Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. மலேசியாவில் தமிழ்க் கல்வி

  2. மே-18 முள்ளிவாய்க்கால் 5ம் ஆண்டு நினைவு தினம் - டிரபால்கர் சதுக்கம் ஏப் 27, 2014 எதிர்வரும் மே 18ம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம் மாலை 4 மணியில் இருந்து 8 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டு எழுச்சியுடன் நினைவு கூரப்பட உள்ளது. ஸ்ரீலங்கா இனவாத அரசுகளினால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக 18,05,2009 அன்று வரை முள்ளிவாய்க்காலில் 70,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், 80,000 மேற்பட்ட தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டும், 25,000 திற்கும் மேற்பட்ட சிறார்கள் அனாதைகள்…

  3. மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடாத்தும் பாட்டுப் போட்டி [Friday, 2014-04-25 11:27:16] மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டிக்கான முதலாவது சுற்று ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலை ஒன்பது மணிக்கு நடைபெற இருக்கின்றது. இறுதிச் சுற்றில் கர்னாடக இசையுடனான ஒரு பாடலும், திரை இசையுடனான தமிழ் பாடலும் பாடவேண்டும். இதற்கான முதலாவது பயிற்சிப் பட்டறை சென்ற சனிக்கிழமை 19-04-2014 ஆம் ஆண்டு காலை பத்து மணிக்கும், இரண்டாவது பயிற்சிப் பட்டறை 20-04-2014 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கும் ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்றது. முதலாவது பயிற்சிப் ப…

  4. ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேவையை லண்டனில் தொடங்குவதற்காக விக்ரம் என்ற தென்னிந்திய திரப்பட நடிகர் 20.04.2014 – ஞாயிறு லண்டனுக்கு வந்தார். ரியாலிட்டி ஷோ, தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் என்று மக்களைச் சமூகம் பற்றிச் சிந்திக்கவிடாமல் களியாட்டங்களுக்குள்ளேயே கட்டிப்போட்டு வைத்திருக்கும் தொலைக்காட்சிகளில் ஸ்டார் விஜய் முதலிடம் வகிக்கிறது. அன்றாடச் செய்திகள் கூட இவர்கள் ஒளிபரப்புவதில்லை. மக்களை களியாட்ட நிகழ்ச்சிகளில் உணர்ச்சியூட்டி அந்த உணர்ச்சியை மூலதனமாக்குவதே இவர்களின் வியாபார யுக்தி. விஜய் தொலைக்காட்சி என்று பரவலாக அறியப்பட்ட ஸ்டார் விஜய் ஒரு பல்தேசிய வியாபார நிறுவனம். இன்று இலங்கையில் சிங்கள பௌத்ததின் பெயரால் நிலங்களைச் சூறையாடும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் உலகம் முழுவதைய…

  5. மிசிசாகா தமிழ் அமைப்பினர் பீல் பகுதி காவல்துறையினரோடு இணைந்து வழங்கும் "வேலைவாய்ப்பு தொடர்பான கலந்துரையாடல்" [Thursday, 2014-04-24 10:53:29] காவல்துறை சார்ந்த வேலைவாய்ப்புக் கலந்துரையாடலில் பங்கு பெற மிசிசாகாவில் வாழும் ஆர்வமுள்ள அனைத்து தமிழ் இளம் சந்ததியினரை அழைக்கின்றோம். இந்நிகழ்வில் பீல் மாநகரக் காவல்துறையினர் உங்களுக்கு தொழில் சார் தகவல்களை வழங்க உள்ளார்கள். இடம்: Mississauga Valley Community Centre அறை இல 1 1275 Mississauga Valley Blvd, Mississauga, ON, L5A 3R8 காலம்: ஏப்ரல் 28, 2014 நேரம் : மாலை 6.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை இத்தகவல்கள் குறிப்பாக இளம் தனிநபர்களுக்கான பல்வேறு சாத்தியமான வேலைவாய்ப்பு தொடர்பானதாகும். ம…

  6. நேற்று – 20.04.2014- லண்டனில் o2 என்ற பிரமாண்டமான மேடையில் நடைபெற்ற தென்னிந்திய கோப்ரட் சினிமா மற்றும் தொலைக்காட்சிக் கூத்தாடிகளின் களியாட்ட நிகழ்ச்சி தோல்வியடைந்துள்ளது. விஜய் தொலைக்காட்சி, லெபாரா தொலைபேசி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்தியதாகக் கூறப்பட்ட தமிழ்க் கொலைத் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியின் ஸ்டார் நைட் நிகழ்ச்சி தோல்வியடைந்தது. இந்த நிகழ்ச்சி தேசிய வியாபாரம் நடத்தும் தமிழ்வின் லங்காசிறீ ஆகிய தமிழ் வியாபார நிறுவனங்கள் ஆதரவு வழங்கின. ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களின் கலாச்சாரத்தின் பேயரால் அதீத விளம்பரங்கள் வழங்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்ட போதும் நிகழ்ச்சியை பெரும்பாலான பிரித்தானிய புலம்பெயர் மக்கள் புறக்கணித்துள்ளனர். தேசியத்தின் பெயரால் நடத்தப்படும் அப்…

  7. சில காலங்களின் முன்னர் சுப்பர் சிங்கர் என்ற தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தக்கூடாது என்று கொந்தளித்தவர்கள் பலர். ‘தமிழ்த் தேசிய’ வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்வின் லங்காசிறீ இணையங்களும் இதற்காகக் குமுறி வெடித்துக் கண்ணீர்வடித்தன. தென் இந்தியாவில் திரைப்படம் பிடித்து தோற்றுப்போன சில இயக்குனர்களின் அறிக்கைகள் நேர்காணல்களோடு இந்த நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தினால் ஈழப் போராட்டம் கறைபடிந்து கந்தலாகிவிடும் எனக் கண்ணீர் வடித்தார்கள். இன்று புலம் பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுகொண்டவர்களை இலங்கை அரசும் இன்டர்போல் நிறுவனமும் இணைந்து தேடிக்கொண்டிருக்க, இதே சுப்பர் சிங்கர் லண்டனில் பிரமாண்ட மேடையில் பணச் சுரண்டலுக்காக நடத்தப்படுகிறது.எதி…

    • 10 replies
    • 2.3k views
  8. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... மக்கா சோள தத்துவம் அவர் ஒரு அமெரிக்க விவசாயி. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய நிலத்தில் சோளம் பயிரிடுவார். சிறந்த ரக சோளத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்கான போட்டியில் மறக்காமல் பங்கேற்பார். ஒவ்வொரு ஆண்டும் முதல் பரிசை தவறாமல் வென்று வருவார். அவரிடம் ஒரு வித்தியாசமான குணம்.. தான் பரிசு பெறக் காரணமான, தரமான சோள விதைகளை தனது அக்கம்பக்கத்து நிலத்தினருக்கும் தயங்காமல் அளித்து வந்ததுதான் அது. தொடர்ந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரிக்கு ஆச்சரியம்! ‘தன்னோடு போட்டி போடுபவர்களுக்குக்கூட யாரவது உதவி செய்வார்களா?’ அந்த விவசாயியிடமே அதைக் கேட்டுவிட்டார். “தரமான சோள விதைகளை நீங்கள் மட்டும் பயிரிட்டு விவசாயம் செய்வதால்தான் உங்கள…

  9. மெல்பேர்ண்ணை உலுக்கிய அகதிகளுக்கான கவனயீர்ப்புப் பேரணி! (படங்கள்) நேற்று (13-04-14) ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ண் நகர்ப்பகுதியில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் கவனயீர்ப்புப் பேரணியிலும் பத்தாயிரம் வரையான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவுஸ்திரேலியா அரசு புகலிடக் கோரிக்கையாளரை நடாத்தும் முறையை எதிர்த்தும், அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசின் கொள்கையையும் அணுகுமுறையையும் விமர்சித்தும் அகதிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட இப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் புகழ்பெற்ற மெல்பேர்ண் நூல்நிலையம் முன்பாகப் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. குருத்தோலை ஞாயிறான இன்று விக்ரோறிய மாநிலத்தின் கிறிஸ்தவ மத அமைப்புக்கள் பலவும் முழுமூச்சாக இப்பேரணிக்குத் தமது ஆதரவை ந…

    • 0 replies
    • 625 views
  10. முன்னாள் நிதி மந்திரி Jim Flaherty மரணம் முன்னாள் நிதி மந்திரி Jim Flaherty தனது 64 வயதில் இன்று மரணமானார் .கடந்த மாதம் நிதி மந்திரி Jim Flaherty அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார் பிரதமர் ஹாப்பரின் முழு ஆதரவு இல்லாமல் ஒரு நிதி அமைச்சராக எதையும் சாதிக்க முடிந்திராதென கூறி. தனது இந்த முடிவு தனக்கும் தனது குடும்பத்திற்கும் நன்மை பயக்கும் எனவும் தெரிவித்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது . உலகிற்கே எடுத்துக்காட்டாக இருந்த ஒரு நிதி அமைச்சர் .உலக பொருளாதாரம் சற்று ஆடிய போதும் அசையாமல் இருந்தது கனேடிய பொருளாதாரம் . இனி அரசியல் காணும் குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பம் என்று ராஜினாமா செய்து சில மாதங்கள் கூட ஆகவில்லை . …

  11. ஆஸியில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர் தீ வைத்து தற்கொலை முயற்சி 10 ஏப்ரல் 2014 அவுஸ்ரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்த சம்பவம் ஒன்று சிட்னியில் உள்ள ஹோம்புஸ் நைட் வீதியில் இடம் பெற்றுள்ளது . மேற்படி நபர் 60வீத எரி காயங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொன்கோர்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார.; தற்போது கோமா நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன இலங்கை வட மாகாணத்தை சேர்ந்த ஜனர்தணன் என்று செல்லமாக அழைக்கப்படும் இவரே இவ்வாறு தீ வைத்துள்ளார் . நேற்றைய தினம் குடிவரவு திணைக்களத்தால் இவருடைய அகதி அந்தஸ்து நிரகரிக்கப்படுள்ளதக் அறிவிக்கப்பட்டதும் இவர்; தீ வைத்துள்ளதாக தகவல் தெரிந்துள்ளது. http://www.globaltamilnews.ne…

  12. நேற்று நடந்த முடிந்த கியூபெக் தேர்தல்களில் கியூபெல் லிபரல் கட்சி பெரும்பான்மை பலம் பெற்று அமோக வெற்றி பெற்றதுள்ளது. 98 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கபப்ட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியான Parti Quebecois ஐ விட இரு மடங்கு பலத்துடன் முன்னணியில் உள்ளது கியூபெக் லிபரல் கட்சி.கியூபெக் லிபரல் கட்சியின் தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும் போதே லிபரல்கள் ஆட்சியமைக்கப் போவது உறுதியாகி விட்டது. தன்னுடைய சொந்த தொகுதியிலேயே வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் Parti Quebecois கட்சித் தலைவரும், முதல்வருமான Pauline Marois மண்ணைக் கவ்வியுள்ள விவகாரம் கியூபெல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபெக்கில் லிபரல்கள் அமோக வெற்றி – சொந்த தொகுதியிலேயே மண்ணைக் கவ…

  13. இலண்டன் யாழ் இந்துக்கல்லூரியின் விழாவுக்கு லியோனி தன் பரிவாரங்களுடன் வரவிருப்பதாக அவரது சிறப்பு படத்தையே போட்டு பெரிதாக விளமபரப்படுத்துகிறார்கள் அங்க இப்ப தேர்தலுக்கு கருநாநிதிக்காக ஜெயலலிதாவை போட்டு மேடைகளில் தாக்கி தள்ளுகிறார். இங்கையும் வந்து ஈழத்தமிழருக்கு கருநாநிதி செய்தது சரி என்று சொல்லப்போறாரோ?

  14. ஜேர்மனிய பத்திரிகையில் வந்த இன்றைய படம். Politische Papp-Kameraden: Diese Herren sind alle Kandidaten für die kommenden Parlamentswahlen. Am Marina Strand in Chennai (Süd-Indien) präsentieren sie sich den Wählern http://www.bild.de/news/tag-in-bildern/fotografie/fotos-des-tages-aktuelle-nachrichten-bilder-news-35254726.bild.html

    • 2 replies
    • 1.5k views
  15. சிறிலங்கா அரசினது இனரீதியிலான புறக்கணிப்புக் கொள்கைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு: - பிரதமர் வி.உருத்திரகுமாரன் [saturday, 2014-04-05 11:33:11] இனரீதியாக மக்களை புறக்கணிக்கும் சிறிலங்கா அரசினது கொள்கையினையும், எதார்த்த அதிகாரத்தையும் சிறிலங்கா அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலானது எடுத்துக்காட்டுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் 15 புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை தடைசெய்திருப்பதாகவும், இதனோடு சம்பந்தப்பட்ட 462 பேர்களுக்கு சிறிலங்காவுக்குள் உள்நுழைய தடைவிதிப்பதாகவும் பட்டியல் ஒன்றினை, சிறிலங்கா அரசாங்கம் தனது வர்த்தகமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக வெளியிட்டிருந்தது. …

  16. கனடா-ரோறன்டோவில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பயணம் செய்வோர் கட்டணம் செலுத்த தேவையில்லை.. ரோறன்ரோவில் உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் ரி.ரி.சியினூடாக பயணம் செய்கின்றபோது அவர்களுக்கு ஆதரவாக செல்லும் அடுத்த உறவுகள் கட்டணம் செலுத்துவதுண்டு..கடந்த ஜனவரி மாதம் முதல் அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் இரண்டாவதாக செல்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனத் தெரிவிக்கபட்டுள்ளது.ரொறன்டோ போக்குவரத்துக் கொமிசனில் பேச்சளார் டனி நிக்கல்சன் குறிப்பிட்ட திட்டமானது கடந்த 30 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அமுலாக்கப்பட்டுள்ளது.. இனி வரும் காலங்களில் அவர்கள் , அவர்களுக்கு ஒரு இலவச அட்டை வழங்கப்படும் எனவும் அவர்கள் அதனைப் தங்கள் சுகாதரப்பகுதி பணியாளர் ஒர…

  17. எம்மினத்தின் நிரந்தரவிடுதலை இனி மிக அறிவுக்கு வேலை கொடுத்து காய்நகர்த்த வேண்டும்.... வழி 1 வெளினாடுகளை(அரசு, எதிர்கட்சிகள்) எமது பலவிதமான அணுகுமுறை மூலம், சிறந்த புரிந்துணர்வுகளை எற்படுத்துதல். பல இலட்சம் தமிழ்வாக்குகள் காரியமாக்கும். இதுதற்போதைய எமதுபலம். சில நாடுகளில் நம்மக்கள் செயலில் காட்டியுள்ளார்கள்..உதாரணம் கனடா, இங்கிலாந்து... எமது வாழ்த்துக்கள்.. மற்றைய நாடுகளில் விரைவாக செயல்படவேண்டும் உ+ம் அவுஸ்ரெலியா, நியூஸ்லாந்து..மற்றும் ஐரோப்ப நாடுகள்... வழி 2 உடனடியாக இலங்கையின் அரச பயங்கரவாதங்களுக்கு,இனவாத நடவடிக்கைகளுக்கு, மனிதவுரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இதுவரை குரல் கொடுத்துள்ள தாபனங்கள், தனி நபர்கள், தனிஅமைப்புகள், சர்வதேச நிருவனகங்கள்,பாரளும…

  18. நீண்டகால பாராளுமன்ற உறுப்பினர் Jim Karygiannis தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். 26 வருடங்கள் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலும் Jim Karygiannis அரசியலில் இருந்து விலகப்போவதில்லை என அறிவித்துள்ளார். Scarborough-Agincourt பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ள Jim Karygiannis, 39 ஆவது தொகுதியில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தமிழன் வழிகாட்டியைப் பார்க்கவும் ... www.tamilsguide.com

    • 0 replies
    • 548 views
  19. ஐநா சறுக்கலின் எதிரொலி. 15 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் "முற்றாக அழிக்கப்பட்டதாக சிங்களத்தால் அறிவிக்கப்பட்ட: தடை விதிக்கப்பட்ட புலிகள் அமைப்புக்கும் தடை போட்டு கோபத்தை ஆற்றிக் கொள்கிறது சிறீலங்கா சிங்களப் பேரினவாதம். கீழ்ப்படி அமைப்புக்களோடு தொடர்பில் உள்ளவர்களுக்கும் தடையாம். ஏதோ இந்த அமைப்புக்களை எல்லாம் இவ்வளவு காலம் சிறீலங்காவில இயங்க விட்ட கணக்கா எல்லோ இருக்கு தடை..! இது ஒரு வியாதி. ஜனநாயக உலகம் என்றீனம்.. கருத்துச் சொல்ல தடை.. மக்கள் விருப்புச் சொல்ல தடை.. மக்கள் பணி செய்யத் தடை. இதெல்லாம் கத்துக்குட்டி தனமானது. இதனை..உலகத்திற்கு... கற்றுக்கொடுத்தது.. ஆயுத - ஜனநாயகக் கத்துக்குட்டி அமெரிக்காவும் இந்தியாவும் தான். தடை அமைப்புக்கள் விபரம்: 1.தமிழீழ வ…

    • 1 reply
    • 829 views
  20. நேர மாற்றம் ஏன்,எதற்கு? ஆக்கம். இ.சொ. லிங்கதாசன் இன்றைய தினம் (30.03.2014) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணிக்கு ஐரோப்பாவிலும், கடந்த 09.03.2014 அமெரிக்கக் கண்டத்திலும்(அமெரிக்கா, கனடா) கடிகாரங்களில் நேரம் ஒரு மணித்தியாலம் முன் நகர்த்தப்பட்டு,நேரம் கூட்டப்படுகிறது. இது ஏன்? என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். சுருக்கமாக இரண்டு வரிகளில் இக்கேள்விக்கு விடையளிப்பதாயின், இம்முயற்சி இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி விடலாம் அவையாவன, சூரிய ஒளியின் உச்சப் பயன்பாடு. மின்சாரம் மற்றும் எரிபொருள்களைச் சேமித்தல். இந்தப் பகல் ஒளியை அதிகமாகப் பயன் படுத்துவதை நோக்கமாகக் கொண்ட, நேர மாற்றம் பற்றிய திட்டம் முதல் முதலாக, இரு அறிஞர்களால் இரு வேறு நா…

  21. சுவிட்சர்லாந்தில் இளம் தலைமுறையின் தமிழர்கள் கட்டாய இரட்டை வாழ்க்கை! - விபரணப் படம் (வீடியோ இணைப்பு) [ சனிக்கிழமை, 29 மார்ச் 2014, 11:01.53 மு.ப GMT ] சுவிட்சர்லாந்தில் வாழும் இரண்டாம் தலைமுறை தமிழர்கள் இரட்டை வாழ்க்கை வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குள் இருப்பதாக சுவிட்சர்லாந்தில் இருந்து ஒளிப்பரப்பாகும் எஸ்ஆர்எவ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ஒரு மணிநேர விபரணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக சுவிட்சர்லாந்தில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் இரண்டாம் தலைமுறையினர் இங்கு பிறந்தவர்கள், அல்லது இலங்கையில் பிறந்து சிறுவயதில் இங்கு வந்தவர்கள். இவர்கள் தாங்கள் வாழும் சுவிஸ் நாட்டின் கலாசாரத்திற்குள்ளும், தங்களின் பெற்றோரின் கலாசாரத்திற்குள்ளும் வாழ நிர்…

  22. அமெரிக்காவில் நாடுகடத்தலை எதிர்கொண்டுள்ள இலங்கை தமிழ் குடும்பம்! - இன்னும் ஒருவருடமே தங்கியிருக்க அனுமதி [Monday, 2014-03-31 10:55:28] அமெரிக்காவின் இறுக்கமான குடிவரவு, குடியகல்வு சட்டம் காரணமாக இலங்கையின் தமிழ் குடும்பம் ஒன்று நாட்டில் இருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதியன்று இந்தக்குடும்பம் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்தது. எனினும் பல்வேறு போராட்டங்கள் காரணமாக அந்த நாடு கடத்தல் உத்தரவு ஒரு வருடத்துக்கு பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2009 போரின் பின்னர் ஜூலியன் மற்றும் கிருபா ஆகியோர் தமது பெண் பிள்ளையான ஜெனிபருடன் நெவேக்குக்கு சென்றனர். பின்னர் அங்கு இந்த தமிழ் குடும்பம் அகதி அந்தஸ்து கோரியது…

  23. பிரான்சில் சிறீலங்கர்களின் வங்கி அட்டை மோசடி - திருட்டில் ஈடுபட்ட வர்த்தகர்களை கண்காணிக்கும் காவற்துறை மார் 28, 2014 பிரான்சில் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு வங்கி அட்டைக் (carte bancaire) கொள்ளை அமைப்பொன்று முற்று முழுதாகச் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளது. Noisy-le-Sec, Aulnay-sous-Bois, Bondy, Bobigny, Sarcelles, Argenteuil, Clamart ஆகிய பகுதிகளில் இந்த வலையமைப்பைச் சேர்ந்த 25 முதல் 53 வரையான வயதுடைய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறீலங்கர்கள் என பிரெஞ்சுக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர்களுடைய வீடுகள் சோதனையிடப்பட்டதில் பத்திற்கும் மேற்பட்ட மடிக்கணினிகள், USB KEYகள், வங்கிப் பண அட்டையின் மின்காந்தப் பட்டையைப் பிரதி எடுக்…

  24. யேர்மனியில் தமிழாலயங்கள் 24 ஆவது அகவை நிறைவு விழா நன்றி- பதிவு

    • 7 replies
    • 933 views
  25. வரும் மார்ச் 29 2014 அன்று ஸ்காபுறோ கன்வென்ஷன் சென்ரரில் நடைபெறவிருக்கும் Vivah Wedding Show வில் கலந்து கொள்வதற்காக தென்னிந்திய கனவு தேவதை திரிஷா இன்று டொரோண்டோ வந்து இறங்கினார் . Tamilone மற்றும் vankkamfm ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை ஒழுங்கு செய்துள்ளன. அவரை டொரோண்டோ எயர்போர்ட்டில் சந்தித்த போது www.ekuruvi.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.