சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
கருத்துக்கள உறவுகளே நீங்கள் தாய்மொழியிலா அல்லது வேற்று மொழியிலா உங்கள் கையெழுத்தை போடுவீர்கள். நான் சிறுவயதில் ஆங்கிலத்தில் போடுவேன். இப்போது தாய்மொழியில் போடுகின்றேன். அதற்கு காரணம் எனது நண்பன். அவன் வவுனியா கல்வியியல் கல்லூரியில் கற்கும்போது சிங்கள மாணவர்கள் சிங்களத்தில் கையெழுத்து போடுவதாக சொன்னான். அவர்கள் ஆங்கிலத்தில் கையெழுத்து போடமாட்டார்களாம். அதன் பின்புதான் நான் தாய்மொழியில் கையெழுத்து போடுவேன்.
-
- 16 replies
- 2.4k views
-
-
மனைவியைக் கொன்று கடந்த 2 மாதங்களாக பிரிட்ஜில் பத்திரப்படுத்தி வைத்திருந்த மென்னியல் பொறியியலாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனைவியைக் கொன்று சிறு சிறு துண்டுகளாக்கி "ப்ரீசரில்" அவர் வைத்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். 37 வயதாகும் ராஜேஷை கைது செய்தபோது இந்த திடுக்கிடும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அந்தப் பெண்ணின் சகோதரர் தன் சகோதரி எங்கிருக்கிறாள் என்பது பற்றி கண்டுபிடித்துத் தருமாறு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் ராஜேஷிடம் விசாரணை நடத்தியதில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தது. டேரா டூனைச் சேர்ந்த மென்னியல் பொறியியலாளர் ராஜேஷ் (37). இவரது மனைவி அனுபமா (33). இவர்களுக்கு இடையே கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி ப…
-
- 8 replies
- 2.2k views
-
-
பண்புக்கு கிடைத்த பரிசு மரியாதையுடனும் நாகரிகமாகவும் நடந்து கொண்ட ஒரு எளிமையான செயல் பிலிப்பைன்சில் ஒருவருக்கு பெரும் பலனை அளித்திருக்கிறது. அந்தநபர் தேசிய லாட்டரியில் 17 மில்லியன் டாலர்கள் இந்த செய்கையால் வென்றுள்ளார். லாட்டரி சீட்டை வாங்க வரிசையில் நின்ற அவரை, நாகரிகமில்லாமல் தள்ளிவிட்டு முந்திக்கொண்டு பரிசுச்சீட்டை வாங்கினார் ஒரு பெண்மணி. ஆனால் அவரோ, அந்தப் பெண்ணை மிகவும் வினயமாக முன்னால் செல்ல அனுமதித்தார். அந்தப் பெண் வாங்கிய சீட்டுக்கு ஒரு பரிசும் விழவில்லை. ஆனால் இவர் வாங்கிய சீட்டுக்கு பெரும் பரிசுத் தொகை கிடைத்தது. பரிசை வென்ற இந்த ஆண் யார் என்ற விவரம், அங்கு ஆள் கடத்தல்கள் நடக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பதால், ரகசியமாக வைக்கப்பட்…
-
- 3 replies
- 1.7k views
-
-
அண்மையில் ஒரு பொதுவேலைத்திட்டத்திற்காக சில தொழில் நடத்துநர்களை சந்திக்க சென்றோம். அதில் எனக்கு ஏற்பட்ட ஒரு மனக்கசப்பான அனுபவத்தை இங்கு பதிய விழைகின்றேன். ஒரு 30 வயது பையன். இரண்டு பெரிய தொழில் நிலையங்களுக்கு உரிமையாளர். அதில் ஒன்றை அவரும் இன்னொன்றை அவரது சகோதரரும் கவனிக்கின்றனர். நாங்கள் அவரைச்சந்திக்க தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திபோது அவர் அதற்கு பதிலளிக்கவில்லை. சில நாட்களில் நேரே சென்று சந்திப்பது என்று முடிவு செய்தோம். நாங்கள் 4 பேர் அவரது முதலாவது பாரிஸ் 1இல் உள்ள அவரது பாருக்கு சென்றபோது அவர் மற்ற கடையில் நிற்பதாக சொன்னார்கள். அங்கு சென்று சந்திக்கலாம் என்று சென்றோம். கால் வைக்க கூசும் அளவுக்கு அந்த நைற் கிளப் செய்யப்பட்டிருந்தது. அவர் இதை வடிவமைக்க அமெரிக்கா ச…
-
- 20 replies
- 2.1k views
-
-
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்டார் திருவள்ளுவர்.அந்த காலத்தில் எல்லாம் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக கடைப் பிடித்தார்கள்.ஆணோ,பெண்ணோ ஒழுக்கத்தை மீறினால் தகுந்த தண்டனை கொடுத்தார்கள்.சமுதாயத்தை விட்டு ஒதுக்கியும் வைத்தார்கள் ஆனால் அப்படி இருந்தும் அந்தக் காலத்திலும் தப்பு செய்தவர்கள் இருந்தார்கள்.ஆனால் இந்தக் காலத்தில் ஒழுக்கத்தை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்கள்? மாறாக இச் சமூகத்தில் அவர்கள் மிகவும் படித்தவர்களாகவோ அல்லது வசதியான பணக்காரர் ஆகவோ இருந்தால் அவர்கள் எந்த வகையிலும் ஒழுக்கத்தை மீறலாம் அது தப்பில்லை என்ட பின்னனியே புலம் பெயர் சமுதாயத்தில் காணப்படுகிறது. நான் கேள்விப் பட்ட சம்பவங்கள் பல அதில் ஒன்டு 50 வயதினை உடைய ஒர் பெண்…
-
- 41 replies
- 9.3k views
-
-
பெண்களுக்கு பிடிச்ச கணவனாக 25 டிப்ஸ். “பெண்கள் உண்மையிலேயே விரும்புவது என்ன?’ காலம், காலமாய் கேட்கப்பட்டு வரும் விடை தெரியாத கேள்வி இது. இந்த கேள்விக்கு பதில் தெரியாமல், “பெண்கள் ஒரு புதிர், அகம்பாவம் பிடித்தவர்கள்…’ என, ஆண்கள் எல்லாரும் பெண்களை ஒதுக்கித் தள்ளுகின்றனர். “அதெல்லாம் ஒன்றுமில்லை. பெண்கள் மிகவும் சாதாரண விஷயங்களைத்தான் விரும்பு கின்றனர். அதை ஆண்கள் நிறைவேற்றாமலோ அல்லது புறக்கணிப்பதாலோ தான் பெண்கள் மீது வெறுப்படைகின்றனர்!’ என்கிறார் பிரபல மனோ தத்துவ ஆராய்ச்சியாளர் பேகோ அன்டர்கில் என்பவர். அமெரிக்காவைச் சேர்ந்த இவர், “வெறும் 25 விஷயங்களை சரி செய்து விட்டால் போதும், பெண்கள் உற்சாகமாக இருப்பர்!’ என்கிறார். இதோ அந்த விஷயங்கள்: 1. கொழுப்பு குறைய வேண்டு…
-
- 6 replies
- 3.5k views
-
-
இலக்கு வேண்டும் அதற்கு உழைக்கவேண்டும்! ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள். அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம். இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்த…
-
- 8 replies
- 1.2k views
-
-
விளையாட்டும் வினையும்; காதலும் கலியாணமும் ரேச்சல் பிரைட்மன், இருபத்தி ஐந்து வயதான அமெரிக்க பெண். கல்லூரியில் படிப்பை முடித்து, காதலித்து கலியாணமும் செய்ய நிச்சயிக்க பட்டிருந்தது. வட அமெரிக்காவில் கலியாணத்துக்கு முன்னர் நடக்கும் ஒரு "செல்விக்கான களியாட்டம்" இவவுக்கும் நடந்தது. இவரின் தோழிகள் ஒரு நீச்சல் தடாகத்துடன் கூடிய களியாட்டத்தை ஒழுங்குபடுத்தினர். அதில் நடந்தது ஒரு அசம்பாவிதம். ரேச்சல் பிரைட்மன் அவர்களின் தோழி ஒருவர் அவரை விளையாட்டாக பின்னிருந்து நீச்சல் தடாகத்துள் தள்ளினார். தண்ணியுள் விழுந்த ரேச்சல் பிரைட்மன் உடனடியாக உணர்ந்தார் தனது உடலில் ஒரு பகுதி உணர்வற்று போய்விட்டதை. ஆம், தண்ணியுள் ஒரு தவறான விதத்தில் விழுந்ததால் அவரின் கழுத்து ஒரு வகையாக பாதிக்கப்பட…
-
- 0 replies
- 959 views
-
-
எமது உவமானங்களில் ஒன்றாக பூனை கண்ணை மூடினால் உலகம் இருன்டு விட்டதாக நினைப்தைப் போல என்றும் பூனை கண்ணை மூடிக்கொன்டு பாலைக் குடிப்பதைப் போல என்றும் கூறுவதுன்னடு.என்னுடைய சந்தேகம் என்னவென்றால் எந்தப்பூனையாவது யாருக்காவது சொன்னதா தாங்கள் கண்ணை மூடுவது இதுக்காகத்தான் என்று. ஊரில அனேகமாக அடுப்படியில காச்சி வைத்த பாலை களவாக பூனைக்ள் குடிப்பதுன்டு.அதை வைத்தும் மனிதன் தனது புத்தியையும் சேர்த்து இப்படி ஒரு மகா கன்டுபிடிப்பை உருவாக்கியதோடு அல்லாமல் அதை உவமானமாக வேற வகுத்துக்கொன்டான் என்று தான் எண்ணத்தோன்றுகிறது.இங்குள்ள வளர்ப்பு பூனைகளுக்கு பாலை வைத்தால் கூட கண்ணை மூடிக்கொன்டுதான் குடிக்குது.அப்ப ஏன்தான் பூனைகள் பால் குடிக்கும் போது கண்ணை மூடுகுதுகள் என்று அறியும் நோக்க…
-
- 18 replies
- 6.5k views
-
-
தமிழகத்து ஆன்ட்டிகளுக்கு தற்கொடை என்றால் அருகில் இருக்கும் இலங்கைத்தீவுதான் ஞாபகத்துக்கு வரும் என நினைக்கிறேன்..! இங்கு தற்கொலை குண்டுதாரிகள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு இவர்களின் பதில்களைப் பார்த்தால்...! நீங்களும் கண்டு களியுங்கள்..! பாகம் 1: பாகம் 2:
-
- 14 replies
- 1.3k views
-
-
ஆண்களுக்கு என்ன பிரச்னை? இன்று சர்வதேச ஆண்கள் தினம் . பதிவு செய்த நாள் : நவம்பர் 18,2010,23:13 IST கருத்துகள் (48) கருத்தை பதிவு செய்ய ஆண்கள்...20 -30-40: இருபது வயதில் - சிலிர்ப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடி... அதை அடிக்கடி கையால் "ஸ்டைலாக' கோதிக்கொண்டு, ரோட்டில் போகும் பெண்களை ஒரு "லுக்'... அடிக்கடி கண்ணாடி முன் நின்று, குடம், குடமாக பவுடரை கையில் கொட்டி, முகத்தில் அப்பி, அழகு பார்க்கும் பொறுமை... முப்பது வயதில் - பெயருக்கு தலையை சீவிக்கொண்டு, போனால் போகிறது என்று "தம்மாத்தூண்டு' பவுடரை முகத்தில் தடவிக்கொண்டு, அரைகுறையாய் கண்ணாடி பார்க்கும் அலுப்பு... நாற்பது வயதில் - "கீழே விழுந்து விடுவேன்' என மிரட்டும் முடியை, கஷ்டப்பட்டு இழுத்துப் பிடித்து, க…
-
- 2 replies
- 1.1k views
-
-
இன்று தாயகத்தில் எவ்வளவு விதவைப்பெண்கள் உள்ளார்கள்? இந்த பிரச்னைக்கு என்ன தீர்வு? இதை ஆராய்ந்தால், யதார்த்த ரீதியாக கருத்துறவாடினால் பயனாக இருக்கும். எனது தகவல் படி எண்பதினாயிரம் ஆண்கள் / பெண்கள் விதவைகள் உள்ளார்கள். இது ஒரு சமுதாய, சமூக மற்றும் கலாச்சார பிரச்சனை. இதை இலகுவில் தீர்க்க முடியாது. ஒரு பரந்த திட்டமும் திறந்த சமூக நல நோக்கும் தேவை. 1. பிள்ளைகள் உள்ள பல விதவைகள், அவர்களுக்காகவே வாழ எண்ணுகிறார்கள். அவர்களின் வாழ்வு ஊடாக வாழ விரும்புகின்ர்ரர்கள். அதை எவ்வாறு வளம்படுத்த நாம் உதவலாம்? 2. பிள்ளைகள் இல்லாத விதவைகளுக்கு எவ்வாறு மறுவாழ்வுக்கு உதவலாம்? 3. பொருளாதார ரீதியாக எவ்வாறு இவர்கள் வாழ்வை வளப்படுத்தலாம் ? 4. வெளிநாட்டில் உள்ளவ…
-
- 6 replies
- 1.4k views
-
-
தூக்கத்தில் குறட்டை விடுவதால் கணவனை விவாகரத்து செய்யும் மனைவி, ருசியாக சமைக்க தெரியாததால் மனைவியை விவாகரத்து செய்யும் கணவன் ஆகியோருக்கு மத்தியில், இளம்பிள்ளை வாதத்தால் இரண்டு கால்களையும் இழந்த மனைவி மற்றும் நடைபழகும் பச்சிளம் குழந்தை ஆகியோரை தூக்கி சுமந்தபடி வலம் வருகிறார் ஒரு வட மாநில வாலிபர். சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் நிஷாந்த். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் அங்கு கூலி வேலையை பார்த்து வந்தார். திருமணம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்த அவர் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை சந்தித்தார். பல எதிர்ப்புகளுக்கு இடையே நிஷாவை திருமணம் செய்து கொண்டார். மகள் பிறந்தாள். குடும்பம் வளர்ந்தது. தனி மனிதனாக இருந்தபோது சமாளித்த …
-
- 0 replies
- 682 views
-
-
http://www.youtube.com/watch?v=Nvdm7AGvOKU&feature=player_embedded
-
- 0 replies
- 833 views
-
-
யாராவது உங்களுக்கு தெரியாதவர்கள் அல்லது புதியவர்கள்(strangers) உங்களுக்கு உதவினார்களா? இச்சம்பவம் பல வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது.காலை 5 மணிக்கு வேலை.4.30 அளவில் புறப்பட்டு போகும் வழியில் நண்பர் ஒருவரையும் ஏற்றிக்கொண்டு தான் வேலைக்கு செல்வேன்.அன்று பொலிஸ் என்னை மறித்தார்.எங்கே இந்த நேரம் போகிறாய் எனக்கேட்டார்."வேலைக்கு என சொல்லி வேலை அடையாள அட்டையை (badge)காட்டினேன்.சரி வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை( Driving licence) எடு என்றார்.என்னிடம் இல்லை அனுமதி பத்திரம் மட்டுமே உண்டென்றும் கூறினேன்.அவர் சொன்னார் உன்னால் வாகனத்தை ஓட்ட முடியாதே இந்த பத்திரத்துடன்(permit) என்றார்.திடீரென காரின் உள்ளுக்குள் நோட்டமிட்டார்.பின்னுக்கு இருக்கும் பாக்கில்(school bag) என்ன என்றார்.பு…
-
- 3 replies
- 743 views
-
-
தாய்மை ..........குட்டிகாக் போராடும் குரங்கு [ attachment=1282:animals-protect-their-young-3.jpg] attachment=1284:animals-protect-their-young-5.jpg]
-
- 3 replies
- 847 views
-
-
குழந்தையும் தெய்வமும் ஒரு குட்டி குழந்தைக்கு, கடவுள் சொர்க்கத்துல மனிதர்களுக்கு ஆப்பிள் கொடுக்குற விஷயம் தெரியவருது. ஆப்பிள் வாங்கும் சந்தோஷத்துடன், சொர்க்கம் செல்கிறது. அங்கு, கடவுளிடம் ஆப்பிள் வாங்க, திருப்பதியில் லட்டு வாங்க நிற்பதை விட பெரிய க்யூ நிற்கிறது. குழந்தையும் வரிசையில் சேர்ந்து கொள்கிறது. நிற்கும்போது, குழந்தைக்கு ஒரே மகிழ்ச்சி. கடவுள் கையால் ஆப்பிள் வாங்க போகிறோமே? என்று. குழந்தை கடவுள் அருகே நெருங்கிவிட்டது. கடவுள் பழத்தை குழந்தையின் கையில் கொடுக்கும்போது, குழந்தையின் பிஞ்சு கரங்களில் அப்பெரும் பழம் நிலைகொள்ளாமல், கீழே மண்ணில் விழுந்து விட்டது. அச்சச்சோ! குழந்தைக்கு வருத்தம். அங்கு இருக்கும் விதிமுறைப்படி, அந்த பழம் வேண்டுமானால், திரும்பவு…
-
- 7 replies
- 1.5k views
-
-
. நீங்கள் எப்படி பொருட்கள் வாங்குவீர்கள்? நாம் விரும்பியோ, விரும்பாமலோ..... கடையில், உணவுப் பொருட்கள் வாங்க வேண்டிய தேவை உள்ளது. சிலர் தினமும் கடைக்கு செல்வததை விரும்புவார்கள். சிலர் ஒரு கிழமைக்கு தேவையானதை ஒரே முறையில் வாங்கிவிடுவார்கள். நாம் இரண்டாவது ரகம். வீட்டில் முடியும் பொருட்களை, ஒரு துண்டில் எழுதி வைத்துக் கொண்டு.... புதன் கிழமை, அல்லது வியாழக் கிழமைகளில் கடைக்குச் செல்வதுண்டு. திங்கள், வெள்ளி, சனிக்கிழமைகளில் கடையில் நீண்ட நேரம் மினக்கெட வேண்டும். அத்துடன் பலர் அன்று பொருட்கள் வாங்க வருவதால்.... ஆறுதலாக பொருட்களை வாங்குவது சிரமம். இடையில் அதி அவசரமாக வேண்டிய பொருட்கள் என்றால் தான்..... கடைக்கு, இரண்டாவது முறையாக செல்வதுண்டு. .
-
- 51 replies
- 6.4k views
-
-
அது ஒரு உணவகம்.அங்கு ஒரு 25 வயதுடைய சகஜமாக பழகும் பரிமாறும் பெண்.அங்கு மாலை நேரங்களில் வழமையாக வாடிக்கையாளர்கள் வருவது மிகவும் குறைவு. இந்த நேரங்களில் வழமையாக வரும் ஒரு 64 வயதுடைய ஆண் வாடிக்கையாளர் ஒருவர் ஆரம்பத்தில் சாதாரனமாக கதைத்த அவர் காலப்போக்கில் விரசமாக கதைக்க தொடங்கினார். ஆரம்பத்தில் நல்ல முறையில் பழகி பின் இப்படி மாறியதால் அந்தப்பெண் எப்படி அவரை கையாள்வாள் என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்க அப்டி அவர் கதைத்த கதையில் ஒன்றுதான் என்னை இதை எழுத தூன்டியது.அது என்னவென்றால் உனது பின் அழகை பார்ப்பதால் ஏற்படும் தாக்கத்தால் நான் நாரி நோவால் அவஸ்த்தைப்படுகிறேன் என்றும் அதனால் உன் மீது நான் வழக்கு தொடுக்கப்போவதாகவும் சொன்னார்.இதுவும் ஒரு விரசக்கதையின் அங்கம் தான் என்றாலும்…
-
- 11 replies
- 1.8k views
-
-
நீங்கள் விரும்பிக் குடிக்கும் பானம் எது?...தேநீரா,கோப்பியா,பாலா,குளிர்பானமா அல்லது மதுவா?...காலையில் எழும்பியவுடன் எனக்கு கோப்பி குடிக்கா விட்டால் அதுவும் ஊர் கோப்பி குடிக்கா விட்டால் எனக்கு பொழுது விடியாது[விரத நாட்களில் காலையில் நான் கோப்பி குடிக்காமல் இருப்பதற்காகவாவது கடவுள் எனக்கு வரம் தர வேண்டும்.] பின்னேரங்களில் பெரிதாக தேநீர் குடிப்பதில்லை கடுமையான குளிர் என்டால் மாத்திரம் வெறும் தேநீர்[பிளேன்]குடிப்பதுண்டு ஆனால் இரவு படுக்கு முன் பச்சை தேநீர் குடிப்பேன்கீரின்]அது குடித்தால் சாப்பாடு கெதியாக சமிபாடு அடைந்த மாதிரி இருக்கும். வெயில் காலம் என்டால் குளிர்பானம் குடிப்பேன்...எனக்கு பிடித்தது லெமனேட்[தேசிக்காயும் உடம்புக்கு நல்லதாமே!] முந்தி எனக்கு கோக் குடிக்க …
-
- 62 replies
- 6k views
-
-
மோகன் நன்றாகப் படிக்கிற பையன். வகுப்பில் எப்போதும் முதலாவது. அவனை நினைத்து ஆசிரியர்களுக்கெல்லாம் கூட மிகவும் பெருமை. அந்த மோகனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் விக்னேஷ். இவனும் நன்கு படிக்கிறவன்தான். ஆனால் முதல் மார்க்கெல்லாம் எடுக்கமுடியாது. வகுப்பில் ‘முதல்’ 5 மாணவர்களில் ஒருவனாக வருவான். அவ்வளவுதான். இதனால் விக்னேஷின் பெற்றோர் அவனை எப்போதும் மட்டம் தட்டிப் பேசினார்கள். ‘உங்க அண்ணனைப் பாரு. அவனையும் உன்னைமாதிரிதானே வளர்த்தோம்? எப்பொழுதும் வகுப்பில் முதலாவதாக வகுப்பில் வருகின்றான்! கீழே இறங்கியிருக்கானா? அவனைப் பார்த்துமா உனக்குப் புத்தி வரவில்லை?’ இப்படி அரிவரியில் தொடங்கிக் கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை மோகனுடம் ஒப்பிடப்பட்ட விக்னேஷுக்குத் தன் பெற்றோர், …
-
- 2 replies
- 915 views
-
-
இது பெரிய தொல்லையா இருக்கு. நான் எனது இடது 4ம் விரலில் மோதிரம் அணிந்திருப்பதால்.. பல பிகருகள்.. சாரி மக்கள் கேட்கிறார்கள்.. திருமணம் செய்திட்டீங்களோ என்று. நான் பிறந்த காலத்தில் இருந்து அதில (இவன் வீணாப் போனவனால ரெம்ப தொல்லையா இருக்கு.. அதில என்றால் இடது 4ம் விரலில்..!) தான் மோதிரம் போட்டுக் கொண்டு வாறன். இந்தக் கேள்விகளால் பயந்து போய் போற வாற இடமெல்லாம்.. ஆக்களின்ர கையில எங்க மோதிரம் கிடக்கு என்று ஆராய்ச்சி செய்து வந்ததில்.. வெள்ளைகளில் குறிப்பாக திருமணமான ஆண்கள் சிலர் இடது 4ம் வரலில் மோதிரம் அணிந்திருப்பதோடு வேறு சிலர் மாறியும் அணிந்திருக்கின்றனர். அதேவேளை சில பெண்கள் வலது 4ம் விரலில் அணிகின்றனர். சிலர் இடது 4ம் விரலில் போட்டிருக்கின்றனர். …
-
- 33 replies
- 16.9k views
-
-
ஓப்பன் பண்ணா... "எக்ஸ்கியூஸ்மி சார், உள்ளே வரலாமா?" "யெஸ்!" "குட் மார்னிங் சார். என் பெயர் ஜீவா!" "உட்காருங்க!" "தேங்க் யூ சார்!" "ம்... உங்களைப்பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க..." "நான்..." கட்... கட்... கட்! நண்பர்களே... நேர்முகத் தேர்வு இப்படித்தான் இருக்கும். கேட்ட கேள்விக்கு ஜாலியாகப் பதில் சொல்லிவிட்டு வேலை வாங்கி விடலாம் என்று நினைத்தால்... ஸாரி! உலகம் உங்களை அத்தனை சுலபமாக ஏற்றுக் கொள்ளாது. இப்போது அதே ஜீவா. வேறு கம்பெனி. "எக்ஸ்கியூஸ்மி சார்... உள்ளே வரலாமா?" "யார் நீ... இங்கே எதற்காக வந்தாய்?" "சார்... இன்டர்வியூ..." "என்ன இன்டர்வியூ... எதற்காக உனக்கு வேலை கொடுக்க வேண்டும்?" "சார்... அது…
-
- 9 replies
- 3.5k views
-
-
சகிப்புத்தன்மை என்பது என்ன..? அது ஏன் நமக்கு தேவையாக இருக்கிறது . வாழ்க்கையில் மனிதனுக்கு மிகவும் வேண்டிய ஒரு குணம், சகிப்புத் தன்மை. அது ஒன்றும் மட்டும் இல்லாவிட்டால், நீங்கள் போட்டியிருக்கும், கால் சட்டையின் நிறம் எனக்குப் பிடிக்கவில்லை என்று உங்களை நான் அடிக்க நேரிடும். இதை ஒரு உதாரணத்திற்குச் சொல்கிறேன். ஆனால் சகிப்புத்தன்மை அற்றவர்களின் செயல்பாடுகள் இதனன ஒத்தே இருக்கும். சகிப்புத் தன்மை ஏன் அவசியமாகிறது என்பதை முதலில் நாம் பார்ப்போம். நாம் வாழும் உலகம் நமக்காக படைக்கப்பட்டது அல்ல. படைக்கப்பட்ட உலகத்திலே நாம் வாழுகிறோம். அதனாலெ, தான் நமக்குப் பிடிக்காத சில விசயங்களும், நிகழ்வுகள் அவ்வப்போது நடந்தே வருகின்றது. அப்படி கூடி வாழும் ஒரு சமுதாயத்தில், உரிமைகளை கட்…
-
- 2 replies
- 15.5k views
-
-
எனது மகள் அடுத்த வருடம் (2011) தனது உயர்தரக் கல்வியை முடித்து விட்டு மருத்துவத் துறையில் மேற்படிப்பைத் தொடர விரும்புகிறார். முக்கியமாக ஆங்கில மூலம் பிரித்தானியாவில் தனது மேற்படிப்பைத் தொடர விரும்புகிறார். தற்போது ஜேர்மன் மொழியில் படித்தாலும் ஆங்கில மொழிப் பிரச்சனை அவருக்கு இல்லை பிரித்தானியாவில் எந்த மருத்துவக்கல்லூரியில் இலகுவாக இடம் கிடைக்கும்? எந்த மருத்துவக்கல்லூரி சிறந்தது ? ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவிற்கு மருத்துவம் படிக்க வருபவர்களுக்கான நடைமுறைகள் என்ன? எப்படியான மதிப்பெண்களை எதிர்பார்க்கின்றார்கள்? பிரத்தியேகமாகப் பணம் அறவிடுகின்றார்களா? போக்குவரத்துப் பிரச்சனைகள் தங்குமிட வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றையும் கருத்திற் கொ…
-
- 12 replies
- 2.9k views
-