர்களின் பங்களிப்புக்காக ஒரு சமூகம் செலுத்தும் நன்றிக்கடன். எனினும், அந்தத் தலைவர்களின் பொருத்தப்பாட்டை என்றும் தக்கவைத்துக்கொள்வதன் வாயிலாகவே அந்த நன்றிக்கடன் உள்ளடக்கம் கொண்டதாக இருக்கும். இந்த காந்தி ஜெயந்தி ஒட்டுமொத்த உலகச் சமூகத்துக்கும் காந்தி எவ்வளவு தேவைப்படுகிறார் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. பாபர் மசூதி இடிப்புச் சம்பவத்தின்போது அங்கு இருந்த இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள், சம்பவத்தைத் திட்டமிட்டு நடத்தியதற்…
-
- 1 reply
- 389 views
-
-
ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு பயணம் மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். அதன்படி, எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் ரஷ்யாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். இதில் முக்கியமாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜெய் லவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் இருவரும் விவாதிக்கவுள்ளனர். ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்ப…
-
- 1 reply
- 276 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பலோச் விடுதலைப் படை இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது (பிரதிநிதித்துவப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத், ஜார்ஜ் ரைட் பதவி, பிபிசி செய்திகள், இஸ்லமாபாத் 27 நிமிடங்களுக்கு முன்னர் தென்மேற்கு பாகிஸ்தானில் ஆயுதமேந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வாகனங்களில் சென்று கொண்டிருந்த நபர்களை கட்டாயமாக வெளியேற்றி அவர்களின் அடையாள அட்டைகள் சோதனையிடப்பட்ட பிறகு அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் இரவு முழுவதும் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே அந்த பகுதியில் வக…
-
- 1 reply
- 254 views
- 1 follower
-
-
ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி எனக்கும் வேண்டாம்- மைத்ரேயன் டெல்லி: ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு செலுத்தப்படாத மவுன அஞ்சலி நான் இறந்த பிறகு எனக்கும் செலுத்த வேண்டாம் என மைத்ரேயன் கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2013-ஆம் ஆண்டு மைத்ரேயன், லட்சுமணன், ரத்தினவேல், அர்ஜூனன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி ராஜா, திமுக சார்பில் கனிமொழி ஆகியோர் அனுப்பப்பட்டனர்.இவர்களது பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனிடையே திமுக மாநிலங்களவை எம்பியாக இருந்த கனிமொழி இந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தூத்துக்குடி எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவராகவே மாநிலங்களவை எம்பி பதவியை ர…
-
- 1 reply
- 937 views
-
-
கண்ணூர்: கேரள மாநிலத்தில் இதய தானம் கொடுத்த நபரின் தாயாருக்கு இறுதி சடங்கு செய்து நெகிழ செய்துள்ளார் அசோக் எனும் நபர். தனது உடலின் இயக்கத்துக்கு உறுதுணை புரியும் உள்ளத்தின் பேச்சைக் கேட்டு அவர் இந்த செயலை செய்துள்ளார். கோழிக்கோடு பகுதியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளார் இளைஞரான விஷ்ணு. அவரது மருத்துவ சிகிச்சைக்கு உள்ளூர் மக்கள் திரண்டு வந்து உதவியுள்ளனர். இருந்தும் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதை கேட்டு விஷ்ணுவின் பெற்றோர் ஷாஜி மற்றும் ஷஜனா தம்பதியர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருந்தும் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்ப…
-
- 1 reply
- 235 views
-
-
கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அல்ல, இதுவெறும் சோதனை அளவில் தான் உள்ளது, இதுதொடர்பாக முடிவுகள் வரும்வரை யாரும் பிளாஸ்மா சிகிச்சை செய்ய வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கூட்டுமருந்து சிகிச்சை அளிக்கப்படு கிறது. இந்த சிகிச்சையில் மலேரியாமற்றும் மூட்டு வலி பிரச்சினை களுக்கு தீர்வு அளிக்கும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை இடம்பெறுகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்கள் திடீரென்று கடுமையான நுரையீரல் பாதிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். உயிருக்கு ஆபத்தான நேரத்தில் செயற்கை சுவாசக் கருவியான வென்டிலேட்டரும் பயனளிக்காததால், சிகிச்சை…
-
- 1 reply
- 345 views
-
-
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் 48 கி.மீ நீளமுள்ள ராமர் பாலத்தின் தோற்றம் குறித்த ஆய்வினை மேற்கொள்வதற்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ராமேஸ்வரத்திற்கும் தலை மன்னாருக்கும் இடையே ராமர் பாலம் அமைந்துள்ளது. 48 கிலோமீட்டர் நீளம் கொண்ட சுண்ணாம்பு கற்களால் ஆன இந்த பாலம், பல மர்மங்களை தன்னுள் உள்ளடக்கியது. ராமர் பாலம் எப்படி உருவானது என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன இலங்கை அரசன் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்கச் சென்றபோது கடலை கடந்து செல்வதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டது என்றும் ராமருக்காக வானர படையினர் அந்த பாலத்தை கட்டியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ராமர் பாலத்தை இந்துக்கள் பு…
-
- 1 reply
- 562 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனந்த் பிரகாஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கா, செளதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து 'இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை' பிரதமர் நரேந்திர மோதி சனிக்கிழமை புது டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்தியா முதல் அமெரிக்கா, ஐரோப்பா முதல் மத்திய கிழக்கு வரையிலான நாடுகளின் தலைவர்கள் இதை ஒரு வரலாற்று ஒப்பந்தம் என்று அழைக்கின்றனர். இது மத்திய கிழக்கில் செழிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். இரண்டு கண்டங்களின் துறைமுகங்களை…
-
- 1 reply
- 275 views
- 1 follower
-
-
கேரளா: ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்! சிந்து ஆர் ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று பெண்களுக்கு திருமணம் தன் ஐந்து பிள்ளைகளுக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்க விரும்பினார் கேரளாவைச் சேர்ந்த ரமாதேவி. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் போத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் - ரமாதேவி தம்பதிக்கு ஐந்து குழந்தைகள். ஐந்து குழந்தைகளும் ஒரே பிரசவத்தில், சில நிமிட இடைவெளியில் பிறந்தவர்கள். 1995-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ம் தேதி ஓர் ஆண் குழந்தை, நான்கு பெண் குழந்தைகள் என நிகழ்ந்த ரமாதேவியின் பிரசவம், கேரளாவில் கொண்டாடப்பட்டது. ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து குழந்தைகள் என கேரள மீடிய…
-
- 1 reply
- 549 views
-
-
ரஷ்யா - உக்ரைன் போர் : 'எங்கள் முதுகை உடைக்கிறது' - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் By VISHNU 30 SEP, 2022 | 01:47 PM ரஷ்யா-உக்ரைன் மோதலால் எண்ணெய் விலை உயர்வு குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளது. மேலும் இநத விலையேற்றம் 'எங்கள் முதுகை உடைக்கிறது' என்று வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்திய பிறகு அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கனுடன் ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய ஜெய்சங்கர், வளரும் நாடுகளில் தங்கள் எரிசக்தி தேவைகள் எவ்வாறு நிவர்த்தி செய்யப்படுகின்றன என்பதில் மிகவும் ஆழ்ந்த கவலை உள்ளது என்றார். உக்ரைன் போரைப் பற்றி பேசுகையில், இந்த மோத…
-
- 1 reply
- 272 views
- 1 follower
-