உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26625 topics in this forum
-
விமான விபத்துக்களினால் 2018-இல் உயிரிழப்பு அதிகரிப்பு உலகளாவிய ரீதியில் விமான விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வெறும் 44 பேர் மாத்திரமே உயிரிழந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு 556 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விமான விபத்துகள், விமான கடத்தல்கள் போன்ற தரவுகளை பேணிவரும் விமான பாதுகாப்பு வலையமைப்பின் அறிக்கையொன்றிலேயே இவ்விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் இந்தோனோசியாவில் விபத்திற்குள்ளான லயன் எயர் விமான விபத்தே மிக மோசமான பயணிகள் விமான விபத்தாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்விபத்தில் 189 பேர் உயிரிழந்தனர். அந்தவகையில், மிகவும் பாதுகாப்பா…
-
- 0 replies
- 381 views
-
-
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலிருந்து சென்ற விமானத்தில் 'பாதுகாப்பு உசார்நிலை' ஏற்படக் காரணமான பயணி ஒருவரை இந்தோனேசியாவின் பாலித் தீவு காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். முன்னதாக, விமானம் கடத்தப்பட்டுள்ளதாக இந்தோனேசிய இராணுவத்தினர் தகவல் வெளியிடவும் இந்தப் பயணியே காரணமாகியுள்ளார். குறித்த பயணி மதுபோதையில் இருந்ததாகவும் விமானிகளின் காக்பிட்- கட்டுப்பாட்டு அறையின் கதவை ஓங்கித் தட்டியதாகவும் அதன்பின்னர் அந்தப் பயணி மடக்கிப் பிடிக்கப்பட்டதாகவும் வர்ஜின் விமானசேவையின் பேச்சாளர் ஒருவர் கூறினார். இந்தத் தகவல் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டமையே விமானம் கடத்தப்பட்டதாக முன்னதாக செய்திகள் வரக்காரணம் என்றும் அவர் தெரிவித்தார். விமானம் பாலியில் தரையிறங்கியபோது, விமானத்தை தமது கட்டுப…
-
- 1 reply
- 261 views
-
-
விமானக் கொந்தளிப்பில் பயணிகளும் விமானப் பணியாளர்களும் காயமடைவு இலண்டனிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த மலேஷியா எயார்லைன்ஸ் விமானமொன்றில் ஏற்பட்ட விபத்தில், எண்ணிக்கை வெளிப்படுத்தப்படாத பயணிகளும் பணியாளர்களும் காயமடைந்ததாக, அந்நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. MH370, MH14 என இரண்டு விமானங்கள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அதிலிருந்து இன்னமும் வெளிவரத் தடுமாறிவருகிறது. இந்நிலையிலேயே, இந்த விபத்துச் சம்பந்தமான விவரங்கள், அந்த நிறுவனத்துக்கு மேலதிக பாதிப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலுக்கு மேலால் பறந்துகொண்டிருந்த போதே, விமானத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதன்போது, சில பயணிகளும் பணியாளர்களும் …
-
- 1 reply
- 476 views
-
-
விமானங்களில் முகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு ஓராண்டுக்கு பயணம் செய்ய தடை: வெஸ்ட் ஜெட் விமானங்களில் முகக்கவசங்களை அணிய மறுக்கும் பயணிகளுக்கு எதிராக, அடுத்த வாரம் முதல் ‘வெஸ்ட் ஜெட்’ கடுமையான புதிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. செப்டம்பர் 1ஆம் முதல் இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன. விமானத்தில் பயணிப்பவர்கள், ஆரம்பம் முதலே முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் எனவும், பயணி முகக்கவசம் அணிய மறுத்துவிட்டால், விமானம் திரும்பி அதன் தொடக்க நிலைக்குத் திரும்பும் என வெஸ்ட்ஜெட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எட் சிம்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெஸ்ட்ஜெட் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான எட் சிம்ஸ் கூறுகையில், “பயணிகள் முதலில் விமான ஊழியர் குழு…
-
- 0 replies
- 365 views
-
-
விமானங்களில் லேப்டாப் எடுத்துவர தடை - அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டன் அரசு முடிவு 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டன் வரும் போது விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்து பிரிட்டன் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. லண்டன்: 6 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பிரிட்டன் வரும் போது விமானத்தில் லேப்டாப், டேப்லட் உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் எடுத்து வர தடை விதித்து பிரிட்டன் அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. எகிப்து, கத்தார் உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து லேப்டாப், கேமரா மற்றும் ஐ-பேடுகளை விமானத்தில் எடுத்து வருவதற்கு அமெரிக்க அரசு இன்ற…
-
- 0 replies
- 399 views
-
-
செயற்கைக்கோள் உதவியுடன் விமானத்தின் பாதையும் இடத்தையும் அறிய முடியும் உலகிலுள்ள அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் அடிப்படையான ஒரு பாதை அறிவிப்பு சேவையை இலவசமாக வழங்க பிரிட்டனின் செயற்கைக்கோள் வலயமைப்பு நிறுவனமான இன்மர்சாட் முன்வந்துள்ளது. மலேசிய விமானம் MH370 கடந்த மார்ச் எட்டாம் தேதி சுவடே இல்லாமல் காணாமல்போனதை அடுத்து இன்மர்சாட் இந்த சேவையை வழங்க முன்வந்துள்ளது. இந்நிலையில் பறக்கும் விமானங்கள் இருக்கும் இடம் பற்றி துல்லியமாக தகவல் வழங்கக்கூடிய இலவச சேவை ஒன்றை வழங்க இன்மர்சாட் முன்வந்துள்ளது.மலேசிய விமானத்தில் இருந்த இன்மர்சாட் கருவியில் இருந்து சற்று நேரம் வந்த மின் அலை ஒலிச் சமிக்ஞைகளைக் கொண்டுதான் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அதன் எச்சங்களைத் தேட நடவடிக்கை எடுக்…
-
- 1 reply
- 364 views
-
-
Published By: RAJEEBAN 28 FEB, 2025 | 11:36 AM cbs news அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோபைடனின் காலத்தில் விமானதாக்குதல் இராணுவநடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தளர்த்தியுள்ளார். வான்தாக்குதல்கள் விசேட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க தளபதிகள் உத்தரவிடுவது தொடர்பில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ள டிரம்ப் யாரை இலக்குவைக்கலாம் என்ற பட்டியலை விரிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளதுடன் இது பாரிய கொள்கை மாற்றம் என குறிப்பிட்டுள்ளனர். அமைதியான ஆனால் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய இந்த மாற்றம் ஜோபைடன் காலத்தின் உத்தரவுகளை செயல் இழக்கச்செய்துள்ளது. மேலும் டிரம்…
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து வெளியில் குதித்த பெண்: பயணிகள் அதிர்ச்சி அமெரிக்காவின் ஹூஸ்டன் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்த பெண் ஒருவர் திடீரென வெளியே குதித்தால் மற்ற பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமா விமானம் ஒன்று நியூ ஓர்லியான்ஸில் இருந்து அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தது. விமானம் தரையிறங்கியதும். பயணிகளை இறக்கவிடக் கூடிய இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கீழே இறங்குவதற்காக தங்களை தயார் படு…
-
- 0 replies
- 417 views
-
-
உக்ரேய்ன் ரஸ்ய எல்லைப்பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தின் அம்ஸ்டடாமிலிருந்து மலேசியா நோக்கிப் பயணித்த எம்.எச்.17 ரக விமான உக்ரேய்ன் ரஸ்ய எல்லைப் பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். ரஸ்ய ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களினால் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், உக்ரைன் இராணுவமே விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது என ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்நிலையில் விபத்திற்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி கிடைத்துள்ளதால் அந்த கறுப்பு பெட்டியில் உள்ள தகவல் பரிமாற்றம் மூலம், சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிய…
-
- 0 replies
- 214 views
-
-
விமானத்தின் கழிவறைத் தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்களை எறிந்த விமானி அமெரிக்காவிலிருந்து ஜேர்மனி நோக்கிச்சென்று கொண்டிருந்த விமானமொன்றில் பயணிகளுக்கு எட்டக்கூடியதாக துப்பாக்கித் தோட்டாக்களை வீசிய விமானியொருவர், பின்னர் அவற்றை கழிவறைத் தொட்டியிலிட்டு நீருடன் அடித்துச் செல்லவிட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் யுனைடெட் எயார்லைன்ஸ் நிறுவனத் துக்குச் சொந்தமான விமானமொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிகளை வைத்திருப்பது தொடர்பில் அமெரிக்காவைவிட ஜேர்மனியின் சட்டங் கள் மிக இறுக்கமானவை. ஜேர்மனிய சட்டப்படி, தோட்டாக்களை விமானத்தில் வைத்திருப்பது குற்றமாகை யால் ஜேர்மனியை அடைவதற்கு முன்னர், மேற்படி தோட்ட…
-
- 0 replies
- 441 views
-
-
விமானத்தின் கூரை மீதும் இனி பயணிக்கலாம்: வருகிறது புதிய தொழில்நுட்பம் (பிரமிப்பு வீடியோ) தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மைல் கல்லாக, பறந்துகொண்டு இருக்கும் விமானத்தின் கூரை மீது அமர்ந்து பயணம் செய்யும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பேருந்து மீது பயணம், ரயில் மீது பயணம் செய்த காலம் சென்று தற்போது விமானத்தின் மீதும் அமர்ந்து சொகுசாக இயற்கை காட்சிகளை அனுபவித்தவாறு பயணம் செய்யும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை வின்ட்ஸ்பீடு (Windspeed) என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஸ்கைடெக் (SkyDeck) என்ற அழைக்கப்படும் அந்த தொழில்நுட்பம், விமானத்தின் கூரை மேல் மையத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த கூண்டை சுற்றி பாதுகாப்ப…
-
- 0 replies
- 479 views
-
-
விமானத்தின் கூரையில் தீடீர் தூவாரம்! அமெரிக்காவில் விமானம் அவசர தரையிறக்கம்! Posted by uknews On April 2nd, 2011 at 8:10 pm / No Comments 118 பயணிகளுடன் வானில் பறந்துகொண்டிருந்த விமானமொன்றின் கூரையில் திடீரென துவாரம் ஏற்பட்டதால் அவ்விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சௌத்வெஸ்ட் எயார்லைன்ஸை சேர்ந்த இவ்விமானம் கலிபோர்னியா மாநிலத்தின் சாக்ரமென்டோ நகரிலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடியோசை போன்ற சத்தம் கேட்டதாக விமானத்தில் பயணம் செய்த பிரெண்டா ரீஸ் எனும் பெண் தெரிவித்துள்ளார். “விமானத்தின் கூரையில் திடீரென பாரிய துவாரம் ஏற்பட்டது. அதற்கூடாக வானத்தை பார்க்க முடிந்தது’ என அவர் கூறினார்.வி…
-
- 1 reply
- 756 views
-
-
டில்லி விமான நிலையில் தரையிறங்க முயன்ற ஓமான் விமானத்தின் டயர் வெடித்ததால், விமானத்தில் இருந்து பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. ஓமான் நாட்டை சேர்ந்த விமானம் டில்லி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் 120 பேர் பயணித்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஓடுபாதையில் தரை இறக்கும் போது விமானத்தின் டயர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. சப்தம் கேட்டதும் விமானத்தில் இருந்தவர்கள் அலறி கூச்சல் எழுப்பினர். விமானி சாதுர்யமாக விமானத்தை நிறுத்தியதால் விமானத்தில் இருந்த 120 பயணிகள் உயிர் தப்பினர். அனைவரும் அவசர அவசரமாக விமானத்தில் இருந்து இறக்கப்பட்டனர். . - See more at: http://www.canadamirror.com/canada/39206.html#sthash.gg6xbzYH.dpuf
-
- 0 replies
- 252 views
-
-
ஜெட்டா மீது பறந்த விமானத்திலிருந்து விழுந்த மனித உடல் உறுப்புகள்! ஜெட்டா: சவூதி அரேபியா மீது பறந்த விமானத்திலிருந்து மனித உடல் உறுப்புகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தின் சக்கரத்தில் யாராவது சிக்கியிருக்கலாம். அவரின் உடல் உறுப்புகளே கீழே விழுந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஜெட்டா மீது விமானம் பறந்தபோது இந்த உடல் உறுப்புகள் கீழே விழுந்தன. இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் நவாப் பின் நசீர் அல் போக் கூறுகையில், அதிகாலை 2.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. முஷ்ரபா பகுதியில் மனித உடல் உறுப்புகள் விமானத்திலிருந்து விழுந்ததாக அந்தத் தகவல் வந்தது. இதையடுத்து நாங்கள் அங்கு விரைந்தோம் என்றார். விமானத்தின் லேன்டிங் கியர் ப…
-
- 3 replies
- 1.4k views
-
-
சிகாகோ: பறக்கும் விமானத்தில் அமெரிக்கப் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டப்பட்ட இந்திய எஞ்ஜினியருக்கு 9 மாதம் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவன ஊழியர் சீனிவாச எர்ரமில்லி, வயது 46..இவர் கடந்த 2011ம் ஆண்டு ஜூன்மாதம் 14ம் தேதி சிகாகோ செல்லும் செளத்வெஸ்ட் விமானத்தில் பயணித்தார். அவரது பக்கத்து வீட்டில் பாதிக்கப்பட்ட பெண் இருந்துள்ளார். அப்பெண்ணின் கணவரும் உடன் பயணித்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு அப்போது 63 வயதாகும். தங்களது 34வது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக கணவருடன் அவர் லாஸ் வேகாஸ் பயணித்துள்ளார். பயணத்தின்போது தனது ஷார்ட்ஸுக்குள் 3 முறை கையை விட்டார் சீனிவாசா என்பது அப்பெண்ணின் புகார…
-
- 4 replies
- 719 views
-
-
விமானத்தில் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால், கடைசி நேரத்தில் வந்த 2 பயணிகளை, விமான கழிப்பறையில் உட்கார வைத்து கூட்டிச் சென்றுள்ளார் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவன விமானி ஒருவர். லாகூர்-கராச்சி இடையிலான விமானத்தில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் ஏர்லைன்ஸ், விமானம் லாகூரிலிருந்து கராச்சிக்கு வந்தபோதுதான் இப்படி நடந்துள்ளார் விமானி. வி்மானத்தின் அனைத்து இருக்கைகளும் நிரம்பி விட்டதால் 2 பயணிகளை மட்டும் உட்கார வைக்க முடியவில்லை. இதையடுத்து என்ன செய்வது என்று யோசித்த விமானிக்கு வித்தியாசமான ஐடியா தோன்றியுள்ளது. அந்த இரண்டு பேரையும் டாய்லெட்டில் அமர்ந்து வருமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் சரி என்று கூறி உள்ள…
-
- 3 replies
- 1k views
-
-
விமானத்தில் இருந்து கீழே விழுந்த எண்ணெய் தாங்கி : மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் வானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் எண்ணெய் தாங்கி கீழே விழுந்தது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விசாகப்பட்டிணத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான சூப்பர் சோனிக் மிக் 29 கே விமானத்தில் உள்ள 2 எண்ணெய் தாங்கிகளை சரி பார்ப்பதற்காக விமானத்தை ஓட்டிச் சென்றனர். அப்போது அதில் ஒரு எண்ணெய் தாங்கி விமானத்தை விட அதிகமாக எடை இருந்ததால் அதை கடலில் விழ வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் திடீரென்று அந்த எண்ணெய் தாங்கி குடியிருப்பு பகுதியில் விழுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப…
-
- 1 reply
- 598 views
-
-
விமானத்தில் இருந்து குதித்து மாணவி பலி விமானத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவியின் உடலை பொலிஸார் தேடி வருகின்றனர். இங்கிலாந்து - லண்டனை சேர்ந்தவர் அலானா கட்லாண்ட் (வயது 19). இவர் அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அலானா கட்லாண்ட், தொழில்முறை பயிற்சிக்காக ஆபிரிக்கா - மடகாஸ்கருக்கு சென்றார். அங்கு வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவியில் தங்கியிருந்து அவர் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வந்தார். கடந்த மாதம் 25 ஆம் திகதி உயிரினங்கள் குறித்த ஆய்வுக்காக நாட்டின் வடக்கு பகுதிக்கு சென்றார். பின்னர் ஆய்வுகளை முடித்துக்கொண்டு சிறிய ரக பயணிகள் விமானத்தில் அஞ்சாஜாவிக்கு புறப்பட்டார். விமானம் …
-
- 0 replies
- 431 views
-
-
விமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. July 2, 2019 விமானத்தில் ஒளிந்திருந்து பயணம் செய்தவராக சந்தேகப்படும் ஒருவரின் சடலம் லண்டனிலுள்ள தோட்டம் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. நைரோபியிலிருந்து வந்த கென்ய நாட்டு பயணிகள் விமானம் ஒன்று ஹீத்துரோ விமான நிலையத்தில் இறங்குவதற்காக சக்கரங்களை கீழே இறக்கியபோது, குறித்த நபர் கீழே விழுந்திருக்கலாம் என கருதப்படுகின்றது. குறித்த நபரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த தோட்டப்பகுதிக்கு அண்மையில் உள்ள மாடியில் நின்ற நபர் ஒருவர் சத்தம் கேட்டு கீழே பார்த்தபோது, அங்கு சடலத்தை கண்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பிரேத பரிசோதனை…
-
- 1 reply
- 442 views
-
-
விமானத்தில் ட்ரம்ப் மகளுடன் தகராறு: பயணி வெளியேற்றம் ட்ரம்ப்பின் மூத்த மகள் இவன்கா ட்ரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்பின் மூத்த மகளான இவன்கா ட்ரம்ப்பிடம் விமானத்தில் தகராறு செய்த சக பயணி வெளியேற்றப்பட்டார். நியூயார்க்கிலுள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில், வியாழக்கிழமை ட்ரம்ப்பின் மூத்த மகளான இவன்கா ட்ரம்ப்பும் அவரது கணவரும் விடுமுறைக்காக ஹவாய் தீவுக்கு செல்வதற்காக பயணியர் விமானத்தில் அமர்ந்திருந்தனர். அப்போது இவன்கா ட்ரம்பின் பக்கத்து இருக்கையில் அமர மாட்டேன் என்று சக பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின் விமான அதிகாரிகள் வந்து அந்தப் பயணியை வ…
-
- 0 replies
- 380 views
-
-
Published By: RAJEEBAN 14 AUG, 2023 | 04:08 PM சிட்னியிலிருந்து மலேசியா புறப்பட்ட விமானத்தின் பயணியொருவர் இஸ்லாமை குறிப்பிட்டு ஆபத்தான வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டதால் விமானம் நடுவானில் மீண்டும் சிட்னிக்கு திருப்பப்பட்டது. எம்122 விமானம் 194 பயணிகள் ஐந்து பணியாளர்களுடன் புறப்பட்ட சில நிமிடத்தில் முதுகுப்பையுடன் காணப்பட்ட நபர் எழுந்து நின்று நான் இஸ்லாமின் அடிமை என சத்தமிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவுஸ்திரேலிய விமானப்பாதுகாப்பு படையினர் அவரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். விமானம் தற்போது ஓடுபாதையில் காணப்படுகின்றது - விமானநிலையம் மூடப்பட்டுள்ளது. …
-
- 2 replies
- 437 views
- 1 follower
-
-
விமானத்தில் பணிப்பெண் செய்த அருவருக்கத்தக்க செயல்! (காணொளி) பிரசித்திபெற்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணிகள் குடித்து மிஞ்சிய மதுவை அதன் பணிப்பெண் ஒருவர் மீண்டும் போத்தலுக்குள் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்திலேயே இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. விமானம் பயணிக்க முன்பு ரஷ்ய பயணி ஒருவர் தனது கமெராவில் வீடியோ பிடித்துக் கொண்டிருந்தார். அதில் பணிப்பெண் ஒருவர் கோப்பையில் ஊற்றப்பட்ட மதுவை மீண்டும் போத்தலில் நிரப்பும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இந்தக் காணொளியை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய அந்த ரஷ்ய பயணி, ”நீங்கள் இப்படியான செயல்களில் ஈடுபடு…
-
- 1 reply
- 462 views
-
-
விமானத்தில் பயணியை கடித்துக் கொன்றதாக போர்ச்சுகல் பெண் கைது போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனிலிருந்து டப்ளினுக்கு சென்றுகொண்டிருந்த விமானத்தில் சக பயணியை பெண் கடித்துக் கொன்றதாக அவரை போலீஸார் கைது செய்தனர். லிஸ்பனில் இருந்து டப்ளினுக்கு ஏர் லிங்கஸ் என்ற பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 165 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதில் இருந்த பிரேசிலைச் சேர்ந்த இளைஞருக்கும், அவரது அருகே அமர்ந்திருந்த பெண் பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி தகறாரில் கோபமடைந்த அந்தப் பெண், இளைஞரைக் கடித்துக் குதறியதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து காயமடைந்த அந்த இளைஞர் மயங்கி விழுந்தார். உடனடியாக விரைந்த விமானத்திலிருந்த…
-
- 8 replies
- 1.5k views
-
-
விமானத்தில் பிரசவம் பார்த்த முன்னாள் பிரஞ்சு அமைச்சர் விமானத்தில் பிரசவம் பார்த்த பிரெஞ்சு முன்னாள் அமைச்சர் பிலிப் தூஸ்த் ப்ளேசி முன்னாள் பிரெஞ்சு கேபினட் அமைச்சர் ஒருவர், அவர் இயல்பாகச் செய்யும் அரசியல் வேலைகளைத் தாண்டி, 9,000 மீட்டர் உயரத்தில் மற்றொரு உதவியையும் செய்யவேண்டிக் கோரப்பட்டார். ஆம், பிலிப் தூஸ்த் பிளேசி என்ற அந்த முன்னாள் சுகாதார அமைச்சர், விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது, பயணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட, அவர் தனது பழைய தொழிலான மருத்துவர் தொழிலுக்கு மாறி ,பிரசவம் பார்த்தார். பிரான்சிலிருந்து சாட் நாட்டுக்கு இந்த ஏர் பிரான்ஸ் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட, விமானப் பணியாளர்கள் விமானத்தில் யாரேனும…
-
- 0 replies
- 612 views
-
-
விமானத்தில் மது அருந்திய பெண் குழந்தையுடன் சிறையிலடைப்பு விமானப் பயணத்தின் போது மது அருந்தியதற்காக பெண் வைத்தியர் எல்லி ஹோல்மேன் துபாயில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். சுவீடன் நாட்டைச் சேர்ந்தவர் எல்லி ஹோல்மேன். பல் வைத்தியரான இவர், லண்டனிலிருந்து துபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் விமானத்தில் கடந்த ஜூலை 13ஆம் திகதி தன் 4 வயது குழந்தையுடன் பயணித்துள்ளார். அப்போது, அவருக்கு உணவுடன் மது வழங்கப்பட்டுள்ளது. எல்லி அதை அருந்தியிருக்கிறார். இதையடுத்து, துபாய் விமான நிலையத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், எல்லி ஹோல் மேனின் விசா காலாவதியாகிவிட்டதாகக் கூறியுள்ளனர். மேலும், உடனடியாக லண்டனுக்குத் திரும்பிச் செல்லும்படி வலியுறுத்தியுள்ளனர். …
-
- 8 replies
- 1.5k views
-