சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
இரு வேறு நிலைமைகளைப் பார்ப்போம். 1. ஒருவர் பணத்தினை சட்ட ரீதி இல்லாத வகையில் சேர்கிறார். அந்த பணத்தினை வங்கியில் வைப்பிட முடியாத நிலையில் ஒரு நண்பர் மூலமாக ரியல் எஸ்டேட் ல் முதலீடு செய்கிறார். (இதைத்தான் தமிழகத்தில் பினாமி என்கிறார்கள்) சில ஆண்டுகளின் பின்னர் அந்த நண்பரை அணுகி ஆதனத்தினை விற்பனை செய்ய கோருகின்றார். நண்பர் எதை என்று கேட்டு, உனக்கும் எனக்கும் என்ன தொடர்பு என்று மறுக்கிறார். பணம் கொடுத்தவரின் சட்ட பூர்வ நிலை என்ன? 2. ஒருவர் குடும்பஸ்தர். கிரெடிட் ஹிஸ்டரி பிரச்னை காரணமாக, தனது பணத்தினை போட்டு, தனது உறவினர் அல்லது நண்பர் பெயரில் ஒரு ஆதனத்தினை வாங்குகிறார். சில ஆண்டுகளின் பின்னர், அவராக ஒரு வீட்டினை வாங்கக் கூடிய நிலையில் பெரிய வீடு ஒன்ற…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
நானும் என் துணைவியும் சில காலம் சென்னையில் வாழும்படி நேர்ந்தது. நான் எனது தூய தமிழில் பேசுவதற்கு கொஞ்சம் தயங்கிய காலப்பகுதி அது. அதையும் மீறிச் சிலவேளை என் இயல்பு மொழியில் நான் பேசினால் “என்ன நீங்கள் மலையாளம் பேசுறிங்களா?” எனச் சிலரும் “நீங்கள் ரொம்ப அழகாய் சிங்களத் தமிழ் பேசுறிங்க” என வேறு சிலரும் பேசுவதைக் கேட்டு அவர்களுக்கு விளக்கம் சொல்லி அலுத்துப்போய் ஒருவாறாக சென்னைத் தமிழைப் பேசக் கற்றுக் கொண்டேன். சென்னைத் தமிழ் ரொம்ப அழகானதுதான் அதற்காக என் தாய்த்தமிழை ‘’சிங்களத் தமிழ்’’ என்று சொல்லும் அவர்களை என்னால் எப்படி ஏற்க முடியும்? இது நடந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன, அமெரிக்காவுக்கு வந்ததற்கு பின் தமிழரைக் காணும்போதெல்லாம் என் தூய தமிழில் உரையாடுவதற்கு நா…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிட்னி, டிச.22- பிரபல சமூக வலைதளமான யூ டியூபில் உறவுகளின் போலித்தனத்தை பொட்டில் அறைந்தாற்போல் சொல்லும் விளம்பரம் ஒன்று 4 கோடி பேரைக் கடந்து வைரலாகப் பரவி வருகிறது. இன்னும் 2 நாட்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெங்கும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் தங்கள் சொந்தங்களால் புறக்கணிக்கப்பட்ட முதியவர்களின் வலியை உணர்த்தும் இந்த வீடியோ காண்பவர்களின் கண்களைக் குளமாக்கி வருகிறது. https://www.youtube.com/watch?v=V6-0kYhqoRo
-
- 0 replies
- 1.1k views
-
-
பொய்களைப் பரப்பாதீர்கள் / சீனிவாசன் ( லண்டன் ) உண்மையை விட பொய்களே அதிகமாகவும் விரைவாகவும் மக்களிடையே பரவுகின்றன. இணையம் இல்லாத காலங்களில், எனக்குப் பல தபால் அட்டைகள் வந்தன. ஒரு கோயிலில் நடந்த அதிசயத்தை விளக்கி, அதை 100 பேருக்கு அனுப்ப வேண்டும். அனுப்பவில்லையெனில் தீங்கு ஏற்படும் என்றும் பயமுறுத்துவர். பின்னர், மின்னஞ்சல் வந்த போது, பல வங்கிகளின் போலி வலைத் தளங்கள், கடவுச்சொல் கேட்டு மின்னஞ்சல்கள் வந்தன. ஆப்பிரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் தமது சொத்துகளுக்கு நம்மை வாரிசாக அறிவிக்க அனுமதி கேட்டு மின்னஞ்சல் அனுப்புவர். வெளிநாட்டு வேலை, போலி சுற்றுலா அழைப்புகள் என பல்வேறு பொய்கள் பரவின. இப்போது முகநூலும், வாட்சப் போன்ற செயலிகளும் செய்…
-
- 0 replies
- 1.6k views
-
-
குழந்தைகளின் நிர்வாணம் வா. மணிகண்டன் அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் வசிக்கும் நிக்கோல் எல்லிஸூக்கு நாற்பது வயதாகிறது. சமீபத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறாள். அவள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு அக்கம்பக்கத்தவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. பதறியவர்கள் இணையத்தில் துழாவு துழாவென துழாவியிருக்கிறார்கள். அப்படியென்ன குற்றச்சாட்டு அது? ஆயிரக்கணக்கான குழந்தைகளின் ஆபாசப் படங்களை எல்லிஸ் சேகரித்து வைத்திருந்ததாக கைது செய்திருக்கிறார்கள். சுற்றுவட்டாரக் குழந்தைகளில் ஆரம்பித்து வெளிநாட்டுக் குழந்தைகள் வரை ஏகப்பட்ட தராதரங்களில் பிரித்து அடுக்கி வைத்திருக்கிறாள். அவற்றை இணையத்திலும் பகிர்ந்திருக்கிறாள். ‘அவளிடம் நம…
-
- 0 replies
- 2k views
-
-
காரணங்கள் இதோ! அரசும் கல்வியாளர்களும் ஆராய்ந்து பின்லாந்தைப் பின்பற்றலாம்! பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OCED) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். மற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வின்படி உலகின் முன்னணி நாடுகள் பின் வரிசையில் இருக்க... பின்லாந்து எப்போதும் முன் வரிசையிலேயே இடம் பிடிக்கிறது... பின்லாந்து கல்வி முறையின் சிறப்புகள் யாவை? பின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது... ஒன்றரை வயதில் ப்ளே ஸ்கூல், இரண்டரை வயதில் ப்ரீ.கே.ஜி., மூன்று வயதில் எல்.கே.ஜி.…
-
- 0 replies
- 932 views
-
-
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் பயணிகள் கொண்டுவரும் லக்கேஜ்களைப் பரிசோதித்து அந்தப் பக்கம் தள்ளுகிறது ஸ்கேனர் கருவி. கன்வேயரில் என் பொதியையும் வைத்துவிட்டுச் சுமையற்று நிற்கிறேன் கொஞ்ச நேரம். லக்கேஜைச் சுமந்திருந்த கைகள் இந்தச் சின்ன ஓய்வில் புத்துணர்வு கொள்கின்றன. இதனால் இந்தச் சுமைகளை இன்னும் நன்றாகச் சுமக்க இயலும். உடலின் எல்லா உறுப்புகளும் தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்வதன் மூலம் புத்துணர்வு ஊட்டிக்கொள்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு 60 கோடிப் பழைய செல்கள் இறந்து, புதியன பிறந்து புத்துணர்வு கொள்கிறோம். கண் இமைகளை மூடித் திறக்கும் அந்தச் சிறு இடைவெளியில் மூளைகூட அவசர ஓய்வெடுத்துப் புத்துணர்வு பெறுகிறது. எண் சாண் உடம்புக்கு மனதே பிரதானம். மனதும் தன்னைச் சுமைய…
-
- 1 reply
- 1k views
-
-
இணையத்தில் பெண்களுக்கெதிரான வன்முறை - ஐநா எச்சரிக்கை மொபைல் தொலைபேசி மற்றும் இணையம் போன்றவை சக்தி வாய்ந்த கருவிகள் மட்டுமல்ல அவை பெரிய ஆயுதங்களாகவும் இருக்கக்கூடும். ஐ.நா மன்றம் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உருவாகும் வன்முறையைப் பற்றி எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. இந்த வன்முறை உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் போலவே அதே அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது . குறிப்பாக உலகின் மூலை முடுக்குகளில் எல்லாம் தொழில் நுட்பம் நுழையக்கூடிய இந்த நேரத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஐ.நா கூறுகிறது. இளம் பிரிட்டிஷ் நடிகை, எம்மா வாட்சன் , ஐநா மன்ற கூட்டம் ஒன்றில், பாலின சமத்துவம் குறித்துப் பேசியபோது, அவர் தன்னை உலகளாவிய கும்பல் ஒன்றின்…
-
- 0 replies
- 1k views
-
-
இதை இப்போது எழுதுவது சரியானதா என்று எனக்கு தெரியவில்லை?, சென்னை இயற்கை பேரிடர் போல ஒரு பேரிடர் தாயகத்தில் நிகழ்ந்தால்? அதை சமாளிக்க கூடிய ஆற்றல் தாயகத்திற்கு இருக்கிறதா? நேற்று கருணாகரன் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்த பதிவுகளை பாருங்கள். கிளிநொச்சிக்கு வரும் அபாயம் --------------------------------------------- சென்னை வெள்ளப் பாதிப்பைப் பற்றி இப்பொழுது பேசிக்கொண்டும் பார்த்துக்துக் கொண்டுமிருக்கிறோம். இதைப்போன்றதொரு நிலை கிளிநொசசிக்கும் வரும் அபாயம் நிச்சயமாக உள்ளது. கிளிநொச்சிக்குளமும் அதை அண்மித்த பகுதிகளில் உள்ள இடங்களும் இரணைமடு நீர்த்தேக்கத்தின் கீழான பகுதிகளும் வாய்க்கால்களை அண்மித்த பிரதேசங்களும் பிற அரச காணிகளும் கடந்த காலங்களில் பல்வேற…
-
- 2 replies
- 1.7k views
-
-
சித்திரம் வரைவதற்கான சில இலகுவான முறைகளை முகநூலில் பார்த்தேன் அவற்றில் சில மேலும் படங்களுக்கு https://www.facebook.com/mycreations123/photos/pcb.439406876243027/439406072909774/?type=3&theater https://www.facebook.com/mycreations123/photos/pcb.439406876243027/439406072909774/?type=3&theater https://www.facebook.com/mycreations123/photos/pcb.448964508620597/448964391953942/?type=3&theater https://www.facebook.com/mycreations123/?fref=photo
-
- 1 reply
- 2.6k views
-
-
மனசு போல வாழ்க்கை-1 : முடியும், முடியாது இரண்டும் நிஜம்தான்! ஓட்டமாய் ஓடுவது தான் இன்றைய வாழ்க்கை முறை. எதற்கு இந்த ஓட்டம்? வெற்றியைத் தேடித்தான்! படிப்பில் செண்டம், முதல் இடம், கேட்ட கோர்ஸ், கேம்பஸில் நல்ல வேலை, வாகனப் பிராப்தி, காதலில் சுபம், வீடு வாங்கியபின் கல்யாணம், வெளி நாட்டு வாய்ப்பு, சொத்து, பூரண ஆரோக்கியம், பிள்ளைகளால் சுகம்.. பிறகு பிள்ளைகளின் படிப்பு, வேலை, கல்யாணம்...இந்த ஓட்டம் தான் வாழ்க்கையா? மன அமைப்பு நினைப்பது கிடைப்பது தான் வெற்றி. ஆசைப்பட்டதை அடைய வேண்டும். அதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளனர் நம் மக்கள். நவீனச் சந்தைப் பொருளாதாரமும் அதை ஊக்குவிக்கிறது. உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனமில்லையா? இதைச் சாப்பிடக் கொடுங்கள். கல்லூரி வளா…
-
- 41 replies
- 30.2k views
-
-
நன்றி: Deepam News ‘ஊரோரம் புளியமரம்…. உலுப்பிவிட்டா சலசலக்கும்’ இப்படி பாடியபடி ஏழெட்டுப்பேர் நாணிக்கோணி வட்டமாக வளைய வருவார்கள். ஆண்களைப் போலுமிருப்பார்கள். சேலையுடுத்தியிருப்பார்கள். கன்னத்தில் போட்டுக்கொண்டு அதிகமாக வெட்கப்படுவார்கள். பார்த்து சிரிப்பதற்கென்றே திரையில் காட்டப்படும் இந்த வகையானவர்களை நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். ஆம்.. அரவாணிகள், திருநங்கைகள் என பல்வேறு வார்த்தைகளால் அழைக்கப்படும் மூன்றாம் பாலினத்தவர் பற்றியே பேசுகிறோம். ஆணாக பிறந்து, பெண்ணாக உணர வைத்து, போலி வாழ்க்கை வாழ முடியாமலும், சொந்த வாழ்க்கையை வெளிப்படுத்த முடியாமலும் நம்மத்தியில் அன்றாடம் செத்து செத்து வாழ்ந்து கொண்டிருக்கும் அரவாணிகள் பற்றி நம்மில…
-
- 4 replies
- 6k views
-
-
இணையவெளி: பெண்கள் மீதான வன்முறை இணையவெளியில் பெண்கள் மீதான தாக்குதல்கள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து நிகழ்ந்துவருகின்றன. இதைக் குறித்த ஒரு சிறிய, அதேநேரம் ஒட்டுமொத்த நிலைமையைப் புரிந்துகொள்ளும்பொருட்டு, வெவ்வேறு தளங்களில் இயங்கும் பெண்களின் கருத்துகள் இங்கே. . . முழுக்க முழுக்கத் தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் முகநூலைவிட்டு வெளியேறினேன். சமூக வலைதளங்களில் யாரும் என்னிடம் தவறாக நடந்துகொண்டதில்லை. எல்லாப் பெண்களுக்கும் நடப்பதுபோல யாரென்றே தெரியாத சிலரிடமிருந்து அபத்தமான, அர்த்தமில்லாத முகநூல் குறுஞ்செய்திகள் வரும். ஆனால் நான் அதைப் பெரிதாகக் கண்டுகொள்வதில்லை. அப்படியொரு குறுஞ்செய்தி வந்தால் அவர்களை ‘ப்ளாக்’ செய்துவிடுவேன். பொதுவாக எனது புகைப்படங்களை முகநூலில…
-
- 0 replies
- 2.3k views
-
-
மனநோயாளிகளை உருவாக்கும் மெகா தொடர்கள் “உனக்கு பின்னால் இருக்கிற தலைமுறையை உத்து பார். டிவி சீரியல் பார்த்து வளர்ந்த ஒரு பலகீனமான தலைமுறை தெரியும். உன் ஐடியாலாஜி எல்லாம் அவங்ககிட்ட எடுப்படாது " - இது குருதி புனல் படத்தில் ஒரு காட்சியில் கமல் , தீவிரவாதி நாசரிடம் பேசும் வசனம். தமிழகத்தில் டிவிகளின் தாக்கம் பற்றி நான் படித்த செய்திகள் அதிர வைக்கின்றன. பொழுதுபோக்கை மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி, இன்று நம் அனைவரின் வாழ்விலும் தொலைந்து போன காட்சிகளைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இ…
-
- 1 reply
- 1.4k views
-
-
பெண்களின் ஆடையும் ஒழுக்கமும் ஆர். அபிலாஷ் இந்து மற்றும் இஸ்லாமிய ஒழுக்க காவலர்கள் பெண்களின் ஆடையை ஒழுங்குபடுத்துவதன் மூலமாய் பாலியல் ஒழுக்கத்தை கொண்டு வரலாம் என நம்புகிறார்கள். இந்திய இஸ்லாம் வஹாபிச வரவால் அரபுமயமாக்கப்பட்ட போது தான் பர்தா இங்கு பரவலானது. பாப்ரி மஸ்ஜித் இடிப்பை ஒட்டி ஒரு இஸ்லாமிய அடையாள மறுகட்டமைப்பு நடந்தது. இஸ்லாமியர் தம் அடையாளத்தை வெளிப்படையாய் முன்னெடுக்க எண்ணினார்கள். வராபிசமும் இந்துத்துவா எழுச்சியும் ஒன்றிணைந்த தருணத்தில் பர்தா இங்கு முக்கியத்துவம் பெற்றது. இந்துக்களை பொறுத்தமட்டிலும் பெண்களின் ஆடை கட்டுப்பாட்டுக்கும் வலதுசாரி எழுச்சிக்கும் ஒரு தொடர்பு நிச்சயம் உண்டு. ஆனால் உலகமயமாக்கல், தாராளமயமாக்கலின் தாக்கம் காரணமாய் ஆடை கட்டுப்ப…
-
- 8 replies
- 7k views
-
-
ஜெர்மனியர் ஒருவரால் தமிழில் எழுதவும் பேசவும் முடிகிறது. ஆனால் தமிழர்களாக பிறந்த சிலருக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ முடியவில்லை. தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்த ஒரு ஜெர்மனிய இளைஞனுக்கு தமிழில் எழுதத்தெரியாத/தமிழைப்படிக்க விரும்பாத தமிழ்பெண் ஆங்கிலத்தில் சொல்லும் அறிவுரை!!!
-
- 2 replies
- 2k views
-
-
எஸ்.சிதம்பரம், கம்பளை மனித வாழ்க்கையில் சேமிப்பு எவ்வளவு அவசியம் என்பது வாழ்ந்து உயர்ந்தவர்கள் வாழ்ந்து எல்லாவற்றையும் இழந்தவர்கள் மூலம் அறியலாம். விலங்குகளே தமது வாழ்விற்கு உகந்தாற்போல் சேமிக்கின்றது. தேனி தேனை சேமிப்பதும் ஒட்டகம் தனக்கு நீரை சேமித்து வைத்துக் கொள்வதும் மாடு உணவை சேமித்து அசை போடுவதும் நாம் காண்பது. அதுபோல் வாழ்வில் எதிர்கால சிந்தனையுடன் சேமிக்கப்பழக வேண்டும். சேமிப்பு இல்லாமை வாழ்வை இருட்டாக்கிவிடும் என்பதை உணர்த்த உலக சேமிப்பு தினம் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கை ஓட்டத்தில் வேகமாக ஓடித் திரியும் மனிதர்கள் கிடைக்கும் வருமானத்தில் போக்குவரத்து, உணவு, நகர வாழ்க்கைக்கு உட்செல்வதால் கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லாததால் சேமிப்பில் அக்கறை காட்டுவதில்லை. …
-
- 0 replies
- 764 views
-
-
ஒருவருக்குத் தொழில்ரீதியான வளர்ச்சியும் அதற்காக அவர் அவரது பணியைப் பற்றிக் கற்றுக்கொள்ளுவதும் 90 சதவீதம் அவர் செய்கிற வேலையில்தான் நடைபெறுகிறது. வேலையின் அனுபவம் மூலமும், மற்றவர்களின் அனுபவங்களை உள்வாங்குதல் மூலமும் தனது பணிகளின் மீதான கருத்துகளை ஏற்றுக்கொள்வதிலும்தான் ஒருவருக்குப் பணி அனுபவம் கிடைக்கிறது. பொதுவாக, வேலையில்தான் பெரும்பாலும் மனிதர்கள் கற்றுக்கொள்கின்றனர். திறன் வளர்ப்புப் பயிற்சிகளில் சுமார் 10 சதவீதம்தான் கற்றுக்கொள்ளப்படுகிறது. எல்லோருக்கும் ஒரே மதிப்பீடுகள் கிடையாது. சிலருக்கு அவர்களுக்கான தனிப்பட்ட நேரம் மிகவும் முக்கியம். அவர்கள் வார இறுதி நாட்களிலும் வேலைசெய்யும்படி இருக்கிற பணிகளை விரும்ப மாட்டார்க்ள். மன அழுத்தமுள்ள அபாயம் நிரம்பிய வேலைகள் சிலருக்…
-
- 0 replies
- 848 views
-
-
பின் தூறல் ஜெயமோகன் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் எழுத்துக்களின் வன்மையில் இலக்கியம், தத்துவம், மதம் போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். என் மானசீக குருவாக உங்களை மதிக்ககிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பாவில் இருந்தபோது நானும் ஒரு பெண்ணும் இரண்டு வருடங்கள் காதலித்தோம். பிரச்சனைகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் அவளைப் பிரிந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. எனக்கு சமீபத்தில் திருமணம் ஆகிவிட்டது. அவளுக்கு இன்னும் ஆகவில்லை. இந்த மூன்று வருடங்களி்ல் அவள் எனக்கு மாதம் ஒரு முறையாவது மின்னஞ்சல் அனுப்புவாள். ஒன்றிற்குக் கூட நான் பதில் அனுப்பியதில்லை. பல முறை எழுத ஆரம்பித்து பின்பு விட்டு விடுவேன். முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் என்று. மின…
-
- 0 replies
- 1.6k views
-
-
காதல் - ஆர்- அபிலாஷ் என்னுடைய ஒரு நண்பர் ஊனமுற்றவர். அவர் தன்னை எந்த பெண்ணும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை; அதனால் தான் தனிமையாகவே வாழ்வெல்லாம் இருக்க போவதாயும்; அதுவே சிறந்த தீர்மானம் என்றும் என்னிடம் திரும்ப திரும்ப கூறுவார். அவருடைய தன்னிரக்கம் இதை கூறச் செய்யவில்லை என அறிவேன். ஏனெனில் அவர் துணிச்சலாய் உழைத்து வாழ்வில் முன்னேறியவர். என்னை விட நேர்மறையான சிந்தனை கொண்டவர். ஆனால் காதல் பற்றின அவர் பார்வையில் தான் சிக்கல். நான் அவரிடம் கூறினேன்: “பெண்கள் ஒருவரின் உடம்பை பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அவர்களுக்கு ஒரு ஆணின் ஆளுமை தான் முக்கியம். ஆளுமையற்ற ஆண்களுக்கு அதிகாரம் உண்டென்றால் அவர்களை நோக்கியும் பெண்கள் கவரப்படுவார்கள்.” நான் அவரிடம் என் தனிப்பட்ட அனுபவத்தை ஆத…
-
- 0 replies
- 566 views
-
-
ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு விளையாட்டாய் உதவும் 'நிதர்சன' முயற்சி! மாணவர்களுடன் சாய் கிருஷ்ணன் வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அடிக்கடி கேட்கும் வார்த்தை 'போய்ப் படி' என்பதுதான். படித்து முடி; பிறகு விளையாடப் போகலாம் என்பதுதான் பெற்றோர்களின் முதல் வார்த்தையாக இருக்கிறது. அதற்கு மாறாக சாய் கிருஷ்ணன் என்பவர், முதலில் விளையாடுங்கள்; பிறகு படிக்கலாம் என்று தன் பகுதி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இந்த ஆச்சரிய தொடக்கத்தின் அடிப்படைக்கு என்ன காரணம்? நிதர்சனம் அறக்கட்டளையின் நிறுவனரான சாய் கிருஷ்ணனிடம் இது குறித்துப் பேசினேன். "என்னுடைய குடும்ப சூழ்நிலையால், பள்ளிப் படிப்பையே தொடர முடியவில்லை. சென்னை, பெரம்பூருக்கு அருகிலுள்ள எங்களின் …
-
- 2 replies
- 448 views
-
-
உங்களுக்கு உப்புடி திரிஞ்சால்த்தான் சலரி.... எங்களுக்கு.!!!! மிகுதி திரையில்.....
-
- 4 replies
- 845 views
-
-
மனசு போல வாழ்க்கை 31: பாராட்டு எனும் மூலதனம் நல்ல வார்த்தைகளுக்கு நாம் எல்லோரும் ஏங்குகிறோம் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, உங்களுக்கு வந்து சேரும் ஒரு சின்னப் பாராட்டுக் கூட உங்களை ஒரு நொடியாவது சிறு ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா? ‘முதல் மரியாதை’ படத்தில் “ பா.. ரா.. ட்ட, மடியில் வச்சு தா..லாட்ட, எனக்கொரு தாய்மடி கிடைக்குமா.. ?” என்று நடிகர் சிவாஜி பாடும்போது உங்கள் கண்களும் கலங்கியிருந்தால் நீங்களும் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் காத்திருக்கிறீர்கள் என்று பொருள். தொடுதலும் உணவே சிசு வளர்வது சுவாசத்தாலும் உணவாலும் மட்டுமா? தாயின் ஸ்பரிசம் தரும் வெப்பத்தினால் தான் அது வளர்கிறது. உளவியல் ஆய்வாளர்கள் ப…
-
- 0 replies
- 1k views
-
-
ஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. வடநாட்டுக்காரர். அப்பா மேற்குவங்காளத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். இன்றிலிருந்து முப்பது வருடங்களுக்கு முன்பான காலகட்டம் அது. இவர் தறுதலையாகச் சுற்றியிருக்கிறார். உள்ளூர் அரசியல்வாதி அதுவும் அதிகாரமிக்க அரசியல்வாதி என்றால் தம்மைச் சுற்றி நண்பர்கள் குழாம் சேரும் அல்லவா? அப்படிச் சேர்ந்திருக்கிறது. ஏழெட்டுப் பேர்கள். இந்தக் கதையைச் சொல்வதற்கு ட்வின் பீக்ஸ் என்ற இடத்துக்கு அடைத்துச் சென்றிருந்தார். அது என்ன Twin peaks என்று கேட்கக் கூடாது. அது ஒரு குடிக் கூடம். இத்தினியூண்டு துணியை அணிந்த பெண்கள் ஊற்றிக் கொடுப்பார்கள். Eat, Drink, Scenic views என்று எழுதி வைத்திருந்தார்கள். தின்பதும் குடிப்பதும் இரண்டாம்பட்சம். மூன்றாவது விஷயத்…
-
- 0 replies
- 434 views
-
-
தன்முதலில் முத்து நெடுமாறனைச் சந்திக்க வேண்டும் என்ற உந்துதலை உண்டாக்கியது மூத்த பத்திரிகையாளர் மாலன் எழுதியிருந்த ஒரு கட்டுரை. ‘முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்’ எனும் அந்தக் கட்டுரையில், “தினமும் கணினியில் என் பணிகளைத் தொடங்கும்போது நான் மானசீகமாக நன்றி செலுத்தும் ஒரு நபர் முத்து நெடுமாறன்” என்று குறிப்பிட்டிருந்தார் மாலன். புதிதாக வந்திருக்கும் ‘ஐபோன் 6’-ல் தமிழில் தட்டுவது நமக்கு இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டுவரும் கனவு சாத்தியமாவது அத்தனை எளிதாக நடக்கவில்லை. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்த, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் சிலர் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தனர். அர்ப்…
-
- 0 replies
- 1.2k views
-