சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2254 topics in this forum
-
புலம்பெயர் தமிழர்கள் சிலர் தங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்வினை எவ்வாறு நடத்துகின்றனர்? https://www.facebook.com/video/video.php?v=828573870539240
-
- 0 replies
- 1k views
-
-
கனவுகளைக் கைப்பற்றுவோம் ஒரு கட்டடம் கட்டுவதற்கு முன், முதலில் மண்ணைப் பரிசோதனை செய்ய வேண்டும். ஒரு செயலில் இறங்கும் முன் முதலில் நம் மனதை சுய பரிசோதனை செய்ய வேண்டும். ஹா... ஹா... இந்தத் தொழில் முனைவுத் தொடரில் நுழைவதற்கு முன் மனசை ஃபிரெஷ்சாக வைத்துக் கொள்ள முதலில் ஒரு குட்டிக் கதை. ஓஷோவின் கதை இது. படிச்சு சிரிச்சுட்டு அப்புறம் விஷயத்துக்குப் போவோம். ஓகே. ஒரு சாமியார், ஒரு டாக்டர், ஓர் அரசியல்வாதி மூவரும் ஒருநாள் கூடிப் பேசிக் கொண்டிருந்த போது, யாருடைய தொழில் மிகவும் பழமையானது என ஒரு கேள்வி வந்தது. "மனிதனின் முதல் செயலே பிரார்த்தனை செய்து கடவுளுக்கு தன் நன்றியைத் தெரிவித்ததாகும். எனவே என் தொழில்தான் பழமையானது!" என்றார் சாமியார். "சுத்த அபத்தம்! கடவுள் பெண்ணைப் …
-
- 18 replies
- 27.7k views
-
-
ஒரு சமூகப் பரிசோதனை. யாருக்கு கொடுக்கும் மனம் உள்ளது? இந்த வீடியோவைப் பாருங்கள்.
-
- 2 replies
- 807 views
-
-
" "இதெல்லாம் நடக்குமெண்டு நினைக்கிறீரோ தம்பி?" அவ்வப்போது சிரித்துக்கொண்டே கேட்பார் மனேஜர். ஏன் நடக்காதா எல்லாம் சரியாத்தானே இருக்கு?" "இட்ஸ் ஒக்கே நான் சும்மா கேட்டன் நீர் என்ன நினைக்கிறீர் பாப்பம் எண்டு..." "என்னவாம் தம்பி.. தண்ணி கொண்டு வரப் போறாராமோ? சிறி இடையில் வந்து "இப்பிடித்தான் முந்தியும்..." கதைசொல்ல ஆரம்பிப்பார். 'அடப்பாவீங்களா நடக்காதுன்னு நினைச்சுக்கொண்டா வேலை செய்யுறீங்க?' எனத் தோன்றும். "என்ன இப்பிடி கதைக்கிறீங்க? இயக்கமே ஓக்கே சொல்லிட்டாங்களே?" "என்னமோ பாப்பம்... எங்களுக்கு நல்லா பே பண்ணீனம் சந்தோஷமா வேலை செய்துட்டு போக வேண்டியதுதான் இட்ஸ் ஒக்கே" - மனேஜர் 'இட்ஸ் ஒக்கே' என்பதே மனேஜரின் தாரக மந்திரம். 'ஒரு பொல்லாப்புமில்லை' என்கிற 'விச…
-
- 0 replies
- 687 views
-
-
நீங்களும் உலக நாயகன்தான்! மனிதனின் ஆயுள் எத்தனை வருடங்கள்? என்று என் கருத்தரங்குகளில் அடிக்கடி கேட்பேன். 60கள் என்பதுதான் அதிகமாகச் சொல்லப்படும் விடை. சிலர் இப்போது மருத்துவம் வளர்ந்ததால் 70கள் என்பார்கள். சரியான பதில் 120 என்றால் பலர் நம்பமாட்டார்கள். ஜப்பானில் ஒரு தீவில் 100 வயதைத் தாண்டியவர்கள் ஒரு லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று தகவல் கூறி மருத்துவ, மானிடவியல் ஆராய்ச்சிகள் எல்லாம் சொல்லி விளக்கிய பின் சரி என்பார்கள். ஏன் 60 ? அது சரி, ஏன் எல்லோரும் 60கள் தான் ஆயுள் என்கிறார்கள்? பணி ஓய்வு காலம் 58 அல்லது 60 வயதில். அதற்கு மேல் எதற்கு வாழ்வது என்கிற எண்ணம்தான். சம்பாதிக்காத மனிதன் வாழ்வதில் என்ன அர்த்தம் என்று நம் சமூகம் மறைமுகமாகச் சேதி சொல்கிறதோ? இன்றைய ந…
-
- 0 replies
- 706 views
-
-
நான் எனது மகளுக்கு போட்டுக் காட்டும் தமிழ் பாடல்கள் இவை, அவா அதனை மிகவும் விரும்பிப் பார்ப்பா. அத்துடன் அவரின் தமிழ் மொழித் தேர்ச்சிக்கும் இப் பாடல்கள் உதவுகின்றன. இவற்றை நான் உங்களுடன் பகிர்கிறேன். உங்களுக்குத் தெரிந்த பாடல்களையும் இவ்விணைப்பில் இணைத்து விடுங்கள். நன்றி
-
- 6 replies
- 1.2k views
-
-
ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா? ஆம்.... என்று, சொல்வேன் நான். இரண்டு, பிள்ளைகளை பெற்ற நான்...!? மூன்றாவது, பிள்ளையையும்... பெற்றால், என் பொருளாதார நிலைமை, வீட்டில் இட வசதி இல்லாதது என்பதால்.... எனது மனைவி வயிற்றில் உருவாகிய... (ஆறு கிழமை ஆன) மூன்றாவது கருவை அழிக்க, வைத்தியர் உதவியை நாடினேன். அவர்களும்.... கருவில், உருவாகும் குழந்தையை அழிப்பது தவறு. உங்களுக்கு, சில வழிகட்டுகின்றோம் என்று, இரண்டு மாதம், ஒவ்வொரு அலுவலகமும் ஏறி, இறங்கி வைத்து அன்பான... ஆலோசனையால் காலம் கடந்து...... மூன்று மாதம், ஆகி விட்டது. இப்போ..... கருவை, கலைக்கத் தயார், என்று..... அவர்கள் பச்சைக் கொடி காட்டிய போது....எங்களுக்கு, கொஞ்ச தயக்கம், அந்த இடத்திற்கு சென்ற, மனைவியின்... …
-
- 41 replies
- 4.2k views
-
-
கற்பு என்றால் என்ன? – இந்திரா பார்த்தசாரதி அற்ப விஷயங்களையும் அரசியலாக்கும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வாயில் அகப்பட்டு, சமீபத்தில், மிகவும் அவதியுற்றச் சொல், ‘ கற்பு ‘. ‘கற்பு ‘ என்றால் என்ன ? ‘கல் ‘ என்ற வேர்ச்சொல்லினின்றும் பிறந்தவை ‘கற்பு ‘, ‘கல்வி ‘ போன்ற சொற்கள். ‘கல் ‘ என்றால், ‘தோண்டுதல் ‘. ஆங்கிலச் சொல், ‘ cultivate ‘, ‘culture ‘ போன்ற சொற்களும் இந்தத் ‘ தோண்டுதலை ‘ ( ‘உழுதல் ‘- லத்தீன்-cultivatus) அடிப்படையாகக் கொண்டு பிறந்த சொற்கள்தாம். கற்பிக்கப்படுவது எதுவோ அது ‘கற்பு ‘. கல்வியினால் உண்டாகும் ஞானமும் ‘கற்பு ‘தான். ‘பெரிய திருமொழியில் ‘ (திருமங்கைமன்னன்), ‘கற்பு ‘ என்ற சொல் ‘பெரிய ஞானம் ‘ என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. ‘ஆழி ஏந்திய கையனை, அந்தண…
-
- 0 replies
- 7k views
-
-
சிலாபம் திண்ணனூரான் இவரின் வயது பத்தொன்பது தெமட்டகொடை, ஞானவிமல வீதியில் வசிக்கும் ஜே.எம். ரிகாஸ் ஒரு மாற்றுத் திறனாளி. இவரின் பேச்சு மழலைபேச்சாக இருக்கும் பளிச்சென பிரகாசிக்கும் கொண்ட முகம். எந்தநேரமும் கள்ளம்கபடமற்ற சிரிப்பு அவரின் முகத்தை கௌவிக்கொண்டுள்ளது. குழந்தைப் பருவத்தில் ஏனைய குழந்தைகளைப் போல ஓடி ஆடி விளையாடியவர் இவர். ஆனால், தனது ஐந்து வயதில் அரச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்ற தருணத்தில் இவரின் உடலினுள் செலுத்தப்பட்ட ஊசிமருந்த ஒவ்வாமையினால் இவரின் உடலின் சில தாக்கங்களுக்குள்ளானது. அதன் பாதிப்பு இவரின் உடல் வளர்ச்சியை தடை செய்தது இன்று இவரின் முழு உயரம் மூன்று அடிகளும் இரண்டு அங்குலமேயாகும். நடக்க இயலாது. முள்ளந்தண்டு முற்று முழுதாக பழுதாகிவிட்ட நி…
-
- 0 replies
- 986 views
-
-
அண்மையில்.. முன்னாள் சோவியத் குடியரசு... சேர்ந்த ஒரு நாட்டில் இருந்து வந்தவரோடு கதைக்கக் கிடைத்தது. அவர் திருமணங்கள் பற்றிய பேச்சு வந்த போது கேட்டார்.. ஆண்கள் நீங்கள் பெண்களை விலைகொடுத்து வாங்கியா திருமணம் செய்வீர்கள் என்று..! நான் சொன்னேன்.. இந்திய சமூகக் கட்டமைப்புச் சார்ந்த எங்கள் கட்டமைப்பில் அப்படியல்ல. அதற்கு எதிர்மாறு. பெண்கள் ஆண்களை விலைகொடுத்து வாங்குவார்கள் என்று. அவர் பிரமித்துப் போய்.. மேலும் தொடர்ந்தார்.. கசகிஸ்தானில்.. ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால்.. நிலம்.. வீடு.. கால்நடைகள்.. காசு என்று எல்லாம்.. பெண்ணைப் பெற்ற தந்தைக்கு பெண்ணை எடுப்பதற்காக வழங்க வேண்டுமாம். மேலும்.. அந்த ஆண் நிரந்தர உழைப்பாளி என்பதையும் நிரூபிக்க வேண்டுமா…
-
- 16 replies
- 1.9k views
-
-
எது பெண்மை ..? எதிரே ஆண்மகனின் பார்வை தவறாக போகும் போதுது தலை குனிந்து செல்வதா . .. தாயிற்கும் தந்தைக்கும் பணிவிடை செய்து ,இறுதி மூச்சினில் மலத்தையும் துடைத்து ..தலைமாட்டில் கதறி அழுதாலும் கூட ,ஒரு கணநேரத்தில் எம்மை ஒதுக்கி வைத்து அவர்களை ஈமச் சடங்கை முடித்து எரிப்பானே அந்த ஆணுக்கு பணிந்து போகுதல் பெண்மையா .... திருமணம் முடித்துவிட்டால் நான் இன்னொரு வீட்டுப் பெண் ,என் மாமியாருக்கோ நேற்று வந்தவள் ...சகோதரனுக்கோ தனிக் குடும்பம் இப்படி மூன்றாம் பார்வையில் எம்மை ஒதுக்கும் உறவுகளை அனுசரிப்பது பெண்மையா ...!? கணவன் அடிக்கவும் கை ஓங்குவான் .. குடிப்பான் ..நண்பர்களின் நட்பிற்காய் தனியே தனிமை அரக்கனிடம் விட்டுச் செல்வான் .ஆயிரம் தவறாய் இருந்தாலும் பத்தினி தனத்தை காப்பாற்றுவ…
-
- 12 replies
- 4.5k views
-
-
சொத்தை உருவாக்குவதில், பெண்களின் பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து விளக்குகிறார், நிதி ஆலோசகர் சித்ரா நாகப்பன்: இன்றைய சூழ்நிலையில், சேமிப்புப் பழக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஏனெனில், இருந்த இடத்தில், தேவையான பொருட்களை வாங்கும் வசதிகள் வந்து விட்டன. அதோடு, வாங்க நினைத்த பொருட்களை, உடனே வாங்க வேண்டும் என்ற மனநிலையில் பலரும் இருக்கின்றனர். செலவு அதிகமாக இருந்தாலும், சேமிப்பு என்பது, பெண்களிடம் கட்டாயம் இருக்கும். அந்தச் சேமிப்பை, எப்படி முதலீடாக மாற்றி, சொத்தை பெருக்குவது என்று தெரியாமலேயே, பல பெண்கள் இருக்கின்றனர்.பெண்களுக்கு அதிகம் தெரிந்த முதலீடு, சீட்டு தான். அதேபோல், சிறந்த முதலீடாக நினைப்பது, தங்கத்தைத் தான். இந்த இரண்டுமே தவறு. சீட்டு திட்…
-
- 0 replies
- 826 views
-
-
என்னது மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா? குழந்தைகளிடம் அவ்வப்போது அறிவியல் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவது நல்லது. பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பிரபலமான செய்திகளைப் பேசினால் போதும். மங்கள்யான் செவ்வாயைச் சுற்றுகிறது என்கிற ரீதியில் பேசலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் வெறும் கதைகளோடு நிறுத்திக் கொள்கிறோம். குழந்தைகளிடம் கதை சொல்லலாம்தான். ஆனால் வெறும் கதைகள் மட்டுமே இந்தத் தலைமுறைக்கு போதுமானது இல்லை. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சில சிறார் கதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவற்றில் எந்த லாஜிக்கும் இல்லை. ஒருவன் வலையை விரித்து வைத்திருக்கிறான். அதில் மின்னல் வந்து சிக்கிக் கொள்கிறது. அவன் அந்த மின்னலை விடுவித்துவிடுகிறான். பிறகொரு நா…
-
- 2 replies
- 974 views
-
-
காசு காசு என்று பேயாய் அலைந்து தம் குழந்தைகளையும் புறக்கணிக்கும் தமிழ் பெற்றோர்களுக்கு சமர்பணம்
-
- 1 reply
- 1k views
-
-
சிலாபம் திண்ணனூரான் கொழும்பு புறக்கோட்டை வர்த்தக வீதிகளில் 'யோவ், யோவ்.வழி வழி.' என பெரும் சத்ததுடன் தள்ளு வண்டிகளில் மூடைகளை அடக்கி வைத்து வண்டியை தள்ளிக் கொண்டு போவார்கள். மனிதனின் ஒவ்வொரு கண்டு பிடிப்புகளுக்கும் வரலாறு உள்ளது. அவ்வாறு இவ்வண்டிகளுக்கும் வரலாறு உள்ளது. இவ் வண்டி வியாபாரம் வியப்பானது. புதுமையானது. இது குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்கிறார் தள்ளுவண்டி வியாபாரம் நடத்தி வரும் கணேஷ் தர்மலிங்கம். இத்தள்ளுவண்டித் தொழிலில் ஈடுபடும் நாட்டாமைகளுக்கு ஆரம்ப காலத்தில் நாடார் வர்த்தகர்களே கொழும்பில் வண்டிகளை நாளாந்த வாடகைக்கு வழங்கிக் கொண்டு இருந்தனர். முன்னர் இவ்வண்டிகளின் சக்கரங்கள் லண்டன் யுத்த டாங்கியின் சக்கரங்களை ஒத்த வடிவில் வடிவமைக்கப்பட்டு இருந்தன. அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை " Pet Peev " இதன் அர்த்தம் நம்மை சுற்றி நடக்கும் சிறு சிறு விடயங்களால் நமக்கு ஏற்படும் "எரிச்சல் ஊட்டும் / கடுப்பு ஏத்தும் " விடயங்களை குறிக்கும். இது ஒரு பிற மனிதனால் தான் ஏற்படும் என்றும் இல்லை. உதாரணமாக எனக்கு என்னுடைய "ஹெட் போன்" வயர் அடிக்கடி சுயமாக சிக்குப்பட்டு அவிழ்ப்பதற்கு கஷ்டமானதாக இருக்கும் ... எனக்கு செம கடுப்பு வரும் நிகழ்வு இது ... இப்படி எத்தனையோ பட்டியல் போடலாம். சரி போட்டுதான் பார்ப்போமே. - இலங்கையில் தமிழருக்கு அநீதியே நடக்கவில்லை என்று வாதிப்போர் ~ செம கடுப்பு (முகறையில ஓங்கி பளீர்னு வைக்கணும் போல இருக்கும் ..ஆனா முடியாது ) - டொரோண்டோ (Take Out ) தமிழ் சாப்பாட்டுக் கடைகளில் தமிழ் சினிமா (இதில் பெண்களை அடிக்கும், …
-
- 4 replies
- 1.6k views
-
-
மனமும் புத்தியும் கிழித்த நேர்க்கோட்டில் நின்று எப்போதும் நிஜம் பேசுபவர் எழுத்தாளர், ஒளி ஓவியர், இயக்குநர் தங்கர் பச்சான். இது, முந்திரிக்காட்டு மண்வாசம் அடிக்கும் அவருடைய எழுத்துப் பாசனம்… இதை எல்லாம் எதுக்கு எழுதணும்? எழுதலேன்னா என்னாகும்? ஏன் எழுதலேன்னு யாராவது கேட்கப் போறாங்களா? இருந்தாலும் எழுதப் போறேன். எழுதி வெளியில தூக்கிப் போட்டாத்தான் நிம்மதியா இருக்க முடியும்னு மனசு சொல்லுது. கண்டும் காணாமப் போவது, நல்லா நின்னு நிதானமாப் பார்ப்பது, பார்க்கவே வேணாம்னு முடிவு செய்து எதைப் பத்தியும் கண்டுக்காமப் போய்ட்டே இருப்பதுன்னு நானும் இருக்கப் பார்க்கிறேன், முடியல. இருக்கிற வேலையைப் பார்க்குறதுக்கே நேரம் பத்தல. திரைப்படக் கல்லூரி கடைசித் தேர்வு எழுதிய சமயம், கடைசி வ…
-
- 24 replies
- 8.1k views
-
-
பளீர் என்று வெளிச்சம். மின்சாரம் வந்துவிட்டது. கூடவே, இளம் பெண்ணின் குரல். “அண்ணா, பயப்படாதீங்க. என் பேரு சரண்யா. இவங்க எல்லாம் குடிநோயால் மனநலம் பாதிக்கப்பட்டவங்க. எல்லோரும் போய்ப் படுத்துத் தூங்குங்க” என்றார். தூக்கம் வரவில்லை. விடிந்திருந்தது. வெளியே வந்து பார்த்தேன். மழை ஓய்ந்திருந்தது. நேற்று இருட்டில் தெரியவில்லை. அது அப்படி ஒன்றும் காடு அல்ல. ஆனால், எங்கும் பசுமை பரவியிருந்தது. பறவைகளின் கீதங்களால் சூழல் ஏகாந்தமாக இருந்தது. குடிநோயாளிகள் மற்றும் மனநோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஏற்ற சூழல் இதுவே. காலை 7 மணிக்குத் தொடங்கியது யோகா, மூச்சுப் பயிற்சி. குங்குமம், சந்தனப் பொட்டு வைத்து ஆச்சாரமாக இருந்த ஒரு அக்கா, “எல்லோரும் சாப்பிட வாங்க” என்றார். அந்த அக்காவின் பெயர் …
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐயா கமல் சாரு!!!! சொந்த லாபத்திற்காக மதத்தை சாடும் உங்களுக்கு!!!! சந்திராயன் இன்னும் பல விண்வெளி ஆராய்சிகள் இந்தியாவுக்கு தேவையா? செவ்வாயில் கிடங்கு கிண்டி மிதேன்வாயு ஆராய்ச்சி தேவையா? பல கோடிகளில் திரைப்படம் எடுத்து மக்களை வசீகரப்படுத்த/களிப்பூட்டுவதன் அவசியம் என்ன? காஷ்மீர் விரயத்தனங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? உலகத்தையே தூக்கிப்போடும் அளவிற்கு ஊழல்கள் நடக்கின்றது.தமிழ்நாட்டிற்கு பத்து வருசம் சாப்பாடு போடும் பணத்தை கொள்ளை அடித்திருக்கின்றார்கள். இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? இதுபோன்று பல...... இவை எல்லாவற்றையும் இரு வருடங்களுக்கு தற்காலிகமாக நிறுத்துங்கள்!!!!! நீங்கள் சொன்ன பசி தானாக பறந்து போகும். இனிவரும் காலங்களில் யாழ் உறவுகளும் செய்திகளை…
-
- 3 replies
- 1k views
-
-
நீங்கள் உங்கள் நிறுவனத்துக்கு நாணயமாக நடந்து கொள்வீர்களா? இப்படி ஒரு கேள்விக்கு நிச்சயம், ஓரளவு, மாட்டேன் என்று மூன்றுவிதப் பதில்களைக் கொடுத்தால், எல்லோருமே ‘நிச்சயமாக’ என்ற பதிலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் (நடைமுறையில் ‘ஓரளவு’ என்று நடந்துகொள்ளக் கூடியவர்கள் உட்பட). எனவே இதுபோன்ற (போலியான பதில் வர வாய்ப்புள்ள) கேள்விகளைக் கேட்டு நபர்களைத் தேர்வு செய்வதை நிறுவனங்கள் விரும்பாது. ஆனால் கேள்வியைக் கொஞ்சம் சுற்றி வளைத்துக் கேட்டால் மாட்டிக் கொள்ள வாய்ப்பு உண்டு. சுற்றி வளைக்கும் கேள்வி “உங்களுக்கு வேறொரு நிறுவனத்திலிருந்து வேலையில் சேர அழைப்பு வருகிறது. நீங்கள் எங்கள் நிறுவனத்தை விட்டுச் சென்று விடுவீர்களா?’’. இந்தக் கேள்விக்கு உங்கள் பதில் என்னவாக இருக்க…
-
- 1 reply
- 741 views
-
-
கடந்த மாதம், மாமல்லபுரம் உணவகத்தில் ஐரோப்பியப் பெண் கேத்தரீனைச் சந்தித்தேன். அவள் இந்தியா வந்து அன்றோடு 46-வது நாள். 24 வயதில் கேத்தரீன் பயணிக்கும் ஒன்பதாவது நாடு இந்தியா. தன் முதல் பயணத்தைப் பிரியமான அம்மா இறந்த அடுத்த வாரத்தில், அந்தத் துயரை மறப்பதற்காகத் தொடங்கியிருந்தாள். அடுத்து அடுத்து பயணிக்க ஒரு துயரம் அவளுக்கு வேண்டியிருக்கவில்லை. 'நமக்கு முன்னால் இவ்வளவு பெரிய உலகம் இருக்கிறப்போ, நமக்குனு தனியா என்ன துக்கம் இருக்கு?’ என்று இட்லி - சாம்பாரை ரசித்து, ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டே கேத்தரீன் கேட்டபோது, ஒரு நாடோடிக்கு மட்டுமே அந்தப் பரந்த மனம் வாய்க்கும் எனத் தோன்றியது. இத்தனைக்கும் கேத்தரீன் ஒன்றும் கோடீஸ்வரி அல்ல. போர்ச்சுக்கல் நாட்டில் …
-
- 12 replies
- 2.6k views
-
-
அக்கரைச் சீமையில் அசத்தல் வெற்றி பள்ளி, கல்லூரி நாட்களில் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் பெண்கள் பலர் திருமணத்திற்குப் பின்னர் கற்ற கலையை மறக்கும் நிலையே இன்றும் இருக்கிறது. ஆனால், ஒரு பெண்ணுக்கு நல்லதொரு புகுந்த வீடு அமையும்போது அவள் கற்ற கலைகள் செம்மைப்படுகின்றன. அடுத்த கட்டத்துக்கு அவளை நகர்த்திச் செல்கின்றன. அப்படித்தான், அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள வித்யா மூலாவுக்கும் நல்லதொரு குடும்பம் அமைந்தது. அந்த ஆதரவோடும் ஒத்துழைப்போடும் அமெரிக்காவில் ஒரு கலைப் பள்ளிக்கூடத்தைத் தொடங்கும் பணியில் இறங்கியிருக்கிறார் வித்யா மூலா. ஓவியம், ஃபேஷன் ஸ்கெட்சிங், எம்ப்ராய்டரி, நாகரிக நகைகள் வடிவமைத்தல், மெட்டல் எம்பாஸிங், பேப்பர் ஜுவல்லரி, இசை, பரதநாட்டி…
-
- 38 replies
- 20.7k views
-
-
கவுரவத்துக்கான போராட்டம் உண்மையில், கவுரவம்தான் மனித குலத்துக்கு இன்றியமையாதது, பொருள் சார்ந்த லாபங்கள் அப்படிப்பட்டவையல்ல. நல்ல இயல்புகளைக் கொண்ட ஒரு பெண்ணுக்குத் தெரியும், பாலியல் தொழிலில் வருமானம் கிடைக்கும் என்று. ஆனால், அவர் அப்படிச் செய்வாரா? தாழ்த்தப்பட்ட என்னுடைய சகோதரிகளுக்குச் சாதாரண சப்பாத்தி-சட்னிகூடக் கிடைப்பதில்லை. ஆனாலும், அவர்கள் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். நாங்கள் எங்கள் கவுரவத்துக்காகப் போராடுகிறோம். துரதிர்ஷ்டத்தின் ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம் நிலைமை மாறாது என்ற சூழல்தான் இந்த நாட்டில் தற்போது காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்துவைப்பதற்குச் சாத்தியமே கிடையாது. இந்து மதத்தில் இருந்துகொண்டு நம்மால்…
-
- 2 replies
- 1.3k views
-
-
நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving day) ஒரு வட அமெரிக்க பாரம்பாரிய விடுமுறை நாள் ஆகும். இது தைப்பொங்கல் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள் ஆகும். இதன் தோற்றம் அமெரிக்க முதற்குடிகளின் பாரம்பரியத்தில் இருக்கிறது. வந்த ஐரோப்பியரும், முதற்குடிகளும் ஒன்றாக கொண்டாடும் ஒரு நாள் நன்றி தெரிவித்தல் நாள் என்பது கனடாவில் வழங்கும் தோற்ற வரலாறு. இது கனடாவில் அக்டோபர் மாதத்தின் இரண்டாம் திங்களன்றும், ஐக்கிய அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழனன்றும் கொண்டாடப்படுகிறது. இன்று ஐக்கிய அமெரிக்க நாடுகளில் கொண்டாடப்படுகின்ற "நன்றி தெரிவித்தல் நாள்" அரசியல், சமூக, கலாச்சார, சமய முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. விடுமுறை நாள் என்னும் விதத்தில் இந்நாள் ஒரு குடும்ப விழாவாகக் கொண…
-
- 8 replies
- 3.5k views
-
-
கண் இருக்கிறது ஆனால் வழி தெரியவில்லை எங்கே போவது என்பது தெரியும் ஆனால் எப்படி போவது என்பது என்று தெரியாது எல்லா திறமைகளும் இருக்கின்றது அதை எப்படி செயற்படுத்துவது என்பது தெரியாது இப்படித்தான் பல திறமை சாலிகள் தங்களிடம் இருக்கும் பல வரங்களை வைத்து கொண்டு அவற்றை எப்படி இந்த உலகிற்கு காட்டுவது என்பது தெரியாமல் அடைக்கப்பட்ட பாதையில் நிற்பதை போல விழித்து கொண்டிருக்கிறார்கள் . பல மனிதர்கள் தமக்கு தெரிந்ததை பிறருக்கு சொல்லி கொடுக்க விரும்புவதில்லை தான் மட்டும் சாதிக்க வேண்டும் தான் மட்டும் சம்பாதிக்க வேண்டும் மற்றவர்கள் தங்களை போல் வரக்கூடாது என நினைக்கிறார்கள் சில வெற்றியாளர்கள் தன்னை பற்றி சொல்லும் போது மிகவும் கடுமையான உழைப்பில்தான் நான் உயர்ந்து நிற்கிறேன் என்று மட்டுமே ச…
-
- 2 replies
- 637 views
-