நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
801 topics in this forum
-
நூலகங்களில் செய்யப்படுகிற முதலீடு வாழ்நாள் முழுதும் கற்கிற அறிவுலகத்தை உருவாக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஹாங்காங்கில் நடந்தது. எனது நூலக அட்டை தொலைந்து விட்டது. அப்போது புறநகர் ஒன்றின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாறியிருந்தோம். வீடு மாற்றும்போது தவறியிருக்க வேண்டும். புதிய வீட்டிலிருந்து 10 நிமிட நடை தூரத்தில் நூலகம் இருந்தது. ஹாங்காங்கில் மக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளின் மையத்தில் நூலகங்கள் இருக்கும். வரவேற்பில் இருந்த துடியான இளம்பெண் எனது ஹாங்காங் அடையாள அட்டையை வாங்கிப் பரிசோதித்தார். “இந்தப் பகுதிக்குப் புதிதாக வந்திருக்கிறீர்களா? முகவரியையும் மாற்றிவிடலாமே” என்றார். நான் சொல்லச்சொல்ல முகவரியைக் கணினியில் உள்ளிட்டார். தொலைபேசி எண்களையும் மின்னஞ்சல் ம…
-
- 1 reply
- 528 views
-
-
கனடாவில் ஆயுத எழுத்து ... கனடாவில் ஆயுத எழுத்து நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் காலம் March 14th 2015..இடம் BURROWS HALL Community Center 1081 Progress avenue Scarborough Ontario M1B 5Z6 நேரம் - 1.30PM TO 5PM யாழ் கள உறவுகள் அனைவரையும் வரவேற்கிறேன் .நன்றி J’aime · ·
-
- 26 replies
- 4k views
-
-
தான் கடந்து வந்த வாழ்க்கையை அப்துல் கலாம் நினைத்துப் பார்ப்பதாக அமைந்துள்ளது அவர் எழுதியுள்ள 'எனது பயணம்' நூல். இதில் இளைய தலைமுறை அறிந்துகொள்ள நிறைய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருப்பவர் நாகலட்சுமி சண்முகம். நூலின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தகுந்த ஓவியங்களை வரைந்து அழகு சேர்த்திருக்கிறார் பிரியா செபாஸ்டியன். நூலிலிருந்து ஒரு சிறிய பகுதி இங்கு பகிரப்படுகிறது: எங்கள் ஊரின் சிறிய மக்கட்தொகையில் இந்துக்கள் பெருமளவில் இருந்தனர். எங்களைப் போன்ற இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் குறைவான எண்ணிக்கையில் அங்கு வசித்து வந்தனர். ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகத்தினருடன் ஆரோக்கியமான ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருந்தது. வெளியுலகின் பிரிவினைகளும்…
-
- 0 replies
- 494 views
-
-
"தி அல்கெமிஸ்ற்" (தமிழ்: "ரசவாதி") அமெரிக்காவில் பிரபலமான "சிபோற்லே" (Chipotle) எனும் மெக்சிகோ நாட்டு உணவகம் கனடாவில் பரவலாக இல்லையென அண்மையில் விஜயம் செய்த கனேடிய உறவுகளிடமிருந்து அறிந்து கொண்டேன். சோறு, இறைச்சி, கறுப்பு பீன்ஸ், அவகாடோப் பழம் என்பவற்றைக் குழைத்து ஒரு ரோரிலாவில் சுற்றித் தரும் "புறிற்றோ" (Burrito) தான் இந்த உணவகங்களின் விசேட தயாரிப்பு. இந்த உணவகத்தில் எனக்குப் பிடித்த இன்னுமொரு விடயம், உணவை வாங்கி எடுத்துச் செல்லும் கடதாசிப் பைகளில் சுவாரசியமான தகவல்களைப் பதிப்பித்திருப்பார்கள். சில சமயங்களில் மனதுக்குப் புத்துயிர் தரும் கதைகளும் வந்து சேர்ந்து அந்த நாளைத் திசை மாற்றி விடும். அப்படி என் ஒரு நாளை வெளிச்சமாக்கிய கதை ஒன்று இதோ: "ஒரு கிராமவாசி தினம…
-
- 4 replies
- 966 views
-
-
ஈழப் போராட்ட இலக்கியம் : வரலாறு-புனைவு-விமர்சனம் - யமுனா ராஜேந்திரன் ‘கவிதை என எழுதாதே வரலாற்றை’ என ஒரு கவிதை எழுதினான் பாலஸ்தீனக் கவிஞனான மஹ்முத் தர்வீஷ். புனைவு எனும் பெயரில் எழுதப்படும் இன்றைய ஈழப் போராட்டப் புனைகதைகளுக்கு இந்த வரி அச்சொட்டாகப் பொருந்துகிறது. வரலாறு, புனைவு என இரண்டினதும் குறைந்த பட்ச அழகியல் அடிப்படைகளையும் புறந்தள்ளி இன்றைய ஈழப் புனைவுகள் எழுதப்படுகின்றன. வரலாறு எழுதுதலில் இரண்டு அடிப்படைகள் உண்டு, ஆய்வும் தரவுகளும் அதற்கான ஆதாரங்களும் கொண்டு கருத்தியல் பார்வையுடன் எழுதப்படுவது வரலாறு. குறிப்பிட்ட காலத்திலும் இடத்திலும் வாழ்ந்த மாந்தர்களின் மாதிரியை அனுபவதரிசனத்துடன் முன்வைப்பது புனைவு. புனைவு யதார்த்தத்தை முன்வைக்கிறது எனினும் அது யதார்த்தத…
-
- 0 replies
- 1.4k views
-
-
..21. மார்ச் 2015 ...லண்டனில் ஆயத எழுத்து நூல் அறிமுகமும் கலந்துரையாடலும். அனைவரும் வருக 1 min · Modifié · J’aime
-
- 12 replies
- 2.6k views
-
-
-
- 0 replies
- 811 views
-
-
கவிதை இலக்கிய நூல்களுக்கான ஆய்வரங்கமும் ஈழத்து பெண் கவிஞர்கள் அறுவரின் கவிதை நூல்கள் பற்றிய திறனாய்வுக் கலந்துரையாடலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் நடைபெற்றது. ஈஸ்ற்காமில் இயங்கிவரும் தமிழ் மொழிச் சமுகங்களின் செயற்பாட்டகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் லண்டன் வாழ் பல முக்கிய இலக்கிய ஆர்வலர்களும் கலை இலக்கியங்களின் மீதான தீவிர செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் மொழிச் சமுகங்களின் செயற்பாட்டகத்தின் சார்பில் திரு.பௌசர் அவர்களின் அறிமுக உரையோடு ஆரம்பமான இந்த நிகழ்வில் எழுத்தாளரும் கவிஞரும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி சந்திரா ரவீந்திரன் மற்றும்எழுத்தாளரும் ஆய்வாளருமான திரு.கோகுலரூபன் ஆகியோர் பிரதான பேச்சாளர்களாகவும் திற…
-
- 0 replies
- 1.5k views
-
-
வணக்கம் பிரான்ஸ் - ஜேர்மனி - சுவிஸ் ஆகிய நாடுகளில் சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவர் மதிப்புக்குரிய பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் ஆவணப்பதிவாக்கிய இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீதான இனப்படுகொலை தொடர்பான புத்தக அறிமுக நிகழ்வு தொடர்பான அறிவித்தல் நன்றி ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு
-
- 0 replies
- 850 views
-
-
இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை ஆவணமாக பதிவு செய்துள்ள SRI LANKA : HIDING THE ELEPHANTஎனும் புத்தகத்தின் அறிமுக நிகழ்வு பிரான்சில் இடம்பெறுகின்றது. சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவரும் பேராசிரியரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர் குழுவின் பிரதிநிதிகளில் ஒருவரான இராமு.மணிவண்ணன் அவர்களால் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது. சாட்சியங்கள், ஆதாரங்கள், புள்ளிவிபரங்கள், ஒளிப்படங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தகம் 900 பக்கங்களுக்கு மேல் கொண்டுள்ளது. பிரான்சில் இடம்பெறவுள்ள நிகழ்வரங்கில் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் நேரடியாக வருகை தரஇருப்ப…
-
- 0 replies
- 477 views
-
-
திரை ஊடகத்தில் மண் சார்ந்த கலைஞராகத் தொடர்ந்து தன்னை முன்னிறுத்திவருபவர் தங்கர் பச்சான். அவர் எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. முந்திரிக் காட்டு மனிதர்களின் வாழ்வை வேரோடும் வேரடி மண்ணோடும் நம் முன்னால் வைக்கும் இக்கதைகளில், அவர்களுடன் பின்னிப்பிணைந்த கால்நடைகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகளும் மனிதர்களைப் போலவே விளிம்புநிலை கதாபாத்திரங்களாக நம்முடன் பேசுகின்றன. முந்திரிக் காடுகளும் பலா மரங்களும் நிறைந்த செம்மண் காணிகளின் நடுவே, ஈரம் காயாமல் இருந்த விவசாய வாழ்வு எவ்வித ஒளிவுமறைவும் இன்றிக் கதைகளில் விரிகிறது. கொஞ்சமாக நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயக் குடும்பங்களின் அன்றாடப் பாடுகள், விவசாயக் கூலிகள், கரும்புத் தோட்ட…
-
- 1 reply
- 564 views
-
-
மகாபாரதம் எனும் இதிகாசம் மீது தீராக் காதல் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய இணைப்புகள் இவை. இவற்றை இன்று எழுத்தாளர் ரஞ்சகுமார் தன் முகநூலில் பகிர்ந்து இருந்தார் முழுமையான மகாபாரதம்: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Purpose-of-translation.html மகாபாரதம் கும்பகோணம் ம.வீ.இராமானுஜாசாரியார் பதிப்பு 18 பர்வங்களும் முழுவதும் தமிழில் இங்கு கிடைக்கிறது, பெரும் பொக்கிசம்: http://books.tamilcube.com/tamil/ மகாபாரதத்தினைப் படிப்பது எப்படி?: http://www.sramakrishnan.com/?p=3337
-
- 3 replies
- 5.3k views
-
-
2000-க்கு பிந்தைய தமிழ் நாவல்களின் உலகம் இமையம் “எல்லாமே நிரந்தரமாய் மாறிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம். வாழ்க்கை என்பது தொடர்ந்து செல்லும்”-*1 ‘லீவ் உல்மன்’. மொழியின் வரலாறு என்பது மொழியில் உண்டான இலக்கியப் படைப்புகளின் வரலாறுதான். அந்த வகையில் நாவல் என்ற கலை வடிவம் தமிழ் மொழிக்கு அறிமுகமாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. முதல் நாவல் எழுதப்பட்ட காலத்திலிருந்து 2014ல் எழுதப்பட்ட நாவல்கள்வரை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான போக்கை கடை பிடித்து வந்திருக்கிறது. நாவலின் மையத்தைத் தேர்ந்தெடுப்பதில், கதை சொல்லும் முறையில், கதை சொல்ல தேர்ந்தெடுத்த மொழியில், உத்தியில் என்று காலத்துக்குக் காலம் மாற்றம் பெற்று வந்திருக்கிறது. இந்த …
-
- 0 replies
- 5k views
-
-
எதிர்வினை - காயப்படுத்தும் கத்திகள் கருணாகரன் “நஞ்சுண்டகாடு“ நாவலைப்பற்றி எழுதும் இரவி அருணாசலம் அந்த நாவலுக்கு அப்பால், அதனுடைய விமர்சனத்துக்கு அப்பால், அந்த நாவலை எழுதிய குணா கவியழகனைப் பற்றிய தவறான புரிதல்களையும் எழுதியிருக்கிறார். முகநூலிலும் இணையத்திலும் பிற ஊடகங்களிலும் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இழைத்து வருகின்ற வழமையான தவறு இது. போதாக்குறைக்கு அதற்குப் பயன்படுத்தப்படும் சொற்கள், அவற்றை முன்வைக்கும்முறை போன்றன மிகவும் தரந்தாழ்ந்தவையாகவும் அமைந்து விடுகின்றன. இது ஏன் நிகழ்கிறது என்றால், படைப்பைப் பார்ப்பதையும் விட, படைப்பாளியையும் படைப்பாளியின் அரசியலையும் அவருடைய பின்புலங்களையுமே இவர்கள் அதிகமும் நோக்குகிறார்கள். படைப்பையும் விட படைப்பாளியின் பின்புல…
-
- 0 replies
- 694 views
-
-
யாழ். இலக்கியக் குவியத்தின் ஏற்பாட்டில் திருமதி மைதிலி தயாபரன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, யாழ்.திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியற் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. திருமதி மைதிலி தயாபரன் எழுதிய சொந்தங்களை வாழ்த்தி (நாவல்), வாழும்காலம் யாவிலும் (நாவல்) மற்றும் விஞ்சிடுமோ விஞ்ஞானம் (கவிதை) ஆகிய நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன. யாழ். இலக்கியக் குவியத்தின் தலைவர் வேலணையூர் தாஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. நூல்களுக்கான வாழ்த்துரையை கவிஞர் எஸ்.சத்தியபாலனும் அறிமுக உரையை சு.சிறீக்குமரனும் ஆய்வுரைகளை சி.ரமேஸ், க.குகபரன் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நிகழ்வில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். h…
-
- 0 replies
- 663 views
-
-
எழுத்தின் அதிகாரம்: ஓலைச்சுவடி, புத்தகம் முதல் டிவிட்டர் வரை அபிலாஷ் சந்திரன் எழுத்தாளர்களை விட வாசகர்கள் அதிக அறிவாளிகள் என்பது என் அனுமானம். எழுத்தாளர்களுக்கு தம் அறிவை இன்னும் புத்திசாலித்தனமாக, தர்க்கபூர்வமாக, கூர்மையாக வெளிப்படுத்த தெரிகிறது. அவர்களிடத்து இந்த மொழி தரும் ஒரு தன்னம்பிக்கை இயல்பாக இயங்குகிறது. ஆயிரமாண்டு அறிவையும் நுண்ணுணர்வையும் தன்னிடத்து கொண்டுள்ள மொழியில் புழங்கும் போது இயல்பாய் அவற்றை கடன் பெறும் எழுத்தாளன், ஒவ்வொரு சொல்லின் பின்னும் தான் எதிர்கொண்ட ஐரோப்பிய கல்வியின் செறிவை கண்டுள்ள எழுத்தாளன் தன் எதிரில் தேரும் கவச குண்டலமும் அற்று நிற்கும் வாசகனை விட மேலானவனாக தன்னை காட்டி விட இயலும். அது உண்மையில் எழுத்தின் வன்மை. எழுத்தாளனின் மேன்மை …
-
- 0 replies
- 965 views
-
-
கிளிநொச்சி போர் தின்ற நகரம்: அறிமுகம்: யமுனா ராஜேந்திரன்
-
- 0 replies
- 667 views
-
-
அப்போது ஜேவிபி கிளர்ச்சிக்காலம். 1971ம் ஆண்டு. சரத்ஹாமு தென்னிலங்கையிலே ஹக்மண என்ற ஊரில் வாழ்கின்ற தனவந்தர். ஊர் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். கௌரவமாக வாழும் குடும்பம். சரத்ஹாமுவின் மனைவி உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக இருக்கிறார். ஒருநாள் அந்தப்பாடசாலையில் இன்னொரு ஆசிரியையும் இணைகிறார். அந்த ஆசிரியை அண்மையில் அந்த ஊருக்கு மாற்றலாகி வந்திருக்கும் இன்ஸ்பெக்டர் சமரநாயக்காவின் மனைவி. நாளடைவில் இரண்டு ஆசிரியைகளும் நண்பிகளாகிவிடுகிறார்கள். தினமும் பாடசாலை முடிந்தபின் மனைவியை ஜீப்பில் அழைத்துப்போகவரும் இன்ஸ்பெக்டர், அந்த தனவந்தரின் மனைவிக்கும் லிப்ட் கொடுக்க ஆரம்பிக்கிறார். ஒருநாள் அப்படி இறக்கிவிடும்போது உள்ளேபோய் ஒரு டீயும் குடிக்கிறார். இன்ஸ்பெக்டர் குடும்பமும் த…
-
- 0 replies
- 735 views
-
-
* இந்த மதிப்பீட்டில் ‘தி இந்து’ வெளியீடுகள், ‘தி இந்து’ குழுமத்தைச் சார்ந்தவர்களின் நூல்கள் சேர்க்கப்படவில்லை. பளிச் புத்தகம் புத்தகக் காட்சியின் பளிச் புத்தகம் ‘அடையாளம் பதிப்பக’த்தின் ‘தொடக்க நிலையினருக்கு...’ பின்நவீனத்துவம், ஜென், மொழியியல், புவிவெப்பமாதல் போன்ற தூக்கம் வரச் செய்யும் விஷயங்களை எளிமையாகவும் சுவாரசியமாகவும் தரும் புத்தக வரிசை இது. அதுவும் இதன் காமிக்ஸ் பாணி வடிவமைப்பு இருக்கிறதே... தமிழுக்குப் புதுசு மட்டும் அல்ல; எவரையும் வசீகரிக்கக் கூடியதும்கூட! மீண்டும் காந்தி காந்தியும் நேருவும் வசீகரித்தனர். ‘கிழக்குப் பதிப்பகம்’ கொண்டுவந்த ராமச்சந்திர குஹாவின் ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’, ‘அலைகள் வெளியீட்டகம்’ கொண்டுவந்…
-
- 8 replies
- 1.6k views
-
-
குமரன் பொன்னுத்துரையின் 'நான் நடந்து வந்த பாதை': ஒரு நிகழ்வும் சில நினைவுகளும்.... நேற்று டொரான்டோவில் தமிழர் வகைதுறை வளநிலைய (தேடகம்) ஏற்பாட்டில் நடந்த தோழர் குமரன் பொன்னுத்துரையின் 'நான் நடந்து வந்த பாதை' நூல் வெளியீடும், கலந்துரையாடலும் நடைபெற்றன. நிகழ்வில் பலரைக் காண முடிந்தது. குமரன், சேணா உட்படப்பல தேடக நண்பர்கள், பரதன் நவரத்தினம், 'ஜான் மாஸ்டர்', எஸ்.கே.விக்னேஸ்வரன், சுவிஸ் முரளி மற்றும் முகநூல் நண்பர்கள் எனப் பலரைக்காண முடிந்தது. குமரன் பொன்னுத்துரை அவர்கள் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் ஆரம்ப காலகட்டத்திலிருந்து இயங்கி, ஒதுங்கியவர்களில் ஒருவர். கழகத்தின் முக்கிய பொறுப்புகள் பலவற்றில் இருந்ததுடன், கழகத்தின் மத்திய குழு உறுப்பினர்களிலொருவராகவும் விளங்கியவர். தன…
-
- 1 reply
- 1.3k views
-
-
குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு என்னும் நாவல் இரு மாதங்களுக்கு முன்னர் வெளிவந்திருந்தாலும் இப்பொழுதுதான் எனக்கு வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நாவலின் பெயர் எல்லோரையும் வாசிக்கத் தூண்டுவதாக அமைந்திருப்பது மிகச் சிறப்பு. வாசிக்கும் முன்னர் அதுபற்றிய விமர்சனங்கள் பலவற்றை வாசித்ததில், எனக்குள்ளேயே அதுபற்றிய மிகைப்படுத்தப்பட்ட கற்பனையும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் ஏற்பட்டிருந்தது. திரு பாலகுமாரனின் முன்னுரை சிறிது நீண்டதாக இருந்தது எனக்குச் சலிப்பை ஏற்படுத்தியது. அது ஏற்படுத்தியிருந்த ஒரு தோற்றம் வாசித்தபோது எனக்குக் கிடைக்கவில்லை என்பது உண்மை. அது என் அதீத எதிர்பார்ப்பின் காரணமாகக் கூட இருக்கலாம். அவரின் எழுத்து, முதல் நூல் என்று கூறமுடியாதவாறு விபரிக்கும் விதம் அரும…
-
- 0 replies
- 1.4k views
-
-
கவித்துவமான வார்த்தைகளும் கலையம்சம் நிரம்பிய செயல்களும் சமூக விடுதலைக்கு எதிரானவை என்று தமிழர்களுக்கு எங்கோ அடிப்படையில் ஒரு சந்தேகம் இருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறை விடுதலைப் பாடலுக்கான தன் எழுச்சியையும் இச் சந்தேகத்துடனேயே கடந்து போகிறான். அல்லது, தனக்குத்தானே இறுமாப்புடன் கவிஞன் என்று கூறிக் கொள்கிறான்.இரண்டிலும் நிரம்பிய சிக்கல்கள் தாம் விடுதலைக்கான வேகத்தை மட்டுப்படுத்துகின்றன என்று கொள்ளலாம் . கவிதையெங்கும் அர்த்தம் சலித்த வார்த்தைகளை நிறைத்து வைக்கும் காலகட்டம் இது போல. அதாவது முன்னமே பலர் எழுதியதை மீண்டும் மீண்டும் எழுதிப்பார்த்து தாகத்தை ஆற்றிக் கொள்ளுதல்,அதே வார்த்தைகளை அடுக்கு மாற்றி கவிதை என எழுதிப் பார்த்தல், பிரச்சார நெடியுடன் முழக்கங்களுடன் …
-
- 0 replies
- 2.2k views
-
-
சொல்வனம் இணைய இதழில் படித்தவற்றை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். முழுமையாகப் படிக்க: இதழ்: 112 பெர்லினும் தமிழ் இலக்கியத்துக்குள் வந்தாச்சு வெங்கட் சாமிநாதன் தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை. ஒரே ஒரு விதிவிலக்கு. எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது. இது மாறியது ”சரஸ்வதி” பத்திரிகை காலத்தில். இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை, எமக்கு அவர்கள் பரிச்சயப் படுத்தியது அப்போதிலிருந்துதான். - See more at: htt…
-
- 9 replies
- 4.5k views
-
-
தமிழ்ச் சிறுகதைகளுக்கென்று பெருமிதம் மிக்க மரபு இருக்கிறது. நம்பிக்கையூட்டும் சிறுகதைகள் அவ்வப்போது வரத்தான் செய்கின்றன. ஆனாலும், நம்பிக்கையூட்டும் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாசிக்கப் புறந்தருவது ஒரு கதை சொல்லியின் சாமர்த்தியம்தான். அது ஷோபாசக்திக்கு இருக்கிறது. அதை மறுபடியும் மெய்ப்பிக்க வந்து நிற்கிறான் ‘கண்டிவீரன்’. பத்துக் கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பைக் கருப்புப் பிரதிகள் நேர்த்தியாக வெளியிட்டிருக்கிறது. யாரும் யாரையும் நம்ப முடியாத பதற்றமிகு பின்னணியில், சிங்கள ராணுவமும் போராளி இயக்கங்களும் சந்தேகத்தின் பேரில் எளிய உடல்கள் மீது நிகழ்த்திய குரூரங்களைத் தனது எழுத்தின் வழியாக வாசிப்பவரிடம் கடத்துகிறார் ஷோபா. உள்ளடக்கம் சார்ந்து இந்தக் கதைகள் எதிரும் புதிருமான அரசியல் வ…
-
- 0 replies
- 2.2k views
-
-
இலங்கையின் தமிழ் இலக்கியம் கருணாகரன் இலங்கை, சிறிலங்கா, சிலோன், தாமிரபரணி என்றெல்லாம் சொல்லப்படும் ஈழத்தின் தமிழிலக்கியம் 14ஆம் நூற்றாண்டுடன் தொடங்குகின்றது என்கிறார் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை. ஆனால், ஈழத்தின் வரலாறு அதற்கும் அப்பால் 2000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது. ஈழ வரலாறு நீண்டதாக இருந்தாலும் அந்த அளவுக்கு இலக்கிய ரீதியாக அதனுடைய அடையாளத்தைக் காண முடியவில்லை. 14 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் கூட அது செழித்துப் பொலியவில்லை. என்றபோதும் இலங்கையின் வடபுலத்தை ஆட்சி செய்த ஆரிய சக்கரவர்த்திகளின் காலத்தில்தான் ஓரளவுக்கு மருத்துவம், சோதிடம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இதற்கான செய்யுள்கள் பல இயற்றப்பட்டன. இதேவேளை இந்தக் காலகட்டத்தில்தான் ரகுவம்சம், கதிரமலைப…
-
- 0 replies
- 1.3k views
-