யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
709 topics in this forum
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2026 அன்று யாழ் இணையம் 27 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 28 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 28 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். க…
-
-
- 4 replies
- 300 views
- 2 followers
-
-
கருத்துக்களம் இன்று (11.08.2011) புதிய பதிப்பிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னர் பல்வேறு வகையான பிரச்சனைகளை உறுப்பினர்கள் எதிர்கொள்வதால் இங்கு அவற்றினைக் குறிப்பிடுவதன் மூலம் அதற்கான தீர்வு நிர்வாகமோ அல்லது தீர்வினைத் தெரிந்த உறுப்பினரே தெரிவிப்பதன் மூலம் பலருக்கும் உதவியாக அமையும். பிரச்சனைகளைக் குறிப்பிடும் போது விளக்கமாகவும் முடிந்தால் screen shot ஒன்றினை இணைப்பதும் விளங்கிக் கொள்ள இலகுவாக இருக்கும்.
-
-
- 2.1k replies
- 235.4k views
- 8 followers
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2025 அன்று யாழ் இணையம் 26 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 27 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களையும் தாண்டி, சமூக ஊடகங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாக இருக்கின்றது. யாழ் இணையம் 27 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்த வடிவி…
-
-
- 4 replies
- 672 views
- 1 follower
-
-
கருத்துக்களத்தின் முகப்புப் பக்கத்தினை கள உறுப்பினர்கள் தாங்கள் விரும்பியவாறு முகப்பில் சில மாறுதல்களைச் செய்து கொள்ள முடியும். இதனை உங்கள் Profile பகுதியில் Account Settings என்பதனைத் தெரிவு செய்து அங்கு Content Preferences என்பதில் அழுத்தவும். அதில் Change layout views என்பதைத் தெரிவு செய்து உங்களுக்கு விருப்பமான தெரிவைச் செய்து save செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு விரும்பிய வகையில் முகப்பினை மாற்றிக் கொள்ளலாம்.
-
-
- 1 reply
- 376 views
-
-
karavai paranee - paranee என்றும் ragi swiss - TMR என்றும் பெயர்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
-
-
- 988 replies
- 181k views
- 3 followers
-
-
இணையத்தளங்கள் உருவாக்கும்போது ஒரு பொதுவான நடைமுறை என்னவென்றால் ஒரு பயனாளர் ஒரு குறிப்பிட்ட இணையத்தளத்தின் உள்ளே எங்கிருந்தாலும் அதன் தலைப்பில் உள்ள லோகோவில்(logo) சொடுக்கும்போது மீண்டும் அதே இணையத்தளத்தின் முகப் பக்கத்திற்கு செல்வதுதான் . இதை Express way to home அல்லது Clickable logo linking to home page என்று அழைப்பார்கள். பாதை மாறி போகும் பயனாளர் ஒருவர் ஒரே கிளிக்கில் இணையத்தளத்தின் முகப்பைச் சென்றடையும் இந்தப் பயன்பாடு யாழ் இணயத்தில் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கே ஒவ்வொரு முறையும் முகப்பு பக்கத்தைக் கடந்து உள்ளே சென்றபின் யாழ் லோகோவில் கிளிக் செய்யும்போது மீண்டும் முகப்புப் பக்கத்துக்குச் (front page / first page / Landing page) செல்லாமல் யாழ் இணையத்…
-
-
- 2 replies
- 170 views
-
-
வணக்கம் உறவே, நான் மருது பாண்டியன் சென்னையில் வசிக்கிறேன்.எனக்கு சாத்தானின் படை என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தின் நகல் வேண்டும்.சுமார் மூன்று வருடங்களாக இந்த புத்தகத்தை பற்றி தேடி வருகிறேன்.கிடைக்கவில்லை என் போன்ற இளைய தலைமுறை பிள்ளைகள் இந்தியா ஈழத்த்திற்கு செய்த துரோகத்தை தெரிந்து கொள்வது சாத்தியம் அற்றதாக மாறி விட்டது.எனவே தயவு செய்து எனக்கு அந்த புத்தகத்தின் நகல் இருந்தால் கொடுத்து உதவுங்கள் உறவே........🙏🏽 யாராவது இந்த புத்தகத்தின் தமிழ் நகல் கிடைத்தால் சற்று கொடுத்து உதவவும்.......🙏🏽
-
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
Scribd[Final] Attacks on Civilians Attributed Home Guards 30 Se...Final Revision – Documenting the Sri Lankan Home Guards' Attacks on Tamil Civilians This article is a fully referenced and thoroughly researched account of the massacres attributed to the Sri Lanka
-
- 2 replies
- 518 views
- 1 follower
-
-
“கீதை பிறந்தது" "கீதை பிறந்தது தர்மத்தை விளக்கவே மேதை கிருஷ்ணன் அருச்சினனுக்கு போதிக்கவே! காதை கொடுத்துக் கேட்டவன் தயங்கினான் பாதை புரியாமல் போரில் நின்றானே!" "தத்துவவாதியின் அறிவுரையோ ஒரு பக்கம் தத்துவம் சொன்னவனே மீறியதோ மறுபக்கம்? தந்திரம் நிறைந்த மாயோனின் கூத்தில் தயாளகுணன் கர்ணன் மடிந்ததும் தெரியாதோ?" "தர்மத்தை பாதுகாக்கப் பூமிக்கு வந்தவனே அர்த்தமே புரியாமல் வஞ்சகம் புரிந்தானே! வார்த்தையில் அழகாய்க் கூறிய அவனே தேர்ந்து எடுத்ததோ பொய்யும் பித்தலாட்டமுமே!" "அன்பை விதைத்தால் மனிதம் உயரும் அறம் நிலைநாட்டினால் பண்பு மலருமே! அவதாரம் எடுத்து போதித்த கொள்கை அநீதி வழியில் சென்றது ஏனோ?" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 216 views
-
-
யாழ்களத்தில் சில விரும்பக்கூடிய மாற்றங்கள் கண்டு மிக்கமகிழ்ச்சி . மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி
-
- 0 replies
- 265 views
- 1 follower
-
-
ஐயன்களே, அம்மைகளே, பொறுத்தருள்க. 🙏 கடந்த தடவை யாழ் களத்தின் தொழில்நுட்ப மேம்படுத்தப்பட்ட செயற்பாட்டின் பின்னர் எனது ""Kapithan"" எனும் பெயரில் நுளைவு செய்ய முடியவில்லை. அதற்கு எனது password மறந்துவிட்டதே மிகப் பெரும் காரணம். ஆதலினால் மீண்டும் கபித்தான் என்று தமிழில் உங்களுடன் சண்டையிட வரிந்து கட்டிக்கொண்டு வருகிறேன். பிழைகள் குழப்பங்கள் இருந்தால் மன்னிக்கவும். 🙏
-
- 1 reply
- 365 views
-
-
தென் ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தானுக்கு எதிரான 02 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இப்போது தென் ஆப்பிரிக்காவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதால், தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இன்று, கேப்டவுனில் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதன்போது, டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கை தெரிவு செய்துள்ளார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பந்துவீச உள்ளது. இரு அணிகளுக்கான பிளேயிங் லெவன்: தென் ஆப்பிரிக்கா: மார்க்ரம், ரியான் ரிக்கல்டான், வியான் முல்டர், ஸ்டப…
-
- 2 replies
- 412 views
-
-
இதுவரை காலமும் கள உறுப்பினர்கள் அல்லாதோர் திண்ணையினைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. இன்று முதல் பரீட்சார்த்தமாக திண்ணை அனைவரின் பார்வைக்கும் திறந்துவிடப்படுகின்றது என்பதால் திண்ணையில் உரையாடும் விடயங்களில் மேலதிக கவனத்தினைக் கருத்தில் கொண்டு உரையாடல்களை மேற்கொள்ளுங்கள்.
-
-
- 73 replies
- 16.2k views
- 1 follower
-
-
ஏறக்குறைய இரண்டுநாள் யாழ் இயங்காமல் போனது பலபேருக்கு ஏதோ ஒரு புரியாத மன அழுத்தம் தந்திருக்கும். யாழ்நிர்வாகம் அடிக்கடி யாழை பூட்டும் நோக்கில் இருப்பதாக அறித்ததுண்டு ஒருவேளை யாழ் ஒரேயடியாக பூட்டப்பட்டால் ஓரிரு வாரங்களுக்கு வீட்டில் உள்ளவர்களுடன் பேசவே கோபபடும் நிலையில் பலருக்கு மன உழைச்சலாகும் மீண்டும் யாழை ஒளிரவிட்டதற்கு நன்றி
-
-
- 20 replies
- 961 views
- 1 follower
-
-
வணக்கம் உறவுகளே, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் போது, ஒரு பாடல் ஒலிப்பதிவு நாடாவொன்று வன்னியில் வெளியானது என்பதை நான் அறிந்துள்ளேன். இவ் ஒலிப்பதிவு நாடாவிலே "சுக்குநூறானது சிக்குறு", "மாமரத்தின் மேலே கூவிடும் சின்னப் பூங்குயிலே" போன்ற பாடல்கள் அடங்கியுள்ளன. ஆனால் இன்றுவரை இப்பாடல்களை எந்தவொரு இணையங்களிலும் கண்டுபிடிக்க முடியவில்லை! உங்களிடம் இப்பாடல்களின் விபரங்கள்/ஆவணங்கள் அல்லது கோப்புகள் ஏதும் இருந்தால், தயவுசெய்து என்னிடம் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி, சிவநேசன் சுந்தரம்
-
-
- 9 replies
- 1.5k views
- 1 follower
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2024 அன்று யாழ் இணையம் 25 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 26 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக இம்முறையும் கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம். சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அனுபவங்கள்(பயணங்கள் உட்பட), மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், ஆய்வுகள் போன்று எந்…
-
-
- 26 replies
- 5.4k views
- 1 follower
-
-
"பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது. "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம் [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்…
-
- 2 replies
- 672 views
-
-
"பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு போல... மானம் என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி போல." வேட்டி எப்பொழுதும் இடுப்பில் தான் கட்டலாம். வேண்டும் என்றால் உயர்த்தி கட்டலாம், மடித்து கட்டலாம் அல்லது கால் சட்டை போல் கட்டலாம் [கோவணம் /nஅரைக்கச்சை மாதிரி ]. எப்படியாயினும் அது இடுப்பின் கீழ் பகுதியை மறைத்து தான் கட்டப்படுகிறது. ஆகவே பொதுவாக மானம் காக்க என அதை கூறலாம். இடுப்பில் கட்டும் துணியான வேட்டியில் இருந்தது தான் "புடைவை, புடவை, அல்லது சேலை" வளர்ச்சி பெற்றது என சரித்திரம் கூறுகிறது . அதாவது பண்டைய காலத்தில் பெண்களும் இடுப்பை சுற்றி துண்டு ஒன்றை தான் கட்டினார்கள். தமது மானத்தை காக்க. உதாரணமாக நக்கீரர், புறநானுறு 189 இல் "உண்பது நாழி, உடுப்பவையிரண்டே" …
-
- 0 replies
- 339 views
-
-
"பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்த…
-
- 0 replies
- 344 views
-
-
யாழ் களத்தில் இடைப்பட்ட காலத்தில் பச்சைப் புள்ளி மற்றும் சிவப்பு புள்ளி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. பின்னைய காலங்களில் புள்ளி வழங்கும் முறைமைகள் தவறான முறையில் பாவிக்கப்பட்டமையினால் பல அறிவுறுத்தல்களின் பின்னர் சிவப்பு புள்ளி வழற்கும் முறை முற்றாக நிறுத்தப்பட்டது. பின்னைய காலங்களில் பச்சைப்புள்ளி வழங்கும் முறையிலும் சிலரால் விடயத்திற்கு புள்ளிகள் வழங்கப்படாது எழுதியவருக்கு என்று / இணைத்தவருக்கே புள்ளி வழங்கப்பட்டதை பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிந்தும் புரிந்தும் கொண்டமையால் புள்ளிகள் வழங்கியவர் விபரங்களை மறைக்க வேண்டிய நிலைமைக்கு வந்திருந்தோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்கு பச்சைப் புள்ளிகள் வழங்கியவர்களை பார்வையிடும் வசதியையும் சிவப்பு புள்ளி…
-
- 25 replies
- 2.4k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம், நேற்று (09-டிசம்பர்-2023) முதல் யாழ் இணையம் புதிய வழங்கிக்கு (Server) மாற்றப்பட்டுள்ளது. களப்பொறுப்பாளர் மோகனின் பலநாள் கடுமையான உழைப்பின் மூலம் அதிக பிரச்சினைகள் இன்றி மாற்றப்பட்டுள்ளது. எனினும் பயனர்களுக்கு ஏதாவது தடங்கல்கள், சிரமங்கள் ஏற்பட்டிருந்தால் அறியத்தாருங்கள். பிரச்சனைகளையும் தடங்கல்களையும் கூடிய விரைவில் தீர்ப்பதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொள்வோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புடன், யாழ் இணையம்
-
- 8 replies
- 629 views
- 1 follower
-
-
நண்பர்களே! ஒரு தவறு நடந்து விட்டது. யாழ் இணையம் பற்றிய கருத்துக்கணிப்பு என மேலே ஒரு இணைப்பு இருக்கிறது இல்லையா? அதில் நான் கலந்து கொண்டேன். ஆனால் யாழ் இணையம் என்பது வேறு, யாழ் கருத்துக்களம் என்பது வேறு என்பதை மறந்து யாழ் கருத்துக்களம் பற்றித்தான் கேட்கிறார்கள் என்று நினைத்து அதற்கேற்ப படிவத்தை நிரப்பி அனுப்பியும் விட்டேன். சில நொடிகள் கழித்துதான் என் தவறு புரிந்தது. நான் அனுப்பிய படிவத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டா என இணையத்தளத்தை நடத்துபவர்களிடம் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்! தொல்லைக்கு வருந்துகிறேன்!
-
- 1 reply
- 641 views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே ....இன்று எனது கணணித்திரையில் சிறு குழப்பம். மிகவும் விரிவடைந்து (enlarge ) , சுட்டியிலும் (cursor ) எதோ தவறு . ஒரே குழப்பமாய் இருக்கு. இதனால் ஏதும் தடங்கல் ஏற்படின் மன்னிக்கவும்.
-
- 4 replies
- 559 views
- 1 follower
-
-
இங்கெறிக்கும் இந்தநிலா அங்குமெறிக்கும் எங்தனுயிர்க் கண்ணாளைக் கண்டு சிரிக்கும், இங்கலையும் மென்காற்று அங்குமலையும் என்னுயிரின் இன்பவுடல் தொட்டுவருடும். இங்கரற்றும் நீள்கடல்தான் அங்குமரற்றும், எங்களிடைத் தூரமதை வீணிலுணர்த்தும், கங்குலிருளூடவளின் கன்னம் வழியும் கண்ணீரின் முத்துக்கள் மின்னியொளிரும், ஆசைமனக்கன்னிமனம் வேதனை கொள்ளும், நேசமெனக்கில்லையென நிச்சயம் கொள்ளும், காசு பொருளே பெரிதவர்க்கெனச் சொல்லும் கல்மனதர் என்று எனை வீண்பழி சொல்லும், தேசமதை விட்டு வெகு தூரமிருந்தும் சிந்தனையை அங்கவளின் மீது செலுத்தும் நீசமனத் துன்பமதை எங்கெறியட்டும் நீணிலவே தண்ணொளியைத் தூதுவிடட்டும்.
-
- 0 replies
- 887 views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2023 அன்று யாழ் இணையம் 24 அகவைகளைப் பூர்த்திசெய்து தனது 25 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் மென்பொருள் சிற்பி மோகன் அவர்களால் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு சவால்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்றும் தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் இருக்கின்றது. யாழ் இணையத்தின் ஸ்தாபகர் மோகன் அவர்கள் கடந்த வருட நடுப்பகுதியில் யாழ் இணைய நிர்வாகத்தில் இருந்து முழுமையாக விலகியுள்ளார். எனினும் யாழ் கள உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு அமைய, பல தொழில்நுட்பச் சவால்களுக்கு மத்தியிலும் பிற நிர்வாக உறுப்…
-
- 40 replies
- 3.9k views
- 1 follower
-