வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
யேர்மனி சார்புறுக்கன் நகரமத்தியில் தமிழின அழிப்பு நினைவுகூரப்பட்டது. Posted on May 6, 2022 by சமர்வீரன் 120 0 சிறிலங்கா அரசினால் தமிழீழமக்கள் மேல் நடாத்தப்பட்ட இனப்படுகொலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக இன்று 6.5.2022 வெள்ளிக்கிழமை சார்புறுக்கன் நகரத்தின் மத்தியில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களின் நிலமையை ஓவியமாகத் தீட்டி சார்புறுக்கன் நகரமத்தியில் கண்காட்சி நடாத்தப்பட்டது. இதன்போது இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழீழமக்களுக்கு நகரமத்தியில் தீபம் ஏற்றி மலர்தூவி வணக்கம் செலுத்தப்பட்டது. இந் நிகழ்வானது யேர்மனியில் 4.5.2022 இல் இருந்து 18.5.2022 வரை முக்கிய நகரங்களில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 296 views
-
-
-
- 0 replies
- 442 views
- 1 follower
-
-
மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள்- யேர்மனி Posted on May 16, 2022 by சமர்வீரன் 180 0 Video Player 00:14 மே 18 தமிழின அழிப்பு நினைவு நாள்- யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)
-
- 2 replies
- 364 views
-
-
ஐ.நாவின் வாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி ! ‘இன்னமும் தமிழர்கள் நிற்கின்றார்கள் தமிழினப்படுகொலையினை தடுக்கத்தவறிய ஐ.நா பொதுமன்றின் வாயிலில் முள்ளிவாய்க்கால் வாரத்தின் நினைவேந்தல் கஞ்சி பரிமாறப்பட்டது. மே18 தமிழின அழிப்பினை நினைவேந்தும் தமீழத் தேசிய துக்க நாளினை மையப்படுத்தி, நினைவேந்தல் வார நிகழ்வுகள் தமிழர் தாயகத்தில் உணர்வபூர்வமாக தொடங்கியிருந்ததோடு, அமெரிக்கா நியூ யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வாயிலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. போரைத்தடுத்து, உயிர்களை காப்பாற்ற ஐ.நா தவறியது என ஐ.நாவின் உள்ளக அறிக்கையே தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில், இனப்படுகொலைக்கு உள்ளான தமிழர்களுக்கு ப…
-
- 0 replies
- 548 views
-
-
-
- 12 replies
- 1.6k views
- 1 follower
-
-
(அஷ்ரப் ஏ சமத்) ஊவா மாகாணசபையின் ஆளுனர் ஏ.ஜே.எம். முஸம்மில் மற்றும் பெரோஸா முஸம்மிலின் மகள் ஷஸ்னா முஸம்மில் கடந்த 15 வருடங்களாக லண்டனில் வசித்து வருகின்றாா். அவா் லண்டனில் இருந்து தனக்கு தொலைபேசி மூலம் தந்த விபரங்கள் பின்வருமாறு அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற 2022 மே 5ஆம் திகதி நடைபெற்ற டொட்டஹன் வட்டாரத்திற்கான உள்ளுராட்சித் தோ்தலில் கொன்சவேட் கட்சியில் ஊடாக போட்டியிட்டு கூடிய வாக்குகளைப் பெற்று அந்த வட்டார உறுப்பிணராக தெரிபு செய்யப்பட்டுள்ளாா் . கடந்த வருடமும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்ற மில்டன் நகரில் குறிப்பிட்ட தோ்தலில் போட்டியிட்டு 135 வாக்குகளினால் தோல்விகண்டாா் இம்முறை டொட்டஹன்வட்டராததில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா். அப்பிரதேசததில் இலங்க…
-
- 0 replies
- 412 views
-
-
லண்டனில்... விசா இல்லயென்ற ஒரே காரணத்திற்காக, புதருக்கு அருகிலுள்ள கராஜ் ஒன்றினுள் எந்தவித அடிப்படை வசதிகளுமற்று மறைவாகப் படுத்துறங்கி, ஒரு மணி நேரத்திற்கு... ஒரு பவுண்ட் மட்டுமே, சம்பளமாக வாங்கும் தமிழ் இளைஞர்களைச் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். 2018 ம் ஆண்டு Sky TV, அதை ஆவணமாக்கி ஒளிபரப்பியிருந்தது. மனம் பதறி, ஒரு தடவை நிலை குலைந்திருக்கும். அவர்களையே ஒத்த இளைஞர்கள்... இங்கு ஃபிரான்ஸிலும். சில தமிழ் முதலாளிகளிடம் சிக்கிச் சொல்லெண்ணாத் துன்பத்திற்கும். மன அழுத்தத்திற்குமுள்ளாகி வருகிறார்கள். சொந்த நிலங்களை விட்டு அகதிகளாய்ச் சிதறினாலும்... இன்னொரு வாழ்க்கையை எப்படியாவது அமைத்துக் கொள்ள…
-
- 31 replies
- 3.9k views
-
-
பிரெஞ்சு - பொபிக்னி நகரசபையின் முதல்வரை சந்தித்தார் யாழ்.மாநகர சபை முதல்வர் பிரெஞ்சு நாட்டிலுள்ள பொபிக்னி (Bobigny) நகரசபையின் முதல்வருக்கும் யாழ்.மாநகர சபை முதல்வருக்குமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 25ஆம் திகதி பொபிக்னி நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழர்கள் தங்களுடைய நீண்ட கால அரசியல் அபிலாசைகள் மற்றும் பொபிக்னி நகர சபையுடன் இணைந்து யாழ்.மாநகர சபை எவ்வாறு பணியாற்றலாம் என்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இக்கலந்துரையாடலில் பொபிக்னி நகர முதல்வர் அதன் பிரதி முதல்வர், நகர சபை உறுப்பினர்கள், யாழ்.மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்…
-
- 0 replies
- 438 views
-
-
புதிய நாஷனாலிற்றி மற்றும் எல்லைக்கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய சட்டமூலம் பிரித்தானிய நாடாளுமன்றின் அங்கீகாரத்தின் பின் பிரபுக்கள் சபையின் அங்கீகாரத்துக்காக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில்.. அது சட்டமானால்.. பிரித்தானிய பூர்வீகமற்ற.. பிற பூர்வீக பின்னணியில் இருந்து பிரித்தானிய குடியுரிமை பெற்ற ஒருவரின் குடியுரிமையை அவருக்கே அறிவிக்காமல் அரசு பறிமுதல் செய்யலாம். இதன் பிரகாரம் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள்.. அல்லது பாரம்பரியமாக இன்னொரு நாட்டில் குடியுரிமை பெற தகுதியானவர்களின் குடியுரிமையை அரசு சாக்குப் போக்குக் காரணத்துக்காகக் கூட பறிமுதல் செய்யும் பரந்த அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். உலகில்.. அதிக அளவில் வழங்கிய பிரஜா உரிமையை பறிக்கும் நாடுகளில் …
-
- 0 replies
- 663 views
-
-
https://fb.watch/cC7DxWVuCX/
-
- 0 replies
- 430 views
-
-
முதல் முதலாக நாசாவில் பணியாற்றிய ஈழத்தமிழ் விஞ்ஞானி கலாநிதி துரைசாமி பற்றிய பகிர்வு.
-
- 0 replies
- 912 views
-
-
இவ்வாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாவுக்குள் கடல் மற்றும் லொறிகளின் ஊடாக சட்டவிரோதமாக உள்நுழையும் அகதிகளில் குறிப்பாக குடும்பமாக அன்றி.. தனியாக வரும் இளைஞர்களை ருவண்டாவில் குடியேற்றும் முறைமையை கைக்கொள்வதற்கான இரு தரப்பு உடன்படிக்கையில் ருவண்டாவும் பிரித்தானியாவும் கைச்சாத்திட்டுள்ளதோடு.. இத்திட்டம் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கவும் பட இருக்கிறது. இதன் மூலம் ஆபிரிக்க நாடான ருவண்டாவில் அதற்கு சம்பந்தமில்லாதவர்களும் குடியேறும் நிலை ஏற்படும். பிரித்தானிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் எதிர்ப்புக் காட்டி வரும் நிலையில்.. டோவர் பகுதி வாழ் பிரித்தானிய மக்கள்.. இதனை வரவேற்கவும் செய்துள்ளனர். பிரக்சிட் மூலம் பிரித்தானிய எல்லைகள் இறுக்கப்படும்..…
-
- 1 reply
- 620 views
-
-
தமிழ்க் கல்விக்கழகத்தின் 32 ஆவது அகவை விழா-2022யேர்மனி மத்தியமாநிலம். 32ஆவது அகவை தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது அகவை நிறைவு விழாவைச் சிறப்போடு தொடங்கியுள்ளது. இவ்வாண்டும் ஐந்து அரங்குகளில் நடாத்துவதற்குத் திட்டமிட்டவாறு முதலாவது அரங்கம் 09.04.2022 சனிக்கிழமை மத்திய மாநிலத்தின் வெஸ்லிங் (Wesseling) நகரிலே நிறைவுற்றுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீர…
-
- 0 replies
- 696 views
-
-
இலண்டன் தமிழ் புத்தகக் கண்காட்சி : பௌஸரை பாராட்டத்தான் வேண்டும்! March 28, 2022 பௌஸர் மஃறூப் அரசியல் ரீதியாக பலரால் விமர்சிக்கப்படுபவர்தான். தமிழரும் விமர்சிப்பர், முஸ்லிம்களும் அப்படியே. இவர் மீது சந்தேகம் கொண்டவர்களும் உண்டு. அவரோடு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்காக என்னில் இருந்து விலகிய ஒரு நண்பரும் உண்டு. இதுவெல்லாம் சேர்ந்ததுதான் இலங்கை (ஈழத்தமிழர்?) தமிழரின் புலம்பெயர் வாழ்வு. ஆனால், அதற்காக பௌஸர் செய்யும் சில வேலைகளை வெறுமனே கடந்து போய்விட முடியாது. இங்கு புலம்பெயர்ந்த மண்ணில், குறிப்பாக லண்டனில், ஈழத்தமிழர் வட்டாரங்களைப் பொறுத்தவரை, மைய நீரோட்டத்தில் இருப்பவையாக குறிப்பிடப்படும் சில அமைப்புக்களை தவிர்த்துப்பார்த்தால், குறிப்பாக இந்…
-
- 14 replies
- 1.1k views
-
-
நாளையதினம் 22.04.22 அன்று அகதிகள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட பலர் யேர்மனியில் இருந்து தமிழ் அகதிகள் திருப்பி அனுப்பப்பட இருக்கின்றனர். ஏன் இந்த நிலை? அகதி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் எப்படி Paragraph 25B வீசாவை பெற்றுக் கொள்ள முடியும்? இந்த வீடியோ பகிர்வில் விபரங்கள் பகிரப்பட்டுள்ளது. உங்கள்ளுக்கு தெரிந்தவர்களுக்கு இச்செய்தியை பகிர்ந்து உதவுங்கள்.
-
- 0 replies
- 801 views
-
-
Sri Lanka tests UN's patience on human rights.. தமிழினப் படுகொலையில்.. மனித உரிமைகள் விடயத்தில் ஐநாவின் பொறுமை சோதிக்கும் சொறீலங்கா என்று தலைப்பிட்டு.. புதிய செய்தி வெளியிட்டிருக்கும்.. பிபிசி.. சமீபத்திய சொறீலங்கா பொருண்மிய நெருக்கடியையும் தொட்டு செய்தி வடித்துள்ளது. The European Union has already warned it will suspend tariff free access for Sri Lankan companies if there is no progress on human rights. The island's exporters sent garments worth more than $2bn to the bloc in 2020. Given Sri Lanka's foreign exchange reserves crisis, a bailout from the International Monetary Fund looks on the cards. Last month, UN Human …
-
- 0 replies
- 705 views
-
-
நாசாவில் நீண்டகாலம் கடமையாற்றிய யாழ் தமிழர் உயிரிழப்பு #Srilanka#America#Jaffna#Nasa#Kuppilan#Vaithilingam Thuraisamy#Apollo-11 அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி நேற்று(17) தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார். 1968 ஆம் ஆண்டு நாசா விண்வெளி மைய ஆராய்ச்சி மையத்தில் அப்பலோ-11 ஐ அனுப்புகின்ற குழுவில் அங்கம் வகித்தவர் வைத்திலிங்கம் துரைசாமி. அவர் பிறந்து வளர்ந்த வீடு தற்போது குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமமாக விளங்குகின்றது. கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி அண்மையில் தனது 90 ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில்யாழ்ப்ப…
-
- 18 replies
- 1.6k views
-
-
திருமதி ராஜி பீட்டசன் மீதான தாக்குதல் பின்னணி என்ன?
-
- 0 replies
- 1.2k views
-
-
கந்தையா தமிழ் தொழில் முனைவோர்க்கு முன்னோடி.
-
- 0 replies
- 1.4k views
-
-
யேர்மனியில் பிறந்த அச்சா பிள்ளையள் ஆரபி, மகிழினி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? *கதைப்போம் வா "
-
- 0 replies
- 949 views
-
-
மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி Posted on January 8, 2022 by சமர்வீரன் 1032 0 அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் போராடி வரும் நாம், இக்காலப்பகுதியில் சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்ட, இன்றும் நிகழ்த்தப்பட்டுவரும் இன அழிப்பிற்கான நீதி வேண்டியும் அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையினை வலியுறுத்தியும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அமைதி வழியில் போராடி வருகின்றோம். இன்று யேர்மனியில் பதினாறு ஆண்டுகளுக்கு பின்பு ஓலாவ் சொல்ச் (Olaf Scholz) அவர்களது தலைமையிலான ஒரு புதிய அரசு பதவியேற்ற நிலையில், தமிழ்மக்களாகி…
-
- 2 replies
- 1k views
-
-
மெல்போர்னில் வசிக்கும் 24 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவருக்கு நேற்று ( 2, மார்ச், 2022) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 25 இணையவழி சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றங்களுக்காக குறித்த நபருக்கு 13 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 12 முதல் 17 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வற்புறுத்தி, தங்களைப் பற்றிய வெளிப்படையான பாலியல் படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புமாறு வலியுறுத்தி அந்தரங்க தகவல்களை சந்தேக நபர் பெற்றுள்ளார். பின்னர் தனது கோரிக்கைக்கு இணங்காவிட்டால் பெறப்பட்ட அந்தரங்க தகவல்களை பாதிக்கப்பட்ட சிறுமிகளது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவேன் என்று அச்சுறுத்தல் விடுத்து, பரிமாற்றமும் மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக அள…
-
- 1 reply
- 513 views
-
-
லண்டனில் தமிழர்கள் தமிழர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி முதிய தமிழ் தம்பதியர் வீட்டை இழக்கும் அபாயம்!!! லண்டன் குரொய்டனில் தங்கள் சொந்த வீட்டில் வாழும் முதிய தம்பதியினர் தங்கள் வீட்டை பறிகொடுக்கும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 200,000 பவுண்களை (6.6 கோடி ரூபாய்) முதலீட்டுக்காகப் பெற்றுக் கொண்ட தமிழர் ஒருவரால் நடத்தப்படும் நிறுவனம் ரெய்டன் அவர்களை நடுத்தெருவில் விட்டுள்ளது. ரகு லோகன் என அறியப்பட்ட ராகுலன் லோகநாதன் (43) என்பவரினால்; கொம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்நிறுவனத்திற்கே இத்தம்பதியினர் முதலீட்டுக்காக 200,000 பவுண்களை வழங்கி இருந்தனர். தற்போது இந்நிறுவனம் அவர்களுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டுள்ளது. அந்நிறுவனத்தி…
-
- 22 replies
- 2.1k views
-
-
எமது தேசியக்கொடி போராடும் இனங்களுக்கெல்லாம் ஆத்ம பலம் கொடுக்கவல்லது. எம்மைப்போலவே விடுதலை வேண்டி நீண்ட நெடிய போராட்டம் செய்பவர்கள்தான் குர்து இனமக்கள். அண்மையில் பிராங்பேட்டிலிருந்து பிரான்ஸ் ஸ்ராஸ்பேர்க் நோக்கிய நடைப்பயணமொன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அப்போராட்ட ஆரம்நிகழ்விற்காக யேர்மன் த.ஒ.கு. அரசியற்பிரிவினரையும் அழைத்திருந்தார்கள். எம்மவர்களும் வழமைபோல் எமது தேசியக்கொடி சகிதம் பிரசன்னமாகியிருந்தார் கள். போராட்டத்தில் அவர்களது தேசியக்கொடிக்கும் ஒச்சலானின் படங்களுக்கும் அனுமதியில்லை. இந்நிலையில் அவர்களிற்கு என்னதோன்றியதோ நடைப்பயணம் ஆரம்பிக்கும் நேரம் திடீரென எமது தேசியக்கொடியினை ஏந்தியவரை அழைத்து முன்னே செல்லும்படி நயமாகக்கேட்டுக்கொண்டார்கள். தமிழீழத் தேசிய…
-
- 1 reply
- 803 views
-
-
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டுப் போராடுவோம். மனித உரிமைகள் ஆணையகத்தின் 49 வது கூட்டத்தொடரினை முன்னிட்டு, சிறிலங்காப் பேரினவாத அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழினப் அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான உறுதியான தீர்வு என்பதனை வலியுறுத்தியும் மனிதநேய ஈருருளிப்பயணம் 24வது தடவையாக ஐ.நா நோக்கி ஆறு ஐரோப்பிய நாடுகளூடாக பயணிக்க இருக்கின்றது. • 16/02/2022 அன்று, Wallington green , SM6 OTW England ல் மு.ப 10.00 மணிக்கு ஆரம்பமாகி பிரித்தானியப் பிரதமர் இல்லத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டத்தோடு தொடர்ந்து •18.02.2022 அன்று, நெதர்லாந்தில் உள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தைச் சென்றடைந்து, அங்கு 13:30 மணிக்கு கவனயீர்ப்பு ப…
-
- 0 replies
- 451 views
-