Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நீதித் துறையில் பயணித்த ஒரு போராளியின் வாழ்க்கை! பீட்டர் துரைராஜ் 22 அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலை தன் வரலாறு என சுருக்கி வகைப் படுத்த இயலாது. சட்டம், நீதிமன்றம், வழக்குரைஞர்களின் தொழில், பல முக்கிய வழக்குகள், தீர்ப்புகள்.. இவற்றை உண்மைச் சம்பவங்களுடன் இணைத்துச் சொல்லும் போது, அது சமகால சமூக, அரசியல் வரலாறாக ஆகி விடுகிறது! ஜெய்பீம் திரைப்பட வெற்றியைத் தொடந்து, வெகுமக்களின் அன்பிற்குரியவராக கே.சந்துரு மாறிவிட்டார். மாணவர் சங்கத் தலைவர், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்,வழக்கறிஞர், நீதிபதி என பல நிலைகளில் இவர் பணியாற்றியுள்ளார். வழக்கறிஞராக பணிபுரிந்த காலத்தில் மனித உரிமை தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலவ…

  2. ‘ஓல்டுமேன் அண்ட் தி சீ’ படப்பிடிப்பில் ஹெமிங்வேயுடன் ஸ்பென்சர் ட்ரேசி ஆசிரியர்: எர்னஸ்ட் ஹெமிங்வே மொழிபெயர்ப்பு : ச.து.சு. யோகியார் நாவலின் கதை வயதில் முதிய மீன்பிடிக் கிழவர் சாண்டியாகோவுக்கு 84 நாட்கள் தொடர்ந்து கடலுக்குச் சென்றும் மீன் சிக்காத துரதிர்ஷ்டம் நேர்கிறது. அந்த துரதிர்ஷ்டம் பிடித்த கிழவருக்கு உதவியா ளனாக இருப்பதற்குக்கூட யாரும் விரும்பாத நிலையில், மீனைத் தேடி ஆழ்கடலுக்குள் செல்கிறார். 18 அடி நீள மீன் ஒன்று சிக்குகிறது. அந்த மீன் சாண்டியாகோவையும் படகையும் நிலைகுலைய வைக்கும் போராட்டம்தான் இக்கதை. கடைசியில் சாண்டியாகோ வெல்கிறார். ஆனால், அவரால் மீனைக் கரைக்குக் கொண்டுவர முடிந்ததா என்பதுதான் கதை. நாவலின் சிறப்பம்சம் ஒரு தீவிரமான சூழ்நிலையில், எதிர்மறை யான நி…

  3. பேராசிரியர் அ.ராமசாமி அவர்களுக்கு நன்றி நிவேதா உதயன்: நினைவுகளில் அலைதல் ஒருவரின் கவிதைகளை அவ்வப்போது வரும் பருவ இதழ்களிலோ,இணைய இதழ்களிலோ வாசித்து நினைத்துக்கொள்ளும் அனுபவமும்,மொத்தமாக அவரின் கவிதைகளைத் தொகுப்பாக வாசிக்கும் அனுபவமும் ஒன்றாக இருக்க முடியாது. அவ்வப்போது வாசிக்கும்போது வாசிக்கப்பட்ட சூழலிலிருந்து கவிதைதரும் அர்த்தம் சுவாரசியமானது. அந்த அர்த்தம் மொத்தமாக வாசிக்கும்போது கிடைக்காமல்கூடப் போகலாம். காரணம் சூழல். இலக்கியப்பிரதிகள் சூழலில் தனக்கான அர்த்தங்களை உருவ…

  4. ரிச்சர்ட் டாக்கின்ஸ் - கடவுளுக்கெதிரான அறிவியல் போராளி | கனலி அறிவியலும் சமயமும் ஒன்றின் குறைபாட்டை மற்றது இட்டு நிரப்பும்போது, மானுட சிந்தனைத் தொகுப்பு முன்னகர்கிறது. அறிவார்ந்த நாத்திக தர்க்கம் மரபார்ந்த சமயம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள உதவுகிறது. அறிவியலின் தலையீடு இல்லையென்றால் சமயம் இறுகிப்போய் திண்ணப் பேச்சாகி சுருங்கி விடும். சரியாக சமைக்கப்பட்ட சமயத்தின் சேவைகள் மனிதனை அறிவுசார் ஆதிக்கத்தின் பலி பீடத்திலிருந்து மீட்கும் ரிச்சர்ட் டாக்கின்ஸின் புகழ் பெற்ற “சுயநலம் பிடித்த ஜீன்” புத்தகம் வெளிவந்து முப்பது ஆண்டுகள் கழித்து, முழுமையாக நாத்திக வாதத்தை முன்வைக்கும் “கடவுள் என்னும் மயக்கம்” 2006-இல் வெளிவந்தது பின்புலம் பத்தொன்பதாம் நூற்றாண்ட…

  5. ஐரோப்பிய உறவுகள் "எறிகணை' நாவலைப் பெற்றுக் கொள்ள London Tamil Book Center இன் புத்தகக் கண்காட்சித் தொடர் - 2 ஐ தொடர்பு கொள்ளுங்கள். Mobile / WhatsApp : +44 7817262980

    • 0 replies
    • 510 views
  6. புத்தகம் ஏன் சக்களத்தர் ஆகிவிடுகிறது? சென்னைப் புத்தகக் காட்சியில் வழக்கமான ஜனவரி பனிச் சூழல் கோலாகலத்தை இந்தாண்டு ஜூன் வெம்மைச் சூழலில் பார்க்க முடியவில்லை. சனி, ஞாயிறு இரண்டு நாட்களைத் தவிர்த்து வாரத்தின் ஏனைய நாட்களில் கூட்டம் இல்லை. ஊருக்கு மூட்டை கட்டிக்கொண்டிருந்த ஒரு பதிப்பாளர், “டீ செலவை ஈடுகட்டுற விற்பனைகூட இல்லை” என்றார். ஒரு கவிதைப் புத்தகத்தைக் கையில் கொடுத்தார். அட்டையே சாதாரண காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. “கவிதைப் புஸ்தகம் வாங்க ஆளே இல்லை. இந்தப் புத்தகம் இருபது ரூபாய். ரெண்டு டீ காசு. எறநூத்தம்பது அடிச்சோம். ஒண்ணு விக்கலை” என்றார். பிரபலமான பெரிய, ஏற்கெனவே பலமான வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கிற பதிப்பகங்கள், ஊடக நிறுவனங்கள் நீங்கல…

    • 3 replies
    • 941 views
  7. நன்றி கலாபூஷணம் .திருமதி கோகிலா மகேந்திரன் நிவேதா உதயராயனின் ,''உணர்வுகள் கொன்றுவிடு '' சிறுகதைத்தொகுதி -ஒரு விமர்சனம் சிறுகதை எழுதுவது ஒரு கலை .ஒரு உணர்வினை அல்லது பெறுமானத்தினை வெளிப்படுத்துவதிலும் ,தொடர்புறுத்துவதிலும் மனிதத்திறன் வெளிப்படும் ஒரு முறை என்று கூறலாம் .சிறு கதை வாழ்வின் ஒரு வெட்டுமுகமாக அமைய வேண்டும் என்பது அன்டன் செக்கோவின் கருத்து . நிவேதா உதயராயன் ''உணர்வுகள் கொன்றுவிடு ''என்ற தனது இரண்டாவது சிறுகதைத் தொகுதியை புலம்பெயர் எழுத்தாளர் என்ற வகையில் பிரித்தானியாவில் இருந்து தந்துள்ளார் ''.உணர்வுகள் ''உடன் வந்திருக்க வேண்டிய ,''ஐ ''வேற்றுமை உருபை த் தவிர்த்து வித்தியாசமாய் ஒரு தலைப்புடன் வந்திருக்கும் இந்த நூல…

  8. ஈழத்துக் கவிஞரும் எழுத்தாளருமான தீபச்செல்வன் எழுதிய முதல் கவிதை நூலான பதுங்கு குழியில் பிறந்த குழந்தை கவிதைத் தொகுப்பு அனுஷா சிவலிங்கம் அவர்களால் சிங்களத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு கடந்த வெள்ளியன்று (29 / 9 /2023) ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரங்கம் நிறைந்த மக்கள் மத்தியில் இடம்பெற்றது. சிங்கள படைப்பாளிகள் மற்றும் கலைஞர்கள் பலர் நூல் தொடர்பிலும் ஈழ மக்களது போராட்டம் தொடர்பிலும் பல முக்கிய உரைகளை நிகழ்த்தினர். ஈழத்தமிழர் போராட்டம், விடுதலைப் புலி போராளிகள் தொடர்பில் சிங்கள மக்கள் படைப்பாளிகள் அறிந்து கொள்ள வேண்டிய விடயங்களை தீபச்செல்வனின் உரை அமைந்தது (உரையை இணைப்பில் பார்க்கலாம்). ஈழத்து இலக்கிய உலகில் வலிமை மிக்க கு…

  9. மைதிலி தயாபரனின் மூங்கிலாகும் முட்புதர் நாவல் இன்று வெளியிடப்பட்டது. வவுனியா கோயில்குளம் அருளகத்தில் நிகழ்வு நடைபெற்றது. நாவல் வெளியீட்டின் பின்னர், கோயில்குளம் சிறுவர் இல்லத்தின் சிறுவர்களிற்கு பாடசாலை புத்தகப் பைகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் வவுனியா நகரசபை உப நகரபிதா சு.குமாரசாமி, மன்னார் மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் சு.நித்தியானந்தன், பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வீ.பிரதீபன், சிரேஸ்ட சட்டத்தரணி தயாபரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். https://newuthayan.com/story/16/மூங்கிலாகும்-முட்புதர்-நாவல்-வெளியீடு.html

  10. வெண்முரசு நாவல் 17: இமைக்கணம் வெண்முரசு மகாபாரத 26 நாவல் வரிசையில் 17 ஆவது நாவலாகிய “இமைக்கணம்” வாசிப்பை நிறைவுசெய்துவிட்டேன். பகவத்கீதையின் யோகதத்துவங்களை விரிவாகச் சொல்லும் நாவல். மகாபாரதப்போரின் நடுவே கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்ததாகவே அறிந்திருக்கின்றேன். எப்படிப் போர் நடுவே அர்ஜுனனின் கேள்விகளுக்கான பதில்களை தத்துவ விளக்கங்களோடு கிருஷ்ணர் சொல்லியிருக்கமுடியும் என்ற கேள்வி இருந்ததால், கீதை ஒரு இடைச்செருகல் என்றே நினைத்திருந்தேன். மகாபாரதப் போரில் கீதை உரைக்கப்படவில்லை எனவும் நால்வேதத்தின் தொடர்ச்சியும் எதிர்நிலையுமான நாராயணவேதம் எனும் கீதைக்காகவே மகாபாரதப் போர் நிகழ்ந்தது என்றும…

  11. தமிழ் அற இலக்கியங்களில் அரசியல்.! மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய தொடர்ச்சியை உடைய தமிழிலக்கிய இலக்கண வரலாற்றில் இலக்கிய ஆய்வுகளின் தொடக்கப் புள்ளியை நம்மால் சரியாக வரையறுக்க முடியவில்லை என்றாலும் அதன் முதிர்நிலையைத் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் வழி அறிய முடிகிறது. தொல்காப்பியப் பொருளதிகாரச் செய்யுளியலைத் தொல்காப்பியர் ஓர் இலக்கியவியல் கல்வியாகவே முன்வைக்கின்றார். கவிதைகளின் உள்ளடக்கம், வடிவம், உத்திகள், மெய்ப்பாடு முதலான இலக்கியக் கோட்பாடுகளைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் விரிவாகப் பேசுகிறது. பொருளதிகாரச் செய்யுளியலில் இடம்பெறும் நோக்கு என்ற உறுப்பு இன்றைய இலக்கியத் திறனாய்வின் அடிப்படையில் இயங்குவதே. ஆக இலக்கிய இலக்கணப் பழமை மட்டுமல்லாமல் இலக்கிய …

  12. `க்ரியா’ தமிழ் அகராதியில் திருநர் சொற்கள்... மாற்றுப்பாலினத்தவர் பெருமிதம்! சு. அருண் பிரசாத் ‘க்ரியா’-வின் தற்காலத் தமிழ் அகராதி | Cre-A Tamil Dictionary திருநங்கை/திருநர் சமூகத்தினர் பயன்படுத்தும் சொற்கள் அமைந்திருப்பதுதான் இந்தப் பதிப்பின் சிறப்பாகவும், முக்கியச் சேர்க்கையாகவும் இருக்கிறது! சமூக மாற்றங்கள் அனைத்தும் மொழியிலிருந்தே தொடங்குகின்றன. எந்த ஒன்றின் சமூக அடையாளமும் அது என்ன பெயரில் வழங்கப்படுகிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் சமூக இயக்கத்தின் அடிப்படை மொழி! ஒரு சமூகம் எத்தனை தான் மொழி, பண்பாட்டு ரீதியில் மேம்பட்டிருந்தாலும், அது போதாமைகளைக் கொண்டிருப்பது இயல்பு. ஆனால், அது காலப் போக்கில் களை…

  13. பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் எழுதிய 'வடஇலங்கையில் சுற்றுலாவும் தொல்லியல் மரபுரிமைச் சின்னங்களும்' என்ற ஆங்கில மொழிமூல நூல் வெளியீட்டு விழா நாளைமறுதினம் புதன்கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் பேராசிரியர் கிருஷ்ணராஜா தலைமையில் நடைபெறவுள்ளது . உலகில் மிகமுக்கிய துறையாக வளர்ச்சிபெற்றுவரும் சுற்றுலாத்துறையின் ஊடாக வடஇலங்கையும் பாரிய நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதனை அடிப்படை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூலில் சுற்றுலாப் பயணிகள் இன்று பார்க்க வேண்டிய நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றின் வரலாற்றுப் பின்னணிகள் படங்களுடன் விளக்கி எழுதப்பட்டுள்ளன. காலத்தின் தேவை கருதி வெளிவரும் இந்நூலின் வெளியீட்ட…

  14. எல்லா நேரங்களிலும் எல்லாவற்றையும் வாசிக்க முடியாது. அப்படி வாசிப்பது என்பதும் உண்மையில் அது ஒரு ஆழமான வாசிப்பாகவும் இருக்கமுடியாது. அதுவும் கவிதைகள் என்றால், அதனை உள்ளுணர்ந்து வாசிக்கவும், அதன் அழகுணர்ச்சியில் மூழ்கிப்போகவும் அதனோடு ஒன்றிணைந்து பயணிக்கவும், தனியானதும் நேர்த்தியானதுமான ஒரு வேளை அல்லது சந்தர்ப்பம் அமையவேண்டும் என்பது என் அனுபவமாக இருக்கிறது. சிலருக்கு வேறுவிதமாகவும் இருக்ககூடும். தன்னோடு மட்டும் பேசப்படுகின்ற விடயங்களை, தன்னால் மட்டும் பேசப்படுகின்ற சந்தர்ப்ப விடயங்களை, எதோ ஒரு காலத்தின் வலிகளை, கனவுகளை, நிகழ்ந்துகொண்டிருக்கின்ற வசீகரங்களை,இழப்புக்களை, நாளை மீதான எதிர்மறைகளை இப்படியாக ஒவ்வொன்றையும் காவிச்செல்லாமல் அந்தந்தக்கணங்களில் இறக்கிவைத்த பின் …

  15. நீந்திக்கடந்த நெருப்பாறு நாவலின் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு கிளிநொச்சியில் நாவலின் நூலாசிரியர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்லீடர் இணையத்தில் தொடராக வெளியிட்டுவைக்கப்பட்ட நாவலின் முதலாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு ஒஸ்ரேலியாவில் தமிழருவி மணியன் தலைமையிலும் தமிழகத்தில் வைகோ தலைமையிலும் நடைபெற்றிருந்தது. தற்போது இதன் இரண்டாவது பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் 19 – 06 -2016 அன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இது நாவலின் முதற் பாகம் எனவும்இ இரண்டாம் பாகம் கிளிநொச்சியிலிருந்து இரணைப்பாலை வரையுமான போரை மையமாகவும், மூன்றாம் பாகம் இரணைப்பாலையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரையுமான போரை சித்திரிப்பதாக அமையும் எனவும் இந்த நாவ…

    • 0 replies
    • 789 views
  16. நேர்காணல் - என்.சரவணன் 1971 ஏப்ரல் புரட்சி பற்றிய பலர் மத்தியிலும் வேறுபட்ட கருத்துகள் நிலவு­கின்ற போதிலும் அதில் பங்கு கொண்டவர்­கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகம், பிரக்­ஞை என்பவற்­றையும் அதன் காரணமாக அவர்கள் பட்ட துன்பங்களையும், அவலங்­களையும் எவரும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள் என்பது மாத்­திரம் உண்மை. கட்சிக்குள் மாத்திரமல்ல, கட்சிக்கு வெளி­யிலும் பலர் ஆதரவாளர்க­ளாகவும் செயற்­பாட்­­டாளர்களாகவும் இருந்து வந்துள்ள­னர். அந்த வகை­யில் அன்றைய நெருக்கடி மிக்க காலப்பகுதியில் தாய்மாரினதும் தந்தைமாரினதும் பங்களிப்பு, தியாகம் என்பவையும் சாதாரணமானவையல்ல. ஏப்ரல் புரட்சியின் தலைவ­ர்களில் ஒருவரான ஒஸ்மன்ட் டி சில்வாவின் தாயார் சீலவத்தி டி சில்வா பற்றி தமிழ் வாசகர்­களுக்கு அற…

  17. அந்தரம் sudumanalJune 28, 2015 நாவல் அறிமுகம் இந் நூலின் ஆசிரியர் தொ.பத்திநாதன் 1990 இல் போர்க் கெடுபிடி காரணமாக தனது பதினாறு வயதில் படிப்பையும் விட்டு தமிழகத்துக்கு அகதியாக போய்ச் சேர்ந்தார். மண்டபம் அகதி முகாமில் தொடங்கி பின் மதுரை மாவட்டம் உச்சப்பட்டி முகாமில் அகதி வாழ்க்கையை தொடர்ந்தார். 29 ஆண்டுகளின் பின் இலங்கையில் தனது பிறந்த ஊருக்கு திரும்பியிருக்கிறார். அந்த கதைசொல்லலோடு தொடங்கிய அந்தரம் பின் அகதிகள் முகாமினுள் புகுந்துகொள்கிறது. அந்தரம் நாவல் அவரது நான்காவது நூல். “தேவடியா பயலுக… அகதி நாய்ங்க. அவன் அக்கா தங்கச்சியை போய் ஏறவேண்டியதுதானே. அதான் சிங்களவன் இவன்கள சுட்டு கொல்லுறான். இந்த அகதி நாயளுக்கு நாம பாவம் என்று அடைக்கலம் கொடுத…

  18. தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள் - ப்ரொமோட் 1 சாரு சொல்வதைப்போன்று புத்தகத்தை எழுதியவனே புத்தகத்தைக் கூவிக் கூவி விற்க வேண்டிய நிலைதான் தமிழ் சூழலில் இப்போதும் நிலவுகிறது. பத்துப் பைசாவுக்கு பிரயோஜனமில்லாத சினிமாவுக்காக ஐந்நூறு, ஆயிரமென்று செலவழிப்பவர்கள் ஒரு புத்தகத்துக்காக நூறு ரூபாய் கூட செலவழிக்க மாட்டார்கள். தமிழ் சமூதாயத்தில் மாத்திரமே காணக்கூடிய மிகக் கேவலமான நிலை இது. 'தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்' தொண்ணூற்றி நான்கு பக்கங்களே கொண்ட மிகச் சிறிய புத்தகம். விலை நூற்றி இருபது ரூபாய். ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் நூறு ரூபாய்க்கு கழிவு விலையில் கிடைக்கிறது. ஆனாலும், ஒரே ஒருவர் மாத்திரம் உங்கள் புத்தகத்துக்கு ஆர்டர் கொடுத்து விட்டேனென தக…

  19. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 2019ஆம் ஆண்டின் சென்னை புத்தகக் கண்காட்சி சமீபத்தில் நிறைவடைந்திருக்கிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக அளவில் கடைகள், விற்பனை போன்றவை இருந்தாலும் பதிப்பாளர்களும் எழுத்தாளர்களும் ஏற்பாடு இன்னும் மேம்பட வேண்டும் என்கிறார்கள். சென்னையின் மிகப் பெரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக சென்னை புத்தகக் கண்காட்சி பார்க்கப்படுகிறது. கடந்த 42 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 810 கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஜனவரி 4 முதல…

  20. FB ல வஜ்ர வியூகம் பற்றிய பகிர்வுகளை பார்த்து கிண்டிலில் தேடியபோது ப்ரீ என காட்டியது . டவுன்லோடியதும் என்ன தான் இருக்கு என சில பக்கங்களை பார்ப்பம் என உள்நுழைந்ததுதான்..பரவாய் இல்லையே என தொடர்ந்து முடித்து விட்டு தான் நிமிர்ந்தேன்.. ரொம்ப நல்லது என்றும் இல்லை சுமார்என்றும் இல்லாமல்.. ஓகே ரகம் எனலாம்.. அதிக கதாபாத்திரங்கள் வருவது கொஞ்சம் ஆர் எவர்கள் என நினைவில் வைத்திருப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. கதை என்று பார்க்கும் போது ரவுடிகளால் துரத்தப்படும் ஒரு பிச்சைகாரன் ,ரோட்டினை கடக்கும் போது ஒருபெண் பொலிஸ் அதிகாரியின் வாகனத்துக்கு முன் விபத்துக்குள்ளாகி் இறக்கிறான் அவன் உடமைகளை சோதனை செய்யும் போது ஒரு செல்போனும் மெமரிகாட்டும் கிடைக்கிறது அன்றிரவு அந்தப்பெண…

  21. 11 ஜனவரி முதல் 23 ஜனவரி வரை சென்னை புத்தகக் கண்காட்சி நடக்கவுள்ளது. இம்முறை புதிய இடம். நான் பார்க்கும் மூன்றாவது இடம் இது. பல ஆண்டுகள் காயிதே மில்லத் கல்லூரி வளாகத்தில் நடந்துவந்த புத்தகக் கண்காட்சி, சில ஆண்டுகளுக்குமுன் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியப் பள்ளி வளாகத்துக்குச் சென்றது. இப்போது சென்னை மெட்ரோ வேலைகள் நடந்துகொண்டிருப்பதால் போக்குவரத்தைச் சமாளிக்கமுடியாது என்ற காரணத்தால் அந்த இடம் இருந்தாலும் மாநகரக் காவல்துறையிடம் அனுமதி கிடைக்கவில்லை. எனவே நந்தனம் ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சிக் கல்லூரித் திடலில் இம்முறை கண்காட்சி நடக்க உள்ளது. இதுவரையில் கிடைத்த இடங்களிலேயே பிரம்மாண்டமான இடம் இதுதான். ஊருக்கு மிக நடுவில், எங்கிருந்துவேண்டுமானாலு…

    • 15 replies
    • 1.8k views
  22. பாரிஸுக்கு ஐ.எஸ். பொறுப்பு... ஐ.எஸ்.ஸுக்கு..? ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது பாரிஸ் நகரம். முதல் முறை சார்லி ஹெப்தோ கேலிச் சித்திரம் தொடர்பாக. சமீபத்தில் சாந்த் தெனி பகுதியில் நடந்திருக்கும் தாக்குதல் இரண்டாவது முறை. முந்தைய தாக்குதலுக்கு ஐ.எஸ்.தான் காரணம் என்று அரசல் புரசலாகப் பேசப்பட, இந்த முறை நடந்த தாக்குதலுக்கு 'நாங்கள்தான் செய்தோம்' என்று வெளிப்படையாகப் பொறுப்பேற்றுள்ளது ஐ.எஸ்.! இன்றைய உலகின் மிக முக்கியப் பிரச்சினைகளுள் ஒன்றாக ஐ.எஸ். அமைப்பின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. ஒரு பக்கம் சிரியா மற்றும் இராக்கில் உள்நாட்டிலேயே பல்வேறு இன, மதக் குழுக்களிடையே …

  23. சுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் – புத்தக விமர்சனம் பிரபு கே பாலா ஜோனாதன் ஜேம்ஸ் ஆகிய ஜே.ஜே., ஆல்பெர் காம்யு இறந்த நாளுக்கு மறுநாள் இறந்து போகும் எழவுச் செய்தியுடன் தொடங்குகிறது நாவல். மலையாள எழுத்தாளனான ஜே.ஜேவைப் பற்றி தமிழில் ஏன் எழுத வேண்டுமென்று பாலு என்ற கதைசொல்லியின் வியாக்கியானத்தை முன் வைத்து கதையைத் துவக்குகிறார் சுந்தர ராமசாமி. உலகெங்கும் தன் உள்ளொளியைக் காண எழுத்தையோ, கலைகளையோ, தத்துவத்தையோ, விஞ்ஞானத்தையோ அல்லது மதத்தையோ எவனெவனெல்லாம் தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்டானோ, அவனெல்லாம் நம்மைச் சார்ந்தவன் என நம் மொழிக்கு மாற்றப்பட்டுவிட வேண்டும் என்கிறார். ’சிந்திக்கும் மனிதனுக்கு பாஷை உண்டு. உண்மையின் பாஷை இது. ஜே.ஜே அதைத் தேடியவன்’ என்கிறார் கதைசொல்ல…

    • 1 reply
    • 4.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.