Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. கொரோனா ஒரு உளவியல் பார்வை | Psychotherapist Radhika Sundar | Om Family Therapy

    • 1 reply
    • 378 views
  2. கொரோனா வைரஸ்: கபசுர குடிநீர் என்பது என்ன?அது கொரோனாவை குணப்படுத்துமா? கு. சிவராமன் கொரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்தியாவின் மாற்று மருத்துவ முறைகளில் ஒன்றான சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் ஒரு மருந்தாக முன்வைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பல இடங்களில் இந்த மருந்தை வாங்க மக்கள் கடைகளில் குவிந்தனர். உண்மையில் கபசுர குடிநீர் என்பது என்ன, அது கொரோனாவை குணப்படுத்துமா, மாற்று மருத்துவ முறைகளில் கொரோனாவுக்கு தீர்வு இருக்கிறதா என்பதெல்லாம் குறித்து மூத்த சித்த மருத்துவர்களில் ஒருவரான கு. சிவராமன், பிபிசியின் செய்தியாளரான முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். அதிலிருந்து. கே. கபசுர குடிநீர் கொரோனாவைக் குணப்படுத்துமா? ப. கொரோனாவைக் கட்டுப்படுத்தக்கூ…

  3. வெந்தய விதையில் எண்ணெய் அடங்கியுள்ளது. வீச்சம் உள்ள கசப்பான எண்ணெய். இதில் உயிர்ச்சத்துக்கள, கனிப்பொருட்கள் அதிகளவில் உள்ளன. சமையலில் வாசமூட்ட வெந்தய விதையை சமையலில் சேர்ப்பார்கள். மருத்துவ குணங்கள் எரிச்சலைத் தடுக்கும், சிறுநீரைப் பெருக்கும், இரைப்பை அசௌகரியங்களை நீக்கும். பாலுணர்வைத் தூண்டும், தாய்ப்பாலைப் பெருக்கும், உடம்பின் உள்ளுறுப்புக்களைச் சுத்திகரிக்கும். அழகு சாதனம் மற்றும் கேசப் பராமரிப்பில் வெந்தயம் உபயோகமாகும். உடலில் ஏற்ப்படும் திருகுவலி, வயிற்றுக்கடுப்பு, வயிற்றுப்போக்கு வாயு உபத்திரவம், நாட்பட்ட அஜிரிணம் ஆகிய உபாதைகளில் நல்ல பயனை அளிக்கும். வெந்தயத்தில் இரும்புச் சத்து அதிகமாதலினால் சோகையில் குணம் பெற உதவும். வெந்தய விதைகளை நெய்யில…

    • 1 reply
    • 1.9k views
  4. சிறுநீர் பாதை நோய் தொற்றுகள் ஏற்பட்டுள்ளவர்கள், இதை எதிர்த்து போராடவும், இதிலிருந்து விரைவில் குணமடையவும் சில உணவுகளை சாப்பிட்டாலே போதும். இவை அனைத்தும், காலம் காலமாக நாம் சாப்பிட்டு வந்த உணவுகள் தான் எனிலும், சமீப காலமாக மேற்க்கத்திய பழக்கத்தின் ஆதிக்கத்தினால் நாம் மறந்த உணவுகளும் கூட. சிறுநீர் பாதை நோய் தொற்றுகளை எதிர்த்து போராடும் உணவுகள் சர்க்கரைவள்ளி கிழங்கு பழங்காலம் முதல் மனிதர்கள் சாப்பிட்டு வந்த இயற்கை உணவுப் பொருள் தான் சர்க்கரைவள்ளி கிழங்கு. கிழங்கு வகை உணவுகளில் சத்துகள் மிகுந்த உணவும் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீர் பாதை தோற்று நோயை எதிர்த்து போராட முடியும். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸ…

    • 1 reply
    • 703 views
  5. நான் கடந்த வாரம் என்னுடய புற நோயாளிகள் கிளீனிக்கில் உட்கார்ந்திருந்தேன். ஒரு நடுத்தர வயது மனிதர் கிளீனிக்கின் உள்ளே நுழைந்து "சார், கடந்த 5 நாளா என்னால தூங்க முடியவில்லை, இதய படபடப்பு வந்து உடம்பெல்லாம் திடீர் திடீர்னு வேர்க்குது... பயமா இருக்கு. எனக்கு, என் மனைவி அல்லது குழந்தைகளுக்கு ஏதாவது ஆயிருமோனு பயமா இருக்கு. ஏதாவது பண்ணுங்க சார்” என்றார். அவர் எப்போதுமே எதையாவது யோசித்துக் கொண்டிருப்பதாகவும், முன்பு போல் அவர் எங்களுடன் பேசுவதில்லை என்றும் அவரது மனைவி கூறினார். சில கேள்விகளைக் கேட்டபின், கரோனா பரவ ஆரம்பித்தவுடன் இத்தகைய பதற்ற நோயால் பீடிக்கப்பட்டிருப்பதை நான் அறிந்தேன். இதைப் படிக்கும் பொழுது உங்களில் சிலர் இது மாதிரியான அனுபவத்தின் வழியாக இப்பொழுது சென்றுகொண்…

  6. உலகை உலுக்கிய கொள்ளைநோய்களில் 1918-ல் பரவிய ஸ்பானிஷ் ஃப்ளூ காய்ச்சலுக்கு வரலாற்றிலேயே முக்கிய இடம் உண்டு. முதலாம் உலகப் போர் முடிவில் அதுவும் தன் பங்குக்குப் பல கோடி உயிர்களைக் காவுவாங்கியது. போர் நடைபெறாத பசிபிக் தீவுகள், ஆர்க்டிக் துருவப் பகுதியின் கிராமங்களில்கூட காய்ச்சல் கோரத் தாண்டவம் ஆடியது. அன்றைய உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரைக் காய்ச்சல் பீடித்தது. ஐந்து கோடிக்கும் மேற்பட்டவர்கள் காய்ச்சலில் இறந்தனர். முதலாம் உலகப் போரில் இறந்தவர்களைவிட மூன்று மடங்கு மக்கள் இந்தக் காய்ச்சலில் இறந்தனர். 1918 காய்ச்சலின் முக்கியத்துவம் என்னவென்றால், இருபதுகளின் பிற்பகுதியில் இருந்த வாலிபர்களை அதிகம் அது பலிகொண்டது. குழந்தைகளையும் முதியவர்களையும் அது கொன்றது என்றாலும…

    • 0 replies
    • 821 views
  7. உலகையே புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு மருத்துவமனைகளுக்கு தேவையான வென்டிலேட்டர்கள் எனப்படும் செயற்கை சுவாச கருவிகளை ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் அரசுகள் வாங்கி வருகின்றன. கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பை இந்த செயற்கை சுவாச கருவிகளே வழங்குகின்றன. வென்டிலேட்டர் என்றால் என்ன? அது என்ன செய்கிறது? சுருக்கமாக சொல்லப்போனால், நோய்த்தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்ட நோயாளியின் ஒட்டுமொத்த சுவாச செயல்பாட்டை மேற்கொள்ளும் இயந்திரம்தான் இந்த வென்டிலேட்டர்கள். இது நோயாளிக்கு தொற்றுநோயை எதிர்த்துப் போராடி அதிலிருந்து மீண்டு வருவதற்கு அவகாசம் தருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES வ…

    • 0 replies
    • 423 views
  8. சிறப்புக் கட்டுரை: கொரோனா - அச்சம் தவிர், ஐயம் களை! மின்னம்பலம் -நிலவளம் கு.கதிரவன் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக வதந்திகள், நாளும் சமூக ஊடகங்கள், இணையங்கள் வழியாக வேகமாகப் பரவி வருகின்றன. இப்புனைவிலிருந்து உண்மை பிரித்தறிவது பெரும் சவாலாகவே உள்ளது. ஆனால், இத்தகைய புனைவுகள் உலகெங்கிலும் இவ்வைரஸால் பாதிக்கப்பட்ட மற்றும் இதர மக்களிடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலையில் இப்போக்கு மிகவும் ஆபத்தானது ஆகும். முகமூடி அணிந்து கொண்டால் வைரஸின் பாதிப்பிலிருந்து முற்றிலும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது முழுதான உண்மையல்ல. காரணம், அறுவை சிகிச்சை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்படும் முகமூடிகள் வைரஸ் துகள்களைத் தடுக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டவை அல்ல. …

  9. கொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.! 26-03-2020 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! இன்றைய நிலையில் உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரானா வைரஸ் நம் உடலில் எப்படி நுழைகிறது, பாதிப்பை உண்டு செய்கிறது என தெளிவாய் அறிவோம். கடந்த டிசம்பர் 2019ல் தனது நாட்டின் ஊஹான் நகரில் கொரோனா வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தாக்கி வருவதாக சீனா வெளியுலகுக்கு முதன் முதலாக தெரிவித்தது. இந்த வைரஸ் Severe acute respiratory syndrome (SARS-2) என்ற வகையை சேர்ந்தது. இந்த வைரஸ் உருவாக்கும் நோய்க்குப் பெயர்தான் கோவிட் -19. …

  10. நுண்ணுயிரியல் ஆய்வின் நெடுமான் Microbiologist Dr. SP. தியாகராஜன் | Prof. S. P. Thyagarajan

  11. கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் முகக் கவசங்களை போட்டிபோட்டு வாங்கும் நிலையில், கண்கள் வழியாகக் கூட உடலுக்குள் நுழையக் கூடிய வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இருமல், தும்மல் இருந்தால் மட்டுமே மாஸ்க் அணியுங்கள், மாஸ்க் அணிவது, அடிக்கடி கை கழுவும் பழக்கம் இரண்டையும் சேர்த்து பின்பற்றும்போதுதான் பயன் கிடைக்கும், ஆரோக்கியமான நபர்கள், கொரோனா தொற்று உள்ள நபரை கவனித்துக் கொள்வதாக இருந்தால் மட்டுமே மாஸ்க் அணிந்தால் போதும் என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். மாஸ்க்குகள் பாதுகாப்பு கவசமாக செயல்படும் என்றே ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன, ஆனால் மாஸ்க் அணிந்து ஊருக்குள் சுற்றிவருபோது அதனால் பெரிய பயன்கள் ஏதுமில்லை, அதாவது அறைகளில்…

    • 0 replies
    • 304 views
  12. காய்ச்சல்... சில குறிப்புகள்! - நலம் நல்லது! - 1 #DailyHealthDose மருத்துவர் கு.சிவராமன் ஆனந்த விகடனில் வெளியான ‘ஆறாம் திணை’, ‘ஏழாம் சுவை’, ’உயிர் பிழை’ தொடர்கள் மூலம் பரவலான வாசகர்களின் கவனத்தைப் பெற்றவர் மருத்துவர் கு.சிவராமன். இவருடைய `நலம் 360’ மற்றும் `நாட்டு மருந்துக்கடை’ ஆகியவையும் மிக முக்கியமான மருத்துவ நூல்கள். உணவு எப்படி மருந்தாகிறது; இயற்கை, நோய் வராமல் காக்க நமக்கு என்னவெல்லாம் வழங்கியிருக்கிறது என்பதையெல்லாம் ஆதாரபூர்வமாக, அழுத்தமாக எடுத்துச் சொல்பவர். நம் ஆரோக்கியத்துக்கு வழிகாட்ட, இனி விகடன் டாட்.காமில் திங்கள் முதல் வெள்ளி வரை சின்னச்சின்ன டிப்ஸுகளையும் வழங்க இருக்கிறார். பின்பற்றுவோம்... பயன்பெறுவோம்! மருத்துவர் கு.ச…

    • 475 replies
    • 143.2k views
  13. மனநோயாகவும் மாறுகிறதா கொரோனா! மின்னம்பலம் தற்போது உலகத்தை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு போன்று, பல ஆண்டுகளுக்கு முன்னதாகவும் வைரஸ் தாக்குதல்கள் நடைபெற்று இருக்கின்றன. இதுபோன்ற தாக்குதல்கள் மருத்துவத் துறையை மட்டுமல்லாமல் மக்களின் மன நலனையும், சமுகத்தையும், தேசத்தையும் பாதிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பை ஒருவர் எவ்வாறு சமாளிக்கிறார் என்பது மூன்று காரணிகளைப் பொறுத்தது. அவை தனிநபர், சமூகம் மற்றும் சுகாதார அமைப்பு ஆகியவையாகும். சீனாவில் கொரோனா பாதிப்பின் ஆரம்பக் கட்டத்தில் ’வாங்’ என்பவரால் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், ”53.8 சதவிகித மக்கள் உளவியல் தாக்கத்தை மிதமானது முதல் கடுமையானதாக மதிப்பிட்டதாகவும். 16.5% மக்கள் கடுமையான மனப்பதற்றத்தில…

  14. நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா நோய் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ளும் சில வழிமுறைகளை கூறுகிறார். திவ்யா சத்யராஜ் சென்னை: “கொரோனா வைரஸ் முதியவர்களையும், சிறு வயது குழந்தைகளையுமே அதிகமாக தாக்குகிறது. ஏனெனில் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிக குறைவாகவே இருக்கும். அதேசமயம், வழக்கத்தை விட மிக குறைவான நோய் எதிர்ப்பு சக்தியுடைய நடுத்தர வயதினரையும் கொரோனா வைரஸ் தாக்கும். உயிர்க்கொல்லி நோயாக உருவெடுத்திருக்கும் கொரோனாவிற்கு முறையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நோய் தாக்குதலில் இருந்து …

  15. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் தோல் வங்கி மூலம் இதுவரை 51 பேருக்கு தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர். உடலின் மற்ற உறுப்புகளை தானம் செய்வது போலவே தோலையும் தானம் செய்வதன் மூலம் பலரது வாழ்வில் ஒளியேற்றலாம் என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு..... மனித உடலில் ரத்த நாளங்கள், இதயம், இதயத்தின் வால்வு பகுதிகள், நுரையீரல், சிறுகுடல், சிறுநீரகம், கண், தோல், எலும்பு, முதுகெலும்பு, கல்லீரல், கை என உடலின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தானமாக அளிக்கலாம். இவற்றில், அதிக விழிப்புணர்வின்றி இருப்பது, தோல் தானம்தான். ரத்த வங்கி, கண் வங்கி, எலும்பு வங்கி வரிசையில் இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் முதல் முறையாக சென்னை அர…

    • 1 reply
    • 397 views
  16. கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - சில சந்தேகங்களும், விளக்கமும் Coronavirus Explainer ஜேம்ஸ் கலேகர், அறிவியல் மற்றும் சுகாதார செய்தியாளர் Getty Images கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள். இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. நோயாக உருவாகும் காலம் இது வைரஸ் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான காலம். உங்கள் உடலின் செல்களில் நுழையும் வைரஸ்கள், அவற்றை முதலில் ஆக்கிரமித்துக் கொண்டு, தன் கட்டுப்பாட…

  17. கொரோனா வைரஸ்க்கு தடுப்பூசி.. கண்டுபிடித்தது அமெரிக்கா.. இன்று முதல் பரிசோதனை! புதிய கொரோனா வைரஸிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக தடுப்பூசியை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. இதை மதிப்பீடு செய்து மருத்துவ சோதனை செய்யும் பணி அமெரிக்காவில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கும் என அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கோவிட் -19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுவது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அதை தடுக்க தடுப்பூசியை உருவாக்கும் பணியில் உலகெங்கிலும் உள்ள டஜன் கணக்கான ஆராய்ச்சி குழுக்கள் போட்டி போட்டு செய்து வருகின்றன. முக்கியமாக, அவர்கள் பல்வேறு வகையான தடுப்பூசிகளைப் பின்பற்றி புதிய தொழில்நுட்பங்களிலிருந்து உருவாக்கி வருகிறார்கள். தற்போத…

  18. கொரோனா – இன்னொரு பிணி நுண்ணி லதா குப்பா மார்ச் 9, 2020 லதா குப்பா டிசம்பர் மாத துவக்கத்தில் சீனாவின் ஒரு நகரத்தில் கண்டறியப்பட்ட வைரஸ் தொற்று, அடுத்தடுத்த நாள்களில் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளினால் சர்வதேச கவனம் பெற்றது. கொஞ்சம் தாமதமாக விழித்துக் கொண்ட சீன அரசு தங்களுடைய தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்குள் நோய்த்தொற்று மாகாணமெங்கும் பரவி இருந்தது. ”COVID-19” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையைச் சீன அரசு மறைத்துவிட்டதாக எழும்பியிருக்கும் குற்றச்சாட்டுகள் இதன் தீவிரத்தை உணர்த்தும். மனிதர்களிடையே பரவும் இந்தத் தொற்று நோயின் தீவிரம் கருதிப் “பொது சுகாதார அவசரநிலை”யாக உலக சுகாதா…

  19. 8 மணி நேரத் தூக்கம் என்பது ஆரோக்கியத்துக்கான ஓர் ஒழுக்கம். இதனுடன் ஒரு மணி நேரத்தைக் கூட்டியோ அல்லது ஒரு மணி நேரத்தைக் குறைத்தோ தூங்குவது உங்கள் உடல்நிலையைப் பொறுத்தது. உயிர் வாழ மூச்சுவிடுதல் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் தூக்கமும். வயது, பொழுது, நேரம், இருட்டான அறை என்று தூக்கத்துக்கான ஒழுக்கங்கள் பல இருக்கின்றன. அவற்றைப்பற்றி விரிவாகச் சொல்கிறார் தூக்கவியல் மருத்துவர் ஜெயராமன். தூக்கமென்றாலே 8 மணி நேரம்தானா..? ஒரு நல்ல தூக்க ஒழுக்கம் என்பது இரவு 10 மணிக்குப் படுத்து காலை 6 மணிக்கு கண் விழிப்பது. இதுதான் 8 மணி நேரத் தூக்கம். பிறந்த குழந்தைகள் 18 முதல் 20 மணி நேரம்வரை தூங்குவார்கள். 10 வயதில் 12 மணி நேரம், வளர்ந்தபிறகு 6 முதல் 8 மணி நேரம். இப்படி வயதுக்…

    • 1 reply
    • 538 views
  20. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: இஸ்ரேல் விஞ்ஞானிகளின் முயற்சியில் முன்னேற்றம்! இஸ்ரேலில் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாகவும் இது தொடர்பாக விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாதிப்பினால் இதுவரை 4,627 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இலட்சத்து 26 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, கொரோனா வைரஸ் முதலில் கால் பதித்த சீனாவில் தற்போது வைரஸ் பரவுவது குறைந்துள்ள போதிலும் ஏனைய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகியும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. காய்ச்சல், உடல்வலி போன்ற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற…

  21. கொரோனா என்பது தற்சமயம் உலகில் அதிகம் வருத்தத்துடனும் வலியுடனும் பயத்துடனும் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக விளங்குகின்றது. இதற்கு கோவிட்- -19 (civid --19) என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரும் இட்டுவிட்டது. ‘Middle East respiratory Disease, Spanish flu’ என ஊர் பெயரிலோ, ‘Swine flu’ என விலங்கு பெயரிலோ, இனி இந்த வைரஸை அழைக்கக் கூடாது. ‘பழைய பெயர்கள் தேவையின்றி ஊரையும் விலங்கையும் பழித்து, தேவையற்ற சமூக விலக்கலை ஏற்படுத்துகின்றன. வைரஸுக்குக்கூட இன, மொழி, சாதிய அடையாளம் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது. இப்படியான அடையாளங்கள் தேவையற்ற பிரிவினையையும் விலக்கலையும் சமூகத்தில் உண்டாக்கிவிடும் என்பதே இதற்குப் பின்னுள்ள காரணமாகும். கடந்த இரண்டு மாத காலமாக உலகம் ம…

    • 0 replies
    • 801 views
  22. உலகம் முழுவதும் பெப்ரவரி 27ஆம் திகதியன்று உலக மோப்ப உணர்வின்மைக்கான விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தற்போது இந்த பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சையும் அறிமுகமாகியிருக்கிறது. உலகில் மிகவும் அரிதாக இருக்கும் பாதிப்புகளில் மோப்ப உணர்வின்மை என்ற பாதிப்பும் ஒன்று. இன்றைய இளைய தலைமுறைக்கு எடுத்து கூற வேண்டுமென்றால், அண்மையில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான அருவம் என்ற தமிழ் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் கேத்தரின் தெரசாவிற்கு இத்தகைய பாதிப்பு இருப்பதாக இயக்குநர் சித்தரித்திருப்பார். தலையில் எதிர்பார விதமாக அடிபடுதல் அல்லது தீவிர வைரஸ் கிருமியின் தொற்று ஆகியவற்றால் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போது அனோஸ்மியா எனப…

    • 11 replies
    • 1.2k views
  23. உலக நாடுகள் அனைத்தும் இந்த நோய்க்கான தீர்வைத் தேடிக்கொண்டிருக்கையில், பா.ஜ.க பிரமுகர்கள் வழக்கம்போல் பசுவின் சாணத்தையும் கோமியத்தையும் கொரோனா வைரஸுக்கு மருந்தாகப் பரிந்துரைக்க ஆரம்பித்துவிட்டனர். எங்கோ சீனாவில்தானே பாதிப்பு என்றிருந்த கொரோனா வைரஸின் வீரியம் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவி விட்டது. இந்தியாவில் மட்டும் 29 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது இன்றைய நிலவரம். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நோய்க்கு இன்றுவரை 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 95,400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு சீனாவைத் தாண்டியும் ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த நோய்க்கு இதுவரை 3,286 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவ…

    • 0 replies
    • 344 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.