யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1761 topics in this forum
-
மற'றய பகுதிகளில் புதியது எப்ப தொட்க முடியும்
-
- 2 replies
- 831 views
-
-
புதுவருட வாழ்த்துக்கள் நண்பர்களே.... அழிந்தவை அழிந்து ஒழிந்தவை ஒழிந்து இழந்தவை இழந்து எச்சம் மிச்சம் கொண்டு எழுந்து கொண்டது புதியதோர் வருடம் அழிவெனும் வதந்தி கடந்து புதியதோர் உலகமாய் நடந்தவை நடந்தாக முடிந்தவை முடிந்தாக இருப்பவர் எல்லாம் எழுந்தாக வேண்டும் நுட்பமாய் எம்மை நாமே செதுக்கி நாளைய உலகை நம் கையில் தாங்கிட...
-
- 6 replies
- 872 views
-
-
எனக்கும் தனி திரி தொடங்க அனுமதி தருவீங்களா
-
- 9 replies
- 779 views
-
-
தேனினும் இனிய தெள்ளு தமிழில் தெவிட்டிடாது பாட வந்தேன் உங்கள் முன் பாவிசைக்க வந்தாலும் பக்குவமாய் பாடுவேனா ?? தீர்ப்பைச் சொல்வீர் உங்கள் கையால்!! ஏறுமுகமாய் இருந்தவேளை பருத்தி விற்றது என்நகரம் அப்பதட்டிகளும் அடுக்கடுக்காய் நிரைகட்டியது ஒருகாலம் சுவையான வடையும் என்நகரில் சுவைக்கவே ஓடிவருவர் அந்நகரம் பெற்றெடுத்த ஆரணங்கு என்பெயர் மைத்திரேயி !! ஆவலாய் வந்தவளை அள்ளிக் கொள்வீரா ?? எட்டியே நின்று எட்டி உதை தருவீரா ??
-
- 55 replies
- 4.9k views
-
-
-
இனிய தமிழ் திருநாள் பொங்கல் வாழ்த்துகள்.
-
- 24 replies
- 3.7k views
- 1 follower
-
-
தயவு செய்து எனது பக்கத்தை திறந்து விடுங்கள், அதாவது உங்கள் அறிவுறுத்தலின் படி அரிச்சுவடியில் மூன்று முறை நான் எழுதியும் இன்னும் என் பக்கத்தை திறந்து விடாத காரணத்தால் தான் கேட்கின்றேன் (நான் யாழ் தளத்தில் முன் அனுபவம் இல்லாதவன்)
-
- 1 reply
- 674 views
-
-
அவள் நினைவால் பைத்தியக்காரன் என்று பட்டம் பெற்ற ஓர் கவிஞன் நான், அன்று நினைவுகள் மட்டுமே வாழ்க்கை என்றிருந்தேன் இன்று நிலைமைகள் எதையும் மாற்றும் என்றுனர்ந்தேன், உயிரை விட மேலான அவள் உறவை கண்டு. தோழர்களே நாளை முதல் என் சிறு சிறு கவிகளையும் சில சில சொந்த சிந்தையில் உருவான சிந்தனைகளையும் பகிரலாம் என்று......
-
- 12 replies
- 1.4k views
-
-
எனது பெயர் பாலச்சந்திரன். நான் மதுரையில் பிறந்து, இன்று கலேபோர்னியாவில் வாழ்கின்றேன். வெளி நாடுகளில் வாழும் இலங்கையினரை ஒருங்கிணைத்து, இலங்கையில் அரசியல், பொருளாதார மாற்றத்தை; புரட்டிப் போடும் மாற்றத்தை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு உள்ளேன். முயற்சி திருவினையாக்கும். அன்புடன், பாலச்சந்திரன்.
-
- 24 replies
- 2.2k views
-
-
வர்த்தகம், இலங்கைப் பொருட்களின் ஏற்றுமதிக்கான ஒரு சந்தை, வர்த்தக இணையதளம், உருவாக்கி இருக்கின்றீர்களா. இல்லாவிடில், அதனை உருவாக்க முடியுமா. இலங்கை சந்தை என்ற வர்த்தக இணையதளத்தினில், இலங்கையில் உற்பத்தியாகக்கூடிய பொருட்களை பட்டியலிட வேண்டும். உதாரணத்துக்கு: பனை ஓலை விசிறி. தென்னை விளக்குமார். கடலைமிட்டாய் மரப்பாச்சி பொம்மை. நீங்கள் பார்க்கக்கூடிய அனைத்துப் பொருட்களையும் பட்டியலிடுங்கள். அதையும் தவிர, வெளிநாட்டவர்கள், அவர்களுக்கு தேவையான பொருட்களை, கேட்கவும் வாய்ப்பு உண்டு. உதாரணத்துக்கு: சிறிய குடும்பத்துக்கான சமையல் அறைக்குத் தேவையான சாதனங்கள். பழைய காலத்து மாடலில் அமைந்த சாதனங்கள். மின்சாரம் தேவைப்படாத, இயற்கை, மனித சக்தியைக் கொண்டு செயல்படுத்தக…
-
- 2 replies
- 732 views
-
-
-
நான் ஈழத்து பாடலாசிரியர் ஞானசிங்கம் சுதர்சன், யாழ் இணையத்தளம் வழியாக உங்களை தொடர்பு கொள்வதில் மிக்க சந்தோசம்.
-
- 5 replies
- 606 views
-
-
-
டிஸ்கி: வலையுலகப் பதிவர்களே, வாசகர்களே!! இத்தொடரில், நான் உங்களோடு ஈழத்தமிழும் கலந்து உரையாட வருகின்றேன். ஆரம்பத்தில் இத்தொடரை முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமிருந்தாலும், வலையுலக வாசகர்களின் புரிதலை முதன்மைப்படுத்தி சாதாரண தமிழினிடையே யாழ்ப்பாணத் தமிழ் கலந்து எழுதுவதாக இருக்கின்றேன். எனினும் மிகவும் பொருத்தமான பிரதிகளை முழுக்க, முழுக்க யாழ்ப்பாணத் தமிழில் எழுதும் எண்ணமும் உண்டு. இனி, யாழ்ப்பாணத் தமிழைக் கொஞ்சம் கேளுங்கோவன்!!! அதென்ன மிச்சச்சொச்சம் எண்டு கேட்காமால் விடுவியளே? இவன் ஏதேனும் சொல்லுறதெண்டால் இப்படிச் சுத்தி வளைச்சுக் கொண்டு, எங்களைச் சாட்டித்தான் வண்டில் விடுவான் போலை கிடக்கு. என்னவோ விட்ற வண்டிலை நேரா விடு தம்பி, வந்திட்டம், இனிக் கேட்ட…
-
- 2 replies
- 538 views
-
-
-
இன்னும் இரு நாட்கள் தான் இருக்கிறது புதிய ஆண்டு பிறக்க இதை நினைத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றவேண்டும். புதிய எண்ணங்கள், புதிய திட்டங்கள், புதிய பாதைகள் பிறக்கவேண்டும். நீ நல்லாக வாழவேண்டும், மற்றவரையும் வாழவைக்கவேண்டும் உன் குடும்பத்தை நேசிக்கவேண்டும், நீ உன்னை நேசிக்கவேண்டும், அதன் பின் - உன்னைப்போல் பிறரை நேசிக்கவேண்டும். இந்த நாடு, இந்த உலகம் உனக்காக மட்டுமல்ல, எல்லோருக்காகவும் தான், இந்த வாழ்வு உனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவும் தான். அது தான் திருமணம் முடிக்கிறாய், பிள்ளை பெறுகிறாய், சந்ததி பெருக்குகிறாய் எலலோருக்கும் இடமுண்டு, வாழ்த்தான் வருகிறார்கள். தனித்து யாரும் வாழமுடியாது. இது உனக்காக மட்டுமல்ல, உலகத்திற்காகவும், உன் புகழ் வாழ, அந்த பிள…
-
- 1 reply
- 606 views
-
-
உன்னைப் போல் பிறரை நேசித்துப்பார் - நீ உன்னையே நேசிக்கத் தொடங்குவாய் - அப்போ தான் உன்னை பலர் நேசிப்பது உனக்கு தெரியவரும். உன் இரக்க குணத்தால், மனிதாபிமான உள்ளத்தால் மற்றவரை நேசிக்கிறாய் உன்னை இறைவன் ஆசீர்வதிக்க இது வழி செய்யும். உன் இரு கையையும் கூப்பி வணங்குவதை விட உன் ஒரு கையால் உதவு அதுவே உன்னை நினைத்து இறைவன் மகிழ்ந்து உன்னை ஆசீவதிப்பார். உண்மை அன்பு என்றால் என்ன ? எதிர்பார்பு அல்லாது உதவுவது ஏழையை நேசிப்பது, இல்லாதோரை மதிப்பது. மற்றவர் துன்பத்தை தன் துன்பமாக நினைப்பது மக்கள் துயர் கண்டு உன் கண்ணில் கண்ணீர் வருவது, பிறருக்காக வாழ்வது, படிக்கவழியற்ற பிள்ளைக்கு உதவுவது பகிர்ந்து உண்பவது, பசிபோக்க வழி செய்வது, இதை -உன் வாழ்வில் இலட்சிய…
-
- 3 replies
- 875 views
-
-
நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் களத்தில் கருத்தாடக்கூடிய காலமும் நேரமும் கூடி வந்துள்ளது. நிச்சயம் வரவேற்பீர்கள் என நம்புகின்றேன்.
-
- 46 replies
- 2.7k views
-
-
இலங்கையின் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையானது யாழ் மாணவர்களின் ஒரு சராசரிஉரிமையை பறிக்கும் செயலாகும் " Rights : Things to which you are entitled or allowed; freedoms that are guaranteed. Human Rights: The rights you have simply because you are human." மாணவர் சக்தியை மற்றும் மாணவர்களின் குரலை நசுக்க முயன்றதன் பின் விளைவுகளை மறந்து முட்டாள்தனமானசெயல்களில் ஈடுபட்டுள்ள இந்த இனவாத அரசு மறந்தது என்னவென்றால் வளர்ந்துவரும் தொளில்நுட்பம்.தாயகத்தில் இந்த கொலை வெறி பிடித்து திரியும் இந்த அரசின் செயற்பாடுகள் அவர்களுக்கு மேலும் அனைத்துலகரீதியில் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையை தாமே தமக்கு ஏற்படுத்தியுள்ளனர். ஏற்கனவே பல்வேறு மனிதஉரிமைகள் பிரச்னைகள…
-
- 1 reply
- 566 views
-
-
-
[size=3] அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்[/size] [size=3]தண்ணொளி நோக்கலில் தாழ்த்தி நிலம் நோக்கினாள்[/size] [size=3]பண்ணொலிப் பாடல் அவன் செவ் வாயில்[/size] [size=3]கண்ணொளி வீசி வெட்கி குனிந்தோடினாள்[/size] [size=3]குனிந்தோடியவள் குறுக்கே அவள் தந்தை வர[/size] [size=3]தனித்தே நடந்தாள் மயிலொத்த மென் நடையாள்[/size] [size=3]இனித்தே மகளை நோக்கி இன்முறுவல் புரிந்த தந்தை[/size] [size=3]கனித்தேனே இவ்விடம் நும்பணி என்னென்றார்[/size] [size=3]அன்னை இவ்விடம் ஏவினாள் என்னை என[/size] [size=3]கண்ணை சிமிட்டி கதை எதோ கூறி மகள்[/size] [size=3]பெண்மை நாணம் காட்டி பேதை மீண்டும்[/size] [size=3]தன்னை உள் மறைத்து தையல் மீண்டும் மறைந்தாள்[/size] [size=3…
-
- 20 replies
- 2.2k views
-
-
புலத்திலிருந்து பலம்தரும் உறவுகளுக்கு, கிளிநொச்சி மண்ணிலிருந்து உடனுக்குடன் நடப்புப் புதினங்களை அறிந்திட எம்முடன் இணைந்திருங்கள். http://www.newskili.com எமது செய்திகளை பிறரும் அறியும் வகையில் ஆங்கில மொழியாக்கத்துடன் கூடிய வடிவமைப்பு. உதாரணமாக ஒரு செய்தி இதற்கு யார் பொறுப்பு? [size=3]யாழ் கண்டி நெடுஞ்சாலை வழியே பரந்தன் சந்தியைக் கடக்கும் எவரும் சாலையருகே குவிந்துள்ள இரும்புக் குவியலைக் கண்டு மலைத்திருப்பர்.[/size] [size=3]புயலடித்த ப10மியில் எஞ்சியுள்ள இரும்புப் பொருட்களின் இறுதிப் புகலிடம் இதுதான். இந்த இரும்புகளைக் கொள்வனவு செய்பவருக்கு அது அரசசொத்தா திருடப்பட்ட இரும்பா என்பது குறித்துச் சிறிதும் கவலையிருப்பதாகத் தெரியவில்லை. எந்தவொரு இரு…
-
- 8 replies
- 1.1k views
-
-
-
வணக்கம் யாழ் கள உறுப்பினர் அனைவருக்கும், உங்களுடன் இணைய வந்துள்ளேன்
-
- 31 replies
- 1.6k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கங்கள். நானும் பல நாட்களாக உங்களின் வாசகியாக இருந்து வருகின்றேன். இப்போது உறுப்பினராக இணைந்துள்ளேன். நீண்டநாள் விருப்பங்கள் இன்று நிறைவேறியுள்ளது. நன்றி நண்பர்களே
-
- 18 replies
- 861 views
-