நூற்றோட்டம்
நூல்கள் | அறிமுகம் | திறனாய்வு
நூற்றோட்டம் பகுதியில் நூல்கள், அறிமுகம், திறனாய்வு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் நூல்களின் அறிமுகங்கள், திறனாய்வுகள் மாத்திரம் இணைக்கப்படுதல் வேண்டும். ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் நூல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இணைக்கப்படல் வேண்டும்.
809 topics in this forum
-
-
- 2 replies
- 838 views
-
-
கவிதை தன் மொழியையும் வடிவத்தையும் எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளட்டும். ஆனால், கவிஞனையும் இயற்கையையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. இயற்கையின் பிரம்மாண்ட அழகும், களங்கமற்ற அதன் அமைதியும் காலங்காலமாகப் பாடுபொருளாகி வந்தாலும் இயற்கையைப் பாடுவதில் ஜென் கவிதைகள் புதிய வாசலைத் திறந்துவிட்டவை. பழநிபாரதியின் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கவிதைகள் ஜென் கவிதைகளுக்குரிய கூறுகளைக் கொண்டிருப்பவை. பழநிபாரதியின் இலவம்பஞ்சு மொழி தமிழ் வாசகர்களை அழகான அனுபவத்துக்கு அழைத்துச்செல்கின்றன. தமிழ் வாசிப்புச் சூழலில் அரிதாகிவரும் கவிதை வாசகர்களுக்கு பரிச்சயமான நிலப்பரப்பிலிருந்து விரியும் காட்சிகள் வழியே ‘மெய்தேடல்’ உணர்வை முதல் வாசிப்பிலேயே சிலிர்ப்புடன் இந்தக் …
-
- 0 replies
- 684 views
-
-
எங்கிட்ட ஒரு காசிருக்கு அபிலாஷ் சந்திரன் சின்ன வயதில் என் அப்பா அடிக்கடி ஒரு நாட்டுப்புற கதை சொல்வார். ஒரு குருவிக் கதை. அதை அண்ணாத்துரை ஒரு மேடையில் சொன்னதாக கூறுவார். ரொம்ப நகைச்சுவையான அட்டகாசமான கதை. கதை இப்படி போகிறது. ஒரு ராஜாவும் அவர் மந்திரியும் வேட்டைக்கு வனத்துக்கு போகிறார்கள். வேட்டை முடித்து இருவருமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு குருவி இவ்வாறு பாடுவது கேட்கிறது: “என் கிட்ட ஒரு காசிருக்கு யாருக்கு வேணும் யாருக்கேனும் தேவையிருந்தா வாங்கிட்டு போங்கோ” முதலில் ராஜா இந்த பாடலை ஆர்வமாய் கேட்கிறார். பாவம் குருவி ஒரு காசை வைத்துக் கொண்டு என்ன பாடு பட்டு பாடுகிறது என யோசிக்கிறார். ஆனால் குருவி ரிப்பீட்டில் பாடிக் கொண்…
-
- 3 replies
- 1k views
-
-
"நஞ்சுண்டகாடு" கருத்துப் பகிர்வும் குணா கவியழகனுடனான கலந்துரையாடலும். காலம்:21-03-2015 மாலை 4:30 மணி. இடம் :07 rue cail 75010 paris. (குளோபல் மொழி பெயர்ப்பு நிலையம்) அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். தமிழ் இலக்கிய இளைஞர் பேரவை, நன்றி .
-
- 4 replies
- 1.2k views
-
-
இன்று பல்லாயிரக்கணக்கானவர்களை வாழவைத்துக்கொண்டிருக்கின்றன திருப்பூர் பனியன் கம்பெனிகள். இந்நிறுவனங்கள் இன்று பெருமளவில் உருவாகக் காரணமாக இருந்தவர்களின் வரலாற்றைப் பற்றி 'முகமற்றவர்களின் அரசியல்' என்ற புத்தகத்தில் கே.எம்.சரீப் எழுதியுள்ளார். இப்புத்தகத்தில் 22 கட்டுரைகள் உள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் ஒரு பிரச்சினையை அல்லது ஒரு புதிய செய்தியை முன்வைக்கிறது. கடற்கரையோர முஸ்லீம்கள் பற்றி 'நீண்ட கரையின் மிக நீண்ட கதை' என்ற கட்டுரையில் கடலோர முஸ்லிம் கிராமங்களைப் பற்றிய நாம் அறியாத பல செய்திகள் உள்ளன. இங்குள்ள மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன்னர் சமண சமயத்தை தழுவியவர்களாகவே இருந்தனர். தூய தமிழ் சொற்களான தொழுகை, நோன்பு, பள்ளிவாசல், பட்டணம், ஆணம், அத்தா …
-
- 1 reply
- 652 views
-
-
நாவல்கள் மற்றும் குறுநாவல்கள் வாழ்க்கை அழைக்கிறது (ஆகஸ்ட் 1957) கைவிலங்கு (ஜனவரி 1961) யாருக்காக அழுதான்? (பெப்ரவரி 1962) பிரம்ம உபதேசம் (மே 1963) பிரியாலயம் (ஆகஸ்ட் 1965) கருணையினால் அல்ல (நவம்பர் 1965 ) பாரீசுக்குப் போ! (டிசம்பர் 1966) கோகிலா என்ன செய்துவிட்டாள்? (நவம்பர் 1967) சில நேரங்களில் சில மனிதர்கள் (ஜூன் 1970) ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் (ஜனவரி 1971) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஏப்ரல் 1973) ஜெய ஜெய சங்கர... (செப்டம்பர் 1977) கங்கை எங்கே போகிறாள் (டிசம்பர் 1978) ஒரு குடும்பத்தில் நடக்கிறது... (ஜனவரி 1979) பாவம், இவள் ஒரு பாப்பாத்தி ! (மார்ச் 1979) எங்கெங்கு காணினும்... (மே 1979) ஊருக்கு நூறு பேர் (ஜூன் 1979) கரிக்கோடுகள் (ஜூலை 1979) மூங்கில் காட்டினுள்ளே (செ…
-
- 2 replies
- 2.7k views
-
-
நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை. புலிகளை அரசியல் ரீதியில் விமர்சிக்கும் ஒரு தொகை எழுத்துக்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மிக அவசியமானதும்கூட. அதேநேரம் அவர்கள் வன்னியில் நிகழ்த்திய நிழல் அரசொன்றின் உள் அமைப்புகள் எப்படி இயங்கின என்ற புரிதலை தனது பார்வையில் இந்த நூல் தருகிறது. இதை ஒரு முழுமையான ஆவணமாக கொள்ளத் தேவையில்லை என்றபோதும் நாம் உள்நுழைந்து பார்க்க வேண்டிய இடங்களை சுட்டிநிற்கிறது. இந்தவகையில் குறிப்பிடத்தக்க ஓர் அவணமாக இதை கொள்ள முடியும். வெளியிலிருந்து ஊடகவியலாளர்கள் வன்னிக்குள் வருவதை இல…
-
- 2 replies
- 2.2k views
-
-
-
நூலகங்களில் செய்யப்படுகிற முதலீடு வாழ்நாள் முழுதும் கற்கிற அறிவுலகத்தை உருவாக்கும். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஹாங்காங்கில் நடந்தது. எனது நூலக அட்டை தொலைந்து விட்டது. அப்போது புறநகர் ஒன்றின் அடுக்குமாடிக் குடியிருப்புக்கு மாறியிருந்தோம். வீடு மாற்றும்போது தவறியிருக்க வேண்டும். புதிய வீட்டிலிருந்து 10 நிமிட நடை தூரத்தில் நூலகம் இருந்தது. ஹாங்காங்கில் மக்கள் செறிவாக வசிக்கும் பகுதிகளின் மையத்தில் நூலகங்கள் இருக்கும். வரவேற்பில் இருந்த துடியான இளம்பெண் எனது ஹாங்காங் அடையாள அட்டையை வாங்கிப் பரிசோதித்தார். “இந்தப் பகுதிக்குப் புதிதாக வந்திருக்கிறீர்களா? முகவரியையும் மாற்றிவிடலாமே” என்றார். நான் சொல்லச்சொல்ல முகவரியைக் கணினியில் உள்ளிட்டார். தொலைபேசி எண்களையும் மின்னஞ்சல் ம…
-
- 1 reply
- 537 views
-
-
கனடாவில் ஆயுத எழுத்து ... கனடாவில் ஆயுத எழுத்து நூல் அறிமுகமும் கலந்துரையாடலும் காலம் March 14th 2015..இடம் BURROWS HALL Community Center 1081 Progress avenue Scarborough Ontario M1B 5Z6 நேரம் - 1.30PM TO 5PM யாழ் கள உறவுகள் அனைவரையும் வரவேற்கிறேன் .நன்றி J’aime · ·
-
- 26 replies
- 4.1k views
-
-
தான் கடந்து வந்த வாழ்க்கையை அப்துல் கலாம் நினைத்துப் பார்ப்பதாக அமைந்துள்ளது அவர் எழுதியுள்ள 'எனது பயணம்' நூல். இதில் இளைய தலைமுறை அறிந்துகொள்ள நிறைய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருப்பவர் நாகலட்சுமி சண்முகம். நூலின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தகுந்த ஓவியங்களை வரைந்து அழகு சேர்த்திருக்கிறார் பிரியா செபாஸ்டியன். நூலிலிருந்து ஒரு சிறிய பகுதி இங்கு பகிரப்படுகிறது: எங்கள் ஊரின் சிறிய மக்கட்தொகையில் இந்துக்கள் பெருமளவில் இருந்தனர். எங்களைப் போன்ற இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் குறைவான எண்ணிக்கையில் அங்கு வசித்து வந்தனர். ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகத்தினருடன் ஆரோக்கியமான ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருந்தது. வெளியுலகின் பிரிவினைகளும்…
-
- 0 replies
- 499 views
-
-
"தி அல்கெமிஸ்ற்" (தமிழ்: "ரசவாதி") அமெரிக்காவில் பிரபலமான "சிபோற்லே" (Chipotle) எனும் மெக்சிகோ நாட்டு உணவகம் கனடாவில் பரவலாக இல்லையென அண்மையில் விஜயம் செய்த கனேடிய உறவுகளிடமிருந்து அறிந்து கொண்டேன். சோறு, இறைச்சி, கறுப்பு பீன்ஸ், அவகாடோப் பழம் என்பவற்றைக் குழைத்து ஒரு ரோரிலாவில் சுற்றித் தரும் "புறிற்றோ" (Burrito) தான் இந்த உணவகங்களின் விசேட தயாரிப்பு. இந்த உணவகத்தில் எனக்குப் பிடித்த இன்னுமொரு விடயம், உணவை வாங்கி எடுத்துச் செல்லும் கடதாசிப் பைகளில் சுவாரசியமான தகவல்களைப் பதிப்பித்திருப்பார்கள். சில சமயங்களில் மனதுக்குப் புத்துயிர் தரும் கதைகளும் வந்து சேர்ந்து அந்த நாளைத் திசை மாற்றி விடும். அப்படி என் ஒரு நாளை வெளிச்சமாக்கிய கதை ஒன்று இதோ: "ஒரு கிராமவாசி தினம…
-
- 4 replies
- 972 views
-
-
ஈழப் போராட்ட இலக்கியம் : வரலாறு-புனைவு-விமர்சனம் - யமுனா ராஜேந்திரன் ‘கவிதை என எழுதாதே வரலாற்றை’ என ஒரு கவிதை எழுதினான் பாலஸ்தீனக் கவிஞனான மஹ்முத் தர்வீஷ். புனைவு எனும் பெயரில் எழுதப்படும் இன்றைய ஈழப் போராட்டப் புனைகதைகளுக்கு இந்த வரி அச்சொட்டாகப் பொருந்துகிறது. வரலாறு, புனைவு என இரண்டினதும் குறைந்த பட்ச அழகியல் அடிப்படைகளையும் புறந்தள்ளி இன்றைய ஈழப் புனைவுகள் எழுதப்படுகின்றன. வரலாறு எழுதுதலில் இரண்டு அடிப்படைகள் உண்டு, ஆய்வும் தரவுகளும் அதற்கான ஆதாரங்களும் கொண்டு கருத்தியல் பார்வையுடன் எழுதப்படுவது வரலாறு. குறிப்பிட்ட காலத்திலும் இடத்திலும் வாழ்ந்த மாந்தர்களின் மாதிரியை அனுபவதரிசனத்துடன் முன்வைப்பது புனைவு. புனைவு யதார்த்தத்தை முன்வைக்கிறது எனினும் அது யதார்த்தத…
-
- 0 replies
- 1.4k views
-
-
..21. மார்ச் 2015 ...லண்டனில் ஆயத எழுத்து நூல் அறிமுகமும் கலந்துரையாடலும். அனைவரும் வருக 1 min · Modifié · J’aime
-
- 12 replies
- 2.6k views
-
-
-
- 0 replies
- 818 views
-
-
கவிதை இலக்கிய நூல்களுக்கான ஆய்வரங்கமும் ஈழத்து பெண் கவிஞர்கள் அறுவரின் கவிதை நூல்கள் பற்றிய திறனாய்வுக் கலந்துரையாடலும் கடந்த ஞாயிற்றுக் கிழமை லண்டனில் நடைபெற்றது. ஈஸ்ற்காமில் இயங்கிவரும் தமிழ் மொழிச் சமுகங்களின் செயற்பாட்டகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் லண்டன் வாழ் பல முக்கிய இலக்கிய ஆர்வலர்களும் கலை இலக்கியங்களின் மீதான தீவிர செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர். தமிழ் மொழிச் சமுகங்களின் செயற்பாட்டகத்தின் சார்பில் திரு.பௌசர் அவர்களின் அறிமுக உரையோடு ஆரம்பமான இந்த நிகழ்வில் எழுத்தாளரும் கவிஞரும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான திருமதி சந்திரா ரவீந்திரன் மற்றும்எழுத்தாளரும் ஆய்வாளருமான திரு.கோகுலரூபன் ஆகியோர் பிரதான பேச்சாளர்களாகவும் திற…
-
- 0 replies
- 1.5k views
-
-
வணக்கம் பிரான்ஸ் - ஜேர்மனி - சுவிஸ் ஆகிய நாடுகளில் சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவர் மதிப்புக்குரிய பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் ஆவணப்பதிவாக்கிய இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீதான இனப்படுகொலை தொடர்பான புத்தக அறிமுக நிகழ்வு தொடர்பான அறிவித்தல் நன்றி ஊடகம் மற்றும் பொதுசன விவகாரங்கள் அமைச்சு
-
- 0 replies
- 859 views
-
-
இலங்கைத்தீவில் ஈழத்தமிழினத்தின் மீது சிங்கள பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பினை ஆவணமாக பதிவு செய்துள்ள SRI LANKA : HIDING THE ELEPHANTஎனும் புத்தகத்தின் அறிமுக நிகழ்வு பிரான்சில் இடம்பெறுகின்றது. சென்னை பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறை தலைவரும் பேராசிரியரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளஅறிஞர் குழுவின் பிரதிநிதிகளில் ஒருவரான இராமு.மணிவண்ணன் அவர்களால் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டுள்ளது. சாட்சியங்கள், ஆதாரங்கள், புள்ளிவிபரங்கள், ஒளிப்படங்கள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் உருவாக்கப்பட்டுள்ள இப்புத்தகம் 900 பக்கங்களுக்கு மேல் கொண்டுள்ளது. பிரான்சில் இடம்பெறவுள்ள நிகழ்வரங்கில் பேராசிரியர் இராமு.மணிவண்ணன் அவர்கள் நேரடியாக வருகை தரஇருப்ப…
-
- 0 replies
- 485 views
-
-
திரை ஊடகத்தில் மண் சார்ந்த கலைஞராகத் தொடர்ந்து தன்னை முன்னிறுத்திவருபவர் தங்கர் பச்சான். அவர் எழுதிய கதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. முந்திரிக் காட்டு மனிதர்களின் வாழ்வை வேரோடும் வேரடி மண்ணோடும் நம் முன்னால் வைக்கும் இக்கதைகளில், அவர்களுடன் பின்னிப்பிணைந்த கால்நடைகள், பறவைகள், மரங்கள், செடிகள், கொடிகளும் மனிதர்களைப் போலவே விளிம்புநிலை கதாபாத்திரங்களாக நம்முடன் பேசுகின்றன. முந்திரிக் காடுகளும் பலா மரங்களும் நிறைந்த செம்மண் காணிகளின் நடுவே, ஈரம் காயாமல் இருந்த விவசாய வாழ்வு எவ்வித ஒளிவுமறைவும் இன்றிக் கதைகளில் விரிகிறது. கொஞ்சமாக நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயக் குடும்பங்களின் அன்றாடப் பாடுகள், விவசாயக் கூலிகள், கரும்புத் தோட்ட…
-
- 1 reply
- 572 views
-
-
மகாபாரதம் எனும் இதிகாசம் மீது தீராக் காதல் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய இணைப்புகள் இவை. இவற்றை இன்று எழுத்தாளர் ரஞ்சகுமார் தன் முகநூலில் பகிர்ந்து இருந்தார் முழுமையான மகாபாரதம்: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Purpose-of-translation.html மகாபாரதம் கும்பகோணம் ம.வீ.இராமானுஜாசாரியார் பதிப்பு 18 பர்வங்களும் முழுவதும் தமிழில் இங்கு கிடைக்கிறது, பெரும் பொக்கிசம்: http://books.tamilcube.com/tamil/ மகாபாரதத்தினைப் படிப்பது எப்படி?: http://www.sramakrishnan.com/?p=3337
-
- 3 replies
- 5.3k views
-
-
2000-க்கு பிந்தைய தமிழ் நாவல்களின் உலகம் இமையம் “எல்லாமே நிரந்தரமாய் மாறிக்கொண்டேயிருக்கிறது என்பதுதான் வாழ்க்கை கற்றுக்கொடுத்த பாடம். வாழ்க்கை என்பது தொடர்ந்து செல்லும்”-*1 ‘லீவ் உல்மன்’. மொழியின் வரலாறு என்பது மொழியில் உண்டான இலக்கியப் படைப்புகளின் வரலாறுதான். அந்த வகையில் நாவல் என்ற கலை வடிவம் தமிழ் மொழிக்கு அறிமுகமாகி ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. முதல் நாவல் எழுதப்பட்ட காலத்திலிருந்து 2014ல் எழுதப்பட்ட நாவல்கள்வரை ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான போக்கை கடை பிடித்து வந்திருக்கிறது. நாவலின் மையத்தைத் தேர்ந்தெடுப்பதில், கதை சொல்லும் முறையில், கதை சொல்ல தேர்ந்தெடுத்த மொழியில், உத்தியில் என்று காலத்துக்குக் காலம் மாற்றம் பெற்று வந்திருக்கிறது. இந்த …
-
- 0 replies
- 5k views
-
-
எதிர்வினை - காயப்படுத்தும் கத்திகள் கருணாகரன் “நஞ்சுண்டகாடு“ நாவலைப்பற்றி எழுதும் இரவி அருணாசலம் அந்த நாவலுக்கு அப்பால், அதனுடைய விமர்சனத்துக்கு அப்பால், அந்த நாவலை எழுதிய குணா கவியழகனைப் பற்றிய தவறான புரிதல்களையும் எழுதியிருக்கிறார். முகநூலிலும் இணையத்திலும் பிற ஊடகங்களிலும் ஈழத்தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இழைத்து வருகின்ற வழமையான தவறு இது. போதாக்குறைக்கு அதற்குப் பயன்படுத்தப்படும் சொற்கள், அவற்றை முன்வைக்கும்முறை போன்றன மிகவும் தரந்தாழ்ந்தவையாகவும் அமைந்து விடுகின்றன. இது ஏன் நிகழ்கிறது என்றால், படைப்பைப் பார்ப்பதையும் விட, படைப்பாளியையும் படைப்பாளியின் அரசியலையும் அவருடைய பின்புலங்களையுமே இவர்கள் அதிகமும் நோக்குகிறார்கள். படைப்பையும் விட படைப்பாளியின் பின்புல…
-
- 0 replies
- 699 views
-
-
யாழ். இலக்கியக் குவியத்தின் ஏற்பாட்டில் திருமதி மைதிலி தயாபரன் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, யாழ்.திருமறைக்கலாமன்றம் கலைத்தூது அழகியற் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது. திருமதி மைதிலி தயாபரன் எழுதிய சொந்தங்களை வாழ்த்தி (நாவல்), வாழும்காலம் யாவிலும் (நாவல்) மற்றும் விஞ்சிடுமோ விஞ்ஞானம் (கவிதை) ஆகிய நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன. யாழ். இலக்கியக் குவியத்தின் தலைவர் வேலணையூர் தாஸ் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. நூல்களுக்கான வாழ்த்துரையை கவிஞர் எஸ்.சத்தியபாலனும் அறிமுக உரையை சு.சிறீக்குமரனும் ஆய்வுரைகளை சி.ரமேஸ், க.குகபரன் ஆகியோர் நிகழ்த்தினர். இந்நிகழ்வில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். h…
-
- 0 replies
- 669 views
-
-
எழுத்தின் அதிகாரம்: ஓலைச்சுவடி, புத்தகம் முதல் டிவிட்டர் வரை அபிலாஷ் சந்திரன் எழுத்தாளர்களை விட வாசகர்கள் அதிக அறிவாளிகள் என்பது என் அனுமானம். எழுத்தாளர்களுக்கு தம் அறிவை இன்னும் புத்திசாலித்தனமாக, தர்க்கபூர்வமாக, கூர்மையாக வெளிப்படுத்த தெரிகிறது. அவர்களிடத்து இந்த மொழி தரும் ஒரு தன்னம்பிக்கை இயல்பாக இயங்குகிறது. ஆயிரமாண்டு அறிவையும் நுண்ணுணர்வையும் தன்னிடத்து கொண்டுள்ள மொழியில் புழங்கும் போது இயல்பாய் அவற்றை கடன் பெறும் எழுத்தாளன், ஒவ்வொரு சொல்லின் பின்னும் தான் எதிர்கொண்ட ஐரோப்பிய கல்வியின் செறிவை கண்டுள்ள எழுத்தாளன் தன் எதிரில் தேரும் கவச குண்டலமும் அற்று நிற்கும் வாசகனை விட மேலானவனாக தன்னை காட்டி விட இயலும். அது உண்மையில் எழுத்தின் வன்மை. எழுத்தாளனின் மேன்மை …
-
- 0 replies
- 985 views
-
-
கிளிநொச்சி போர் தின்ற நகரம்: அறிமுகம்: யமுனா ராஜேந்திரன்
-
- 0 replies
- 673 views
-