Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பாலியல் அத்து மீறல்கள் வா. மணிகண்டன் www.nisaptham.com மிகச் சமீபத்தில் இந்தியாவில் நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான கொடுமைகள் என்று பட்டியல் எடுத்தால் பயங்கரமாக இருக்கிறது. வன்புணர்ந்து பிறகு தலையில் அடித்துக் கொல்வது, அடையாளம் தெரியாதபடிக்கு பாதி உடலை எரித்துவிட்டு போவது, தூக்கில் தொங்கவிடுவது என்று ஒவ்வொன்றும் குரூரமாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் வெறும் செய்தியாகப் படித்தால் பெரிதாக பாதிப்பு தெரிவதில்லை. நம் உறவுப் பெண் யாரையாவது அந்த இடத்தில் ஒரு வினாடிக்கு பொருத்திப் பார்த்தால் நெஞ்சுக்குள் மிகப்பெரிய உருண்டை ஒன்று அடைத்துக் கொள்கிறது. இவையெல்லாம் உத்தரப்பிரதேசத்திலும் டெல்லியிலும்தான் நடக்கின்றன என்றில்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்பாக பெருந்துறையில் பெண் போ…

  2. Started by கிருபன்,

    ஆதங்கம் - உஷா கனகரட்ணம் 30 மே 2014 சின்ன விரல்களிடையே பென்சிலைப் பிடித்தபடி சின்னது ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறது. இடையிடையே எழுதுவதை நிறுத்திவிட்டு பென்சிலை மோவாயில் தேய்த்தபடி தீவிரமாக யோசிக்கிறது. பார்த்துக் கொண்டிருந்த கயலுக்கு சிரிப்பாக வந்தது. அதன் பிஞ்சுக் கால்களையும் கைகளையும் கம்பளிக்குள் புதைத்து, பிடரியில் கை வைத்து சுகத்தை விட அதிகமான பயத்துடன் அவளைத் தூக்கிச் சென்ற காலங்கள் நினைவில் வந்தது. நான்கு வருடங்கள் எப்படிப் பறந்தன என்று புரியவில்லை. இங்கு வந்திருக்கும் சில நாட்களாகத் தான் இப்படி நிதானமாக உட்கார்ந்து குழந்தையை ரசிக்க முடிகிறது. இத்தனை வருடங்களை வீணாக நம்மைப் பற்றிய கவலையில் ஏக்கத்திலேயே கழித்து விட்டோமோ... உனக்கு ஒரு நல்ல தாயாக இருந்தேனா…

  3. பணி இடத்தில் - சபல புத்தி உடைய ஆண்களை சமாளிப்பது எப்படி? [Thursday, 2014-05-22 18:30:36] பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல மாதிரி பட்டால் கூட அளவுக்கு அதிகமாக அவர்களிடம் பேச வேண்டாம். யாரைப் பற்றியுமே சரியான முடிவுக்கு வர சிறிது காலம் தேவை. அதுவரை பொறுத்திருந்து, பிறகு நட்பு பாராட்டுவது நல்லது. உங்களுக்கு உங்கள் வேலை மிகவும் தேவையானதாக இருக்கலாம். அந்த வருமானத்தை நம்பித்தான் உங்கள் குடும்பமும், வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட இருக்கலாம். ஆனால் இதையெல…

    • 25 replies
    • 4.2k views
  4. பேஸ்புக்கை விட்டு ஏன் விலக நினைக்கிறோம்? ஆர்.அபிலாஷ் ஒரு குடும்பச் சண்டை எப்படி இரண்டு நாட்களில் சமூக வலைத்தளம் மூலம் வெடித்துக் கட்டுப்பாட்டை கடந்து வளர்ந்து சுனந்தா புஷ்கரைத் தற்கொலைக்கு தூண்டியது என்பதை சமீபத்தில் பார்த்தோம். சமூக வலைத்தளங்கள் நம்மைத் தேவைக்கு அதிகமாக உணர்ச்சிவசப்பட வைப்பதுடன், யாரையும் பழிவாங்கும் அபார அதிகாரமும் நமக்கு உள்ளதாக ஒரு போலி தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இது தன் கணவனின் காதலியாகத் தான் நம்பின பாகிஸ்தானியப் பத்திரிகையாளரைப் பழிக்கும்படி, ஒற்றர் என அவமானிக்கும்படி சுனந்தாவை வெறியேற்றுகிறது. பிறகு இந்தப் பிரச்சினை அவர் கைமீறிப் போகிறது. டிவிட்டரில் குற்றச்சாட்டை சுனந்தா எழுதவில்லை, யாரோ அதை ஹேக் செய்து விட்டார்கள் என சசி தரூர் கூ…

  5. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் தங்களது சொந்த விஷயங்களை அதிகமாக பகிர்ந்துகொள்பவர்கள் பெரும்பாலும் தனிமையில் வாடுபவர்களே என்று ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. ஆஸ்திரேலியாவின் சார்ல்ஸ் ஸ்ருட் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றின விஷயங்களைப் அதிகமாக பகிர்ந்துகொள்வதற்கும், தனிமையில் வாடுவதற்கும் ஏதாவது தொடர்புள்ளதா என்பது கண்டறிய வேண்டும் என்று முற்பட்டனர். இந்த ஆய்விற்காக, ஃபேஸ்புக்கின் பகிரங்கமாக தங்களது அக்கவுண்ட்டைப் பயன்படுத்தும் 600 பெண் பயனீட்டாளர்களின் பற்றிய விவரங்களை சேகரித்தார் அப்பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியர் ஏஸ்லாம் அல்-சக்கஃப். இதே நிலை, ஆண்களுக்கும் பொருந்தும் என்று தெரிய வந்துள்ளது. “நாங்கள் 308 பயனீட்டாளர்களைப் …

  6. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். மாமா, சித்தப்பா, பெரியப்பா யாராக இருந்தாலும் சரி. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளை யாரும் என்னுடைய கணவன் என்றோ, மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும். உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவ…

    • 0 replies
    • 630 views
  7. எனது வாழ்க்கையில் நான் பல கஸ்டங்களை அனுபவித்திருக்கிறேன். இன்றும் கஸ்டத்தில்தான் உள்ளேன். நான் கொஞ்சம் சந்தோசமாக இருந்தாலும் விரைவில் கஸ்டத்திற்குள் தள்ளப்படுகிறேன். பணம்கூட எவ்வளவு சம்பாதித்தாலும் கையிருப்பில் இருப்பதில்லை. தொடர்ந்து ஏதாவதொரு பிரச்சனை வந்து கொண்டேயிருக்கிறது. நானும் தியானம் போன்றவற்றைக்கூட முயற்சி செய்துள்ளேன். இருந்தும் என்னால் எனது கஸ்டங்களிலிருந்து வெளிவர முடியவில்லை. சின்ன வயது எனில், அறியா வயது என விடலாம். புத்திசாலித்னமாக இருந்தாலும், என்னதான் திட்டமிட்டு வாழ முற்பட்டாலும் என்னால் முன்னேற முடியவில்லை. என்னைச் சுற்றியிருப்பவர்கள் (குடும்பத்தினர்) மிகவும் நன்றாகவே உள்ளார்கள். அவர்கள் எனக்கு உதவி செய்ய மறுக்கிறார்கள். இதனால் வேறு வழியின்றி …

    • 35 replies
    • 3.4k views
  8. பூ இருக்கிறது அதனுள் அபரிதமான சக்தியை கொண்ட தேன் இருக்கிறது அந்த தேனை எடுப்பதற்கு இரண்டு வழிமுறைகள் உண்டு ஒன்று அதனை கசக்கி பிழிந்து எடுப்பது ஒரு வழிமுறை அதே நேரம் பூவிற்கு வலிக்காமல் அதே நேரம் அதன் வளர்ச்சிக்கும் வழிவகுத்தபடி மென்மையாக அமர்ந்து தேனை எடுக்கும் வண்ணத்துபூச்சியின் முறை இரண்டாவது வழிமுறையாகும். இங்கே நான் பூ என்று சொல்வது உங்களது குழந்தைகளைத்தான் நமக்கு இறைவன் தந்த அதி அற்புதமான கொடையான குழந்தைகளை மதிப்பெண் பெறவைப்பது உள்ளீட்ட அவர்களின் பல்வேறு சக்தியினை வெளிக்கொண்டு வர நாம் கையாளும் முறை வண்ணத்து பூச்சியின் குணத்தை கொண்ட மென்னையான,அதே நேரம் உண்மையான , அன்பை ஆதாரமாகக்கொண்ட தோழமையுடன் கூடிய அணுகுமுறையே சிறந்ததாகும். அஸ்திவாரம் போட வேண்டிய தருணம்: அதற…

    • 0 replies
    • 1.6k views
  9. ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதியின் வரிகள், இன்றைக்கு ’வீடியோ கேமில் ஓட்டி விளையாடு பாப்பா’ என்று மாறிவிட்டது. கால் வலிக்கத் தெருக்களிலும், மைதானங்களிலும் விளையாடிய காலம் போய், காசு கொடுத்துக் கடைகளில் விளையாடும் நிலைக்கு வந்துவிட்டோம். கோடை விடுமுறை நேரம் இது. பள்ளி நாட்களில் வீட்டில் இருக்கும் சில மணி நேரத்திலேயே களேபரத்தை ஏற்படுத்தும் குழந்தைகளை, இந்த மாதம் எப்படித்தான் சமாளிக்கப் போகிறோமோ என்று பெற்றோர் புலம்புவது கேட்கத்தான் செய்கிறது. கற்றலும் குணநலமும் குழந்தைகளின் கற்றல் திறன் என்பது தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணம் முதல் ஆரம்பிக்கிறது. தன்னுடைய ஒவ்வோர் அசைவிலும் பெற்றோர், சுற்றியுள்ளவர்களிடம் கற்றுக்கொண்டவற்றையே குழந்தை பிரதிபலிக்கிறது. எனவே மரபணுக்க…

    • 0 replies
    • 873 views
  10. International Nursing Week (May 9-15)உலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.உலக செவிலியர் அமைப்பு (International Council of Nurses) இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூருகிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் (Dorothy Sutherland) என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.] ஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்க…

  11. ஐரோப்பியசெய்தியாளர் நவீன காலங்களில் எப்பொழுதும் நிலையாகக் காணப்டும் நேரம் இன்மையானது, தொடர்ச்சியான அழுத்தத்தை ஏற்படுத்தி எதிலும் அவசரத்தையும், முக்கியமான வற்றை மிக விரைவாகவும், திறமையாகவும் செய்து முடிக்கும் எண்ணத்தையும் தந்து விடும் நிலையில், குழந்தைகளின் அடிப்படைத் தேவைகள் முழுமையாகப் பராமரிக்கப்படாது போய்விடுவதாக ஆய்வொன்று தெளிவு படுத்த முயல்கிறது. அமைதியாகவும் மெதுவாகவும் செயற்ப்படுத்தப்டும் விடயங்களே, நிதானமாகவும், விரைவாகவும் தேவையானவற்றை சாதிக்க உதவும் தந்திரமாக உள்ளதென்பதனை மக்கள் அறிந்திருந்தும், அதனைப் பின்பற்றாதது மிகவும் துன்பகரம் ஆனதாகும். உணர்வையும், சக்தியையும் இணைத்து எதையும் கேட்டு அறிந்து கொள்ளக் குழந்தைகளுக்கு, அமைதியான சூழல் தேவைப்படுவதாகக் குழந்…

    • 0 replies
    • 544 views
  12. மனதை நிலைப்படுத்துவது எப்படி? உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்... இது இன்று உறவினர் ஒருவருடன் விவாதித்த ஒரு விடயம். எங்கோ தொடங்கி கதை இதில் வந்து நின்றது... எனது கூற்று - "நிலைப்படுத்த என்று- நாங்கள் வில்லங்க படுத்தி மனதை நிலைப்படுத்த முடியாது...மனம் என்பதும் தானாக நிலைப்படும் என்பதும் சாத்தியாமான விடயம் அல்ல... - எதுவுமே நிலையின்றி நிரந்தரமின்றி மாறி மாறி வந்து போய் கொண்டு இருக்கும் உலகில் - எப்படி ஒருவரின் மனம் மட்டும் நிலைப்படுத்தலுக்கு உட்படும்? சில விடயங்கள் தானாக கூட வருகிறது - பல பரிமாணங்களை தாண்டினாலும் பெற்றோரில் உள்ள பாசம், தாய் நாட்டில் உள்ள பற்று என்று.... சிறு வயதில் பழகிய நல்ல பழக்கங்கள் சிலது, விரும்பி பற்றி கொண்ட கொள்கைகள் சிலது என்று...…

    • 41 replies
    • 26k views
  13. என் வீட்டில் மூன்று நாட்களாக ஒரு பிரச்சனை. முந்த நாள் மதியம் தூங்கி எழுந்து படிகளில் இறங்கி வர மூக்கு வேறு மணத்தைக் கிரகிக்க ஆரம்பித்தது. என் வீட்டு வரவேற்பறையில் போய் நின்மதியாக இருக்க முடியவில்லை. ஒரே நாற்றம். என்ன இது யாராவது எதையாவது மிதித்துவிட்டார்களா என ஒவ்வொருவரின் காலணிகளையும் மணந்தும் பார்த்தாயிற்று. காலணிகள் சுத்தமாகவே இருந்தன. வீடு முழுவதையும் நன்றாக துடைத்தும் விட்டாயிற்று. வாசத்துக்கு எதையாவது கொழுத்துங்கோ என்று பிள்ளைகள் சொல்ல, ரோசாப்பூவின் மணத்தை வீடு முழுதும் பரப்பிவிட்டு அன்றைய பொழுது போய்விட்டது. மாலையில் ரோசாப்பூவின் மணம் அடங்க மீண்டும் நாற்றம் இருக்க விடாது துரத்தியது. என்ன செய்வது நாளை காலை எழுந்து பார்க்கலாம் என்று எண்ணி தூங்கச் சென்றுவிட்டோம். …

    • 35 replies
    • 3.3k views
  14. இந்த ஆண்டு பள்ளிப் பருவம் முடியும் காலத்தில், விளையாட்டுப் போட்டிகளுக்குப் பெயர் கொடுக்கும் தருணத்தில் ஒன்றை மறந்துவிடாதீர்கள். இந்தப் போட்டிகளில் எந்தக் குழந்தைக்குப் பரிசு தருவீர்கள் என்று கேளுங்கள். போட்டியில் கலந்துகொள்ளும் எல்லாக் குழந்தைகளுக்குமே பரிசு உண்டு என்று சொன்னால் உங்கள் குழந்தையைப் போட்டியிலிருந்து விலக்கிக்கொள்ளுங்கள். ஒரு காலத்தில் பதக்கம், கேடயம், கோப்பை என்பவையெல்லாம் அரிதாக இருந்தன. மிகப் பெரிய உயர்நிலைப் பள்ளியாக இருந்தாலும் ஓரிருவருக்கு மட்டுமே அவை கிடைத்தன. அதனால், அந்தப் பரிசுகளுக்கே தனி மரியாதை இருந்தது. இப்போது போட்டியை நடத்துகிறவர்கள் வசூலிக்கும் பணத்தில் கால்வாசியைப் பரிசுகள் வாங்குவதில் செலவிடுகிறார்கள். 1960-களுக்குப் பிறகு, இந்தக் கோப்பைகள…

    • 0 replies
    • 944 views
  15. "மே" தினம். தினமும்... 16, 18 மணித்தியாலம் என்று, முழுக்க கடுமையாக உழைக்கும், தொழிலாளர்களுக்காக.... போராடி.. எட்டு மணித்தியால வேலை செய்வதை உறுதிப்படுத்திய தினம் இது. இந்தப் போராட்டம்... ஒரு கம்யூனிச நாட்டில் நடந்திருந்தால், ஆச்சரியப் பட்டிருக்க மாட்டேன். இது, அமெரிக்காவில் நடந்தது. மருத்துவர், தாதியர்கள், தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினர் போன்றவர்களுக்கு லீவு இல்லை. சரித்திரத்தை கதைத்தால்.... உங்களுக்கு, பிடிக்காது என்று எனக்கு வடிவாய்த் தெரியும். ஆன படியால்... நிகழ்காலத்துக்கு வருவோம். நாளைக்கு யாருக்கு லீவு, யார் வேலைக்குப் போக வேணும்? என்ன காரணத்தால்... வேலைக்குப் போக வேண்டும், என்பதை.... கூறுங்களேன்.

  16. இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்கள், தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்தபெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர்.நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாகமாறியிருக்கிறது.பதினோராம்நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப் பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.ஒவ்வொரு இழைகளும…

  17. Started by nunavilan,

    https://www.facebook.com/photo.php?v=108886265943648

  18. Started by கிருபன்,

    ஐ லவ் யூ ஐ லவ் யூ . இந்த ஆங்கில வாக்கியம் அறிமுகமான பின்புதான் 20-ம் நூற்றாண்டு தமிழர்கள் தங்கள் காதலை ‘வாயால்’ நேரிடையாக சொல்ல ஆரம்பித்திருப்பார்கள் என்றே தரவுகள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னால் எல்லாம் ஜாடை மாடை , கண்களால் சிக்னல் கொடுப்பது என ஓட்டிக்கொண்டிருந்து, எப்போதேனும் மறைவிடத்தில் வாய்ப்பு கிடைத்தால் கட்டியணைத்து முத்தமிடுவது அல்லது மேட்டரையே முடித்து விடுவது என ஓடிக்கொண்டு இருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மேட்டர் முடிவதற்கு முன் இருவரும் ஒரு வார்த்தை பேசியிருக்க மாட்டார்கள். ஐ லவ் யூ அறிமுகமானதும் உற்சாகமான நம் ஆட்கள், கொள்ளுத்தாத்தா எள்ளுத்தாத்தா முதற்கொண்டு தன் பரம்பரையில் எல்லோரும் சொல்ல முடியாமல் விட்ட காதலை எல்லாம் சேர்த்து வை…

  19. ஒரு மின்னல் தோன்றி மறைவது போலக் கோபம்... செல்லத்துக்கு! ஏன், எதற்கு என்று யோசிப்பதற்குள் மூக்கு சிவக்கும் கோபம் வெவ்வேறு வண்ணங்களுக்கு மாறி விடும். ‘ஸாரி’ சொல்லி, கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்த நிமிடங்களுக்குப் பிறகுதான் அது ஆற்றுப்படும். குழந்தைகள் எதிர்கொள்ளும் மனம் சார்ந்த அழுத்தங்கள்தான் அவர்களின் கோபத்துக்கான முக்கியக் காரணம். ‘‘உணர்வுகளை வெளிப்படுத்துவது ஒரு கலை. குழந்தை பிறந்தது முதல் உணர்வுகளை வெளிப்படுத்தும் பழக்கத்தை இயல்பாகவே கொண்டிருக்கிறது. நம் வாழ்க்கை முறையிலோ உணர்வுகளை அடக்குவதற்கு மட்டுமே சொல்லித்தரப்படுகிறது. இந்தத் தவறான அணுகுமுறைதான் குழந்தைக்கு மன அழுத்தச் சூழலை உருவாக்குகிறது. உணர்வுகளைப் புரிந்துகொள்ள வாய்ப்பளிப்பதன் மூலம் இது போன்ற பிரச்னைக…

  20. சிறிது நாட்களாகவே என்னை மனச் சோர்வு ஆட்கொண்டுள்ளது. மிகவும் துடிதுடிப்பானவள் என்று பெயர் எடுத்த நான் இப்போதெல்லாம் சோர்ந்து போய் காணப்படுகிறேன். எந்த வேலை செய்தாலும் அடுத்த வேலை இருந்தால் முடிகிறது தூங்க மாட்டேன் முன்பு. இப்போதோ வீட்டில் எந்த வேலையும் செய்ய மனம் வருகுதே இல்லை. அதற்காக கடையில் வாங்கச் சாப்பிட்டுக் காலம் கழிக்கிறேன் என்று எண்ணிவிடவேண்டாம். அனால் எதோ சமைக்கிறேன். கணவருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுக்கிறேன். இரண்டு நண்பிகளுடன் தொலைபேசியில் அப்பப்ப அரட்டை அடிக்கிறேன். எனது தோட்டம் இம்முறையும் பூக்க ஆரம்பித்துவிட்டதுதான். ஆனாலும் முன்பு இருந்ததுபோல் அவற்றைக் கூடக் கவனிப்பதில்லை. ஆனாலும் அவை பூக்கத்தான் செய்கின்றன. மலையில் கட்டாயம் தூங்குவதும் பின்னர் இரவு …

  21. வா. மணிகண்டன் http://www.nisaptham.com/ ஒரு பெரிய யானை. அதுவும் கிழட்டு யானை. வெகு நாட்களாக உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் இருக்கிறது. அது ஒன்றும் வருமானம் கொழிக்கும் மி.க.சாலை இல்லை. பஞ்சப்பாட்டு பாடத் துவங்கி ‘இனி வேலைக்கு ஆகாது’ என்று முடிவு செய்துவிடுகிறார்கள். காட்சிசாலையில் இருந்த பிற விலங்குகளை எல்லாம் விற்றுவிடுகிறார்கள். இந்த யானை மட்டும் மிச்சம் ஆகிவிடுகிறது. வாங்குவதற்கு ஆள் இல்லை. காலம் போன காலத்தில் யார் வாங்குவார்கள்? கிழட்டு யானையால் பயன் இல்லை என்று சீந்துவார் இல்லை. அதனால் ஊருக்குள் பெரிய விவாதம் நடக்கிறது. நகரசபையில் உறுப்பினர்கள் சண்டையெல்லாம் போடுகிறார்கள். பிறகு நகரமே யானையை தத்தெடுத்துக் கொள்வது என்று முடிவு செய்யப்படுகிறது. யானையை வைத்திருப்…

  22. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியும் உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களும்(1): பரம்சோதி தங்கேஸ்,காலிங்க டியூடர் சில்வா இக்கட்டுரை யுத்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதி மற்றும் சமூக விலக்குப்பற்றியதொரு ஆய்வுக் கற்கையாகும். இக்கற்கையின் முன்னைய பகுதி வரல◌ாற்றுரீயாக இடம்பெற்ற இரண்டாம்தரத் தகவல்களிளன அடிப்படையாகக் கொண்டது. ஏனைய பகுதிகள் யாழ்ப்பாணத்தில் உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களின் ஒரு பகுதியினரை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுத் தரவுகளினைப் பகுப்பாய்வு செய்வதாக அமைகின்றன. உள்ளுரில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களில் பஞ்சமர் என அழைக்கப்படும் மரபரீதியாக ஒடுக்கப்பட்ட சாதிகளின் பிரதிநிதித்துவம…

    • 0 replies
    • 801 views
  23. Started by nunavilan,

    தந்தை https://www.facebook.com/photo.php?v=10151533055357725

  24. பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.. இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்... சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்... இது அவர்களது நன்மைக்காகத்தான்... என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் இன்று போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதைப்பற்றி என்ன சொல்வது!! FB

    • 23 replies
    • 5.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.