சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
கனடாவில் அதிகரிக்கும் கருணைக் கொலைகள்! கனேடிய அரசாங்கத்தின் புதிய அரவுகளின்படி, கருணைக் கொலை அல்லது மருத்துவ உதவியினால் உயிரிழப்வர்களின் எண்ணிக்கையானது கனடாவில் அதிகரித்து வருகின்றது. கருணைக் கொலையானது கனடாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 15,300 பேர் இறப்பதில் மருத்துவ உதவி பெற்றதாகக் காட்டும் தரவுகளை புதன்கிழமை கனடாவின் சுகாதார பிரிவு வெளியிட்டது. இது கனடாவில் கடந்த ஆண்டு பதிவான மொத்த இறப்புகளில் 4.7 சதவீதத்தை குறிக்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் சராசரியாக 77 வயதுக்கும் அதிகமானவர்கள். அவர்களில் சுமார் 96 சதவீதமானோர் புற்றுநோய் போன்ற கடுமையான மருத்துவ நோயினால் பாதிக்கப்படவர்கள் ஆவர். …
-
- 0 replies
- 688 views
-
-
அமெரிக்காவிலிருந்து ஏற்றுமதியான புதிய விற்பனைச் சரக்குகளில் ஒன்றுதான் மகிழ்ச்சி! நாம் எப்போதுமே நம்பிக்கையோடு வாழ வேண்டும், எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும், எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கப் பழக வேண்டும் என்ற ஆலோசனைகள் அனைத்துமே மனித மனதின் இயல்புகளைப் புரிந்துகொள்ளாததன் விளைவே. நான் என் கூட்டை உடைத்துக்கொண்டு வரப்போகிறேன், உங்களுக்கெல்லாம் அதிர்ச்சி தரக்கூடிய - ஏன் அவமானகரமான - உண்மையை ஒப்புக்கொள்ளப்போகிறேன். நான் மகிழ்ச்சியான மனிதன் அல்ல. தெருவில் போகிற ஆளைப் பார்த்து, ‘‘ஏன் முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருக் கிறாய், மகிழ்ச்சியாக இரு’’ என்று ஆலோசனை கூறும் ஆளும் அல்ல. காரணம், அப்படி எப்போதுமே நடக்காது. அதே வேளையில், நான் மகிழ்ச்சியற்ற மனி…
-
- 0 replies
- 687 views
-
-
”உங்களிடம் உரையாடும் உரிமையை பிள்ளைகளுக்கு கொடுங்கள்” இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFRANCIS DEMANGE/GAMMA-RAPHO VIA GETTY IMAGES சமீபத்தில் சென்னையை சேர்ந்த 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை 17 ஆண்கள் பாலியல் தொந்தரவிற்கு உள்ளாக்கிய சம்பவம் உலகளவில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. கேட்கும் திறனற்ற இந்த சிறுமியை கடந்த 6 மாதங்களில் 17 ஆண்கள் பால…
-
- 0 replies
- 687 views
-
-
கொலை, பாலியல் வன்முறைகளில் சிறுவர்கள் - சமூக வலைதளங்கள் காரணமா? டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரத்தால் பலியான சம்பவத்தில் 18 வயதுக்குட்பட்ட சிறுவன் ஒருவனும் இடம் பெற்றிருப்பதால், வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம், மைனர் என்பதற்காக வயதை குறைக்கலாமா என்ற பரிசீலனையில் உள்ளது. இந்தநிலையில் கடந்த 2011ம் ஆண்டு வரை 33 ஆயிரம் சிறுவர்கள் (18 வயதுக்குட்பட்டவர்கள்) மீது குற்றவழக்குகள் அந்தந்த மாநில காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை சம்பவங்களில் இப்போது பதினாறு வயது முதல் 18 வயதிற்குட்பட்டோர் அதிகம் ஈடுபடுகின்றனர். ஆடம்பர செலவுகளுக்காகவும், போதைக்காகவும் பணத்தை கொள்ளையடிக்கின்றனர். அதேபோல் பள்ளிப் பருவத்தில் இருந்தே பாலியல் …
-
- 0 replies
- 686 views
-
-
குடும்ப வன்முறையில் இருந்து வெளியேற பெண்கள் தயங்குவது ஏன்? பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஆர்யா பதவி,பிபிசி செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,VISAGE நேசத்திற்கு பதிலாக வன்முறை நிறைந்த உறவில் இருந்து ஒரு பெண் வெளியேறுவதை எது தடுக்கிறது? எதற்காக அவர் அதை பொறுத்துகொண்டும், புறந்தள்ளியும் மன்னித்தும் அதிலேயே சிக்கியிருக்கிறார்? டெல்லியில் நிகழ்ந்த ஷ்ரத்தா வால்கர் கொலையை தொடர்ந்து இந்த கேள்விகள் அதிகம் கேட்கப்படுகின்றன. போலீசாரின் கூற்றுப்படி, ஷ்ரத்தா நீண்ட காலமாகவே குடும்ப வன்முறையை எதிர்கொண்டார். இற…
-
- 1 reply
- 686 views
- 1 follower
-
-
இன்று ஜெயமோகன் அவர்களின் தளத்தில் இந்தக் கட்டுரை இருந்தது. ***** மையங்களால் அழித்தல்- ராமர்கோயில் பற்றி. March 14, 2024 வரலாறு முழுக்க மாபெரும் சுவரெழுத்துபோலத் தெரிவதும், ஆனால் அதேசமயம் சாமானியர்களால் புரிந்துகொள்ளவே முடியாததுமான ஒரு கருத்து உண்டு. ‘வலுவான மையம் கொண்ட அமைப்புகள் மிக எளிதில் சரிவடையும்‘ என்பதுதான் அது. ஓர் அமைப்பு வலிமையாகவும், நீடித்ததாகவும் இருக்கவேண்டும் என்றால் அதற்கு மிக வலிமையான மையம் தேவை என சாமானியர் நம்புகிறார்கள். ஆகவே அமைப்பை உருவாக்கும்போதே மையத்தை உருவாக்குகிறார்கள். மையத்தை வலுவாக்கிக்கொண்டே செல்கிறார்கள். அந்த அமைப்பு வலுவிழக்கும் என்று தோன்றினால் அஞ்சி மையத்தை மேலும் மேலும் அழுத்தமானதாக ஆக்குகிறார்கள். அந்த அமைப்பு ஒட்டுமொ…
-
- 0 replies
- 685 views
-
-
தூக்கத்தில் குறட்டை விடுவதால் கணவனை விவாகரத்து செய்யும் மனைவி, ருசியாக சமைக்க தெரியாததால் மனைவியை விவாகரத்து செய்யும் கணவன் ஆகியோருக்கு மத்தியில், இளம்பிள்ளை வாதத்தால் இரண்டு கால்களையும் இழந்த மனைவி மற்றும் நடைபழகும் பச்சிளம் குழந்தை ஆகியோரை தூக்கி சுமந்தபடி வலம் வருகிறார் ஒரு வட மாநில வாலிபர். சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் நிஷாந்த். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் அங்கு கூலி வேலையை பார்த்து வந்தார். திருமணம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்த அவர் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை சந்தித்தார். பல எதிர்ப்புகளுக்கு இடையே நிஷாவை திருமணம் செய்து கொண்டார். மகள் பிறந்தாள். குடும்பம் வளர்ந்தது. தனி மனிதனாக இருந்தபோது சமாளித்த …
-
- 0 replies
- 684 views
-
-
இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குதல் - ஒரு பார்வை இலங்கையில் கருக்கலைப்பை சட்டமாக்குவதற்கு எதிராக சில மத நிறுவனங்கள் அண்மையில் கூச்சல் மேற்கொண்டதைத் தொடர்ந்து நான் இந்த கட்டுரையை எழுதுகிறேன். நான் இவ்விடயம் தொடர்பாக உலகளாவிய கருத்துகள், நூல்களைப் பற்றி அறிந்துள்ளேன். அத்துடன் சர்வதேச நிபுணர்களுடனும் இது குறித்து கலந்தாலோசித்துள்ளேன். இங்கு நான் கருக்கலைப்பு குறித்த எனது அறிவைத், தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். சில சர்வதேச நிபுணர்கள் அயர்லாந்து குடும்ப திட்டமிடல் சங்கத்துடனும் பிரஜைகள் பணியகத்துடனும் இணைந்து கருக்கலைப்பை அயர்லாந்தில் தளர்த்துவது தொடர்பாக பணியாற்றி வரு…
-
- 0 replies
- 684 views
-
-
நாங்க போடலாம் நீங்க ஏன் போடுறிங்க... ?
-
- 0 replies
- 683 views
-
-
-
- 2 replies
- 682 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் தருமபுரி மாவட்டத்தில் 6 வயது சிறுவன், தனது உறவினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கை-கால் கட்டப்பட்ட நிலையில் நீர்த் தேக்கத் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம், பெண் குழந்தைகளுக்கு மட்டுமின்றி, ஆண் குழந்தைகளுக்கும் உடல் எல்லையையும், பாதுகாப்பையும் கற்றுத் தர வேண்டிய தேவையை மீண்டும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர் என்னவெல்லாம் செய்ய வேண்டும், அவர்களோடு உடல் சார்ந்த பாதுகாப்பு கு…
-
- 0 replies
- 682 views
- 1 follower
-
-
முன்பெல்லாம் கை நிறைய பணம் கொண்டு சென்றோம், பை நிறைய பொருட்களை வாங்கி வந்தோம் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். இது சும்மா பேச்சு வழக்குக்காக சொல்லப் பட்டதல்ல, அதுதான் உண்மை. ஆனால் இப்போதோ பை நிறைய பணம் கொண்டு சென்றாலும், கையளவு பொருட்களைத்தான் வாங்க முடிகிறது. எந்த விதமான திட்டமும் இல்லாமல் செலவிட நேரும்போது உடனே பர்சில் கை வைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. வரவுக்கு மீறி செலவு செய்வது நம்மை கடன் பொறியில் சிக்க வைக்கும் என்பதுதான் அனுபவ உண்மை. இந்த மாதம் வீட்டுச் செலவுக்கு ஒதுக்கிய தொகையைப் போல அடுத்த மாதத்துக்கு ஒதுக்க முடியவில்லை. அடுத்த மாதத்தில் 1,000 ரூபாயாவது கூடுதலாக ஒதுக்கினால்தான் விலைவாசி ஏற்றத்தைச் சமாளிக்க முடியும் என்பதாக இருக்கிறது. மார்க்கெட்டில் இ…
-
- 3 replies
- 682 views
-
-
" "இதெல்லாம் நடக்குமெண்டு நினைக்கிறீரோ தம்பி?" அவ்வப்போது சிரித்துக்கொண்டே கேட்பார் மனேஜர். ஏன் நடக்காதா எல்லாம் சரியாத்தானே இருக்கு?" "இட்ஸ் ஒக்கே நான் சும்மா கேட்டன் நீர் என்ன நினைக்கிறீர் பாப்பம் எண்டு..." "என்னவாம் தம்பி.. தண்ணி கொண்டு வரப் போறாராமோ? சிறி இடையில் வந்து "இப்பிடித்தான் முந்தியும்..." கதைசொல்ல ஆரம்பிப்பார். 'அடப்பாவீங்களா நடக்காதுன்னு நினைச்சுக்கொண்டா வேலை செய்யுறீங்க?' எனத் தோன்றும். "என்ன இப்பிடி கதைக்கிறீங்க? இயக்கமே ஓக்கே சொல்லிட்டாங்களே?" "என்னமோ பாப்பம்... எங்களுக்கு நல்லா பே பண்ணீனம் சந்தோஷமா வேலை செய்துட்டு போக வேண்டியதுதான் இட்ஸ் ஒக்கே" - மனேஜர் 'இட்ஸ் ஒக்கே' என்பதே மனேஜரின் தாரக மந்திரம். 'ஒரு பொல்லாப்புமில்லை' என்கிற 'விச…
-
- 0 replies
- 681 views
-
-
பெண்களுக்கு உதவிபுரியக் கூடிய வழிகள் 01)பெண்கள், பிள்ளைகள் சமுதாயத்தில் அனேகமாக துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதினால் அவர்களுக்கு துன்புறுத்தலோ,பயமுறுத்தலோ ஏற்படாத வகையில் செயல்படுவது சமுதாயத்தில் ஒவ்வொருவரினதும் கடமையும் பொறுப்பும் ஆகும். 02)பெண்கள் பிரயாணம் செய்யும் போது அவர்களுக்கு சந்தேகம் ஏற்படும் வகையில் பிரயாணம் செய்வதை தவிர்க்கவும் உங்களால் எதுவிதமாக அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் பிரயாணத்தை மேற்கொள்வதற்கு வழிவகுத்துக் கொள்ளவும். 03)பெண்கள்,பிள்ளைகள் புகையிரதத்தில் அல்லது பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது அவர்களுக்கு அசௌகரியமோ, துன்புறுத்தலோ ஏற்படாதவாறு செயல்படுத்தவும். பெண்களுக்கோ,பிள்ளைகளுக்கோ ஏதேனும் அசௌகரியம் ஏற்படுமாயின் அத…
-
- 1 reply
- 681 views
-
-
விடுமுறை நாளன்று தெருவோரமாக நடந்து கொண்டிருந்தார் ஒருவர். அப்போது அலுவலக சகஊழியர் ஒருவரை எதேச்சையாகச் சந்தித்தார். தெரிந்த ஒருவரைக் கண்டவுடன் வழக்கமாக எல்லோரும் சொல்லும் அந்த வார்த்தைகளைக் கேட்டார். “ஹலோ சார், எப்படி இருக்கீங்க?” உடனே அந்த நபர் “நான் எப்படி இருக்கிறேனா அல்லது நான் எப்படி உணர்கிறேனா? இதில் எதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள்?” என எதிர்க் கேள்வி எழுப்பினார். அலுவலக நண்பர் கேட்கும் கேள்வியின் உள் அர்த்தம் புரியாமல் “ஓகே சார்…ஃபைன்” எனச் சொல்லிவிட்டு இடத்தைவிட்டு நகர்ந்தார் முதலாவது ஆசாமி. இப்படித்தான் பெரும்பாலான நேரங்களில் நலம் விசாரித்தல் என்பது உதட்டளவில் மட்டுமே நடைபெறுகிறது. உண்மையான உணர்ச்சி “எப்படி இருக்கீங்க?” எனக் கேட்கும்போது ஏதோ சொல்ல வேண…
-
- 0 replies
- 681 views
-
-
கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ரதி மேனனுக்கு வயது 59. அவரின் கணவர் கடந்தாண்டு உயிரிழந்துவிட்டார். மகள்கள் இருவரும் திருமணமாகி தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், பெரும்பாலும் அம்மாக்கள் தங்கள் மிச்ச ஆயுளை தனிமையில் கழிக்கத் தள்ளப்பட்டிருப்பார்கள். ஆனால் ரதியின் மகள் பிரசீதா தன் தாயை அப்படி விட்டுவிடவில்லை. ‘வயது வெறும் எண்ணிக்கைதான். வாழ்வின் மீதி நாள்களுக்கு அம்மாவுக்கு துணை தேவை’ என்று எண்ணினார். தன் அம்மாவுக்கு, குடும்பத்தின் உதவியுடன் மறுமணம் செய்து வைத்துள்ளார். இதுகுறித்து பிரசீதா கூறுகையில், ``அம்மா, நான், என் சகோதரி நண்பர்களை போலத்தான் வளர்ந்தோம். எந்த வ…
-
- 1 reply
- 681 views
- 1 follower
-
-
அடுத்தடுத்து பலகட்டத் தேர்வுகள் அடங்கிய பரீட்சை அது. மனநலவியல் பேராசிரியர் ஒருவருடன் அந்த அறைக்குள் நீங்கள் நுழைகிறீர்கள். உள்ளே இரண்டு நபர்கள் நிர்வாணமாக அமர்ந்திருக்கிறார்கள். உங்கள் சங்கடம் போக்க, அவர்கள் இருவர் மீதும் பெட்ஷீட்டைப் போர்த்துகிறார் பேராசிரியர். 'இவர்களில் ஒருவர், மல்டிநேஷனல் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சி.இ.ஓ. இன்னொருவர், அதே நிறுவனத்தில் துப்புரவுத் தொழிலாளி. இவர்களில் யார் சி.இ.ஓ... யார் தொழிலாளி என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்!' என்கிறார். இருவரும் ஒரே உயரம், நிறம், வயதினர். இருவர் சிரிப்பிலும் ஏறக்குறைய வித்தியாசம் இல்லை. கண்கள் உங்களை நேருக்கு நேர் பார்க்கின்றன. நீங்கள் திணறுகிறீர்கள். உங்களுக்கு உதவுவதற்காக இருவர் மீதும் இரு…
-
- 0 replies
- 681 views
-
-
2015-ம் ஆண்டு ஜனவரி மாதம். அமெரிக்கா, ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பைக்கில் செல்லும்போது, அந்த இரவில், சுயநினைவின்றியும், ஆடைகள் பாதி அகற்றப்பட்டும் கிடந்த பெண்ணை, ஒருவன் பாலியல் தீண்டல் செய்துகொண்டிருப்பதைக் காண்கிறார்கள். அந்தப் பெண் மீட்கப்பட, தப்பி ஓட முயற்சித்த அந்த ஆண், 20 வயதான பிராக் ஆலன் டர்னர் என்று தெரியவருகிறது. வழக்குப் பதிவுசெய்யப்படுகிறது. டர்னர் ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்காக சிறை சென்றவன். இந்நிலையில், 2016, ஜூன் 2ம் தேதி இவ்வழக்கின் தீர்ப்பில், ‘கடுமையாக பாதிக்காத வண்ணம்’ டர்னருக்கு 6 மாத காலம் சிறை தண்டனை அளித்தார் நீதிபதி. ஆனால், அந்தத் துன்புறுத்தலால் தன் உடலும், மனமும் எவ்வளவு ‘கடுமையாகப் பாதிக்கப்பட்டது’ என்பதை மிகவும் உணர்வுப்பூர்…
-
- 2 replies
- 679 views
-
-
சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி ஊகத்திற்கு அப்பால் உள்ளது. ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் ப்ளஸ் போன்ற பல சமூக வலைத்தளங்கள் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளன. அலுவலகங்களில் பெரும் பிரச்சினையாக விவாதிக்கப்பட்டும் விஷயங்களில் ஒன்று வேலை நேரத்தில் ஊழியர்கள் தனிப் பட்ட விஷயங்களுக்காக இத்தகைய வலைத்தளங்களை மேய்ந்துகொண்டிருப்பதுதான். பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் வேலை நேரத்தைச் சமூக வலைத்தளங்கள் அபகரித்துக் கொள்வதாக நினைக்கின்றன. எனவே அலுவலகத்தில் சமூக வலைத்தளங்களை முடக்கிவைத்துள்ளன. இது பெரும்பாலும் கீழ்நிலையில் உள்ள ஊழியர்களுக்குத்தான். ஏனெனில் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் பொறுப்பு மிக்கவர்களாகவே எப்போதும் கருதப்படுகிறார்கள். எனவே அவர்களுக்கு இப்படித் தடையேதும் விதிக்கப்படுவ…
-
- 0 replies
- 679 views
-
-
"பூ மேயும் வண்டு " சங்க இலக்கியத்தில், நற்றிணைப் பாடல் 290 இல், ஆண்களை "பூ மேயும் வண்டு" என்று தோழி சாடுகிறாள். “வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக் கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில் ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன் தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல் கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே! 5 நீயே பெரு நலத்தையே; அவனே, ''நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி, தண் கமழ் புது மலர் ஊதும் வண்டு'' என மொழிப; ''மகன்'' என்னாரே.” இதன் பொருள்:வயலில் வெள்ளாம்பல் பூக்கும். அது தலையில் சூடத் தகுந்த பூ. அதனைக் கன்று போட்டிருக்கும் பசு உண்ணும். அது தின்ற மிச்சத்தை நடை தளர்ந்த எருது …
-
-
- 3 replies
- 678 views
-
-
குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்தில் உள்ள வைர நகை வியாபாரி ஒருவர் தன்னிடம் பணியாற்றும் ஊழியர்களுக்கு கார், வீடு மற்றும் நகை ஆகியவற்றை தீபாவளி போனஸாக அள்ளிக் கொடுத்திருக்கிறார். சூரத் நகரத்தில் வசிப்பவர் சவ்ஜி தோலாக்கியா. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த இவர் 70களில் வேலைதேடி சூரத்துக்கு வந்தார். அங்கு தன் உறவினர் ஒருவரிடம் சென்று வியா பாரம் தொடங்குவதற்குக் கடன் பெற்றார். அதை வைத்துக்கொண்டு அவர் சிறிய அளவில் வைர வியாபாரத்தைத் தொடங்கினார். 1992ம் ஆண்டு ஹரிகிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் எனும் வைர வியாபார நிறுவனத்தைத் தொடங் கினார். கடந்த 20 ஆண்டுகளில் ஓராண்டுக்கு ரூ.6,000 கோடி லாபம் ஈட்டும் நிறுவனமாக அதை மேம்படுத்தினார். தற்போது சூரத், மும்பை மற்றும் வெளிநாடுகளில் இந…
-
- 0 replies
- 677 views
-
-
நிறமிழக்கும் வண்ணங்கள் சரி எங்குதான் போவது, ஒருவாறு சமாளித்துகொண்டு இருந்துவிடும் எம்மில் பலரும், இரண்டு வருடங்களுக்கு ஒருதடவையேனும், மாறிக்கொண்டே இருப்பர். இருப்பதை ஆங்காங்கே மாற்றிமாற்றி அடுக்கிவைப்பதைத் தவிர, புதிதாக வாங்குவதற்குக் கனவு கண்டாலும், அது கனவிலேயே கலைந்துவிடும். ஏனெனில், சில வாடகை வீடுகளில், மாடிவீட்டுக்கான ஏறுபடிகளைக் கூட, தங்கள் வீட்டுக்குள்ளே ஒழித்துவைத்துக் கொள்வர். அதனால்தான் என்னவோ, “கல்யாணம் கட்டிப்பார்; வீட்டைக்கட்டிப்பார்” என, முன்னோர் கூறிக்கொண்டிருப்பதை இன்னும் கேட்டுக்கொண்டிருக்கின்றோம். கல்யாணத்தைக் கட்டிக்கொள்ளும் எம்மில் பலருடைய, வீட்டைக் கட்டுவதற்கான ஆசைகள், நிராசைகளாகவே முடிந்துவிடுகின்றன. இருக்கும் வரையிலும் சொந்த வீடிலில்லா…
-
- 0 replies
- 677 views
-
-
`யாரையும் கட்டிப்பிடிக்காதீங்க!' - கொரோனாவின் அடுத்த அலை குறித்து எச்சரிக்கும் WHO மா.அருந்ததி Hug நண்பர்களையும் உறவினர்களையும் கட்டிப்பிடிப்பதை தவிர்த்திடுங்கள் என்று எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனமான 'WHO'. நாம் பிறர் மேல் வைத்திருக்கும் அன்பையும் அரவணைப்பையும் அவர்களைக் கட்டிப்பிடித்து வெளிப்படுத்த விரும்புவோம். வெளிப்படுத்திக்கொண்டும் இருந்தோம். நடுவில் கொரோனா வந்த பிறகு இந்த 'கட்டிப்பிடி வைத்தியத்திற்கு' இடைவேளை விட வேண்டி வந்தது. சில மாதங்கள்வரை 'ஹக்' கலாசாரத்தையும் மறந்திருந்தோம். தொடுதல் தற்போது கட்டுப்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாராள தளர்வுகளாலும் மற்றவர்கள…
-
- 2 replies
- 676 views
-
-
எனது குடும்பத்தில் துன்பவியல் நாடகங்களுக்கு பஞ்சமேயில்லை..! எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்திருக்கிறோம்.. உச்சக்கட்டமாக எனது தந்தை மற்றும் தாயின் புற்றுநோய் அவலங்களைக் குறிப்பிடலாம்.. இவைகளைக் கடந்து இத்தனையாண்டுகள் கழித்து மீண்டும் ஒரு அவலம்..! இப்போது எனது அண்ணன்..! பிரிவியூ தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாளில், என்னை உடனே தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு வரும்படி போனில் அழைத்தார் எனது அண்ணனின் சகலை..! ஏற்கெனவே சென்ற மாதம் திருச்சியில் இருந்த அண்ணனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர் திட உணவு சாப்பிட முடியாமல் வெறும் கஞ்சி மட்டுமே குடித்துக் கொண்டிருந்தது என்னை கொஞ்சம் பயமுறுத்தியிருந்தது. அப்படியொன்று இருக்கக் கூடாதுடா முருகா என்று…
-
- 0 replies
- 676 views
-
-
கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 23 ஆகஸ்ட் 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES மனநலம். இந்த சொல் கடந்த வெகு சில தசாப்தங்களாகத் தான் கவனம் பெற்று வருகிறது. மன நலம் என்கிற ஒரு சொல்லுக்குள் பல்வேறு பிரச்னைகளையும், மன நல குறைபாடுகளையும் பட்டியலிடலாம். கடந்த சில ஆண்டுகளாகத்தான் மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற மனநலம் சார் சொற்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளின் போது கூட உலக புகழ்பெற்ற அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பைல்ஸ், தன் மன நலனை கருத்தில் கொண்டு, தான் கலந்து கொள்ளவிருந்த பல போட்டிகளிலிருந்து வெளியேறினார். அது ச…
-
- 2 replies
- 675 views
-