Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில், 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம், பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிதலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின் வட பகுதியில் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள நல்ல பாம்பு விஷம், பூடான் நாடு வழியாக, அவ்வப்போது சீனாவுக்கு கடத்தப்படுகிறது. சர்வதேச சந்தையில் கிராக்கி பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை, மருந்துகள் தயாரிக்க, சீனாவில் பயன்படுத்துகின்றனர். இதனால், பாம்பு விஷத்துக்கு, சர்வதேச சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், நல்ல பாம்பு விஷத்தை கடத்தி, சட்டவிரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். 200 கோடி மதிப்புள்ள…

  2. பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.2000 கோடியில் பிரத்யேக விமானம் வாங்க பாதுகாப்பு துறை முடிவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபரின் விமானத்துக்கு இணையான வசதிகளைக் கொண்ட புதிய விமானம் வாங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பிரதமர் மோடி, ஏர் இந்தியா 747 - 400 மாடல் விமா‌னத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். புதிதாக நவீன வசதிகள் மற்றும் அதிக பாதுகாப்புடன் கூடிய போயிங் 777 - 300 ரக விமானத்தை வாங்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இதற்கான இறுதி முடிவை வருகிற 25-ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர் தலைமையில் நடைபெற உள்ள பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதலுக்கான குழு எடுக்க உள்ளது. பிரதமரின் புதிய…

    • 7 replies
    • 846 views
  3. ரூ.2000 நோட்டில் எழுத்துப் பிழை: சிரிப்பாய் சிரிக்கும் ட்விட்டர் சென்னை: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2000 ரூபாய் நோட்டில் எழுத்துப் பிழை இருப்பதை கண்டுபிடித்து மக்கள் அதை ட்விட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள். கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் 2000 ஆயிரம் ரூபாய் நோட்டில் எழுத்துப்பிழை உள்ளதை மக்கள் கண்டுபிடித்துள்ளனர். பிழை புதிய 2000 ரூபாய் நோட்டில் எழுத்துப் பிழை. இந்தியில் தோன் ஹஜார் ருபியா என்று உள்ளது. உருது மொழியிலும் பிழை உள்ளது என்று கேள்விப்பட்டேன். இந்தி 2000 ரூபாய் நோட்டில் இந்தி மொழியில் எழுத்துப் பிழை.…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றியைத் தொடர்ந்து மஸ்க்கின் அந்தஸ்தும் செல்வமும் இன்னும் உயரும் என்று தெரிகிறது எழுதியவர், நடாலி ஷெர்மன் மற்றும் டியர்பெயில் ஜோர்டான் பதவி, பிபிசி வணிக நிருபர்கள் ஈலோன் மஸ்க் குறித்து தினமும் ஏதேனும் ஒரு தலைப்புச் செய்தி வருவது என்பது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. எக்ஸ் எனும் சமூக ஊடகத் தளம் (முன்னர் ட்விட்டர்), டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர், உலகின் நம்பர் 1 பணக்காரர். தனது சமூக ஊடகத் தளத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, பல தரப்பட்ட தலைப்புகளில் தனக்கு இருக்கும் கருத்துகளை உலகிற்கு தெரியப்படுத்துபவர். …

  5. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் ரூ.2700க்கு ஆண் குழந்தையை விற்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. சம்சூல் என்ற இந்த ஆண் குழந்தை பிறந்து 3 மாதம் தான் ஆகிறது. தாய் குழந்தையை தவிக்க விட்டு ஓடிப் போய் விட்டாள். தந்தைக்கோ காது கேட்காது, வாய் பேச முடியாத ஊமை. இதனால் குழந்தை பாட்டி ஷாஜகான் கடுன் வசம் இருந்தது. அதை அவளால் வளர்க்க முடியாததால் ரூ.2700க்கு விற்றாள். அந்த குழந்தையை நஸ்மா கதூர் என்ற பிச்சைக்காரி விலை கொடுத்து வாங்கி இருக்கிறாள். நஸ்மா ஏற்கனவே பல குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் தொழில் செய்து வருகிறாள். தற்போது இந்த குழந்தையும் அவள் பிச்சை எடுக்கவே வாங்கியிருப்பதாக அக்கம் பக்கம் இருப்பவர்கள் கூறினார்கள். இதை நஸ்மா மறுத்தாள். மற்ற குழந்தைகள் போல் அல்லாமல் இந்த க…

    • 5 replies
    • 2.2k views
  6. கொல்கத்தா: 'நிருபேந்திர நாராயண சென் மகனாகிய நான்...' என்று துவங்கும் ஒரு கடிதம் - கொல்கத்தா நிஜாம் பேலஸில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு எழுதப்பட்டுள்ளது. 'சுதிப்தோ சென்' என்ற சர்ச்சைக்குரிய மனிதர் எழுதியதாகக் கூறப்படும் இந்தக் கடிதம், 'அரசியல்வாதிகளாலும், அவர்களைச் சார்ந்த சில பிரபலங்களாலும் நான் பயங்கரமாக மிரட்டப்பட்டேன். அதனால் அடுக்கடுக்காக பல மோசடிகளில் இறங்கினேன். மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் டுபாகூர் பிசினஸ்களை ஆரம்பித்தேன். மக்களின் பணத்தை இந்த டுபாகூர் கம்பெனிகளின் பெயரால் திரட்டினோம். தற்போது என்னை மட்டுமே சட்டம் குறி வைக்கும் நிலையில்... எந்த நேரமும் நான் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் உள்ளதால், இந்தக் கடிதத்தையே எனது மனப்பூர்வமான வ…

  7. ரூ.30,000 கோடி செலவில் ஒபாமாவின் வேலை வாய்ப்பு திட்டம்! வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரும் ரூ.30 ஆயிரம் கோடி செலவிலான திட்டத்தை அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமா இறுதி செய்துள்ளார். அமெரிக்க பொருளாதாரம் மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடன் தர வரிசையில் சறுக்கல், வேலையின்மை, பொருளாதார பின்னடைவு, சர்வதேச அரசியலில் ஆளுமை குறைந்தது போன்றவற்றால் அமெரிக்க மக்கள் ஒபாமாவின் தலைமை மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் இப்போது 9 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என்று ஒபாமா மிகுந்த பிரயத்தனம் செய்துவருகிறார். அப்படி குறைத்தால் மட்டுமே அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் நடக்க இருக்கும் அதிபர் தேர்தலில் தா…

    • 4 replies
    • 656 views
  8. நியூயார்க் இரட்டைக் கோபுர தகர்ப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 600 கோடி அமெரிக்க டாலர்கள் இழப்பீடாக வழங்க வேண்டும் என ஈரான் மற்றும் அல் காய்தா, தலிபான் உள்ளிட்ட அமைப்புகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியூயார்க் நகரில் இரட்டைக் கோபுர தாக்குதலில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாதிப்புக்குள்ளானவர்களில் 47 பேரின் குடும்பத்தினர், இழப்பீடு கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஜார்ஜ் டேனியல்ஸ் புதன்கிழமை தீர்ப்பு வழங்கினார். இதில், ஈரான் மற்றும் தலிபான், அல் காய்தா, லெபானன் பயங்கரவாத அமைப்பான ஹிஸ்புல்லா ஆகியவை, இரட்டைக் கோபுர தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு 600 கோடி அமெரிக்க டாலர்கள் (…

  9. ஜனதா கட்சியின் தேசியத் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, அடுத்த ஏழு வாரங்களுக்கு கௌரவப் பேராசிரியராக அவதாரம் எடுக்கப்போகிறார். (அப்பாடா! ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கியவர்கள் பெருமூச்சு​விடலாம்!) ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறையில், சம்மர் கோர்ஸ் நடத்துவதற்காக சுவாமி செல்வது வழக்கம். அதற்காக, கடந்த புதன்கிழமை கிளம்பியவரை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தோம். ''2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகப்போகிறதே? அதில் இடம் பெறப்போகும் வி.ஐ.பி-க்கள் பட்டியல் பற்றி சொல்லுங்​களேன்?'' ''இந்தக் கேள்விக்கு என்னுடைய '2ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்காம்' புத்தகத்தில் விரிவாகப் பதில் எழுதி இருக்கிறேன். அதிகாரத்தில் உள்ள…

    • 0 replies
    • 802 views
  10. லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 10 கோடி டாலர், (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.540 கோடி) செலவில் கட்டப்பட்ட பிரமாண்டமான சுவாமி நாராயணா கோயில் தற்போது பக்தர்களின் வழிபாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. புருஷோத்தம சுவாமிநாராயண சன்ஸ்தா அமைப்பு சார்பாக உலகம் முழுவதும் பல இடங்களில் இதுவரை 67 கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. அதன் 68-ஆவது சுவாமிநாராயணா கோயில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் உள்ள ஹாலிவுட் நகரத்துக்கு அருகே பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி பக்தர்களின் வழிப்பாட்டிற்காக கோயில் திறக்கப்பட்டது. இருபது ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில் ஐந்து கோபுரங்களால் சூழப்பட்டு இரண்டு பெரிய குவி மாடங்கள், நான்கு மே…

  11. ரூ.8.46 கோடி லஞ்ச குற்றச்சாட்டில் ஐ.நா. பொதுச்சபை முன்னாள் தலைவர் கைது: பொதுச் செயலாளர் பான் கி-மூன் அதிர்ச்சி ஜான் ஆஷ். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷ் லஞ்ச குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷ் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். சீன தொழிலதிபர் ஒருவரிடமிருந்து 13 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ8.46 கோடி) லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 2013 செப்டம்பரிலிருந்து 2014 வரை ஐ.நா. பொதுச் சபை தலைவராக ஜான் ஆஷ் பதவி வகித்தார். அதற்கு முன்னதாக ஆன்டிகுவா மற்றும் பார்படாவின் ஐ.நா.வுக்கான…

  12. எர்ணாகுளம் அருகே பள்ளிவாசலில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த முதியவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் மற்றும் தபால் அலுவலகத்தில் ரூ.13 லட்சம் டெபாசிட் செய்ததற்கான பாஸ் புத்தகம் கைப்பற்றப்பட்டது. எர்ணாகுளம் அருகே மாவூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் பகுதியில் 70 வயதான முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். நேற்று இந்த பள்ளி வாசல் அருகே உள்ள குற்றிக்காட்டூர் ஜூம்மா பள்ளி வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். காலில் புண்கள் இருந்ததால் பிச்சைக்கார முதியவர் ஊன்றுகோல் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் நேற்று பள்ளிவாசலுக்கு வந்தவர்களிடம் பிச்சைக்கார முதியவர் தனது பெயர் அப்துல் அலி என்றும் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு என்றும் கூறியுள்ளார். பெரும்பாவூரில் உள்ள பள்ளிவாசலுக்கு…

    • 2 replies
    • 2.2k views
  13. டெல்லி: ரஷ்யாவிடமிருந்து 10,000 இன்வார் ஏவுகணைகளை வாங்கவும், 200க்கும் மேற்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சானிக் க்ரூஸ் ஏவுகணைகளை வாங்கவும் ரூ. 8000 கோடி நிதியை அனுமதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அனுமதியை மத்திய அரசின் பாதுகாப்புத்துறைக்கான அமைச்ரவைக் குழு வழங்கியுள்ளது. இன்வார் ஏவுகணைகள் ராணுவத்தின் டி 90 ரக டாங்குகளில் பொருத்தப்படக் கூடியவை ஆகும். பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்திய விமானப்படையின் போர் விமானங்களில் பொருத்தப்படக் கூடியவை. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதியை வழங்கி முடிவெடுக்கப்பட்டது. விமானப்படையின் பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு மட்டும் ரூ. 6000 கோடி செலவிடப்படவுள்ளது. மீதமுள்ள தொகை இன்வார் ஏவுகணைகளை வாங்க …

  14. ரூ1880 கோடிக்கு, வைத்தியம் பார்த்த சோனியா! யார் பணம் கட்டுனது?: வரிந்து கட்டும் மோடி, சு.சாமி. டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அமெரிக்காவில் மேற்கொண்ட மருத்துவ சிகிச்சைக்காக ரூ.1,880 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் கூறியுள்ளனர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மத்திய அரசு தேவையில்லாத செலவுகளை செய்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் சோனியா காந்தியின் அமெரிக்க சிகிச்சைக்காக ரூ1880 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது என்றார். இதைப் பிடித்துக் கொண்ட சுப்பிரமணிய சாமி சமூக வலைதளமான ட்விட்டரில். சோனியா காந்தியின் அமெரிக்க மருத்துவ சிகிச்சைக்கு ரூ1880 …

  15. ரூபாண்டா-காங்கோ நாடுகளில் கடும் நிலநடுக்கம்: 39 பேர் பலி திங்கள்கிழமை, பிப்ரவரி 4, 2008 கிகாலி: ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா மற்றும் காங்கோ நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆப்பிரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள காங்கோவில் நேற்று காலை 9.35 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 34 பேர் உயிரிழந்தனர். இதில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். காங்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் நடந்த அடுத்த மூன்றரை மணி ந…

  16. ரூபாய் ஒரு லட்சத்துக்கு கார் ரெடி! *அறிமுகம் செய்தது டாடா புதுடில்லி :உலகளவில் மிக விலை குறைந்த காரை, டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, டில்லியில் நேற்று அறிமுகப்படுத்தினார்; ரூ. ஒரு லட்சம் விலையுள்ள. புதிய காருக்கு டாடா நானோ என பெயரிடப்பட்டுள்ளது.டில்லி பிரகதி மைதானத்தில் நடக்கும் 9வது வாகன கண்காட்சியில் ரூ. ஒரு லட்சம் காரை ரத்தன் டாடாவே ஓட்டி வந்து அறிமுகப்படுத்தினார். காரின் கதவை திறந்து அவர் வெளியே வந்ததும், ஏராளமான போட்டோகிராபர்கள் படங்களை எடுத்துத் தள்ளினர். கண்காட்சியில் பங்கேற்றவர்கள் பலத்த கரகோஷத்துடன் ரத்தன் டாடாவை வரவேற்றனர். மஞ்சள், சிவப்பு, சில்வர் என மூன்று வண்ணங்களில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டாண்டர்டு மற்றும் 2 டீலக்ஸ் ரகங்களில் இவ்வகை…

    • 16 replies
    • 3k views
  17. ரூபாய் நோட்டு அறிவிப்பால் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நிதி சார்ந்த அணுகுண்டு சோதனை (பைனான்ஸியல் பொக்ரான்) போன்றது. இதனால், இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என்று பிரபல பொருளாதார நிபுணரும் ஆர்எஸ்எஸ் பிரமுகருமான குருமூர்த்தி தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் சார்பு பொருளாதார அமைப்பான சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளராக குருமூர்த்தி உள்ளார். தில்லியில் அவர் இது தொடர்பாக கூறியதாவது: மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஆட்சியில் நமது நாட்டின் பொருளாதாரத்தில் தேவைக்கு அதிகமான பணம் புழக்கத்தில் இருந்து வந்தது. இதனால்தான் மனை…

  18. புதுடெல்லி, ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்துக்கு பதிலாக வேறு தலைவரின் படத்தையும் வைக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி குழு தெரிவித்துள்ளது. வருங்காலங்களில் அச்சடிக்கப்பட வேண்டிய ரூபாய் நோட்டுகளின் மாதிரியை உருவாக்க, மத்திய அரசின் அறிவுரைப்படி குழு ஒன்றை ரிசர்வ் வங்கி அமைத்தது. கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அமைக்கப்பட்ட இந்த குழு, ரூபாய் நோட்டில் உள்ள மகாத்மா காந்தி படம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி எழுத்து மூலம் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், மகாத்மா காந்தியின் படத்துக்கு பதிலாக வேறு எந்த ஒரு தலைவரின் படத்தையும் ரூபாய் நோட்டுகளில் வைக்கக்கூடாது என ரிச…

  19. தி.மு.க தமிழக வாக்காளர்களின் வாக்குகளை ரூபாய் நோட்டுக்கள் மூலம் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக ஜெயா தொலைக்காட்சியில் கூறப்பட்டது. இதுசம்மந்தமாக வலைத்தளத்தில் வந்த செய்திகள்: வங்கியில்சில்லறை மாற்றம் வைகோ சந்தேகம்: சென்னை:தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது. நியாயமாக சுதந்திரமாக தேர்தல் நடப்பதற்கு தேர்தல் கமிஷன் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியைக் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: விருதுநகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் கடந்த 5, 6 மற்றும் 7ம் தேத…

  20. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி.. நாடாளுமன்றத்தில் பிரதமர் இன்று விளக்கம்! டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்து வரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிக்க இருக்கிறார். ராஜ்யசபாவில் நேற்று ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்தும் பொருளாதார நெருக்கடி குறித்தும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அப்போது சபையில் இருந்த பிரதமர் மன்மோகன்சிங், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதுபோன்ற …

  21. ரூபாய் வீழ்ச்சி: வல்லரசுக் கனவுக்குச் சங்கு! பாதாளத்தை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது ரூபாயின் மதிப்பு. வளர்ச்சி, வல்லரசு என்ற வெற்று ஜம்பங்களையும், முறுக்கேற்றிவிடப்பட்ட முட்டாள்தனங்களையும் நிலை தடுமாற வைத்திருக்கிறது இந்த வீழ்ச்சி. டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு கடந்த 7 மாதங்களில் மட்டுமே 25% வீழ்ச்சியடைந்து, 56க்கும் 57க்கும் இடையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கிரீஸின் நிலைகுலைவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நெருக்கடியும்தான் ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணமென்றும், ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி ஜப்பானும் நெருக்கடியிலிருந்து மீண்டு முன்னேறினால்தான், இந்தியாவும் மீளமுடியும் என்றும் கூறியிருக்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. இந்தியாவின் எதிர்…

    • 3 replies
    • 1k views
  22. டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ 70-க்கு வீழ்ச்சியடைந்தற்கான உடனடி காரணம் துருக்கி நாணயமான லிராவின் மதிப்பு 45% வீழ்ச்சியடைந்தது என்று படித்திருப்பீர்கள். துருக்கி லிரா ஏன் வீழ்ச்சியடைந்தது என்று பார்க்கலாம். துருக்கி என்ற நாடு, அந்த நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமை இவற்றை நமது நாட்டோடு ஒப்பிட்டால்தான் இதை புரிந்து கொள்ள முடியும். துருக்கியின் மக்கள் தொகை சுமார் 8 கோடி (இந்தியாவின் பெரிய மாநிலங்களுடன் ஒப்பிடக் கூடியது), இந்திய மக்கள் தொகையில் 15-இல் ஒரு பங்கு. மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3-இல் ஒரு பங்கு. எனவே, ஒரு நபருக்கான ஆண்டு வருமானம் ($11,114) இந்தியாவை ($2,134) விட 5 மடங்கு அதிகம். இரண்டு நாடுகளுமே …

  23. ரெம்டிசிவிர் என்கிற மருந்தை உட்கொண்ட கொரோனா நோயாளிகள் விரைந்து குணமடைந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் கிலீட் சயின்சஸ் என்கிற நிறுவனம் தயாரித்த ரெம்டிசிவிர் என்கிற மருந்தைத் தீவிர சுவாசக் கோளாறு இருந்த கொரோனா நோயாளிகளுக்குக் கொடுத்து சோதனை நடத்தியுள்ளனர். இந்த மருந்தை உட்கொண்ட நோயாளிகளில் இருவரைத் தவிர அனைவரும் ஒருவாரத்துக்குள் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இருவர் மட்டும் நோயின் தீவிரத்தால் உயிரிழந்ததாக மருத்துவர் கேத்லீன் முல்லன் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார். தேசிய நலவாழ்வு மையம் ரெம்டிசிவிர் உட்படப் பல்வேறு மருந்துகளை நோயாளிகளுக்குக் கொடுத்துப் பரிசோதித்து வருவதாகவும…

    • 1 reply
    • 388 views
  24. சென்னை ,ஜனவரி 25 . ரயில் நிலையங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,” தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள்,பிளாட்பாரங்கள் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் தகுந்த நடவடிக்கைகள் எடுக்க முன்வந்து உள்ளது. இதன் காரணமாக ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவது,குளிப்பது,சிறுநீர் கழித்தல்,துணி துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ரயில்வே சட்டபிரிவுபடி ரூ.500 அபராதம் விதிக்கப்படும். ரயில்களில் போஸ்டர் ஒட்டுதல் மற்றும் சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களுக்கும் இந்த சட்டம் ப…

  25. பீகாரில் ஓடும் ரெயில் மீது பாலம் இடிந்து விழுந்து விபத்து: 47 பேர் பலி பகல்பூர், டிச.3-:ஓடும் ரெயில் மீது மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 37 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். 55 பேர் படுகாயம் அடைந்தனர். பீகார் மாநிலம் பகல்பூர் ரெயில் நிலையத்தில், நேற்று காலை இந்த கோர விபத்து நடந்துள்ளது. கிழக்கு ரெயில்வே பிரிவில் அமைந்துள்ள அந்த ரெயில் நிலையத்தின் நடைபாதை மேம்பாலம், பழுதடைந்து இருந்தது. 140 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த பாலம், படிப்படியாக இடிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதி இடிக்கப்படாமல் இருந்தது. அதிவேக ரெயில்கள் அந்த வழியாக சென்று வந்ததால், அதிர்வு காரணமாக அது இடிந்து விழும் நிலையில் இருந்திருக்கிறது. இந்த நிலையி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.