உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26864 topics in this forum
-
யுஎஸ்- அட்லான்டா விமானம் ஒன்று நியுயோர்க் நகர லாகாடியா விமானநிலையத்தில் வியாழக்கிழமை தரையிறங்கிய போது ஓடுதளத்தில் சறுக்கிவிட்டது. பனிப்புயல் காரமாக இந்த விபத்து நடந்துள்ளதென தெரிவிக்கப்பட்டது. சறுக்கிய விமானம் ஒரு சங்கிலி-தொடர் வேலியை நொருக்கி உட்சென்று அதன் மூக்கு ஒரு பனி வளைகுடா விளிம்பில் முட்டியுள்ளது. பயணிகள் பைகளை சுமந்தவாறு பாரமான கோட்டுகள் மற்றும் கழுத்து துண்டுகளையும் சுற்றியவண்ணம் வெளியேற்றும் சரிவு மூலம் பாதுகாப்பாக பனிபடர்ந்த நடைபாதையை வந்தடைந்தனர். டெல்ரா விமானம் 1086, 125 பயணிகளையும் ஐந்து பணிக்குழவினரையும் சுமந்த வண்ணம் ஓடபாதையை விட்டு காலை 11.10மணியளவில் திசைமாறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆறு பேர்கள் உயிர் ஆபத்தற்ற காயங்களால் பாதிக்கப்பட்டதாக த…
-
- 0 replies
- 321 views
-
-
TRIBUTE TO LEE KUVAN YEW FOR HIS LANGUAGE POLICY WHICH MADE SINGAPORE IS THE ONLY COUNTRY IN THE WORLD WHERE TAMILS ENJOY LINGUISTIC EQUALITY AND FREEDOM தனது இன மொழிச் சமத்துவ கொள்கையால் தமிழர் மொழிவாரி சுதந்திரத்துடனும் சமத்துவத்துடனும் வாழ்கிற ஒரே நாடாக சிங்கப்பூரை மேம்படுதியமைக்காக சிங்கை முதல்வர் லீ குவான் யூவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். சோசலிசமோ பொது உடமையோ முதலாளித்துவமோ பிரதேச இனங்களின் மொழிவாரிச் சமத்துவமில்லாத நாடு ஒரு நோயாளிதான். மொழிவாரிச் சமத்துவமின்மை உலக வல்லரசான சோவியத் ரூசியாவைக்கூட காப்பாறவில்லை. எழுபது வருடங்களாக ரூசிய மொழி படித்து அடங்கிக் கிடந்த மாநிலங்கள் வெளி எதிர்ப்பும் நெருக்கடியும் அதிகரித்தபோது ஒன்றாக நிற்காமல் பிரித்துக்கொண்டு ஓடிவிட்டன…
-
- 0 replies
- 986 views
-
-
பகல் சாப்பாடு பாத்ரும் அருகில் - ஒரு விபரீத பள்ளியின் விசித்திர தண்டணை அந்தப் பள்ளி மாணவர்கள் தவறு செய்தால் தண்டனை என்ன தெரியுமா? கழிப்பறைக்குப் பக்கத்தில் பந்தி போட்டது போல உட்கார்ந்து அங்குதான் பகலுணவைச் சாப்பிட வேண்டும் சென்னை வியாசர்பாடியில் உள்ள டான்பாஸ்கோ பள்ளி மீதுதான் இப்படி ஒரு வித்தியாசமான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி ஒரு தண்டனையா? அதிர்ந்துபோன நாம் இந்த வித்தியாசமான புகார் பற்றி விசாரிக்க வியாசர்பாடிக்கு விரைந்தோம். பள்ளி மீது விபரீத குற்றச்சாட்டை வீசியிருக்கும் ரவியைச் சந்தித்தோம். இது பற்றி மனித உரிமை ஆணையம், மாநகராட்சி போலீஸ் கமிஷனர் லத்திகாசரண் ஆகியோரிடம் புகார் கொடுத்திருப்பதாகக் கூறிய ரவி, நம்மிடம் பேசத் தொடங்கினார். ‘‘என் மகன…
-
- 2 replies
- 2.7k views
-
-
சீனாவில் இன்று காலை 5.58 மணியளவில் கிக்சுவான், கன்சு ஆகிய பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு கட்டிடங்கள் வீடுகள் குலுங்கின. இதைத் தொடர்ந்து பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தனர். இந்த நிலநடுக்கம் 5.4 ரிக்டர் அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் 2 மணி நேரம் கழித்து வடமேற்கு சீனாவில் உள்ள இலி என்ற பகுதியில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பெரு நாட்டின் லிமாவில் 6.9 என ரிக்டர் அளவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 134 வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
-
- 0 replies
- 686 views
-
-
சுற்றுலா செல்வதில் சிக்கலை எதிர்கொண்டுள்ள பிரித்தானியர்கள்! புதிய Brexit கடவுச்சீட்டு விதி காரணமாக, இவ்வாண்டு சுமார் 1 இலட்சம் பிரித்தானியார்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகு, 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட பிரித்தானிய கடவுச்சீட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது எனவும் கூறப்படுகிறது. உள்விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், 32 மில்லியன் கடவுச்சிட்டுகள் தற்போது 10 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. ஆகையால் பிரித்தானியர்கள் வழக்கமாக செல்லும் ஐரோப்பிய நாடுகளான Iceland, Norway, Lichtenstein மற்றும் …
-
- 0 replies
- 471 views
-
-
ஆறரை கோடி தமிழ் மக்களுக்கு முதல்வராக இருக்கிற கருணாநிதியை மத வெறி சக்திகள் மிரட்டுவது கடும் கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விஸ்வ இந்து பிரஷத் அமைப்பைச் சேர்ந்த ராம்விலாஸ் வேதாந்தி என்பவர், முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக கொலை வெறியை தூண்டும் வகையில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு தமிழர்களை எல்லாம் திடுக்கிட வைத்துள்ளது. பெங்களூரில் முதல்வரின் மகள் செல்வியின் விட்டை தாக்கியவர்கள், தமிழக அரசு பேருந்து ஒன்றை தீவைத்து கொளுத்தி 2 தமிழர்களின் உயிரை பறித்தவர்களும், இந்த அமைப்பினை சேர்ந்தவர்கள் தான். இந்த மதவாத சக்திகளின் மிரட்டலை மிகச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இவர்களது …
-
- 11 replies
- 5.3k views
-
-
மே. வங்கத்திற்கு மட்டும் மத்திய அரசு அள்ளித் தருவதால்தான் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது-ஜெ. சென்னை: தமிழகம் கோரிய நிதியில் ஒரு துளியைக் கூட மத்திய அரசு தரவில்லை. ஆனால் தனது அரசுக்கு ஆதரவு தரும் திரினமூல் காங்கிரஸ் ஆட்சி புரியும் மேற்கு வங்கத்திற்கு மட்டும் 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. இதன் காரணமாகவே தமிழகத்தில் பால், பஸ் கட்டணத்தை உயர்த்த நேரிட்டது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். பஸ் கட்டணம், பால் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்து ஜெயா டிவியில் முதல்வர் ஜெயலலிதா பேசினார். அவர் பேசும்போது, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்டு தற்போது திவாலாகும…
-
- 5 replies
- 1.1k views
-
-
திண்ணையில யாரும் படுத்திடக் கூடாதுன்னு இந்த வெங்காயங்கள் செய்திருக்கும் வேலையைப் பாருங்க! லண்டன்: கெட்ட மனசுன்னு ஒன்னு இருக்கு பாருங்க. அந்த மனசுக்கு யாருமே நினைக்க முடியாத அளவுக்கு வில்லத்தனமா யோசிக்கத் தோன்றும். அவர்களை ஊர் பக்கத்தில் வினயம் பிடித்தவர்கள் என்று "செல்லமாக" கூப்பிடுவார்கள். அப்படிப்பட்டவர்கள் உலகம் பூராவும் இருக்கிறார்கள்.. இதோ லண்டனில் கூட உள்ளனர். இந்த உலகமே நமக்குச் சொந்தம்தான். ஆனால் மனிதர்களுக்குள்தான் எத்தனை எத்தனை குரோதம், சின்னப்புத்தி, துரோகம், போட்டி, பொறாமை. லண்டனில் வீடு இல்லாதவர்கள் வந்து தங்கி விடக் கூடாது என்பதற்காக தங்களது வீட்டின் முன்பு காலியாக உள்ள இடங்களை வினோதமான முறையில் டிசைன் செய்து மாற்றி நம்பியார்த்தனமாக நடந்து கொள்கிறார்கள…
-
- 11 replies
- 1.3k views
-
-
கனடாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் வெளியிட்டுள்ளார்.கனடாவின் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்சனைச் சந்தித்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி முறைப்படி கோரிய பின்னரே தேர்தலுக்கான இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு கால அவகாசம் வழங்கும் முகமாகவே இந்த அறிவிப்பை இப்பொழுதே வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை, தேர்தல் பரப்புரைகளுக்கான செலவினங்களை அந்தந்த கட்சிகளே செய்ய வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தேர்தல் திகதி முன்னரே அறிவிக்கப்…
-
- 0 replies
- 533 views
-
-
பாராளுமன்றத்தை கலைத்தார் உக்ரைனின் புதிய ஜனாதிபதி உக்ரைனின் புதிய ஜனாதிபதியாக வொளடிமீர் சிலேன்ஸ்கி இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டுள்ளார். இதனை அடுத்து நாடாளுமன்றில் பெரும்பானமையை பெற்றுக்கொள்வதற்காக உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி, பொதுத்தேர்தல் நடத்தவும் அறிவித்தல் விடுத்துள்ளார். அரசியல் அனுபவமில்லாத வொளடிமீர் சிலேன்ஸ்கி கடந்த மாதம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் பாராளுமன்றத்தில் அவருடைய புதிய கட்சியின் உறுப்பினர்களின் பிரதிநிதித்துவமும் இல்லை என்பதனால் பொதுத்தேர்தல் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார். மேலும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் இடம்பெற்ற ஐந்து ஆண்டுகால மோதலில் 13 ஆயிரம் பேர் கிழக்கு உக்ரேனில் உயிரிழந்துள்…
-
- 1 reply
- 675 views
-
-
ஆப்கானில் கடந்த வருடம் 192 பாடசாலைகள் மீது தாக்குதல் - யுனிசெவ் ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் பாடசாலைகள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது என தெரிவித்துள்ள யுனிசெவ் இதன் காரணமாக ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் மாணவர்களிற்கு உரிய கல்வியை உறுதிப்படுத்தமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 2017 இல் பாடசாலைகள் மீது 68 தாக்குதல்கள் இடம்பெற்றன என தெரிவித்துள்ள யுனிசெவ் 2018 இல் 192 பாடசாலைகள் தாக்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கல்வி தாக்குதலிற்கு உள்ளாகியுள்ளது என தெரிவித்துள்ள யுனிசெவ் பாடசாலைகள் மீதான இந்த அர்த்தமற்ற தாக்குதல்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கொல்லப்படுதல், காயமடைதல் கடத்தப்படுதல் மற்றும் கல்வி…
-
- 0 replies
- 405 views
-
-
ஈரானில் ஹிஜாப் அணியாத பெண்கள் – நிறுவனத்துக்கு சீல் ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் கட்டாயம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதுடன் இதனை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தலைநகர் தெக்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால் அப்போது பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருப்பது தெரியவந்ததையடுத்து துருக்கி விமான நிறுவன அலுவலகத்தை ஈரான் அரசு சீல் வைத்து மூடியுள்ளது. துருக்கி ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு பொலிஸார் ஹிஜாபைக் கடைப்பிடிக்காதது குறித்து முதலில் ஊழி…
-
-
- 1 reply
- 360 views
-
-
இலங்கைக்கு எக்காரணம் கொண்டும் ராணுவ ரீதியிலான உதவிகளை இந்திய அரசு அளிக்கக் கூடாது. தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை ராணுவத்தின் போருக்கு இந்தியா எந்தவிதமான ஆலோசனைகளையும் கூறக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு வைகோ எழுதியுள்ள கடிதத்தில், இந்திய அரசின் உயர் அதிகாரிகள் சிலர் இலங்கை அரசுடன் கை கோர்த்துக் கொண்டு, மத்திய அரசுக்குத் தவறான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கூறி வருகின்றனர். இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து ஆயுத உதவிகளையும், பிற போர் உத்தி உபாயங்களையும், ராணுவ உதவிகளையும் அளித்து வருமானால், அது தமிழ் மக்கள் மனதில் நீங்காத கோபத்தையும், விரக்தியையும், துவேஷத்தையும் ஏற்படுத்தவே வழி வ…
-
- 0 replies
- 681 views
-
-
ஒளிப்படங்களுக்காக சிங்கங்களை சுட்டுக் கொன்ற கனேடியத் தம்பதி! தென்னாப்பிரிக்காவில் ஒரு சஃபாரி பூங்காவில் ஔிப்படம் எடுக்கச் சென்ற கனடா நாட்டைச் சேர்ந்த தம்பதிகள் இரண்டு வளர்ந்த சிங்கங்களை சுட்டுக் கொன்றுள்ளனர். குறித்த கனேடியத் தம்பதியினர் உயிரிழந்த சிங்கத்தின் பின்னால் அமர்ந்து கொண்டும், முத்தமிட்டுக்கொண்டும் ஔிப்படம் எடுத்துள்ளனர். டெரன் மற்றும் கரோலின் கார்டர் என்ற பெயர்களை கொண்ட குறித்த தம்பதி லெஜீலியா சஃபாரிஸ் வழியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது இந்தச் செயலை செய்துள்ளனர். ஔிப்படம் எடுப்பதற்காக அங்கிருந்த இரண்டு சிங்கங்களை சுட்டுக் கொன்றுள்ளதுடன், அந்த ஔிப்படங்களை பேஸ்புக் வலைத்தளத்திலும் பதிவேற்றியுள்ளனர்.அவர்கள் கிழக்கு கனடாவின் அல்பேர்ட்…
-
- 1 reply
- 639 views
-
-
பனிமூட்டம் காரணமாக ஐரோப்பாவில் விமான சேவைகள் பாதிப்பு PA பனிமூட்டத்தில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக இரண்டாவது நாளாக பபல விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பாவின் பல பகுதிகளில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக இரண்டாவது நாளாக பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பனிமூட்டம் காரணமாக, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானங்களில் பத்து சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல பாரிஸ், டூசல்டார்ஃப், ஆம்ஸ்டர்டாம் மற்றும் பிரசல்ஸ் விமான நிலையங்களிலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டடுள்ளன. பல விமான நிலையங்களில் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையும் கடுமையாக தாமதமடைந்துள்ள…
-
- 0 replies
- 528 views
-
-
பரிஸ் தாக்குதல்கள்; மூன்றாவது சடலமும் மீட்கப்பட்டது கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பரிஸ் தாக்குதல்களையடுத்து பரிஸ் புறநகரான சென்ற் டெனிஸில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டை இடம்பெற்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து மூன்றாவது சடலமும் அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை இடம்பெற்ற தாக்குதலையடுத்து, நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டபோதும், அவரது அடையாளம் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. எனினும் மேற்படி நடவடிக்கையின்போது தன்னை வெடிக்க வைத்துக் கொண்ட பெண்ணான ஹஸ்னா எய்த்பௌலாசென்னின் …
-
- 0 replies
- 759 views
-
-
எரிமலை சாம்பல் வானில் 10 கிலோ மீற்றர் (32,808 அடி) உயரத்திற்கு படர்ந்து காணப்படுவதால் புதன்கிழமை இந்தோனேசியாவின் பாலி சுற்றுலா தீவுக்கான விமான சேவைகளை பல சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்துள்ளன. வானத்தில் எரிமலை சாம்பல் சூழ்ந்து காணப்படுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக பாலிக்கு விமான பயணங்கள் இடைநிறுத்தப்பட்டதாக ஜெட்ஸ்டார் மற்றும் குவாண்டாஸ் ஆகிய விமான சேவைகள் தெரிவித்துள்ளன. அதேவேளை, ஏர் ஏசியா மற்றும் விர்ஜின் ஆகிய விமான சேவைகளும் விமான பயணங்களை இரத்துசெய்துள்ளதாக ஃப்ளைட்ராடார் 24 என்ற விமான கண்காணிப்பு வலைத்தளம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் சிறந்த சுற்றுலாப் பகுதியாக பாலி காணப்படுவதோடு, அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளை கவர்ந்த இடமாக…
-
- 0 replies
- 920 views
- 1 follower
-
-
பிரான்ஸ் நாட்டில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முதல் கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபராக பதவி வகிக்கும் நிகோலஸ் சர்கோஸி இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். அவருடன் சோஸலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரான்சுவா ஹோலண்ட் உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் முதல் கட்ட தேர்தலில் அதிகளவு ஓட்டுக்கள் பெறும் இரண்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் கட்ட தேர்தலுக்கு தகுதியானவர்களாக அறிவிப்பர். இந்த அதிபர் தேர்தலில் பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சுமார் 4 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். http://www.seithy.co...&language=tamil
-
- 17 replies
- 1.4k views
-
-
சென்னை:மாநில சிறுசேமிப்பு ஆலோசனைக் குழுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து லதிமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் ராஜினாமா செய்துள்ளார். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகப் போராடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். லட்சிய திமுக கட்சியை விடாமல் நடத்தி வரும் டி.ராஜேந்தர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போய்ச் சேர்ந்த முதல் கட்சித் தலைவராவார். அவரை கூட்டணிக்கு அன்போடு வரவேற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சீட் தரவில்லை. இதையடுத்து அந்தக் கூட்டணியைவிட்டு திமுக கூட்டணிக்கு தாவி வந்தார். ஆனால், அங்கு இடப் பங்கீடு எல்லாம் முடிந்துவிட்டதால் அங்கும் சீட் கிடைக்கவில்லை. முதல்வர் கருணாநிதியின் இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்தது. தனது கட்சி சார்பில் ஒரே ஒரு இட…
-
- 23 replies
- 4.2k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - மேட்ச் ஃபிக்ஸிங் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் தற்போது டென்னிஸ் விளையாட்டும் சிக்கியுள்ளது! பிரத்யேகமாக செய்தித் திரட்டியது பிபிசி! - சர்வதேச தண்டனைத் தடைகள் நீங்க இரானுக்கு இது மறக்கமுடியாத முக்கியத் தருணம்! புதிய தொழில்வாய்ப்புகள் பற்றி அண்டையிலுள்ள துபாயிலுருந்து ஒரு ஆய்வு! - எதிர்காலத்தில் ஒருவேளை மனித இனத்தையே காக்கும் பொக்கிஷமாகத் திகழக்கூடிய வடதுருவ விதைகள் காப்பகத்துக்கு ஒரு பயணம்!
-
- 0 replies
- 263 views
-
-
-
- 5 replies
- 1.4k views
-
-
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு ட்ரம்ப் 100% வரி! உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் வர்த்தக மோதல்களை அதிகரித்து வருவதால், வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உள்நாட்டு திரைப்படத் துறை “மிக விரைவான மரணத்தை” சந்தித்து வருவதால், வரி விதிக்கும் செயல்முறையைத் தொடங்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிக்கு அதிகாரம் அளிப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஜனவரி மாதம் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியதிலிருந்து, ட்ரம்ப் உலகெங்கிலும் உள்ள நாடுகள் மீது வரிகளை விதித்துள்ளார். வரிகள் அமெரிக்க உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் மற்றும் தொழில் வாய்ப்புகளை பாதுகாக்கும் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இதன் விளைவாக உலகப்…
-
- 0 replies
- 267 views
-
-
காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ? மத்திய அரசை திணற வைத்த சிறுமி [size=4]தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் கேட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் ? அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .[/size] [size=4]பள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த …
-
- 0 replies
- 829 views
-
-
பிரிட்டனில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் ரசிகர்கள் மீது காரால் மோதிய நபர் – 27 பேர் காயம் 27 MAY, 2025 | 06:35 AM லிவர்பூலில் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகத்தின் அணிவகுப்பு நிகழ்வின் மீது நபர் ஒரு காரால் மோதியதில் 27 பேர் காயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது காரால் மோதிய 53 வயது பிரிட்டிஸ் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். காயமடைந்தவர்களில் நான்கு சிறுவர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை பயங்கரவாத சம்பவமாக கருதவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/215780
-
-
- 5 replies
- 325 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி 5 ஜூன் 2025 இந்தியத் தொழிலதிபர் கௌதம் அதானியின் நிறுவனங்கள், முந்த்ரா துறைமுகம் வழியாக இரானிய திரவ பெட்ரோலிய எரிவாயுவை (எல்பிஜி) இந்தியாவிற்கு இறக்குமதி செய்தாரா இல்லையா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் விசாரித்து வருவதாக, 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' என்ற அமெரிக்க செய்தித்தாள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் அதானி எண்டர்பிரைசஸ், இந்த அறிக்கையை "ஆதாரமற்றது" என்று கூறி மறுத்துள்ளது. "இந்த விஷயத்தில் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறித்து எங்களுக்குத் தெரியாது" என அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்துக்கும், பாரசீக வளைகுடாவுக்கும் இடையில் பயணி…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-