வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5822 topics in this forum
-
இலங்கைத்தீவில் சிறிலங்கா இராணுவ பலாத்காரத்துக்கும் அச்சுறுத்தலும் முகம்கொடுத்த தமிழ்ப்பெண்கள், அதே இராணுவத்தினரது கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. மார்ச் 8, அனைத்துலக பெண்கள் நாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் நலன்பேணல் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர் மேலும் தெரிவிக்கையில் 'ஐக்கிய நாடுகள் பொதுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிறிலங்காவின் பாதுகாப்புப் படையினர் பொதுமக்களை வகைதொகையின்றி கொன்றொழித்ததோடு, அகப்பட்ட பெரும் தொகுதி தமிழப்;பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும் அச்சுறுத…
-
- 0 replies
- 578 views
-
-
"இருப்பிற்கும் இழப்பிற்கும் இடையில் ஒரு பறவையைப் போல அலைகிறது வாழ்வு. வாழ்க்கையின் அர்த்தங்களைக் கண்டுபிடித்துவிடும் எத்தனிப்பில் கழிகிறது காலம். வானமெங்கும் உலாவித்திரியும் பறவையொன்று உதிர்த்துவிடும் சிறகொன்றை வைத்து பறவையின் வாழ்வை அளந்துவிடமுடியாதோ அவ்வாறே மனிதர்களுக்குள் சுழித்தோடும் எண்ணங்களையும் அவ்வளவு எளிதில் கணித்துவிட முடிவதில்லை. இறுதியில் வாழ்வில் எதுவுமே எஞ்சுவதே இல்லையெனினும் ஏன் இவ்வளவு வெறுப்பையும் துயரத்தையும் காவிக்கொண்டு திரிகின்றோம். நேசிக்க மனிதர்களும், நேசிப்பதற்கு இயற்கையையும் இருக்கும்போது கூட நாம் ஏன் இன்னும் தனிமைப்பட்டுப் போனதாய் உணர்கின்றோம். வாழ்க்கையிற்கு உண்மையில் அர்த்தம் ஏதும் இருக்கவேண்டுமா? இலக்குகளை நோக்கி எப்போதும் ஓடிக்கொண்டிருக்க…
-
- 3 replies
- 1.7k views
-
-
கழுத்தை அறுத்துக் கொண்ட தமிழரை நாடு கடத்திய அவுஸ்திரேலியா! கடந்த 23ஆம் திகதி அவுஸ்திரேலியா அரசாங்கத்தால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அகதி அந்தஸ்து கோரிய 16 பேர்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரிய போரைத்தீவைச் சேர்ந்த நடேஷ் கரிகாலன் என்பவரும் ஒருவர். இவர் 2010.09.15ஆம் திகதி காலகட்டத்தில் நீர்கொழும்பில் நகை தொழிலை நடத்திக் கொண்டிருந்த காலத்தில் இவருடைய தொழிலகத்திற்கு இரவு வேளையில் சென்ற இனந்தெரியாத ஆயுதக் குழுக்கள் இவருக்கு விடுதலை புலிகளுடன் தொடர்புடையது என்று சந்தேகத்தில் அவர் கடத்தி செல்லப்பட்டார். அவுஸ்திரேலியா மட்டுமல்லாமல், இவருடைய கை கவசம் இருந்த நகைகளையும் பணத்தையும் தம்வசம் கொண்டு இவரையும் நல்…
-
- 0 replies
- 570 views
-
-
23 நிமிடங்கள் ஒதுக்கி ஒருமுறை இதைப்பாருங்கள் உறவுகளே... இப்படியானவர்களை கண்டதுண்டா? கேள்விப்பட்டதுண்டா?...
-
- 0 replies
- 1.3k views
-
-
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த விஜயகுமார் ஜெகன்மோகன், ஷர்மிளா விஜயராஜா தம்பதிகளின் 14 வயதே நிரம்பிய செல்வப்புதல்வி மயூரி அபிராமி MENSA என்கின்ற உயர் நுண்ணறிவு கொண்டவர்களுக்கான சங்கத்தில் (High IQ Society) இணைக்கப்பட்டுள்ளார். இவர் Prof. Stephen Hawkings, Bill Gates, Albert Enstein போன்றோர்களின் IQவை விட அதிகம் தனக்கு உள்ளது என சோதனைகளில் நிரூபித்து உள்ளார். Cattell III என்ற IQ சோதணையில் அதிகபட்சமாக எடுக்கக்கூடிய 162 புள்ளிகளை எடுத்துள்ளார். மேற்சொன்ன விஞ்ஞானிகளுக்கு 160 புள்ளிகள் மாத்திரமே. இவர் மூன்று வயதிலேயே சரளமாக வாசிக்க எழுத கற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர் இதற்கு முன்னரே இந்த சங்கத்தில் இணைந்திருக்க முடியும் என்ற போதும் அதை அணுகாமல் தவிர்த்து வந்தார். …
-
- 8 replies
- 1k views
-
-
லண்டனில் எதற்க்கடா மாவீரர் துயிலுமில்லம்? February 25, 2016 0 3101 தமிழினத்தின் விடுதலைக்காய் கழுத்தில் நஞ்சைக் கட்டிய புலி வீரர்கள் இன்று தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தமுடியாது தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கின்றது. இதை விடப் பெரிய அவலம் தமிழ் சமூகத்திற்கு இனி வேறேதுமில்லை. எத்தனையோ தடவைகள் ஊடகங்கள் ஊடாகவும் முகநூல்கள் ஊடாகவும் முன்னால் போராளிகளின் அவலங்களை காட்சிப்படுத்தியும் அதுகுறித்து தமிழ் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை குறிப்பாக புலம்பெயர் சமூகம் கண்டுகொண்டதாக இல்லை. யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரண…
-
- 78 replies
- 7.1k views
-
-
பெப்ரவரி 28 ஆம் திகதி நடைபெற்ற லவ்சான் மாநகரசபைத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஈழத் தமிழரான தம்பிப்பிள்ளை நமசிவாயம் அமோக வெற்றியைப் பெற்றுள்ளார் 9,833 வாக்குகளைப் பெற்று தனது அணி சார்பில் போட்டியிட்ட 100 பேரில் இவர் நான்காவது இடத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது. அது கடந்த முறை இவர் பெற்ற வாக்குகளை விட 4,020 அதிகமாகும். இவரது அணியில் முதலாவது இடத்திற்குத் தெரிவானவர் 10,001 வாக்குகளைப் பெற்றிருந்த நிலையில் இன்னமும் 169 வாக்குகளை இவர் மேலதிகமாகப் பெற்றிருந்தால் இவர் கட்சிப்பட்டியலில் முதலாவது இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்திருப்பார். இந்தத் தேர்தலில் இவரின் வெற்றிக்கு தமிழ் மக்களின் வாக்குகளே உறுதுணையாக இருந்துள்ளன. ச…
-
- 0 replies
- 523 views
-
-
வல்வெட்டித்துறை நெடியகாட்டைச்சேர்ந்த திரு.திருமதி யோகச்சந்திரபோஸ் சுபாஷினியின் புதல்வன் செல்வன்.யோ.கீதன் அவர்கள் 16 வயதிற்குட்பட்ட இங்கிலாந்தின் தேசியமட்டகைப்பந்து (Handball) அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் CARSHALTON BOYS SPORTS COLLEGE இல் கல்வி கற்கும் மாணவன் அவார். செல்வன் கீதன் அவர்களுக்கு நெடியகாடு சமூகத்தின்சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதோடு, அவர் மென்மேலும் சாதனைகளை நிலைநாட்ட வாழ்த்துக்களையும்தெரிவித்துக் கொள்கின்றோம். கீதன் அவர்கள் பெற்றோருடன் அணிக்கு தெரிவு செய்யப்பட்டமை தொடர்பான கடிதம் …
-
- 0 replies
- 610 views
-
-
அனைத்து நாடுகளையும் கைப்பற்றி வந்த ஹிட்லரிடம், ஏன் சுவிட்சர்லாந்தை விட்டு வைத்து இருக்கிறீர்கள் என்று ஒருமுறை கேட்டபோது, "அமர்ந்து கொண்டு சமாதானம் பேச ஒரு நாடு தேவை" என்றார். ஐநா மனித உரிமைகள் ஆணையம் உட்பட அகதிகள் மறுவாழ்வு, குழந்தைகள் நலம் என ஐக்கிய நாடுகளின் சுமார் 15 க்கும் மேற்பட்ட அமைப்புகள், முக்கிய அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு நாடு சுவிட்சர்லாந்து. 8 கோடி பேர்தான் மக்கள் தொகை என்றாலும் மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, பொருளாதார பலம் என பல்வேறு சிறப்பு தன்மைகளில் உலகின் ஒரு உதாரண நாடு அது. ஆனால் ஹிட்லரே விட்டு வைத்த அந்த நாட்டை, அதன் மனிதாபிமானத்தை அசைக்க தொடங்கி இருக்கிறது பல்வேறு நாடுகளில் வசித்து வந்தவர்களை அகதிகளாக்கி கொண்டு இருக்க…
-
- 1 reply
- 948 views
-
-
நான் நேற்று ஓர் விளையாட்டுப் போட்டி ஒன்றில் அறிவிப்பாளனாக கடமையாற்றினேன். இது எனக்கு புதிதல்ல. எனக்கு அருகே நின்ற தாய் ஒருவர் நீங்கள் நன்றாக தமிழ் பேசுகிறீர்கள் இங்கேயா பிறந்தீர்கள், இங்கேயா வழர்ந்தீர்கள் என்று வினாவினார். நானோ 9ம் ஆண்டு வரை சுவிஸில் தமிழ் படித்தேன் என்று கூற வியர்ந்தே போய்விட்டார். எனக்கு பெருமைக்குரிய விடையத்தை விட இது கவலைக்குரிய விடயமானது தான் உண்மை. என் தாய்மொழியில் தான் உரையாடினேன், இதர்க்கு எதர்க்கு வியர்ந்து போகவேண்டும். ஒன்று மட்டும் புரிகிறது, தமிழ் ஆழிந்துகொண்டே போகின்றது. சிறுவர்களுக்கு தமிழ் படிப்பதர்க்கு ஆர்வம் இல்லை. தமிழ் வகுப்புகள் நடைபெறும் பட்சத்திலும் பெற்றோர்கள் பிள்ளையின் சொல்லை கேட்கின்றார்கள். வேண்டாம் என்றால் வீட்டில் நிக்கட்…
-
- 4 replies
- 2.3k views
-
-
வரும் 28 மாசி அன்று சுவிஸ் நாட்டில் வாக்கெடுப்பு ஒன்று நடைபெற உள்ளது. அதில் தப்பு செய்கிற வெளிநாட்டவரை திருப்பி அனுப்புவது பற்றியது. ஸ்விபி (SVP) கட்சியினால் தாயாரிக்கப்பட்ட திட்டத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் சம நிலையில் உள்ளனர். வெளிநாட்டவரே அதிக குற்றங்கள் புரிகின்றனர் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு, தப்பு செய்பவர்கள் நாடுகடத்த படவேண்டும் எனும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பு வெளிநாட்டவரை சமநிலையில் இல்லாது இரண்டாம் நிலைக்கு தள்ளுகிறது. இங்கு பிறந்து வழர்ந்தவர்களுக்கு, மற்றும் சிறு வயதில் வந்தவர்களுக்கு இது ஒரு சவாலாக அமைகிறது. இன் நாட்டு புத்தம் (Passport) உள்ள வெளிநாட்டவர் தப்பித்தனர் என்றே கூறலாம். பல உதாரணங்கள்: - சம்பளம் பத்தாத நபர் ஒர…
-
- 0 replies
- 452 views
-
-
தொழில் ---- முதலாளி பழைய தொழில் ---- மட்டை (கிரடிட் கார்ட் திருட்டு ) சாதனை ---- --- லண்டனில் 10இக்கு மேல் கிளைகள் வேதனை-------- சோறு சாப்பிடக்கூட நேரம் இல்லாமை பில் --------------- 8சாமான் வாங்கினால் 10 சாமானுக்கு விலை வருவது வேலை செய்பவர்கள் ---- நாள் முழுக்க வேலை செய்து மணித்தியாலம் 3£ வாங்கும் பரிதாப பிறவிகள் எக்கவுண்டன் ---- tax இக்கு கள்ள கணக்கு கள்ள பில் போட்டு தர உதவி செய்பவர்கள் தமிழ் சனம் ------ 10 சுப்ப மார்கட் இருந்தாலும் நெக்டோ சோடாக்கும், ராணி சோப்புக்கும் ,வடைக்கும் வருபவர்கள் வெள்ளைக்காரன் ------ சிகரட் ,பால் ,பேப்பர் மட்டும் வாங்குபவன் ஆப்ரிகன் ------- மரவள்ளி கிழங்கும் , போன் கார்ட் வாங்க வருபவன் customers ------ எப்பவும் காசாகவே குடு…
-
- 22 replies
- 2.9k views
-
-
அவுஸ்திரேலியா இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் படகுகளை திருப்பியனுப்பியுள்ளது சில வாரங்களிற்கு முன்னர் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்களின் படகுகளை திருப்பியனுப்பியுள்ளதாக அந்த நாட்டின் குடிவரவு துறையமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார். நாங்கள் அவர்கள் அகதிகள் இல்லை என்பதை தீர்மானித்தோம் அதன் பின்னர் அவர்களை திருப்பியனுப்பினோம்,இலங்கையுடன் எங்;களிற்கு நல்லுறவுகள் உள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார். படகுகளில் குடியேற்றவாசிகள் அவுஸ்திரேலியாவிற்கு வருகை தருவது குறித்து செய்திகள் தற்போது வருவதில்லை என்பதற்காக இந்த ஆபத்து நின்றுவிட்டது என கருதமுடியாது, நாங்கள…
-
- 0 replies
- 452 views
-
-
அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் கொலை அவுஸ்திரேலியாவின் மெல்பேனி நகரில் இலங்கைப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்த நட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நேற்று (18) இரவு 8.00 மணிக்கும் 9.25இற்கும் இடைப்பட்ட நேரத்தில் குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்ப்பட்டுள்ளது. 48 வயதான பிரசாத் சோமவன்ச என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் போக்குவரத்து துறையில் பணிபுரிவதாகவும் சம்பவ தினமான நேற்று அவர் பிரிஸ்பேனில் இருந்துள்ளார். அவர்களது குடும்ப நண்பர் ஒருவர் அந்தப் பெண்ணை பலமுறை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றும், முடியாது போனதால் அந்தப் பெண்ணின் வீட்டிக்குச் சென்ற போது குறித்தப் …
-
- 0 replies
- 890 views
-
-
யாழ் இந்து பழைய மாணவர்கள் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாளேந்திரனுடன் ஒரு சந்திப்பை இராஜகுலசிங்கம் (பாபு ) வீட்டில் ஏற்பாடுசெய்திருந்தார்கள் .அரசியலுக்கு அப்பாற்பட்டு செயற்படும் எமது பழைய மாணவர் சங்கம் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரை சந்திப்பதற்கு என்ன தேவை என்று யோசிக்கலாம் . நாம் படித்த பாடசாலைக்கு உதவுவதுடன் மட்டுமல்லாது நாட்டிலிலும் சில வேலைத்திட்டங்களை எமது பழையமாணவர் சங்கம் ஏற்கனவே செய்துவருகின்றது .அதைவிட கனடாவிலும் நடை பவனி போன்ற நிதி சேர்ப்பு நிகழ்வுகள் மூலம் கனேடிய வைத்தியசாலைகளுக்கும் கடந்த காலங்களில் உதவி செய்துவந்தது . தமிழர் மரபுரிமை விழாவிற்ககாக கனடா வருகை தந்திருந்த வியாளேந்திரனின் கனேடிய நிகழ்வுகளில் பங்குபற்றிய சில பழ…
-
- 13 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலிய கடற்படையினர் தம்மை சாகுமாறு கூறியதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றச்சாட்டு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- அவுஸ்திரேலிய கடற்படையினர் தம்மை சாகுமாறு கூறியதாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நடுக்கடலில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் இவ்வாறு கூறியுள்ளனர். கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு கடற்படையினர் நடுக் கடலிலேயே திருப்பி அனுப்பி வைப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கி…
-
- 1 reply
- 713 views
-
-
இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் வறுமை காரணமாக பிறந்து 6 வாரங்களே ஆன தனது பெண் குழந்தையை பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு தம்பதியினருக்கு வளர்க்க கொடுத்துள்ளார்.அன்று முதல் அந்த குழந்தை பிரித்தானியாவில் வளர்ந்து வந்தது. ரொஷானி என்ற இந்த பெண் குழந்தை தற்போது வயது வந்த இளம் பெண். பிரித்தானியாவில் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ரியலிட்டி ஷோவில் கலந்து கொண்ட இந்த பெண் அங்கு பிரபலமானார். ரொஷானியை வளர்த்த பிரித்தானிய வளர்ப்பு தாய் 2010ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார். இறப்பதற்கு முன்னர் அவர் ரொஷானியை பெற்ற தாய் பற்றிய விபரங்களை அவருக்கு வழங்கியுள்ளார். வயலட் என்…
-
- 0 replies
- 916 views
-
-
வாகன மோதல்களை அரங்கேற்றி காப்புறுதி மோசடி செய்த தமிழர் ஒருவருக்கு சிறைத்தண்டனை. Mohanay February 05, 2016 Canada காப்பீட்டு மோசடி “நடன இயக்குநர்” ஒருவர் ரொறொன்ரோவின் பிசியான வீதிகளில் 13 வாகன மோதல்களை நடாத்திய குற்றத்திற்காக வியாழக்கிழமை மூன்றரை வருடங்கள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். குற்றவியல் அமைப்பொன்றின் தலைவர்களில் ஒருவரான 38வயதுடைய உதயகாந்தன் ‘மனோ’ திருநாவுக்கரசு என்பவர் ஒரு டசின் கணக்கான சாரதிகள் மற்றும் பயணிகளை போலியான வகையில் காயப்பட்டவர்கள் என காட்டி 1.5மில்லியன் டொலர்கள் வரையிலான பொய்யான காப்பீட்டு கோரிக்கைளை பெற்றுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டார். இத்தொகையில் 1.2மில்லியன் டொலர்கள் திருநாவுக்கரசுவின் வணிக கணக்கில் சென்றுள்ளதாதவும் கூறப்பட்டுள்ளது.…
-
- 12 replies
- 1.6k views
-
-
சிரியாவில் இருந்து கனேடிய அரசால் கனடா அழைத்து வரப்பட்ட அகதிகள் முகம் சுழிக்கிறார்கள். தங்களைத் தங்க வைத்திருக்கும் தற்காலிக தங்குமிடம் வசதிக்குறைவாக உள்ளதாவும் தாங்கள் திரும்பவும் ஜோர்தானிய அகதிமுகாமிற்கே மீண்டுவிடலாம் போலுள்ளது என்றும் கூறுவது கனடாவில் பரபரப்பான செய்திகளில் ஒன்றாயுள்ளது. ஏனோ இதைக் கேட்ட மாத்திரத்தில் உள்ளுர பல அலைகள். எடுத்த எடுப்பில் அகதிகளில் ஆத்திரம் மட்டுமே பிறந்தது. எனினும் இது ஒரு-பரிமாண விடயம் அல்ல என்பதும் கூடவே தோன்றியது. அப்படி நடந்த ஒரு சுய விசாரணையினை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். கால்நூற்றாண்டிற்கு முன்னர் நம்மவர்கள் (நான் உட்பட) கனடாவிற்கு வந்த காலத்திற்கு மனம் பறந்தது. நிரந்தர வதிவுரிமையினைப் பெற்று விடவேண்டும் என்பதற்கப்பால் எதையும் மன…
-
- 13 replies
- 1.8k views
-
-
சிறீலங்கா சுதந்திர தினத்தை புறக்கணிப்போம். சிங்கள தேசம் தமிழர் தேசத்துக்கு இழைத்த கொடுமைகளை இன்னும் இன்னும்.. உலகறியச் செய்வோம். TYO -UK
-
- 0 replies
- 891 views
-
-
-
- 0 replies
- 654 views
-
-
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிசாருக்கு ஒன்ராறியோ வரி செலுத்துபவர்கள் பல மில்லியன் டொலர்களை செலுத்துகின்றனர்! கனடா- ஒன்ராறியோவில் இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களிற்கு வரிசெலுத்துபவர்கள் வருடந்தோறும் பல மில்லியன் டொலர்களை செலவிடுகின்றனர் என இரண்டு சுயாதீன செய்தி விசாரனையில் இருந்து தெரிய வந்துள்ளது. தவறான நடத்தைகளினால் குறைந்தது 50 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இன்னமும் ஊதியங்களை பெற்று கொண்டிருக்கின்றனரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடமொன்றிற்கு சராசரி சம்பளம் டொலர்கள் 90,000 அடிப்படையில் டொலர்கள் 4.5மில்லியன் டொலர்கள் வரிசெலுத்துபவர்களின் டொலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டவர்களிற்கு வழங்கப்…
-
- 0 replies
- 386 views
-
-
அன்று 30.- இன்று 200.- நான் 1991இல் வெளிநாடு வந்த சந்ததியினரில் ஒருவன். கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாமல் வளர்ந்திருந்தாலும் அதனோடு வாழ்ந்து இருக்கிறேன் என்று உணர்கிறேன். கேட்டது கிடைக்கவில்லை, கேட்டால் கொடுப்பதர்க்கு வசதிகளும் அன்று இருக்கவில்லை. நான் பார்த்து ஆசைப்படுவதர்க்கு நண்பர்களோ ஏனைய சுற்றாடலில் வாழ்ந்த தமிழர்களோ அப்படி இருக்கவில்லை, அனைவருக்குமே ஒரு வகையில் ஒரே நிலை. இன்று கேட்பது கிடைக்கிறது, கேட்காமலும் கிடைக்கிறது. வசித்தது காம்ப் வீட்டில், அதில் ஏதிலிகள் இல்லம் என்று ஜேர்மன் மொழியில் லான்ட்லைன் தொலைபேசியில் எழுதி இருந்தது. அன்று அர்த்தம் தெரியவில்லை. 1 பிராங் கிடைத்தாலே கடைக்கு சென்று இனிப்பு வாங்கிவிடுவோம். அதை உண்ணும்போது இருந்த சந்தோசம் இன்று …
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜேர்மனியில் குடியேற்றவாசிகள் தங்குமிடங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு [ Friday,29 January 2016, 16:50:50 ] ஜேர்மனியில் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு குடியேற்றவாசிகள் தங்கியுள்ள ஹோட்டல்கள் மீதான தாக்குதல்கள் ஐந்து மடங்கிற்கும் அதிகமான இடம்பெற்றுள்ளன. 2014 ஆம் ஆண்டு 199 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதுடன், 2015 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஆயிரத்து 5 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர்களே 90 வீதமான தாக்குதல் சம்பவங்களுக்கு காரணமாக உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனியில் முன்எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு 1 தசம் 1 மில்லியன் மக்கள் புகலிடம் கோரிச் சென்றுள்ளமை…
-
- 0 replies
- 586 views
-
-
“இத்தாலி பலெர்மோவில் தைப்பொங்கல் புத்துணர்வும் வட்டுக்கோட்டைத் தீர்மான மீள்எழுச்யின் புதுநிமிர்வும்” [Thursday 2016-01-28 19:00] இத்தாலி பலேர்மோ மாநகரில் 24/01/2016 ஞாயிறு மாலை 4:00 மணியளவில் தைப்பொங்கல் சிறப்பு நிகழ்வு ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வாக மண்டபத்திற்கு வெளியே மிகச் சிறப்பாக தமிழ்க்கலாச்சார முறைப்படி தைப்பொங்கல் இடம்பெற்றது. பின்னர் மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் தமிழீழ தேசியக்கொடியே ற்றலோடு அருட்தந்தை மற்றும் ஆலய பூசகர்கள்,தமிழ்த் தேசிய கட்டமைப்பின் பிரதிநிதிகள்,தமிழ்ச்சோலை,கலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள் மங்கள விளக்கை ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது. பாடல்கள்,நடனங்கள்,கவிதைகள் சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன .இந்நிகழ்வில் பெருந்த…
-
- 0 replies
- 543 views
-