வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
கனடாவில் பிரயாண முகவரின் சுத்துமாத்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு ஒரு பிரயாண முகவரிடம் ரிக்கட் புக் பண்ணியிருந்தார்கள் ஆனால் அந்த முகவர் சுமார் 75 பக்தர்களிடத்தில் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நாமம் போட்டுவிட்டார் மேற்படி முகவரிடம் ரிக்கட் பெற்ற சிலர் 28ம் திகதி விமான நிலையம் சென்ற பொழுதே மேற்படி முகவரின் குட்டு அம்பலத்துக்கு வந்தது பிரயாணத்துக்கு ஆயத்தமாக சென்றவர்களுக்கு ரிக்கட் புக் பண்ணப்பட்டிருக்கவில்லை இதனை அறிந்து அந்தமுகவரிடம் சபரிமலை பிரயாணத்துக்கு ரிக்கட் புக் பண்ணிய ஐயப்ப பக்தர்கள் மேற்கண்ட முகவரின் நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளார்கள் மேலதிக விபரம் பின்னர்
-
- 6 replies
- 2.7k views
-
-
தமிழகத்தில் ஈழ அகதிகள் Pathivu Toolbar ©2005thamizmanam.com S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story) நூலினை அண்மையில் வாசிக்கக் கிடைத்தது. Periyar Era என்னும் சஞ்சிகையில் அவர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து அந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே அவரைப் பற்றி ஆனந்த விகடன் இதழ் ஒன்றில் வாசித்த நினைவிருந்த போதும், இந்த நூலின் ஊடாக அவரை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது. தமிழீழம் என்னும் ஒரு தேசத்தின் நிர்மாணம் குறித்து, நெடிய கனவுகளோடு இருந்த அந்த மனிதர் இன்று கண்டுக…
-
- 2 replies
- 1.3k views
-
-
எல்லாரையும் ஏத்தி போக கப்பல் வருமா என்ற அசத்தலான பாடல் இராமேஸ்வரம் படம் பார்த்து பல மணி நேரம் ஏனோ என் மனதில் அசை போட்டு கொண்டிருந்தது .மசாலா படவகை படங்கள் போன்று பத்தோடு பதின்னொன்று வகையான படமாக இருந்தாலும் கூட அகதியாக என்னை இந்த திரைபடத்தில் தேடியதால் . அகதியாக புலம் பெயர்ந்த ஆரம்ப கால கட்டத்தை நோக்கி சிந்திக்க வைத்துள்ளது.தாய் நாட்டை விட்டு வலிந்து வெளியேறி அல்லது வெளியேற வேண்டி சூழல் வந்து இந்தியாவை வந்து அடைந்தால் என்ன ஜரோப்பாவை வந்து அடைந்தால் என்ன வட அமெரிக்காவை வந்து அடைந்தால் என்ன ; வெளி உபாதைகளில் சிறிது வித்தியாசம் வேறுபாடு இருந்தாலும் மன ரீதியாக http://sinnakuddy.blogspot.com/2007/12/blog-post.html
-
- 3 replies
- 2k views
-
-
-
கடந்த மாதம் லண்டனில் தமிழ் தேசியத்தின் இரு முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. 1. சுப தமிழ்ச்செல்வனின் அஞ்சலிக் கூட்டம். 2. மாவீரர் நாள் இவ்விரு நிகழ்விலும் யாரும் எதிர் பாராத அளவில் மக்கள் வெள்ளம் அலை மோதியது. குறிப்பாக சுப தமிழ்ச்செல்வனின் நினைவு விளம்பரப்படுத்தாத நிலையில், அதுவும் வேலை நாளில், இரவு நேரத்தில் ஹரோ லெஷர் சென்ரரில் நடை பெற்றது. பொல்லத குளிரிலும் கைக்குழந்தைகளை காவியபடி பெற்றோர்களும், தள்ளாத வயதில் வயோதிபர்கள் என்று கூட்டம் அலை மோதியது. மண்டபத்திற்கு முன் சென்றவர்கள் வெளியேற்றப்பட்டு பின் வந்தவர்களுக்கு இடமளிக்கப்பட்டது. மண்டபத்தை சூழ உள்ள வீதிகள் வாகனங்கள் நகர முடியாத அளவில் நிரம்பி இருந்தது. பலர் மண்டப வாசலுக்கே வரமுடியாமல் திரும்பவும் நேர்ந்தது.…
-
- 7 replies
- 2.3k views
-
-
ஒலிவடிவம்: 1. ஈ சினிப்ஸ் 2. ஐஜிக் பாடல்வரிகள்: தமிழ் - Thusnavis ஆங்கிலம் - கலைஞன் குரல்: கலைஞன் லாவண்யா அபிஷன் இசை: டிசான் புதிய வானமும் புதிய வையமும் புலரும் நேரமிது! கன்னி மரியிடம் யேசு பாலகன் பிறந்த இரவும் இது! புதிய வானமும் புதிய வையமும் புலரும் நேரமிது! கன்னி மரியிடம் யேசு பாலகன் பிறந்த இரவும் இது! எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்! மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்!! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்! jESUS WE LOVE YOU! weLcome to the world! ஆ... ஆ.... ஆ..... ஆ... பா வங்கள் சூழ்ந்த உலகம் தூய்மை பெற தா வீது மரபில் திருமகன் தோன்றினான்! பா வங்கள் சூழ்ந்த உலகம் தூய்மை பெற தா வீது மரபில் திருமகன் தோன்றினான்! மண்ணில்…
-
- 14 replies
- 2.7k views
-
-
சிட்னி தொழில்நுட்ப பல்கலைகழக (UTS) தமிழ் சங்கத்தின் வருடாந்த கலைநிகழ்ச்சி அடுத்த வருடம் தை மாதம் 5ம் (05/01/2008) திகதி Lidcombe ukrenian மண்டபத்தில் மலை 06 01 மணி முதல் நடைபெற உள்ளது. கடந்த வருடத்தை போல மிகவும் சிறப்பாக நடாத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுவருகிறது.. அழைப்பிதழ் மேலும் விபரங்கள் தொடரும்........
-
- 4 replies
- 1.5k views
-
-
நேசக்ககரம் திட்டம் இரண்டு யாழ் உறவுகளிற்கு வணக்கம் நாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி யாழ் நேசக்கரத்தின் இரண்டாவது திட்டத்தினை தமிழீழப் பெண்கள் அமைப்பிற்கு வழங்குவதாக முடிவெடுத்திருந்தோம் இந்த மாதப்பங்களிப்பினையும் சேர்த்து இந்த மாத இறுதியில் அனுப்ப இருப்பதால் முடிந்தவர்கள் தயவு செய்:து தங்கள் நாட்டிற்கு பொறுப்பானவர்களிடம் உங்கள் பங்களிப்பினை செய்யும்படியும் அதே வேளை அந்தந்த நாட்டு பொறுப்பானவர்கள் இந்த மாதம் 31 ந் திகதியுடன் பங்களிப்பு பெற்று கொள்வதை நிறுத்தி அதனை அனுப்பி வைக்கும் படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த திட்டம் பங்குனி மாதமளவிலேயே அறிவிக்கப்படும். நன்றி
-
- 3 replies
- 1.7k views
-
-
African National Congressசின் புதிய தலைவராக ஜேக்கப் சூமா தேர்வு செய்யப்பட்டிருப்பது பரபரப்பான பல கருத்தாடல்களை உலக அரங்கில் தோற்று வித்துள்ளது. இது தொடர்பான தகவல்களைக் கேட்டபோது எனக்குள் ஒரு சிந்தனை. எனினும் இச்சிந்தனையை ஆதாரப்படுத்துவற்கான ஆணித்தரமான ஆதாரங்கள் எவற்றையும் நான் இது வரை அறியவில்லை. எனவே இது முற்றுமுழுதான ஒரு Controversy Theory என்ற ரகத்திற்குள் தான் அமைய தற்போது வாய்ப்புள்ளது. எனினும் யாழ் கள அவதானிப்பாளர்களின் இவ்விடயம் தொடர்பான கருத்தை அறிவதற்காக இப்பதிவினை இங்கிடுகின்றேன். African National Congress உறுப்பினர்கள் இன்று ஜேக்கப் சூமாவை அடுத்த தலைவராகத் தேர்ந்தெடுத்து விட்டார்கள். இருப்பினும் பல மட்டங்களில் இருந்தும் சூமா பற்றிக் கொடுக்கப்படும் விபரங்கள…
-
- 6 replies
- 2.1k views
-
-
தமிழ்த்தேசியம் என் தாத்தா வீட்டுச்சொத்து என்னது சாத்திரி புதுசா ஒரு புலுடா விடுகிறார் என்று யோசிக்க வேண்டாம். இது நான் விடுகின்ற புலுடா அல்ல புலம்பெயர் தேசத்தில் தங்களை தமிழ்த்தேசியவாதிகளாக காட்டிக்கொள்கின்ற சிலர் விடுகின்ற புலுடா.அதுமட்டுமல்ல இவர்கள் சில எழுதப்படாத சட்டங்களையும் வைத்திருக்கின்றார்கள் அதாவது தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான எந்தவொரு செயற்பாடுகளோ அல்லது ஈழப்போராட்டத்திற்கு ஆதரவான அல்லது ஈழப்போராட்டத்தின் ஆதரவை புலம்பெயர் தேசத்தில் விரிவுபடுத்தும் வேலையை இவர்கள் மட்டும்தான் செய்யவேண்டும் அல்லது இவர்களிடம் விசேட அனுமதிபெற்றுத்தான் செய்ய வேண்டும். தமிழ்த்தேசியத்தின் மீது உள்ள பற்றால் உண்மையான தமிழுணர்வால் யாராவது ஏதாவது செயற்பாட்டை செய்துவிட்டால் உடனே…
-
- 41 replies
- 8.9k views
-
-
புதன் 05-12-2007 18:37 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] தமிழ் மக்களை திருப்பி அனுப்ப வேண்டாம் - ஜரோப்பிய மனித உரிமைகள் ஆணையகம் அகதி அந்தஸ்து நிராகரிக்கப் பட்டவர்களை சீறீலங்காவிற்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ஜரோப்பிய மனித உரிமைகள் ஆணைணயம் தீர்மானம் எடுத்துள்ளது. ஐரோப்பிய மனித உரிமைகள் ஆணையத்தினால் பிரான்சின் வெளிநாட்டமைச்சருக்கு அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்... முக்கியமாக தற்போது சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துக் காணப்படுகிறது. சொந்த நாட்டில் உயிர்ப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத காரணத்தினாலேயே சிறீலங்கா தமிழ் மக்கள் அகதியாக இடம் பெயர்ந்து வருகிறார்கள். தற்போதய அந் நாட்டின் நிலைமையைக் கவனத்தில் கொண்டு…
-
- 0 replies
- 735 views
-
-
இயற்கை அனர்த்தம் தந்த ஈரம் காணொளி பார்ப்பதற்கு இசைவட்டின் ஒரு பகுதியை கேட்பதற்கு:- http://www.esnips.com/doc/4e88894c-7da1-4f...et=flash_record நன்றி
-
- 1 reply
- 1.5k views
-
-
கல்விச் சமூகம் என்று பெருமை கொள்கின்ற தமிழர்களில் பலர் புலம்பெயர்ந்து வருகின்ற போது அவர்களினுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வரவேண்டியிருந்தது. கல்வி மீது பெரும் பற்று இருந்தும், அதை தொடர முடியவில்லையே என்ற வருத்தத்தோடு இருக்கின்ற பலரை புலம்பெயர்ந்த நாடுகளில் காண முடியும். இவர்கள் தமது கல்வியை ஏதாவது வகையில் தொடர முடியாதா என்று ஏக்கத்தோடு ஒரு வாய்ப்பினை எதிர்நோக்கியிருப்பார்கள். இவர்களோடு தமிழ் மொழியின் மீது பற்றுள்ளவர்களும் ஏதாவது வகையில் மேற்படிப்பை தொடர விரும்புவதை காணக் கூடியதாக இருக்கும். இவர்களுக்காக பல்கலைக் கழகப் பட்டப் படிப்புக்களை புலம்பெயர்நாடுகளில் நடைமுறைப்படுத்துவதற்கு பல நிறுவனங்கள் முயன்றன, முயன்றுவருகின்றன. ஆனால் அவைகளில் பெரும்பாலான முயற்…
-
- 19 replies
- 3.7k views
-
-
கொழும்பில் நேற்று அப்பாவித் தமிழர்களைக் கைது செய்த நேரம் இராமகிருஷ்ண மிசனின் கம்பவாரிதி ஜெயராஜ்யுக்கு கொழும்பின் பிரபல வர்த்தகர்களின் தலைமையில் பாராட்டு விழா. சொந்த இன மக்கள் கைது செய்யப்பட்டது இராமனின் அடிப்பொடிக்குத் தெரியவில்லையா? இவருக்கும் நீரோ மன்னனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
-
- 4 replies
- 2.4k views
-
-
Posted on : Sat Dec 1 6:20:00 2007 இலங்கைத் தமிழர் இருவர் ஜெனிவாவில் கைது! ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தைப் படம் பிடித்த இலங்கைத் தமிழர்கள் இருவர் அந்த நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் 30 வயதுடைய பெண் ஒருவரும், இத்தாலி நாட்டில் வசிப்பவருமான 27 வயதுடைய ஆண் ஒருவருமே கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஜெனிவாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடவுச்சீட்டை புதுப்பிப்பது போல் வந்த இவர்கள் அலுவலகக் கட்டடப்பகுதியை படம் பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர் என்ற கூறப்பட்டது. (சி) http://www.uthayan.com/
-
- 1 reply
- 1.5k views
-
-
நமக்கு தேர்தல் என்றால் என்ன ஞாபகத்துக்கு வரும் இதுவரை தொகுதிக்கு வராத அரசியல் வாதிகள் தமது பரிவாரங்களுடன் வீடுவீடாக பிரச்சாரம் என்ற போர்வையில் செய்யும் அரசியல் விபச்சாரம்.காதை செவிடாக்கும் பட்டாசு சத்தம்.சந்திக்கு சந்தி ஆளுயர கட்டவுட்.சுவருக்கு சுவர் போட்டிக்கு போட்டியாக போஸ்டர்.போட்டி அரசியல்வாதிகளை அசிங்கப்படுத்தும் அல்லது அவர்களை கொச்சைபடுத்தும் அரசியல் சாக்கடை என்பவைதானே நமக்கு ஞாபகம் வரூம். ஆனால் இவ்ளவற்றையும் நான் அவுஸ்திரேலிய தேர்தலில் காணவில்லை.எந்தவித பரபரப்பும் இல்லாத தேர்தல்.உண்மையை சொல்லப்போனால் சனிக்கிழமை தேர்தல் என எனக்கு தெரிந்தது வெள்ளி இரவே அதுவும் தொலைகாட்சி பார்த்து அறிந்து கொண்டேன்.அவ்வளவு அமைதியாக நேர்மையாக நடந்தது தேர்தல் சுவருக்கு சுவர் எந…
-
- 1 reply
- 959 views
-
-
நவம்பர் 27 என்பது தமிழீழ தேசியப் போராட்டத்திற்காக தாம் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்கும் புனிதமான நாளாகும். உலகம் எல்லாம் பரந்து வாழும் அனைத்து தமிழ் மக்களும் அந்த வீரபுருசர்களை சோகத்துடன் எண்ணிப் பார்க்கும் நாள். இந்த புனித நாளில் தமிழர்கள் களியாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதே, பங்கேற்பதே வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது, மன்னிக்க முடியாது. இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு வந்து பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களின் அமைப்பு மாவீரர் நாளான நவம்பர் 27 இல் CLUB Night என்ற பெயரில் கூத்தாட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இவ் நிகழ்ச்சி UCL University இலங்கை மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மற்றைய பல்கலைக்கழகங்களில் இருந்த…
-
- 10 replies
- 4.5k views
-
-
ஒரு பேப்பருக்காக எழுதிய கட்டுரையை இங்கும் இணைக்கிறேன் நவம்பர் 27 தமிழ் மண் விடுதலையடைய வேண்டும்,தமிழ் மக்கள் அமைதியுடனும் சந்தோசத்துடனும் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் எதிர்காலத்தை விருப்பு வெறுப்புகளை சொந்த பந்தங்களை எல்லாம் துறந்து உறுதியுடன் போராடி தங்கள் உயிர்களைத் தந்த மாவீரர்களை நினைவுகூருகின்ற நாள். தியாகம் என்ற சொல்லின் எல்லை எது என்ற கேள்விக்கு உதாரணம் காட்டக் கூடிய வகையில் வாழ்ந்து தமிழ் மண்ணின் விடிவிற்காய் தம் வாழ்வை முடித்துக் கொண்ட தியாக சீலர்களுக்கான நாள் மாவீரர் தியாகம் இலகுவில் மறக்கப் படக் கூடியதா? இளமைக் காலத்துக்கே உரிய குறும்புகள், குழப்படிகள், சீண்டல்கள் இவை எல்லாவற்றையும் புறம் தள்ளி, இன்னும் சரியாகச் சொல்வதானால் தங்களைத் தா…
-
- 0 replies
- 1.2k views
-
-
துக்ளக் வாரப்பத்திரிகைக்கு ஐரோப்பா வாழ் தமிழர்கள் தீவைப்பு ஈழத்தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகத் தனது துக்ளக் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவரும் சோ ராமசாமி, சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு..ப. தமிழச்செல்வன் குறித்து 21.11.2007 அன்று வெளிவந்த துக்கள் வார இதழில் விஷமத்தனமான தலையங்கம் எழிதியதால் ஆத்திரமுற்ற தமிழர்கள் பாரிஸ் கடைகளுக்கு வந்திருந்த துக்ளக் பத்தரிகைகள் அனைத்தையும் வீதியி;ல் போட்டுக் தீயிட்டு கொழுத்தினர். அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவில் உள்ள தமிழ் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தமது நிறுவனங்களில் துக்ளக் பத்திரிகையை விற்பனை செய்வதில்லை என்ற முடிவையும் எடுத்துள்ளனர். http://www.pathivu.com/
-
- 55 replies
- 9.3k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேச தலைவர் அமெரிக்காவில் கைது வீரகேசரி இணையம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேசத் தலைவர் வினாயகமூர்த்தியும், அவரது மனைவியும் அமெரிக்கப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வுப் பணிகளுக்கெனப் பெருமளவு நிதியைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரால் சேகரித்துப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவிற்கு வழங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டு, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்கத் திறைசேரி முடக்கியுள்ளது.
-
- 1 reply
- 1.9k views
-
-
மீண்டும் ஒரு கோசிப் பாடசாலைகளை பற்றியது.சிட்னியில் தமிழ் பாடசாலைகளிள் ஒவ்வொரு ஆண்டும் கலை விழா வைப்பார்கள் அதில் மாணவ மாணவிகள் பல கலைநிகழ்ச்சிகளை நடத்துவார்கள் அநேகமான இவ்வாறான கலை விழாக்களிற்கு அடியேன் சமூகம் அளித்துள்ளேன்.பாடசாலை மாணவர்களிள் 96% மாணவர்கள் ஈழ தமிழர்களின் வாரிசுகள் ஆனால் அவர்களின் கலைபடைப்புகள் எல்லாம் இந்திய தேசியத்தை பிரதிபலிப்பதாக இருந்தது இருக்கின்றது.உதாரணமாக சொல்ல போனா மகாபாரதம்,இராமயணம் மகாத்மா காந்தி,இந்திரா காந்தி,ரவிந்திரநாத் தாகூர் போன்றோர்களின் கருத்துகளையும் அவர்களையும் பிரதிபலிக்க கூடிய கலைவடிவங்களை தான் இந்த மாணவ,மாணவிகள் மேடை ஏற்றுவார்கள் இது அவர்களின் குற்றம் இல்லை அவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை தான் செய்து காட்டுகிறார்கள் இப்படியான கலைபடைப்…
-
- 4 replies
- 2.2k views
-
-
தமிழ்ச்செல்வன்: காலங்களை கடந்த பயணி! -ஒரு புலத்து செயற்பாட்டாளனின் அனுபவப் பதிவு- பேச்சுவார்த்தை குழுவின் தலைவர்! சர்வதேச உறவாடல்களை நிகழ்த்தும் இராஐதந்திரி! விடுதலையின் அரசியலை முன்னெடுக்கும் பொறுப்பாளர்! மனிதநேயமும்- சகோதரத்துவமும் நிறைந்த போராளி! 02 நவம்பரில் பிரகேடியர் தமிழ்ச்செல்வனை வரலாறு தன்னுடன் கூட்டிச்சென்று விட்டது. பிரிகேடியர் தமிழ்செல்வனை கடந்து நாட்கள் ஓடத்தொடங்கிவிட்டன. இந்த நாட்கள் வாரங்களாகி- மாதங்களாகி- வருடங்களாகி- தாசப்தங்களாகி- நூற்றாண்டுகளாகி இடையுறாது நகர்ந்துகொண்டே இருக்கப் போகின்றது. இந்தப் பயணத்தில் எங்கள் தேசம் இழந்த மற்றுமொரு கிட்டண்ணராக தமிழ்ச்செல்வன் எங்கள் மனதுக்குள் வந்து பதிகின்றார். இதனால்தான் …
-
- 0 replies
- 804 views
-
-
கனடா, ரொரண்டோவில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மைந்தர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின் ஒளித்தொகுப்பு.
-
- 0 replies
- 1.2k views
-
-
நீண்ட காலங்களாக எம்மக்கள் மீதான சிங்கள இனவெறி அரசின் கொடுமைகளைப் பாராமுகமாக இருந்த பிரித்தானிய ஊடகங்கள், சிலரது அயராத முயற்சிகளை அடுத்து கண் விளிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு 7.35 மணியளவில் "Channel4" தொலைக்காட்சியானது "Unreported World", இலங்கையில் சிங்கள இனவெறி அரசினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைக்கும்பல்கள், காணாமல் போவோர், கடத்தப்படுவோர், ஒட்டுக்கும்பல்களின் படுகொலைகள் என பல பக்கங்களை பிரித்தானிய மக்களுக்கு எடுத்துக் காட்டியது. குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் வாழ்வியல், சிங்களப் படைகளினால் எவ்வாறு நாசம் செய்யப்படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கிழக்கில் கருணா ஒட்டுக்கும்பலின் கோர முகங்கள், கிழக்கு மக்களின் குர…
-
- 14 replies
- 3.8k views
-
-
இடி வீழ்ந்து நொறுங்கிய இதயத்தோடு ஒரு வாரம் போய்விட்டது. இன்னும் செல்வன் அண்ணா பற்றி வரும் செய்திகள் பார்க்கும்போது விம்மல் முட்டுகிறது. எல்லாமே வெறுமையாகி விட்டது போன்ற ஒரு உணர்வு. சரி. இனி விசயத்துக்கு வருவோம். என்னுடன் வேலை பார்க்கும் இரண்டு யாழ்பாணத்து தமிழ் நண்பர்களை சென்ற திங்கட்கிழமை சந்தித்தேன். ஒருவரிடம் கண்டவுடன் கேட்ட கேள்வி, "என்னப்பா, எங்கட தமிழ்ச்செல்வனை கொண்டுட்டாங்கள்". அதற்கு அவர் கேட்ட கேள்வி, "எந்த தமிழ்ச்செல்வனை ?". எனக்கு தூக்கிவாரிப்போட்டுது. "அதுதானப்பா, எங்கட அரசியல் துறைப்பொறுப்பாளர்" என்று நான் சொன்னேன். அதற்கு அவர் கேட்ட கேள்வி," சண்டையிலயோ செத்தவர் ?". அதற்கு மேல் என்னத்தைச் சொல்ல ? மற்றவரிடம், "என்னண்டப்பா இந்த வீகெண்ட் போச்சுதெண்டே…
-
- 17 replies
- 6.1k views
-