Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நூற்றோட்டம்

நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு

பதிவாளர் கவனத்திற்கு!

நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ் கிராமத்தையே அழித்த இலங்கை இராணுவம் தமிழரின் சொத்தையும் கொள்ளையடித்தது தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டிருந்து, விடுவிக்கப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட, இலங்கைஇராணுவத்தினரின் ஒழுக்க மீறல்களை தனது “A Long Watch: War, Captivity and Return in Sri Lanka” என்று நூலில் விபரித்துள்ளார். “எனது இராணுவப் பணியின் போது மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும். 1991ல் எமது இராணுவ நடவடிக்கை முடிவுற்ற கையோடு இலங்கைக்கு வடக்கேயு…

  2. தமிழ் நாஸி பேக்கரி February 2nd, 2018 | : | வாசு முருகவேல் எழுதிய ‘ஜெப்னா பேக்கரி’ எனும் புத்தகத்திற்கு ‘இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்’ முதல் நெருப்பு எனும் விருதை அறிவித்திருப்பதை அறிகையில் எனக்கு உண்மையிலேயே அடி வயிற்றில் நெருப்புப் பற்றி எரிகிறது. இந்தப் புத்தகத்திற்கு ஆர். எஸ். எஸ். அல்லது சிவசேனா போன்ற காவி அமைப்புகள்தான் விருதை வழங்கியிருக்கவேண்டும். இலங்கை இ்ஸ்லாமியர்கள் மீது வெறுப்பை வாரி இறைத்து, இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனச்சுத்திகரிப்பை அநியாயத்திற்கு நியாயப்படுத்தும் ஒரு பிரதிக்கு ஓர் இசுலாமிய அமைப்பே விருது வழங்கிக் கொண்டாடுவதை என்னவென்பது. அதேபோல, அப்பட்டமான தமிழ் நாஸிக் குரலை ஒலிக்கும் இந்த நூலை வெளியிட்ட அரங்குக…

  3. கவிதை தன் மொழியையும் வடிவத்தையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளட்டும். ஆனால், கவிஞனையும் இயற்கையையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. இயற்கையின் பிரம்மாண்ட அழகும், களங்கமற்ற அதன் அமைதியும் காலங்காலமாகப் பாடுபொருளாகி வந்தாலும் இயற்கையைப் பாடுவதில் ஜென் கவிதைகள் புதிய வாசலைத் திறந்துவிட்டவை. பழநிபாரதியின் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கவிதைகள் ஜென் கவிதைகளுக்குரிய கூறுகளைக் கொண்டிருப்பவை. பழநிபாரதியின் இலவம்பஞ்சு மொழி தமிழ் வாசகர்களை அழகான அனுபவத்துக்கு அழைத்துச்செல்கின்றன. தமிழ் வாசிப்புச் சூழலில் அரிதாகிவரும் கவிதை வாசகர்களுக்கு பரிச்சயமான நிலப்பரப்பிலிருந்து விரியும் காட்சிகள் வழியே ‘மெய்தேடல்’ உணர்வை முதல் வாசிப்பிலேயே சிலிர்ப்புடன் இந்தக் …

    • 0 replies
    • 594 views
  4. எதிர்வரும் 5 ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன எழுதிய ஆங்கிலம் மற்றும் சிங்களத்தில் வெளியிட உள்ள நந்திக் கடலுக்கான வழி - தமிழ் புலிகளை தோற்கடித்த உண்மையான கதை என்ற நூல் குறித்து பாதுகாப்பு ஆய்வாளர்கள் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நூல் எதிர்வரும் 6 ஆம் திகதி அதாவது கமல் குணரட்ன ஓய்வுபெறும் தினத்திற்கு மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்த நூலில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக கூறப்படும் விடயங்கள் உட்பட சில முக்கிய விடயங்கள் அடங்கியிருக்கும் எனக் கூறப்படுகிறது. புலிகளின் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்றதாக இலங்கை இராணுவத்தினர் கூறும் 53 வது படைப்பிரிவின் கட்டளை தளபதியாக 2…

  5. தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல், தமிழில் எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புதினங்களின் பட்டியல் ஆகும். இவற்றுள் மிகப் பெரும்பாலானவை 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. இப் பட்டியலில் புதினங்களின் தலைப்புக்களும், அவற்றை எழுதியோரின் பெயரும் தரப்பட்டுள்ளன. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. 1. மோகனாங்கி - த.சரவணமுத்துப்பிள்ளை (1895) 2. பொன்னியின் செல்வன் - கல்கி 3. சிவகாமியின் சபதம் - கல்கி 4. சோலைமலை இளவரசி - கல்கி 5. பார்த்திபன் கனவு - கல்கி 6. வேங்கையின் மைந்தன் - அகிலன் 7. கயல்விழி - அகிலன் 8. வெற்றித்திருநகர் - அகிலன் 9. மணிபல்லவம் - நா. பார்த்தசாரதி 10. அலைஅரசி - சாண்டில்யன் 11. அவனி சுந்தரி - சா…

  6. எமது பெருமைக்குரிய எழுத்தாளர் தமிழ்நதி அவர்களின் மூன்று நூல்களின் அறிமுகமும் கருத்தாடலும். வரும் சனிக்கிழமை (Sep 27) 3 மணிக்கு. இடம்: அண்ணாமலை வளாக அரங்கு. Scarborough சந்திப்போம் வாருங்கள் நண்பர்களே.

  7. தமிழ்நதியின் 'மாயக்குதிரை' தமிழ்நதியின் ‘மாயக்குதிரை’யில் பத்துக் கதைகள் இருக்கின்றன. இந்தத் தொகுப்பிலிருக்கும் கதைகள் அனைத்தையும் ஏற்கனவே அவை வெளிவந்த காலங்களில் வாசித்திருந்தாலும், இன்னொருமுறை தொகுப்பாக வாசித்தபோதும் அலுப்பில்லாது இருந்ததற்கு, தமிழ்நதியின் கதைகளுக்குள் இருக்கும் கவித்துவமான ஒரு நடை காரணமாயிருக்கக் கூடும். இதிலிருப்பவற்றில் முக்கிய கதைகளாக ‘நித்திலாவின் புத்தகங்கள்’, ‘மாயக்குதிரை’ மற்றும் ‘மலைகள் இடம்பெயர்ந்து செல்வதில்லை’ என்பவற்றைச் சொல்வேன்.‘தாழம்பூ’வும், ‘தோற்றப்பிழை’யும் நூற்றாண்டுகள் தாண்டிய கதையைச் சொல்வதில் ஒரே நேர்கோட்டில் வைத்து வாசிக்கப்படவேண்டியவை. பெண்களான தாழம்பூவும், ஆயியும் வரலாற்றுச் சம்பவங்களிலிருந்து முளைத்துவருகின்றார்கள். காலத்தி…

    • 5 replies
    • 1.1k views
  8. தமிழ்நதியின் பார்த்தீனியம் : பேரழிவின் மானுட சாட்சியம் யமுனா ராஜேந்திரன் இந்திய-இலங்கை ஒப்பந்தம் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்தாகிறது. 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய அமைதிப்படையின் கடைசி அணி இலங்கையிலிருந்து வெளியேறுகிறது. முழுமையாக 22 மாதங்கள் இந்திய அமைதிப்படை ஈழத்தமிர்கள் வாழும் இலங்கையின் வடக்குப் பிரதேசத்தை ஆக்கிரமித்திருந்தது. தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’ நாவல் இந்திய அமைதிப்படை இலங்கையில் கால்கொண்ட நாட்களின் கொஞ்சம் முன்னாகத் துவங்கி, இலங்கையிலிருந்து அதனது கடைசி அணி வெளியேறும் காலத்தோடு முடிகிறது. ஈழப் போராட்டத்தில் இந்திய அமைதிப்படையின் தலையீட்டையும்; அது விளைவித்த பேரழிவையும் முன்வைத்து ஈழத்தவரால் எழுதப்பட்ட முத…

    • 9 replies
    • 1.4k views
  9. தமிழ்நாட்டிற்கு வெளியிலிருக்கும் தமிழ் எழுத்தாளனுக்கு எழுத ஏராளமான கதைகளிருக்கின்றன! லக்ஷ்மி சரவணக்குமார்: தற்போது தமிழில் இயங்கிவரும் குறிப்பிடத்தகுந்த இளம்படைப்பாளிகளில் ஒருவர். நீல நதி (2009), யாக்கை (2010), வசுந்தரா என்னும் நீலவர்ண பறவை (2011), மச்சம் (2012), மயான காண்டம் (2015), யானை (2015) தேர்ந்தெடுத்த கதைகள் ஆகியவை இதுவரை வெளியான சிறுகதைத் தொகுப்புகள். 2013 ல் வெளியான மோக்லியைத் தொலைத்த சிறுத்தை– இவருடைய கவிதைத் தொகுப்பு. உப்புநாய்கள் (2011), கானகன் (2014), நீலப்படம் (2015) ஆகியவை இவர் எழுதிய நாவல்கள். திரைத்துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டே இலக்கியத்திலும் தொடர்ந்து இயங்கி வருபவர். உப்புநாய்கள் நாவலுக்காக 2012 ஆம் ஆண்டு சுஜாதா விருது பெற்றவர…

  10. தமிழ்ப் பெண்புலி (Tamil Tigress) ஒருவர் ஈழத்தில் இயக்கமொன்றில் இணைந்து போராடியதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்திருக்கலாம். முக்கியமாய் போர் உக்கிரமாய் நடைபெறும் பிரதேசங்களில் -போராடத்தில் இணைந்துகொள்ள- புறக்காரணிகள் இன்னும் அதிக நெருக்கடிகளைக் கொடுக்குமென்பதை நாமனைவரும் அறிவோம். எமது இயக்கங்களில் பலர் பெருந்தொகையாய்ச் சேர 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுச் சம்பவமும், 81 யாழ் நூலக எரிப்பும், 83 ஜூலைக் கலவரமும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவையாகும். ஆனால் யாழ் சமூகத்தில் அவ்வளவு ஒட்டமுடியாத மற்றும் உயரதரவர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஏன் இயக்கத்தில் இணைந்து கொள்கிறார் என்பது நம் போராட்ட வரலாற்றைக் கற்றுக் கொள்வோருக்குச் சற்று வியப்பாக இருக்கலாம் தமிழ் பெண் புலி(Tamil…

  11. தலைசிறந்த நாவல்கள் ஒரு பார்வை என்.செல்வராஜ் நான் 1999 ல் நாவல் படிக்க வேண்டும் என்று எண்ணிய போது எதைப் படிப்பது என்றே தெரியவில்லை.2000 குமுதம் தீபாவளி மலரில் டாப் டென் நாவல் தலைப்பில் சிறந்த எழுத்தாளர்கள் சிலரிடம் கேட்டுவெளியிட்டு இருந்தார்கள். அனைத்து எழுத்தாளர்களின் பார்வை வேறு வேறாக இருந்தன. எனவே நல்ல நாவல் எது என தேடினேன். ஆனந்த விகடன்படித்ததில் டாப் டென் என்ற தலைப்பில் 2006ல் பல எழுத்தாளர்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளது. குமுதம் டாப் 10 ல் சி. மோகன், வெங்கட் சாமினாதன், ராஜமார்த்தாண்டன், சா.கந்தசாமி, கந்தர்வன் ஆகியோர் தங்களின் கருத்தை வெளியிட்டனர். சி மோகன் டாப் 10 நாவல்கள் 1.இடைவெளி 2. புயலிலே ஒரு தோணி 3. விஷ்ணுபுரம் 4. நினைவுப் பாதை 5. நாளை மற்றுமொ…

  12. ஒரு மரணமும் சில மனிதர்களும்: மரணத்துள் வாழ்ந்தோ(போ)ரின் மனிதக் கதைகள் -வாசகனின் மனப்பதிவு கே.ரி.பி.ஷாந்தன் "நாம் மூக்கும் முழியுமாக வாழவே பிறந்தோம்..." (நன்றி:-வ.ஐ.ச.ஜெயபாலன்) ஆனால்இபல தசாப்தங்களாக "மரணத்துள் வாழ்வோம்" (நன்றி:- சண்முகம் சிவலிங்கம்)என்பதாகவே ஈழத்தமிழரது நடைமுறை வாழ்வு நீண்டு செல்வதைப் பல்வேறு தளங்களினு}டாகவும் சமூகவியல் பார்வையோடு "ஒரு மரணமும் சில மனிதர்களும்" என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் எமக்கு தாட்சாயிணி சிறப்பு அறிமுகம் ஆகிறார். "எழுத வேண்டும் என்று துறுதுறுத்த வயதில் எழுத ஆரம்பித்துஇஇன்று வரை எழுதப்பட்ட சிறுகதைகளில் தெரிந்தெடுத்த பன்னிரு கதைகளின் தொகுப்பு இது.இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் எம்மால் கடந்துவரப்பட்ட காலத்தின் ஒவ்வொரு பி…

  13. தாமரைக்குள ஞாபகங்கள் – ப. தெய்வீகன் சிவபெருமான் வீட்டுச் சிக்கல் கயிலாயத்துக்கு போன வாரம் போய் வந்தது அருமையானதொரு அனுபவமாக அமைந்தது. சிவபெருமான் தனது வீட்டில் நிற்கவேணும் என்று போன தடவை கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்த முறை இரண்டு நாட்கள் அவர் வீட்டிலேயே தங்கிக் கொண்டேன். பயங்கர பிஸியான ஆளென்றாலும் வீட்டுச் சாப்பாடு தான் உடம்புக்கு நல்லது என்று உமாதேவி அக்காவை இருத்தி எழுப்புறார். “லண்டன் – கனடா பக்கமிருக்கிற பெண்ணியவாதிகள் இதையெல்லாம் கண்டால் உங்களை துலைச்சுப்போடுவினம் தெரியுமோ?” – என்று கேட்க அவர் நீலம் பாரித்த கழுத்தின் வழியாக நைக் ரீ சேர்ட்டை போட்டுக்கொண்டு “உந்த விசர் கதையளை விட்டுட்டு கால்ஃப் விளையாட வாரும்” – என்று கூட்டிக்கொண்டு போனார். “உங்களுக்கும் அக…

  14. அம்மாவின் ரகசியம் வாசிக்கவென எடுத்துவைத்த நூல்களில் இன்று அதிகாலை என் கையில் அகப்பட்ட நூல் ‘அம்மாவின் ரகசியம்’. சுநேத்ரா ராஜகருணநாயகவின் இச் சிங்கள மொழியிலான படைப்பை தமிழில் தந்திருப்பவர் எம்.ரிஷான் ஷெரீப். வாசிப்பை இடறல் செய்யாத மொழிபெயர்ப்பு. எம்.ரிஷான் ஷெரீப்பை இதற்காக பாராட்டலாம். சிங்கள மொழியிலான ஆக்கங்களின் பரிச்சயம் ஈழத் தமிழர்களுக்கு மிகமிகக் குறைவு. சிங்கள மக்களின் வாழ்க்கைகூட மேலோட்டமாகவே தெரிந்திருக்கிறது அவர்களுக்கு. வாழ்க்கை அழைக்கும் பக்கங்களுக்கெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் தேவை மூன்றாம் உலகினைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் விதியாகியிருக்கிற இன்றைய காலகட்டத்தில், தார்மீக நியாயங்களின் காரணமாய் தம் தேசத்து அரசியலை வெறுத்து பல படைப்பாளிகளும் தம் த…

    • 15 replies
    • 5k views
  15. Started by கிருபன்,

    மார்க்சீம் கோர்க்கியின் "தாய்" நாவலிலிருந்து... (முதலாம் பாகம் அத்தியாயம் 24) "இது எனக்குப் புரியவே மாட்டேனென்கிறது!" "எது?" என்று கேட்டான் ஹஹோல். " நாம் உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்கிறோம். அதுவே மோசம். காட்டு மிருகங்களால் ஆபத்து வருமென்று தெரிந்தால் அவற்றையும் நாம் கொன்று தீர்கிறோம். அது சரிதான். அது எனக்குப் புரிகிறது. ஒரு மனிதன் தன்னுடைய சகமனிதர்கள் மீது காட்டு மிருகத்தைப்போல் பாய்ந்து கடித்துத் தின்ன முனைந்தால், அவனை நாம் மிருகத்தைக் கொல்வதுபோல் கொன்று தீர்க்கத்தான் செய்வேன். ஆனால் இவனை மாதிரி அனுதாபத்திற்குரிய ஒரு ஜந்துவைத் தீர்த்துக் கட்டுவெதென்றால்? இவனை எப்படித்தான் ஒருவன் தாக்க நினைப்பான்?" ஹஹோல் தோள்களைக் குலுக்கிக் கொண்டான். "இவனும் காட்டு மிருக…

  16. படம்: இயான் லாக்வுட் சீனாவில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னால் லாவோ ட்சு என்பவரால் எழுதப்பட்டது ‘தாவோ தே ஜிங்’. இந்நூலே தாவோயிசத்துக்கு அடிப்படை. கன்பூசியஸைவிட 50 வயது மூத்தவரான லாவோ ட்சு சீனத் தலைநகரில் ஆவணக் காப்பாளாராகப் பணிபுரிந்தார். அரசியல் நிலைமை மோசமானதால் பதவி விலகினார். இவர் தலைமறைவாகப் போக எண்ணி எல்லையைக் கடக்கும் முன் எல்லைப்புற அதிகாரி இவரை வற்புறுத்தி ஏதாவது எழுதித் தரச் சொன்னதால், இவர் 5,000 சித்திர எழுத்துகளில் ‘தாவோ தே ஜிங்’ எழுதியதாகத் தெரிகிறது. இவரைப் பற்றி நிலவும் பலகதைகளில் ஒன்று இது. ‘தாவோ’ என்பதற்குப் பல பொருள்கள், அவற்றுள் இந்த நூலின் தலைப்புக்குப் பொருத்தமானது ‘வழி’ என்னும் பொருள். ‘தே’வுக்கு ‘நேர்மைக்கு உந்துதல் அல்லது ஊக்கம் தேவை’ எ…

    • 0 replies
    • 2.1k views
  17. திசையறிந்து பயணித்த தூரிகை – அன்பாதவன் 113 Views நானும் எனது நிறமும் – ஓவியர் புகழேந்தியின் தன்வரலாறு நூல் குறித்து. தோழர்! தொடக்கத்திலே உங்கள் கரங்குலுக்கி தோளணைத்து வாழ்த்துகிறேன். வாழ்வின் கறுப்பு பிரதேசங்களையும் ஒளிர்ந்த காலங்களையும் மறைக்காமல் பதிவிட்டதற்காக வாழ்த்துக்கள் புகழேந்தி! ஒரு சாமான்யனின் தன் வரலாறு எவ்விதத்தில் வாசகனுக்கு உதவும்…? சுயசரிதையில் அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கக்கூடும் என்ற பல கேள்விகளோடு தான் ஓவியர் புகழேந்தியின் “நானும் எனது நிறமும்” நூலை வாசிக்கத்தொடங்கினேன். வாசித்து முடிக்கையில் தெளிந்தேன். இது கதையல்ல வரலாறு; சாதாரணன் ஒருவன் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராமல் வாழ்வின் ஏற்ற …

  18. திருகோணமலையில் சோழர் - டாக்டர் ஜீவராஜின் புதிய நூல் இலங்கையில் சோழர்களது 77 வருட கால ஆட்சியில் அவர்களது தலைநகரமாக பொலன்னறுவை என்கின்ற ஜனநாதமங்கலம் இருந்தபோதிலும் அவர்களது செயற்பாட்டுப் பிரதேசமாக திருகோணமலையே முக்கியத்துவம் பெற்றிருந்தது. திருகோணமலையில் சோழர்களது ஆட்சி பற்றிய சில கட்டுரைகளை கொண்டு இம்மின்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சோழ இலங்கேஸ்வரன், சோழர்கால தமிழ் பௌத்தம் என்பன அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை. வலைப்பதிவில் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எழுதப்பட்ட கட்டுரைகளே இவை. இது திருகோணமலையில் சோழராட்சியின் முழுமையான விபரிப்பாக அமையாது என்றாலும் அது தொடர்பில் ஒரு சிறு அறிமுகத்தை தருகின்ற முயற்சியாகவே இது.. https://vanakkamlondon.com/l…

  19. திருக்கோணேஸ்வரம் நூல் பற்றி... By PONMALAR 16 NOV, 2022 | 02:40 PM திருக்கோணேஸ்வரம் பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பல நாடுகளில் கோணேஸ்வரம் பற்றிய தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், பிரான்ஸியர் என்ற அன்னியரின் ஆதிக்கத்துக்குள் திருக்கோணமலை கொண்டுவரப்பட்டமை அதற்குரிய காரணங்களாக இருக்கலாம். இதனால் தான் என்னவோ 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரான போர்த்துக்கீச பாதிரியார் குவைறோஸ் தன் குறிப்பொன்றில் ‘கீழைத்தேயத்தில் கிறிஸ்தவர்கள் அல்லாத மக்களின் ரோமாபுரி திருக்கோணேஸ்வரம்’ என வர்ணித்துள்ளார் என்ற தொடரும் திருக…

    • 0 replies
    • 461 views
  20. களவும் கற்று மற என்பது பழமொழி. ஒருமுறை நீங்கள் களவு செய்து மாட்டிக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் திருடன்தான் என்கிறார் மணியன்பிள்ளை. "களவென்பது கற்று மறக்கும் விசயமல்ல. முதல் வீழ்ச்சியே மிகப் பெரிய பாதாளத்தில்தான் முடியும். கரையேற முயற்சிக்கும் போதெல்லாம் போலீசும் சமூகமும் மேலும் உதைக்கும். வழி தவறிப்போக இருக்கும் இளைஞர்கள் என்னுடைய இந்தத் தோல்விகளின் குமுறல்களைப் புரிந்து கொள்ள வேண்டும்." என்கிறார் பிள்ளை சிறுவயதில் தந்தையை இழக்கிறார் பிள்ளை. உறவினர்கள் மணியன் பிள்ளை குடும்பத்துக்கு தர வேண்டிய சொத்தில் ஏமாற்றுகிறார்கள். ஒரு சிறு வீட்டை மட்டுமே ஒதுக்கித் தருகிறார்கள். அம்மா மற்றும் சகோதரிகளுடன் அந்த வீட்டில் வறுமையும் வாழ்கிறது. தந்தை இருக்கும் வரையில் பசி …

  21. ஈழ விடுதலை என்றாலே இந்திய ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது என்ற கருத்துத் தளத்தில் இருந்து இயங்கும் ஜெயமோகன் ஈழ விடுதலை அவா கொண்டு அனைத்து தளத்திலும் இலக்கியம் ஆக்கம் படைப்பு என்று இயங்கும் தீபச் செல்வனை 'சின்னப் பையன்' என்ற ஒரு அடைமொழியில் ஒழித்து வைக்கின்றார் இதனை வாசிக்கவும் சுரா 80- இருநாட்கள் கன்யாகுமரிக்கு வருவதற்கு மிகச்சிறந்த காலகட்டம் ஆனியாடி சாரல் இருக்கும் ஜூன், ஜூலை மாதம். இந்தவருடம் சாரல் இப்போதே ஆரம்பித்துவிட்டது. குளிரும் இளமழையுமாக இருக்கிறது ஊர். சுந்தர ராமசாமியின் 80 ஆவது நினைவுநாளை ஒட்டி காலச்சுவடு ஒருங்கிணைத்திருந்த கருத்தரங்குக்கு கன்யாகுமரிக்கு வந்த பெரும்பாலான எழுத்தாளர்களுக்கு இந்தச் சூழல் உதவியாக‌ இருந்தது என்றார்கள். கிட்டத்…

  22. [size=5]ஈழம் மக்களின் கனவு ஆசிரியர் தீபச்செல்வன்[/size] வெளியீடு முதற்பதிப்பு 2010 தோழமை வெளியீடு ஈழம் பிரபாகரனின் கனவு என்று இனவாதிகள் முதல் சமாதானம் பேசியோர்வரை கூறினார்கள், கூறிக்கொண்டுமிருக்கிறார்கள். ஆனால் கறுப்பு யூலையை ஒத்த வயதுடைய தீபச்செல்லவன் அவர்களது முகங்களில் 'ஈழம் மக்களின் கனவு' தலைப்பினூடாக அறைந்துள்ளார். கறுப்பு யூலைக்கும் தீபச்செல்வனுக்கும் ஒரே வயதென்பதை சோபாசக்தியுடனான நேர்காணலில் அவரது அறிமுகத்தில் உணரமுடிகிறது.(அவரது அறிமுகத்தில் தீபச்செல்வன் 1983 எனவும் உள்ளது) புனைவுகளற்ற அவலங்களை பதிவுசெய்தல் என்பது அலங்காரங்களற்ற உண்மைகளைப் பேசும் சத்தியமாகும். அதனைப் பொத்தக அமைப்பிலும் காட்டியுள்ளார். வழமைகளுக்கப்பால் பா.செயப்பிரகாசம் அவரகள் 'மீண்டெழுத…

    • 4 replies
    • 791 views
  23. தீபச்செல்வனின் ‘ஈழம் - மக்களின் கனவு’ சித்திராங்கன் சென்னை புத்தகத் திருவிழாவில் கவிஞர் தீபச்செல்வனின் ‘ஈழம் மக்களின் கனவு’ என்ற புதிய நூல் தோழமை வெளியீடாக வந்திருக்கிறது. பதுங்கு குழியில் பிறந்த குழந்தை, ஆட்களற்ற நகரத்தைத் தின்ற மிருகம், பாழ்நகரத்தின் பொழுது ஆகிய மூன்று தொகுப்புக்கள் ஏற்கனவே வெளிவந்துள்ள நிலையில் இது தீபச்செல்வனின் நான்காவது நூலாகும். ‘ஈழம் மக்களின் கனவு’ என்ற இந்நூல் ஈழம் பற்றிய உரையாடல்களையும் வாக்குமூலங்களையும் கொண்டிருக்கிறது. தீபச்செல்வனுடன் ஷோபாசக்தி நிகழ்த்திய ‘ஈழத்து மக்களும் கனவுமே எனது ஆதர்சம்’ என்ற நேர்காணல் தொடர்ச்சியான விமர்சனத்தினை எதிர்கொண்ட ஓர் உரையாடலாகும். அதேபோல் ‘பதுங்குகுழியில் இருந்து கொஞ்சம் சொற்கள்’ என்ற நேர்காணல் …

  24. இன்றுதான் தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடங்கியது முதல் முடியும்வரை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் கதை நகர்கிறது. நான் வாழ்ந்த மண்ணில், நான் நடந்த வீதியில், நான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கையைக் கதையின் ஒவ்வொரு வரியிலும் தரிசிக்க முடிகின்றது. கதையின் பல இடங்களில் நான் பட்ட அனுபவங்கள் கண் முன்னே படமாக விரிகின்றன. போர் தின்ற பூமியில் வாழ்ந்த எல்லோருடைய அனுபவங்களும் இவையாகவே இருந்தன, இருக்கின்றன. கிளிநொச்சியில் தொடங்கும் கதை விரிந்து பரந்து வன்னியின் பெரும்பாலான இடங்களுக்கு நகர்கிறபோது நானும் என்னை அறியாமல் அந்த இடங்களுக்கே சென்று விடும் உணர்வைத் தந்தது. ஒரு தாயின் பாசப் போராட்டமும் மகனின் தாய் மண் பற்றிய ஏக்கமும் கதையெங்கும் இழையோடி நிற்…

    • 0 replies
    • 514 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.