நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் பல நோய்களை கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள். . முடி கொட்டுதல், அதிக எடை, தைராய்டு, மூட்டு வலி, கண்பார்வை பிரச்சனைகள், மாறுபட்ட ஹார்மோன் பிரச்சனைகள், மைகிரேன், காய்ச்சல், தலைவலி, கான்சர், மற்றும் பல நோய்களை மக்கள் தங்களுக்கு தெரியாமலே மனதால் கவர்ந்து இழுத்து கொள்கிறார்கள். . நோய்கள் எல்லாமே உங்கள் எதிர்மறை சிந்தனையால் மட்டுமே உருவாகிறது . நமக்கு ஏற்ற தாழ்வான கண்ணோட்டம் இருப்பதையும், நம் நன்றியுணர்வுடன் இல்லாததையும் உணர்த்தவே நமது உடல்கூறு நோய்களை உருவாக்குகிறது . உங்களால் காய்ச்சல், ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது...நீங்கள் அப்படி நினைக்காதவரை. . அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களா…
-
- 0 replies
- 807 views
-
-
நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கொய்யா. கொய்யாக்கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது. கொய்யா கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. கொய்யாவில் பலவகைகள் உள்ளன. தற்போது விற்பனைக்கு வரும் பழங்களில் உள் சதைப்பகுதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் உள்ளன. ஒரு சில வகை கொய்யாவின் சதைப்பகுதி ரோஸ் நிறத்தில் காணப்படும். இவை அனைத்தின் மருத்துவப் பயனும் ஒன்றுதான். கொ…
-
- 18 replies
- 13.5k views
-
-
குடல் பகுதி. | பிரதிநிதித்துவ நோக்கத்திற்காக... நாம் உடல் பருமன் குறித்து அதிகம் கவலைப்படுகிறோம். இதனால் சதைபோடும் உணவுகளை எடுக்கக் கூடாது என்று நாம் உறுதியாக இருந்தாலும் தவிர்க்க முடியாமல் அவற்றை சாப்பிடுகிறோம் இது ஏன் என்று பலருக்கு வியப்பாகவே இருக்கும். இதற்கான காரணம் என்னவென்று அமெரிக்க ஆய்வு ஒன்று ஆராய்ந்துள்ளது. குடல் பாக்டீரியாக்களைக் கொண்டு உடல் பருமன் நோயைக் குணப்படுத்தலாம் என்’று சில ஆய்வுகள் தெரிவிக்கையில், இந்த ஆய்வு அதற்கு மாறான ஒரு முடிவைக் கண்டடைந்துள்ளது. அதாவது நம் குடலில் வாழும் பாக்டீரியா மூளையின் செயல்பாட்டை தனக்குச் சாதகமாகத் தூண்டி விடுகிறது என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இது குறித்து …
-
- 2 replies
- 598 views
-
-
ஸ்ட்ரெப்டோமைசின் என்ற ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளை அளவுக்கு மீறி எடுத்துக்கொண்ட, மற்றும் முறையற்று பயன்படுத்திய வகையில் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகளின் காது செவிடாகியுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனா மருத்துவக் கழகத்தைச் சேர்ந்த யாங் சினின் என்பவர் இது பற்றிக் கூறுகையில், "சீனாவில் மொத்தம் 18 லட்சம் குழந்தைகளுக்கு காது கேளாமை ஏற்பட்டுள்ளது. இதில் 60% ஸ்ட்ரெப்டோமைசினை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தியதால் விளைந்ததே" என்று கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சீனாவில் மட்டும் 2 லட்சம் முறையற்ற மருந்து உபயோகத்திற்காக பலியாகிவருகின்றனர். இதில் குறிப்பாக ஆன்ட்டிபயாட்டி மருந்துகளை தாறுமாறாக எடுத்துக் கொள்வோர் விகிதம் 40 விழுக்காட்டிற்கும் மேல் என்று கூறுகிற…
-
- 0 replies
- 527 views
-
-
ஆஸ்துமா - வெயில் காலமும் பனிகாலமும் கேள்வி- எனக்கு வயது 30. ஆஸ்துமா நோய் உள்ளது. மழை, பனி காலங்களைவிட , வெயில் காலங்களிலேயே ஆஸ்துமா அதிகமாக உள்ளது. இது எதனால் ?ஆர். குமார் கொழும்பு பதில்:- ஆஸ்த்மா என்பது சுவாசத் தொகுதியோடு சம்பந்தமான நோய். வுழமையாக நாங்கள் தொடர்ச்சியாக மூச்சை உள்ளெடுப்பதும் வெளிவிடுவதுமான செயற்பாட்டை எந்நேரமும் செய்து கொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் அதை உணர்வதில்லை. தன்னிச்சையாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஆஸ்த்மா நோயின் போது நாம் மூச்சை உள்ளெடுப்பதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் வெளிவிடுவது மிகவும் கடினமாக பிரயாசையுடன் கூடியதாக இருக்கும்.ஆஸ்த்மா பொதுவாக பரம்பரையாக வருவதுண்டு. அப்பா அம்மா சகோதரங்களுக்கு இருந்தால் வருவதற்கான …
-
- 0 replies
- 500 views
-
-
நீரிழிவு நோயும் நரம்புகள் பாதுகாப்பும் டாக்டர் ஜி. ஜான்சன் நீரிழிவு நோய் நரம்புகளையும் பெருமளவில் பாதிக்கிறது. சாதாரண தொடு உணர்ச்சியிலிருந்து, வலி, தசைகளின் அசைவு, உணவு ஜீரணமாகுதல், பாலியல் உணர்வு போன்ற பலவிதமான உடலின் செயல்பாடுகள் அனைத்தும் நரம்புகளால்தான் இயக்கப்படுகின்றன.நரம்புகள் பாதிக்கப்பட்டால் இவை அனைத்தும் செயலிழக்கின்றன. ஆனால் நல்ல வேளையாக நீரிழிவு நோய் உண்டாகி 10 முதல் 15 வருடங்கள் கழிந்தபின்புதான் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன.ஆதலால் இதைத் தடுக்க நிறையவே வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய் மூளையையும் முதுகுத் தண்டு நரம்பு மண்டலத்தையும் பாதிப்பது இல்லை.அதுவரை நாம் ஆறுதல் கொள்ளலாம். ஆனால் உடல் முழுதும் பின்னிப் பிணைந்துள்ள வலைத்தளம் போன்ற நரம்…
-
- 3 replies
- 3.3k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மணி நேரங்களுக்கு முன்னர் பிரேசில் நாட்டை சேர்ந்த ஓய்வூதியதாரர் ஜோவாவ் (João - அவரது உண்மையான பெயர் அல்ல) , 2018 -ஆம் ஆண்டில், தனது ஆணுறுப்பில் மரு போன்று ஏதோ இருப்பதை கவனித்தார். என்னவென்று புரியாமல் மருத்துவ உதவியை நாடினார். "எனது ஆணுறுப்பில் மரு போன்று உருவாகி இருப்பது என்ன என்பதைக் கண்டறிய நான் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்றேன். ஆனால் அனைத்து மருத்துவர்களும், அங்கு எனக்கு தடிமனான தோல் இருப்பதால் அப்படி இருக்கும், அல்லது சில மருந்துகளின் பக்க விளைவாக ஏற்பட்டிருக்கும் என சொன்னார்கள்," என்று 63 வயதான ஜோவாவ் நடந்ததை நினைவு கூர்ந்தார். மருந்துகள் உட்கொண்ட போதிலும் அந்த மருவின் வளர்ந்துகொண்டே இருந்தது. இது அவ…
-
- 0 replies
- 484 views
- 1 follower
-
-
நுண்ணுயிர் கொல்லிப்பாவனையும் அதன் தாக்கங்களும் இப்பகுதியில் நுண்ணுயிர் கொல்லிகளின் (Antibiotics) முறையற்ற/ கட்டுபாடற்ற பாவனையும் அவற்றினால் உண்டாகி இருக்கின்ற/ உண்டாக கூடிய சூழலியல் பாதிப்புக்கள் பற்றியும் சிறிது பார்ப்போம். நுண்ணூயிர் கொல்லிகள் பொதுவாக பக்ரீரியாக்களுக்கெதிராகவே பாவிக்கப்படுகிறன. பக்ரீரியாக்களின் பங்களிப்பு என்ன? பக்ரீரியாக்கள் (Bacteria) எமது சூழலில் நீக்கமற நிறைந்துள்ள கண்ணுக்கு தெரியாத நுண்ணூயிரிகளாகும். எமது தோலில், சமிபாட்டு தொகுதியில், காற்றில், மண்ணில், நீரில் என நாம் கைவைக்கும் அனைத்து பொருட்களிலும் நிறைதுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தீங்கற்றவை. தீங்கற்ற பக்ரீரியாக்கள் மனிதனின் உடலிலும், ஏனைய சூழல் தொகுதிகளிலும்…
-
- 0 replies
- 3.4k views
-
-
-
- 16 replies
- 2.2k views
- 1 follower
-
-
பிரவுன் ரைஸ் எனப்படும் சிவப்பு அரிசி நம் எல்லாருக்கும் பல வருடங்களாக வெள்ளை அரிசிதான் தெரியும். அதுதான் சமைக்க சுலபம். வெள்ளை வெளேரென்று மெத்தென்று பார்க்கவே அழகாக இருக்கும். சீக்கிரம் வெந்துவிடும். ஆனால் சத்துக்கள் என்று எடுத்துக் கொண்டால் அதிலிருந்து நமக்குக் கிடைப்பது மிக மிகக் கொஞ்சம். தற்போது சிவப்பு அரிசியின் நன்மைகளை அறிந்துக்கொண்டு பல நாடுகளிலும் மக்கள் சிவப்பு அரிசியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். சிவப்பு அரிசியை தீட்டப்படாத அரிசி (unpolished) என்றும், முழு அரிசி என்றும் சரக்கு அரிசி என்றும் சொல்லுகிறார்கள். அதன் நிறம் பிரவுன் அல்லது சிவப்பாக இருக்கும். இதன் கெட்டியான மேல்தோல் (உமி) எனப்படுகிறது. இதற்கு அடுத்த மேல்தோல் மெல்லியதாக பிரவுன் நிறத்தில்…
-
- 0 replies
- 684 views
-
-
எனது மகனின் நண்பரின் தகப்பனார் (வயசு 59) கோமா நிலையில் உள்ளார். அவருக்கு இதயக்கோளாறு வந்து 10 நிமிடம் இதயம் இயங்கவில்லை. இதனால் மூளையில் சில செதுள்கள் பழுதாகி (வெடித்து) விட்டன என்கின்றனர் வைத்தியர்கள். நான் நேற்றிரவு போய்ப்பார்த்தேன். அவருக்கு மருந்துகள் மட்டுமே ஏறுகின்றன. செயற்கை சுவாசம் கொடுக்கப்படவில்லை. எல்லாமே இயற்கையாக இருக்கிறது. ஆனால் மூளை மட்டும் வேலை செய்ய மறுக்கிறது என்கிறார்கள். ஆனால் நான் பக்கத்தில் நின்றபோது பல முறை அவரது உடல் சில அதிர்வுகளுக்கு தானாக அசைகிறது. ஆனால் தொடுகையை உணர்ந்து அசைந்தாலே அது சரியான அறிகுறி என்கின்றனர் வைத்தியர்கள். நாளை திங்கட்கிழமை கடைசி பரிசோதனையின் பின கையை விரிப்பார்கள் போலுள்ளது. இது பற்றி தங்களது ஆலோச…
-
- 40 replies
- 2.6k views
-
-
ஹாய்! இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க? - Dr. K. முருகானந்தம் Sponsored content சிறுநீரகக் கல் வெயில் காலம் வந்துவிட்டது, இந்நேரத்தில் ஒழுங்காக தண்ணீர் பருகாமல் போனால் அது நம் சிறுநீரகத்தை வெகுவாக பாதிக்கும் என்பது நாம் அறிந்ததே. இதன் நீண்ட கால விளைவுதான் கிட்னியில் தோன்றும் கற்கள். ஆண்கள், பெண்கள், ஏன் ஓடியாடித் திரியும் குழந்தைகளுக்குக் கூட இப்போதெல்லாம் சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படுகிறது. வெயில் காலத்தில் வியர்வை மற்றும் மூச்சு மூலம் நிறைய நீர்ச்சத்தை இழக்கிறோம். இதனால் உடலின் கழிவுகள் மற்றும் தேவையற்ற தாது உப்புகளை வெளியேற்றத் தேவையான நீர் இல்லாமல் சிறுநீரகம் கஷ்டப்படுகிறது. தாது உப்புகள் சிறுநீர…
-
- 0 replies
- 391 views
-
-
கோடைக் காலத்தில் உடல் சூட்டைத் தணிக்கும் உணவு வகைகள் என்னென்ன? அவற்றை சமைப்பது எப்படி? குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும்? - Explained by Ramya Ramachandran(உணவியல் ஆலோசகர்)
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
இலுப்பைப் பூ: இலுப்பைப் பூவை பாலில் போட்டுக் காய்ச்சி தினம் ஒரு வேளை பருகி வந்தால் தாது விருத்தி ஏற்படும். மேலும் தாகத்தையும் இது விரட்டியடிக்கும். ஆவாரம்பூ: ரத்தத்துக்கு மிகவும் பயன் தரும் ஆவாரம் பூவை உலர்த்தி வேளை ஒன்றுக்கு 15 கிராம் நீரில் போட்டு கஷாயமாக்கி பால், சர்க்கரை கலந்து காப்பியாக பருகிவர உடல் சூடு, நீரிழிவு, நீர்கடுப்பு போன்ற நோய் தீரும். ஆவாரம்பூவை உலர்த்தி கிழங்கு மாவுடன் கூட்டி, உடலில் தேய்த்து குளிக்க வியர்வையினால் ஏற்படும் கற்றாழை நாற்றம் நீங்கும். தோல் வியாதிகளும் குணமாகும். அகத்திப்பூ: அகத்திப்பூவை சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக்கி பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வர சில நாட்களிலேயே உடல் சூடு, பித்த சூடு …
-
- 0 replies
- 763 views
-
-
இன்றைய தினம் ‘பருக்களைப் போக்க என்ன செய்யலாம்?’ என்று சிந்திக்காத பெண்களே கிடையாது. இந்த விஷயத்தில் இன்றைய வாலிபர்களும் சளைத்தவர்கள் அல்ல. இவர்கள் என்ன செய்கிறார்கள்? பருக்களைப் போக்க உதவும் இயற்கை வழிமுறைகளை ஓரங்கட்டிவிட்டு, ஊடகங்களில் சொல்லப்படும் செயற்கை அழகுச் சாதனப் பொருள்களை வரம்புமீறிப் பயன்படுத்துகிறார்கள். இதனால், இவர்களுக்குப் பருக்கள் போகிறதோ இல்லையோ, முகத்தின் பொலிவு போவதுதான் உண்மை. எது முகப்பரு? நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், ‘சீபம்’(Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. இந்தச் சீபம் முடிக்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடிய…
-
- 7 replies
- 1.5k views
-
-
எச் ஐ வி வைரஸ் வரவர தீவிரம் குறைந்து வருவதாக முக்கிய விஞ்ஞான ஆய்வு ஒன்று கூறுகிறது. வரவர தீவிரம் குறையும் எச் ஐ வி வைரஸ் பொட்ஸ்வானாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களை ஆராய்ந்தபோது ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதனை கண்டறிந்துள்ளார்கள். எச் ஐ வி வைரஸானது தான் உயிர்வாழ்வதற்காக மேற்கொள்ளும் உயிரியல் மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புக்கள் காரணமாக அதனால், முழுமையான எயிட்ஸ் நோயை ஏற்படுத்த நீண்ட நாட்கள் பிடிக்கிறது என்று அந்த விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. இந்த முடிவுகள் ஓரளவு ஊக்கத்தை தந்தாலும், இன்னமும் இந்த வைரஸ் ஒரு குணப்படுத்த முடியாத சவாலாகவே தொடர்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். http://www.bbc.co.uk/tamil/science/2014/12/141202_hivstudy
-
- 4 replies
- 1k views
-
-
உடல்நலக் குறைபாட்டுக்கு உடனடியாக சிகிச்சை எடுப்பதை போல மனநல சிகிச்சைக்கு உடனடியாக சிகிச்சை எடுக்கும் வழக்கம் மிகவும் பரவலாக உள்ளதா என்றால் நிச்சயம் இல்லை என்றே கூற முடியும். உடல்நலக் குறைபாடு இருப்பது பெரும்பாலும் வெளிப்படையாகத் தெரியும். ஆனால், மனநலக் குறைபாடு இருப்பது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமல்ல, சம்மந்தப்பட்ட நபருக்கே சில நேரங்களில் தெரியாமல் போகும் வாய்ப்புண்டு. ஆண்டுதோறும் ஒரு கருத்தை மையமாக வைத்து அக்டோபர் 10ஆம் தேதியன்று உலக மனநல நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மையப்பொருள் 'மாறி வரும் உலகில் இளைஞர்களும் மனநலமும்' என்பது. வளர் இளம் பருவம் என்பது உடல் மட்டுமல்லாது உள்ளமும் பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளாகும் பருவம். உலகெங…
-
- 0 replies
- 437 views
-
-
எனது வெள்ளைக்கார நண்பர் மரதன் ஓடுபவர். மாதம் ஒருமுறை என்றாலும் எங்காவது போய் ஓடிப் போட்டு வருவார். கடைசியாக அமெரிக்கா டிஸ்னி மரதன் ஓடினவர். அடுத்த மாதம் பாரிஸ் மரதன் பின்பு லண்டன் மரதன், இப்படியே அவர் விடுமுறைகள் மரதனுக் காகவே செலவழிக்கப் படுகின்றது. அவர் தினமும் பல விதமான வைட்டமின் மாத்திரைகளை எடுப்பார். இப்போது தனது நாளந்த குளிசைகளுடன் tumeric 10mg தினமும் எடுக்கிறார். இது மூட்டு பகுதிகளில் உள்ள திரவத் தன்மையை அதிகரிப்பதற்காக எடுக்கப்படுகிறது அது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் (anti biotics) விளங்குகிறது. நம் முன்னோர்கள் இதை எப்பவோ சொல்லிப் போட்டார்கள். இப்ப மேற்கத்தியர் பாவிக்க வெளிக் கிட்டினம். மஞ்சளின் மகிமை இப்ப குளிசையில். kills germs என்று spray இலு…
-
- 1 reply
- 742 views
-
-
மலர்கள் மணம் மிக்கவை. ஒரு சில மலர்கள் மருத்துவ குணம் கொண்டவை. ஆனால் செந்நிறத்தில் காணப்படும் செங்காந்தள் மலர்கள் மருத்துவ தன்மை கொண்டதோடு வருமானம் தரும் மலராகவும் உள்ளது. பண்டைய இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் செங்காந்தள் மலர்கள் கார்த்திகை மாதத்தில் மலர்வதால் கார்த்திகை மலர் என்றும் அழைக்கப்படுகிறது. இது தமிழர்களின் தேசிய மலராகும். இந்தியா, சீனா, மலாக்கா தீபகற்பம், வெப்ப மண்டலமான ஆப்ரிக்கா முதலிய நாடுகளில் காணப்படுகின்றன. கார்த்திகைச் செடியானது வேலிகளிலும், பாதையோரங்களிலும், காட்டோரங்களிலும் படர்ந்து நிமிர்ந்து அழகிய விரல்கள் போலவும், சுடர்கள் போலவும் காணப்படும். இதன் பூ தீச்சுவாலை போலக் காணப்படுவதால் அக்கினிசலம் என அழைக்கப்படுகிறது. நிறம் மாறும் பூக்…
-
- 0 replies
- 566 views
-
-
பக்கவாதம் எதனால் ஏற்படுகிறது.? சாத்தியக்கூறுகள் என்ன .? மூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும் பக்க வாதத்திற்கு “ஐசெமிக் ஸ்ட்ரோக்” (Ischemic stroke) என்று பெயர். மூளைக்குச் செல்லும ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகும் சமயங்களிலும் பக்கவாதம் உண்டாகும். இதற்கு “ஹெமராஜிக் ஸ்ட்ரோக்” என்று பெயர். எனவே, பக்கவாதம்…
-
- 0 replies
- 720 views
-
-
கண்வலிக்கிழங்கு கண்வலிக்கிழங்கு. 1) மூலிகையின் பெயர் -: கண்வலிக்கிழங்கு. 2) தாவரப்பெயர் -: GLORIOSA SUPERBA. 3) தாவரக்குடும்பம் -: LLIACEAE. 4) வேறு பெயர்கள் -: கலப்பைக்கிழங்கு, செங்காந்தள்மலர்,வெண்தோன்றிக் கிழங்கு, கார்த்திகைக் கிழங்கு, காந்தள்மலர்ச்செடி, நாபிக்கொடி, போன்றவை. 5) வகை -: க்ளோரியோசா சிற்றினங்கள், சிங்களேரி என்பன. 6) மூலப்பொரிட்கள் -: கோல்ச்சிசின் (Colchicines) மற்றும் சுப்பர்பின் (Superbine) 7) தாவர அமைப்பு -: இதற்கு வடிகால் வசதியுடைய மண்ஏற்றது. செம்மண், பொறை மண் ஏற்றது. மண்ணின் அமிலத்தன்மை 6.0 - 7.0 ஆக இருத்தல் நல்லது. கடினமான மண்உகந்தது அன்று. சிறி…
-
- 0 replies
- 869 views
-
-
எடைக் குறைப்பும் தூக்கமும்: "மத்தியானத் தூக்கம் உடல் எடையை அதிகரிக்கும்." "தூங்கித் தூங்கியே குண்டாகி விட்டாள் அல்லது விட்டான்." "அதிகத் தூக்கம் நல்லதல்ல" பலமுறை இப்படி பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். தூக்கத்திற்கும் நம்முடைய உடல் எடைக்கும் கட்டாயம் சம்பந்தம் இருக்கிறது. தூக்கம் சரியானபடி இருந்தால் உடல் இளைக்கலாம் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. பத்திரிக்கைகளிலும், இணைய தளத்திலும் ஒரே வாரத்தில் 5 கிலோ குறைப்பது எப்படி என்பதில் இருந்து பல பல டிப்ஸ். பல பல வகையான டயட் குறிப்புக்கள். உடம்பு இளைக்கவேண்டும் என்பதற்காக என்னென்னவோ செய்கிறார்கள் சிலர். சில மாதங்களுக்கு ஜிம், சில மாதங்களுக்கு யோகா என்று மாற்றி மாற்றி உடம்பை வருத்திக் கொண்டாலும் உடம்பு என்ன வோ இளைப்ப…
-
- 0 replies
- 923 views
-
-
குழந்தைகளின் வளர்ச்சிக்கு 16 உணவுகள். 0 வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி சீராகவும், ஆரோக்கியமானதாகவும் வைப்பது பெற்றோர்களின் கடமை. ஆகவே குழந்தைகள் வளரும் போதே, அவர்களின் உடல் நலனில் பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் சரியாக குழந்தைகளை கவனிக்காவிட்டால், குழந்தைகளின் உடலில் ஊட்டச்சத்து பற்றாக்குறை, வைட்டமின் பற்றாக்குறை போன்றவை ஏற்படும். மேலும் குழந்தைகள் வளர்ந்த பின்னர், அவர்களை பள்ளிக்கு அனுப்பும் போது நன்கு புத்திசாலித்தனத்துடனும், சிறந்த அறிவாளியாகவும் இர…
-
- 0 replies
- 1.2k views
-
-
பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கசாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும். குடல் பூச்சி நீங்க வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கசாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். உடல் வலுப்பெற உடல் தேறாமல் மெலிந்து காணப்படுப…
-
- 0 replies
- 2.9k views
-
-
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இறக்க வாய்ப்புள்ளதா என அறிய மருத்துவர்கள் டெத் டெஸ்ட் (Death test ) என்னும் பரிசோதனையை கண்டறிந்துள்ளனர். FILE இச்சோதனையின் போது சோதனையை மேற்கொள்ளும் நபர் உடல்நலத்தோடு இருந்தாலும், அடுத்த 5 ஆண்டுகளில் அவரது உடலில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை சில குறியீடுகளை வைத்து மருத்துவர்கள் கண்டறிகின்றனர். எளிமையான ரத்த பரிசோதனை மூலம் இதனை செய்யும் மருத்துவர்கள் வெளியிடும் இச்சோதனை முடிவுகள் உடலில் இருக்கும் கோளாறுகள் குறித்து முன்னெச்சரிக்கையாக தெரிந்துகொண்டு அதுக்கேற்ப சிகிச்சைகளை மேற்கொள்ள மிக உதவியாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/international/1402/28/114022805…
-
- 5 replies
- 1.3k views
-